hmm I can think of one more song..
"devanE ennai paarungaL......"
"nadaiya ithu nadaiya"
Printable View
hmm I can think of one more song..
"devanE ennai paarungaL......"
"nadaiya ithu nadaiya"
சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி)
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
(சட்டி)
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
(சட்டி)
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
(சட்டி)
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை எனைக் காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே
(பொன்னை)
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே (2)
தாய்மை எனக்கே தந்தவர் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே
(பொன்னை)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே
(பொன்னை)
ஆல மரத்தின் விழுதினைப் போலே அனைத்து நீயும் உறவு தந்தாயே (2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே
(பொன்னை)
:clap:
great post. thanks joe.
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு
(யார்)
மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ
(யார்)
ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ...ஓ...ஓஹோஹோஹொஹோ...
(யார்)
Source: http://mysite.verizon.net/vze2my9a/t...e/tfsa_tam.htm
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)
(பூ மாலையில்)
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
(பூ மாலையில்)
Ultimate song from Paava mannipu
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
காலம் ஒருனாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
Song of the century from Paava Mannippu
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)
நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
(வந்த நாள்)
பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
(வந்த நாள்)
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ம் ஹ்ம் ம் ஹ்ம்
(வந்த நாள்)
Dear Mr. MoharamanQuote:
Originally Posted by mohanraman
Thanks for this... Annaaal neenga indha maadhiri vaarathukku oru murai vandhu sixer adikaadheenga :o
Pls make it a point to visit this thread regularly and share with us all about your association with Nadigar Thilagam
Anbudan