வணக்கம் கிருஷ்ணா சார். அருமையான வரிகள்.
Printable View
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
https://www.youtube.com/watch?v=Vgvetq_roms
One of my favourite
http://www.youtube.com/watch?v=BAWmheI4YhU
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?
உறவானது மனதில் மணமானது நினைவில் - இதை
மாற்றுவதார் மானே வையக மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில் - இதை
மாற்றுவதார் மானே வையக மீதில்
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
ஆ.. ஆ…
காதலுக்கே உலகம் என்று கனவில் கண்டேனே - நான்
கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே
காதலுக்கே உலகம் என்று கனவில் கண்டேனே - நான்
கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே - இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு - புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு - இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு - புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
வாருங்கள் பாலா சார். கவிஞருக்கு நல்ல பிறந்தநாள் அஞ்சலி. தங்கள் அன்பு மனதிற்கும் மிக்க நன்றி!
மனதை மயக்கும் பாடல்
film : திர்கசுமங்கலி
https://www.youtube.com/watch?v=Qoom1a3YzNo
பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
..பிறந்து பாரென இறைவ்ன பணித்தான்
இறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
..இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
..மணந்து பாரென இறைவன் பணீத்தான்
அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில்
..ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்..
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
..அனுபவமேதான் நான் எனச் சொன்னான்..
மேற்கண்ட கவிதையை எழுதியது கவியரசர் கண்ணதாசன்..வாழ்க்கையில் பலவித அனுபவப் பட்டவர் ..எனினும்.. சாகாவரம் கொண்ட கவிஞர்..அவரது பாடல்கள் அவரது நினைவு தினத்தில் தான் நினைவு கூறப் படுகின்றது என்பதில்லை..எப்பொழுதும்.. என்றும்..
வாழ்க்கையின் நீரோட்டத்திற்குக் கவிஞர் எழுதிய பாடல்கள் ஏராளம்..சோகம், துன்பம்,இன்பம்,காதல் என எல்லாவிதங்களிலும் இந்தக்காலத் தமிழில் சொல்லப் போனால் பிரித்து மேய்ந்திருப்பார்..
சரி அவ்வப்ப்போது இன்று வரப் பார்க்கிறேன்..கவிஞரின் பாடல்களில் என்னைக்கவர்ந்த பலவில் சில சொல்கிறேன்..
இயற்கை என்றாலே கவிஞர்களுக்கு குஷி தான்..
கவிஞர்களோட மனம் எப்படிப் பட்டது..இந்தக் காலச்சிறுகவிஞன்(?!) (அடியேன் :) ) என்ன சொல்றான்..
உதிக்கும்வரை உழைக்கும்மனம் உழன்றேகனன் றிடும்பின்
துதித்தேயிறை செயலேவென தெளிவாய்மலர் திடும்பின்
பதித்தேயிழை இழையாய்க்கவி புனைந்தாலது அழகாய்
மதித்தேபலர் நினைவில்கொளும் மணத்தைப்பரப் பிடுமே..
யெஸ் பொய்யில்லை.. கவியரசர்க்கோ பாட்ல்கள் எல்லாம் படக்கென மலர்கள் மொட்டவிழ்த்துச் சிரிப்பது போல ப் பொங்கிப் பெருக்கெடுத்து வரும்..
அப்படிப் பிரவாகமாய் வந்த ஒரு பாடல் எனச் சொல்வதற்கு முன்:
குமுதத்தில் கவியரசருக்கு முதலடி கொடுத்து எழுத ச் சொல்லியிருந்தார்கள்..அப்படி வந்த கடைசி முதலடி..
கருவறை தொடங்கிக் கல்லறை வரைக்கும்.. இதற்கும் கவிஞர் ஒரு கவிதை எழுதியிருந்தார்..அது எனக்கு
நினைவிலில்லை..
அதே போல ஏன் இந்த வீண்வாழ்க்கை என எனைப்பார்த்து இளமொட்டு கேட்கின்றது என்று இன்னொருவரியும் கொடுத்து எழுதச் சொல்ல அதற்கும் எழுதியிருந்தார்..
ம்ம்..
இனி என்னுள் கலந்த பாடல்களில் ஒன்று..
**
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
**
பின்ன பார்க்கலாம் :)
1979 இல் கே.ஸ்.மாதங்கன் இயக்கத்தில் ஷங்கர் கணேஷ் இசைஅமைப்பில் சிவகுமார்,ஸ்ரீப்ரிய,சிவச்சந்திரன் நடித்து
வெளிவந்த ஒரு படம் "என்னடி மீனாட்சி "
இளமை ஊஞ்சலாடுகிறது "என்னடி மீனாட்சி" பாடலையே தலைப்பாக வைத்து வெளி வந்தது . தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே கிடையாது
சிவச்சந்திரன் அப்போது எல்லாம் 79-80 கால கட்டத்தில் ஸ்ரீப்ரியா ஊடு காதல் என்று கிசுகிசுக்கபட்ட நேரம்
அவள் அப்படிதான், பொல்லாதவன் போன்ற படங்களில் எல்லாம் ஸ்ரீப்ரியா சிபாரிசுவினால் தான் சான்ஸ் கிடைத்தது என்று எல்லாம் அந்த நாளில் வல்லபனின் பிலிமலாயா சொன்னதாக நினைவு
சாவி விமர்சனம் இந்த பாடலை விமர்சித்து எழுதி இருந்தது நல்ல நினைவில் உள்ளது
இந்த பாட்டு ஸ்ரீப்ரியாவும் சிவச்சந்திரனும் பாத் டாப்பில் குளித்து கொண்டு இருக்கும்போது எடுதிருப்பர்கள்
பாலாவும் வாணியும் ரொம்பவும் இழைந்து பாடி இருப்பார்கள்
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ...நீயும் கண்ணனோ
வாணியின் மூச்சு மேற்கண்ட சரணத்தில் என்னவோ என்று பாடிவிட்டு
ஒரு முச்சு விட்டு பிறகு பாடுவார்
தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ
இந்த படத்தில் இன்னும் ஒரு நல்ல பாடல் உண்டு
மலேசிய ஜானகி குரல்களில்
"ஆடையில் என்னடி ஆடுது மீனாக்ஷி
ஆசையில் நான் வந்து தேடிய நாளாச்சு
நீரும் நீரும் சேர்ந்தால் ஒன்றாகும்
நீயும் நானும் சேர்ந்தால் என்னாகும் "
கவிஞன் யானோர் கால கணிதம்
கருபடு பொருளை ஒருபட (உருப்பட) வைப்பன்
இவை சரியென்றால் இயம்புவது என் தொழில்
இவை தவறாயின் எதிர்பதென் வேலை
இகழ்ந்தால் என்னுடல் இறந்து விடாது
புகழ்ந்தால் என் மனம் புல்லரிக்காது
வளமார் கவிகள் வாக்குமுலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
கண்ணனுக்கு தாசனை நினவு கூர்கிறேன்
கிருஷ்ணா சார்,
ரொம்ப நாளாகவே நாம் எல்லோரும் ரசிக்கும் பாடல்
இன்னொன்றும் செம டாப்.
ஓ....மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
வாணி கொன்று விடுவார்.
அப்புறம்
பலே பல் பல் பல் பல்
வான்கோழி மயிலைப் போல் ஆடுது பாரம்மா
மலேஷியா கூட (அது யாரு ஷைலஜாவா இல்ல ஜென்சியா )
One of my favourite ever
Handsome Ravi and Beauty Kanchana , Kaviyarasu Beautiful Lyrics, MSV wonderful music, PS as usual great, MLS humming and Great Sridhar's visual presentation makes this song one of my favoruite
https://www.youtube.com/watch?v=JUPY6LaUQCc
சென்ற மாதம் பிரதோஷம் தினத்தன்று yelahankaவில் உள்ள காயத்ரி , கணேஷா கோவிலிக்கு காஞ்சனா வந்திருந்தார் . அவரை ஒருவர் கையை பிடித்து கொண்டு அழைத்து வந்தார். ஒரு காலத்தில் ஆயிரம் ஆயிரமகா (அந்த காலத்தில்) சம்பாதித்தவர் , கோவிலில் பிரசாதம் வாங்கி கொண்டு சென்றார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கோவிலில் பிரசாதம் வாங்குவது தவறாக சொல்லவில்லை. தவறும் கிடையாது . ஒரு காலத்தில் பெரும் புகழுடன் வாழ்தவரை இந்த நிலையில் பார்க்கும் பொது நெஞ்சில் எதோ அடைத்து கொண்டது போல் இருந்தது.