http://i61.tinypic.com/v403eb.jpg
Printable View
சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் " பறக்கும் பாவை " பிற்பகல் ஒளிபரப்பாகி சற்று முன் நிறைவு பெற்றது.
http://i58.tinypic.com/2qwomkw.jpg
தொடர்ந்து இரவு 7 மணிக்கு "ரிக்ஷாக்காரன்"
http://i61.tinypic.com/o6ivzt.jpg
கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு பொன்மனசெம்மலின் "அன்பே வா "
http://i60.tinypic.com/28akopf.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. வினோத் அவர்கள் அறிவது :
கர்நாடக எம். ஜி. ஆர் ரசிகர்கள் வெளியிட்ட என் அண்ணன் சிறப்பு மலர் வெகு அருமை.
சமீபத்தில், "ஆல்பர்ட் " அரங்கில் நடைபெற்ற நம் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" நூறாவது நாள் வெற்றி விழாவில் கர்நாடக எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த அன்பர்கள் அவர்கள் கையோடு கொண்டு வந்த பேனருக்கு அணிவித்த மாலைகளின் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. அவர்களுக்கு இத்தருணத்தில் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக எம். ஜி. ஆர். ரசிகர்கள் வித்தியாசமானவர்கள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/mmpy1l.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" புதிய பூமி " (27-06-1968) திரைப்படம் கண்ட அனுபவம் :
http://i60.tinypic.com/eja2ig.jpg
சென்னை " குளோப் " ( பின்னாளில் "அலங்கார்" என்று பெயர் மாற்றப்பட்டது) அரங்கில், "புதிய பூமி" காவியத்தை, நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது கண்டு களித்தேன். நான், என்னுடைய வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜி. கே. ரவிக்குமார் ஆகியோருடன் முதல் நாள் ( வியாழக்கிழமை ) மாலை காட்சியில் தான் பார்க்க முடிந்தது. ஆனால், அதற்கு முன்பு, சென்னை திருவல்லிக்கேணி எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த, மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்களுடன் ளுடன் இணைந்து வழக்கம் போல் தோரணங்கள், ஸ்டார் போன்றவற்றை, அவர்களின் கட்டளைப்படி கட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் 12 - 13 வயது சிறுவர்களாக இருந்தபடியால், எங்கள் ஆர்வத்தை அந்த மூத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மக்கள் திலகத்தின் படத்துக்கு இது மாதிரியான வேலைகள் செய்வதை பெரும் பாக்கியமாக கருதினோம். அந்த மூத்த ரசிகர்கள் சிலர் ஏற்கனவே பகல் காட்சியில் "புதிய பூமி" காவியத்தை கண்டு களித்திருந்தாலும், ராமமூர்த்தி, பாலன், மணி, போன்ற சிலர் மீண்டும் எங்களுடன் மாலை காட்சிக்கு இக்காவியத்தை காண வந்திருந்தனர். அவர்களின் தயவால், எங்களுக்கு முதல் நாள் டிக்கெட் சிரமம் இன்றி கிடைத்தது.
அப்போது சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளராக திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்ததாக நினைவு. அவரின் ஆணைப்படி, ஒருங்கினைப்பின்படி, மக்கள் திலகத்தின் பல்வேறு மன்ற அமைப்புக்கள் துடிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.
திரையில் நம் பொன்மனசெம்மல் தோன்றும் முதல் காட்சியில், பலத்த கைதட்டல், விசில், உற்சாகம், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு. சிறுவர்களாகிய நாங்கள் அதை வெகுவாக ரசித்தோம்.
"நான் உங்கள் வீட்டு பிள்ளை" என்ற பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உற்சாக நடனம் புரிந்தனர் ரசிகர்கள். 1967ல் தென்காசி சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் (743) வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்த தி. மு. க. வேட்பாளர் கதிரவன் என்கின்ற சம்சுதீன்,
அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிள்ளை அவர்கள் மறைவால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் கதிரவனை நினைவு படுத்தும் விதமாக கதாநாயகனின் பெயர் கதிரவன் என்று நிர்ணயிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் கதிரவன் அமோக வெற்றி பெற்றார். (தி. மு. க. வின் வெற்றிக்கு நம் புரட்சித் தலைவர் உழைத்த கடின உழைப்பு சொல்லி மாளாது) .
அனைத்து பாடல்களுமே தேனினும் இனியது. குறிப்பாக, ' விழியே விழியே உனக்கென்ன வேலை ' என்ற பாடலின் இறுதிக் காட்சியில் நம் மக்கள் திலகம் நகத்தை கடித்தபடி, வெட்கப்படும் காட்சி வெகு நளினமானது. இயல்பான நடிப்பால் இமயத்தின் உச்சியை தொட்ட நம் மக்கள் திலகத்தின் அந்த நடிப்புக் காட்சி வெகுவாக அப்போதே ரசிக்கப்பட்டது.
அடுக்கடுக்காய் நம் ஒப்பற்ற இதய தெய்வத்தின் அழகையும்,, நடிப்பையும், அங்குலம் அங்குலமாக வர்ணனை செய்யலாம். 51 வயதில், இப்படி ஓர் அழகா என்ற வினா எழுகிறது.
http://i60.tinypic.com/hv54jn.jpg
இளமையின் துள்ளல், இனிமையின் உருவம் இதுதான் மக்கள் திலகம் என்று, திரைப்படம் முடிந்து செல்கையில், உணர்வுப்பூர்வமாக மக்களும், ரசிகர்களும் பேசிக்கொண்டு சென்றனர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக் காவியத்தின் 100 வது நாள் வெற்றி விழாவில் பங்கேற்ற இயக்குனர் திரு. பி. வாசு அவர்களை, அவரது இல்லத்தில்,
இன்று காலை, " ஒலிக்கிறது உரிமைக்குரல் " மாத இதழ் ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு, (பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்கம்) அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பாக அதன் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், திருவளர்கள் கே. எஸ். மணி மற்றும் இராமமூர்த்தி ஆகியோர், மரியாதை நிமித்தம் சந்தித்து, விழாவில் பங்கேற்றமைக்கு, தங்களின் மகிழ்ச்சியையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர். . அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
அது போழ்து, "மாட்டுக்கார வேலன்" காவியத்தில், " ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா" பாடல் கட்சியில், நம் மக்கள் திலகத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். மேலும், " எங்கள் வீட்டு பிள்ளை " காவியத்தில், ஒய்யாரமாக, யதார்த்தமாக வெகு இயல்பாக, அதே சமயம் மிக மிக " ஸ்டைல் " ஆக கால் மேல் கால் போட்டு பத்திரம் படிக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாத காட்சி என்று மக்கள் திலகத்தின் நடிப்பினை சிலாகித்து பேசினார்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு மிகவும் உற்சாகமான சந்திப்பு என அனைவரும் தெரிவித்தனர்.
கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை முன்னிட்டு, இந்த இனிமையான சந்திப்பு நிகழ்ச்சியில் நான் பங்கு பெற முடியாத துர்பாக்கியசாலி ஆகி விட்டேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எனது எண்ணங்கள்
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
.
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy-net
பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.
எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.
எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.
மற்ற இனத்தவர்களில் ஒரு சிலருக்கே நமது தமிழ் நடிகர்களைத் தெரிகிறது. அதிலும் கமல், ரஜினியத் தவிற வேறு யாரையும் அவர்கள் கண்டுகொண்டதாக இல்லை.
எம்ஜிஆரை அன்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் 16வது வாரம் சத்யம் மற்றும் ஆல்பர்ட் திரையரங்கில்
தலைவரின் 100வது காவியம் ஒளிவிளக்கு குறுகிய கால இடைவெளியில் பிராட்வே திரை அரங்கில்
சின்னத்திரையில்
சன்லைப் தொலைகாட்சியில் காலை 11.00 மணிக்கு பறக்கும் பாவை
சன்லைப் தொலைகாட்சியில் மா லை 7.00 மணிக்கு ரிக் ஷா காரன்
கருணாநிதி தொலைகாட்சியில் மா லை 5.00 மணிக்கு அன்பேவா
முரசு தொலைகாட்சியில் மா லை 7.30 மணிக்கு நவரத்தினம்,
இப்படி ஒரு சாதனை தலைவர் படங்கள் மட்டுமே சாதிக்க முடியும்
அதனால் தான் இந்த திரைஉலகில் நிரந்தர வசூல் மன்னராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்
என் அண்ணன் சிறப்பு மலர் பார்க்கவும் படிக்கவும் வாய்பளித்த அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள் கோடி
:ty::ty::ty::ty::ty::ty::ty:
நாளை 29/06/2014 மாலை 6 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை
மன்றத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் திரு.சிவாஜி கணேசன்
பாடல்கள் ,மறைந்த கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு
திரு.சி.என்.எஸ். அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
அதன் சுவரொட்டிகள் காண்க.
http://i62.tinypic.com/vg7yq8.jpg
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றி விழா புகைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா தொலைகாட்சிக்கு இயக்குனர் திரு.பி.வாசு பேட்டி அளிக்கிறார்.
அருகில் திரு.சொக்கலிங்கம்.
http://i62.tinypic.com/1z6qgsz.jpg
http://i57.tinypic.com/5eh5b5.jpg
இயக்குனர் பி.வாசு , ஜெயா தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கும்போது
அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், திரு.எஸ். ராஜ்குமார் ,
திரு. லோகநாதன், திரு. சேகர், திரு. இளங்கோ ஆகியோர்.
http://i59.tinypic.com/28i00tz.jpg
திருவாளர்கள்:எஸ். ராஜ்குமார், பி.எஸ். ராஜு, சங்கர், ஹயாத் , நந்தா ,
யுகேஷ் பாபு , சேகர், லோகநாதன்,பாண்டியன், நீலகண்டன், வேலூர் ராமமூர்த்தி ,ஆகியோர்.
உட்கார்ந்து இருப்பவர்கள் : திருவாளர்கள்:சங்கர், செல்வகுமார், ரமேஷ்,
சுப்பிரமணி , இளங்கோ ஆகியோர்.
எண்ணங்கள்: இடைவேளை இல்லாத தமிழ் சினிமா சாத்தியமா?
சமீபத்தில் 91 நிமிடங்களே ஓடும் கிராவிட்டி என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 50 நிமிடங்கள் கடந்ததும் திடீரென இடைவேளை (படத்தில் இல்லாத) விடப்பட்டுப் படத்துடன் ஒன்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்தது. ஆனால் பார்வையாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திரையரங்குகளின் பொருளாதாரம் இடைவேளை இல்லாமல் படத்தை ஓட்டினால் தாங்காது. 91 நிமிடப் படங்களுக்கே இடைவேளை என்ற தடை இல்லாமல் ஓடக்கூடிய வாய்ப்பு இல்லாதபோது, குறைந்தது 125 முதல் 165 நிமிடம் ஓடும் நம் படங்களுக்கு இடைவேளை இல்லாமல் எடுக்க முடியாது.
இடைவேளை இல்லாமல் வரும் ஹாலிவுட் படங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் இடைவேளை விடும் பழக்கம் உள்ள நம் ஊரில், தமிழ்ப் படங்களுக்குச் சரியான இடத்தில் இடைவேளை விட வேண்டியது அவசியமாகிறது. இந்த இடைவேளை வருவதால்தான் ஒரு படத்தை மொத்தமாகத் தொடர்ந்து பார்த்து அப்படத்தைப் பற்றிய முடிவெடுக்காமல், முதல் பாதி முடிந்தவுடன் ஒரு அபிப்பிராயம், இரண்டாம் பாதி முடிந்தவுடன் இன்னொரு அபிப்பிராயம் மற்றும் மொத்தப் படத்துக்குமான ஒரு அபிப்பிராயம் எனப் பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வழக்கம் இருந்துவருகிறது
படங்களின் வெற்றி இப்படிப் பிரித்துப் பார்க்கும் ‘மவுத் டாக்’ கருத்துகளுக்கு ஏற்ப, கீழே கண்டுள்ள அட்டவணையில் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மாறுவதை நாம் தொடர்ந்து காணமுடியும்.
ஒவ்வொரு படத்துக்கும், இவ்வாறு இரண்டு பாதிகளின் முடிவில் ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு, படத்தைப் பற்றி ஒரு மொத்தக் கருத்தும், அதன் அடிப்படையில் வியாபாரக் கருத்தும் வெளிவந்து படத்தின் வெற்றி தோல்விகள் நிர்ணமாகின்றன.
இந்த அட்டவணையைக் கவனித்தால் ஒன்று புலப்படும். ஒரு படம் முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும், இரண்டாம் பாதி, பார்வையாளர்களைத் திருப்திபடுத்தினால் அந்தப் படத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஆனால் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்திற்கு, முதல் பாதியும், இரண்டாம் பாதியும் நன்றாக அமைவது அவசியமாகிறது. அது முடியாவிட்டால், குறைந்தது இரண்டாம் பாதியாவது சிறப்பாக வந்திருந்தால், அரங்கைவிட்டு வெளியே செல்லும் மக்கள் திருப்தியுடன் செல்வார்கள், படத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களும் ’ ‘மவுத் டாக்’காக வெளிவரும். சில படங்களைக் கடைசி 20 நிமிடம் அல்லது கிளைமாக்ஸ் காட்சிகள்கூடக் காப்பாற்றும். எனவே, எப்படி ஒரு படத்தை முடிக்கிறோம் என்பதைப் பொறுத்தும் படத்தின் தலையெழுத்து மாற வாய்ப்புள்ளது.
வழிகாட்டும் திரைக்கதை
இவ்வாறு, முதல் பாதி இரண்டாம் பாதி என இரண்டு விதமாக ஒரு படத்தை மக்கள் பிரித்துப் பார்த்துக் கருத்து சொல்லும் நம் நாட்டில், உலக வணிக சினிமாவின் பிதாமகன் ஸிட் ஃபீல்ட், ஒரு நல்ல, சுவாரசியமான திரைக்கதைக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்
ஸிட் ஃபீல்டி-ன் திரைக்கதைக் கட்டமைப்பு 120 பக்கங்களுக்குள் அடங்கக்கூடிய, இடைவேளை இல்லாமல் சொல்லப்படும் 90 முதல் 110 நிமிட ஹாலிவுட் படங்களுக்கு ஏதுவானது. நம் படங்கள் இடைவேளையுடன் குறைந்தது 125 முதல் 165 நிமிடங்கள் ஓட வேண்டியவை. சிறப்பான கதையுடன், 4 அல்லது 5 பாடல் காட்சிகளும், 2 முதல் 4 சண்டை காட்சிகளும், போதுமான நகைச்சுவைக் காட்சிகளும், ஒரு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ தரும் இடைவேளைக் காட்சிகளும் நம் வெகுஜனப் படங்களுக்குத் தேவை. எனவே ஸிட் ஃபீல்ட் வலியுறுத்தும் திரைக்கதை கட்டமைப்பை நமது தேவைக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.
முதல் பாதியில் , கதாபாத்திரங்களைச் சரியாக அறிமுகம் செய்து, கதைக் களத்தை முறைப்படி நிலைநாட்டி, ஒரு போராட்டத்தை முன்வைத்துக் காட்சிகளை நகர்த்திச் சரியான ஒரு எதிர்பார்புடன் இடைவேளை விட வேண்டியது இங்கே அவசியம். இடைவேளைக்குப் பின், அந்தப் போராட் டத்தின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளும், அந்தப் போராட்டத்தினால் வரும் விளைவுகளைப் பற்றிய காட்சிகளையும் கொண்டு படத்தை ஒரு சிறப்பான முடிவை நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.
மேலே சொன்ன தேவை களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திரைக்கதையின் கட்டமைப்பு மேலே உள்ள அட்டவணையில் காட்டப்படுவது போல், ஸிட் ஃபீல்ட்-ன் கட்டமைப்பில் இருந்து சிறிது மாறும்.
இது ஸிட் ஃபீல்ட் காட்டும் ஹாலிவுட்டின் மூன்று அங்கச் செயல்பாடுகள் கொண்ட திரைக்கதைகள் நம்மைத் திருப்திப்படுத்தாது. எனவே மேலே சொன்ன 6 செயல்பாடுகளை மனதில் வைத்துக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
“மக்களுக்குத் தற்போது பத்து நிமிடங்களுக்கு ஒரு திருப்பமும், கிளைமாக்ஸ் போன்ற காட்சிகளும் திரைப்படங்களில் தேவைப்படுகிறது.” இது 1970-களில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர். சொன்னது. 40 வருடங்களுக்குப் பிறகும், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.
மேலே சொன்ன 6 செயல் பாடுகளை மனதில் வைத்து, திரைக்கதையில் மாற்றங்கள் செய்து, படங்களைச் சிறப்பாக எடுத்தால், இரண்டு பாதியிலும் மக்களை மகிழ்விக்கும், வெற்றி பெரிதாகும்.
courtesy the hindu tamil
http://i58.tinypic.com/2i899mx.jpg
திரு.பி.எஸ். ராஜு திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
அருகில்: திருவாளர்கள்:செல்வகுமார், இளங்கோ, பாண்டியராஜ், யுகேஷ்பாபு , சுப்பிரமணி, சங்கர், பாண்டியன், ஹயாத், சங்கர் மற்றும் பலர்.
திரைப்பார்வை: முதல்வர் நாற்காலியின் நான்காவது கால்!
"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன.
http://i1170.photobucket.com/albums/...psdb0a0c8a.jpg
courtesy the hindu tamil
அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை
‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும் விதத்தில் சங்கம் போட்ட கட்டுப்பாடு காரணமாக இந்த வழக்கம் ஒழிந்திருக்கிறது. ஒரு வேளை அது தொடர்ந்திருந்தால், அஜீத்தின் பிறந்த நாளான இன்று மட்டும் ஒவ்வொரு நாளிதழும் ஐந்து கிலோ எடையுள்ளதாக அமைந்திருக்கும்.
சரி… அவரைப்போலவே வெற்றியும் புகழும் அடையட்டும் என்று சரண் வாழ்த்தினாரே? அந்த ‘அவர் ’ யார்? சந்தேகமென்ன… புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான். நிறத்திலும் சரி, குணத்திலும் புரட்சித் தலைவருக்கு நிகரானவராக இன்று திரையுலகத்தில் விளங்கும் ஒரே மனிதர் அஜீத் என்றால், அது கடைந்தெடுத்த ஜால்ராவும் அல்ல. கட்டுப்பாடுகள் மீறிய வார்த்தைகளும் அல்ல. தமிழ்சினிமாவோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர்களுக்கு அதன் உண்மை புரியும்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பே கருணையுள்ளம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். அதனால்தான் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய நாளிதழில் இப்படியொரு அழுத்தமான வார்த்தைகளுடன் மிக தைரியமாக விளம்பரம் கொடுக்க முடிந்தது சரணால். அப்போதே அப்படியென்றால், இப்போது எவ்வளவு பெரிய வள்ளல் என்ற நிலையை அவர் எட்டியிருப்பார்? அதற்கு ஏராளமான உதாரணங்கள் இங்கே இருந்தாலும், வெல்லம் இனிக்கும் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? அதனால் அஜீத் பற்றிய வேறு சில புதிய விஷயங்களுடன் அமைந்த கட்டுரை இது.
எதிராளியின் முகம் பார்த்தே அவர் எதற்காக நம்மை நாடி வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிற வழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. அவர் கிளம்பும்போது, தேடி வந்தவரின் கையில் வேண்டியதை கொடுத்தனுப்புகிற ஸ்டைல் எம்ஜிஆருடையது.
அந்த பண்பு அஜீத்திடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரால் பயனடைந்தவர்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம் கதைகள் இருக்கின்றன அவரது உதவிய உள்ளம் பற்றி. அவரிடம் ஏதோ ஒரு வேலையாக பேசப் போயிருந்த நண்பர் ஒருவரின் அனுபவம் இது.
சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க போயிருந்தேன். அப்போதுதான் புதிதாக ஒரு செல்போன் வாங்கியிருந்தார் அவர். அவரது கண்களை பார்த்து நான் பேசிக் கொண்டேயிருந்தேன். ஆனால் அதையும் மீறி என் கண்கள் அவரது செல்போனை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தது. எவ்வளவு அழகாயிருக்கு? எங்கே வாங்கினீங்க சார்? என்றேன். அவரும் ஏதோவொரு நாட்டில் வாங்கியதாக கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார். அதற்கப்புறம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருப்போம்.
விடை பெறும் நேரம் வந்தது. ‘சார்… வர்றேன்’ என்று கூறிவிட்டு எழுந்தேன். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்றார். படக்கென்று அந்த செல்போனிலிருந்த சிம் கார்ட்டை கழற்றினார். பிறகு அந்த போனை அப்படியே என் கையில் வைத்து, ‘எடுத்துட்டு போங்க’ என்றார். நான் ஒரு கணம் ஆடிப் போனேன். ம்ஹூம் என்று நான் மறுத்த போதும் அவர் விடவில்லை. அதுதான் அஜீத். கொடுக்கணும்னு நினைச்சுட்டா ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டார் என்றார் அந்த நண்பர்.
செல்போன் கொடுக்கிற விஷயத்தில் மட்டுமல்ல, ஒரு டைரக்டருக்கு படம் கொடுக்கிற விஷயத்தில் கூட அவர் அப்படிதான். அவருக்கு கண், மூக்கு, வாய் எல்லாம் மனசு மட்டும்தான் அது சொல்வதை மட்டுமே கேட்பார் அஜீத்.
-ஆர்.எஸ்.அந்தணன்
courtesy - net
http://i1170.photobucket.com/albums/...psa360c0d2.jpg
IN SINGLE DAY FOUR MOVIES TELECASTED BY KARUNATHI FAMILY TV'S THANKS FOR MURASU AND SUNLIFE CHANNEL
INDRU PIRANTHA NAAL KONDADUM NAMTHU THIRI NANBAR THIRU BOOMINATHAN AANDAVAR AVARGALUKKU EN PIRANTHA NAAL VALTHUKKAL ENGAL KULATHEIVAM RAMAPURAM MAGAN AVARGALIN AASIYODU NEENGAL VALANUM PALLANDU
http://i1170.photobucket.com/albums/...ps9f15951b.jpg
http://i1170.photobucket.com/albums/...psc09bc71c.jpg
today daily thanthi ad
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .
மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .
ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் திருநாள் இன்று
37 ஆண்டுகள் நிறைவு நாள் .
தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_
1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.
2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.
3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.
4. எட்மண்ட் _ உணவு
5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.
6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு
7. அரங்கநாயகம் _ கல்வி.
8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.
9. காளிமுத்து _ ஊராட்சி.
10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் _ போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.
14. கே.ராஜா முகமது _ கைத்தறி.
(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)
பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.
கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.
கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.
பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.
ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.
அவர் கூறியதாவது:_
அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.
அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.
எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.
எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.
அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.