-
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.
எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்
"அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
"கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."
- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.
மதுரை வீரன் படத்தில் ,
"கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த மதுரை வீரா..."
- என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.
அதே படத்தில் இன்னொரு பாடல்.
" செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
சிங்காரத் தாய்மொழியை பாராயோ"
- என்று சொல்வார்
எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று
பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.
courtesy - thinnai
-
இன்று முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
அன்பே வா
-
மெல்லிசை மன்னரின் இசையில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .
1.கலங்கரை விளக்கம் .-1965
https://youtu.be/XAP-HMb7k6k
எல்லா பாடல்களும் இனிமை . குறிப்பாக காற்று வாங் போனேன் மற்றும் பொன்னெழில் பூத்தது புது வானில் பாடல்கள் தேன் அமுதம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி பொருத்தமான ஜோடி.படத்தில் ரீ -ரெக்கார்டிங் மிகவும் அருமை .
2.அன்பே வா -1966
https://youtu.be/pToidIgJUsE
மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் காதல் காட்சி பாடல்கள் 50 ஆண்டுகள் கடந்த பின்னரும்
இன்றும் ரசிக்கும் படி உள்ளது .மக்கள் திலகத்தின் பேரழகு இந்த படத்தின் ப்ளஸ் பாய்ண்ட்.
3.நான் ஆணையிட்டால் .-1966
https://youtu.be/MgJPv59KO94
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் தாய் மேல் ஆணை பாடலை என்றுமே மறக்க முடியாது .
4..நாடோடி -1966
https://youtu.be/XObyqQ50I1c
உலகமெங்கும் ஒரே மொழி
அன்றொரு நாள் ..
திரும்பி வா ஒளியே
நாடு அதை நாடு ....
கடவுள் தந்த படம்
மெல்லிசை மன்னரின் இசையில் , பாடகர் திலகம் - சுசீலா குரல்களில் மக்கள் திலகம் - சரோஜாதேவி நடிப்பு காட்சிகள் நெஞ்சை விட்டு அகலாது .
5. சந்திரோதயம்- 1966.
https://youtu.be/3mhVfns1W-Y
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - இளமை பொங்கும் ஜெயா இருவரும் இணைந்து பாடிய
எங்கிருந்தோ ஆசைகள்
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ ..
இந்த இரண்டு பாடல்களும் என்றென்றும் இனிமையை தரும் காதல் பாடல்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பேரழகை நாள்மு ழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் .
தொடரும் ..
-
-
http://i63.tinypic.com/2mmh7vp.jpg
பிரமிக்க தக்க வகையில் 14000 பதிவுகள் எனும் சிகரத்தை கடந்து பயணிக்கும் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் உன்னதமானவை. போற்றத்தக்கவை. நிலையானவை . மதிக்கத் தக்கவை. சாதனை மிக்கவை.
இதயங்கனிந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் சீரிய , மேலான பதிவுகள்.
புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
http://i63.tinypic.com/2mmh7vp.jpg
பிரமிக்க தக்க வகையில் 14000 பதிவுகள் எனும் சிகரத்தை கடந்து பயணிக்கும் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் உன்னதமானவை. போற்றத்தக்கவை. நிலையானவை . மதிக்கத் தக்கவை. சாதனை மிக்கவை.
இதயங்கனிந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் சீரிய , மேலான பதிவுகள்.
புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
wow congrats VINOTH
-
Congratulations Vinod on completing 14000 posts in this mayyam forum.
-
-
-