-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 60. பேரரறிஞர் அண்ணா
1. பொதுவாக எம் ஜி ஆர் அவர்கள் தன்னிடம் கையெழுத்து வாங்க விரும்பி அணுகும் ரசிகர்களுக்கு அண்ணா நாமம் வாழ்க என்று எழுதித்தான் கையெழுத்து போட்டு தருவார்..
2, அதேப்போல் கலந்துக்கொண்ட எந்த விழாவிலும் தனது உரையை அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லியே முடிப்பார்.
3. 1977 ம் ஆண்டு முதல் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் அண்ணா சிலை அருகில் கூடியிருந்த மக்கள் கடல் மத்தியில் முதல் முதலாக அவர் வாக்குறுதி எடுத்துக் கொண்டார். இந்த ஆட்சி அண்ணாவுக்கு காணிக்கையாக்கிறேன் இது அண்ணாவின் அரசு என்றார்...
4, கட்சியின் பெயரில் கொடியில் கொள்கையில் இயக்க பத்திரிக்கையில் அண்ணா என்ற முத்திரை பதித்தார். .அவர் எண்ணம் செயல் சொல் அனைத்திலும் அண்ணா வாழ்ந்தார். .அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லாமல் புரட்சித்தலைவர் பேச்சை முடித்துக்கொள்ளவில்லை. .
5. அண்ணாவை தாங்கள் வளருவதற்கு மட்டும் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் புரட்சித்தலைவர் வளர்ந்த பின்பும் அண்ணாவை மறக்க வில்லை. ..
6. புரட்சித்தலைவரின் அண்ணா பக்தியே யாராலும் கண்களால் பார்க்க முடியாது. காதுகளால் கேட்க முடியாது. இதயத்தால் மட்டுமே உணர முடியும்...
7. இப்படி தனது வாழ்நாளில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க போது ஒவ்வொரு வெற்றியும் அண்ணாவால் கிடைத்தது என்று கூறியுள்ளார். காஞ்சித்தலைவரை நினைக்கவும் வணங்கவும் தவறியது இல்லை. .
8. தனது ஒவ்வொரு படத்திலும் அண்ணாவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் பாடல் வரிகள் வசனம் வரிகள் அல்லது அவரது கொள்கை மறக்காமல் இடம் பெற செய்வார். .
9. வள்ளல் எம்ஜிஆர் ரிக்ஷாக்காரர்களுக்கு மழை கோட்டு கொடுத்தார் அந்த பெரிய விழாவையும் அண்ணா அவர்கள் தன் பக்கம் வைத்துக்கொண்டுத்தான் நடத்தினார். .
10. கலைவாணர் என். எஸ். கே.யின் புதல்விகளுக்கு எம்ஜிஆர் தன் செலவில் திருமணம் நடத்திய போதும் அண்ணாவை தலமை தாங்க வைத்து பெருமைப்பட்டார்.
11. எங்கவீட்டுபிள்ளை படத்தின் வெள்ளிவிழாவின் போது. அவர் அண்ணாவை மறந்து விடாமல் தலமை ஏற்க சொன்னார். .தனது சொந்த தயாரிப்பான நாடோடிமன்னன் வெற்றிவிழாவினையும் அண்ணாவின் தலைமையில் நடத்தினார். .
12. அண்ணாவுக்கு சென்னை நீதிமன்றத்தில் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட போது அங்கேயே எம்ஜிஆர் விக்கி விக்கி சிறு குழந்தை போல் அழுது விட்டார். .இந்த நாட்டிலேயே அண்ணா தண்டனை நினைத்து முதல் சொட்டு கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது எம்ஜிஆரின் கண்களிலிருந்துதான்.
13. என்னை பெற்ற அன்னை பெரும் செல்வமாக எனக்கு ஒரு அண்ணனை தந்தார்கள். ஆனால் கலைத்தாய் தமிழ் தாய் எனக்கு இரண்டு அண்ணன்கள் தந்தது. . ஓன்று அண்ணன் கலைவாணர். இரண்டு அரசியலில் அறிவு செல்வமான பேரரறிஞர் அண்ணாவை எனக்கு பெரும் சொத்தாக வழிக்காட்டியாக இணையற்ற தலைவராக எல்லா வடிவமாக ஒரு அண்ணனை தந்தது, ஒரு தாய் வயிற்றில் பிறந்தால்தான் பாசம் இருக்கும் என்பது இல்லை. ........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 61. பேரரறிஞர் அண்ணா
1969. ம் ஆண்டு எல்லோரும் தாங்கிக்கொள்ளமுடியாத சோதனை ஏற்பட்ட ஆண்டாகும்
எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும் என்றும். .தம்பி உன் முகத்தை காட்டினால் போதும்? ...உன்னை என் இதயத்தில் வைத்திருக்கிறான். .என்று மக்கள் திலகத்தை பார்த்து சொன்னவர் அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா அவர்கள். ..
அண்ணா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட பிறகு கடைசி கட்டத்தில் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருந்த நேரம். அண்ணாவை பார்க்க வெளியூரில் இருந்து வந்து பலபேர் பார்த்தனர். .கட்சி பிரமுகர்கள் பிரபலமான வி ஐ பி க்கள் .அரசு அதிகாரிகள். .தொண்டர்கள் இப்படி பலபேர் அண்ணாவை பார்த்து விட்டு சென்றனர். ..யாருமே செய்யாத ஒரு அற்புதமான காரியத்தை புரட்சித்தலைவர் செய்தார். சத்யாஸ்டியோவில் பெரிய பந்தல் போட்டு பத்து சமையல்காரர்கள் நியமித்து அண்ணாவை பார்த்து விட்டு போகும் அத்தனை பேர்களுக்கும் காலை மதியம் என இரு வேலையும் சாப்பாடு போட்டார். .தொடர்ந்து இரண்டு வாரங்கள் இப்படி வந்த அனைவரும் சாப்பிட்டு விட்டுதான் போனார்கள். .அப்போது எத்தனையோ பேரு அண்ணா மீது பற்று இருந்தாலும் எம்ஜிஆர் போட்ட சாப்பாடு யாரும் போடவும் இல்லை. உடல் நலம் சரியில்லை என்றாலும் இச்செய்தி யாரிந்த பேரரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது. எம்ஜிஆரை பெற்ற தாய் பாக்கியவதியா இப்படி ஒரு தம்பியை அடைந்த நான் பாக்கியசாலி என்று நினைத்து பெருமைப்படுகிறேன். .
1969 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அன்று அண்ணா மறைந்தார். அண்ணா அவர்கள் இறந்த நாளன்று மக்கள் திலகம் அவர்கள் ஒவ்வொரு வருடமும். அன்று காலை அவரது சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வணங்கி விட்டு பிறகு அன்று முழுவதும் யாரிடமும் பேசமாட்டார். அன்று முழுவதும் மெளனமாக இருந்து சாப்பிடாமல் விரதம் இருப்பார். இது புரட்சித்தலைவர் வரலாற்றில் முக்கியமான விஷயமாகும் நாளாகும். ..
16. 6. 1984. ம் ஆண்டு அன்று புரட்சித்தலைவர் சட்டசபையில் சொன்னது. ...மக்கள் கொடுக்கும் வரி பணம். மக்களின் நல்வாழ்வுக்காக.பயன்படவேண்டும். .மக்களுடன் கூடியிரு. .மக்களுடன் பழகு. .மக்களுடன்வாழ். .மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படு மக்களிடம் நீ போய் செய் என்றெல்லாம் அமரர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் நான் செய்கிறேன். இந்த அரசும் செய்கிறது. .அண்ணா அவர்களின் கொள்கையை நிறைவேற்றி வரிப்பணம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை மக்களுக்கு செலவு செய்வதுதான் எங்கள் பணி என்றார். ..நான் எனது என்ற வார்த்தையை ஒருநாளும் எங்கும் எதிலும் பயன்படுத்தியதில்லை. இது எந்த தலைவரிடம் காணாத ஒர் அதிசயம் ஆகும். ....... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர். 2 பாகம் 62 பேரரறிஞர் அண்ணா
1961 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம். நடந்தது. இந்த போராட்டத்தில் எம்ஜிஆர் கே. ஆர் ராமசாமி எஸ் எஸ் ஆர் போன்றவர்கள் கலந்துக்கொள்ளக்கூடாது. .என்று பேரரறிஞர் அண்ணா அறிவித்தார்.ஏன் கலந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கமும் அளித்தார். அதன் விளக்கம் இதோ இங்கே.
கலைதுறையில் புரட்சிநடிகர் எம் ஜி ஆரை ஒழிக்க சதி நடக்கிறது. திமுக கழக கலைஞர்களை கலைத்துறையில் இருந்து அழித்து விடக் கூடிய பயங்கர சக்தி உருவெடுத்து வருகிறது. . . இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்தி போராட்டத்தில் ஈடுபட முடியவில்லையே என்று அவர்கள் என் மீது வருத்தபடலாம். ஆனால் அவர்கள் ஈடுபட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். புரட்சிநடிகர் எம் ஜி ஆரும் மற்ற கலைஞர்களும் இந்தி போராட்டத்தில் கலந்துக்கொண்டால். அவர்கள் கலைத்துறையை இழந்து விட நேரிடும். .அத்தகைய பயங்கரசக்தி எம் ஜி ஆரை ஒழிக்க சதி செய்து வருகிறது. .எம்ஜிஆர் மற்றும் கழக கலைஞர்கள் இந்தி போரில் ககலந்துக்கொண்டு சிறைச்சென்றால் அவர்கள் சிறையில் இருந்து திரும்பி வர ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து திரும்பியவுடன். அவர்கள் கலைதுறையை இழந்து விட நேரிடும். அப்படிப்பட்ட பயங்கர சக்தி நம் கழக கலைஞர்களை ஒழித்து கட்ட சதி செய்து வருகிறது. எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தி போரில் ஈடுபடுவதால் கழகம் கலைதுறையில் பெற்றுள்ள செல்வாக்கு இழந்து விடும். அதனால் திமுக கழகத்துக்கு கலைஞர்கள் இல்லாமல் போய் விடுவார்கள் இதனால் தான் நான்கலைஞர்களை இந்தி போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று விதிவிலக்களித்திருக்கிறேன்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தி போரில் கலந்து கொள்ளாதது. அவருக்கு கைபோய்விடும் கால் போய் விடும் அடிப்பார்கள் என்பதனால் அல்ல. .எம்ஜிஆர் அடிக்கும் கழகத்துக்காக செய்ய வேண்டிய துணிகரச்செயலுக்கும் பயந்தவர் அல்ல. அவரை போலிஸார் அடித்தால் தாங்கிக்கொள்ளக்கூடிய. .மனவலிமை பெற்றவர். . அவரை அடிக்க யாரும் கிட்ட நெருங்கமுடியாது. .எம்ஜிஆரை அடிக்க வரும் காவல்துறையினர் கூட அடிக்காமல் நின்று விட்டு. ஆ....என்று எம் ஜி ஆரை நான் இப்போது பார்த்து விட்டேன். என்று சந்தோஷப்பட்டு துள்ளி குதிப்பார். .அவர் வாழ்வில் அதுவே பெரும் பாக்கியமாக கருதுவார்கள்.தவிர அடிக்க மாட்டார்கள். . ஆகையால் புரட்சிநடிகரால் திரைப்பட உலகிற்கு பெருமைகள் பல பலன்கள் உள்ள இந்த நேரத்தில் அவரை இந்தி எதிர்ப்பு போரில் பங்கு எடுத்துக்கொள்ளவிடமாட்டேன். புரட்சிநடிகரும் மற்ற கலைஞர்களும் இந்தி போரில் ஈடுபட முடியாது. என விதி விளக்கமும் அளித்தார். என்று கூறினார் அறிஞர் அண்ணா அவர்கள். ....... Thanks........
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 63. பேரரறிஞர் அண்ணா
நம்முடைய இதயத்தில் நீங்காத நினைவாக வாழ்ந்துக்கொண்டிருப்பவர் பேரரறிஞர் அண்ணா. ..அண்ணாவின் உள்ளம் அரசியல் உளைக்களத்தில் காய்ச்சிய உருக்கல்ல.
அரசியல் பாலைவனத்தில் அன்பை சொறியும் ஊற்றாகும். அவரது உள்ளம். . அரசியல் தலைவர்களுக்கு இல்லாத பல்வேறு அருங்குணம் பெற்றிருந்தார் அண்ணா. அண்ணா அவர்கள் ஒரு நாடக ஆசிரியர். .சிறந்த எழுத்தாளர். .மிகச்சிறந்த பேச்சாளர். அனுபவமிக்க பத்திரிக்கையாளர். .பண்புமிக்க மாபெரும் அரசியல் அறிஞர். என்பதெல்லாம் இவருடைய சிறப்புகள் என்றாலும். எல்லாவற்றையும் விட தூய்மையான அன்புள்ளம் கொண்ட அண்ணா என்று சொல்வதிலே முழுமையாக காணமுடியும். . அண்ணாவின் உடலை காண முடியாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய உள்ளத்தை உயர்ந்த ககுணங்களை எப்படி காணமுடியாமல் இருக்க முடியும். ..நம்முடைய இதயத்திலே வாழும் அண்ணாவுக்கு பிறந்த நாள் என்றவுடன் நமக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படுகிறது. எத்தனை பூரிப்போடு அவ்விழாவை கொண்டாடிகிறோம். .அண்ணா பிறந்த நாளில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவர் வழியில் நடக்க நாமெல்லாம் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம். .அண்ணா நாமம் வாழ்க வளர்க அண்ணாவின் புகழ் .
( 1970 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15. ந்தேதி பேரரறிஞர் அண்ணாவின் 61. வது பிறந்த நாள் விழாவில் பொன்மனச்செம்மல் பொன் வாழ்த்துக்கள். )
உழைப்பின் பலனை நல்ல பல நற்பணிகளுக்கு செலவிட்டு வருபவர் தோழர் எம்ஜிஆர். அன்பு காட்டவே பிறந்த இதயம் அவருடையது. எம்ஜிஆர் அவர்களது உள்ளம் பெரியது
குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம். இரக்கம் இதயம் படைத்தவரை நண்பராக பெற்றிருக்கிறோம். என்று எண்ணி பெருமைப்படுகிறேன். .திமுக கழகத்தின் வளர்ச்சியில் புரட்சிநடிகரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. .என்பது ஊரறிந்த உண்மையாகும். .திமுகவில் மக்கள் திலகத்துக்கு இருந்த செல்வாக்குக்கு எதிராக சூழ்ச்சி வலைவீசிய போதும் கழகத்தில் இருந்து புரட்சிநடிகர் விலகுவதோ. கழகம் அவரை துறப்பதோ நான் கனவிலும் கற்பனை செய்திட முடியாது. .என்று கைப்பட கடிதத்தில் தெளிவாக எழுதி இருந்தார் அறிஞர் அண்ணா அவர்கள். .
அறிஞர் அண்ணா புரட்சிநடிகரை எப்படி சரியாக புரிந்து வைத்திருக்கிறார் அவர் மீது அதிக படியான பாசமும் வைத்து உள்ளது. தெளிவாக தெரிகிறது. அதேப்போல் அறிஞர் அண்ணா மீதும் மக்கள் திலகம் கொண்டியிருந்த அன்பும் பாசமும் மதிப்பும் அளவு கடந்ததாக இருந்தது. தன்னுடைய படங்களில் திமுக கழக கொடி சின்னத்தையும் அண்ணாவின் கருத்துக்களையும் பகிரங்கமாக நுழைத்து கொள்கை பிரசாரம் செய்தவர். .முதல் முதலில் சினிமாவில் அரசியலை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர்.
அரசியல் வசனம். அரசியல் காட்சி. அரசியல் பங்கு இப்படி சினிமாவில் காண்பித்தது பொன்மனச்செம்மல். .அந்த காலகட்டத்திலும் அதன் பின் வந்த காலகட்டத்திலும். அதற்கு முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கியவர் நமது தெய்வம் புரட்சித்தலைவர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ...... Thanks...
-
*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...*
*ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.*
*அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .*
*"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.*
*1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.*
*அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.*
*திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!*........ Thanks...
-
மைனாரிட்டி திமுக - ஒரு எளிய விளக்கம்
1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.
தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.
அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.
இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.
வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,... இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.
அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.
பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.
அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்... என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.
சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்.... இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.
சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.
வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.
திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.
இது தான் திமுக தலைமைக்கு "மைனாரிட்டி" மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:
அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.
திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.
80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.
இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் "மதச்சார்பற்ற அமைப்புகள்" என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.
சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.
இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.
பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று - விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்... போன்ற காமெடிகள் நடக்கும்.
இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.
இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்.......( WA., நண்பரின் ஆதங்க பதிவு)... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம். 64. பேரரறிஞர் அண்ணா .
வாழ்க்கைக்கு அவசியமான பதிவு தவறாமல் படியுங்கள். .
1966. ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த பெற்றால் தான் பிள்ளையா படத்தின் வெற்றி விழா 1967. ம் ஆண்டு பேரரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. . அந்த விழாவில் பலபேர் புரட்சித்தலைவரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்கள். .அதிலே அண்ணாவும் புரட்சித்தலைவரும் பேசியவை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். .
முதலில் அண்ணா கூறியது பார்ப்போம். .
எளிமையான இயற்கையான நடிப்பை திரையில் வழங்கி எல்லோருடைய மனதிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். புரட்சிநடிகர் எம்ஜிஆர்..எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்தவர். மாபெரும் ஜாம்பவான்கள் படங்களுக்கு மத்தியில் வலம் வந்தவர். அகில உலகமே திரும்பி பார்க்க செய்தவர்.அப்படிப்பட்ட ஒரு நடிகர் இன்று பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு குழந்தைதனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். .என்றால் அவர் இமெஜ்க்கும் கெளரவித்துக்கும் இடம் கொடுக்காமல் நடிப்புக்கும் நல்ல கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். .இந்தியாவிலேயே சிறந்த ஆக்ஷன் நடிகர் பிரமாண்டமான .
திரைப்படங்களில் நடித்தவர் பிரமாண்டமான தயாரிப்பாளர் இதெல்லாம் இல்லாமல். கதையில் பிரமாண்டம் வெற்றியில் பிரமாண்டம் தந்துள்ளார். .ஒரு நல்ல கருத்துள்ள கதையாக இருந்தால். மக்கள் மனம் நாடி செல்லும் கதையாக இருந்தால் அது எம்ஜிஆர் ஒருவரால் தான் நடிக்க முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையை இப்படம் மூலம் தந்துள்ளார் நிருப்பித்துள்ளார். அவரது இயற்கை நடிப்பு மேலும் தொடர வாழ்த்துக்கிறேன். என்றார் பேரறிஞர் அண்ணா. ..
புரட்சித்தலைவர் கூறிய கருத்துள்ள பேச்சு இதோ உங்கள் பார்வைக்கு. .
பெற்றால் தான் பிள்ளையா என்பது நம்நாட்டில் உள்ள மனிதர்களை மட்டும் குறிப்பிடாது.உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நம் பிள்ளைகள்தான்..ஒவ்வொரும் வீட்டியிலும் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருப்பதுபோல் நாம் வளர்க்க வேண்டிய பிள்ளைகள் தென்னம்பிள்ளை வாழைப்பிள்ளை ...வேப்பிலை கருவேப்பிலை .அணில் பிள்ளை கிளிபிள்ளை இவையெல்லாம் நமது பிள்ளைகள் தான். தென்னம்பிள்ளை ஆண்பிள்ளைக்கு சமமானது. தென்னம்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம் அதற்கு மண் நீர் பராமரிப்பு இல்லாமல் வளர்ந்து விடும். .நம் பிள்ளைகள் நமது தலைமுறை வரைதான் ஆனால் தென்னம்பிள்ளை பல தலைமுறை தாண்டி வம்சங்களை காக்கும்..அதேப்போல் வாழைப்பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு சமமானது. அதற்கு முறையான மண்வளம் தேவை. . தேவையான தண்ணீர் தேவை. முறையான பராமரிப்பு தேவை. அதேப்போல் தான் பெண்பிள்ளை பெற்றவர்கள் முறையான பராமரிப்புவுடன் கவனக்குறைவில்லாமல் வளர்க்க வேண்டும்.. வாழை வெட்ட வெட்ட வளர்ந்துக்கொண்டே இருக்கும். அது போல் பெண்பிள்ளையை பெற்றவர்கள் வீடும் தலைமுறை தலைமுறையாக வளர்ச்சி அடைந்துக்கொண்டே போகும். வாழையடி வாழையாக வம்சங்களை குறிப்பிடுவது பெண்பிள்ளைகளைத்தான். அதனால் யாரும் பிள்ளை இல்லை என்று கவலை படாமல் ஒவ்வொரும் வாழைப்பிள்ளை தென்னம்பிள்ளை வளர்த்து தமது பிள்ளைகளாக கருதி வளர்க்க வேண்டும் அதனால் நாட்டுக்கும் நன்மை வீட்டுக்கும் நன்மை. அனைத்து ஜீவராசிகளும் நாம் பெற்ற பிள்ளைகளாக நினைக்க வேண்டும். என்றார் புரட்சித்தலைவர். . எல்லோரும் புரட்சித்தலைவர் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் படத்தில் பங்குபெற்றவர்களைப்பற்றியும் கூற புரட்சித்தலைவர் மட்டும் படத்தின் தலைப்பும் அதன் கருத்தையும் கூறியது கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் கரவோலி விண்னை பிளந்து நிற்க வெகு நேரமாகிவிட்டது. ....... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 65. பேரரறிஞர் அண்ணா
1. பேரரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தி.மு.க ( திராவிட முன்னேற்றக் கழகம் ) . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அதிமுக ( அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் )
2, 1967. ம் ஆண்டு முதல் முதலாக திராவிட இயக்கம் தலைவர் பேரரறிஞர் அண்ணா அவர்கள் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார்.
1977 ம் ஆண்டு முதல் முதலாக அண்ணா திராவிட இயக்கம் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புதிய முதலமை*ச்ச*ராக பதவி ஏற்றார்.
3. 1969 ம் ஆண்டு பேரரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார். வங்க கடலோரம் துயில் கொண்டார்.
1987 ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார். அண்ணாவின் அருகிலேயே வங்க கடலோரம் துயில் கொண்டார். .
4, தமிழில் அண்ணா என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில் ஐந்து எழுத்து. . ஆங்கிலத்தில் M. G . R. என்பது மூன்று எழுத்து தமிழில் ஐந்து எழுத்து. .
5. தியாகராய கல்லூரியில் எம் ஜி ஆர் படத்தை திறந்து வைத்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .அண்ணா சாலையில் அண்ணா சிலை நிறுவினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். .
6. பேரரறிஞர் அண்ணா அவர்கள் பெயரை உச்சரித்து முதல்வர் ஆனார் எம்ஜிஆர் அவர்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் முதல்வர் ஆனார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .
இவையெல்லாம் அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.
புரட்சிநடிகர் என மக்கள் போற்றவும் ..நல்லவர் என நண்பர்கள் வாழ்த்தவும். ..தோழர்களின் தோழர் என கழகத்தார் கூறவும் உரிமை உள்ளவர் எம்ஜிஆர்... அவர் அண்மையில் சென்னை தியாகராய கல்லூரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் திரட்டி தந்துள்ளார். என்பதை கேள்வி பட்டு மகிழ்ந்தோம் பரவசம் படுகிறோம். அவர் குணம் கண்டு அவரது பண்பை பாராட்டும் வகையில் தியாகராய கல்லூரியினர் சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தலைவர் கிருஷ்ணராவின் தலைமையில் என்னைக் கொண்டு எம்ஜிஆரின் படத்தை திறந்து வைக்க சொன்னார்கள். ..கூத்தாடிகள் நாடகமாடிகள் என்று ஏளனமாகப் பேசப்பட்ட நிலைமாறி அவர்களது திருவுருவங்களை கல்லுரியிகளில் வைக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டு வருவது கண்டு மகிழ்கிறோம். பணம் வருவது கடினம். ஆனால் வருகின்ற பணத்தை வகையறிந்து செலவழிப்பது..மிக மிக கடினம். அதுவும் நடிப்புலகில் இது மிகவும் கடினம். இருந்தும் பணத்தை நல்ல காரியங்களுக்காகவே பயன்படுத்திடும் கண்மணியாக இருந்திடும் எம்ஜிஆர் நம்மவராக இருப்பதில். நமக்கு ஒரு பெருமை இருக்கிறது. .இருக்கின்ற இடத்திற்கும். தனக்கும் பெருமை தேடித் தரும் புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க வளர்க அவர்தம் பணி தொடர்க. . ( என்று எம்ஜிஆர் பற்றி பேரரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். .அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இல்லை. ஆதாரம் 13. 4, 1958
திராவிட நாடு பத்திரிகை, )........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 66. பேரரறிஞர் அண்ணா. .
அகமும் புறமும். புரட்சித்தலைவர் பற்றி அண்ணா கூறியது, .
புரட்சிநடிகர் வேண்டும் அதனால் அவர் புகுந்த அரசியலும் வேண்டும். என்று கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் உண்டு. .புரட்சிநடிகர் சேர்ந்து விட்டாரே நாமும் சேர்ந்தால் என்ன என்று சேர்ந்தவர்கள் பலர் உண்டு. .புரட்சிநடிகர் நல்லவர் அதனால் அவர் சேர்ந்த கட்சியும் நல்லாத்தான் இருக்கும் என்று சேர்ந்தவர்கள் பலர் உண்டு. பங்கு கொண்டவர் களும் பலர் உண்டு. .புரட்சிநடிகர் தயவு நமக்கு வேண்டும் ஆகவே அவரது கட்சியின் கொள்கையும் நமக்கு வேண்டும் என்று ஒப்புக் கொண்டு சேர்ந்தவர்களும் பலர் உண்டு
புரட்சிநடிகரை பிடிக்காத காரணத்தால் எம்ஜிஆர் சேர்ந்த கட்சி நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் சிலர் உண்டு? . .
பொதுவாக அகம் புறம் என்று கூறபடுவைகளுக்கு பல வகையான கருத்துக்களை கூறுகின்றனர். . அவற்றில் எது சிறந்தது என்று வாதிடுகின்றனர் . அவற்றுக்கு ரத்தின சுருக்கமாக ஒன்றை கூற வேண்டுமானால். . எண்ணமென்பது அகமென்றும். செயலென்பது புறம் என்றும் கூறலாம். இவற்றில் எது சிறந்தது அகமா? ?புறமா ??.தமிழ் மக்கள் அகத்தையும் புறத்தையும் சமமாக பாவித்து வந்துள்ளனர். .அகத்துக்கு ஐநூறோ புறத்துக்கு முந்நூறோ அல்லது புறத்துக்கோ ஐந்நூறோ அகத்துக்கு முந்நூறோ என்று பாடவில்லை. தமிழன் அகநானூறு புறநானூறு எஎன்றுதானே பாடினான். அகமும் புறமும் தமிழனுக்கு ஒரே எடை இவற்றில் எதாவது ஒன்றை குறிக்கோளாக கொண்டு சிறந்து விளங்கும் நாடு என்றைக்கும் சிறப்பாக வாழ முடியாது. .
உதாரணமாக அக வாழ்க்கையில் சிறந்த நாடு கிரேக்க நாடு. .புற வாழ்க்கையில் சிறந்த நாடு எகிப்து நாடு. இவ்விரு நாடுகளின் நீடுழி புகழ் அறியாதவர்கள் சிலரே. ஆனால் அந்த நீடுழி புகழ் இன்று எங்கே? .? நமது நாடு அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் ஒழுங்கே சிறந்து விளங்குகிறது. .அந்த சிறப்பு தமிழனுக்கு இல்லையென்றால் தனது வீட்டில் பால் பொங்கியது போதாதென்று பிறரையும் பால் பொங்கிற்றா என்று கேட்டிருக்க முடியுமா. ? அதனால்தான் இத்தனை சிறப்பு கொண்டிருக்கிறது இந்நாடு ஆகவே தமிழனை ஈதல் இசை வாழ்ந்தான். என்கின்றனர்.
இதனை நம் நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும். அகம் புறம் இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும். நடிகன் நடிகனாக இருந்து விடக்கூடாது. அதேப்போல் கலை கலைக்காகவே இருந்து விடக் கூடாது. நடிகரும் மக்கள் இனமே .அதுபோல் வாழ்வின் வளத்துக்கே கலை உதவ வேண்டும். என்ற சீரிய நோக்கம் கொண்டவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர். .இந்த நோக்கம் தனக்கு மட்டும் இருந்தால் பயன் இல்லை. ஏனைய கலைஞர்களுக்கும் புக வேண்டும். தான் பெற்ற இன்பத்தை அவர்களும் அடைய வேண்டும். என்று தடுத்தவர் பகைத்தவர் வெறுத்தவர் மத்தியில் அரசியலில் தாவி புகுந்தார். மக்களுக்கு உதவுகிறார் உதவ வேண்டும் என்று துடிக்கிறார். செய்துக்கொண்ட இருக்கிறார். .அகத்தில் நடிப்பிலும் புறத்தில் அரசியலும் ஒழுங்கே சிறப்பை எட்டி பிடிக்கிறார். எம்ஜிஆர். ...... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 67. பேரரறிஞர் அண்ணா
அரசியலில் அன்பையும் பண்பையும் விதைத்தவர் அறிவுலக மேதை பேரரறிஞர் அண்ணா. .தேர்தலில் போட்டியிடலாமா? ? வேண்டாமா? ? 1957 .ம் ஆண்டு மக்கள் மாநாட்டில் மக்கள் தீர்ப்பையும் கருத்தையும் அறிந்துக்கொண்டுத்தான் தேர்தல் களத்தில் இறங்கினார். பேரரறிஞர் அண்ணா அவர்கள். .6. 3. 1967. அன்று சென்னை மாநில முதலமை*ச்ச*ராக பொறுப்பேற்றார். இந்த அரசை தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கிறேன்.என்றார். . அதன் பின் அண்ணாவின் வழியிலே 1972. ம் ஆண்டு தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மன்றத்தில் மக்கள் தீர்ப்பையும் கருத்தையும் அறிந்துக்கொண்டுத்தான் கட்சி தொடங்கினார். அண்ணாவின் அரசை அமைத்தே தீருவேன் என்று ஆளுரைத்தப் புறப்பட்ட புரட்சித்தலைவர் தமிழகம் தன் பக்கம் என்றும் மக்கள் சக்தியெனும் மகத்தான சக்தி மூலம் 56. மாதங்களில் நிருப்பித்தார் தமிழ் நாடு முதலமை*ச்ச*ராக
30. 6. 1977 ல் புரட்சித்தலைவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அதற்கு முன் அண்ணா சிலை அருகில் முதல் முதலாக வாக்குறுதி எடுத்துக் கொண்டார். வாழ்த்துக்கள் பெற்றார் என்பதை அனைவரும் அறிவர். இந்த ஆட்சி அண்ணாவுக்கு காணிக்கையாக்கிறேன் இது அண்ணாவின் அரசு என்றார் பொன்மனச்செம்மல். அவர் எண்ணம் செயல் சொல் அனைத்திலும் அண்ணா வாழ்ந்தார் .பொன்மனச்செம்மல் ஆட்சியில் பேரரறிஞர் அண்ணாவுக்காக அவர் ஆற்றிய பல பணிகள் பல சாதனைகள் இனி பார்ப்போம். .
1. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா உருவம் பொறித்த கொடி அண்ணா உருவம் கொண்ட கட்சி கொடி. .
2, அண்ணா பெயரில் அண்ணாயிசம் என்ற கொள்கை பரப்பினார்.
3. அண்ணா பெயரில் அண்ணா சாலை என்று பெயரிட்டார்.
4, அண்ணா பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்தார்.
5. வண்டலூரில் உள்ள பூங்காவுக்கு அண்ணா உயிரியல் பூங்கா என பெயரிட்டார்.
6. சென்னையில் அண்ணாவுக்கு பவளவிழா நினைவு வளைவு அமைத்தார். .
7. பல இடங்களில் அண்ணா சிலை அமைத்தார்.
8. சென்னையில் அண்ணா நகர் என்று பெயரிட்டார்.
9. சென்னையில் அண்ணா பவளவிழா கட்டிடங்கள் அமைத்தார். .
10. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவகம் அமைத்தார். .
11. சென்னையில் அண்ணா பவளவிழா பிரமாண்டமான மாநாடு நடத்தி அண்ணா பவளவிழா மலர் வெளியிட்டார். .
12. அண்ணா பெயரில் மாவட்டம் அமைத்தார். .
13, அண்ணா போக்குவரத்து கழகம் அமைத்தார்.
14. அண்ணா பெயரில் விருதுகள் வழங்கி கெளரவித்தார்
15. அண்ணா பெயரில் பொறியல் கல்லுரி கழகம் அமைத்தார். .
16. அண்ணா பெயரில் அண்ணா அனாதை இல்லம் அண்ணா முதியோர் இல்லம் அண்ணா சமூக நலக்கூடம் அமைத்தார்.
17. அண்ணா நூலகம் அண்ணா பெயரில் பள்ளி பாடப்புத்தகங்கள் அண்ணா இரவு பாடசாலை அமைத்தார். .
18. அண்ணா பெயரில் சமூக நல மாணவர் அணி அண்ணா பெயரில் அரசு ஆனைகள் அண்ணா திரையரங்கு திறந்தார்.
19. அண்ணா பெயரில் பத்திரிகை நாளேடு தொடங்கினார். .
20. தமிழக அரசு செய்திகுறிப்பில் அண்ணா பொன்மொழி இடம் பெற செய்தார்.
21. கட்சி பொதுக்கூட்டங்களில் அண்ணா உருவம் அண்ணா பேச்சு அண்ணா பற்றிய அறிவுரைகள் போஸ்டர்களில் அண்ணா உருவத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படி செய்தார்.
22. அண்ணா பேருந்து நிலையம் அண்ணா கவியரங்கம் அண்ணா பெயரில் படமானியம். வழங்கினார்.
மேலும் அண்ணா பெயரில் சாதனைகள் தொடரும். ........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 68. பேரரறிஞர் அண்ணா
திரையுலகில் அண்ணாவின் புகழ்.
1. நாடோடிமன்னன் படத்தில் முதன் முதலாக அண்ணா கொடி காண்பித்தார் அதன் பிறகு அடிமைப்பெண் . உலகம் சுற்றும் வாலிபன் . நேற்று இன்று நாளை இதயக்கனி. . நாளை நமதே. . உழைக்கும் கரங்கள், . நவரத்தினம். .போன்ற திரைப்படங்களில் கட்சி கொடி அண்ணா கொடி காண்பித்தார்.
2. அண்ணா நீ என் தெய்வம். அண்ணா பிறந்த நாடு. அண்ணா காட்டிய வழி. என்று படத்திற்கு பெயர் வைத்தார். ஆனால் படம் எடுக்காமல் பாதியில் நின்றது.
3. . நான் செல்லுகின்ற பாதை பேரரறிஞர் காட்டும் பாதை என்று புதிய பூமி படத்திலும். 2. மேடையிலே முழங்க வேண்டும் அறிஞர் அண்ணா போல். என்று பெற்றதால் பிள்ளையா படத்திலும்.
3. சந்தனபெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார். என்று எங்கள் தங்கம் படத்திலும்.
4, அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் என்று இதயவீணை படத்திலும்
5. அண்ணமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை என்று அண்ணமிட்ட கை படத்திலும். .
6. நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். என்று நேற்று இன்று நாளை படத்திலும்.
7. அண்ணன் போற்றும் தம்பி என்று நீயே கூறலாம். உரிமைக்குரல் படத்திலும்.
8. அண்ணாவை என் உள்ளம் ஒருநாளும் மறவாது. .என்று நினைத்தைப் முடிப்பவன் படத்திலும்.
9. எதையும் தாங்கிடும் இதயம் என்றும் மாறாது. என்று நாளை நமதே படத்திலும். .
10. அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுவே சத்தியம் என்றும் , கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க உரிமைக்குரல் படத்திலும். .
11. தென்னாட்டு காந்தி அண்ணாவே சொன்னார் என்று நம்நாடு படத்திலும்.
12. அண்ணா சொன்ன வழி கண்டு நம்மை தேடுங்கள் என்று இதயக்கனி படத்திலும்.
13, இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார். அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார். என்று பல்லாண்டு வாழ்க படத்திலும். .
14. உங்களின் நம் அண்ணாவை பார்க்கிறேன் என்று நவரத்தினம் படத்திலும்.
15. அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம் என்று மீணவநண்பன் படத்திலும் .
16. கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறந்து போனீர்களே என்று இன்று போல் என்றும் வாழ்க படத்திலும். இவையெல்லாம் அண்ணாவைப்பற்றி படத்தில் பாடிய பாடல்கள் ஆகும்.
4, உலகம் சுற்றும் வாலிபன். எங்கள் தங்கம். இதயக்கனி. நேற்று இன்று நாளை. .பல்லாண்டு வாழ்க. .சிரித்து வாழ வேண்டும்..போன்ற திரைப்படங்களில் அண்ணாவின் பேச்சுகள் ஒலிக்கும். .
5, சுமார் 40. திரைப்படங்களுக்கு மேல் அண்ணாவின் புகழ் பாடி வசனங்கள் அமைந்திருக்கும். .
6. அண்ணாவின் கதை வசனம் எழுதிய தாய்மகளுக்கு கட்டிய தாலி நல்லவன் வாழ்வான். .இதில் நல்லவன் வாழ்வான் படம் சம்பளம் வாங்காமல் நடித்தார். .
7. திரைப்படங்களில் அண்ணாவின் உருவம் காண்பித்தார் அண்ணாவின் காட்சிகளை காண்பித்தார்.
8. அண்ணா கலந்துக்கொண்ட திரைப்படங்களின் நிகழ்ச்சிகள்.
நாடோடிமன்னன் .எங்க வீட்டு பிள்ளை. ..காவல்காரன்..பெற்றால் தான் பிள்ளையா.
குடியிந்தக்கோயில்.
9. பாண்டிச்சேரியில் அண்ணா ஆட்சி நிறுவினார்.
10. கட்சி ஆரம்பித்து முதல் முதலாக அண்ணா பிறந்த காஞ்சியிலே முதல் கூட்டம் நடத்தினார். .
11. அண்ணா கண்காட்சி தொடங்கினார். .அண்ணா பிறந்த நாள் போட்டிகள். .பிறந்த நாள் பரிசுகள் வழங்கினார்.
12. முடிவாக பேரரறிஞர் அண்ணா அருகிலேயே அமரரானர். .அண்ணாவும் ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார். .பொன்மனச்செம்மலும் ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார். ...... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 69 பேரரறிஞர் அண்ணா.
1967. ம் ஆண்டு திமுக கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் பேரரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக கூடிய சட்டசபையில் புரட்சிநடிகர் எம்ஜிஆர் பற்றி சில வாக்கியங்கள் பேசிய பிறகுதான் சட்டசபை நடைபெற்றது. அப்போது பேரரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய சில முத்தான வாக்கியங்கள். .
காந்தி சுடப்பட்டார் இறந்து போனார். கென்னடி சுடப்பட்டார் இறந்து போனார் .ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார் இறந்து போனார் .எம்ஜிஆர் சுடப்பட்டார் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன் நல்ல வேளை யார் செய்த முற்பயனோ உயிர் பிழைத்துக்கொண்டார். அவரை நாம் இழந்திருந்தால் அது ஒரு சாதாரண தனிமனிதனின் இழப்பாக இருந்திருக்காது. ஈகை குணம் கொண்ட ஒரு நல்ல மனிதரை. பண்பாளரை .ஒரு நல்ல நடிகரை. தேசப்பற்றுமிக்க மனிதரை. .நமது கட்சியின் போர் கொடி மக்களின் இதயத்தை தொட்டவர். இப்படி எத்தனையோ பேரை எம்ஜிஆர் என்ற தனிமனிதர் மூலம் இழந்திருக்க வேண்டியிருக்கும். .இந்த ஆட்சி அவர் மூலம் கிடைத்தது. அதனால் நாம் அவர்க்கு செய்யும் நன்றி கடனாக ஒரு முறை கரவோலி வீசுவோம் என்று சட்டசபையில் அண்ணா பேசிய பிறகு கரவோலி மூலம் எம்ஜிஆருக்கு நன்றி கூறிய பிறகு தான் சபை நடத்தப்பட்டது. அப்போது இருந்த அனைத்து கட்சியினரும் அதை வரவேற்று ஆமோதித்தனர்.
ஒரு முறை அறிஞர் அண்ணாவுடன் எம்ஜிஆர் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். .அண்ணா வழக்கம் போல் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். .எம்ஜிஆர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். பெரம்பலூர்க்கு அப்பால் சென்ற பொழுது .காரை சாலையின் ஒரமாக நிறுத்தினார். .அப்போது அந்த பகுதியில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டியிருந்த இளைஞர்கள் விவசாயிகள் முதியோர்கள். காரில் இருந்த திமுக கொடியை பார்த்து விட்டு எம்ஜிஆர் கார் என கூவிக்கொண்டு ஓடிவந்து எம்ஜிஆர் இருக்கிறாரா என எட்டிப் பார்த்தனர். அதற்குள் கிராம மக்களும் ஒடி வந்து காரை சூழ்ந்துக்கொண்டு எம்ஜிஆரை தேடினார்கள். முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவரை அண்ணா என்று தெரியாமல் எம்ஜிஆர் வந்திருக்கிறரா என்று கேட்டனர். அதற்கு அண்ணா முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் எம்ஜிஆர்,என்றுகூறி அண்ணா கீழே இறங்கி கார் கதவை திறந்து எம்ஜிஆரை வெளிவர செய்தார். எம்ஜிஆர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போனார்
அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும். தன்னோடு இருப்பவர்கள் தன்னை விட மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருக்கும் போது. பொறாமை படுவதற்கு பதிலாக பெருமைப்பட்டார். அதை எண்ணி மனம் திகைத்தார். எம்ஜிஆர் இறுதி வரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணமாக விளங்குபவர் பேரரறிஞர் அண்ணா. என்றால் தகுதியான வாரிசுக்கு இலக்கணம் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர்தான் என்பதற்கு இது ஒரு சான்றாகும்........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 70, பேரரறிஞர் அண்ணா. .
ஒரு முறை அறிஞர் அண்ணா அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன். நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி. .ஆர் எம் வீரப்பன். ..எஸ் எஸ் ஆர்.ராஜேந்திரன், .முசிறி பித்தன். .கருணாநிதி. .நாவலர் நெடுஞ்செழியன். .மற்றும் சில முக்கிய நண்பர்களை கூப்பிட்டு எம்ஜிஆரை விட்டு எந்த காரணத்தைக் கொண்டும்.
விலகி போகாதீர்கள் அவர் பக்கத்திலே எப்போதும் இருங்கள்.. ஏன் என்றால் எம்ஜிஆர் ரசிகர்களை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்டது தான் அவர் மன்றங்கள். . இந்த மன்றங்களில் பதினைந்து வயதில் இருந்து இருப்பத்தி நான்கு வயதுக்குள்ளான எதற்கும் அஞ்சாத எம்ஜிஆர்க்காக உயிரை தரக்கூடிய பத்து லட்சம் பேர் உறுப்பினர்களாகவும். மேலும் பத்து லட்சம் பேர் உறுப்பினர் இல்லாமல் அவரது ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுதான் அவரது சொத்து அவரது உறவினர்கள். அவர் நம்மை விட்டு விலகினாலும் நாம் அவரை விட்டு விலகினாலும். அவரது சொத்துக்களான ரசிகர்களும் நம்மைவிட்டு விலகுவார்கள். என்று அண்ணா உணர்ச்சிவசப்பட்டு கூறினாலும். அண்ணாவின் அன்புக்கட்டளையே ஏற்று அதன் படி இன்றும் நாங்கள் எம்ஜிஆர் பக்கத்திலே இரூக்கின்றோம். .ஆனால் பலர் அண்ணா எம்ஜிஆரை மறந்து வேறு இடத்தில் உள்ளனர். என்ன செய்வது உலகத்திலேயே எந்த சினிமா நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றம் ஒரு தமிழ்பட நடிகரான எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே இருப்பது சரித்திரத்தில் இடம் பெற கூடிய சாதனையாகும். .( 1976 ம் ஆண்டு கல்கண்டு பத்திரிக்கையில் வந்த கட்டுரையில் எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவர் முசிறி புத்தனின் மனதில் வந்த வார்த்தைகள் எழுத்துக்கள் ஆகும். )
பேரரறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நோயுடு போராடிக்கொண்டியிருந்த நேரம். அமெரிக்க நாட்டுக்கு அனுப்பி மீண்டும் வருவார் என்று ஏங்கியிருந்த நேரம். அன்றைக்கு பம்பாய் சாந்தா குரூஸ் விமான நிலையத்தில் அண்ணாவை வழி அனுப்ப எல்லாரும் பக்கத்தில் இருந்தார்கள். ஆனால் பேரரறிஞர் அண்ணா அவர்கள் நள்ளிரவு வேளையிலும். ஒருவரை தேடினார். அவரும் அடிக்கடி முந்திரிக்கொட்டைப்போல் முன்னாலே உட்கார்ந்து கொள்பவர் அல்லவா. ..அதைப்போலத்தான் அன்றைக்கும் தாளமுடியாத தாக்கத்தினால். கண்ணீரைத் துடைத்து கொண்டு. பேரரறிஞர் அண்ணா அவர்களை காலை ஐந்து மணிக்கு விமானத்தில் அனுப்ப போகிறமே அவர்கள் மீண்டும் நம்மிடத்தில் நலம்பெற்று வரவேண்டும். என்று எங்கேயோ உட்கார்ந்து தேம்பிக்கொண்டியிருக்கிற ஒருவரைத்தான் பேரரறிஞர் அண்ணா அவர்கள் தேடிக்கொண்டிருந்தார். யார் அவர் என்றால் அந்த மூன்றெழுத்து மோகனவார்த்தைக்கு சொந்தக்காரர்.புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான் பேரரறிஞர் அண்ணா அவர்கள் எங்கே என்று கேட்டார்கள். தொண்டர்கள் ஒடிப்போய் அழைத்து வருகிறார்கள். அப்போது தான் அண்ணா தான் வாங்கிய புதிய ஆங்கில புத்தகத்திடைய அட்டையை கிழித்து எம்ஜிஆரிடம் கொடுத்தார்..அந்த அட்டையில் என்ன படம் என்றால். வலிமைமிக்க கரம் அந்த கரம் ஒரு ஸ்பானரைப் பிடித்திருக்கிறது. அந்த படத்தை ஏன் புரட்சித்தலைவரிடம் அண்ணா அவர்கள் கொடுத்தார்கள் என்பதற்கு இன்று வரை யாருக்கும் விளங்கவில்லை. அந்த படத்தைதான் அண்ணா அவர்கள் திமுக கழகத்தின் தொழிற்சங்க கொடியாக மாற்றினார். ( கட்சி பல்வேறு குழப்பங்கள் உள்ளது அதை நீதான் ஸ்பானரை கொண்டு சரி செய்ய வேண்டும். உங்கள் ஒருவரால் தான் அது முடியும் என்று பொருள் விளங்க கொடுத்தார். ) எம் ஜி ஆர் ஆற்றல் எப்படிப்பட்டது என்று யாராலும் கண்டுக்கொள்ள முடியாது. அண்ணா மட்டும் தான் அவர் ஆற்றலை கண்டுக்கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். ....... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 71. .பேரரறிஞர் அண்ணா
1967. ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக கட்சி தேர்தலில் போட்டியிட தயாரானது . . நாவலர் நெடுஞ்செழியன், .பேராசிரியர் அன்பழகன். .கருணாநிதி. . ஆர் எம் வீரப்பன். . என் வி சோமு. . என் வி சம்பத், . எஸ் எஸ் ஆர் ராஜேந்திரன். .நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி. .மதியழகன். .மற்றும் பல முன்னணி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நிதி சேர்த்தனர். . அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் எவ்வளவு நிதி கேட்கலாம். அல்லது நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து அதில் எம்ஜிஆரை வரவேற்று கலந்து கொள்வது. அதன் மூலம் நிதி வசூல் செய்யலாம். அல்லது எம்ஜிஆர் நாடகம் அமைத்து நாடகம் மூலம் வசூல் செய்யலாம். .அதுவும் இல்லையென்றால் எம்ஜிஆர் திரைப்படங்கள் பல தியேட்டர்களில் போட்டு அதன் மூலம் வசூல் காணலாம். .இப்படி பல வகையான யோசனையில் எம்ஜிஆரை வைத்து எப்படியெல்லாம் நிதி வசூல் செய்யலாம் என எண்ணி யோசித்திருந்தனர். .எதற்கும் கட்சி தலைவர் அண்ணாவிடம் கேட்டு செய்வோம். என்று எண்ணி அண்ணாவிடம் சென்று எம்ஜிஆரிடம் எவ்வளவு வசூல் செய்யலாம் என கேட்டனர். . எம்ஜிஆரும் இந்த தகவலை தெரிந்து அண்ணா எவ்வளவு கேட்டாலும் நான் தர தயார் என்றார். .அதற்கு அண்ணா தந்த விளக்கம். ... எனது தம்பியும் நண்பர் எம் ஜி ஆர் அவர்கள் நான் கட்டளையிட்டால் ஒரு லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக தருவதாக கூறினார். .நான் கேட்டா ஒரு லட்சம் ரூபாய் என்ன ஐந்து லட்சம் கூட கொடுக்கக்கூடிய மனமும் திறமையும் படைத்தவர். .நான் இப்போது அவர்களிடத்தில் லட்சத்தில் பணத்தை எதிர் பார்க்க வில்லை. .அவர் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நாடெங்கும் ஒரு முறை சுற்றி வந்து அவரது இனிய முகத்தை பொதுமக்களிடம் காட்டினால் போதும் ..எனக்கு பல லட்சக்கணக்கான வாக்குகள் கிடைக்கும். . என்ற உறுதி பாடு உண்டு. கலைஞன் என்பவன் மிக நுணுக்கமானவன் மனிதர்களிடமிருந்து மாறுப்பட்டவன். உண்மையே உணர மறுப்பவர்களுக்கு உணர வைப்பவன். அப்படி உணர வைத்த கலைஞர்களில் தலைசிறந்தவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். அவர் வழியில் கருத்தாற்றலும் கடமையாற்றலும். .சிறந்த ஒரே கலைஞர் தம்பி எம்ஜிஆர் ஒருவர்தான். என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். .
1969 ம் ஆண்டு என் தந்தை மறைந்த பிறகு நான் பரிமளம் பதிப்பகத்தின் மூலம் அண்ணாவின் நாடகங்களை. அண்ணாவின் சிறு கதைகள். .என்கின்ற தொகுப்புகளை கொண்டு வந்தேன். அதை விற்க தெரியாமல் கடன் ஏற்பட்டு. ஏ வி எம் அச்சகம் என் மீது வழக்கு தொடர்ந்தது. .இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் என்னை உரிமையோடு கண்டித்து. என்னிடம் ஏன் கூறவில்லை என்று கோபப்பட்டார். .ஊரில் பிறர்க்கு நான் செய்வது உதவி. .அண்ணாவின் குடும்பத்தினருக்கும் என் எஸ் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் நான் செய்வது கடமையாகும். .என்று கூறி கட்ட வேண்டிய அனைத்து தொகையும் திரு எம்ஜிஆர் அவர்கள் கட்டினார். அதுமட்டுமல்ல வழக்கு மன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து என்னை மீட்டனர். ..என் அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது. என்று படத்திற்காக மட்டும் அல்ல நிஜவாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர்.
( பேரரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மைந்தன் டாக்டர் பரிமளம் எழுதிய கட்டுரையில் )...... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 72. பேரரறிஞர் அண்ணா
பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியதும் அமைச்சர்களின் பட்டியலை தயாரிக்க அந்த பட்டியலில் எம்ஜிஆர் பெயர் இருந்தது. ஆனால் எம் ஜி ஆரோ அந்த பட்டியலில் இருந்து எனது பெயரை எடுத்து விடுங்கள் எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. வேண்டாம். என்றார். அதற்கான காரணம் சொன்னார். நான் நடிப்பு துறையில் இருக்கிறேன். மக்களை நம்பக்கம் வைக்க திரையுலகம் ஒரு சாதனை ஏடு அதை மக்களுக்காக நான் பயன்படுத்த வேண்டும். அதனால் கட்சிக்காக உழைத்தவர்கள் நம்மோடு கட்சியில் இருப்பவர்களுக்கு அந்த பதவியே கொடுங்கள் என்றார். அண்ணா கொடுத்த பதவியை மறுப்பது. அண்ணாவை மதிக்காதுப்போல் ஆகும் என்று கட்சியில் உள்ள ஒரு சிலர் குறை கூறினார்கள். இதை அறிந்த அண்ணா அவர்கள் தந்த விளக்கம். .
எத்தனையோ பேர்கள் பதவிக்காக போட்டி போடுவார்கள் பதவி தரவில்லை என்பதற்காக கட்சி தாவுவார்கள். .பதவிக்காக பகையாளியாக மாறுபவர்கள் உண்டு ஏன் பதவிக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவர்கள் உண்டு. .இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில். பதவி வேண்டாம் என்று உதறி தள்ளும் எம்ஜிஆர் பெருதன்மைய காட்டுகிறது. அவரால் பெற்ற ஆட்சி இது அதற்காக தனது கொள்கையே தர்மம் செய்து உள்ளார். கட்சிக்காக தனது உழைப்பை தர்மம் செய்து உள்ளார். கட்சியில் உழைத்தவர்களுக்காக தனது பதவியை தர்மம் செய்து உள்ளார். இப்படியும் தர்மம் செய்யலாம் என்பதை கற்றுத் தந்துள்ளார். .தம்பி ராமச்சந்திரன் மக்கள் மனதில் மகா ராஜா திரையுலகுக்கு சக்கரவர்த்தி .அதனால் மந்திரி பதவி அவருக்கு பெரிய விஷயமல்ல. தம்பி எப்போதும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இருக்கட்டும். என்றார். .
அண்ணாவுக்கு எப்போதும் எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு பிடிக்கும். அண்ணா பலமுறை எம்ஜிஆருடன் அவரது வீட்டில் உணவு உண்டு உள்ளார். ஒரு நாள் அப்படி உணவு உண்ணும் போது. எம்ஜிஆரும் அண்ணாவும் சில பிரச்சினைகள் குறித்து பேசினார்கள் இறுதியாக அண்ணா அவர்கள் எம்ஜிஆர் பற்றி சொன்னது. மறக்க முடியாத வார்த்தைகள் ஆகும். .தம்பி உன் பேர்லே பலர் குறை சொன்னார்கள். நீ ஆட்சி. . அரசியல். .விவகாரங்களில் கலந்துக்கொள்வதில்லை எப்பவும் நடிப்பிலே இருக்கிற சட்டசபை கூட்டத்துக்கு வர்றதில்லை. சொன்னாங்க. .? அவங்களுக்கு தெரியாது நீ தினமும் மேக்கப் போடுறது கட்சிக்காகத்தான் .. ஆயிரம் மேடையிலே நாங்கெல்லாம் சொல்ல முடியாததை நீ ஒரு படத்திலே ஒரு காட்சியிலே ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிற. .நீ ராமச்சந்திரன் ஆனால் வானத்துக்கும் சந்திரன் எட்டியிருந்து ஒளி கொடுக்கிறவன். நீ மற்றவங்களுக்கு கைவிளக்கு. கிட்டேயிருந்து ஒளி கொடுப்பவன். உறுதியோடு இருப்பதால் சில பிரச்சினைகளும் தடங்களும் வரத்தான் செய்யும்.
எதையும் நீ மற்றவங்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும். தவிர மற்றவர்கள் குறையை ஒரு பொருட்டா நினைக்ககூடாது என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ....... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 73 . பேரரறிஞர் அண்ணா
அண்ணா மீது அதிக பாசம் வைத்த எம்ஜிஆர் அண்ணா மரணம் அடைந்தபோது கதறி அழுதார். அழுதுக்கொண்டே இருந்தார். என் தந்தை இறந்த போது தெரியாது அப்போது நான் சிறுவன் தாயை இழந்த போது எனக்கு அதிகமாக துக்கம் இருந்தது. இருந்தாலும் என் கண்ணீரை அடக்கினேன். .அண்ணாவின் மரணம் என்னை கலங்க வைத்து விட்டது என் அழுகையை அடக்கமுடியல என்று தங்கதமிழ் மகனை வங்க கடலோரம் அடக்கிய பின் சொன்னார். என் பெரும் இழப்பு அண்ணாவின் இறப்பு என்று பலர் முன் புலம்பினார். .என்னை சந்திரன் என்றார்கள் அவர்களோ சூரியன். .சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ? என்று வருந்தினார். ஒப்பாரியில் மிகவும் ரசிக்கத்தக்கதும் வருனை மிகுந்ததும் ராவணன் மனைவி காந்தாரி புலம்பியதும் கம்பன் வருனையில் களைக்கட்டி நிற்கும். .தமிழ் என்னை உன் இதயத்தில் வைத்திருப்பதாக சொன்னீர்களே ராமபாணம் அந்த இதயத்தை துளைத்த போது என்னையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று பொய் சொன்னீர்களா என கேட்டு அழுதாராம். அப்படி இந்த கோமகனும் தனக்குள் புலம்பினார். நடந்துக்கொண்டே வேட்டிக்கட்டும் அழகு எப்போ பார்ப்பேன். .மேடையிலே பிரசாங்கம் செய்யப்போறப்போ யாருக்கும் தெரியாமல் பொடி போடற பக்குவம் யாருக்கு வரும். என் உடன்பிறந்தவர்கள் கூட தம்பி என்று கூப்பிடறது இல்லை. நீங்கதானே கூப்பிடுவீங்க இனிமேல் யார் என்னை கூப்பிடற போறாங்க. என்றார். .
பேரரறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நாடகம் மன்றம் சார்பில் இன்பகனவு, .இடிந்தக்கோயில். ,மற்றும் அட்வகேட் அமரன். முதலிய நாடகங்கள் நடத்தி கட்சிக்கு நிதி சேர்த்துக்கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதல்லாம் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் இனைந்து வெளியூர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்தார். .எம்ஜிஆர் கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டங்களில் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. .மக்களும் காசு கொடுத்து கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வந்தனர். .அந்த நிதி முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. திமுக கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் முதன்மையானவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான். முன்னப்போதும் கேள்வி படாத சரித்திர சாதனையாகும் இது? அதைப் பார்த்து அண்ணா பூரித்துப் போனார். அன்று நம்நாடு பத்திரிகைகளில் இப்படி எழுதினார். .
நண்பர் எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை நாடு அறியும். எம்ஜிஆரை நான் பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றதாகும். ..
அவர் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதை கூறவா வேண்டும். ? தி.மு.க கட்சியினால் எம்ஜிஆர். எம்ஜிஆரால் திமுக கட்சி. . இரவு பகல்.. உயர்வு தாழ்வு. ..கொடுப்பவன் வாங்குபவன். ..மேடு பள்ளம். .
இவையெல்லாம் எப்படி இயற்கையில் மாற்ற முடியாதோ. அதுபோல் தான் எம் ஜி ஆர் இல்லையென்றால் கட்சி இல்லை. கட்சியில்லையென்றால் எம்ஜிஆர் இல்லை. கட்சியும் எம்ஜிஆரையும் மாற்ற முடியாது. .என்று காந்தகம் போல் ஆகிவிட்டது. .என்று அருமையாக எழுதியிருக்கார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். அதைவைத்துதான்எம்ஜிஆரை அண்ணாவின் இதயக்கனி என்று எல்லோரும் சொல்கிறார்கள்........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 74 பேரரறிஞர் அண்ணா. .
அண்ணாவுக்கும்எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். .
2, நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள். .
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். .எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார். 4, இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள். .
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். 8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்...
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு அறிஞர் அண்ணா என் வி நடராஜன் வுடன் பொதுக்கூட்டத்தற்காக செல்லும் போது கோவில்பட்டி அருகே அண்ணாவின் கார் ஒரு மரத்தடியில் அருகே நிறுத்தப்படுகிறது. வயல்வெளியில் தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் காரில் திமுக கொடி பறப்பதை கண்டு ஒடி வந்தனர். கார் அருகே வந்து நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் கட்சியா என்று அண்ணாவையும் நடராஜனையும் பார்த்து கேட்டனர். அதற்கு அண்ணாவும் ஆம் நாங்களெல்லாம் எம்ஜிஆர் கட்சித்தான் என்றவர் உங்களுக்கு எம்ஜிஆரை பிடிக்குமா? ? என்று கேட்டார்? ? .எம்ஜிஆர் எங்கள் உசுரு என்று சிலரும் அவர்தான் எங்கள் தலைவர் என்று சிலரும் எங்கள் வாத்தியார் அவர்தான் என்றும் அவரவர்க்கு தகுந்த பதில் கூறினார்கள். உடனே அங்குள்ள மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்கள் காய்கறிகள் டவல் துண்டுகள் யாவும் அண்ணாவிடம் கொடுத்து. இது எங்கள் தலைவர் எம்ஜிஆரிடம் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் அன்போடு கொடுத்ததை அண்ணா மறுக்காமல் வாங்கி கொண்டார். அதே நேரத்தில் அண்ணாவின் காரை துடைத்து தூய்மை படுத்தினார்கள். .எம்ஜிஆரிடம் நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என்றனர்..தான் ஒரு திமுகவின் தலைவராக இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை. .திமுக கொடி எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் எம்ஜிஆர் கட்சி கொடி என்றுதான் சொல்கிறார்கள் தவிர திமுக வில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அவர்கள் மனதிலும் இல்லை பார்வையிலும் இல்லை. என்று நினைத்து பெருமைப்பட்டு என் வி நடராஜனிடம் கூறினார். எம்ஜிஆர் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தனை பேர்களுக்கும் முன்னாள் கூறினார். அதனால்தான் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த பேச்சியிலும் செயலிலும் எம்ஜிஆரை விட்டு கொடுக்காமல் இருந்தார். .எம்ஜிஆரின் செல்வாக்கு எத்தகையற்றது என்பதை விளக்கும் இச்சம்பவம் ஆகுக..ககுருவின் பெயரையும் மிஞ்சி குருவுக்கு புகழ் தேடி தந்த உண்மையான சீடனாக எம்ஜிஆர் இருந்தார். ........ Thanks...
-
அனைவருக்கும் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரை புதிய ஆண்டு தொடக்கமாக எழுதுகிறேன். .பார்த்தால்நீளமாக இருக்கும் படித்தால் சுலபமாக இருக்கும்
சந்திரோதயம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரைகள்
1. தற்கொலை கேவலமானது. பலவீனமானது. .கோழைதனமாது..
2, குடை பிடித்தால் சூரியன் மறையாது மற்றவங்க பார்வையில் நாம் தான் மறைவோம்
3. அநீதியின் போர்வையில் கொஞ்சநாள் மறைந்திருக்கலாம் நீதியின் பார்வையில் எப்பவும் தப்பிக்க முடியாது..
4, ,வசதியுள்ளவங்க வாழ்க்கையில் நொறுங்கி போனவங்களுக்கு சுமை தாங்கி இருந்தா இங்கு மட்டும் அல்ல உலகத்தில் எங்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் இருக்கும். .
5. ஏழைகளும் நம்மைப்போல பத்து மாதம் தான் ஆனால் உடல் கறுப்பு உள்ளம் வெண்மை உதிரம் சிவப்பு. .
6. வீட்டுக் கூரையிலே ஒட்டடை படியனும் என்று யாரும் விரும்புவதில்லை. அது தானாகத்தாத்தான் படியும். அதுப்போல்தான் நமது வாழ்க்கையில் வரும் துன்பமும். .அதை மன உறுதியால் தான் போக்கனும். .
7. வாழ்க்கையில் முன்னுக்கு வரனும் என்று முயற்சி பன்றது தப்பில்லை. அதற்காக குறுக்கு வழியில் கோபுரம் ஏறக்கூடாது. .
8. பெண்களை தெய்வமாக மதிக்கிற நாடு இது. கல்விக்கு சரஸ்வதியும். .செல்வத்துக்கு லஷ்மியும். .பொறுமைக்கு பூமாதேவியும் குறிப்பிடுக்கிறோம். .அப்படிப்பட்ட நாட்டில் தான் பெண்ணை இழிவு படுத்துகிறார்கள்.
9. தனிப்பட்ட விரோதத்திற்க்காகவும். .நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்துவது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யற மிகப்பெரிய துரோகம். ஆகும். .
10. நாட்டிலே பெண்களுக்கு பஞ்சம் இல்லை பெண்களின் உரிமைக்குத்தான் பஞ்சம். அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத ஆண்களின் அறிவுக்குதான் பஞ்சம்
11. கேவலம் பணத்துக்காக பண்பை பகுத்தறிவை மனிதாபிமானத்தை முறிக்க கூடாது.
12. அசிங்கமான ஏழைகளின் பணத்தால்தான் பத்திரிகை வளர்கிறது பணக்காரர்களின் வாழ்வு மலருகிறது
13. கூண்டுக்குள் போர்வையில் இருக்கிற புலிகள் எவ்வளவோ மேலானது. .வெளியே மனித உருவில் ஆயிரக்கணக்கான புலிகள் இருக்கின்றன அவங்க இதயத்தைப் போர்வையாக்கி இருக்கிறாங்க. .
14. என்னதான் கருப்பாக இருந்தாலும் காகம் குயிலாக மாறாது. காரணம் நல்லா இருந்தா பொய்யைக்கூட அனுமதிக்கலாம். என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். .
15. பெண்கள் முட்டைக்குள் இருக்கிற மஞ்சள் கரு மாதிரி. . என்ன நடந்தாலும் நான்கு சுவற்றுக்குள்தான் இருக்கனும். நான்கு சுவர் என்பது. அச்சம். .மடம். .நாணம். .பயிர்ப்பு. .பண்புகள் தான். .
16. பெண்கள் கடவுள் சிலை மாதிரி கோயிலை விட்டு வெளியே போனால் வெறும் கல்தான் இறைவன் கழுத்தில் உள்ள மாலை போல் இருக்கிற வரைக்கும் மரியாதை செய்வார்கள் கும்பிடுவார்கள். அதே மாலை வெளியே வந்து விழுந்தா யார் வேண்டுமானாலும் மிதிப்பார்கள்.
17. மனிதனின் முகம் இருக்கிற அதே இடத்தில் இதயம் இருந்தால் உலகத்திலேயே குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். . என்ன செய்யறது கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருக்கிறதனால்தான் உலகத்தில் இத்தனை அக்கிரமம் நடக்கிறது. .
18. மழைத்துளியில் எந்த வித்தியாசமும் இல்லை அதுவே நத்தையின் வாயிலே விழும் போது முத்தாக இருக்கிறது குப்பையில் விழும் போது சேறு ஆகிறது. .
19. குப்பையில் விழுந்தாலும் அது மாணிக்கமாக இருந்தா குனிந்து எடுக்கிறோம் இல்லையா? ? .
20. பத்திரிகையில் பொய்யான செய்தி வெளியிடுவதால் நாட்டினிலே எத்தனையோ குடும்பங்கள் திசை மாறி போய். ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. .
21. இந்த நாட்டிலேயே இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் யாராவது ஒருவருக்கு தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் இருக்கிறார்கள் என்கிற கருத்து நமக்குள் இருக்க வேண்டும். .
22. ஆண்டவன் நிரபராதிகளை கைவிடுவதில்லை. குறைந்த அறிவுள்ள கோழிக்கூட தன் குஞ்சுகளை அடைக்காத்து வளர்க்கிறது. .
என்ன நண்பர்களே இந்த ஆண்டு வாத்தியார் கூறிய கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுங்கள் அதுவே இந்த ஆண்டு முதல் தொடக்கமாக இருக்கட்டும்.
வாழ்க தமிழ் வளர்க புரட்சித்தலைவர் புகழ் தொடரட்டும் உங்கள் தொண்டு........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 75. பேரரறிஞர் அண்ணா
மதுரையில் ஒரு தடவை பேரரறிஞர் அண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பற்றி கூறுகையில் எம்ஜிஆர் அவர்கள் என் மீது முமு அன்பு செலுத்துப்பவர். எங்கும் எதிலும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பவர். அப்படி கூறுகையில் இடைமறித்து கருணாநிதி அண்ணாவிடம் கேட்டார். அப்படியானால் நாங்கெல்லாம் உங்கள் மீது குறைவான அன்பு செலுத்துபவர்களா அல்லது நாங்கள் வைத்திருக்கும் அன்பு பொய்யானாதா? ? என்று கேட்டார். அதற்கு அண்ணா கூறியது. மனித அளவில் நீங்கள் அன்பு செலுத்திகிற நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் என் மீது தெய்வீக அன்பு செலுத்துப்பவர் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு அவர் தாய் மீது கொண்ட அன்புக்கு இணையானது. என்று பதில் அளித்தார். .
அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் 1962, ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது. காங்கிரஸ் வேட்பாளர் பஸ் அதிபர் நடேசன் முதலியார் என்பவரிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. .பொன்மனச்செம்மல் எம்ஜிஆரும் சோகத்தில் மூழ்கினார். அண்ணா அவர்கள் தமது தோல்வியே மறக்க கர்நாடகவில் உள்ள சிரவனவெலகுலா. என்ற இடத்திற்கு சென்று அங்கு தவமிருந்து முக்தி அடைந்த பாகுபலியின் 58. அடி உயர கல்லால் உருவாக்கப்பட்ட சிலையை கண்டு ஆறுதல் பெற்றார். இந்த நேரத்தில் தனது ஆறுதலை வெளிப்படுத்த வேண்டி கண்ணதாசனிடம் தனது மனநிலையை எடுத்து கூறி பாடல் எழுத சொன்னார். தர்மம் தலைக்காக்கும் என்ற படத்தில் வரும் மூடு பனி குளிரெடுத்து என்ற பாடலில் வரியை புகுத்தி எழுதியது. தேர்தலில் தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பது உண்டு காதலில் தோற்றவர்கள் ஜெயிப்பதில்லை. .என்று எழுதினார். .காதல் பாடலில் இப்படி ஆறுதல் தரும் வார்த்தையும் வரியும் எழுதியதற்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு நன்றி கூறினார். .தனக்காகத்தான் எம்ஜிஆர் இந்த வரியை ககண்ணதாசனிடம் எழுத சொல்லிருப்பார் என்பதை அண்ணாவும் புரிந்துக்கொண்டார். .
புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் என்னிடம் தேர்தல் நிதிக்காக கணிசமான தொகை தருவதாக கூறினார். .ஆனால் நான் எம்ஜிஆரிடம் கூறினேன். நீங்கள் தரும் கணிசமான தொகையை விட உங்கள் முகத்தை மக்கள் பார்த்தால் 30 ஆயிரம் ஒட்டுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் எனக்கு கிடைக்கும். . உங்கள் பேச்சைக் மக்கள் கேட்டால் பத்து லட்சம் பேர் மனம் திரும்புவார்கள். ஆகையால் நீங்கள் ஜனவரியில் இருந்து பிப்ரவரி வரை எத்தனை நாட்கள் ஒதுக்க முடியும் என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர் கூறினார். ஜனவரி 20. முதல் பிப்ரவரி 13. வரை முழுக்க முழுக்க இந்த தேர்தல் பிரச்சாரம் பணியில் ஈடுப்படுகிறேன் என்றார். பல்லாவரம் தொகுதிக்கு மட்டும் அல்லாமல் மற்ற தொகுதிக்களுக்கும் வரவேண்டும் என்றேன். சரி என்று கூறி விட்டார். இப்போது நான் சொல்லவேண்டியவர்களிடம் கூறிவிட்டேன். அவரை பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியுள்ளார். (. 1967 ம் ஆண்டு விருகம்பாக்கம் தேர்தல் கூட்டத்தில் ஆற்றிய உரை ).
திரையுலகில் பலரையும் நான் அறிவேன் அந்த உலகத்தில் செல்லும் யாருக்குமே ஒரு கணம் தலையைசுற்றும் அப்படிப்பட்ட அந்த உலகத்தில் அப்பமுக்கற்றவராக இருப்பவர் எம்ஜிஆர். தாய்மார்கள் சொல்வார்கள் நம்ப எம்ஜிஆர் நம்ப எம்ஜிஆர் என்றும் புரட்சிநடிகர் அவர்களை உங்கள் வீட்டில் உள்ள ஒருவரைப் போல் சொந்தத்துடன் பந்தத்துடன் பேசிகீறிர்கள். அப்படிப்பட்ட நல்லவர் நீங்கள் பெரியவராக இருந்தால் அவர் உங்கள் பிள்ளை சற்று வயதானவராக இருந்தால் அவர் உங்கள் தம்பி இளையவராக இருந்தால் அவர் உங்கள் அண்ணன் எம்ஜிஆர் அவர்களை விடவா நல்ல பிள்ளை நல்ல குணம் படைத்தவர் உங்களுக்கு கிடைக்க போகீறார்களா? ? . (10- 02 -1967
பல்லாவரம் நகரில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து ) )....... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 76. பேரரறிஞர் அண்ணா
சென்னை காசினோ தியேட்டரில் எங்க வீட்டு பிள்ளை படத்தின் 175 வது நாள் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி. .தமிழ் திரைப்படவுலகில் முதல் முதலாக அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம் மதுரை வீரன் என்றார்கள். மதுரை வீரன் வசூலை நாடோடிமன்னன் வீராங்கன் மார்த்தாண்டன் முறியடித்தார்கள். நாடோடிமன்னன் படத்தின் வசூலை எங்கவீட்டுபிள்ளை படம் முறியடித்தது. என்றார்கள். . எம்ஜிஆர் திரைப்படத்தின் வசூலை யாராலும் முறியடிக்க முடியாது. அது ஒருவரால் தான் முடியும். அவர்தான் எம்ஜிஆர். .. எம்ஜிஆர் படத்தின் வசூலை முறியடிக்க எம்ஜிஆரால் மட்டுமே முடியும். எம்ஜிஆரை வெல்ல யாரால் முடியும் எம்ஜிஆரால் தான் முடியும். .?.
இன்று மிகப்பெரிய ஜான்பாவான்கள் எல்லாம் எம்ஜிஆரை நாடி வந்துக்கொண்டியிருக்கிறார்கள். இது கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமைப்படவிஷயம். எம்ஜிஆர் கட்சிக்கு மட்டும் பெருமை சேர்க்க வில்லை. தமிழுக்கும். தமிழக மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் திரைப்படவுலகிற்கும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் தமிழ் இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கும் பெருமை மிக்க பெருமை சேர்த்து உள்ளார். இதை நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. அகில இந்தியாவிலே மிகப்பெரிய மதிக்கத்தக்க நடிகராக விளங்கும் எம்ஜிஆருக்கு எங்கவீட்டுபிள்ளை அவரது நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். .நான்கேள்விப்பட்டேன். எங்கவீட்டுபிள்ளை படத்தை பார்த்து விட்டு வட இந்தியா
தென்னிந்தியா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆங்கில பட இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் , அத்தனை பேர்களும் எம்ஜிஆர் வீட்டை படையெடுத்து. அவரவர் தகுதிக்கேற்ப கதை கூறி நடிக்க அழைத்தனர். .ஆனால் எம்ஜிஆர் யாருடைய மொழியிலும் நடிக்க விரும்பவில்லை. என்று கூறியுள்ளார். நான் தமிழ் மொழியில்தான் அறிமுகம் ஆனேன். தமிழில் நடித்துத்தான் பிரபலம் ஆனேன். .தமிழில் நடித்ததால் தான் என்னை உலகம் அறிந்தது. தமிழ் தான் எனக்கு பேரும் புகழும் தந்தது. அதனால் எனக்கு பேரும் புகழும் தமிழில் இருந்து கிடைக்கிறது என்றால் அது தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். மாற்று மொழியில் நடித்துத்தான் எனக்கு எந்த வித பேரும் புகழும் பணமும் வேண்டாம். இந்த உலகம் என்னை தமிழ் நடிகராக த்தான் பார்க்க வேண்டும் தவிர அகில உலக நடிகராக பார்க்க எனக்கு விருப்பமில்லை. .என்று கூறி அனுப்பி விட்டார். இப்படி எத்தனை நடிகர்கள் கூறுவார்கள் இது போன்ற கொள்கையும். புரட்சியும் எந்த நடிகர்களுக்கு உண்டு. அதனால் தான் அவரை புரட்சிநடிகர் என்று கூறுகிறோம். .ஒருவகையில் பார்த்தால் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எம்ஜிஆர் ஒரு பொக்கிஷமாகும்.
இன்று உலகளவில் எம்ஜிஆருக்கு மட்டுமே அதிக அளவில் ரசிகர் மன்றம் உள்ளது. .தமிழில் மட்டும் நடித்து ஒரு தமிழ் நடிகர்க்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டும் தான். இதைவிட நம் தமிழுக்கு என்ன பெருமை வேண்டும்? ?இன்று எங்கவீட்டுபிள்ளை படத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்து முஸ்லிம் கிருஸ்துவ மதம் ஜாதி எந்த வித வேறுபாடின்றி மக்கள் எம்ஜிஆர் என்ற ஒரு மனிதரை நேசித்து எங்கவீட்டுபிள்ளை படத்தை காண வருகின்றனர். இதை விட ஒரு நடிகருக்கு என்ன பெருமை வேண்டும். அது எம்ஜிஆர் ஒருவரால் தான் தர முடியும் என்பதற்கு எங்கவீட்டுபிள்ளை ஒரு சான்றாகும். எம்ஜிஆரை வாத்தியார் என்று கூறுகிறார்கள். ஆம் அதன் பொருள் இப்போது தான் புரிந்தது. எவன் ஒருவன் மற்றவர்கள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்டியாக விளங்குகிறாரோ அவர் தான் வாத்தியார். எங்கவீட்டுபிள்ளை எத்தனையோ பேர்களுக்கு. வழிக்காட்டியாகவும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அதனால் அவரை வாத்தியார் என்று கூறுவது எந்தளவுக்கு பொருந்தும் என்பதை உணர்ந்தேன். மகிழ்ந்தேன். ஆம் இனி எம்ஜிஆர் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் அவங்க வீட்டு பிள்ளை தான்........ Thanks.........
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 77. பேரரறிஞர் அண்ணா
பொன்மனச்செம்மல் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நேரத்தில். அமைச்சரவை அமைத்துக்கொண்டிருந்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். ஒரு நாள் நாவலர் நெடுஞ்செழியன் தம்பி இளவல் திரு இரா செழியன் அவர்கள் அமைச்சரவை பட்டியலுடன் பொன்மனச்செம்மலை . காண சென்றார். பொன்மனச்செம்மல் உடல் நலம் விசாரித்து விட்டு அமைச்சர் பட்டியலை எம்ஜிஆரிடம் காட்டினார். .இந்த குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு தரப்படும் இலாகாக்கள் பெயர்களும் இருக்கின்றன. என்றார் இர செழியன் அவர்கள். .இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள் என்று கேட்டார் எம்ஜிஆர், .அண்ணா அவர்கள் இதை உங்களிடம் காண்பிக்க சொன்னார் என்றார். அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில்? ?
நான் யார்? அண்ணா அவர்கள் யார்? கழகத்துக்கு நேரடியாக நான் செய்த தியாகம் என்ன? ? அண்ணா அவர்கள் செய்த தியாகம் என்ன. ? என்னுடைய அறிவு
ஆற்றல் செல்வாக்கு இவை எந்த அளவுடையவை. ? அண்ணா அவர்களின் ஆற்றல் அறிவு செல்வாக்கு இவை எந்த அளவுடையவை? ? அப்பப்பா மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா? ? சாதாரண தொண்டனிடம் அண்ணா காட்டும் மரியாதை எண்ணி பார்க்கும் போது பேரன்பு கொண்ட அவருடைய பெரிய மனதை உள்ளத்தை எப்படியாப்பட்ட வார்த்தைகளால் விளக்குவது. போற்றுவது என்று புரியவில்லை. .இப்படி கூறிவிட்டு அந்த பட்டியலில் உள்ள பெயர்களைப்பார்த்தார். .அதிலே ஒருவருடைய பெயர் அமைச்சர் பட்டியலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து இரா. செழியனிடம் கூறினார். சமீப காலமாக திமுக கழகத்துக்கும். பேரரறிஞர் அண்ணா அவர்களுக்கும் எதிராககருத்துக்களை பரப்பி கொண்டியிருந்தவருக்கு அமைச்சர் பதவியா. ? இத்தனை நாட்களாக கழகத்துக்காக உழைத்த எத்தனையோ பேர் அனுபவம் கல்வி அறிவு பெற்றவர்கள் இருக்க. கழக தொண்டர்களின் உள்ளத்தில் பெரும் எதிர்பை சம்பாதித்துக்கொண்டியிருப்பவர்க்கு அமைச்சர் பதவியா? ? இது என்ன நியாயம் என்று பதறினார். .லஞ்சம் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ள இலாகா. என்று கேள்விப்பட்டு உள்ளேன். எனவே இதை வேறு யாரிடமும் கொடுக்காமல் நாவலர் நெடுஞ்செழியனுக்கு இந்த இலாகாவை சேர்த்து கொடுக்கலாம். என்று கூறினார்? ?
அதற்கு இரா செழியன் அவர்கள் சொன்னார். எனது தமையனுக்கு இந்த இலாகாவை கொடுக்க சொல்கிறீர்கள். இதை நானே போய் அண்ணாவிடம் எப்படி கூறுவேன். நான் உங்கள் வாயிலாக இந்த கருத்தை சொல்ல வைத்து விட்டேன் என்று எண்ணினால்?இப்படிப்பட்ட சந்தேகம் என் மீது ஏற்பட்டு விட்டால்? ? இத்தனை நாட்களாக நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உருவாக்கிய. நல்லெண்ணத்தை நானே அண்ணாவிடம் இழந்து விடுவேனோ? ? . இந்த பட்டியலை குறிப்பிட்டு வேறுயாருக்காவது சொல்லுங்கள். என்றார். . அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில். ?
நீங்கள் அண்ணாவுடைய நிழலாக இருப்பவர். அண்ணா ஒரு போதும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்.நம்மையெல்லாம் சரியாக எடைப்போட்டுவைத்திருப்பார் தைரியமாக செல்லுங்கள் என்றார். ஓரிரு நாட்களில் இரா செழியன் புதிய பட்டியலுடன் பொன்மனச்செம்மலை காண வந்தார் புரட்சித்தலைவரிடம் காண்பித்தார். நாவலர் நெடுஞ்செழியனுக்கு தொழில் இலாகா தரப்பட்டிருந்தது. அந்த நண்பர்க்கு அமைச்சர் பதவி இல்லை வேறு ஒரு பதவி குறிப்பிட்டு இருந்தது. அதற்கான காரணங்கள் அண்ணா குறிப்பிட்டு இருந்தார். அண்ணாவுக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதை அவர் செய்யலாம். நானும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். என்றார் புரட்சித்தலைவர்.
மாபெரும் தலைவரும் மேதையுமான அண்ணா அவர்கள் கருத்துக்கு மாறுப்பட்ட கருத்து எம்ஜிஆர் சொன்னாலும். அவர் மீது வெறுப்போ பழிவாங்குவதோ அலட்சியப்படுத்துவதோ இல்லாமல். சாமானிய தோழனின் கருத்துக்கு மரியாதை அளித்த விந்தையை என்ன என்று சொல்வது. அண்ணாவின் பேச்சுக்கு எம்ஜிஆரும் எம்ஜிஆரின் பேச்சுக்கு அண்ணாவும். ஒரு போதும் எதிர்மறையான கருத்துக்கள் கூறியது இல்லை. என்பதற்கு இது ஒரு சான்றாகும். ....... Thanks...
-
#நண்பர்கள்_அனைவருக்கும்
#பார்_போற்றும்_பாரத_ரத்னா எம்ஜிஆர் #ஆசியோடு_இனிய_காலை_வணக்கம்
#புரட்சிதலைவரும்_பொம்மை_ரவீந்தரும்
#ரவீந்தரும்_சத்யராஜும்
ஆரம்பகாலம் முதற்கொண்டு மக்கள் திலகம் அவர்களுடைய அதிதீவிர ரசிகராக நடிகர் சத்யராஜ் இருந்தார் என்பது பலரும் அறிந்த ஒன்று.
எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய தங்கையின் திருமணத்திற்கு நேரில் சென்று அழைத்தபோது, அவர் சற்றும் எதிர்பாக்காதவண்ணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி கோயமுத்தூரில் நடந்த திருமணத்திற்கு ஆஜாராகி அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து அன்பினால் அவரை திக்குமுக்காடச் செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அதன் பிறகு, தன் தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியதற்கு நன்றி கூற தன் மனைவியுடன் அவரது வீட்டுக்குச் சென்றபோது, “உங்கள் ஞாபகமாக ஏதாவதொரு நினைவுப் பொருளைத் தாருங்கள்” என்று சத்யராஜ் வேண்டுகோள் விடுக்க, எம்.ஜி.ஆர். தினமும் தான் உடற்பயிற்சி செய்துவந்த கர்லா கட்டையை தன் உதவியாளர் மாணிக்கத்தை அனுப்பி மேல்மாடியிலிருந்த அந்த சாதனத்தை வரவழைத்து அவருக்கு பரிசாக அளித்தார். அத்துடன் “தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம்” என்று அறிவுரையும் கூறி வாழ்த்தி அனுப்பினார் அந்த பண்பாளர்.
சத்யராஜ் தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து தினமும் வணங்கி வருகிறார். அந்த அளவுக்கு அவர் எம்.ஜி,ஆரின் முரட்டு பக்தர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சத்யராஜ் பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே “பொம்மை” பத்திரிக்கையை தவறாமல் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு ஐந்து தங்கைகள். மாதந்தோறும் 1-ஆம் தேதி வீட்டுக்கு வரும் “பொம்மை” இதழை யார் முதலில் படிப்பது என்பதில் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். காரணம் அதில் தொடர் கட்டுரையாக வெளிவந்த ரவீந்தர் அவர்களின் கட்டுரையைப் படிக்கத்தான் இத்தனை போட்டா போட்டிகள்.
“போன மாசத்து ‘பொம்மை’யை நீ படிச்சே இல்லையா? இந்த மாசத்து பொம்மையை இவங்க முதலில் படிக்கட்டும்” என்று சத்யராஜின் தாயார் இவர்களுடைய சண்டையை மத்திசம் செய்து வைப்பார்.
“சாண்டில்யன் அவர்கள் ‘கடல் புறா’ என்ற நாவலை எழுதினார். அதை படிக்கும்போது அந்தக் கப்பலில் நாம் பயணிப்பதைப் போன்ற உணர்வு இருக்கும். ‘யவனராணி’ என்னும் நாவலில் யவனராணி உடைந்த கப்பல் கரை ஒதுங்கும்போது நாமும் அங்கே கரை ஒதுங்குவதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அதாவது அந்த காலகட்டத்திற்கே அழைத்துப் போய் நிறுத்தும் எழுத்து. – அதுவே அந்த எழுத்தாளரின் சிறப்பு. ரவீந்தர் அவர்களின் “பொன்மனச்செம்மல்” தொடரை படிக்கும்போது எம்.ஜி,ஆர் அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே ஓர் உணர்வு எனக்குள் ஏற்பட்டது.” என்று ரவீந்தரின் எழுத்தாற்றலுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் சத்யராஜ்.
இன்னும் ஒருபடி மேலே சென்று “சினிமாவில் கதாபாத்திரங்களை காட்சியமைப்பு மூலமாக சுலபத்தில் காட்டிட முடியும். ஆனால் எழுத்து மூலமாக கதாபாத்திரங்களை, அவற்றின் சிறப்புகளை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. ‘பொன்மனச்செம்மல்’ தொடரைப் படிக்கும்போது அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என்று அவருடைய எழுத்துத்திறமைக்கு மகுடம் சூட்டுகிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எத்தனையோ பேர்கள் எழுதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தரின் எழுத்துக்களில் மட்டும் அப்படியென்ன ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா…?
ஆம். வேரு யாருடைய எழுத்துக்களுக்கும் இல்லாத நம்பகத்தன்மை, துல்லியம், சுவையான அனுபவங்கள் ரவீந்தரின் கைவண்ணத்தில் காணப்படுவது தனிச்சிறப்பு . அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல இந்த ஒரு சம்பவமே போதுமானது.
1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இயற்கை எய்திய பின்னர் ‘பொம்மை’ இதழை நடத்திவந்த நாகிரெட்டியாருக்கு தனது பத்திரிக்கையில் அவரைப்பற்றிய தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.
ஜானகியம்மாள் சொன்ன ஒரே ஒரு பதில் எம்.ஜி.ஆருக்கும் வசனகர்த்தா ரவீந்தர் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பின் இறுக்கத்தை எடுத்துக்காட்ட போதுமானது.
“மக்கள் திலகம் என்னும் மாமனிதருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் திரு கே.ரவீந்தர் அவர்களிடம் தமக்கேற்பட்ட அனுபவங்களை ‘பொம்மை’யில் எழுதச் சொல்லுங்கள். சுவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். என் கணவரைப் பற்றி எழுத அவரைவிட தகுதியான நபர் வேறு யாரும் கிடையாது”
மக்கள் திலகம் மறைந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தேறியது. நாகிரெட்டியாரின் விருப்பத்திற்கு ரவீந்தர் அவர்கள் இசைந்து “நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தலைப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்து 30 இதழ்களில் தொடராக எழுதியபோது அது வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. ‘பொம்மை’ இதழின் வருமானமும் எகிறியது.
“எம்.ஜி.ஆர் என்னும் அந்த மாமனிதரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டதையும், படித்ததையும் கொண்டு பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்தபோதிலும் எம்.ஜி.ஆருடன் பல்லாண்டுகள் உடனிருந்து பழகிய ஒருவர் எழுதுகிறார் என்றால் அதற்குள்ள சிறப்பே தனித்துவமானது. அந்த எழுத்து திரு ரவீந்தருடையது” என்று புகழாரம் சூட்டுகிறார் ‘பொம்மை’ பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர்.
இந்த தொடர் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷமாகவும், பெருத்த கொண்டாட்டமாகவும் இருந்தது. யாரும் அறிந்திராத அத்தனை சுவையான நிகழ்வுகள். இந்த தொடரைப் படித்த பிறகு இன்னமும் கூடுதலாக எம்.ஜி.ஆரின் பித்தனாகிப் போனவர் நடிகர் சத்யராஜ்.
ஒருநாள் பொம்மை பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பொறுப்பாசிரியர் வீரபத்திரன் என்பவரிடம் பேசுகிறார்.
“நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தொடரை எழுதும் திரு.ரவீந்தர் அவர்களை நான் எப்படியாவது சந்திக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். சத்யராஜின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வீரபத்திரன் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறார்.
சென்னையிலுள்ள ரவீந்தரின் இல்லம் சென்று சத்யராஜ் முதன் முதலாக அவரை சந்தித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தான் வணங்கும் தலைவனின் அன்புக்கு பாத்திரமானவரை கண்டபோது மக்கள் திலகத்தையே நேரில் பார்த்ததுபோன்று பரவசமடைகிறார். பொன்மனச் செம்மலுடன் ரவீந்தர் பழகுகையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும், அந்த தொடர் கட்டுரைகளில் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவங்களும் சத்யராஜ் அவர்களின் மனக்கண்ணில் வந்து நிழலாடுகிறது.
முகமன் கூறி வரவேற்று உபசரித்த ரவீந்தர் அவர்கள் ஒரு இனிப்பு பொட்டலத்தை சத்யராஜிடம் பரிவுடன் தந்து “புரட்சித் தலைவர் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு இது. இதை திருவல்லிக்கேணியில் உள்ள இனிப்பகத்திலிருந்து வாங்கி வந்தேன்” என்று சொல்ல சத்யராஜ் அப்படியே எம்.ஜி.ஆரின் நினைவில் மூழ்கிப் போகிறார்.
ரவீந்தர் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பைக் குறித்து பேசும்போது “புரட்சித்தலைவர் அவர்களை பார்க்கும்போது முதலில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார். தலைவரைப் போலவே அவரிடம் பணியாற்றியவர்களும் அந்த பண்பை தொடர்ந்தது… எனக்கு ஒரு ஸ்வீட் பாக்கெட் தந்தபோது எனக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் சத்யராஜ்.
ரவீந்தரிடம் விடைபெற்று சென்ற சத்யராஜுக்கு சினிமா உலகத்தில் இத்தனை காலங்கள் ரவீந்தர் சத்தமின்றி சாதனைகள் புரிந்தும் அது வெளியுலகிற்கு தெரியாமலே போய்விட்டதே என்ற ஆதங்கம் மனதுக்குள் தேங்கி இருந்தது. ரவீந்தரை எப்படியாவது ஒரு பொதுநிகழ்ச்சியில் கெளரவிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்
சத்யராஜ் கொண்டிருந்த நாட்டத்திற்கேற்ப அதற்கான ஒரு நல்ல வாய்ப்பும் அமைந்தது. 1993-ஆம் ஆண்டு பி.வாசுவின் இயக்கத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “வால்டர் வெற்றிவேல்” என்ற திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடி 200-வது நாள் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.
தொண்ணூறுகளில் வெளியான சத்யராஜ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் “எஸ்.பி. பரசுராம்” என தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் “குத்தார்” என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
வால்டர் வெற்றிவேல் 200-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு ரவீந்தர் அவர்களுக்கு சத்யராஜ் பிரத்யேக அழைப்பு விடுத்திருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த மேடையிலேயே ரவீந்தர் அவர்களுக்கு புரட்சித்தலைவரின் உருவப்படம் பதித்த மோதிரத்தை வழங்கி கெளரவித்தபோது ரவீந்தர் நெகிழ்ந்துப் போனார்.
தன்னை கண்ணியப்படுத்திய சத்யராஜ் அவர்களின் சிறந்த பண்பை பாராட்டி அதே ‘பொம்மை’ பத்திரிக்கையில் கட்டுரையாக வரைந்தார்.
“எம்.ஜி,ஆர். அவர்கள் என் வாழ்க்கையில் எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால் மோதிரம் மட்டும் எனக்கு அணிவிக்கவில்லை. அதை சத்யராஜ் நிறைவேற்றிவிட்டார். அதன் மூலமாக எம்.ஜி.ஆர் தமது படத்தில் பாடிய எல்லா பாடல்களையும் ஜெயித்து விட்டார். “நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்” உட்பட. ஆனால் ஒரேயொரு பாடல் மட்டும் அவரது வாழ்க்கையில் நிறைவேறாமல் இருந்தது. அது “எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப்போலவே இருப்பான்” என்பது. அவரது நிஜவாழ்க்கையில் மகன் இல்லை. ஆனால் இந்த மோதிரத்தை அணிவித்ததன் மூலமாக சத்யராஜ் அவருக்கு மகன் மாதிரி. பெற்றால்தான் பிள்ளையா?” என்று அந்த கட்டுரையை ரவீந்தர் முடித்திருந்தார். சத்யராஜ் இந்த நிகழ்வினை நினைத்துக் கூறும்போது “இதைப்படித்து என் கண்கள் குளமாகின” என்று மனம் நெகிழ்கிறார்.
முத்தாய்ப்பாக இதோ சத்யராஜ் கூறும் விஷயங்கள் நம் மனதில் ரவீந்தர் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையும் மேலும் அதிகப்படுத்துகின்றன.
“ரவீந்தர் அவர்கள் பொன்மனச்செம்மலைப் பற்றி நிறைய விஷயங்கள் சுவைபடச் சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கும்போது நான் ரசிகனாக.. தூரத்தில் இருந்து புரட்சித் தலைவரைப் பார்த்தபோது அவரை நடிகராக, அரசியல் கட்சித் தலைவராக, ஏழைகளின் பசியைத் தீர்த்தவராக, சத்துணவு திட்டம் கொண்டு வந்தவராக… இப்படி பெரிய பெரிய விஷயங்கள்தாம் வெளியே தெரியுமே தவிர, நெருக்கமாக நட்பு முறையில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வாய்ப்பில்லை. அவற்றை கூடவே இருந்து தன்னலம் கருதாமல் புரட்சித் தலைவரை நேசித்து பழகியவர்களால் மட்டுமே எழுத முடியும்” என்று புகழாரம் சூட்டுகிறார்...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks...
-
#நண்பர்களுக்கு_இனிய_மாலை
#வணக்கம்
#செம்மளுக்கு_வந்த_கடிதமும்
#செம்மலின்_கொடைகுணமும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரபரப்பான காலை நேரம்
முதல்வர் கோட்டைக்கு கிளம்ப
தயார் ஆகிறார்
தலைவருக்கு வந்து இருந்த கடிதங்களில்
ஒன்றை தலைவரின் உதவியாளர் தலைவரிடம் கொடுக்கின்றார்.
அந்த கடிதத்தின் முகவரியில்
எம்ஜிஆர்
சென்னை
என்று மட்டும் இருந்தது,எழுதியவர் விலாசம் இல்லை.
கடிதத்தின் உள்ளே:-
வணக்கம் என் பெயர் கவிதா நான் நான்காம் வகுப்பு படிக்கின்றேன் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உள்ளேன் எனக்கு வீணை வாசிப்பதில் மிகவும் இஷ்டம் அழகாக வாசிப்பேன்.. குடும்ப சூழ்நிலை காரணமாக என்னிடம் சொந்தமாக வீணை வாங்க முடியவில்லை ஆதலால் எனக்கு ஒரு வீணை வாங்கி கொடுத்து உதவ வேண்டும்.
இப்படிக்கு
கவிதா
என்று எழுதி இருந்தது பொன்மனமும்
கடிதத்தை படித்து விட்டு உதவியாளரிடம்
அந்த சிறுமி யார் என்று விசாரித்து வீணையை வாங்கி கொடுங்கள் என்று சொல்லி விட்டார்
மாதங்கள் உருண்டோடின
மாநில அளவில் பள்ளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசு வழங்க முதல்வர் தலைமையில் விழா நடக்க ஏற்பாடு நடக்கின்றது..
நாளை விழா பற்றிய நிகழ்வுகள் முதல்வரின் பார்வைக்கு வருகின்றது அப்போது மன்னவன் பார்வைக்கு வீணை வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெயரை பார்க்கின்றார் உடனே உதவியாளரிடம் நாம் வீணை வாங்கி கொடுத்த அந்த பெண்தான் முதல் பரிசு பெற்ற விவரத்தை தெரிவித்து ஆனந்த பாடுகின்றார்
உடனே உதவியாளர் "அண்ணே நாம் அந்த பெண்ணுக்கு வீணை வாங்கி தரவில்லை என்றும் சரியான விலாசம் கிடைக்கவில்லை என்றும் நம் மன்னனிடம் தெரிவிக்கின்றனர்..
மறுநாள் விழா மேடையில் அனைவருக்கும் மன்னன் தன் கொடுத்து சிவந்த கரங்களால் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்குகிறார்
அப்போது வீணை வாசிப்பு போட்டியில் கலந்து வெற்றி பெற்ற அந்த பெண்ணும் மன்னவன் கையினால் பரிசு பெற வருகின்றாள்.. பரிசை வாங்கும் போது மன்னவன் கையில் ஒரு துண்டு சீட்டை தருகிறாள்..
அதில்:-
வணக்கம் உங்களிடம் உதவி என்று கேட்டால் உடனே கிடைக்கும் என்று கேள்விபட்டேன்,ஆனால் நான் எழுதிய கடிதம் ஒருவேளை உங்கள் கையில் கிடைக்கவில்லை போலும், இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற கூட நான் வீணையை இரவல் வாங்கி கொண்டு தான் வந்து கலந்து கொண்டேன்
என்று எழுதி இருந்தது...
தலைவரிடம் பரிசை பெற்று கொண்டு அந்த சிறுமி திரும்பும்போது அவள் தோள்களை கொடுத்து சிவந்த கரங்கள் பற்றியது,சிறுமி திரும்பி பார்க்கும் போது அவளின் தோள்களை மன்னவன் பற்றி கொண்டு உதவியாளரை மன்னவன் பார்க்க தலைவரின் மகிழுந்தில் இருந்து புது வீணையை கொண்டு வந்து சிறுமியின் கரங்களில் கொடுத்து வாழ்த்தினார்
பொன்மனச்செம்மல்...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...... Thanks...
-
#புரட்சிதலைவர்_ஆசியுடன்
#நண்பர்கள்_அனைவருக்கும்
#இனிய_காலை_வணக்கம்....
#எம்ஜிஆரின்_பிம்பமும்_ரசிகர்
#மன்றங்களும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என் போன்ற இளம்வயதினர்
தலைவரை பற்றி அறிந்துகொள்ள அவர் புகழை போற்றிட ஊக்கம் அளித்துவரும்
#குருநாதர்_வெங்கட்ராமன்_தியாகு,
#அய்யா_சரவணன்_ராஜகோபால்,
#அண்ணன்_நெல்லைமணி,
#அன்பின்_இலக்கணம்_அம்மா
#புண்ணியக்குமாரி, அவர்களுக்கும்
மற்றும்
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்
தலைவரை பற்றிய இந்த சிறு
கட்டுரை சமர்ப்பணம்...
எம்ஜிஆர் மறைந்து முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம்ஜிஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம்ஜிஆர் இன்றும் வாழ்கிறார்.
இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது.
கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின் போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் வேறு எவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.
#ஒருநடிகராகவோ #அரசியல்வாதியாகவோஅல்ல; #கிட்டத்தட்ட_நாட்டுப்புற_தெய்வமாகவே #தலைவர்_இங்கு_திகழ்கிறார்
அவருக்காகப் பலர்
அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்;
அவருடைய 'கட் அவுட்' தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகுச் சதையில் பிணைத்துக்கொண்டு 9 கி.மீ., இழுத்துச் சென்றார்.
சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.
'தன் காதலியின் அருகில் இருக்கும் போது கூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா' என்கிறார் ஒரு ரசிகர். 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்' என்று பதிலளித்திருக்கிறார்.
எது நிஜம்?, எது நிழல்? என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம் தமிழக மக்களின் மனதில் குறிப்பாக அவரது ரசிகர்களின் மனதில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது
எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை வலுவாக்குவதில் அவரது வில்லன்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
எடுத்துக்காட்டாக
#நம்பியாரின்_கதாபாத்திரத்தை மிக மோசமானதாக படைப்பதன் மூலம் தனது கதாபாத்திரம் மிக நல்லவனாக, மக்கள் மனதில் தங்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அதைச் செய்து வந்தார்.
அதேபோல், திரைத்துறையில் சக கலைஞர்கள் அவரை மரியாதையாக அழைக்கும் ‘வாத்தியார்’ போன்ற வார்த்தைகளை தேங்காய் சீனிவாசன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மூலம் திரைப்படத்திலும் பேசவைத்தார். இதன்மூலம் பொதுமக்களிடையே எம்ஜிஆர் என்ற பிம்பம் எந்த மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவர் தனக்குத்தானே வடிவமைத்தார்.
பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்ஜிஆரைச் சொல்லலாம்.
‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்ஜிஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம்.
ஏழைப்பங்காளன்,
வெல்ல முடியாதவன்,
தர்மத்தின் காவலன்,
பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல்,
அன்னையைப் போற்றும் உத்தமன்,
நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன்,
சமூகப் போராளி,
சீர்திருத்தவாதி,
நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன்,
பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!
இந்த பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன.
#என்னை_நம்பிக்_கெட்டவர்கள் #யாருமில்லை_நம்பாமல்_கெட்டவர்கள் #பலர்உண்டு”, “
#கரிகாலன்_குறிவைக்கமாட்டான், #வைத்தால்_தவற_மாட்டான்”
என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்ஜிஆரின் திரைப்படிமம் வெகு ஜனங்களின் மனவார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம்.
“அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு,
அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.
எதிரிகளைப் பந்தாடும் எம்ஜிஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார்.
சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார்.
அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்ஜிஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார்.
சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்ஜிஆர் நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.
“நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
தனது படங்களில் மது குடிக்காதவராக நடித்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரைப் போலவே இறுதிவரை தன் வாழ்வில் அதை கடைப்பிடித்தார். அது, பெண்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராக இருந்தபோது 1984ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்து திரையில் கதாநாயகனாகத் தோன்றிய தனது கதாபாத்திரங்களுக்கும் தமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபித்தார்.
சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த எம்ஜிஆர் இயல்பாகவே தாய்ப்பாசம் மிக்கவராக இருந்தார். தனது திரைப்படங்களிலும் தாய்ப்பாசம் மிக்கவராக தோன்றினார். அது, அவரை தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது .
எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக
#நாடோடி_மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும்
#எங்க_வீட்டுப்_பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம்.
இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.
‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார்.
#சிவாஜி, ஜெமினி, ssr,பாடல்களில்_நாம் #கண்ணதாசனையோ_வாலியையோ #உணர்வோம்.
#எம்ஜிஆரின்_பாடல்களில்_எல்லாமே
#தலைவர்_வார்த்தை_என்பதை_விட
#வாக்காகவே_மாறியிருக்கும். #குயில்கள்_பாடும்கலைக்கூடம், #கொண்டது_எனது_அரசாங்கம்”
என்பது கவிஞனின் கனவு.
அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.
தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர்.
அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர்.
#இன்றும்_எம்ஜிஆர்_பாணியை #பின்பற்றும்_ரஜினி_விஜய்_போன்ற ஆக் ஷன்
ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும்
#சிவாஜியின்_பாதையில்_செல்லும் #கமல்_போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்
முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன்,
அண்ணா நம்பி,
திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள்.
எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.
#இவன்
என்றும் தலைவரை
வணங்கும்
படப்பை
ஆர்.டி.பாபு........நன்றி...
-
நான்டவுசர்போட்டசிறுவயதில்இரட்டைமாட்டுவண்டியில்கோம் பைராஜ்கமால்தியோட்டரில்எம்ஜிஆர்படங்கள்திரையிடும்நாட ்களில்இருபுறமும்தட்டிகள்வைத்துஊர், ஊராகவிளம்பரம்செய்வார்கள், ஊர்துவக்கத்திலிருந்துஊர்எல்லைமுடிவுவரைபோஸ்டரில்உள் ளதலைவர்படத்தைபார்த்துக்கொண்டேதெருமுழுவதும்பின்தொடர ்ந்துஎம்ஜிஆரின்அழகுமுகத்தில்சொக்கியவன், அறுத்தேழில்எம்ஜிஆர்மன்றம்துவக்கிபணிசெய்தேன், எழுபத்திரண்டில்கிளைக்கழகத்தில்எம்ஜிஆருக்காககொடிஏற் றியவன், எண்பதில்தலைவர்இருக்கும்காலத்தில்போடிசட்டமன்றத்தில் போட்டியிடமனுசெய்தவன், பொன்னையன்தான்நேர்முகத்திற்குவந்தார், தலைவர்சொன்னவாக்காளர்பேரணிஉட்படஅனைத்திலும்பங்கேற்றவ ன், அன்றையபோடிஎம்எல்ஏவைஊருக்குள்நுழையக்கூடாதுஎன்றுமறிய ல்செய்தவன், போடிதொகுதியில்நின்றஅனைத்துவேட்பாளர்களுக்கும்அயராது பணிசெய்துவெற்றிக்குப்பாடுபட்டவன், அன்றிலிருந்துஇன்றுவரைகட்சியேபிரதானம்என்றுபணிசெய்து வருகிறேன், என்போன்றஅயராதுபாடுபட்டதொண்டர்களைகலக்காமல்காசுவாங்க ிக்கொண்டு, நகரச்செயலாளர், கூட்டுறவுதலைவர்பதவிகளைவிற்றுவிட்டார்கள், அவர்கள்திமுகாவில்இருக்கும்போதுஎன்னோடுமோதியவர் கள், இன்றுஅவர்கள்பதவியில், என்னைப்போன்றஅயராதுஉழைத்தவர்கள்சாதாரணகட்சிஉறுப்பினர ்கள், நான்கட்சிப்பணிமட்டும்செய்துவருகிறேன், இன்றுமேற்படிநபர்கள்கட்சிக்காரர்களைமதிப்பதில்ல ை, பணம்சுருட்டுவதிலேஅக்கறையோடுஇருக்கிறார்கள், இவர்களால்வாக்காளர்கள்மிகவும்விரக்தியில்உள்ளார ்கள், இன்றுபணஅரசியல், அன்றுஎன்சொந்தக்காசுசெலவுசெய்துகட்சிவளர்த்தவர்களையா ரும்கண்டுகொள்வதில்லை... Thanks...
-
வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤
திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇
➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?
நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்...
நான் ஒரு அரசியல்வாதி...❗
☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்...
❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗
என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்...
ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்...
ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு...
✨⭐ தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡...... Thanks...
-
#இதயதெய்வம்
#புரட்சிதலைவர்_பொற்பாதம்
#வணங்கி_இனிய_காலை_வணக்கம்
#விடுதலைப்_புலிகளை_வளர்த்த #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது.
எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன.
ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.
ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.
“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.
சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.
எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.
“இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.
“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.
“ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.
எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பாhத்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.
அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.
“அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.
இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். உங்களது தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வாயிலாக அதிகாரபூர்வமான வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.
இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.
அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.
ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.
“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.
“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.
“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.
- இவ்வாறு அன்டன் பாலசிங்கம் எழுதியுள்ளார்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks...
-
#MGR-ரின் வெற்றியும் 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தியும்....
" 'அன்புக்கு நானடிமை...' என்ற பாடல் இடம்பெற்ற "இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் இன்னொரு பாடலையும் எழுதினேன். அந்த பாடல்தான்....
"இது - நாட்டைக் காக்கும் கை
உன் - வீட்டைக் காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை"
"இது- எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை" என்றுதான் முதலின் எழுதினேன். பாரதத்தின் என்ற சொல்லை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.
"அன்புக்கை இது ஆக்கும் கை - இது
அழிக்கும் கையல்ல...
சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது
திருடும் கையல்ல....
நேர்மை காக்கும்கை - நல்ல
நெஞ்சை வாழ்த்தும்கை - இது
ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப்
பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும்.
நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.
இப்போது போல அப்போது சி.டி.யோ கேஸட்டோ இல்லாத காலம். எந்தப் பாடலாக இருந்தாலும் அதாவது சினிமாப் பாடலாக இருந்தாலும், கட்சிப் பாடலாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும் எல்லாம் கல்கத்தாவுக்கு அனுப்பி இசைத்தட்டாக வெளிவரச் செய்த பிறகுதான் பயன்படுத்துவார்கள். அதற்கான வசதி அப்போது சென்னையில் கிடையாது.
அதனால் கல்கத்தாவிலுள்ள HMV இசைத்தடு கம்பெனிக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.
வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார்.
படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.
ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே.
சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்?
சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு.
எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா? சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது.
சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம்.
'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி "நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.
அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும், பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.
எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!"
- கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகளிலிருந்து........... Thanks.........
-
"எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி.
தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்.
அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.
அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்பு முனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார்.
மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.
அந்தக் கட்டிடத்தின் பின் பகுதியில்தான் ஆரம் பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன.
அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.
ஒரு நாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். 'அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.
'தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்'
'ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
'இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்' என்றார்.
'சரி' என்றேன்..
சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி,
'என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்' என்றார்.
அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?
சரி என கூறிவிட்டு விடைபெற்றேன். அறை வாசல்வரை வந்தார்.
'சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்' என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.
கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை.
செயலாளர் பதவி கேட்கவில்லை.
கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்லவில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை.
ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம் பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.
அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாடலுக்கு நடுவே,
'பெரியவர் அழைத்தார்' என்றோம்.
'என்ன?'
'அவருக்கு ஒரு பெரிய ஆசை'
'என்ன?'
சற்றுத் தயங்கினேன். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு..
'அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்' என்றேன்.
அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.
'இல்லை. அதாவது… வந்து…' என்று இழுத்தேன். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.
'சும்மா இருக்கமாட்டீர்களா?' -கோபத்தோடு கேட்டார்.
நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.
எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை.
ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார்.
அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.
'துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' என்றார் எம்ஜிஆர்.
நான் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.
துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.
துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார்.
"தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்' என்றார்.
ஏறிட்டுப் பார்த்தோம்.
'இனிமேல் பெரியவரை யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று தலைவர் சொல்லச் சொன்னார்.
'இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார் துரை.
அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.
'சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?' என்றார்.
மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.
அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.
'அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு' என்று விளக்கம் தந்தார்.
அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.
அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!"
-எழுத்தாளர் சோலை......... Thanks.........
-
சேலம் மாவட்டத்துக்கு அப்போது சில அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
அதில் ஒன்று, சேலம் மாவட்ட பால் பண்ணையில் (பால்வளக் கூட்டுறவு ஒன்றியம்) நடந்த அரசு விழா.
அதன் தலைவரை ‘பெருந்தலைவர்’ என்று பொறித்து அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்த எம்.ஜி.ஆர். முகம் சுழித்தார். சற்று நேரத்துக்கு பின் ‘மைக்’ பிடித்தார்.
“பெருந்தலைவர் என்றால் அது-காமராஜர் மட்டுமே. பெருந்தலைவர் என்ற பெயர் காமராஜருக்கு மட்டுமே சொந்தம்.
இனிமேல் யாரும் தங்கள் பெயருக்கு முன்னால் பெருந்தலைவர் என்று போட்டுகொள்ளக்கூடாது.
ஒன்றிய பெருந்தலைவர்கள், பால் வள கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்கள் இனி தலைவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தபோது கர ஒலியால் சேலம் அதிர்ந்தது............. Thanks.........
-
கொடுத்துக் ,கொடுத்துச் சிவந்த கைக்கு...! அனைத்தையுமே கொடுத்து விட்டோம்...!! என்ற நிம்மதிப் பெருமூச்சில் சிரித்தமையால் புரட்சித் தலைவரின் முகமும் சிவந்து...!!!
இவ்வளவும் நடந்தும். அவரது வலது கை கொடுத்ததை அவரது இடது கைக்கு இதுவரை தெரியாது. இவ்வாறாக வாழ்ந்த தலைவர் அப்போதும், இப்போதும், எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்...
இது காலத்தின் கட்டாயம்.......... Thanks...
-
இனிய காலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பாரத்_விருது
ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.
1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:
‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.
மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’
ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.
#சிறு_குறிப்பு :எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்........ Thanks.........
-
வீரம் எங்கிருக்கிறதோ அதைப் பயன்படுத்தி கொள்வது தான் விவேகமான அரசியல் இது ஜெஜெ பேசும் வசனம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அது போல இதய தெய்வம் அவரின் பாடும் ஆற்றலை கண்டு நல்ல சமயம் பார்த்து காத்திருந்து பாடும் வாய்ப்பை வழங்கினார்.
ஒரு முறை ஷூட்டிங் இடைவேளையின் போது ஜெஜெ தனியாக அமர்ந்து கொண்டு ஹம் செய்வதை இதய தெய்வம் அவரை கடந்து செல்லும் போது கேட்டு விட்டார். அதன் பிறகு தான் இந்த நிகழ்ச்சி. அருமை சகோ. வாழ்த்துக்கள்......... Thanks...
-
#உயிர் #காத்த #தெய்வம்
புரட்சித்தலைவரின் கடைசிப்படமான `#மதுரையை #மீட்ட #சுந்தரபாண்டியன்'
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் புரட்சித்தலைவரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.
திடீரென "லதா! உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது.
புரட்சித்தலைவர் மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கதை முடிந்திருக்கும்.''
----#எம்ஜிஆர் #லதாம்மா----............ Thanks BSM
-
தெய்வபக்தி பற்றி தத்துவ மேதை! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., விளக்கம்...
எங்கள் தெய்வத்தின் விளக்கம்...
தெய்வபக்தியில் நான் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.
!ஆம்!
தெய்வபக்தி என்றால் எந்த மதத்திற்க்கும் சாராத ஆனால் எல்லோருக்கும் பொதுவான உருவமில்லாத சக்திக்கு நான் தலைவணங்குகிறேன்..
முன்பு கடவுளை தங்கள் உள்ளத்தில் வைத்திருந்தார்கள்.
இபபோது கோயிலில் தான் இருப்பதாக நினைக்கிறார்கள்.
.இதனால் தான் பிரச்சனைகள் வந்தன..எண்ணற்ற கோயில்களை வைத்துகொண்டு வளக்க முடியாத பக்தியை திரைபடங்களா வளர்த்து விட போகிறது..ஒரு படத்தின் மூலமாக உயர்ந்த கருத்துக்களை புகட்டி மக்கள் மனங்களில் எல்லா சமயத்திலும் ஒழுங்கு முறையை வளர்த்தால் அதுவே ஒருபக்தி படம்தான்
தாயிடத்தில் அன்பு,,தந்தையிடத்தில் மரியாதை,
ஆசானிடத்தில் பயபக்தி,
நண்பனிடத்தில் பாசம்,
ஏழைகளிடத்தில் இரக்கம்,என்ற பண்புகள் தான் தெய்வபக்தி.மனதில் தூய்மை ஏற்பட்டால் அது தான் பக்தி.
அந்த தூய்மையை ஏற்படுத்துவதற்க்கு நான் கடவுள் வேடம் போட்டுத்தான் நடிக்க வேண்டுமா என்ன?
எந்த கதாபாத்திரத்தின் வாயிலாகவும் நல்ல கருத்துக்களை சொல்லாமே,
ஆகவே நான் நடிக்கும் படங்கள் எல்லாம் பக்தி படங்கள் தான்
[ஆனந்த விகடன் பேட்டியில் 17.08.1969]..... Thanks...
-
அமெரிக்காவிலும்
வள்ளலாக
எங்கள் தெய்வம்....
அமெரிக்காவில் நான் படித்து கொண்டிருந்த சமயம்.
தலைவர் அங்கு வந்த போது எங்கள் கல்லூரியில் வரவேற்ப்பு தரபட்டது.
தமிழ் தெரிந்தவன் நான் மட்டுமே.
நான் அவரிடம் சென்றபோது -!தம்பி,அமெரிக்காவில் இப்படி குளிருதே..நீ சாதாரண சட்டை தானே போட்டிருக்கே.
ஸ்வெட்டர் ஏன் போடவில்லை?
என்றவர் சட்டென்று தனது பாக்கெட்டுக்குள் கையை விட்டு
ஸ்வெட்டர் கம்பளி வாங்கிக்கோ!
என்றார் .திறந்து பார்த்தால் 157 டாலர் இருந்தது.
என்னை அவருக்க தெரியாது.
இருந்தாலும் பணம் கொடுத்தார் என்றால் அவரது வள்ளல் குணத்தை என்னவென்று
சொல்வது.?
அவர் தந்ததில் 100 டாலர் நோட்டு
இன்னமும் இருக்கிறது...
நடிகர்,தயாரிப்பாளர்,
குரோதம்,-பிரேம்...
1998ல் தினத்தந்தியில் அளித்த பேட்டியிலிருந்து............ Thanks.........
-
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த Science fiction Film கலையரசி 19-04-1963 வெளியானது !
Kalai Arasi was released on 19 April 1963. The film was distributed by Emgeeyar Pictures in Madras.[7] The Indian Express said, "[T]he film has all the ingredients that make a successful box office production. The film is exceptionally good in outdoor and trick photography, for which credit goes to the cinematographer J. G. Vijayam......... Thanks...
-
தமிழ் சினிமாவை பொறுத்தவரை Commercial என்கின்ற ஒரு தலைப்பை தாண்டி, வெகுசில படங்கள் மட்டுமே தனித்துவமான தன்மையை கொண்டுள்ளது. 1963ம் ஆண்டு MGR நடிப்பில் வெளியான ‘கலையரசி’ என்கின்ற படமே தமிழில் வெளியான முதல் space movie. வேற்று கிரகத்திலிருந்து வந்து மக்களை கடத்திக்கொண்டு போகும் வேற்றுகிரக வாசியாக நம்பியார் அவர்கள் நடித்திருப்பார்....... Thanks...
-
கலையரசியில் தலைவர் பாடும்,அதிசயம் பார்த்தேன் மண்ணிலே என்ற பாடல் தென்னகத்தின் சிறப்பை அற்புதமாக விளக்கும்,.......
-
தலைவர் அப்போதே வெளிக் கிரகம் செல்வதுபோல் எடுக்கப்பட்ட படம்,அமெரிக்கர்கள் சந்திரமண்டலம் போவதற்கு முன்பே தலைவர் அதைக்காட்டினார்,அங்கே செருப்புகூட(ஷூ)தனித்தன்மையாக இருக்கவேண்டும்,எனக்காட்டினார்,பின்நாளில்1969ம்ஆண்ட ு அமெரிக்கர்கள் சந்திரனுக்குச் செல்லும்போது ஸபெஷல் ஷூ அணிந்து சென்றனர்.......தலைவரின் தீர்க்கதரிசனம்... Thanks...