Dhina Ithazh 04/04/15
http://i61.tinypic.com/10gib60.jpg
Printable View
Dhina Ithazh 04/04/15
http://i61.tinypic.com/10gib60.jpg
எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஜமீன்தார் கஜேந்திரன் - வேடத்தில் நம்பியாரின்
ஆணவ பேச்சு
திமிரான பார்வை
அடக்குமுறை
வலியோரை மிரட்டுதல்
பிறரை கேலியாக பார்ப்பது என்று பல்வேறு குணாதிசயங்களை கண்டு
http://i61.tinypic.com/aoxoao.jpg
கொதித்தெழுந்த கலைவேந்தன் மக்கள் திலகம் சாட்டை எடுத்த பிறகு நம்பியாரின் ஆணவம் - திமிர் அடங்கி போனது. ரசிகர்களும் பார்வையாளர்களும் ரசித்தார்கள் . என்ன செய்வது ? நம் கலைவேந்தன் எம்ஜிஆர் ஒருவர்தான் இவரை அடக்கி விட்டார் .இனி தலை தூக்கினால் இந்த நம்பியாரை கலைவேந்தன் எம்ஜிஆர் கவனித்து கொள்வார் என்று ரசிகர்களும் பார்வையாளர்களும் கூறுவது காதில் விழுகிறது .
இந்த பதிவு சற்றே வழக்கத்திற்கு மாறுபட்ட ஒன்று - இந்த திரியில் இன்னும் அலசப்படாத ஒன்று ( அப்படி ஒருவேலை இங்கு யாராவது அலசி இருந்தால் , அவருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் , பாராட்டுக்கள் ). மக்கள் திலகத்தை அவர் செய்த தருமங்கள் மூலமும் , வாழ்ந்த வாழ்க்கையின் மூலமும் , செய்த உதவிகள் மூலமும் , பிறர்களுக்கு கொடுத்த வாழ்வு மூலமும் , அடைந்த சாதனைகள் மூலமும் அவர் எப்படிப்பட்டவர் என்பதினை அறிந்துகொண்டோம் - அப்படித்தான் நமது பிற்காலமும் அறிந்துகொள்ளும் ... இந்த பதிவில் அவருடைய பெயர் சாதித்த பெருமைகள் என்ன வென்பதை எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....
சில விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு அவருடைய பெயர் ஆற்றிய சாதனகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன் - பதிவு சற்றே நீன்று விடமோ என்ற பயமும் உள்ளது - அப்படியே ஆகி விட்டாலும் மன்னிக்கவும் - ரூம் போட்டு யோசித்து எழுதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எழுதி முடித்து விடலாம் - ஆனால் எண்ணங்கள் பிரவாகம் எடுத்து வரும் பொழுது ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கடினம் .
நமக்குள் பல வேற்றுமைகள் உள்ளன - நாம் பிறரை ஒத்து போகவேண்டும் , வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை . நாம் யாரை வணங்க வேண்டும் என்பதையும் , எந்த மதத்தை மதிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு எடுத்துகொள்ளும் உரிமை நமக்குள்ளது - ஒருவரை நமக்கு மிகவும் பிடித்து போய்விட்டால் , அவர் செய்த தவறுகளும் நமக்கு இனிப்பாகத்தான் தெரியும் , யாராவது ஒருவர் நமக்கு பிடித்த நபரை திட்டி விட்டால் , அவர் பேச்சில் கடுகு அளவு உண்மை இருந்தால் கூட , அவரை கொலை செய்யும் அளவிற்கு நம் உணர்சிகளுக்கு நாம் அடிமை ஆகி விடுகிறோம் . இதுவே ஒருவரை நமக்கு பிடிக்க வில்லை என்றால் , அவர் உத்தமனாக இருந்தாலும் நம் மனம் அவரை ஏற்று கொள்வதில்லை - அவரை பற்றி மற்றவர்கள் திட்டும் போது நமக்கு தேனை குடிப்பது போல உள்ளது - இப்படித்தான் நாம் நம் மதத்தின் மீது வைத்திருக்கும் வெறி - இந்த கடவுள் தான் உயர்தவர் , இவர்தான் சிறந்த இறைவன் - என் மதம் தான் சிறந்தது என்று நமக்குள் இருக்கும் பாச பிணைப்பை தேவை இல்லாமல் துண்டித்துக் கொள்கிறோம் - மதம் என்ற போர்வையில் ..
Creator is one but creativities are many - என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் , நமக்குள் எந்த மத வேறு பாடுகளும் இருக்க முடியாது - ஏசுவும் ஒன்றே , ஈசனும் ஒன்றே என்ற பரந்த எண்ணம் நமக்குள் வந்துவிடும் - creativity என்று நான் இங்கு சொல்ல வந்தது ரூபங்கள் - நமக்கு பிடித்த பெயர்கள் அந்த ஒரே creator - இறைவனுக்கு அளித்து , நமக்கு பிடித்த வழிகளில் வணங்குகிறோம் .
கிருஷ்ணனாக , இராம சந்திரனாக , ஏசுவாக , அல்லாவாக , புத்தராக , மகாவீரராக , குருநானக்காக இருப்பது ஒரே ஒரு creator தான் . We are all created by the grand designer called Lord . இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் , நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க இதைவிட சிறப்பான வழி இருக்க கூடுமா ?? அந்த ஒரு creator ரின் ஒரு creativity தான் இராமச்சந்திரன் - அந்த பெயருக்குத்தான் எவ்வளவு பெருமைகள் என்பதைத்தான் இங்கு சொல்ல போகிறேன் -
இதுவரை அவருடைய மாண்புகளுக்கு , சாதனைகளுக்கு , பெருமைகளுக்கு அவருடைய பெயரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது . அவரை போலவே அவர் பெயரும் மிகவும் பெருமை வாய்ந்தது - அந்த பெயரை இந்த திரியில் பலர் மூலம் பல தடவைகள் சொல்கின்றோம் - நமக்கும் எவ்வளவு பெருமைகள் வந்து சேரும் என்று கணக்கிட்டால் , அது கணக்கில் அடங்காது
இராமனின் பெயரை 3 தடவைகள் ஒருவர் சொன்னால் அவர் 1000 தடவைகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்ன பலன் கிடைக்குமாம் - நீங்கள் கேட்கலாம் மூன்று எப்படி ஆயிரத்திற்கு சமமாகும் ?? - இதோ அதற்க்கு விடை :
ராமனின் பெயரை சற்றே உன்னிப்பாக கவனிப்போம் - ராமா வில் இரண்டு சமஸ்க்ருத ( sanskrit ) வார்த்தைகள் உள்ளன - ரா & மா
ரா ( 2nd Consonant in sanskrit ) : ய , ரா , ல வ , ஸ , ஷ
மா ( 5th Consonant in sanskrit ) : ப , பா ப , ப , மா
ரா = 2 ; மா = 5 ; ராமா = 2*5= 10
ராமா ராமா ராமா = 2*5*2*5*2*5 = 10*10*10 = 1000
அவர் பெயரில் புதைந்து இருக்கும் பலன் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் - அவருடைய பெயரை திரும்ப திரும்ப சொல்லும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் பலன் கணக்கிலடங்காது - இறையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவனுக்கும் , ராமன் பெயரை தன்னையும் அறியாமல் உச்சரிக்கும் போது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கின்றது - இதுவரை அவர் செய்த நல்ல விஷயங்களை இந்த திரியில் எடுத்து சொல்கிண்டீர்கள் - இந்த பதிவுமூலம் எப்படிப்பட்ட பெயரை அவர் தாங்கி உள்ளார் - அந்த பெயர் அவருக்கு எவ்வளவு பெருமை சேர்த்து கொடுத்தது - இன்னும் கொடுக்கின்றது - அவரையே தெய்வமாக நினைக்கும் உங்கள் எல்லோருக்கும் பெயரை உச்சரிப்பது மூலமும் எவ்வளவு நன்மை கிடைக்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவை பதித்துள்ளேன் -
திரு கலைவேந்தன் - என் பதிவு கொஞ்சம் disconnect ஆகா இருந்தால் மன்னிக்கவும் - ஒரு புதிய கோணத்தில் என் எண்ணங்களை ஓட விட்டேன் - அவ்வளவுதான் !!
அன்புடன்
ரவி
http://i61.tinypic.com/jgr440.jpg
தனது 54 வது பிறந்த நாளினையொட்டி, குடும்பத்தினருடன், இன்று புரட்சித்தலைவரின் நினைவிடம் சென்று வழிபட்ட - இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மாநில தலைவரும், இத்திரியின் பதிவாளர்களுள் ஒருவருமான சைதை திரு. ராஜ்குமார் அவர்களுக்கு -
http://i62.tinypic.com/4zu81u.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொதுநல சங்கத்தின் சார்பிலும், எம். ஜி. ஆர். பக்தர்கள் அனைவரின் சார்பிலும், இத்திரி அன்பர்கள் சார்பிலும், நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Ravi sir
superb writing about Makkal Thilagam MGR comparing with vishnu mantra .New concept created by you .Thanks
Ravi sir .
Wish You A Happy Birth day Rajkumar Sir .
Best wishes for the day Rajkumar Sir.
This month header image.
http://i125.photobucket.com/albums/p...ps4wsaz2qz.jpg
srimgr.com
இன்று பிறந்த நாள் விழா காணும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர்
திரு. ராஜ்குமார் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க !!!
http://i59.tinypic.com/x5bgc1.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஆனந்த ஜோதி " யாக பிரகாசித்தவர்.
இந்த வார பாக்யா இதழில் இந்த படத்தின் திரைக்கதையை பிரசுரம் செய்துள்ளனர்.
http://i58.tinypic.com/2wnwk1z.jpg
http://i58.tinypic.com/9joqvn.jpg
http://i59.tinypic.com/dompfq.jpg
http://i59.tinypic.com/of673m.jpg
http://i61.tinypic.com/191t3q.jpg
http://i60.tinypic.com/1z53jw0.jpg
தனது ஹரிஹரன் பிலிம்ஸ் சார்பில் படத்தை தயாரித்தவர் பி.எஸ். வீரப்பா.
வி.என்.ரெட்டி, எஸ்.ஏ. சாமி ஆகியோர் படத்தை இயக்கி இருந்தனர்.
இதயக்கனி -ஏப்ரல் மாத இதழ் - செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி.
http://i59.tinypic.com/2ynja7t.jpg