நன்றி ஆர்த்தி மற்றும் ஆனா....
கடந்த ஒரு வாரமாக உஷா தொல்காப்பியனின் டைரியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறாள். (ஒரு வழியாக நேற்று படித்து முடித்துவிட்டாள்).
அதாவது, தொல்காப்பியனின் சின்ன வயது ஃப்ளாஷ்பேக்குகள்தான் ஓடிக்கொன்டிருக்கின்றன. செல்லம்மாவும் வெள்ளையனும் வேலை தேடி கேரளா போனது. அங்கு தொல்காப்பியனும், அவன் தங்கை மீனுவும் பிறந்தது, இருவருக்கும் வேலை கொடுத்த மலையாள நாராயணன் ஜோதிடனின் சொல் கேட்டு (????) செல்லம்மாவிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டது, அங்கிருந்து தப்பி செல்லம்மா தன் குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்தது, மனைவியையும் குழந்தைகளையும் தேடி வெள்ளையனும் ராமேஸ்வரம் வருவது...... இப்படி முழுக்க ஃப்ளாஷ்பேக் கதைதான் ஒருவாரத்தை ஆக்ரமித்துக்கொண்டது.
அடுத்த வாரம் நடப்புக் கதைக்கு திரும்பக்கூடும் என்று நம்புவோம். (ஃப்ளாஷ்பேக் கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் விவரிக்கவில்லை).