நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்து...
தந்தையும் மகனுமாய் தமழ் சினிமாவை உலகின் உச்சத்தில் கொண்டு போய் அமர்த்தியதற்கு அச்சாரமாய் அமைந்த படம்
http://i1146.photobucket.com/albums/...psb8e53afd.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்து...
தந்தையும் மகனுமாய் தமழ் சினிமாவை உலகின் உச்சத்தில் கொண்டு போய் அமர்த்தியதற்கு அச்சாரமாய் அமைந்த படம்
http://i1146.photobucket.com/albums/...psb8e53afd.jpg
விஸ்வ ரூபம்...
தனக்கு சரியான வாரிசாக அடையாளம் காட்டிய நடிகர் திலகத்தின் தீர்க்க தரிசனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 1952க்குப் பிறகு இன்று வரையிலும் இனிமேலும் நடிப் பென்றால் என்ன வென்று இலக்கணத்தைத் தமிழ்த் திரையுலகம் தான் உலகிற்குக் கற்றுத் தரும் என்பதை இடைவிடாமல் தொடர்ந்து நிரூபித்து வரும் இவர்கள் இருவரும் கலைவாணியின் அவதாரங்கள்.
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல உலக அளவிலும் நடிகர் திலகத்திற்குப் பிறகு சிறந்த நடிகர் கமலஹாசன் என்பதற்கு விஸ்வரூபம் மிகப் பெரிய சான்று.
என்னைப் பொறுத்த வரையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பை விஸ்வ ரூபம் திரைப்படத்தில் காண முடிந்தது. இப்படிப் பட்ட அனுபவம் நடிகர் திலகம் நடித்த பல படங்களில் பார்க்க முடியும். இது கமல் மூலமாக தொடர்வது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
உலகநாயகனின் உயர்வுக்கு காரணம் கலைப்படங்களா கமர்ஷியல் படங்களா - Jaya TV பட்டிமன்றம் Video
http://www.dailymotion.com/video/x16...t-6_shortfilms
(from 9:47 onwards)
"....தமிழ் மக்களை தமிழ் இனத்தைப் படுகொலை செய்து இன்று பெரும் பதவி உயர்வு பெற்று விட்டாலும் அது உயர்வுதானா?(கோபமாக.)
..நெற்றிப் பொட்டில் குண்டடி பட்டு மண்ணில் சாய்ந்து கிடந்தாலும் உயிர் விட்டாலும், தமிழ் மக்களுக்காக, அது உயர்வுதான்..."
"அதை பார்த்துக் கொண்டும் நாம் பேசாமல் இருந்திருக்கிறோம்.. நான் உட்பட"
"அந்த இனப் படுகொலையைக் கண்டித்து, உயிர்த்தியாகம் செய்தேனும் கண்டித்துப் பேசுகிறவன், உயர்கிறான்..."
தமிழினப் படுகொலைக்கு துணைபோன கும்பலை செருப்பால் அடிக்கிறார் கலை வள்ளுவன் கமல்ஹாசன்..... திமுக துரோகிகள் பொத்திக் கொண்டு போகட்டும் இனி.
Geno, How are you?! After looong time! :) Are you in fb/twitter?! :)
Hi Geno! Then you need to join asap! Join twitter and let me know the id! :) Once, Bala(Karthik) asked me to request you join twitter! But i am able to get hold of you, now only! :) Its gr8 place and of course u will find lots of like minded ppl!
Unforgettable Moments of Kamal
https://www.youtube.com/watch?v=Pn-9ZybiOM0#t=16
|Rare Video| Kamal Haasan's Short Interview about Hey Ram & Marudhanayagam
https://www.youtube.com/watch?v=9zhaeaQFtzk#t=73
Kamal Haasan's Deepavali Special Pattimandram
https://www.youtube.com/watch?v=RI1jwvpinP8
கமலுடன் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர் ஸ்டார்
‘விஸ்வரூபம்-2’ படத்தைத் தொடர்ந்து கமல், தனது நீண்ட நாளைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கன்னட நடிகரான ரமேஷ் அரவிந்த் கமலுடன் சேர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கன்னடத்து சூப்பர் ஸ்டார் ஒருவரும் கமலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். கன்னடத்து சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். 51 வயதாகும் இவர், கன்னடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை இன்றளவும் தக்க வைத்திருப்பவர்.
இவர்தான் கமலுடன் ஒரு படமாவது சேர்ந்து நடித்து விடவேண்டும் என்று ஆசையில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
நான் கமலின் அதிதீவிர ரசிகன். ஒருமுறை கமலை சந்தித்போது அவர் என்னை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு நான் குளிக்கவே இல்லை. காரணம், இந்த இனிய அனுபவம் என்னைவிட்டு போய்விடக்கூடாது என்பதனால்தான்.
கமலுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
LOL - 'kulikkavey illai" !
தமிழ் சினிமா... ஒரு க்ளிக் உலா!
ஸ்டில்ஸ் ரவி... அன்றைய 'காமதேனு’ தொடங்கி இன்றைய 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ வரை 500 திரைப்படங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றிய தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்’ புகைப்படக் கலைஞர். 'அன்னக்கிளி’ இளையராஜா அறிமுகம், மகேந்திரனின் 'ஜானி’ மேக்கிங், கோடம்பாக்கத்தின் அவுட்டோர் படப்பிடிப்புகள் என தமிழ் சினிமாவின் வரலாற்றோடு நெருக்கமாகப் பயணித்துவரும் இவர், தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...
http://i1277.photobucket.com/albums/...ps129354c1.jpg
அப்போதுதான் புதிதாக வந்த மினி கீ போர்டு ஒன்றை சுஹாசினி, வாணி கணபதியிடம் இசைத்துக் காட்டுகிறார் கமல். எனக்கு கமல் எப்பவும் ஆச்சர்யம். கோல்டு ஸ்பாட் குளிர்பானம் குடிக்கும் குரங்கு, நேபாளத்தில் வரிசையாக நிற்கவைத்து ஆடுகளின் தலையை வெட்டும் நேர்த்திக்கடன் என, தான் பொழுது போக்காக எடுத்த படங்களைக் காட்டுவார். 'ஹாபியா எடுக்கும் மனுஷனே இவ்வளவு நேர்த்தியா எடுக்கும்போது, அதையே தொழிலா பண்ற நாம எப்படி எடுக்கணும்’னு எனக்குள் வெறி ஏறும். தமிழ் சினிமாவில் முதல் டிஜிட்டல் கேமரா வாங்கியவர் கமல். இரண்டாவதுதான் நான். ஆல் இன் ஆல் அழகுராஜான்னா, அது கமல்தான்!
(ananda vikatan)
Manmadha Leelai now in Raj TV (@1.30pm)
http://i1366.photobucket.com/albums/...psf1fe54cb.jpg
அனைவருக்கும் கலைஞானி கமல்ஹாசன் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நவம்பர் 7
http://i1366.photobucket.com/albums/...ps7b4e0454.jpg
Happy Birthday...Padmashree Kamal Haasan (November 7)
http://i1277.photobucket.com/albums/...ps5e7eee79.jpg
http://i1277.photobucket.com/albums/...ps95298b6f.jpg
Happy Birthday to Padmashree Kamal Hassan
Kamal welcomes Asha Bonsle
http://www.youtube.com/watch?v=SFV-JZyh-Zc
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல!
Raghavendra Sir
Your birthday wishes for Kamal - posting is very nice.
http://i1366.photobucket.com/albums/...ps84b55c8a.jpg
Happy Birthday Kamal Sir.
உலக நாயகனின் பல அவதாரங்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் அதில் ஒரு சிறு நினைவலை தான் இது. மும்பாய் எக்ஸ்பிரஸ் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு ஒரு சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஏறபாடு செய்யபட்டிருந்தது. இதில் ஒவ்வொரு ஊரின் கமல் ரசிகர்களும் அவர் அவர் ஊர் பெட்டியில் ஏறி சென்னை வரை வந்து சென்னையில் இரண்டு நாட்கள் ஒரு தொலைக்காட்சியின் தயவில் தங்கியிருந்து பின்பு 3வது நாளாய் திரும்பவும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல்லும்படி பிளான் அமைக்கபட்டிருந்தது.
இதில் கமலும் சென்னையில் ரசிகர்கள் சந்திப்பதை விட ரயிலிலே அவர்களுடன் பயணம் செய்தால் நன்றாய் இருக்கும் என எண்ணீ கமலை ரசிகர்களுடன் ரயிலில் பயணிக்க வைப்பது என முடிவு எடுத்து ஐடியாவே கொடுத்தவுடன் கமல் ஒகே என்றார். பின்பு அவரை எப்படி இந்த சிறப்பு ரெயில் கொண்ட வர முடியும் என்ற போது அவரை திருச்சியில் இருந்து ஜாய்ன் செய்து கொல்ள செய்யலாம் என எண்ணி அவரை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. நான் அப்போது பணி நிமித்தமாக மலேஷியா சென்றிருந்தால் கமலை சென்னை விமான நிலையம் வரை அழைத்து வர அவரின் காரியதர்ஸி நிகிலிடமும் பின்பு நான் சென்னைக்கு காலை 10:30 மணிக்கு அவருடன் டமஸ்டிக் விமான நிலையத்தில் லவுன்ஞில் ஜாயின் செய்து பின்பு 11:45 இந்தியன் ஏர்லைன்ஸில் திருச்சி செல்ல காத்திருந்தோம். அவர் காலை என்ன சாப்பிட்டார் என எனக்கு தெரியலை நான் ஒன்னும் சாப்பிடலை. லவிஞ்சில் சான்ட்விச் என்ற பெயரில் ஒரு பிரட் துன்டை நாலாய் நருக்கி அதில் கொஞ்சம் பட்டரின் வாசத்தை காணிபித்து வைத்திருருந்த தம்மாதுன்டு சான்ட்விச்சை பார்த்த வுடன் தட்டை அப்படியே ஸ்பெஷல் எஃபக்ட்டில் காலி செய்து விட ஆசை ஆனா பக்கத்துல பேசிக்கொண்டே நம்ம கமல் அதனால் வெரும் 6 கிளாஸ் ஜூசுடன் என் அப்பிட்டீட்டை அமுக்கி வைத்துக்கொண்டேன். விமானத்தில் சாப்பிடலாம் பிஸினஸ் கிளாஸ் தானே என்று அமர்ந்திருந்தேன். விமான போர்டிங் அழைப்பு வரவே எழுந்து போனோம். 1ஏ - ஆ ராசா (2ஜி) அவர் தான். 1 பி காலி 1சியில் நானும் / 1டியில் தலைவரும் அமர விமானம் கிளம்பியது. வழக்கம் போல ஒருகாலத்து சிம்ரன் 30 வருஷம் கழிச்சி வந்தா எப்படியோ அப்படி ஒரு அம்மா கேன் ஐ செர்வ் லன்ச்னு கேட்டாக. நானும் யெஸ் வெஜிட்டேரியன் என்று கூற தலைவனோ நோ ஐ அம் ஃபைன் என்று சொல்லி தூங்க எத்தனித்தார்.
சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கும் பறிமாறபட்டது. நான் சுவைக்க தலைவருக்கு மூக்கில் வியர்க்க கேட்டார் ஹவ் இஸ் த ஃபுட் என? உடனே நான் வெரி நைஸ் என சொல்ல தலைவன் அழைப்பு பொத்தானாய் அமுக்க உடனே அந்த பழைய சிம்ரன் வந்து யெஸ் ப்ளீஸ் என கேட்க தலைவன் ஐ வுட் லைக் டூ ஹேவ் ஒன் மோர் சாம்பார் ரைஸ் என சொல்ல ஐயோ சாரி சார் வி ஹேவ் ஒன்லி சான்ட்விச் அன்ட் ஆம்ளட்னு பதில தலைவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே நான் சார் ப்ளீஸ் ஷேர் வித் மீனு ஒரு தைரியத்துடன் சொல்ல ஒகேன்னு டக்குனு அந்த அம்மாவிடம் ஒரு ஸ்பூனை வாங்கி ஒன் பை டூ கல்ச்சருக்கு மாறினோம். கொஞ்சமும் எந்த வித தலைக்கனமும் இல்லாமல் சாம்பாரும் / உருளைக்கிழங்கும் இருவரும் சாப்பிட்டோம். திருச்சி வந்தது. வந்த உடன் ராசாவுக்காக நாலு பேர் வந்திருந்தார்கள் ஆனால் தலைவரின் அண்ணனை தவிர வேறு யாரும் இல்லை. எனக்கு அதிர்ச்சி என்னடா இது தலைவனுக்காக ஒருத்தன் கூட வரலையான்னு - சரின்னு அவருடம் கிளம்பினோம்.
திருச்சி வெளியே ஹோட்டல் காவேரின்னு நினைக்கேன் (சரியா தெரியலை - இங்க ஃபேஸ்புக் நண்பர்கள் நிறையபேர் அதுல கலந்திகிட்டதால - நீங்களே கன்ஃபார்ம் பன்னுங்க). அந்த ஹோட்டலின் தெருவில் வண்டி திரும்பின உடனே ஒரே சத்தம் என்னடன்னு பார்த்தாஒரு 8000 - 10 ஆயிரம் பேர் தெருவை அடைச்சிகிட்டு நிக்கிறாங்க கமல் சொன்னார் டிரைவர் வண்டியை நேரா விடுங்க, ரவி சைட் லாக் பன்னுங்கன்னு கொஞ்சம் நேரம் எனக்கு என்னவோ பாஸ்போர்ட் இல்லாம பார்டர் தான்டற பயம் அப்பா அப்படி ஒரு கிரேஸி / வெறி என்னவேனும்னாலும் சொல்லாம் தலைவா தலைவான்னு குரல் அடுத்த ரென்டு நாளுக்கு காதுல ஒலித்து கொண்டே இருந்தது. ஹோட்டலுக்கு போய் இறங்கின உடனே வெடி மற்றூம் விண்ணை பிளக்கும் சத்தம் நான் வண்டிக்குளே டர்ராகி கிடந்தேன். அவர் இறங்கி போன பிறகு வண்டியை சுற்றி கூட்டம் சுத்தமா இல்லை தெம்பா இறங்கி ரூமுக்கு போயாச்சு. கமல் லன்சுக்கு அவர் அண்ணன் வீட்ல இருந்து சாப்பாடு வந்திருந்தது. சாப்பிட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க கரெக்டா 4:30க்கு கிளம்புவோம்னு சொன்னாரு. நானும் ரயில்ல வர்ரவங்கட்ட சொல்லிட்டேன். ரயில் 5 மணிக்கு திருச்சி ஜங்க்ஷனு வரும் தலைவர் ஏறி அதுல செங்கல்பட்டு வரை பயணம்னு பிளான். நானும் தூக்காச்சி போடு பிர்ஷா கிளம்பி ரெடியாய் 4 மணிக்கு வந்தா ஒரு ரசிகரும் இல்லை. போலீஸ் பட்டாளம் நின்னுகிட்டு இருந்தது. கிளம்பலாம்னு சொல்லும் போதே சிறப்பு ரயில் சிக்னல் பிரச்சினைனால 1 மணி நேரம் தாமதமாம். சரின்னு ஒரு வழியா 5:15 கிளம்பலாம்னு வண்டியிலே ஏறும் போது திருச்சி டி எஸ் பி ஆபிஸ்ல இருந்து போன் சார் திருச்சி ஜங்கஷ்னுக்கு போற அத்தனை ரோடும் ஜாம் நீங்க ஜங்கஷனுக்கு வரப்போவது தெரிஞ்சி போச்சு அதனால் பிளான மாத்துங்க இல்லைனா கென்சல் பன்னுங்கன்னு சொன்ன வுடனே எல்லோருக்கும் குழப்பம்.தலைவரோ இல்லை ரசிகரய் ஏமாற்ற முடியாது அதனால் லெட்ஸ் பிளான் சம்திங்னு சொல்லி ஒரு ஏசிகிட்ட கொஞ்சம் நேரம் பேசிட்டு வாங்க போலாம்னு கிளம்பினோம். ஆனா பின் கேட் வழியா நேரா வன்டி ஒற்றையடி பாதை வழியா என்னாடான்னு கேட்க தயக்கம் ஆனா வரே என் ஒரு டாலர் மூஞ்சி பத்து காசு மூஞ்சியாய் ஆனதை கவனித்து சொன்னாரு - ரவி போலீஸ் நம்மை திருச்சி ஸ்டேஷ்னுக்கு போக முடியாததால் அதற்க்கு முன் உள்ள ஒரு ஷ்டேஷனுக்கு போறோம்னு. சரினு கரடுமுரடு சாலையில் ஒரு மணி நேர பயணம். அப்புறம் ஒரு சினிமாவுல அடிக்கடி பூங்கொடி பூங்கொடின்னு ஒரு கிராமம்னு பிளாஷ்பேக் சொல்லும் அந்த கிராமத்தை உண்மையில் கண்டேன். ரென்டு எருமைமாடு நாலு ஆடு பிளஸ் அதன் வாரிசுகள் கண் லைட்டா தெரியிர ஒரு மேய்ப்பாளர் அவ்வள்வுதான். ஸ்டேஷன் மாஸ்டர் ஒடி வந்தார் கமலிடம் வாங்க சார் வாங்க சார்னு படபடத்தார்.
நான் சார் ஆல் ஒகேதான்னு கேட்ட போது ஸ்டேஷ்ன் மாஸ்டர் சார் ஒரு சின்ன பிரச்சினை அது என்னான்னா இது சிறப்பு ரயில் அதனால் இங்கிட்டு நிக்க வைக்க முடியாது பெர்மிஷன் இல்லை அதனால் இந்த பிளான் பனால்னு சொன்னார். எனக்கு தலை சுற்றியது. ஆனால் கமலோ அந்த ஸ்டேஷன் மாஸ்டர் வாக்கி டாக்கியை வாங்கி சார் வண்டியின் டிரைவருக்கு கனெக்ட் பன்னுங்கன்னு சொன்னாரு. அவரும் அதை செய்ய க்மல் அந்த டிரைன் டிரைவரிடம் சார் நான் கமல் ஹாசன் பேசுறேன் ஓவர்னு சொன்ன உடனே டிரைவர் சார் சொல்லுங்க் சார் எனக்கு தெரியும் சார் பிரச்சினை ஆனா நான் நிறுத்தினா என் வேலை போயிடும்னு சொல்ல கமலோ நீங்க நிறுத்த வேன்டாம் ஜஸ்ய் ஸ்லோ ப்ன்னுங்க நான் ரன்னிங்கிளே எறிக்கிறென்னு சொல்ல ஸ்டேஷன் மாடரும் சார் இது லோ பிளாட்ஃபார்ம் இதுல எப்படி நீங்கன்னு கேட்க கமல் கூறிய ஒரே வார்த்தை " என் ரசிகனை நான் ஏமாற்ற விரும்ப்வில்லை என்பதே" ரயில் 20 நிமடத்தில் வர கமல் அதுவரை கேஷுவலாய் ஒடிந்து போன சிமின்ட் பென்ச்சில் உட்கார்ந்து என்னுடன் பேச எனக்கு டரியல்தான். ரயில் மெதுவாக ஊர கமல் ரன்னிங்கில் ஏரினால் ஏ 1 கோச்சில் பின்னாடியே புட்ஃபொர்ட் அடித்து ஏறி ஒர் வழியாய் உள்ளே போனால் ஒரே ஆர்பரிப்பு ரயிலில் இருந்த ரசிகர்களிடம் எல்லோரிடமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
30 நிமடத்தில் திருச்சி வர விண்ணை பிளந்தது கரகோஷம் மற்றூம் தலைவனின் ரசிகர்களின் கதறல் அப்பா தமிழ் நாட்டில் மட்டுமே இது சாத்தியம் ஒரு நடிகனுக்காக மொத்த ரயில்வே ஷ்டேஷனும் அதை சுற்றி 5 கிலோமீட்டருக்கு ரசிகர்களின் கூட்டத்தால் உறைந்து போனது திருச்சி. பின்பு அவர் ஒவ்வொரு ஸ்டேஷன் வரும்போது கொஞ்சமும் அசராமல் வாசல் வரை வந்து வாசற்ப்படியில் நின்று அந்த ஒரு நிமட கையசைப்புக்காக என்ன ஒரு ஃபாலோவர்ஸ் என்பதை கன்டேன். அதுமட்டுமல்ல அவர் தின்டிவனம் வரை தான் வர முடிந்தது அதற்க்குள்ளே இரவு 11:45ஆக அவர் அந்த 5 மணி நேர ரயில் பிரயானத்தின் ஒவ்வொரு கடைசி ரசிகரையும் ரசிக்கும் வண்னம் பேசியது மற்றும் இடைவிடா நகைச்சுவை எனக்கு உணர்த்தியது இவர் தான் உண்மையான மனிதன் கமலின் வடிவில் என்று. வளர்ந்து வரும் அனைத்து நடிகர்களும் கற்றூ கொள்ல வேண்டிய சிம்பிலிசிட்டி. இன்னும் நிறைய பயனங்கள் கமலுடன் 1:1 அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன் - கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கடவுள் அவரை எப்போதும் போல ஆசிர்வதிக்கட்டும்.
https://www.facebook.com/photo.php?f...2143571&type=1
Vijay Television wishes a very happy birthday to Kamal Haasan..
https://www.youtube.com/watch?v=1Q0rJeBihY8
Kamal Haasan 59th Birthday Exclusive AV
https://www.youtube.com/watch?v=gXbZVtTg4hg
(Mani Selvaraj FB)
15 films to thank Kamal Haasan for on his birthday
New Delhi, November 06, 2013
Kamal Haasan has spent 53 years in the film industry and has won three National Awards, a Padma Shri and holds a Guinness World Record for essaying 10 roles in Dasavatharam.
As the actor-filmmaker-producer celebrates his 59th birthday today, here’s looking at his best works.
Vishwaroopam
The film was mired in a controversy over depiction of Muslims but it did not stop Vishwaroopam from winning BO success and critical acclaim.
Made in three languages, it had some of the best graphics ever seen in Indian cinema.
Dasavatharam
This ambitious project had Haasan essaying 10 different roles, for which he won Tamil Nadu State Film Award for Best Actor. The multi-lingual film made in 2008 was a money spinner.
Virumaandi
Haasan acted, directed and wrote Virumaandi – his 2004 film based on the Rashomon effect. The movie won best film award at Puchon Fantastic International Film Festival.
Hey Ram
Also starring Shah Rukh Khan and Rani Mukherji, this bilingual film was based on India’s partition and Mahatma Gandhi’s assassination. The film went on to represent India at the Oscars in 2000.
Indian
This was Haasan’s take on the rampant corruption in India. His double role in the film fetched a National Award, a Filmfare Award and Tamil Nadu State Film Award in Best Actor category.
Pushpak
This 1998 silent black comedy won a lot of accolades. With king-for-a-day story premise, the film was a blockbuster.
Avvai Shanmughi
The multi-faceted actor featured in Avvai Shanmughi as a woman in 1996. Post the success of the Tamil film, it was remade as Chachi 420 in Hindi.
Nayagan
This 1987 film had Haasan playing Mumbai don Varadarajan Mudaliar. The actor won a National Award for his realistic portrayal. It was also included by the Time Magazine in its 100 best films list.
Saagar
In this 1985 hit, Haasan played a thwarted lover with gusto. He won the Filmfare best actor award for the movie and was also nominated in supporting actor category.
Geraftaar
This 1985 film had three biggest stars in India at that time – Rajnikanth, Haasan and Amitabh Bachchan. A masala potboiler, it earned R32 crore at the box office.
Sadma
A remake of the Tamil film with the same actors in the lead, this 1983 Hindi movie was highly appreciated for Haasan and Sridevi’s nuanced performances.
Moondram Pirai
Haasan went on to win a National Award for this 1982 film where he played a teacher taking care of a girl suffering from amnesia. Sridevi played the girl’s role.
Ek Duuje ke Liye
In 1981, Haasan made his Bollywood debut with this film which was a remake of his Telugu hit Maro Charithra. Story of two star-crossed lovers, it was a blockbuster.
Apoorva Raagangal
Haasan had a meaty role in this 1975 film, which challenged Indian social mores. Interestingly, the film also introduced superstar Rajinikanth.
Kanyakumari
The actor made his Malayalam debut in 1974 with Kanyakumari, story of a man who makes sculptures and falls in love with a girl who sells pearls on the sea shore.
Kalathur Kannamma
Haasan began his career at the age of six in 1960, working with the veteran actor Gemini Ganeshan. He received the President’s Gold Medal for his performance in the movie.
(Hindustan times -06 Nov)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கமல்ஹாசரே !! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்!!
I take the opportunity to wish Kamal Haasan a very happy birthday. Age is just a number for this man
உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு..
அற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்பத்தி எட்டு .
களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல்.
முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!
'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில்,பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் கமல் நடித்ததே இல்லை!
கமல் நடித்த படங்களைப் பாராட்டி பாலசந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் அழைப்பார்!
கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா. கதறித் துடித்தபடி அவர்களும் கொள்ளிவைத்தனர்!
ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!
எண்பதுகளின் மத்தியில் 'மய்யம்' என்ற இலக்கியப் பத்திரிகையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!
எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!
ஆரம்பத்தில் 'சிவாலயா' என்ற நடனக் குழுவை ஆரம்பித்து நடத்தினார் கமல்.அதற்குப் பிறகுதான் நடன உதவியாளராக தங்கப்பனிடம் சேர்ந்தார்!
ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனிகதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம்'பட்டாம்பூச்சி'!
'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!
கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு, முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று...'மருதநாயகம்'!
கடவுள் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும், ஆத்திகத்தை கமல்விமர்சனம் செய்வதில்லை!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!
தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்!
கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!
கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!
'ராஜபார்வை' முதல் தம்பியுடன் இருந்து அலுவலகத்தைக் கவனிக்கிறார் அண்ணன் சந்திரஹாசன். கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான் இருக்கிறது!
ஏதோ மன வருத்தம்... சாருஹாசனும் கமலும் இப்போதும் பேசிக்கொள்வதுஇல்லை!
பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!
வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்ட தருணங்களும் உண்டு!
'ஹே ராம்' படம் முதல் டைரக்ஷனாக வெளிவந்தாலும், முன்னமே 'சங்கர்லால்'படத்தை, டி.என்.பாலு இறந்து போக, முக்கால்வாசிக்கு மேல் இயக்கியிருக்கிறார்!
கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து. தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய உண்டு!
அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது!
பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்!
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி,கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்!
ரஜினிக்குப் பிடித்த படமான 'முள்ளும் மலரும்' படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்தவரே கமல்தான்!
'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.
கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்'ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!
'சட்டம் என் கையில்' படம்தான் கமல் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்பது பலரும் சொல்லும் தகவல். ஆனால், அவர் 'பார்த்தால் பசி தீரும்'படத்திலேயே சின்ன வயதில் டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்!
ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவப் பிரியர் கமல். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம். அந்த நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள் பசியாறி விடுவார்களாம்!
ஆஸ்கர் விருது பெற்ற 'டிராஃபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர்ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்'டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!
நடிகர் நாகேசுக்கும் கமலுக்குமான உறவு 'அப்பா-மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம், 'கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேசுக்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!
கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. 'ஹே ராம்' படத்தின் முதல்வசனமே இப்படித்தான் இருக்கும்... 'சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம்'!
நல்ல மூடு இருந்தால், நண்பர்களிடம் தன் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விரல் ஜாலங்களை, குரல் ஜாலங்களுடன் கேட்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.இருந்தும் ஏனோ, இன்னமும் தொகுப்புகளாக வெளியிடாமல் தாமதிக்கிறார் கமல்!
''சந்திக்கும் மனிதர்களின் பேச்சுக்களை, நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும் ஆற்றல் எனக்குத் தெரிந்து சிலருக்கே உண்டு. இந்த ஆற்றல்கைவரப்பெற்றவர்கள் வரிசையில் முக்கியமான இடம் கமலுக்கு உண்டு''என்கிறார் யூகி சேது!
'மர்மயோகி'யில் கமல் ஒரு அகோரி கேரக்டர் செய்வதாக இருந்தார். கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட தாடி வளர்த்தது அதற்காகத்தான். 'சாமா சானம்' என்றுதொடங்கும் பாடல் ஒன்றைக்கூட இதற்காகத் தயார் செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி' டிராப் என்றவுடன் தாடியை எடுத்துவிட்டார்!
நன்றாகத் தமிழ் பேசும் ஹீரோயின்களை கமலுக்கு மிகப் பிடிக்கும். தமிழ்க் கதாநாயகிகள் அதிகம்வருவதில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அதனால்தான் அபிராமியையும் சினேகாவையும்அழைத்துத் தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார்!
'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்'பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில்,கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!
பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்தார் கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதன்முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது!
முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!
4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி-யில் கமலின் பிறந்த நாளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம் நடத்தினார்கள். ஒரு நடிகரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நடத்தப்பட்ட முதல் கவியரங்கம் அதுதான்!
'ஆளவந்தான்' ரிலீஸின்போது, 'இனிமேல் 100 நாட்கள் எல்லாம் படம் ஓடாது. சினிமா பார்ப்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி. சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அருகில் உள்ள பெட்டிக் கடையில் வாழைப்பழம் கிடைக்க வேண்டும்' என்று சொல்லி, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!
'யாரையாவது டின்னருக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம் கேட்கப்பட்டபோது, 'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து, ஆட்டுப் பாலும் நிலக்கடலையும் பரிமாற விருப்பம்' என்று பதில் சொன்னார்!
'நாகேஷ், தன்னுடைய திரையுலக காமெடி வாரிசை உருவாக்காமல் போய்விட்டார். அந்தத் தவறை நானும் செய்ய மாட்டேன்!' அண்மையில் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான காரணமாக நண்பர்களிடம் கமல் பகிர்ந்து கொண்டது இது!
சென்னை புறநகரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டுவதற்காக கமல் இடம்வாங்கிப்போட்டிருக்கிறார். அனைத்துவிதமான தொழில் நுட்பங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும், கேளிக்கை பூங்காக்களும், ரெஸ்டாரென்ட்டுகளும் அங்கு இருக்கும்!
தமிழ் சினிமாவை 'கோலிவுட்' என்று பலரும் சொன்னாலும் கமல் அந்த வார்த்தையை உச்சரிக்க மாட்டார். அப்படிச் சொல்லவேண்டாம் என மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!
வீட்டில் நான்கு கார்களை வைத்திருக்கும் கமல்ஹாசன் புதிதாக ஹம்மர் ஹெச்2 என்னும் காரை 1.8 கோடி ரூபாய் விலையில் வாங்கியிருக்கிறார். இது ஸ்டாலின் வைத்திருக்கும் ஹம்மர் ஹெச்3 காரைவிட காஸ்ட்லி!
'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!
விகடன் டீம்
http://news.vikatan.com/article.php?...news&aid=21075
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
Kamal's Birthday Special
மதியம் 1.30 மணிக்கு...
தெனாலி (ராஜ் டிவி)
மைக்கேல் மதன் காமராஜன் (ஜெயா டிவி)
சங்கர்லால் (ஜெயா மூவீஸ் டிவி)
சூரசம்ஹாரம் - (பாலிமர் டிவி)
Kamal..(tidbits)
http://i1277.photobucket.com/albums/...ps02306332.jpg
Fans waiting at alwarpet to wish ulaganayagan .....
http://i1277.photobucket.com/albums/...psa71a569d.jpg(Padmashree Dr.Kamal Haasan FB)
'பத்மஸ்ரீ' கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும், அவர் ரசிகர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்தைப் பற்றி 12-9-2001 தேதியிட்ட 'தேவி' வார இதழில் கமல் அவர்கள் எழுதிய மனம் நெகிழ வைக்கும் கட்டுரை.
http://i812.photobucket.com/albums/z...ps59a1334b.jpg
http://i812.photobucket.com/albums/z...ps01ba1ee0.jpg
http://i812.photobucket.com/albums/z...ps5db9954a.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Happy birthday to the legend