http://i1065.photobucket.com/albums/...psj1w06bzh.jpg
Printable View
[QUOTE=SUNDARAJAN;1233481]https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...534fdb1e3690dd
நன்றி கெட்ட தமிழ் திரையுலகில் பிறந்த நடிப்பின் உச்சம் சிங்கத்தமிழன் சிவாஜி அவர்களுக்கு இறந்து 14 ஆண்டுகள் ஆகியும் மணிமண்டபம் அமைக்க துப்பில்லாத நடிகர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிவாஜியின் புகழ் ஒன்றே தன நோக்கம் என செயல் பட்டுக்கொண்டிருக்கும் திரு.சந்திரசேகர் அவர்களின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற்று இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் மணிமண்டபம் அமையட்டும் - அதற்கு இந்த உண்ணா விரதப்போரட்டம் ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்.
சிவாஜி ச்மூகநலப்பேரவையின் இந்த முயற்சி பெரு வெற்றி காணவும் உண்மையான சிவாஜி ரசிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துகொள்கிறேன்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...23a40da39857c5
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...23a40da39857c5
மாரிஸ் குருப் சிவாஜி முரட்டு பக்தர்கள் திருச்சி
தில்லைநகர் பாஸ்கர், புத்தூர் வேதகிரி ச்ன்ஜீவ்நகர் ராஜேந்திரன் முரளி வெங்கட்
வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி முதல்
நமது "கலை உலகின் சக்ரவர்த்தி",
"இந்திய திரை உலகின் முதல் உலக நாயகர்"
"நடிகர் திலகம்" சிவாஜி அவர்களின் அசால்டான நடிப்பில்
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில்,
நடிகையர் திலகம் சாவித்திரி, புன்னகை அரசி கே ஆர் விஜயா, லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், நடிகவேள் எம் ஆர் ராதா, சர்வமொழி குணசித்திர கதிரவன் எஸ் வீ ரங்கா ராவ் அவர்களின் நடிப்பில் 1964இல் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற
கை கொடுத்த தெய்வம் - புத்தம் புது சிங்கிள்டோன் கலர் பிரிண்டில்
- தினசரி 4 காட்சிகள் திருச்சி கெய்டி யில் திரையிடப்படவுள்ளது.
http://i1094.photobucket.com/albums/.../GEDC3910a.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC3913a-1.jpg
தணிக்கை 10.07.1964
வெளியீடு 18.06.1964
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
நடிகையர் திலகம் சாவித்திரி
எஸ்.எஸ். ராஜேந்திரன்,
கே.ஆர்.விஜயா,
எஸ்.வி.ரங்காராவ்,
எம்.ஆர்.ராதா,
வி.நாகையா,
எஸ்.வி.சஹஸ்ரநாமம்,
புஷ்பலதா,
புஷ்பவள்ளி,
ராதா பாய் மற்றும் பலர்.
கதை டி.எஸ்.மகாதேவன்
பாடல்கள் – மகாகவி பாரதியார், கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி
பின்னணி பாடியவர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜே.வி.ராகவலு
ஒளிப்பதிவு – எம்.கர்ணன்
ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி, டி.எஸ்.ராஜு
கலை – கங்கா
எடிட்டிங் ஆர்.தேவராஜ்
தயாரிப்பு – பொன்னி புரொடக்ஷன்ஸ் - எம்.எஸ்.வேலப்பன்
திரைக்கதை வசனம் இயக்கம் – கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
சென்னையில் வெளியான திரையரங்குகள்
மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம்
நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
சென்னை மிட்லண்ட் – 105 நாட்கள்
சென்னை பிரபாத் 100 நாட்கள்
சென்னை சரஸ்வதி – 100 நாட்கள்
சென்னை ராம் – 100 நாட்கள்
மதுரை சென்ட்ரல் – 108 நாட்கள்
கோவை கர்நாடிக் – 108 நாட்கள்
மற்றும்
சேலம்,
திருச்சி,
நாகர்கோவில்,
குடந்தை,
வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது
24 ஆம் தேதி கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்
நடிகர் திலகத்தின் மீது அதீத அன்பு கொண்டவர், காலப்போக்கில் அரசியல் இருவரையும் சிறிது காலம் சக நண்பர்களின் சூழ்ச்சியால் பிரித்துவைக்க...நடிகர் திலகம் கட்டபொம்மன் திரைப்படம் தயாரிக்க அதில் திரு எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களை வெள்ளையத்தேவன் பாத்திரத்தில் நடிக்க அழைக்க, எதற்கு இனியும் கணேசனுடன் சேர்ந்து நடிக்கவேண்டும், என்ற துர்போதனையில் அவரையும் தனது சொந்த படமான சிவகங்கை சீமையில் நடிக்கவைத்தார். வெள்ளையத்தேவன் கதாபாத்திரம் திரு ஜெமினி அவர்கள் நடிக்க மேலும் சிறப்பு பெற்றது கட்டபொம்மன்.
திரை விற்பன்னர்கள் திரு மெய்யப்ப செட்டியார் முதல் பலர் கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து சிவகங்கை சீமையை வெளியிட்டால் பெரிய வெற்றி பெரும் என்று அடித்து கூற....சுயநலம் கொண்ட, நடிகர் திலகம் மீது வெறுப்பு கொண்ட கயவர் கூட்டத்தின் துர்போதனையால் சிவகங்கை சீமை படத்தை கட்டபொம்மன் வந்த சில நாட்களில் வெளியிட்டு தனது கையை வெகுவாக சுட்டுக்கொண்டார்,...
தனது வெளிவராத ஒரு புத்தகத்தில் நடிகர் திலகம் திரைப்படங்கள் மூலம் தனக்கு தொடர்ந்து அதிகமாக பாடெழுதும் வாய்ப்பு வந்ததை பற்றி மறைமுகமாக கோடிட்டு காட்டி இருந்தார் கவிஞர் கண்ணதாசன்.
இவர் கடைசியாக எழுதி வெளிவந்து சுபெர்ஹிட் பாடல் கண்ணே கலைமானே என்ற பாடல்.
திரை உலகிலும் மக்களாலும் இப்படி ஒரு சொல் இப்பொழுதும் நிலவையில் உள்ளது
பாடல் என்றால் அது ....
கண்ணதாசன் எழுதவேண்டும்
விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும்
சுந்தரராஜன் பாடவேண்டும்
சிவாஜி கணேசன் நடிக்கவேண்டும் .....!!!!
எத்துனை சத்தியமான வார்த்தைகள் !!
https://www.youtube.com/watch?v=Wt6A8uxdZD0
https://www.youtube.com/watch?v=H7xl...Q&spfreload=10
Rks
நம் இதயதெய்வம் நடிகர்திலகத்தின படிககாதமேதை திரைப்படத்தை பற்றி திரு கோபால் அவர்களும் எனது நண்பர் திரு.முரளி அவர்களும் அழகாக மிக நேர்த்தியாக விமர்சித்ததை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு எனது நன்றிகள்.
திரு கோபால் அவர்கள்
ரங்கனை பாண்டுரங்கனுக்கு மேல் என்று எழுதி இருந்தார்..என்னோட கருத்தும் அது தான். நான் அந்த படத்தை பற்றி
எனது நண்பர்களிடமோ அல்லது யாரிடமோ பகிர்ந்து கொள்ளும் போதுநான சொல்லும் வார்த்தைகள் .1.கடவுளே இறங்கிவந்தால் கூட நடிக்க இதுபோல் நடிக்கமுடியாது.2.இந்தபடத்தை முழுவதும் பார்த்துவிட்டு நடிகர்திலகத்தை தவிர வேறு யாருக்கும் இரசிகராக இருப்பது மிக கடினம்.அப்படிஒரு படம்.இந்த மாதிரி ஒரு படத்தை கொடு த ததிற்கு நாம் இதன் மூல கர்த்தர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.
கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.
அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.
1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.
2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)
3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)
4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.
5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )
கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.
http://msvtimes.com/images/rare/msv7.JPG
மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பாளர்களாக பணிபுரியத் தொடங்கியதும்
நடிகர் திலகத்தின் திரைப்படம் - பணம்
மெல்லிசை மன்னரும் கவியரசரும் முதன் முதலில் இசையமைப்பாளர் பாடலாசிரியராக இணைந்து பணிபுரியத் தொடங்கியதும்
நடிகர் திலகத்தின் திரைப்படம் - பணம்.
http://i1087.photobucket.com/albums/...355/Panam1.jpg
ஆம் .. பணம் இவர்களை இறுதி வரை பிரிக்க வில்லை..
ஆனால்.. அந்த பணம் எத்தனை எத்தனை தத்துவங்களை இவர்கள் மூலம் கொண்டு வந்தது..
அண்ணன் என்னடா தம்பி என்னடா..
பணம் என்னடா பணம் என்னடா..
என ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை நமக்களித்த இவர்களின் பிறந்த நாள்.. தமிழ் சினிமாவுக்கு சிறந்த நாள்..
முகநூலில் ஒரு நண்பர் கூறியது போல்..
இந்நாளை மெல்லிசை நாளாக அழைப்போமே..
இவர்களை இணைத்த பணம் திரைப்படத்தின் பாடல் வரிகளைப் பாருங்கள்..
படத்தின் பெயர் பணமாக இருந்தாலும் இவர்கள் நாடியது ஏழையின் கோவிலை அன்றோ..
ஜி.கே.வெங்கடேஷைத் தமிழ்ப்பட உலகில் பாடகராக அறிமுகப்படுத்தியதும் இந்தப் பணம் தானன்றோ..
http://www.inbaminge.com/t/p/Panam/
இன்று கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 89-வது பிறந்தநாள்
http://i1234.photobucket.com/albums/...ps650fe1e4.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2f8ed75c.jpg
http://i1234.photobucket.com/albums/...psb10e6419.jpg
http://i501.photobucket.com/albums/e...pscbcbhm1g.jpg
QUESTION and ANSWER THAT CAME IN DINAKARAN - COURTESY - Mr. ANNADURAI - TRICHY DISTRICT ALL INDIA SIVAJI FANS ASSOCIATION
http://i501.photobucket.com/albums/e...psvyw3unv1.png
DECCAN CHRONICLE writes .....!
காந்தப் புயல் கரை ஒதுக்கிய கவர்ச்சிக் குண்டூ(ஸ்)சிகள் !
புயல் 1 பராசக்தி (1952)
குண்டூசி 1 அந்தக் கால கட்டத்தில் கவர்ச்சி நடனப் புயல் குமாரி கமலா
நாம் ரசிக்கும் நடிப்புக் கோமான் குமாரி கமலாவின் கட்டழகு நடனத்தை ரசிக்கும் சீமானாக !::shhh:Quote:
நடிகர்திலகம் ஒரு புயலாக நுழைந்து தமிழ்த் திரையுலகையே தனது அதிரடி நடிப்பால் புரட்டிப் போட்டார் பராசக்தி மூலமாக! அன்றிலிருந்து இன்றுவரை என்றுமே வடக்கு நோக்கி எந்திரமான பூமிப்பந்தின் வடதிசை காட்டும் காந்த முள் (MAGNETIC NEEDLE of the Compass) நடிகர்திலகம் மட்டுமே! பூமியில் அனைத்து கோணங்களும் வடதிசையை ஆதாரமாகக் கொண்டே கணக்கிடப் படுகின்றன அவ்வாறே உலகின் எந்தவொரு நடிகனின் நடிப்புக் கோணத்துக்கும் அடிப்படை அளவு கோல் நடிகர்திலகத்தின் நடிப்பம்சங்களே !!!ஆனால்.....அந்தப் படத்திலேயே அவரது கதாபாத்திரத்தை துளியும் ஆபாசமற்ற நடன அங்க அசைவுகள் மூலம் கவர்ச்சிக் குண்டூசியாகத் துளைத்தார் குமாரி கமலா!! காந்தப்புயல் குண்டூசியை நோக்கி நகர்ந்த அதிசயம் ஒரு கமர்ஷியல் உள்ளடக்கமே !!
https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog
Electro-magnetic Cyclone NT comes back and rocks again!!
Quote:
ஒரு புயல் கரையைக் கடந்தாலும் அடுத்த புயல் என்பது இயற்கையில் சாத்தியமான நிகழ்வே !!
பராசக்தி காந்தப் புயலாக கவர்ச்சிக் குண்டூசி குமாரி கமலாவை ஈர்த்து கரை ஒதுக்கியது.
உத்தம புத்திரனோ அடுத்த மின்காந்தப் புயலாக உருமாறி ஹெலன் என்ற நடன (க)இரும்பை ஈர்த்தார் 1958ல்
காந்தப் புயல் கரை ஒதுக்கிய கவர்ச்சிக் குண்டூ(ஸ்)சிகள் !
புயல் 2 உத்தமபுத்திரன் (1958)
குண்டூசி 2 கவர்ச்சித் தாரகை ஹெலன்
Quote:
உத்தமபுத்திரன் திரைப்படம் பராசக்தியின் காந்தப் புயலை மின்காந்தப் புயலாக பரிணாம மாற்றம் செய்தது விக்கிரமன் பாத்திரப் படைப்பின் வாயிலாக!
மக்களை மறந்து தன்னிலை இழந்து சூழ்ச்சிக்கு அடிமையாகி சூழ்நிலைக் கைதியாக மது மயக்கத்தில் கவர்ச்சி மங்கையருடன் நடிகர்திலகத்தின் ஸ்டைலான தள்ளாட்டம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ஒரு காட்சியமைப்பே ! இந்த மின்காந்தத்தின் ஸ்டைலே பின்னாளில் வேறு காந்தங்கள் ஸ்டைல் காட்டிட அடிப்படைப் பாடமாக அமைந்தது திரை வரலாறு !!
யாரடி நீ மோகினி வாயிலாக கவர்ச்சித் தாரகை ஹெலன் ஒரு குண்டூசியாக நமது ஸ்டைல் காந்தத்தை நோக்கி இழுக்கப் பட்டார் ..
https://www.youtube.com/watch?v=0RLXatsOS5I
படிக்காத மேதை - 55 [தொடர்ச்சி]
இந்தப் படத்தைப் பற்றி இனியும் என்ன சொல்வது? நான் ஒரே முறை படத்தின் சிறப்புகளை எழுதினேன். பிரபுராம் அழகாக சில விஷயங்களை தொடுத்திருந்தார். ரவி ஸ்ரீரங்கத்து ரங்கனை கொஞ்சும் பாணியில் பங்களிப்பு செய்திருந்தார். கோபாலோ கேட்கவே வேண்டாம். அப்படி இருக்க இனியும் எழுத விஷயம் இருக்கிறதா என்று கேட்டால் நிறைய இருக்கிறது என்பதே பதிலாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஞாயிறு மாலை ரசிக நெஞ்சங்களோடு பார்த்த பிறகு.
எனக்கு எப்போதும் நமது ரசிகர்களைப் பற்றி ஒரு பெருமிதம் உண்டு. நடிகர் திலகம் எத்தனை நுணுக்கங்களை தன் நடிப்பில் கொண்டு வந்தாலும் அதை மிக சரியாக இனங்கண்டு தங்கள் ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்துவார்கள். அதில் உயர்நிலை ரசிகன், கடைநிலை ரசிகன் என்ற பாகுபாடே கிடையாது.
அதில் மற்றொரு வியப்புக்குரிய விஷயம் சோகத்தை கூட எந்தளவிற்கு இவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னும் அந்த பெருமிதம் கூடும். இப்படிபட்ட ரசிப்புத்தன்மையை அந்த கடைகோடி ரசிகனுக்கும் சென்று சேர்த்திருக்கிறார் என நினைக்கும்போது நடிகர் திலகம் மனதுக்கு இன்னும் பிரியப்பட்டவராகிறார்.
படிக்காத மேதை படமெல்லாம் எப்படி என்றால் திருஷ்டி பூசணிக்காய் முகத்தை மறைக்க எடுத்து வரும் நடிகர் திலகம் அறிமுகமாகும் முதல் காட்சியில் ஆரம்பித்து இறுதியில் ஒரே ஒரு ஊரில் பாடல் ஒலிக்க [படத்தின் நடுவில் இடம் பெறுவதிலிருந்து காட்சியமைப்பு மாறுபட்டு] a film from Bala movies Krishnaswamy என்று படம் முடிவைடையும்வரை ஒவ்வொரு காட்சியும் ரசித்து சுவைத்து அனுபவிக்கப்படும் படம். அன்றும் அப்படிதான் நடந்தது. முழு காட்சிகளையும் எழுத முடியாது என்பதனால் முக்கியமான காட்சிகள் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக இரண்டு மூன்று காட்சிகள்.
ரங்காராவ் நடிகர் திலகத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் காட்சி. மாமா தன்னிடம் சீரியசாக பேசுகிறார் என்பதே புரியாமல் பதில் சொல்லுவது, அவரிடம் தன நிலைமையை எடுத்துச் சொல்வது, அதனால் மிகுந்த கோவத்துடன் ரங்காராவ் அவரிடம் கேள்விகள் கேட்க அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்வது, [உன் உடம்பிலே நல்ல ரத்தம் ஓடலே? ஓடுது], இறுதியாக வேலைக்கு போய் உன் மனைவியை வச்சு காப்பாத்த முடியாது என்று கேட்க முடியாது என்று அதே தொனியில் பதில் சொல்லிவிட்டு முடியாது மாமா என்று என்று பாவமாக அப்பாவியாக பதில் சொல்லும்போது அரங்கமே ஆர்ப்பரித்தது. தான் படிக்காதவன் வெளியில் போனால் வேலை கிடைக்குமா பணத்திற்கு எங்கே போவது? மனைவியை எப்படி காப்பாற்றுவது? இதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல் மாமா பேசுகிறாரே என்ற அந்த தவிப்பை கவலையை அந்த ரங்கன் பாத்திரத்தின் மனநிலை வழியாக நடிகர் திலகம் வெளிப்படுத்தும் அழகு அற்புதம் என்றால் அதை புரிந்து அதற்கான அங்கீகாரத்தை தன கைதட்டல் மூலம் வெளிப்படுத்திய அந்த ரசிகர்களுக்கும் ஆஹா!
அதன் தொடர்ச்சியாக கண்ணாம்பாவிடம் போய் புலம்பும் காட்சியும் ஓஹோ ரகம். "ஓஹோ உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா? வெளியே போனா எனக்கு என்ன வேலை கிடைக்கும்? உன் பையன்களை மாதிரி என்னை BA, MA படிக்க வச்சியா? முட்டா பயலாத்தானே வளர்த்தே! இப்போ தீடீர்னு வெளியே போன்னு சொன்னா எப்படி?" என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுவாரே அதுவும் பிரமாதமாக வரவேற்கப்பட்டது. . .
சாமான்களையெல்லாம் கட்டிக் கொண்டு புறப்படும்போது தான் பயன்படுத்திய தபலாக்களை எடுத்துக் கொண்டு போக முற்பட அதை தடுத்து அசோகன், நடிகர் திலகம் கையிலிருந்து பிடுங்க முற்பட அப்போது அங்கே வரும் கண்ணாம்பாவிடம் புகார் கூறும் நடிகர் திலகத்திடம் தபலாவை திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு " இந்த தபலாவுக்கு போய் சண்டை போடறியே விலை மதிப்பில்லாத உன் அன்பையும் பாசத்தையும் இந்த வீட்டை விட்டு எடுத்துட்டு போறியே அதுக்கு நாங்க யார்கிட்டடா கேட்கிறது?" என்ற வசனத்திற்கும் செம அப்ளாஸ்.
வீட்டை விட்டு வெளியே குதிரை வண்டியில் வரும் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் நிறுத்தும் ரங்காராவை பார்த்தவுடன் வந்டிளிருந்து இறங்கி முதுகு காட்டி நிற்கும் நடிகர் திலகம், சௌகாரிடம் பேசிவிட்டு தன்னுடன் பேச வரும் ரங்காராவை திரும்பி பார்க்காமல் முதுகு காட்டியே நின்று விட்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து போய் காலை பிடித்துக் கொண்டு அழுவாரே, அதுவும் அள்ளியது அப்ளாஸ்.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது ரங்காராவ் மறைந்த பிறகு அது தெரியாமல் நடிகர் திலகம் வீட்டிற்கு வரும் காட்சி. ஞாயிறன்று படம் பார்த்த பிறகு மறுநாள் மாலை நண்பர் சாரதியோடு பேசினேன். அவரை முதல் நாள் பார்க்கவில்லை என்பதால் படத்திற்கு வந்திருந்தீர்களா? என்று கேட்டேன். வந்தேன். லேட்டாக வந்தேன். மேலே குறிப்பிட்ட காட்சியை பார்க்க வேண்டும் என்று காத்திருந்து அது முடிந்தவுடன் கிளம்பி போனேன். வேலையிருந்தது. இருந்தாலும் இதை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக வந்தேன்.என்று சொன்னவர் அந்த காட்சியை எடுத்துச் சொல்லி அதை மீண்டும் என் மனக்கண் முன் ஓட விட்டார். அவர் அதை பற்றி பேசும்போது சட்டென்று வேறு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.
அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர் அதிகாரி ஒருவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். அவர் சொன்னது என்னவென்றால் மனிதனின் மனநிலை தனக்கு பிடிக்காத தான் விரும்பாத ஒன்றை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. அந்த உண்மையை எதிர்கிறது. பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இது மனோததுவத்தின் அடிப்படையில் கண்டறிந்த உண்மை என்றார். ஆங்கிலத்தில் இதை Deny, Resist, Accept mode என்று கூறுவார்கள் என்று சொன்னார். இதை உங்களுக்கோ மற்றவர்களுக்கோ நடந்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். அந்த நேரத்தில் எதுவும் தோன்றவில்லை. படிக்காத மேதை படம் ஞாயிறன்று பார்த்த பிறகு, மறுநாள் நண்பர் சாரதியோடு பேசியபோது அலுவலக அதிகாரி சொன்னதை 55 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் காட்சி வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருந்தது.
வீட்டிற்கு வருகிறார். ரங்காராவின் படம் மாலையிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நேரம் அவர் முகபாவம் காண்பிக்கப்படுகிறது. இல்லை இது உண்மையில்லை என்ற denial முகபாவம் காண்பிக்கிறார். முகம் மாறுகிறது உண்மைதானா என்று ஒரு சிந்தை தெரிகிறது. அப்படி கிடையாது என்ற resistance நிலை. வலது பக்கம் திரும்புகிறார். அங்கே பொட்டிழந்து அமர்ந்திருக்கும் கண்ணாம்பாவை பார்க்கிறார். இப்போது உண்மை பொட்டில் அறைகிறது. Acceptance mode-ற்கு வருகிறார். அந்த உண்மையை தாங்க முடியாமல் அப்படியே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கதறுவார். அரங்கமே அதிர்ந்து போனது. இங்கே என்ன அற்புதம் என்றால் இந்த மறுப்பு, எதிர்ப்பு, ஒப்புதல் என்ற மூன்று நிலையையும் நிமிட நேரத்தில் முகத்தில் கொண்டு வருவார். அதை பார்வையாளனுக்கும் கடத்துவார்.
நடிகர் திலகம் பங்கு பெறும் பாடல் காட்சிகளும் அன்று மிகுந்த வரவேற்பை பெற்றது. சீவி முடித்து சிங்காரித்து பாடல் காட்சி. திருமணம் நிச்சயமாகியிருக்கும் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 70-களின் மத்தி வரை கேரக்டர்ஐ மீறி நடிகர் திலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். படிக்காத மேதையிலும் அப்படியே. படிக்காத முரட்டுதனமான ரங்கன் எப்படி நடந்துக் கொள்வானோ அப்படிதான் எல்லா காட்சிகளிலும் வருவார், ரங்கன் போன்ற குணாதிசயம் கொண்ட ஒருவன் கிண்டல் செய்து பாடினால் எப்படி இருக்குமோ அப்படியே செய்வார்.
ஒரே ஒரு ஊரிலே பாடல் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாடல் ஆரம்பிக்கும்போது அவர் பாடும் மூடிலேயே இருக்க மாட்டார். குழந்தைகளை விளையாடுவதற்கு கூட்டிக் கொண்டு போவார். சௌகார் பாட ஆரம்பிக்கும்போது குழந்தை டெய்ஸி ராணியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். சௌகார் இரண்டு வரி பாடியதும் உடனே அவருக்கும் பாட தோன்ற இடது கையை மேலே உயர்த்தி சௌகாரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரேயொரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை.என்று பாட ஆரம்பிப்பார். செயற்கையான பாடல் காட்சியில் கூட எப்படி லாஜிக்கான gestures செய்திருக்கிறார் என்று யோசிக்கும்போதுதான் அவரின் மேதமை புரிகிறது.
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் என பாடும்போது முகத்தில் ஒரு பாவம். அதே போல் சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை என்ற வரியில் சோபாவில் உட்கார்ந்திருப்பார் அவர் முகத்தில் ஒரு சாந்தம் தென்படும். அதே சரணத்தில் இறுதி வரி பாடும்போது [நாய்கள் மேலடா] முகம் மாறி கோவம் கொப்புளிக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு ஆணை உடைந்து பாய்வது போல் பாய்ந்தது.
இறுதியாக எங்கிருந்தோ வந்தான் பாடல். கிருஷ்ண பரமாத்மாவாக நடிகர் திலகம். 5,6 ஷாட்கள்தான். அதற்குள்ளாகவே கண்ணனின் குறும்புத்தனம், குழந்தைகளோடு விளையாட்டு, வேணுகானமிசைத்தல், ஆலோசனை கூறுதல், பகவத்கீதையை உபதேசித்தல், இறுதியில் விஸ்வரூபம் காட்சி அருளால் என்று அதகளம் பண்ணியிருப்பார்
அந்த பாடலின் பல்லவியில் வரும் வரிகள்தான் நடிகர் திலகத்திற்கு என்னமாய் பொருந்துகிறது!
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்! .
உண்மைதானே! அந்த ஒப்புயர்வற்ற கலைஞனை கலைத்தாயின் தவப்புதல்வனை பெற நாம் தவம்தான் செய்திருக்க வேண்டும்!
அன்புடன்
சின்ன பதிவு என்று சொல்லி (வழக்கம் போல்) பெரிய பதிவாகி விட்டது. படித்த அனைவருக்கும் நன்றி! .
டியர் முரளி சார்,
படிக்காத மேதை படத்தின் சிறப்புக் காட்சியினைப் பற்றிய உங்கள் தொகுப்பு நேரில் பார்க்க முடியாத குறையை போக்கும் வண்ணம் சிறப்பாக இருந்தது.
இரண்டாவது பாகம் படத்தின் சிறப்பான கட்டங்களைப் பற்றிய ஆய்வாகவும், அதனை ரசிகர்கள் எப்படி ரசித்தார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
சந்திரசேகர் அவர்கள் சொன்னதுபோல பல நல்ல படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன என்பதையும், இருக்கின்ற சிலவும் சிதைந்த நிலையில் உள்ளன என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிவகாமியின் செல்வன் நெகட்டிவ் ரோல்கள் அதன் தயாரிப்பாளர்கள் ஜெயந்தி பிலிம்ஸ் வசமே இல்லைஎன்று அவர்களே சொன்னதாக முன்னொருமுறை சொல்லியிருந்தீர்கள். 70-களில் வந்த படங்களுக்கே இந்த கதியென்றால், 50 மற்றும் 60 களில் வந்த படங்களின் கதி?.
நிச்சயதாம்பூலம் படத்தின் நெகடிவோ அல்லது பாஸிட்டிவ் பிரின்ட்களோ யாரிடமும் இல்லைஎன்கிறார்கள். இது உண்மையா என்று தெரியவில்லை.
இருக்கின்ற சிலவற்றையும் காப்பாற்றும் வண்ணம் அவைகளை பத்திரப்படுத்த வேண்டும். இதற்கு சிவாஜி மன்றத்தலைவர் ராம்குமார் அவர்கள் சம்மந்தப் பட்டவர்களை அணுகி ஆவண செய்யவேண்டும.
நேற்று முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகம் அவர்களின் உயர்ந்த நடிப்பில் வெளிவந்து நல்லதொரு வெற்றிகண்ட "வா கண்ணா வா" ஒளிபரப்பப்பட்டது.
சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த பாடல், சிறந்த இயக்கம் - வா கண்ணா வா - பிருந்தாவனம் !
http://i501.photobucket.com/albums/e...pskmnpg6bu.jpg
http://i501.photobucket.com/albums/e...psygkknihe.jpg
https://www.youtube.com/watch?v=sX5mVzhSv9k
முதல் வரிவிலக்கு வ உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பிஆர் பந்துலு இயக்கிய கப்பலோட்டிய தமிழன்தான் முதல் முதலில் வரிவிலக்கு பெற்ற படம். சிவாஜி கணேசன் வஉசியாகவே வாழ்ந்த இந்தப் படம் 1961-ல் வெளியானது.
வீரபாண்டிய கட்டபொம்மன் எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடிப்பு மற்றும் இசைக்காக இரு விருதுகளை வென்றது. அந்த விருதினைப் பெற நடிகர் சிவாஜி கணேசன் கெய்ரோவுக்குச் சென்றார். அவருக்கு எகிப்தின் அதிபர் நாசர் விருது வழங்கி சிறப்பித்தார். ஆண்டு: 1960.
courtesy one india tamil
COMPILED CHENNAI RELEASE INFORMATION NOTICE - PAMMALAAR & MR. VIJAYAN
http://i501.photobucket.com/albums/e...ps4f1nq4vw.jpg