Thanks to Siva, Sivaji Senthil,Yukesh Babu, Ragavendhar for their interesting informative Contributions.Thread is moving with purposeful meaningful Direction.
Printable View
Thanks to Siva, Sivaji Senthil,Yukesh Babu, Ragavendhar for their interesting informative Contributions.Thread is moving with purposeful meaningful Direction.
நான் ஏற்கெனெவே குறிப்பிட்டது போல ஒரு கவனம் பெறாத அதிசய படம் எல்லாம் உனக்காக. தொழிலாளர் பிரச்சினை,உரத்த சமுதாய சிந்தனை, சீரழிவு, ஊனமுற்றோர் பிரச்சினை,குடும்ப செண்டிமெண்ட்,என்று எல்லாம் நிறைந்த அற்புத படைப்பு.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்கள் அவ்வளவு அழகு,இயல்பு. துருத்தாத கதாபாத்திரங்கள். நடிகர்திலகத்தின் 50 களை ஒட்டிய இயல்பான method acting ,சாவித்திரி,ரங்கராவ் நல்ல பங்களிப்பு, மலரும் கொடியும் போல கே.வீ.எம் முத்திரை இருந்தும் ,பல நல்ல படங்களின் நடுவில் மாட்டி போதிய வெற்றி வாய்ப்பை இழந்த சுமார் வெற்றி படங்களில் ஒன்று.
அரைகுறை விமர்சகர்கள் சொல்வது போல சிவாஜி-சாவித்திரி அண்ணன்-தங்கை இமேஜ் இந்த படத்தின் வெற்றிக்கு குறுக்காக நிற்கவில்லை.பொது மக்கள், அவர் பின்னாட்களின் கதாயாகியர் ஜெயலலிதா,காஞ்சனா ஆகியோருக்கு 1966 இல் தந்தையாக நடித்தும்,இவர்களை வெற்றி ஜோடியாகவும் ஏற்றனர். சிவாஜி வேண்டாத இமேஜ் வட்டத்தில் சிக்கியதேயில்லை.
இந்த படம் வித்யாசமான format கொண்டது. எந்த பிரச்சினையையோ,பாத்திரத்தையோ மைய படுத்தாமல், பல் முனை பட்ட தளங்களில் புள்ளிகளில் விரியும். வேறு பட்ட மனநிலை மற்றும் விருப்பு-வெறுப்புகள் கொண்ட பாத்திரங்களை இணைக்கும்,பிணக்கும். இன்றைய படங்களின் போக்கு கொண்ட காலத்தினால் முந்திய படம். ஒரு முனை பட்ட பாத்திரங்களை கொண்டு ,நாயகனை மைய படுத்திய ஒரு முனை பிரச்சினையை எதிர் பார்த்து வந்த அந்த கால அடிப்படை ரசிகர்களுக்கு புதிராக தோன்றியிருக்கும்.(1961 இல்)
இது நாயகனின் கொள்கை சார்ந்தோ, தியாகம் -குடும்ப நிலை சார்ந்தோ, உறவு-கொள்கை போராட்டம் சார்ந்தோ,பாச போராட்டம் ,சந்தேகம் சார்ந்த மன முறிவுகள் சார்ந்தோ ,ஒரு தளத்தில் இயங்காது. இன்னும் சொல்ல போனால், வில்ல தனத்துடன் இயங்கும் தந்தையின் அபார தியாகத்துடன் முடியும். அவர் சார்ந்தே எல்லாம் உனக்காக என்ற பெயரும் பெறும் .
சொல்லுங்கள்,அந்த கால அப்பாவி ரசிகர்கள் இத்தனை சோதனை முயற்சிகளை புரிந்து, எப்படி படத்தில் ஒன்றியிருக்க முடியும்?
I fully agree with mr gopal's views about Ellam unankkaga review and movie has notbeen accepted nor perhaps the people that time not in a mood of accepting different formula tried here, according to the ladies meeting in our house when a film is seen, we were living in a house where 16 other tenents were living incidently the house no is also 16.
இந்திய அரசியல் வானில் அதிசயமான தலைவன்
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...bc77767b5db960
காசு இல்லாமல் போன காமராஜர்
*************************************************
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம். அதன் துவக்க விழாவிற்கு நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார். தற்போது பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாய் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.
நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராஜர் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார். ...
நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப்படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றவர்களுக்கு திகைப்பு, `பிரதமர் கூறியும் இவர் மறுக்கிறாரே' என்று.
நேரு சொன்னார் `காமராஜர் ஏன் மறுக்கிறார் என்கிற காரணம் எனக்குத் தெரியும். இந்த எந்திரத்தில் ஏறிநின்று போடும் காசுகூட இவரிடம் இப்போது இருக்காது' என்றார். பிறகு காமராஜருக்காகத் தாமே காசு போட்டு எடை பார்த்தார். அவர். கறைபடாத கரம், காசுக்கு ஆசைப்படாத மனம்!
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...7b46b806fdce6a
முரளி,
எடிட் செய்தே உங்கள் கைகளை ஓய வைத்து விட்டேன்.நீங்கள் சொல்வது போல ,நீங்களே தவறு என்று நினைக்காத சரிகளை ,politically -correct என்ற ரீதியில் செய்கிறீர்கள் சரி. ஆனால் ,இந்த ஒழுங்கு முறை நம் திரிக்கு மட்டும்தானா என்ற ஆயாசமே எழுகிறது.ஆனால் டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.
தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.
என் எழுத்தாள சகோதரி,என்னை பிற எழுத்துக்களை எழுத பணிக்கிறார். அவர் உச்சம் தொட்டு விருதுகளை குவித்து வரும் போது ,என் எண்ண அலைகளை நான் சுருக்கி கொண்டு,புரிதலின்மை என்ற கூட்டுக்குள் சுருங்குவது அவருக்கு உவப்பாக இல்லை.பலருக்கு ஆதர்ஷமாக இருந்த நான்,இவ்வாறு இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.(நான் வேடிக்கையாக,நான் தன்ராஜ் மாஸ்டர் மாதிரி இருந்திட்டு போறேன் என்பேன்)
ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .
உங்களுக்கு மட்டுமல்ல ,மாற்றணி நண்பர்கள் கலை வேந்தன்,எஸ்வி,யுகேஷ் மற்றும் என்னிடம் அக்கறை செலுத்திய நண்பர்களுக்கு நன்றி. நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே. என் பங்களிப்பு 21ஜூலை ,1 அக்டோபர் என்று தொடரும்.பார்வையாளனாக கண்டிப்பாக தொடருவேன்.
கோபால்
மற்றவர்கள் எப்படியோ என்னை பொறுத்தமட்டில் உங்கள எழுத்துக்களை மிகவும் ரசித்தேன்
என்ன ஒன்று அவற்றிற்கு எதிர்வினை ஆற்றத் தெரியவில்லை அல்லது முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்
இதுவரை வேறுவேறு பதிவுகளில்
நடிகர் திலகத்தை பற்றி அவரின் படங்களின் பங்களிப்புகள் பற்றி அணுஅணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்
அது தொடர வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல ஏனைய நண்பர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பது என்எண்ணம்
உங்கள் முடிவு உங்கள் கையில்
அதற்காக இத்திரியில் உங்கள் பங்களிப்பை நிறுத்தநினைப்பதை என்னால் ஏற்கமுடியவில்லை
தயவு செய்துஉங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் தொடர்ந்து இத்திரியில் வந்து எழுதுங்கள்.
நன்றி.
கோபால்,
என்ன ஆயிற்று உங்களுக்கு? 'எல்லாம் உனக்காக' என்று சொல்லி முடித்துக்கொண்டிருக்கின்றீர்கள். 'இனிமேல் எதுவும் உனக்கில்லை' என்றும் சொல்லிவிட்டீர்கள். 'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே' என்று நான் சொல்லி தெரிய வேண்டுமென்பதில்லை. சிந்திப்பீர்
https://www.youtube.com/watch?v=rMPd...e_gdata_player
திருப்பூரில் 14.12.2014 அன்று நடைபெற்ற நடிகர்திலத்தின்
பிறந்தநாள் விழா தொகுப்பு
ஆற்றல் பகிர்வு தரவரிசை 3 :Quote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 3
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
3.6 HP ( குதிரைச்சக்தி Horse Power)
Kalvanin Kaadhali Sadhaaram drama scene / Navaraththiri therukkooththu scene /.....
நடிகர்திலகம் என்றுமே தான் வந்தவழி மறந்திடாத பண்பாளர் தனது நடிப்புத்திறனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்திட்ட தெருக்கூத்துக்கலை மற்றும் நாடகமேடையை
அவர் என்றும் மறந்ததில்லை சினிமாவில் உச்சநட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தபோதும் கட்டபொம்மன் வியட்னாம்வீடு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தி நடித்து தனது நன்றியறிதலை வெளிப்படுத்தினார் அந்தக்கால தெருக்கூத்து மற்றும் நாடகமேடை நடிப்பினை ஆடல்பாடலோடு கச்சிதமாக வெளிக்கொணர்வதில் அவருக்கு இணையாக யாருமே இல்லை
Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1 HP
படத்துக்குப் படம் நடிகர்திலகத்தின் ஆற்றல் நிறைந்த ஆடல்பாடல் திறமைகள் மெருகேறிக்கொண்டே வந்த காலகட்டம். கள்வனின் காதலி சதாரம் தெருக்கூத்து காட்சி அவரது மிகவேகமான நளினமான நடன நகர்வுக்கு என்றும் நிலையான சாட்சி!
https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw
Concept 2 Statics / அமர்வாற்றல் 0.5 HP
பலே பாண்டியா படத்தில் ராதாவை திருப்திப்படுத்த பல்வேறு முகபாவனைகளுடன் அவர் படும் பாடு .....நீயே உனக்கு என்றும் நிகரானவன் தலைவா
https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
Concept 3 Mechanics / உறைவாற்றல் 0.1 HP
ராஜபார்ட் ரங்கதுரை : வெறும் சப்பளாக்கட்டைகளை வைத்துக்கொண்டு அவர் உறைந்த உணர்வுகளுடன் அமர்ந்து பாவனைகளுடன் பாடும் அம்மம்மா தம்பி என்று ....அம்மம்மா!
https://www.youtube.com/watch?v=XjZP2reKBlU
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 2 HP
நவராத்திரி திரைப்படத்தில் சாவித்திரியுடன் பாடி ஆடும் தெருக்கூத்து அவரது நிகரற்ற உடல்மொழி நடன ஆற்றலுக்கு சிறந்த உதாரணம் (En Thambi too..but not available for uploading)
நவராத்திரி திரைப்படம் நவரச பாவங்களை வெளிப்படுத்தி ஒன்பது வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நம் கண்ணே நாம் நம்பமுடியா வண்ணம்
உருவகப்படுத்தி இதுதான் உலகநடிப்பின் உச்சம் என்பதை மிச்ச சொச்சமில்லாமல் நடிகர்திலகம் நிலைநாட்டிய படம். அதில் ஒரு பாத்திரமாக நாடக தெருக்கூத்து கலைஞராக மீசையில்லாமல் பயந்த சுபாவத்துடன் வரும் அவர் மேடையில் ராஜபார்டாக மாறியதும் உடல்மொழி மாற்றத்தில் காண்பிக்கும் கம்பீர அலட்சியம் மிடுக்கு நடை....நடிகர்திலகத்தின் ஒட்டாத ஒட்டுமீசை (ஒருவேளை நெற்றிக்கண் ரஜினி மீசைக்கு இதுதான் இன்ஸ்பிரேஷனோ!?) ஒட்டுமொத்த சிரிப்பை அள்ளுகிறது! really tickling our funny bone!!..... கூத்தடிக்கும் நடனநகர்வுகள்.....அடங்கா ஆற்றலின் வெளிப்பாட்டைக் காணக் கண் கோடி வேண்டுமே!
https://www.youtube.com/watch?v=DqWKRny75nc
Quote:
Quote:
The End of Part 3. But NT comes back with a bang of his famous song/dance sequences in Uththama Puththiran!
ஆற்றல் பகிர்வு தரவரிசை 4 : உத்தம புத்திரன்Quote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 4
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
5 HP ( குதிரைச்சக்தி Horse Power)
உத்தம புத்திரன் ஊரறிந்த புத்திரன்! நாணயத்தின் இரு பக்கங்கள் போல நற்குணங்கள் நிரம்பிய உத்தமன் பார்த்திபனாகவும் தீய குணங்களுக்கு பலியாக்கப்பட்ட உன்மத்தன் விக்கிரமனாகவும் இரட்டை வேட நடிப்புக்கு நடிகர்திலகம் இலக்கணம் வகுத்த படம். அரண்மனை உல்லாசபுரியில் மதுவில் ஊறி மமதை ஏறி திசை மாறி அந்தப்புரமே கதியென்று மங்கையருடன் சல்லாபத்தில் திளைத்திடும் விக்கிரமனின் உடல்மொழியும் பாவனைகளும் நம்மை ஒருமாதிரியான பரவச நிலைக்கு உட்படுத்தியதே அவர் நடிப்புக்கு கிடைத்த அபார வெற்றி! தோற்ற வித்தியாசம் ஏதுமின்றி நல்லவனாக வளர்க்கப்படும் பார்த்திபனின் மிருதுவான உடல்மொழியும் வீரமும் காதல் நிலைப்பாடுகளும் எவ்வளவு வித்தியாசமாக உருவகப்படுத்தப் பட்டு நடிகர்திலகமாகக் காணாமல் நம்மிடையே கொண்டாடப்படும் நாயகனாகவே அவர்தம் சீர்மிகு நடிப்பாற்றலால் சிறப்புப் பெற்றன!!
இவ்வகை கதையமைப்பில் ஆடல்பாடல் கேளிக்கை கும்மாளங்களுக்குப் பஞ்சமேது .....கண்ணுற்று அனுபவித்து ரசித்து மகிழ்வோமே!
Concept 1 Dynamics/நகர்வாற்றல் 1.5 HP
யாரடி நீ மோகினி இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் உச்சகட்ட ஸ்டைலையும் மிடுக்கையும் நடன நகர்வாற்றலையும் பறை சாற்றிக் கொண்டே இருக்கப்போகும் மனதை அள்ளிய ஆடல்பாடல் காட்சியமைப்பு! ஐக்கியமாவோமே!!
https://www.youtube.com/watch?v=a63IlNFGip8
Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP
அமைதியான நதியினிலே ஓடத்திலேறி முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டாக பார்த்திப திலகம் பத்மினியுடன் என்னவொரு இதமான மனதை வருடும்
தென்றலான பாடல் காட்சியமைப்பு அழுத்தமான காதல் பதிவு கண்ணுற்று களிப்போமே!
https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y
Concept 3 Mechanics உறைவாற்றல் 1 HP
காத்திருப்பான் கமலக்கண்ணன் என்று பார்த்திபனை நினைத்து ஏந்திழை பாடலுடன் அபிநயிக்க வைத்த கண் வாங்காமல் கரண்ட் அடித்தது போல் உறைந்து போய் அதை ரசித்து மாமாவிடம் குறும்பாக கமெண்ட் அடிக்கும் விக்கிரமன் !
https://www.youtube.com/watch?v=XEmF9jzEwCI
Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல்1.5 HP
சிந்தை நிலையில்லாத விக்கிரமனை மயக்கி பார்த்திபனின் இரும்பு முகமூடி சாவியை கவர்ந்திட ஆரணங்கு பத்மினி பாடி ஆடும் உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே காட்சியமைப்பில் குடிகார மன்னனின் கால் போகும் போக்கையும் கண் செருகும் நேர்த்தியையும் உடல் சோர்வையும் அசட்டுச் சிரிப்பையும் ஒருவிதமான ஜெர்க்குடன் கூடிய தள்ளாட்டத்தையும் எப்படிக் காண்பித்திருக்கிறார் நடிக மன்னர் !
https://www.youtube.com/watch?v=-luAPt44VL0
Quote:
Quote:
The End of Part 4. But NT sure returns to entertain us with his enthralling dance movements in song sequences with hero running after trees with his darling women!! both black/white and in color!!
http://i1170.photobucket.com/albums/...ps6e1e9ff8.jpg
கோபால் சார் உங்கள் முடிவினை மாற்றி மீண்டும் உங்கள் பொன்னான பதிவுகளை யார் மனதையும் புண்படாமல் பதிவு செய்யுங்கள்
http://i1170.photobucket.com/albums/...ps96cfa420.jpg
vietnaam veedu stage peformance by sivaji ganesan
ஆற்றல் பகிர்வு தரவரிசை 5 : ஊட்டி வரை உறவு 3 HP!Quote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 5
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
ஊட்டி வரை உறவு திரைப்படம் ஒரு வித்தியாசமான ஜாலியான மனதுக்கு ரம்மியமான அனுபவம்
தங்கை என்று கதை விட்டுக்கொண்டு பாதுகாப்பான புகலிடமாக பாலையாவை குழப்பி குடும்பத்துள் நுழையும் விஜயாவின் உண்மை நிலை தெரிந்து கலாய்த்துககொன்டிருக்க்கும். நடிகர்திலகத்தின் நகைச்சுவை நடிப்பாற்றலை படம் முழுவதும் ஒன்றி ரசிக்க முடிகிறது.
தேனினும் இனிய பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட். இப்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் ஆற்றல் வகைகள் இதோ விறுவிறுப்பான காணொளிகள் சாட்சியமாக!
Concept 1 Dynamics / நகர்வாற்றல்1 HP
விஜயாவின் நாடகமறிந்து நடிகர்திலகம் அவரை ஜாலியாக கலாய்க்கும் குறும்பு கொப்பளிக்கும் அற்புதமான நடன நகர்வுகள்
https://www.youtube.com/watch?v=9onlEEX8Qyg
bonus song :
https://www.youtube.com/watch?v=iEzkwgYXYY0
Concept 2 Statics / அமர்வாற்றல் 3/4 HP
பெரிய நடன அசைவுகள் ஏதுமின்றி அமைதியாக இயல்பாக இனிமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடல் இப்படத்தின் மிகச்சிறந்த காட்சியமைப்புக்கும் ஸ்ரீதரின் வித்தியாசமான காமெரா கோணங்களின் ஈடுபாட்டுக்கும் சான்றே !
https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U
Concept 3 Mechanics / உறைவாற்றல் 1/2 HP
விஜயாவின் இடதுகைப் பழக்கம் கண்ணுற்று உண்மையுணர்ந்து உறையும் நடிகர்திலகத்தின் நடிப்பாற்றல் இனிமை நிறைந்த விஜயாவின் சிறந்த ஆடல் அசைவுகளை வெளிக் கொணர்ந்த இப்பாடல் காட்சி வழியே நம் விழிகளுக்கு !
https://www.youtube.com/watch?v=9fHV2XL2gFc
Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 0.75 HP
அங்கே மாலை மயக்கம் யாருக்காக நடிகர்திலகத்தின் உடல்மொழியாற்றலில் சொக்கி விக்கித்து நிற்கும் நமக்காக!
https://www.youtube.com/watch?v=Ku1Ek0yaex0
Quote:
Quote:
The End of Part 5. NT returns on his creamy song and screamy dance duty in a more colorful dreamy way
Sivaji Ganesan - Definition of Style 9
தனக்கெனத் தனி பாணி என்பதை விட தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கெனத் தனி பாணியை அந்தக் கதைக்கேற்றவாறு வகுத்து அதனுடைய இயல்பை நூறு சதவீதம் முழுமையாகக் கொண்டு வருவதே நடிகர் திலகத்தின் வெற்றிக்கு அடிப்படை.
ஒரு கிராமத்தான் அந்த ஊர் ஜமீனின் அக்கிரமங்களை சகிக்க முடியாமல் தானே சட்டத்தை எடுத்துக் கொள்கிறான் என்று குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்த்ப்படுகிறான். இந்த நீதிமன்றக் காட்சி, நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த திறமைக்கு மற்றுமோர் உதாரணம்.
நீதிமன்றம் என்றால் நெடிய வசனமில்லை. நறுக்குத் தெறித்தாற்போல என்பார்களே, அது போல அளவு குறைவான வசனம், அதில் அந்த பாத்திரத்தின் தன்மை, அந்த பாத்திரத்தின் நிலைமை என அனைத்தையும் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் நடிகர் திலகம். உள்ளத்தில் உள்ளதை மறைக்கத்தெரியாத கிராமத்து முரடனாக இருதுருவம் படத்தில் ஏற்று நடித்த பாத்திரம் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அவருடைய புலமையும் திறமையுமே காரணம். படம் முழுவதும் ரசிகர்களுக்கு நடிப்புத் தீனி வழங்கியுள்ளார் நடிகர் திலகம்.
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இந்த நீதிமன்றக் காட்சியில் நடிப்புத் தொல்காப்பியருக்குள் ஒளிந்துள்ள அந்த மேதைமை மிகச் சிறப்பாக ஒளிர்கிறது.
தான் சொல்ல வேண்டியதை மிகவும் சுருக்கமாக உள்ளத்தை அப்படியே கொட்டி விடுவதாக இந்தக் காட்சியில் அவர் நடித்திருக்கிறார். இதே நீதிமன்றக் காட்சிகளில் வெவ்வேறு படங்களில் அவர் வெவ்வேறு விதமாக நடித்திருப்பதே அவருடைய நடிப்பின் பரிமாணத்தைக் காட்டும்.
நீதிமன்றக் காட்சிகளில் குற்றவாளியாகவும் நடித்துள்ளார், குற்றம் சாட்டப்பட்டவராகவும் நடித்துள்ளார், வழக்குரைஞராகவும் நடித்துள்ளார், அனைத்துக்கும் மேல் நீதிபதியாகவும் நடித்துள்ளார்.
அனைத்திலும் பல்வேறு பரிமாணங்களில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கேற்றவாறு தன் நடிப்பை வகுத்துக் கொண்டதே நடிகர் திலகத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.
இதோ இருதுருவம் படத்தில் நீதிமன்றக் காட்சி..
48.00 நிமிடத்திலிருந்து பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=JaYGfB9y-5w
ஏக காலத்தில் ஓடி சாதனை படைத்த வசூல் சக்கரவர்த்தியின்
சாதனை பட்டியல்
பாரீர் பாரீர் பாரீர்
ஒரே நாளில் திரையிடப்பட்ட வசூல் சக்கரவர்த்தியின் இரண்டு படங்கள்
100 நாட்கள் அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல் ஓடி மிகப்பெரிய சாதனை செய்தது
6.10.1979..தீபம்...கொழும்பு...செல்லமஹால்..145..நாட ்கள்
தீபம்..கொழும்பு....சபையர்................75..நாட்க ள்
தீபம்...யாழ்நகா....ஸ்ரீதர்.....................114 ..நாட்கள்
..............................
6.10.1979..அந்தமான் காதலி..கொழும்பு.........சமந்தா..101..நாட்கள்
அந்தமான் காதலி..கொழும்பு..கல்பனா..46..நாட்கள்
அந்தமான் காதலி..யாழ்நகர்..மனோகரா..105..நாட்கள்
..........................................
மேற்கண்ட 2 படங்களும் வெற்றி நடைபோட்டு ஓடிக்கொண்டிக்கும் 77 ம் நாள்
ஜெனரல் சக்கரவர்த்தி திரையிடப்படுகிறது
21.12.1979..ஜெனரல் சக்கரவர்த்தி.....கொழும்பு..கிங்ஸ்லி....104..நாட்கள ்
ஜெனரல் சக்கரவர்த்தி..கொழும்பு...கல்பனா....44..நாட்கள ்
ஜெனரல் சக்கரவர்த்தி..யாழ்நகர்..ராஜா...121..நாட்கள்
மூன்றுபடங்களுமே வெற்றிக்கொடி நாட்டின
இப்படியான வெற்றியை நிலைநாட்ட
கொடை சக்கரவர்த்தி
வசூல் சக்கரவர்த்தி
நடிப்புச்சக்கரவர்த்தி
பொன் மனம் கொண்ட செம்மல்
சிவாஜி கணேசன் தவிர
வேறு எவராலும் முடியாது
ஆற்றல் பகிர்வு தரவரிசை 6 : 9 HPQuote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 6
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
(sorkkam/paasamalar/pudhiya paravai/rajapart rangadurai)
நிஜத்தில் மனிதனிடமிருந்து பிரிக்க முடியாதது நிழலும் கனவும். திரையுலகம் கனவை நிஜம் போல் நம்பச் செய்யும் நிழல் மாயாலோகமே!! எல்லைகளற்ற
எண்ண அலைகளே. கனவுகள். நடிகர்திலகமும் கனவுப் பாடல் காட்சிகளில் நனவாக வேண்டிய கனவுகளை நம்மை நம்ப வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
நடிகர்திலகத்தின் கனவாற்றல் வெளிப்பாடுகளின் தொகுப்பு!
Concept 1 Dynamics / நகர்வாற்றல் 2 HP
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒரு பொன்மகளோடு வைரமும் மணிகளும் பணமும் காசும் வெல்வெட்டு விரிப்பில் வைத்துக் கொட்டினால்
எப்படியிருக்கும்? சுகமான சுகந்தமான சொர்க்கத்தில் நீந்துவோமே!!
https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo
Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP
மலர்களைப் போல் தங்கை உறங்குவதை அமைதியாக அமர்ந்து வளமான அவள் நல்வாழ்வு பற்றிக் காணும் கனவின் உருவகம் நடிகர்திலகத்தின் எண்ண அலைகளின் எழுச்சியாக !!
https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M
Concept 3 Mechanics / உறைவாற்றல் 1 HP
நிஜவாழ்வில் குடிசை வீட்டிலே வறுமையின் சிறுமையே கண்டு உறைந்து உடைந்து போன நாடகமேடைக் கலைஞன் கனவில்தானே மதனமாளிகையில் பொறுமையாக குடியேற முடியும்?!
https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo
Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 5 HP
வாழ்க்கையில் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மனநிம்மதியைக் குலைத்திடுகையில் புதிய பறவையை வரவிடாமல் பழைய பறவை அதகள அமர்க்களம்
பண்ணும்போது .........இந்தவகை மன அழற்சியை நடிகர்த்திலகத்தை விட யாரால் உருவகப்படுத்தி உயிர் கொடுத்திடஇயலும் ?
கைகளைப் பரப்பி வேதனை பொதிந்த வதனத்தை வானத்தை நோக்கி எங்கே நிம்மதி என்று தேடித் தள்ளாடும் NT's Signature Pose in this Signature song from his Signature Movie of Lifetime!
https://www.youtube.com/watch?v=___CnUWEADk
Quote:
Quote:
The End of Part 6. NT returns with his 'solo' songs to rivet our minds and hearts
In Ellam Unakkaga NT's only costume Shirt & Dhoti. This is the uniqueness of
the film and NT saves the expenses meant for costumes. I hope those who have
seen the movie have noticed this aspect.
Regards
Dear senthilvel sivaraj sir,
thankyou very much for uploading the video of tiruppur function.i think this is the first time in this thread we got an opportunity to watch the celebrations of nt birthday from the kongu mandalam.
ஆற்றல் பகிர்வு தரவரிசை 7 : 5 HPQuote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 7
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
வாழ்க்கையில் பள்ளி கல்லூரிக்குச் சென்று கற்றுக்கொண்ட கல்வி வாயிலாக நாம் பெரும் ஞானத்தை விட நம் வாழ்க்கைச் சூழலில் நமது பெற்றோர் சகோதரசகோதரிகள்
உற்றார் உறவினர் நண்பர்கள் நாம் சந்திக்க நேரும் மனிதர்கள் மூலமாகப் பெரும் அனுபவ ஞானம் போதி மரத்தடி புத்தரின் ஞானம் போல் அதிக மதிப்பானது.
நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் எதிர்பட்ட முட்கள், மலர்கள், பாராட்டுகள், வசவுகள், கேலி,கிண்டல்கள், இழப்புக்கள் நம் மனதைப் பதப்படுத்தி ஒரு முற்றும் துறந்த முனிவனின் மனநிலைக்கு கொண்டு சென்று விடும். தன்னம்பிக்கை இழந்திடாத தைரியசாலிகள் போற்றுதலையும் தூற்றுதலையும் பொருட்படுத்தாது ஏற்றுக்கொண்ட பணியில் மட்டுமே கவனம் செலுத்தி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் மனம் தளராத வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வர். மனச்சோம்பல் கொண்ட கோழைகள் தன்னம்பிக்கையிழந்து மனநிலை பிறழ்ந்து தான் சரிவை சந்திப்பதோடல்லாமல் தன்னை நம்பிப் பின்தொடர்பவரையும் குப்புறத்தள்ளி குழிபறித்து மூடியும் விடுவர். விரக்தி மேலிடும் சூழல்களில் நடிகர்திலகத்தின் தத்துவார்த்த பாடல்களே நமக்கு மருந்தும் விருந்தும் !!இப்பாடல்களை உள்வாங்கி அதை உணர்வுபூர்வ ஆற்றல்களுடன் அவர் தன்னம்பிக்கை மேலிட வெளிப்படுத்தும் விதமே அலாதி!
Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1.5 HP
தென்னையைப் பெத்தா இளநீரு புள்ளையைப் பெத்தா கண்ணீரு ! ......யாரையும் நம்பி நான் பிறக்கவில்லை...போங்கப்பா போங்க!!
https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU
Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP
சட்டி சுட்டதடா கை விட்டதடா ....ருசி கண்ட பூனை உறி யை சுற்றிசுற்றி வரும்.... சூடுகண்ட பூனை?
https://www.youtube.com/watch?v=uANHNjdORiE
Concept 3 Mechanics / உறைவாற்றல் 1 HP
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் ....ஆறு மனமே ஆறு !!
https://www.youtube.com/watch?v=HGM745ygTCw
Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 1.5 HP
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ....peace of mind?
https://www.youtube.com/watch?v=wfEPBX1mdVU
Quote:
Quote:
The End of Part 7. But, NT comes back ….. with his dream girls with unbelievable energy in going around them!!
Congratulation to Mr ESVEE Sir for reaching another milestone.
Regards
இன்றைய தினமலரில் நடிகர் திலகத்தின் சிறப்பு மிக்க நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நவராத்திரி படத்தை பற்றிய ஒரு சிறப்புச் செய்தி : -
http://cinema.dinamalar.com/tamil-ne...hiri-movie.htm
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
ஆற்றல் பகிர்வு தரவரிசை 8 : 5 HP திருவிளையாடல்Quote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 8
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
நாம் கடவுளைக் கண்டது கிடையாது ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளாக நம் உள்ளுணர்வு வாயிலாக உணர்ந்திருக்கிறோம் கடவுளுக்கும் ஒரு வடிவத்தை நிலைநிறுத்திய நடிப்புக் கடவுளின் திருவிளையாடல் திரைப்படத்தில் அப்படி ஒரு பரவச உணர்வை நம்மை அனுபவிக்க வைத்தார் கடவுள் மனிதரூபத்திலும் இப்புவிக்கு வந்தால் எப்படி இருப்பார் என்னென்ன செய்வார் தனது பக்தர்களின் நலத்தை எப்படிக் காப்பார் என்பதெற்கெல்லாம் ஒரு விடையாக இப்படம் அமைந்து வெள்ளிவிழாக் காணும் வண்ணம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களையும் பக்தியுடன் உள்ளடக்கியிருந்தது கடவுளையும் ஆடவிட்டுப் பாடவைத்துப் பார்ப்பதில் நாம் அசகாய சூரர்களே ! அதிலும் வெவ்வேறு வகையான ஆற்றல்களை வாரி வழங்கியிருக்கிறாரே நடிகர்திலகம்
Concept 1 Dynamics / நகர்வாற்றல் 2 HP
மனித உடல் உயிர் நீங்கின் வெறும் கட்டையே என்பதை மட்டையடியாக என்னவொரு ஆட்டபாட்ட அபிநய ஜாலத்துடன் விவரிக்கிறார் சிவபெருமான் !
https://www.youtube.com/watch?v=U0viOT5Gowg
Concept 2 Statics அமர்வாற்றல் 1 HP
பாட்டும் அவரே பாவமும் அவரே ! ஒரு நடிகர்திலகம் ஐந்து நடிகர்திலகங்களாக Cell Division and Multiplication!! ஒவ்வொருவரும் ஒரு திறமையை ஒருசேர
அமர்ந்து வெளிப்படுத்தும் போது நம் கண்கள் இமைக்க மறந்து நமது இயக்கமும் நின்று போகிறதே!!
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0
Concept 3 Mechnics / உறைவாற்றல் 1 HP
நடிகர்திலகம் ஆடும் ருத்ரதாண்டவம் மெய்சிலிர்ர்க்க வைத்து நம்மை உறைய வைத்து விடுகிறதே !!
https://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 2 HP
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் பாடலிலும் ஹேமநாத பாலையா பாகவதருடன் பேச்சிலும் என்னவொரு உடல்மொழி வேடிக்கை
https://www.youtube.com/watch?v=kW3hnviVByk
https://www.youtube.com/watch?v=Q-y0r-amJsg
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
சென்ற பதிவில் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் என்று குறிப்பிட்டிருந்தேன். மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் உயரிழந்தது பற்றி பேசினோம். அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் சுட்டிக் காட்டியது என்னவென்றால் தர்மம் எங்கே மூலமாக நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.
தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.
இந்த விழாவின் புகைப்படங்கள் 9 மாதங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன அந்த படங்களை மீண்டும் நான் இப்போது பதிவு
செய்திருக்கிறேன். இந்த புகைப்படங்களை 9 மாதத்திற்கு முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவிறக்கம் செய்த வினோத் சாருக்கு நன்றி.
இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
http://i61.tinypic.com/1zlrkpd.jpg
(தொடரும்)
அன்புடன்
மேலே உள்ள படத்தில் பெருந்தலைவருடன் உரையாற்றிக்கொண்டிருப்பவர் குடந்தை ராமலிங்கம், கவனிப்பவர் தண்டாயுதபாணி.
தமிழக ஸ்தாபன காங்கிரஸின் மாபெரும் தூண்கள் நேதாஜி, தண்டாயுதபாணி, குடந்தை ராமலிங்கம்... இவர்களுடன் பணியாற்றிய பெரும் பேறு அடியேனுக்குக் கிடைத்ததற்கு இறைவனுக்கு மிக்க நன்றி.
முரளி சார் குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் கல்லூரி படிப்பு முடித்து முழுமையாக ஸ்தாபன காங்கிரஸிலும் சிவாஜி ரசிகர் மன்றத்திலும் ஈடுபட்ட அந்நாள் நினைவுகள் வாழ்க்கையில் பசுமையானவை. மறக்க முடியாதவை.
மிக்க நன்றி முரளி சார்.
Gopal Sir.......
:cry2: avuuuu................!
https://www.youtube.com/watch?v=tDU7NB440bs
THAT's LION !!!!!
http://i501.photobucket.com/albums/e...psfc74a966.jpg
ஆற்றல் பகிர்வு தரவரிசை 9 : 4 HPQuote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 9
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
காதல் என்னும் மாய உணர்வு ஆட்கொள்ளாத மனிதருண்டோ இளம் வயதிலிருந்து முதுமை வரை காதலின் தன்மை அதன் ஆழம் மாறிக்கொண்டே வரும்.
அந்தந்த வயதிலும் நடிகர்திலகம் மட்டுமே காதலுக்குரிய ஆற்றல் வெளிப்பாட்டை அளந்து தந்திருக்கிறார் ரசிக்கும் வண்ணம்!
Concept 1 Dynamics நகர்வாற்றல் 2 HP
இளமை பொங்கி வழியும் பருவத்தில் காதலியின் மனதில் இடம் பிடிக்க எத்தனை பிரயத்தனங்கள்
https://www.youtube.com/watch?v=H_hwsxnPjK0
Concept 2 Statics அமர்வாற்றல் 1 HP
திருமணத்திற்கு பிறகு வாரிசு உருவாகி வரும் வேளை யில் காதல் அன்பான அரவணைப்பாக மாற வேண்டும்
https://www.youtube.com/watch?v=i9cQZwh_0y4
Concept 3 Mechaics உறைவாற்றல்1/2 HP
வாலிபக் காதல் உணர்வுகள் உறையத் தொடங்கினாலும் மனைவியை நேசிப்பதே காதலின் உயர்வு
https://www.youtube.com/watch?v=NY0OaR-wSWM
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 1/2 HP
வயது முதிர்ந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படினும் விழுதுகள் கைவிடினும் மனைவிஎன்னும் வேர் ஆலமரத்தை தாங்கி நிற்குமே
https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg
Quote:
Quote:
The End of the penultimate Part 9. But, NT returns to the valedictory of this short series parading his energy levels in two of his life time limelight movies Sivandha Mann and Vasantha Maaligai simultaneously
Quote:
Quote:
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 10
Theme : NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
ஆற்றல் பகிர்வு தரவரிசை 10 : 15 HP
Concept 1 Dynamics நகர்வாற்றல் 5 HP!
சிறுவயது மனக்கீறல்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய பக்க விளைவுகளை உண்டு பண்ணி மது போதைக்கும் மங்கையர் போகத்துக்கும் அவனை அடிமைப்படுத்தி வாழ்க்கைப் பாதையையே புரட்டிப் போட்டு விடுகின்றன என்பதைப் பொட்டிலடித்தாற் ப் போல உணர்த்திய காவியம் வசந்த மாளிகை.
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஆடல்பாடலில் நடிகர் திலகத்தின் ஆற்றல் வெளிப்பாடு வியப்புக்குரியது! நடன அசைவுகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நளினம் வேகநடை உடல் திருப்பங்கள் முகபாவங்கள் அபாரம் !
https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE
Concept 2 Statics அமர்வாற்றல் 3 HP!
கௌரவம் மிக்க பாரிஸ்டர் ரஜினிகாந்தாக நடிகர்திலகம் அப்பாத்திரத்தின் Turbulent Natureக்கு மாறாக அமைதியான முறையில் அமர்ந்து தனது உணர்வுகளையும்
விருந்து நடனத்தின் ரசிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் விதம் வேறு எந்த நடிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாது !!
https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk
Concept 3 Mechanics 3 HP !
தாய் மறைவின் வேதனையை மறக்க கேளிக்கை விடுதி சென்று மதுவின் மயக்கத்துக்கு உட்படும்போது பாடல் மாது சௌகார் ஜானகியின் ஆடல்பாடல் குரல்
இனிமையில் மனதைப் பறிகொடுத்து உறைந்து அமர்ந்திருக்கும் போது விடுதியின் உல்லாச மயக்க சூழலில் நடிகர்திலகத்தின் பாவனை ஆற்றல் வெளிப்பாடுகள் நமது மனதை அவர்பால் பரிதாபத்தால் ஈர்க்கின்றன !!
https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 4 HP!
சிவந்தமண் திரைப்படம் நடிகர்திலகத்தின் திரையுலகப் புகழேணி ஏற்றத்தில் ஒரு முக்கியமான படிக்கட்டே ! கொடுமைக்கார திவானை அழித்திட நாடக
ஆடல்பாடல் திட்டத்தில் அரபு உடையணிந்து கையில் சவுக்கை சுழற்றி காஞ்சனாவை சுழன்றாட வைக்கும் காட்சியமைப்பு தமிழ்த் திரையில் மறக்கமுடியாத சிறப்பு நிகழ்வு. Signature song of LR Easwari adds the pep நடிகர்திலகத்தின் கூர்பார்வை சவுக்கை சொடுக்கும் ஸ்டைல்...அபாரமான உடல்மொழியாற்றல்!!
https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQ
Quote:
THE END But NT promises to return for his thanks giving to his villains under a new series 'உன்மத்த முகமூடிக்குப் பின் உத்தம வில்லன்கள் ...' from January, 2015!!
Is it true, Shanthi theatre going to demolish ?
http://tamil.oneindia.com/img/2014/1...hennai-600.jpg
சென்னை: சென்னையில் உள்ள பழமையான சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். சென்னையின் முதல் ஏசி தியேட்டர் என்ற பெருமையுடையது. முதலில் இந்த தியேட்டர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர் அண்ணாசாலையில் இருந்த இன்னொரு தியேட்டரான ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஆவார்.
அப்போதைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் வெங்கடேஸ்வரா. இதனையடுத்து சிவாஜி கணேசனின் பாவமன்னிப்பு திரைப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படம் வெள்ளிவிழா கண்டது.
சென்னை: சென்னையில் உள்ள பழமையான சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். சென்னையின் முதல் ஏசி தியேட்டர் என்ற பெருமையுடையது. முதலில் இந்த தியேட்டர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர் அண்ணாசாலையில் இருந்த இன்னொரு தியேட்டரான ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஆவார்.
அப்போதைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் வெங்கடேஸ்வரா. இதனையடுத்து சிவாஜி கணேசனின் பாவமன்னிப்பு திரைப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படம் வெள்ளிவிழா கண்டது.
சாந்தி தியேட்டர் 1962ஆம் இந்த தியேட்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். சிவாஜி நடித்த அனைத்து படங்களும் சாந்தி தியேட்டரில்தான் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பி வழியும். வெள்ளிவிழா படங்கள் சிவாஜியின் திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல்மரியாதை ஆகிய திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.
35 படங்கள் 100 நாள்
சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 35 திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. பழனி, தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்கள் 132 நாட்கள் திரையிடப்பட்டன. 2005ல் ரஜினி திறப்பு 2005ஆம் ஆண்டில் தியேட்டரை புதுப்பித்தனர். சாந்தி, சாய் சாந்தி என இரண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். பிரபுவின் திரைப்படங்கள் பிரபு நடித்த திரைப்படங்கள் இங்கு நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. பிரபுவின் சின்னத்தம்பி திரைப்படம் வெள்ளிவிழா கண்டது.
சிவாஜி புரடெக்சன் தயாரிப்பான ராஜகுமாரன் சினிமா நூறு நாட்கள் ஓடியது. ரஜினியின் சந்திரமுகி ரஜினியின் சந்திரமுகி படம் இங்கு திரையிடப்பட்டு 888 நாட்கள் ஓடியது.
சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டிலில் புதுப்பிக்கப்பட்டு இங்கு திரையிட்டனர். 50 நாட்கள் அப்படம் ஓடியது. விக்ரம் பிரபு நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம் பிரபு நடித்து வரும் கும்கி,இவன் வேற மாதிரி உள்ளிட்ட திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது.
லிங்கா கடைசி படமா?
தற்போது லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தியேட்டர் இடிக்கப்பட உள்ளது.
சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். பழமையான தியேட்டர்கள் இடிப்பு சென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன.
மல்ட்டிப்ளக்ஸ் காம்ளக்ஸ் இடிக்கப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. நான்கு தியேட்டர்கள் இப்போது சாந்தி தியேட்டரும் இடிக்கப்பட்டு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...oo-217285.html
Very very sad news. (Shanthi theater going to demolish).
நடிகர்திலகத்தின் சாந்தி திரை அரங்கம் இடிக்கப்படப் போவதாக இணைய தளத்தில் இன்றைய தினமணி மற்றும் தினமலர் செய்திகள். அது பற்றி என் முகநூல் பதிவு கீழே :-
http://www.dinamani.com/latest_news/...cle2577523.ece
இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களுக்கு இது ஒரு வருத்தமான செய்திதான், என் இளம் வாலிப வயதில் இத்திரையரங்கில் , பால்கனி பகுதியில் அமர்ந்து கொண்டு பார்த்து, ரசித்து ஆனந்தப்பட்ட பல படங்கள் உண்டு. வேறு எந்த திரையரங்கத்தில் சிவாஜியின் படத்தைப் பார்த்தாலும், சாந்தி திரையரங்கில் பார்த்தால்தான் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். கர்ணன், திருவிளையாடல் , ஊட்டி வரை உறவு, சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள், தெய்வமகன், வியட்நாம் வீடு, தீபம், பட்டிக்காடா பட்டணமா, தியாகம், எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, அவன் தான் மனிதன், வசந்த மாளிகை, திரிசூலம் இப்படி பல நூறு வெற்றிப் படங்களை இந்தத் திரையரங்கத்தில் கண்டு களித்துள்ளேன்.
கால ஓட்டத்தில் கருத்து மாற்றங்கள் இயல்பே இவ்வளவு வருடங்கள் உழைத்த ரசிகர்களின் சுமைதாங்கியாக வீற்றிருந்த சாந்தி திரைப்பட கட்டமைப்பு இடிக்கப்படுவது
மனவருத்தமே எனினும் காலப்போக்கில் கட்டடத்தின் வலிமை இழப்பு கூட காரணமாக இருக்கலாம். தவிர்க்க முடியாததே! ஒருவேளை புதிய அடுக்கு வணிக வளாகமாக உருவெடுக்கும்போது சிறிய அளவில் மீண்டும் சாந்தி திரைக்கூடங்கள் நிறுவிடும் வாய்ப்பு உள்ளதே! துளிர்க்கும் நம்பிக்கையுடன் மாற்றங்களை நேர்மறையாக அணுகுவோமே! நடிகர்திலகம் பேரவை சார்பில் வேண்டுகோள் விடுக்கலாமே!
இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் சார் .
நான் பதிவிட்ட நிழற்படத்திற்கு நன்றியுடன் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி . நீங்கள் பதிவிட்டு வரும் 1972ஆண்டின் நிகழ்வுகள் நேரத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய என் அனுபவத்தின் ஒரு சிறிய பதிவு..
வேலூரில் 1972 ஆகஸ்ட்மாதம்
நான் படித்த கல்லூரியில் ஸ்தாபன காங் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு மோகன் என்பவரும்
திமுக சார்பாக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட திரு ஏ .சி .சண்முகம் இருவரும் வெற்றி பெற்றார்கள் .
அதே ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை திமுகவிலிருந்து இருந்து நீக்கியதற்கு ஆதரவு
தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒட்டு மொத்தமாக எம்ஜிஆருக்கு ஆதரவு
தெரிவித்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்கள் . இந்த ஆதரவு எம்ஜிஆர் நடத்திய போராட்டங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவு தந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவன் என்று முறையில் குறிப்பிடுகிறேன் .
Quote:
அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி (தலைப்புக்கு நன்றி : KCS Sir /வாசு சார்) நடிகர்திலகமே!!
திரைப்படங்களில் கதாநாயகனின் புஜபல பராக்கிரமங்களைக் காட்டும் சண்டைக் காட்சிகளும் சாகச நிகழ்வுகளும் ரசிகர்களைத் திருப்திப் படுத்துவது அந்த நடிகர் டூப் பயன்படுத்தாது ஒரிஜினலாக அந்தக் காட்சியில் தோன்றும்போது மட்டுமே ! அந்த வகையில் பெரும்பாலான மேலைநாட்டு நடிகர்கள் பஸ்டர் கீடன், ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி, புருஸ்லீ, ஜாக்கிசான், ஆர்னால்ட் குறிப்பிடத்தக்கவர்கள். என்றாலும் மிகவும் ஆபத்து நிறைந்த சண்டை சாகசக்காட்சிகளில் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய தருணங்களில் இவர்களும் டூப் நடிகர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொண்டவர்களே!Quote:
Quote:
சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk
Risk and Rusk Part 1 : Fire Play நெருப்பு விளையாட்டு !
ஆனாலும்ரசிக்கத்தகுந்த காட்சிகளை நமது படங்களிலும் காண இயலும்
சண்டைக்காட்சிகளில் சாகசங்களில் தானே நடிக்க வேண்டிய சூழலில் பின்வாங்காது முன் நின்று நெருப்போடு விளையாண்டு விலங்குகளை அடக்கி சாகசம் செய்திருக்கிறார் நடிகர்திலகமும் ரிஸ்க் எல்லாம் தனக்கும் ரஸ்க்கே என்று அவர் நிரூபித்த சில சண்டை/சாகச காட்சிகள்
(1958)Quote:
ரிஸ்க் 1 நெருப்பு விளயாட்டு
ரஸ்க் 1 காத்தவராயன்
காத்தவராயன் திரைப்படத்தில் குறளி வித்தைக்காரராக வரும் பாலையா சிவாஜி மீது மோடி எடுக்க விடாமல் நெருப்பை ஊதி வீசும் காட்சியில் அஞ்சாது தானே முன் நின்று நடித்திருப்பார் நடிகர்திலகம். சந்திரபாபுவுடன் கொட்டமடித்துக் கொண்டு அவர் நடத்தும் நெருப்பு விளையாட்டு!
சுவர் இருந்தால்தானே சித்திரம் அதுபோலவே நடிகனுடைய அடிப்படை சொத்தே முகம்தானே அந்த முகத்துக்கு நேரே ஊதப்படும் நெருப்பை எவ்வளவு தைரியமாக எதிர்கொள்கிறார் நடிகர்திலகம்!!
Enjoy the most hilarious sequence in the history of NT movies where he parades his highest possible energy in fusion with the stalwart comedians Baaliaah and Chandrababu!! You will never ever forget the rhythmic legwork and body language of NT during the dances!! Sure, you may like to watch this sequence again and again!!
https://www.youtube.com/watch?v=Eew6XEZ9s1U
rusk 2 Uyarndha Manithan ரஸ்க் 2 உயர்ந்த மனிதன்
உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் இறுதியில் நெருப்பிலிருந்து சிவகுமாரைக் காப்பாற்றும் காட்சியிலும் பாவமன்னிப்பு திரைக்காவியத்தில் ராதா வைத்த நெருப்புக்குள் சிக்கித்தவிக்கும் போதும் ஒரிஜினலாக ரிஸ்க் எடுத்து அசத்தியிருக்கிறார் நடிப்புத்தீ!(9:20 onwards enjoy!)
https://www.youtube.com/watch?v=z39LSARvM1g
rusk 3 Pavamannippu ரஸ்க் 3 பாவமன்னிப்பு
https://www.youtube.com/watch?v=ySGev6uOkeA
rusk 4 Ennaipol oruvan
Here in this 1976 movie NT plays with welding fire from Manohar in a stunt scene!! could not upload!!
Quote:
Quote:
NT risks to come back for proving his original taming ability on Animals!
This thread is fully under the control of Mr Senthil Sir through his innovative analysis on NT through
various dimesnion. But he can succeed only in part because the acting prowess of NT is like that. ALLA ALLA KURAIYADHA AMUDHAMAM NUM GANESARIN NADIPPU
ATRAL. Kudos to Mr SS sir.
Regards