https://www.youtube.com/watch?v=LsnTGLw9IGE
Printable View
Gopal Sir. Mostly well educated and scholarly people interact in our prestigious NT threads, as one can sense from their way of writing. Mere number of posts thus far, may not be a comparative measure. I, from my observations, always consider you as a stalwart on account of your hard work and presentation capabilities which has helped this thread grow to this level. Ramadoss sir too, I presume he is a retired teacher, is no less a stalwart as we can sense from his way of writings as an offshoot of his rich teaching experience. For me you two can be plus into plus plus rather than minus into minus plus! For the welfare of this thread....kindly avoid warfare between you two!
பாவ மன்னிப்பு
மிகவும் அழகாக , ஆழமாக பழைய திரிகளிலும் , இந்த திரியினிலும் அலசப்பட்ட படம் - படம் என்று சொல்வதை விட , பாடம் என்று சொல்லலாம் - "ஒரு பாடல் ஒரு லக்க்ஷம் " என்று சமீபத்தில் முரளி இந்த படத்தில் வரும் ஒரு பாடலையே ஒரு படமாக மாற்றி அருமையாக எடுத்து சொன்னார் - ராகுலின் பதிவுகளும் சுவையை அதிகபடுத்தின .
மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை இருப்பது எவ்வளவு அற்புதமாக இருகின்றது பார்த்தீர்களா ? - இந்த வார்த்தை இருப்பதால் பல நட்புக்கள் இன்னும் குழி தோண்டி புதைக்கபடாமல் உள்ளன -- பலகசப்பான அனுபவங்கள் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையின் மூலம் மறைந்து போகின்றன கால போக்கில் -----
இந்த படமும் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இன்னும் எவ்வளவு மரியாதை இருக்கின்றதோ அந்த அளவிற்கு தரத்திலும் , கதையின் வலுவிலும் , நடிப்பின் உச்ச கட்டத்திலும் இன்னும் பரவலாக பேசப்படும் படம் - தரமான படம் என்றால் என்ன என்று முதல் தடவையாக எழுப்பப்பட்ட கேள்விக்கு "இதோ நான் தான்" என்று பதில் கொடுத்த படம் - இதன் முன்போ , அதற்கு பின்போ இப்படி பட்ட தரமான படம் ஒன்று வந்ததா / வருமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இதுவரை இல்லை என்ற பதில் தான் உயர்ந்து நிற்கின்றது
ரஹீம் - இப்படி பட்ட ஒரு மனிதனை உலகம் சந்தித்ததே இல்லை - என்ன கருணை உள்ளம் ? ஈகோ விற்கு ஒரு சவாலாக இருந்தவன் - என்றுமே வார்த்தைகளில் , செயல்களில் ஒரு பணிவும் , அன்பும் இருக்கும் - இவனால் வெறுக்கப்பட்டவர்கள் யாருமே இல்லை - அதனால் இவனை வெறுத்தவர்களும் யாரும் இல்லை . இந்த படம் வந்த பின் ஒவ்வொரு முஸ்லீம் தோழர்களும் தன் சட்டை காலரை மேலே உயர்த்தி கொண்டு , இந்து நண்பர் தோள்களில் கைகளை போட்டு கொண்டு ஒன்றாக சேர்ந்து கிறிஸ்டியன் நடத்தும் ஹோட்டலில் சென்று உணவு உண்டார்கள் , பிறகு ஒரே குரலில் நம்மை "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று பாடி மகிழ்ந்தனர்
உள்ளங்கள் அன்புடன் இருந்தால் ஒரு மதம் தேவை இல்லை - தனிப்பட்ட வழிபாடுகள் தேவை இல்லை , honour killing என்பது அகராதியிலே இருக்காது -
தந்தை என்று தெரியாமல் போராடுவதிலாகட்டும் , தாய் யார் என்று தெரியாமல் பாசத்திற்கு ஏங்குவதிலாகட்டும் , காதலில் ஒரு மென்மையை தேடுவதிலாகட்டும் , அண்ணனிடம் அடி வாங்கிய பின் , அவனிடம் கருணையை பொழிவதிலாகட்டும் , குடிசை மக்களுக்காக தன்னையே தருவதிலாகட்டும் , ரஹீமின் தாக்கம் இன்னும் நம்மை பயித்தியமாக ஆக்குகிறதே ---
படத்தை ரசிக்கும் நாம் உண்மையான பாடத்தை கற்று கொள்ள மறந்து விடுகிறோம் - படத்தில் கைகொட்டும் நாம் உண்மை வாழ்க்கையில் இரு கரங்களையும் பின்பக்கம் சேர்த்து கட்டிகொள்கிறோம்.
மத சண்டை , இன சண்டை , மொழி சண்டை , இன்னும் எத்தனையோ நடக்கும் இந்த நாட்டில் ரஹீம் போன்றவர்கள் மிகவும் தேவை - என்றோ வந்த படம் - இன்றும் நமக்கு படிப்பினையை கொடுக்கின்றது என்றால் , நாம் இதுவரை என்ன கற்று கொண்டோம் என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது - NT யின் படங்கள் சாகா வரம் பெற்றவைகள் - அந்த வரிசைகளில் பாவ மன்னிப்பு என்றுமே முதலிடம் பெரும் - யார் வேண்டுமானலும் இந்த படத்தை அலசலாம் ,எவ்வளவு தடவை வேண்டுமானாலும் இந்த படத்தை பற்றி எழுதலாம் - முடிவில் கிடைப்பது ஒரு மன அமைதி - ஒற்றுமை , சகோதர உணர்வு , ஈகோ எல்லாத ஒரு வாழ்வு - இந்த படம் வெளி வந்தபின் தான் தமிழ் அகராதியில் "தரம் " என்ற வார்த்தை சேர்க்கபட்டதாம் !!
dear RKS. You are a stalwart in uploading songs to the situations! Paragraphs I write won't have the impact of what you have done!! I admire your quick wit and your penchant in maintaining your equilibrium even in pathos situations like this. you are the fiddle Nero.. sorry ... Fidel Hero!
dear ravi. your presentation on 'Paava Mannippu' oru thelindha neerodai. Ippadaththin tharam nirandharam.
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -2
நெஞ்சிருக்கும் வரை
ரகுராமன் : ரஹீம் உடைய மறு அவதாரம் - ஏழ்மையை ஆடையாக உடுத்தி , தன் மானத்தை தன் உயிரினும் மேலாக மதித்து , வயிரை என்றுமே ஈரமாக வைத்துக்கொண்டு , கிடைப்பது தண்ணீர் என்றாலும் அதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு , பிறர் நலத்தையே என்றும் நாடும் ஒரு விசித்திரமான பாத்திரம்
தாழ்வு மனப்பான்மை என்பது இவனது விரோதி - கவலை என்பது இவன் அறியாத ஒரு வார்த்தை - ஏழ்மையாக இருந்தாலும் , சந்தோஷம் இவன் வீடு தேடி வந்து இவனிடம் சற்றே உரை யாடிவிட்டு செல்லும் . நண்பனுக்காக வாழ்ந்தான் - தான் காதலித்த பெண் தன்னை விரும்பவில்லை என்று அறிந்து அவளை பழிவாங்கவில்லை - அவளுக்கு அவள் விரும்பிய காதலனை கட்டிவைக்க பாடு பட்டான் - எவ்வளவு அவமதிப்புக்கள் - அவன் நடக்கும் பாதை எங்கும் விதி கொடிய முள்களை தூவியது - அவனுடைய தியாகத்தை உலகம் உணரவில்லை - உற்ற நண்பன் அவனை வெறுத்தான் - என்றாவது தன் முயற்ச்சியை விட்டு கொடுத்தானா? - சிரித்த முகத்துடன் தோல்விகளையும் , வேதனைகளையும் ஏற்று கொண்டான் - முடிவில் தன் உயிரை தன் நண்பனுக்கு காணிக்கையாக்கி தியாகம் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தான் -
" சில நாள் தானே சுமைகள் குறைய " என்று சொன்னவன் ஒரு காவியமாகி நெஞ்சிருக்கும் வரை வாழ்ந்து கொண்டிருப்பான் - நட்பில் உண்மை வேண்டும் - வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் ; வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் - உபத்திரமாக இருக்க கூடாது - ரகுராமன் வாழ்ந்து கட்டினனான் , நாம் கடை பிடிக்க ------
தொடரும்
வாங்க வாங்க சிக்கலாரே (மனோரமா பாணியில்) ரவி .. குட்.. ரஹீமும் ரகுராமனும் பற்றிய பதிவு நன்னாயிட்டு இருக்கு..அடுத்து ஆண்ட்டனியா..
எனக்கு இரண்டு வருத்தங்கள்.. 1. நான் ரஹீம் பற்றி எழுத நினைத்து நினைத்து இருந்த போது ரவி ராகுல் எழுதிவிட்டது (இருந்தாலும் எழுதிப் பார்ப்பேன்) 2. என்னுடைய சில ஆயிரங்கள் மேற்பட்ட போஸ்டைப் பற்றி என்னுடைய மனசாட்சி கூட என்னைப் பாராட்டலை (சேச்சே.. நீ எவ்வளவு ஹார்ட்லி வொர்க்கிங்க்னு எனக்குத் தெரியும்ப்பா.. -- மன்ச்சு அது ஹார்ட்லி வொர்க்கிங்க் இல்லை ஹார்ட் வொர்க் :) )
நன்றி Dr செந்தில் & CK - ரஹீம் , ரகுராமிடம் இருக்கும் பரிவும் , பரந்த மனப்பான்மையும் உங்களிடம் அதிகமாகவே உள்ளது -
CK - ரஹீம் ஒரு அருமையான இயற்க்கை காட்சியை போன்றவர் - ஒருவர் கேமரா வில் கிளிக் செய்துவிட்டால் - அந்த இயற்க்கை காட்சி அந்த கேமரா வில் முடங்கி விடலாம் ஆனால் மறைந்து விடுவதில்லை - வேறு கோணத்தில் ரஹீம் வெளிவரலாம் - உங்கள் கவிதை நடையில் மீண்டும் கூப்பிடுங்கள் ரஹீமை - அருமையாக வெளிவருவார்
Ravi. call me just senthil. 'Dr' vendame! that may sometimes keep me at distance from our fellow hub friends and we may not interact with free mind.
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -3
ஒரு கை ரிக்க்ஷா வின் உண்மை கதை :
என் பெயர் கௌரி - நான் ஒரு சைக்கிள் ரிக்க்ஷா - என் முதலாளியின் பெயர் ராமு - நான் இந்த தெருவிற்கு வருவது இதுதான் முதல் தடவை - இங்கு வந்த முதல் நாளிலேயே பல நண்பர்களின் சகவாசம் கிடைத்தது - ஆனால் ஒவ்வருவரும் தன்னை பற்றியே அதிகமாக தம்பட்டம் அடித்துகொள்வது எனக்கு பிடிக்கவே இல்லை - என் தோழி அகிலா - பித்தீ கொள்வது என்ன தெரியுமா - இதுவரை அவள் ஒரு ஆம்பிள்ளையும் ஏற்றி கொண்டதே இல்லையாம் - அவளுடைய முதலாளிக்கு ஆம்பளை வாடை பிடிக்காதாம் ----- சிரிப்புதான் வந்தது - அன்று சைக்கிள் ரிக்க்ஷாக்களின் மாநாடு - எனக்கும் அழைப்பு வந்தது - என் முதலாளியை கேட்டால் போக அனுமதி கிடைக்காது - அவர் தூங்கியவுடன் மெதுவாக சத்தம் போடாமல் அகிலாவையும் அழைத்துக்கொண்டு அந்த மாநாட்டிற்கு சென்றேன் - குடியும் கூத்துமாக அந்த மாநாடு நடந்து கொண்டுருந்தது - எனக்கு பிடிக்கவே இல்லை - ச்சே என்ன ஜன்மங்கள் இவர்கள் என்று நினைத்துகொண்டே அகிலாவையும் விட்டுவிட்டு திரும்பி தனியாக வந்து கொண்டுருந்தேன் - அங்கே நான் பார்த்த காட்சி - என் ரத்தம் உறைந்து விட்டது
தனியாக ஒரு கை ரிக்க்ஷா நிற்க முடியாமல் இருமி கொண்டுருந்தது - வயதும் 70க்கும் மேலாக இருக்கும் - உதவி செய்ய அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை - மெதுவாக அருகில் சென்று பேச்சு கொடுத்தேன் - அவரின் பார்வையில் என் தந்தையை பார்த்தேன் - பேச முடியாமல் என்னிடம் அவர் தன் சுய சரிதையை சொல்ல ஆரம்பித்தார் - ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் என் கண்கள் கண்ணீர் அணையை திறந்துவிட்டன - என் உடம்பு முழுதும் நல்ல மழையில் நனைந்தது போல கண்ணீரில் நனைந்து விட்டது
அந்த வயோதிகர் பெயர் பாரத் - அவரின் முதலாளியின் பெயர் பாபு - பாரத் தெய்வத்தை பார்த்ததில்லை - அவருக்கு தெரிந்த தெய்வம் பாபு தான் - நன்றியின் பெயர் பாபு - கருணை பிறந்த இடம் பாபுவின் உள்ளம் - பாபு தொட்ட இடங்கள் மைதாஸ் தொட்ட தங்கம் போல - பாபுவின் மறைவுக்கு பிறகு பாரத் தன பொலிவை இழந்து விட்டது - யாரிடமும் வேலை செய்ய மனம் வரவில்லை - இழந்த சோகம் பாரத்தின் வயதை அதிகபடுத்தின -
நான் கேட்டேன் - அப்படி என்ன பாபுவிடம் ? -- பாரத் என்னை கேவலமாக பார்த்தார் - அப்படி ஒரு கேள்வி கேட்டது தவறு என்று உணர்ந்து கொண்டேன்
அவரிடம் இருந்து கணைகளாக கேள்விகள் வந்தன :
ஒருவர் ஒரு சின்ன உதவி செய்தார் என்பதற்காக , தன் வாழ்வையேஅவரின் குடும்பத்திற்காக பணையம் வைத்தவர் யாரையாவது உனக்கு தெரியுமா ? நன்றி நேராக வந்து நன்றி என்றால் என்னவென்று கற்று கொண்டது யாரிடம் தெரியுமா ? - தியாகத்தின் உண்மையான மறு பெயர் உனக்கு தெரியுமா ? - காதல் ததும்பும் வயதில் காதலியை இழந்து , வேறு ஒருவரையும் மனதில் கூட நினைக்காமல் , அந்த குடும்பம் முன்னேற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் என்னை ஓட்டியவர் யார் தெரியுமா ? தன்னால் வளர்க்கப்பட்ட முதலாளியின் மகள் திருமணத்தில் கூனி குறுகி அவமானப்பட்டு தன உயிரை கல்யாண பரிசாக கொடுத்த ஒரு உயர்ந்த உள்ளத்தை பற்றி கேள்வி பட்டதுண்டா ? - இத்தனைக்கும் ஒரே பதில் அதுதான் பாபு - பரிசுகள் இவர் விலைகொடுத்து வாங்கவில்லை - இவரை தேடி வந்தன - பாராட்டுகள் இவரின் முகவரியை கேட்டுக்கொண்டு வந்தன - இவரால் பாரத்தான எனக்கு பெருமை - அவர் தொட்ட என்னை வேறு எவரும் தொடக்கூடாது - அவரிடம் வேலை செய்த எனக்கு யாரிடமும் வேலை செய்ய பிடிக்கவில்லை - அவர் புகழ் பாடிய நான் இனி என் பாபுவை எங்கு காண போகிறேன் ???
என் கண்கள் குளமாகின - இப்படியும் ஒரு மனிதரா - இப்படிப்பட்டவருக்கு கீழ் வேலை செய்த பாரத்தை நினைக்கும் போது கர்வமாக இருந்தது - கூடவே அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்ய விரும்பினேன் - யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் , அதே சமயத்தில் மற்றவர்கள் கேட்க்காமல் உதவி செய்து வாழ்ந்த பாபு வை போலவே , பாரத் , நான் இனி உங்களுடன் உதவியாக இருப்பேன் என்று சொன்னவுடன் தன் கண்களை இறுக்க மூடிகொண்டார் - மூடிய கண்கள் பிறகு திறக்கவே இல்லை - அகிலா கூப்பிடுவது என் காதில் விழவே , கனத்த இதயத்துடன் அவளுடன் வீடு வந்து சேர்ந்தேன்
Baabu! Odaiyil ninnu malayalam movie remade with NT. This movie makes you feel the greatness of NT as how he polishes the role donned by Sathyan in its original. I have seen both. No doubt Sathyan was a good actor but in close-up scenes NT excels him with his facial expressions depicting the pains he undergo when the surrounding world turns thankless to him! Ravi.. your path with a difference is now getting defined and it will be refined over time. When one reads your write up NT comes before our eyes. You and Rahul alongside CK usher new approaches as a paradigm shift from the routine way of presentation or narration of the contents of a movie.
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -4
ஞான ஒளி - ஆண்ட்டனி
விட்டில் பூச்சிகள் போல படங்கள் பல வரலாம் - ஆனால் சில படங்கள் தான் மனதில் காவியமாக நிலைத்து நிற்கின்றன - immortal என்பதற்கு சாட்சியாக நிற்கும் படங்கள் இவை - அப்படி பட்ட படங்களில் ஒரு தனி ஒளி இருக்கும் - ஆனால் உங்களுக்கு ஞான ஒளி வேண்டுமென்றால் அதை ஒரு படம் தான் தர முடியும் - அதையும் ஆண்ட்டனி மனதை வைத்தால் தான் உண்டு - சாதரணமாக படம் நாம் திரையில் பார்க்கும் போது theaterஇல் உள்ள மற்ற விளக்குகள் அணைக்க படும் - இந்த படம் பார்க்கும் போது திரையில் ஒளி வரவில்லை - theater இல் முழுதும் ஒளி பரவியது - எல்லோர் மனதிலும் ஒரு ஞான ஒளி பிறந்தது - படம் என்றால் இதுதான் - நடிப்பு என்றால் இதுதான் - வசூல் என்றால் இதுதான் -
ஆண்ட்டனி - ஒரு பரிதாபத்திற்கு உரிய மனிதன் - வாழ்வில் அவன் சந்தித்தது கடுகளவு சந்தோஷம் , கடல் அளவு வேதனைகள் - மனைவியை இல் வாழ்க்கை யை அனுபவிக்கும் வயதில் பறிகொடுத்தான் - இருவரின் துடிப்பில் வந்த பரிசை படிக்க வைத்தான் - அவள் பரிசாக அவனுக்கு தந்ததோ ஏமாற்றம் - கனவுகள் கலைக்க படவில்லை - அழிக்க பட்டன - சந்தோஷங்கள் பிடுங்க படவில்லை - புதைக்க பட்டன - சட்டம் அவனை சுவரில் மாட்ட துடித்தது - அவனோ தன்னை வளர்த்த பாதிரியாரின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துகொண்டிருந்தான் - மகள் உயிருடன் இருக்கும் செய்தி அவனுக்கு தேனாக இனித்தது ஆனால் அவனை தேடும் அவன் போலீஸ் நண்பனோ தேனியாக அவனை தொடர்ந்து கொட்டி கொண்டுருந்தான் - தேவனின் கதுவுகளை தட்டினான் ஆண்ட்டனி - நிம்மதியை தேவன் உடனே தர விரும்பவில்லை - தன் பேத்திக்கு மணம் புரிய விதி உதவி புரியும் என்று நினைத்தான் - அவன் எதிர் பார்த்தபடி விதி உதவி செய்தது - ஆண்ட்டனிக்கு அல்ல அவனுடைய போலீஸ் நண்பன் லாரன்ஸ்க்கு - அன்பு ஒன்றுக்கே பிடி பட்டவன் , முதல் முறையாக போலீஸ் கைகளில் பிடிபட்டான் - வாழ்வில் எதையுமே முழுதாக அனுபவிக்கதாவன் சிறை வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்க தன்னை தயார் படுத்திகொண்டான் - பாதிரியாரின் கனவுகளை சாதித்த பெருமை கண்களில் இருந்தது - மகள் நடத்தை கெட்டவள் இல்லை என்பதை நிரூபித்த கர்வம் நெஞ்சில் நிறைந்து இருந்தது - பேத்திக்கு நல்ல முறையில் திருமணம் தானே முன் நின்று நடத்திய மகிழ்ச்சி முகத்தில் பீறிட , தன்னை வரவேற்கும் ஜெயில் யை தான் வரவேற்றான்
ஆண்ட்டனிக்காக எல்லா நல்ல மனங்களும் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கின்றன !!
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -5
ரவிகுமார் - அவன் தான் மனிதன்
ரவிகுமார் , கர்ணனின் மறு பெயர் - இருப்பவர்கள் இல்லை என்று சொன்னால் அவர்களை வெறுப்பவன் - இல்லை என்பவர்கள் இருக்கும் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவன் - காதலித்து மணந்தவள் ,தான் கொடுத்த மழலை செல்வத்தையும் அவனிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு இந்த உலகை விட்டு சென்று விட்டாள் - மீண்டும் அவன் வாழ்வில் காதல் பூத்தது - பூத்த மலர்களை அழகாக மாலையாக தொடுத்தான் - தொடுத்த மாலை வேறு ஒருவன் கழுத்தை அலங்கரிக்க ஆசை பட்டது - அந்த மாலையுடன் தனக்கு என்றும் அதிர்ஷ்ட்டம் கொடுத்து கொண்டிருந்த வைர மோதிரத்தையும் பரிசாக தன் உற்ற நண்பனுக்கு பரிசாக கொடுத்தான் - கர்ணனும் இப்படி ஒரு தானம் செய்திருப்பானா என்பது சந்தேகமே !!
நல்ல நட்பு தானமாக பறிபோனது - மீண்டும் வாழலாம் என்று ஆசையை மூட்டியவள் தன் நண்பனின் மனைவியானாள் - அவர்களின் மகள் அவனுக்கு ஆட்டுவிக்கும் கண்ணனாக காட்சி தந்தாள் - கடல் அளவு உள்ள ஆசைக்கும் , கையளவே கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் அவனுக்கு புரிந்தது - உதவி செய்து அதனால் துன்பம் கிடைக்கும் வாழ்க்கை அவனுக்கு தேனாக இனித்தது .
இனி கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை அவனிடம் உயிரை தவிர - அதையும் நட்புக்காக கொடுத்து அழியாத புகழை பெற்றான் - உலகம் மாறலாம் - எது மாறினாலும் எடுத்து சொல்ல , வழி நடந்து செல்ல ஒரு தியாக உள்ளம் உண்டு என்று சொன்னால் , அது அவனுடைய உள்ளம் ஒன்று தான் - எவ்வளவோ மனிதர்கள் வாழ்க்கையிலும் நடிப்பதுண்டு - ஆனால் வாழ்க்கையிலும் , அரசியலிலும் நடிக்க தெரியாமல் அவன் தான் மனிதன் என்று உலகமே சொல்லவைத்த ஒருவர் ரவிகுமார் என்னும் nt .......மட்டும் தான்
dear Ravi. Give us some break between your write-ups on the unforgettable characterization of NT in these movies you are narrating one by one lest the impact of these characters will not linger in our minds longer. We have sufficient time ahead. When we try the old wine in a new bottle, your templates should be improvised throwing more light on how NT gave life to these characters. Please Ravi. Try to restrict extensive analysis on a character per day so that we can be absorbed into your writings rather than just surfing on the synopsis only. Hope you can take my humble personal opinion in the right sense and continue to enthrall us without monotony.
[CK - ரஹீம் ஒரு அருமையான இயற்க்கை காட்சியை போன்றவர் - ஒருவர் கேமரா வில் கிளிக் செய்துவிட்டால் - அந்த இயற்க்கை காட்சி அந்த கேமரா வில் முடங்கி விடலாம் ஆனால் மறைந்து விடுவதில்லை
ஆனால் மறைந்து விடுவதில்லை - வேறு கோணத்தில் ரஹீம் வெளிவரலாம் - உங்கள் கவிதை நடையில் மீண்டும் கூப்பிடுங்கள் ரஹீமை - அருமையாக வெளிவருவார்[/QUOTE]
dear CK. While Ravi has chosen the mode of extensive analysis I think you can opt for the intensive analysis in your flamboyant humor laden narration style to bring out the multi-dimensional approach of NT to crystallize his characterization in the minds of viewers.
என்றும் அழியா கதா பாத்திரங்கள் நன்றாய் உள்ளது ரவி. செந்தில் சொன்னது போல் space கொடுங்கள் .ஜீரணிக்க நேரம் தேவை.save பண்ணி வைத்து நாளொன்றுக்கு ஒன்றாக....
Dear Ravi sir,
You are back with a bang , glad to know that Rahim is like by all , I liked your way of writing particularly about Babu movie
interaction between cine barath was top notch
Feel free to mail me ragul, sivaa and subramaniam ramajeyam
நன்றி செந்தில் - அவரிடமிருந்து பலமுறை "பிரம்மரிஷி" பட்டம் வாங்கி இருக்கிறேன் - ஆனால் ஒரு நாள் கூட தங்க வைத்து கொண்டதில்லை - உடனே திரும்ப கொடுக்கும்படி கேட்டு வாங்கி கொள்வதால் -------
தீவார் பட வசனத்தை சற்றே மாற்றி கொடுத்துள்ளேன்
என்னிடம் திறமை இருக்கிறது , எழுதும் வளம் இருக்கிறது , articulating ability இருக்கிறது - உங்களிடம் என்ன உள்ளது ?
என்னிடம் திரு ராமதாஸ் இருக்கிறார் , செந்தில் போல பல நல்ல உள்ளங்கள் இருக்கின்றன- இவை போதும்
மீண்டும் reverse gear இல் போக விருப்பம் இல்லை -தொடருவோம் நம் பயணத்தை
டியர் ரவி சார்
பாட்டும் பரதமும் ரவிக்குமார்(பெயர் கரெக்டா) பற்றியும் ப்ளீஸ்
An appeal to all:
Let us not in any form write anything that may hurt anybody - not necessarily fellow hubbers; but, also other Artistes. After all, every body has emotions and of course human being is an extended / emotional animal.
Even though certain things are written sarcastically / humorously, some people may not take it lightly and eventually get hurt.
The thread has after a lull for about 2-3 days has picked up again.
Request all of you to be congenial and focus on only "glorifying NT" and nothing else.
Regards,
R. Parthasarathy
Courtesy : Thiru. Balaji Balasubramaniam
A COLOSSAL LOSS - A Short Tribute to 'Sivaji' Ganesan
In picking Parasakthi as the movie of the month for July 2001, I mentioned that it marked the beginning of an era in Tamil cinema by introducing 'Sivaji' Ganesan to the silver screen. Sadly, the same month now marks the end of the era as the legendary actor passed away on Saturday, July 21. The bulk of his movie career and most of his memorable performances happened before I was old enough to understand and enjoy movies. But some of his later performances gave ample notice of his immense talent and I have also enjoyed several of his older movies on video. Here is a short tribute to the great actor.
Seeing Parasakthi made me realise that Sivaji's debut was unlike that of the other actors I have known. While actors like his peer MGR and later, Rajnikanth and Kamalhassan, appeared in small roles initially before climbing the rungs of success, Sivaji was perched at the top right from the beginning. His performance in his very first film belied his inexperience in front of the camera as he effortlessly portrayed the youth disgusted at the way society treats him and his sister. While his long monologue in the climactic courtroom scene is legendary, he made his mark with almost every scene he appeared in, be it crying, delivering strong dialogs or dancing a few steps.
Both MGR and Sivaji laid out their cinematic paths clearly with MGR being the mass hero and Sivaji being the class hero. While MGR swept up the adulation of the masses with his 'man of the people' roles and squeaky clean image, Sivaji impressed the connoisseurs with his versatility, wide variety of roles and acting talent. Image was no concern as he played good guy and bad guy, old man and young man, handsome playboy and scarred loner, with equal ease. His rich baritone voice and talent at reeling off pages of dialogs with perfect tone and timing made so many of his roles memorable and his lip-syncing for the songs frequently made people forget that he actually had a playback singer.
Some of his most famous roles early in his career were as historical and mythological personalities. On screen, he was transformed into whoever he was depicting and people began identifying those historical figures based on his portrayal. When we talk about personalities such as 'Chatrapati' Sivaji, Veera Pandiya Katta Bomman or Karnan, the image we conjure up is invariably based on Sivaji's appearance as the character. That is the impact his performances have had on public consciousness. His majestic bearing, stylised walk and booming voice were some of the features that stood him in good stead in mythologicals with his role as Lord Siva in Thiruvilaiyaadal being a prime example.
Among social roles too, there is almost no role that Sivaji has not played in Tamil cinema. Fans looked forward to his movies, confident that he would present them with a new persona, replete with a new getup and unique mannerisms, in each new movie and rarely were they disappointed. The affectionate brother in Paasamalar, the strict police inspector in Thanga Padakkam, the haughty lawyer in Gowravam, the naadaswaram astist in Thillaanaa Mohanaambal and the loyal servant in Padikkaatha Medhai are just a few of the characters that cannot be forgotten that easily by Tamil cinema viewers. He dabbled in double roles as early as Uthama Puthiran, effortlessly distinguishing between the two roles. Multiple roles were handled just as easily, with the three roles in Dheiva Magan and the unprecedented(and unmatched) nine roles in Navarathri.
One of the earliest movies in which I saw Sivaji on the big screen was Vellai Roja, the crime thriller where he portrayed both the calm church father as well as the loud but efficient police inspector. Since Sivaji had his roots in stage dramas, some of his later performances were seen as overacting but he proved that under the right director, he still delivered the goods. Two such memorable performances were in Mudhal Mariyaadhai and Thevar Magan. He displayed sadness and comedy in equal portions in Bharatiraja's Mudhal Mariyaadhai, where he played a man wedded to a shrew and found enjoyment in the company of a younger woman. As Kamalhassan's strict but affectionate father in Thevar Magan, he was majestic and his quick end left us wishing he had a larger role. It was unfortunate that none of the other directors utilised his potential fully. His last significant role turned out to be as Rajnikanth's father in Padaiyappa while his final role was as a good-hearted grandfather trying to unite his grandson with his lover in Poopparikka Varugirom. But neither of these were roles deserving of bringing down the curtain on such an illustrious career.
It was one of the cruel ironies that Sivaji, who found so much fame outside Indian shores, never won the national award for acting from the Indian Government. The only consolation for this is that the awards themselves have become highly politicised, as evident from the fact that MGR won the award for Rickshakkaaran. But there was no shortage of accolades from other sources for Sivaji. He won the Afro-Asian film festival award in 1960 for his performance in Veerapandiya Kattabomman and was awarded the title of Chevalier, the Order of Arts and Literature by the Ministry of Culture, Government of France. At home, he received the Padmashri and the Dadasaheb Phalke award. The only recognition he received at the national lever for his acting was the special jury award for Thevar Magan.
After close to 50 years in the Tamil cinema, the thespian has finally passed away. He will definitely live on in our hearts through his movies but his death is a colossal loss to the Tamil film industry and its millions of fans and he will definitely be missed.
May his soul rest in peace
© 2001 Balaji Balasubramaniam
சிரிப்பு பாதி அழுகை பாதி
அத்தியாயம் எட்டின் இறுதி….
*
அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
பழுதான போதில் வரும்
*
நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
*
ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
*
மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
மேவி விழிகளினிடை
துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
சின்னத் துளியாக
*
அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)
சிரிப்பு பாதி அழுகை பாதி 9
மிகப் பெரிய இடைவேளைக்கப்புறம் தொடர்கிறது..! :)
*
ந.தியின் மிகப் பிடித்த பாடலொன்றில் இருக்கும் வரி..
*
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி எனக் கேட்டிருப்பார் கண்ணதாசனின் பாடல் வாயிலாக.. ஸோ இன்பம் தருவதும் காதல்..துன்பம் தருவதும் காதல் (எவ்ளோ பெரிய கண்டுபிடிப்புடா – மன்ச்சு ஷ்ஷ்)
*
உலகத்தில் இதைப்பற்றி பேசாதவர்கள் வெகு சொற்பமே
*
மின்னலது ஊடுருவி மென்நெஞ்சில் பாய்ந்ததுபோல்
கன்னமிடும் காதலும் காண்..
*
யெஸ்.. காதல்..விதைவிட்டுச் சாகுபடி செய்யவேண்டிய அவசியமே இல்லை.. படக்கென ஒரு பார்வை, ஒரு குறுஞ்சிரிப்பு, ஒரு உரையாடல், ஒரு – வாகான நுதலில் சுருண்டு பெருமையுடன் புன்சிரிக்கும் சிறு சுருள் முடி அதன் கீழ் குறுகுறு கண்கள் எனப் பார்க்கையில், ஒரு துளி கண்ணீர், ஒரு ஒயில் நடை, ஒரு வீரச் செயல் ஆணிற்கு, ஒரு கவிதை.. இன்னும்..என்னவிதத்தில் வரும் என்றும் சொல்ல முடியாது..
*
ந.தியின் இந்தப் படத்தில் அவர் முகம்மதிய இளைஞர்..சூழலால்.. மென்மை மனம்..அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நெஞ்சம்..
*
அவர் சைக்கிளின் மீதும் மனதின் மீதும் மோதும் ஹீரோயின் ஒரு கிறிஸ்தவப் பெண்.. அந்த இளைஞரின் அமைதிப் பார்வை, அலட்டலில்லாத போக்கு, நாகரீகமான பேச்சு, மற்றவருக்கு உதவும் தன்மை என எல்லாவித நல்ல குணங்களும் பிடித்துப் போய்விட..மே ஐ கமின் என்று கேட்டுக் கொள்ளாமலேயே அவளுக்கு அந்த இளைஞன் மேல் காதல் வந்து விடுகிறது..
*
அந்த இளைஞன் யெஸ் ரஹீம் தான்..அவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
*
மனதிலோ..
இரவேறுது நிலவேறுது இளமையினி விழித்தே
புறந்தள்ளிடும் சலனந்தனை பொறுக்காமலே அவளை
அறந்தானென அழகாய்ப்பல விதமாய்ச்சொலி அணைத்தே
கரம்பிடித்திடும் உணர்வைவெகு கனிவாய்த்தொடுத் திடுமே
என்றெல்லாம் எண்ணம் பலவாறாய்த் தோன்றினாலும்..முடியவில்லையே..
*
காரணம்..ஜாதி.. நான் முஸ்லிம்..அவள் கிருஸ்தவப் பெண்.. சமூகம் ஏற்குமா..தவிக்கிறார் ரஹீன்..
*
அவளும் அவரை நாடி வருகிறாள்..வெகு அழகாய் வெகு இயல்பாய்ப் வெகு இனிமையாய்ப் பாடலும் வருகிறது
*
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது..
*
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
கண்கள் பேசும் பாஷையிலே பேதமில்லையே
*
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
வட்ட நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை ப் பெண்மனதில் போர்க்களமாகும்
*
அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
*
ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்..
*
கண்ணோரம் ஈரமின்று காயலாச்சே
..கன்னியவள் எண்ணமதும் தெரிய லாச்சே
வண்ணமகள் சொல்லிவிட்டாள் நெஞ்சத் தீயை
..வாய்த்திடுமா அவள்கரத்தைப் பற்றும் நேரம்
பெண்ணவளே சொன்னபின்னும் தவிக்கின் றேனே
..பேதமையா பின்விளைவா என்றே உள்ளம்
எண்ணியெண்ணிப் புலம்புவதை எங்கே சொல்ல
..ஏந்திழைக்கு எப்படித்தான் சொல்வேன் மெல்ல
*
ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
..*
காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
*
ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..
*
எனில் இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் (?) ஐ முடிக்கிறேன்..
*
அடுத்து புதியதாக எழுதி வருவேன் என்று பயமுறுத்தி விடைபெறும்
*
உங்கள்
சி.க
ck அவர்களே,
இந்தக் காட்சி படத்தை நான் முதன் முதல் எழுபதுகளின் இறுதியில் பார்த்த போதே பெரிதாக ஈர்த்த ஒன்று.
நடிகர் திலகம் ஒருவர்தான் பாத்திரத்தின் தன்மையை நூறு சதவிதம் நிலை நிறுத்தி படைத்தவனுக்கு (பாத்திரத்தை) பூரண திருப்தி தந்தவர். ரஹீம் கதா பாத்திரத்தின் கண்ணியம் எனும் அந்தப் புள்ளியை பரிபூரணமாக - குறிப்பாக இந்தக் காட்சியில் - வடித்த விதம்!
இதை எழுதும் போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்!
ஏகப்பட்ட அலுவல்களுக்கிடையே இளைப்பாரலுக்கு இங்கு வந்து கொண்டிருக்கிறேன். பதிய முடியவில்லை. இருப்பினும், இந்த ஒரு காட்சியும், அதை நீங்கள் வர்ணித்த விதமும், என்னை, வேலை மெனக்கெட்டு தமிழில் எழுதப் பணித்து விட்டது!
நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்பின் பார்த்த சாரதி சார்..
எனக்கு உள்ளூர உதறல் எடுக்கிறது(இன்னும் நன்றாக எழுத வேண்டுமென) .. வேலைப் பளுவிற்கினிடை வந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..
அன்புடன்
சி.க..
Quote:
எஸ்.வீ.சேகர் பாணியில் ஒன்று.
கோபால்- ஒரு நாளைக்கு சுமாராக எத்தனை பதிவுகள் போடுவீர்கள்?
நண்பர்- சார் நாங்க எல்லா பதிவுமே, சுமாராத்தான் போடுவோம். மார்க் போட retire ஆன கல்கத்தா வாத்யார் இருக்காரே?ஹையா
Quote:
உங்களுக்கு உதறல் அல்ல.குளிர் ஜுரமே வர ஒரு செய்தி.உங்கள் ரசிகர் லிஸ்டில் என்னை மறக்காமல் சேர்க்கவும்.
உங்களுடைய எப்படியான நடவடிக்கைதானே இங்கு பிரச்சினையை உருவாக்குகிறது
தெரிந்துகொண்டும் மறுபடியும் ஏன் தொடர்கின்றீர்கள்?
நண்பரே இப்படியான பதிவை இடுவதற்கு பதிலாக
நடிகர்திலகம் பற்றிய ஏதாவது தகவல்
தங்களிடம் இருந்தால் அதனை பதிவிடலாமே
தயவு செய்து என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு
செவி சாயுங்கள் மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்
Mr Ravi,
Your analysis of Rahim,Antony Babu a fantastic one. Keep up the tempo to put this thread at
the highest level.
Regards