-
#கருணையின் #எல்லை...
துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது பொன்மனச்செம்மலின் சிறந்த பண்பாகும்...
எம்ஜிஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு #பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கினார்.
பொன்மனச்செம்மல் அவர்களின் கருணை மனிதர்களிடம் மட்டுமல்ல...ஓரறிவு ஜீவன்களிடமும் எந்தளவு இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்றே சான்று...
ஒருநாள் தேவர் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, மேக்கப் அறையிலிருந்து எம்ஜிஆர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. தேவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நேரே எம்ஜிஆரைத் தேடிப்போய்விட்டார்.
அங்கே, எம்ஜிஆர், பாத்ரூமுக்குள் இருந்தார். வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பின்பு கதவைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் சிரித்தபடி ஏதோ சாதித்துவிட்டதைப் போல வெளியே வந்தார்.
தேவரைப் பார்த்து, “ஒரு வண்டு தண்ணிக்குள்ள விழுந்துகிடந்தது. எவ்வளவோ முயற்சிபண்ணியும் அதை வெளியே கொண்டுவர முடியல. கடைசியில் கையைவிட்டு எடுத்து வெளியில் விட்டுட்டேன். பாவம்ண்ணே அது. இப்பப் பறந்துபோயிருச்சு என்றார்.
தேவர் நொந்துகொண்டார். எத்தனை பேர் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் வண்டைப் பிடித்து வெளியே விட்டேன் என்கிறார்’’ அவர் ஒன்றும் சொல்லவில்லை. போய்விட்டார்.
இதுதான் #மனிதர்களுக்கும் #பொன்மனச்செம்மலுக்கும் உள்ள உள்ள வேறுபாடு.
எம்ஜிஆருக்கு அந்த வண்டு சாகக் கூடாது என்பது தான் மிக முக்கியமாக இருந்தது...
மற்ற விஷயங்களை விட.......... Thanks...
-
#மொய் #விளக்கம்
1967 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு மக்கள்திலகம் சென்றிருந்தார். மணமக்களை வாழ்த்திப் பேசும் போது ஒரு கேள்வியைக் கேட்டார்...
"எல்லோரும் மொய்ப்பணம் எழுதும் போது 11, 21, 51, 101 என்று பக்கத்தில் ஒன்று கூட்டி எழுதுகிறார்கள்..."
ஏன் தெரியுமா ? என்று கேட்டார்...
பல பேர் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும் யாரும் சரியான விளக்கத்தைக் கூறவில்லை...
இதனால் மக்கள்திலகமே தொடர்ந்தார்..
"10, 20, 50, 100 என்று எழுதும் போது கடைசியில் பூஜ்யம் வருகிறது. வாழப்போகும் தம்பதியினர் #வாழ்க்கையும் #பூஜ்யமாக #ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றைக் கூட்டிக்கொள்கிறோம்...
திருமணத்திற்கு முன் பூஜ்யமாக இருந்திருந்தால், திருமணம் ஆன பின் ஒன்று கூடி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஒன்று என்ற எண்ணைச் சேர்க்கிறோம்...
வாழ்க்கை என்பது முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்காகவே 11,21,51,101 என்று நாம் மொய்ப்பணம் எழுதுகிறோம்..." என்றார்.
சின்ன விஷயமாக இருந்தாலும்...அதை வாத்தியார் சொல்லும் போது...அடடா...! என்ன ஒரு இனிமை...
அந்த விஷயத்துக்கே தனி அந்தஸ்து வந்துடுதுல்ல...
#கலக்குற #வாத்தியாரே....... Thanks...
-
#தெய்வத்திற்குத் #தெரியாததா
மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு ... சிவாஜி, காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவதாகக் காட்சி...பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது...
மும்மரமாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத மின் கசிவினால் "செட்" தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. குழுவினர் அனைவரும் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பரிதாபமாக, அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து டெக்னீஷியன்கள் தீக்கு பலியாயினர்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது... அவர்களது மனைவிமார்களும், முக்கிய உறவினர்களும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தனர்..குடும்பத்திற்காக கஷ்டப்படுபவர் போயிட்டாரேன்னு கதறினர்...சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...புள்ள குட்டிங்களை எப்படி கரைசேர்ப்போம்னு புலம்பினர். இதைப் பார்த்து வருத்தமுற்ற உடனிருந்த டெக்னீஷியன்களும், குழுவினரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவினர்...
இந்த ஸ்பாட்டுக்கு சிறிது தூரத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நடந்ததை விசாரித்தார். எல்லோருக்கும் இந்த துக்கத்திலும் சிறிது மகிழ்ச்சி...ஏனெனில் எம்ஜிஆர் வந்துட்டார்...கண்டிப்பாகணிசமான தொகையைக் கொடுத்து உதவுவாரென்று. ஆனால் #எம்ஜிஆர் #ஒரு #பைசா #கூடத்தராமல் கிளம்புகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி... 'கேட்காமலே உதவி செய்யற வள்ளலாச்சே...' மனிதநேயமிக்க எம்ஜிஆரா இப்படி...
ஏன் இப்படி நடந்துகொண்டார்..."
என்று அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த வருத்தம்...
மறுநாள் காலை, பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து அவர்களின் மனைவிமார்களுக்கும், முக்கிய உறவினர்களுக்கும் ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டு...
என்ன ஏதென்றறியாமல் அங்கு செல்கின்றனர்...
எம்ஜிஆர் அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூலதனத்தையும் அளிக்கிறார்...
வந்திருந்தவர்கள் உறைந்துபோய், 'அண்ணே! நீங்க நேத்து பணம் தராததுனால உங்கள தப்பா நெனச்சுட்டோம். எங்கள மன்னிச்சுடு சாமி' ன்னு கதறினர்... 'நீங்க நல்லா இருக்கணும் மவராசா' ன்னு வாழ்த்தினர்...
அப்ப கூட பொன்மனச்செம்மல் வாயைத் திறக்கவில்லை...வழக்கம் போல தன் (பொ)புன்சிரிப்பையே பதிலாக அளித்தார்...
#நம் #இறைவன் #இதயதெய்வத்துக்குத் #தெரியாதான்ன! #யாருக்கு #என்ன #செய்யணும்னு...?!?!?!........... Thanks...
-
#உலகம் #சுற்றும் #வாலிபன்... வெளியான நாள் இன்று...
46 ஆண்டுகள் ஆகிறது..கிட்டத்தட்ட என் வயது...
நவீனத் தொழில்நுட்பத்தில்...
விரைவில் தமிழகமெங்கும்...
#VAATHIYAR #RETURNS
அதென்னெமோ தெரியல...
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது...அதையெல்லாம் மீறி,
அந்தக் கஷ்டங்களின் தீவிரத்தைக் குறைத்து, அதை மறக்கச்செய்ய வாத்தியாரின் படங்களால் மட்டுமே முடியுது...
எப்படி வெயிலின் உக்கிரத்தை குடை குறைக்கிறதோ அதுபோல...
உ.சு.வா திரைக்காவியம் வந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை நூற்றுக்கணக்கான முறை இதைப் பார்த்தபின்னரும் நமக்கெல்லாம் என்ன ஒரு எதிர்பார்ப்பு...
தியேட்டர்களில் இந்தப்படம் போடும்போது பாருங்க...
அமர்க்களத்தை...
வயதான எம்ஜிஆர் பக்தர்கள் கூட, இன்றைய இளைஞர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேக மாகவும், உற்சாகமாயிருப்பதையும் கண்கூடாகக் காணத்தானே போகிறோம்...
ஒவ்வொரு பக்தருக்கும் #அந்தளவு #உணர்வுப்பூர்வமான #பக்தி...
இப்பல்லாம் இதைபோல நெனச்சுக்கூடப் பார்க்கமுடியாது...
தனது ரத்தத்தின் ரத்தமான பக்தர்களை எந்தளவு சந்தோஷமா வெச்சுருக்காரு பாருங்க...கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் ... காலங்கள் கடந்தாலும் இது போன்ற உணர்வை, இந்த உலகில் வாத்தியாரைத் தவிர யாராலும் கொடுக்கவே முடியாது...
நெனச்சாலே புல்லரிக்குது...
STICKERS உபயம் : அதிதீவிர எம்ஜிஆர் பக்தர் திரு Chandrasekar Iyer...Thank u so much sir
-------------------------------------------------------------------
இந்த ஸ்டிக்கரை சந்திரசேகரன் சார் எடுத்து வரும் போது நாங்கள் myself and Gopala Krishnan sir அவரை சந்தித்தோம்.
அதை நாங்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தபோது
அருகில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து விட்டார்.
உடனடியாக அதில் ஒரு ஸ்டிக்கரை வாங்கி சென்று ஆட்டோவில் ஒட்டிச்சென்றார் .
ஆனால் அப்போது தான் தூறல் போட்டதால் ஆட்டோ கண்ணாடி ஈரமாக இருந்ததால் பிறகு ஒட்டிக்கொள்வதாக கூறிவிட்டார்.
என்ன அருமையான சந்திப்பு...
தலைவருக்கு பக்தர்கள் எங்கும் பரவி உள்ளார்கள்.
வாத்யாரே உந்தன் புகழை என்னவென்பது............... Thanks...
-
மக்கள் திலகத்தின் மாண்பு
'எங்க வீட்டுப் பிள்ளை' நூறாவது நாள் வெற்றி விழா மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நடந்தது.
அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை சிறுவன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஆர்வத்தில் எம்.ஜி.
ஆரின் கையை பிடித்து விட்டான்.
எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அந்த பையனின் கையைத் தட்டி விட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை முறைத்து பார்த்து விட்டு, அந்த சிறுவனை அருகில் அழைத்து அவனுடைய கையைப் பிடித்து குலுக்கி விட்டு திரும்பினார்.
அந்த பையன் தன் கையை பார்த்த போது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.சுற்றியிருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் அப்பையனின் கையை குலுக்கியது மட்டும் தான் தெரிந்தது.அருகில் நின்று கொண்டு இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை புரிந்தது.
('இரு பெரும் திலகங்கள்' என்ற நூலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி.என்.சிதம்பரம் எழுதியது.)........ Thanks...
-
அருமையான பதிவு HM Sir. பெண் குழந்தைகள் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் என்பது அவர் தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி அவர்கள் கல்வித்துறையில் அரசு மானியம் பெரும் பள்ளி கூடம் மற்றும் கல்லூரியை நடத்துவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு நீச்சல் தற்காப்பு கலையாக சிலம்பம் ஆகியவற்றை அவரே கற்றுக் கொடுத்திருக்கிறார். இதை இதய தெய்வத்தின் வளர்ப்பு மகள் மதிப்பிற்குரிய திருமதி கீதா மேடம் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்த போது அவர்களே கூறியது. யாருக்கும் இதுவரை தெரிந்திருக்காத ஒன்றையும் கூறினார். ஷுட்டிங் வெளியூர் செல்லாம் இருந்தாலும் விருந்தாளிகள் யாரும் வரவில்லை என்றால் ஞாயிறு அன்று ராமாவரம் தோட்டத்தில் இதய தெய்வம் சமையல் தானாம். அவர் சமையல் செய்யும் முறையை கேட்டவுடன் நானே அசந்து போனேன் ஏனென்றால் என் அம்மா எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறார். அதற்கேற்ற பதிவு வரும் போது பிறகு கூறுகிறேன்......... Thanks...
-
ஒவ்வொரு இரசிகர் நிலையில் தன்னை ஆட்படுத்தி அவர் அன்பை உணர்ந்து மகிழ்விக்கும் மகான் தான் எம். ஜி.ஆர் அவர்கள்,,,,.... புகழின் உச்சியில் இருந்த போதும் மற்றும் முதல்வர் ஆக இருந்த போதும் மாறாதவர்.......... Thanks...
-
#தாயாகி #நின்றாய்
பெரியார் நூற்றாண்டு விழா...
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெற்றது...
அந்த விழா ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி தன் குழந்தைக்குப் பெயர் வைக்க எம்ஜிஆர் அருகில் வர அந்த நேரம் பார்த்து தேசியகீதம் ஒலித்தது...குழந்தை 'வீல்' என்று அழ ஆரம்பித்து விட்டது...
உடனே எம்ஜிஆர் சமயோசிதமாக அந்தப் பெண்ணிடமிருந்து அவசரமாக குழந்தையை வாங்கி அந்தம்மாவிடமிருந்த பால்புட்டியை குழந்தையின் வாயில் வைத்து தன் கைகளில் ஏந்தியவாறு தேசியகீதம் முடியும் வரை நின்றார்...
அதுவரை குழந்தையும் அழாமல்
சமத்தாக இருந்தது...
அந்தக் குழந்தையாக நான் இருந்திருக்கக் கூடாதா ...! ......... Thanks...
-
#வாத்தியார் #பண்ணிய #மெர்சல்
கலைவாணர் மறைந்தபோது சென்னை தி.நகரில் இருந்த அவரது வீட்டில் ஏராளமான மக்கள் கூடிவிட்டனர்...
நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது...
அப்போது அங்கு பொதுவுடமை சிங்கம், இலக்கிய மன்னன் என்று போற்றப்பட்ட ஜீவா என்கிற திரு.ப.ஜீவானந்தம் இறுதி மரியாதை செலுத்தவந்தார்...
அளவுக்கதிகமான கூட்டம். ஜீவா அவர்களால் உள்ளே வரமுடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் தத்தளித்தார்...
இதைக் கவனித்த, கலைவாணரின் உடலுக்கு அருகே இருந்த #எம்ஜிஆர் #ஓடிப்போய் #காம்பவுண்டு #சுவர் #மேல் #அசால்ட்டா #ஒரு #ஜம்ப்... அப்படியே நின்று ஜீவாவை, தன் ஒரு கையால் சும்மா அலாக்காகத் தூக்கி, உள்பக்கமாக இறக்கிவிட்டார்...
அதைப்பார்த்த மக்கள் துக்கவீடு என்பதையும் சிலவிநாடிகள் மறந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்...
சினிமாவில் மட்டுமல்ல, "நிஜவாழ்விலும் ஹீரோ நம்ம வாத்தியாரு..."
வாத்தியார்னா சும்மாவா !!!
#நீ #க்ரேட் #வாத்தியாரே...!!!
......... Thanks...
-
அதிமுக எம்ஜிஆர் எனும் எஃகுனால் கட்டிய கோட்டை அதனால் தலமைமையில் எவர் என்று பாராமல் ஜெயிக்கிறது அன்று ஜெயலலிதா ஊழல் வழக்கு போல் இல்லாமல் இன்று ஆட்சி நடக்கிறது ஜெயலலிதா தலைமை இலாலாமல் அன்று ஒற்றுமையாக இருந்திந்தால் இன்னும் நல்ல பெயரோடு கட்சி இருந்திருக்கும் ...... Thanks...
-
From 20.3.2020 to 20.4.2020
Sunlfe
Murasu
Jaya
Mega
Vasanth TV channels.
MGR's 62. MOVIES TELECASTED.
1. Adimaipenn
2. Namnadu
3. Mattukkaravelan
4. En Annan
5. Thedi vantha mappillai
6. Engal thangam
7. Kumarikottam.
8. Rikshakaran
9. Neerum neruppum.
10.oru thai makkal.
11.sange muzhanku.
12.Nalla neram
13.Raman thediya seethai
14.Naan yen PIRANTHEN.
15.Idhaya veenai
16.ulagam sutrum valiban
17.pattikattu ponniah
18.urimai kural
19.Ninaiththai mudippavan
20.Naalai namadhe.
21.Idhayakani
22.Pallandu VAZHGA.
23.Neethikku thalai vananku.
24.uzhaikkum karangal
25.oorukku uzhaippavan.
26.Navarathinam.
27.kadhal vaganam
28.kanavan
29.Puthiya bhoomi
30.kannan en kadhalan
31.Ther tiruvizha
32.kudiyiruntha koil
33.Ragasiya police 115
34.vivasayi
35.kavalkaran
36.Arasakattalai
37.Thaikku thalaimagan
38.Petralthan pillaya
39.Thanipiravi
40.Chandrothayam
41. Mugarasi
42. Naan anayittal
43.Anbe vaa
44.Enga veettu pillai
45.Ayirathil oruvan
46. Kalangarai vilakkam
47. Kannithai
48. Thazhampoo
49. Thayin madiyil
50. Padakoti
51.Thozhilali
52.Deiva thai
53.panakkara kudumbam
54.vettaikaran
55.Dharmam thalai kakkum
56.Periya idathu penn
57.Neethikku pinpasam
58.Thayaikathathanayan
59.Tirudathe
60.Thai solla thattathe
61. NALLAVAN VAZHVAN
62.qulebagavali
63 anandha jothi
64 koduthu vaithaval
65 vikramathithan
Mannadhi mannan
Alibabavum 40 tirudargalum
Nadodimannan
Mahadevi
Total 69 movies.
Thanks to MR.Vinod, Bangalore
-
எம்ஜிஆர் எனும் எழுத்து மீது மை சிந்தினாலே தாங்க மாட்டார்கள் எம்ஜிஆர் பக்தர்கள் இப்படி பட்ட பக்தர்கள் கோடிகணக்கில் அன்றும் இன்றும் இருப்பதால் தான் எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி , அபூர்வப்பிறவி, பேரற்புதப்பிறவி...........என்பது... Thanks.........
-
இந்த உலகத்தில் நம் புரட்சிதலைவருக்கு போல உண்மை ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் இல்லை.
அவரின் வரலாற்று வெற்றிகளுக்கு அன்று முதல் இன்றுவரை அவரின் தடம் மாறாத ரசிகர்களே காரணம்.
இன்று அளவும் அவர் புகழ் நிலைத்து நிற்க தலைவரின் நல்ல பண்புகளும் அவரின் தன்னலம் அற்ற செயல்களும் அவருக்காக எதையும் இழக்க துணிந்த ரசிகர்கள் காரணம் ..
எம்ஜியார் ரசிகர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லுவோம்.
வாழ்க எம்ஜியார் புகழ். வாழ்க அவர் ரசிகர்கள்
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி....
இன்றைய செய்தி.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.. அவர்கள் எப்பவும் உபயோகிக்கும் ஹார்மோனிய பெட்டி இசை கருவியை அவருக்கு பரிசாக அளித்தவர் நம் புரட்சிதலைவர் என்பது இதுவரை அறியாத புதிய செய்தி ஆக இருக்க கடவது...நன்றி
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு...No man can serve to his masters.... என்று...அதாவது ஒரு மனிதன் இரண்டு துறைகளில் பிரபலம் ஆவது நடக்காத செயல் என்று பொருள்.
ஆனால் சினிமா அரசியல் இரு துறைகளிலும் அவர் வெற்றி அடைய அவரின் உழைப்பும் உண்மை தன்மையும் அவரின் ரசிகர்களின் உழைப்பும் , அதோடு இறைவன் அருட்பார்வையும்
இந்த பழமொழியை தகர்த்து எறிந்தது வரலாறு............ Thanks.........
-
1963 ம் வருடம் மக்கள் திலகத்திற்கு மொத்தம் 9 படங்கள் வெளியானது. அதில் 3 படங்கள்
ஜனவரி,பிப்ரவரியில் வெளியானது. ஜனவரி 11ல் பணத்தோட்டம், பிப் 9 ல் கொடுத்து வைத்தவள், பிப் 22 ல்
தர்மம் தலைகாக்கும் முதலானவை.
இந்த மூன்று படங்களும் சென்னையில் 9 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த போது வெளியான விளம்பரம்தான் இது.. இந்த மூன்று படங்களுமே சென்னையில் எம்ஜிஆர் பிக்சர்ஸ் வெளியீடுகள்.
ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் மூன்று படங்களுமே வெற்றிக்கொடி நாட்டின.
பணத்தோட்டம் சென்னையில் 84 நாட்களும், கொடுத்து வைத்தவள் சென்னையில் 91 நாட்களும், தர்மம் தலைகாக்கும் சென்னையில் 70 நாட்களும் இலங்கையில் 100 நாட்களும் ஓடி.யது.
எம்ஜிஆருக்கு ஒன்றன்பின் ஒன்றாக படங்கள் வந்தால் எந்தப்படமும் ஓடாது என்று கூறியவர்கள் வாயடைத்துப் போனார்கள். மாற்று நடிகர் படம் ஏதாவது ஒரு தியேட்டரில் 75 நாட்கள் ஓடினால் போதும் , ரசிகர்கள் ஒன்று கூடி படத்தை 100 நாட்கள் ஓட்டி முழுபக்க விளம்பரம் கொடுத்து விடுவார்கள்.
அவர்கள் படம் 100 நாட்கள் பெறும் வசூலை எம்ஜிஆர் படங்கள் 5 வாரங்களிலே பெற்று விடும் என்பதே விநியோகஸ்தர்கள சொல்லும் உண்மை.
ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய படங்களை தவிர்த்து பார்த்தால் 100 நாட்கள் ஓடிய படங்கள் மிகசொற்பமே. எத்தனை நாட்கள் தியேட்டரில் படம் இருந்தது என்பது முக்கியமில்லை. அது எப்படி ஓடியது என்பதை உணர்ந்தால் படத்தின் வெற்றி புரிந்து விடும்......... Thanks SKR.,
-
அது தெரிந்தது தானே சகோ. புரட்சி நடிகர் படங்கள் இயற்கையான முறையில் ஓடிய விபரங்களை எல்லோரும் அறிவர். மாற்று நடிகர் படங்கள் 50 நாட்கள் ஓடி விட்டால் போதும். அதை எப்பாடுபட்டாவது டிக்கெட்டுகள் கிழித்தே 100 நாட்கள் ஓட்டுவதற்கு எதுவாக மவுண்ட் ரோட்டில் தியேட்டரேயே அவர்கள் வாங்கி ஓட்டியதே அனைவரும் அறிந்த ஒன்று தானே?!...... Thanks...
-
மக்களின் நேரடி தொடர்பாளர், மக்களின் நேசக்கரம், மக்களின் ஏழைப்பங்காளன், மக்களின் இதய தொடர்பாளர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் பற்றாளர், மக்களின் தேவையை புரிந்தவர், மக்களின் பசியைப் போக்க துடித்தவர், மக்களின் துன்பத்தை போக்க நினைத்தவர், மக்களின் கண்ணீர் துடைக்க வந்தவர், மக்களின் எண்ணத்தை புரிந்தவர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் தேவையை அரிந்தவர், மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்காக வருபவர், மக்களோடு மக்களாக வாழ துடிப்பவர், மக்களுக்காக சேவை செய்தவர், சதா மக்களை நினைப்பவர், மக்களோடு மக்களாக உறைந்துச் செல்பவர், மக்கள்திலகம் ஆனவர், மக்கள் என்ற சொல்லுக்குச் சொந்தமானவர், உலகையே காக்க துடிப்பவர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர், புரட்சித் தலைவர் என்று போற்றப்பட்டவர்.... நம் குலதெய்வம் ஆனவர், முற்றுப்புள்ளி அற்றவர், நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர், நாம் வாழும் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தவர், நாம் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர், நம்மை புரிந்து கொண்டவர், நம்மை தெரிந்து கொண்டவர், நம்மில் கலந்தவர், இவையெல்லாம் தற்போது வரை நடந்தவை........... Thanks.........
-
வரலாற்றில் 15 நவம்பர் 1983 முதல்வர் #எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..
பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..
"நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா?
ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.
அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?
அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;
ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது;
வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.
உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"
நன்றி துரை வேலுமணி.......... Thanks...
-
டைரக்டர் K சங்கர் இயக்கத்தில்,ஒரே சமயத்தில், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணியும், தலைவர் நடித்த பணத்தோட்டம்,படப்பிடிப்பும் நடைபெறுகின்ற சூழல் ஏற்பட்டது.
காலை7 மணியில் இருந்து 1 மணி வரை ஆலயமணி படப்பிடிப்பு, மதியம் 2 மணியில் இருந்து இரவு 9, மணிவரை பணத்தோட்டம் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது,
ஒரு நாள் காலை ஆலயமணியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மதியம் 2 மணிக்கு பணத்தோட்டம் படப்பிடிப்பிற்கு வந்த K சங்கர் அவர்கள்,படப்பிடிப்பை ஆரம்பித்தார், எம் ஜி ஆர் நடிக்க ஆரம்பித்தார், ஏனோ தலைவர் நடித்த நடிப்பில் இயக்குனர் சங்கருக்கு திருப்தியில்லை, டேக் 1,2,3, என்று 5 டேக்குகள் போய்க்கொண்டு இருந்தது,சாதாரணமாக தலைவர் படத்தில் ரெண்டாவது டேக்குக்கு மேல் எடுக்க எந்த டைரக்டரும் துணிய மாட்டார்கள், பெரும்பாலும் முதல் டேக்கே ஓகே ஆகி விடும்,அபூர்வமாக ரெண்டாவது டேக் அமையும். மூன்றாவது நான்காவது டேக் என்பதெல்லாம் எம் ஜி ஆர் அவர்களின் படங்களை பொறுத்த வரை நடந்ததே இல்லை, அப்படி இருக்க இவர் 5 டேக் எடுத்தும் திருப்தி அடையாத நிலையில் ஒன்ஸ் மோர் என இயக்குனர் கேட்க சுற்றி உள்ள அனைவரும் இயக்குனர் கே சங்கரையும் எம் ஜி ஆர் அவர்களையும் மாறி மாறி பார்க்க, புரட்சி தலைவர் புன்சிரிப்புடன் இயக்குனர் சங்கரை அழைத்து அவர் தோளில் கை போட்டு செட்டிற்கு வெளியே கூட்டி சென்று, என்ன பா காலையில் ஆலயமணி படப்பிடிப்பு நல்லபடியாக நடந்ததா?, என்று கேட்டவாறே, ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன் கேட்டுக்குங்க சங்கர், காலையில் அவர் கிட்ட எதிர்ப்பார்த்த நடிப்பெல்லாம் என்கிட்ட எதிர்ப்பார்த்தீங்கன்னா, கண்டிப்பா கிடைக்காது, அது மாதிரி சீன் எடுக்கணும்னு நீங்க நெனச்சீங்கன்னா இன்னிக்கு முழுக்க நீங்க எடுத்துட்டு இருக்க வேண்டியது தான், ஏன்னா நடிப்பில் என் பாணி வேறு,அவர் பாணி வேறு, முதல்ல அத புரிஞ்சுக்குங்க என்றார்.
எம் ஜி ஆரின் பலமே தான் யார் என்பதை அவர் சரியாக உணர்ந்திருந்தது தான் பல நுணுக்கங்களை சரியாக புரிந்து கொண்டு அவர் கையாளும் விதமே அலாதி. அன்று அவர் மனம் விட்டு பேசிய பிறகு தான் நான் செய்த தவறே எனக்கு புரிந்தது, அன்று அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் தான் அடுத்தடுத்து எம் ஜி ஆரை வைத்து நான் எடுத்த படங்கள் வெற்றி அடைய காரணம் என்றுK சங்கர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
அதனால்தானோ என்னவோ,
தலைவரின் இரண்டாவது வெற்றித் தயாரிப்பான,
அடிமைப்பெண் படத்தை
டைரக்டர் சங்கரே இயக்கினார்---!
படம் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தது--!
அந்தப் படத்தில் இடம்பெற்ற
சூப்பர் பாடல் இது---!........... Thanks...
-
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் :::
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதலானது. அதைப்போல ஆதிபகவன் என்னும் தெய்வமே உயிர்களின் முதலானது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் அறிஞர்களின் சிலரின் கருத்துப்படி. திருவள்ளுவரின் தாய் ஆதி என்றும் , பகவான் என்பவர் அவருடைய தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தாயும் தந்தையுமே உலகத்தில் உயிர்களுக்கும் முதல் என்றும் பொருள் ஆகிறது. வாழும் மனிதர் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தாய் திருமதி சத்தியபாமாவை தெய்வத்துக்கு நிகராகவே வைத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை. தான் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் தன் தாய்க்கு ஒரு கோயிலே கட்டியிருந்தார் அந்த உத்தம மகன். ஒவ்வொரு நாளும் அவர் வெளியில் செல்லும்போதும் கார் ஒரு நிமிடம் அந்தக் கோயிலின் முன் நிற்கும். வலதுபக்கம் திரும்பி தன் தாயின் திருவுருவத்தை அவர் வணங்கிய பிறகே கார் முன்னோக்கி நகரும்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் தாயே துணை என்று சொல்வார் . அதைப்போலவே எதையாவது எழுதும்போதும் தாயே துணை என்று காகிதத்தின் மேலே எழுதுவார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது அதன் தொடர்பான முன் குறிப்புகளை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மீதும் தாயே துணை என்று தமிழ்நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எழுதிய முப்பத்தாறு குறிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை.
நினைவழியா இரண்டரை வயதில் இறந்து விட்ட தந்தையாரின் திருவுருவப் படத்தையும் பூஜை அறையில் தாயின் படத்தோடு வைத்து வணங்கினார்.
தாயையும் தந்தையையும் சேர்த்து வணங்கியதால் தான் அவர் மக்களின் தலைவராக உயர்ந்தார். மற்றவர்களுக்கும் அவருடைய முக்கியமான அறிவுரை, தாயைப் பெருமைபடுத்துங்கள். தாயின் வயிறு எரியாமலும் தனது செய்கையால் தாயின் மனம் புண்படாமல் இருக்கும்படி நடந்து கொள்வது தான் ஒரு மகனுடைய மிகப்பெரிய கடமையாகும் என்பது தான்.
அதனால்தான் தன் தாயை பற்றி ஒரே வரியில் சொன்னார். நான் காணாத கடவுளை விட காணும் கடவுளைத்தான் கண்ணால் கண்ட என் தாயை தான் பெரிதும் மதிக்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க... Thanks...
-
புரட்சி நடிகர் நடித்த "குலேபகாவலி",திருச்சி - பிரபாத் தியேட்டரில்1974 வரை ஓடிய படங்களில் அதிக நாட்கள் பெரும் வசூலுடன் 166 நாட்கள் சாதனை கண்டது புரட்சி நடிகர் நடித்த "குலேபகாவலி". 25 வாரங்கள் வெள்ளிவிழா கொண்டாடினால் போனஸ் தரவேண்டி எடுக்கப்பட்டது.இணைந்த 5 வாரங்கள் தொடர்ந்து ராக்சி தியேட்டரில் ஓடி 201 நாட்கள் ஓடியது. மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.........
-
MGR filmography Film 19 (1948) Poster
1948ஆம் ஆண்டு வெளிவந்த எம்ஜியாரின் மூன்றாவது படம். ஜூபிடரின் தயாரிப்பில். பின்னாளில் ரிலீசாகியிருந்தால், டிஎஸ் பாலையாவுடன் புரட்சித் தலைவர் இணைந்து மிரட்டும் என்றெல்லாம் விளம்பரித்திருக்கக் கூடும். இதில் ஹீரோ பாலையாவா எம்ஜியாரா என்றே தெரியாத அளவில் இருக்கும். டைட்டில் லிஸ்டில் முதலாவதாக பாலையாதான்...... Thanks...
-
MGR filmography Film 20 (1949)
எம்ஜியார் திரையில் தோன்றி 13 ஆண்டுகளாகிவிட்டன; ஆனால், இன்னமும் முழுநீளக் கதாநாயகனாகவில்லை. இருந்தாலும் படத்தின் டைட்டிலில் பி.யூ.சின்னப்பாவுக்கு அடுத்து அவரது பெயர் பெரிய எழுத்தில் காணப்படுகிறது.
ஆக்சுவலி, இந்த போஸ்டர் பிற்காலத்தில் ரீரன்களின்போது உருவாக்கப்பட்டிருக்கலாம். '49ல் அவர் புரட்சிநடிகராகவில்லை; அவர் பெயரும் எம்.ஜி.ராமச்சந்திரன்தான்....... Thanks...
-
MGR filmography (Film 21) Poster (1950)
நடிக்கத்துவங்கி 14 ஆண்டுகள் கழிந்தபின் தனது 33ஆவது வயதில் எம்ஜியாருக்குக் கிடைத்த முதல் ஸோலோ ஹீரோ படம்! வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதற்குப் பிறகு அவர் சிறுபாத்திரங்களில் நடிக்கவில்லை. அவரது முழுத் திரைவாழ்க்கையிலும், கௌரவ வேடங்களிலும் கௌரவ வேடங்களிலும் நடிக்கவில்லை........ Thanks...
-
MGR Filmography Film 22 (1950) Poster
1950 ம.நா.இளவரசியைத் தொடர்ந்து எம்ஜியாருக்கு கதாநாயகனாகப் புலர்ந்த இரண்டாவது படம். ஆனாலும், உண்மையில் இதில் ஹீரோ என்றால் எஸ்ஏ நடராஜனைத்தான் சொல்லவேண்டும். இந்தக் கால பிரயோகப்படி நெகடிவ் ஹீரோ!
இதில் இன்னொரு சுவாரசியம்: பின்னாளில் எம்ஜியாருக்கு மேலும் அழகூட்டியதாக எண்ணப்பட்ட மோவாய்ப் பள்ளம் ஹீரோ ரோலுக்கு சரிப்பட்டு வராது என்று எண்ணி வேறு ஹீரோவுக்கு முயன்று, பிறகு அதை மறைக்க ஒரு சிறுதாடி ஒட்டி எம்ஜியார் ஓகே ஆனாராம்..... Thanks.........
-
1967-ம் ஆண்டு தி.மு.க முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. கிட்டத்தட்ட அதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் முக்கியமான படம், `விவசாயி’. இது, அவரை விவசாயிகளின் தலைவனாக்கியது. அவரின் சிறந்த பாடல்களை யார் பட்டியலிட்டாலும் அதில் இடம் பெறக்கூடிய பாடல்களில் ஒன்று
``கடவுள் என்னும் முதலாளி,
கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி'' என்னும் பாடல். கிராமப்புறங்களில் இன்னும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள் என எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒலிக்காத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு அவர் அடித்தட்டு மக்களிடையே புகழ்பெற்றிருந்தார். இந்தப் பாடலின் காட்சி அமைப்பு முழுவதும் டிராக்டர் ஓட்டியபடியே ஒரு விவசாயி பாடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பாடலில்,
``பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி - அது,
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி... ’ என்ற வரிகள் வரும்போது, அப்போது எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.க-வின் கறுப்பு, சிவப்புக் கொடி திரையில் காண்பிக்கப்படும்........ Thanks...
-
திருநெல்வேலியில் 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் #புரட்சித்தலைவர் முதல்வர் #எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது.
அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது.
அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர்,
அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.
அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார் புரட்சித்தலைவர்..
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து.......... Thanks.........
-
எப்போதும் #எம்ஜியார் விரும்பிய திருச்சி..
தலைவர் தனிக்கட்சி தொடங்கக் கோரி முதல்முறையாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடந்தன. எம்.ஜி.ஆர். அனுமதி இல்லாமலேயே, தி.மு.க. கொடிகள் இறக்கப்பட்டு கறுப்பு சிவப்பு தாங்கிய திமுக கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் ஏற்றி திமுக மீதான தங்கள் கோபத்தையும், #மக்கள்திலகத்தின் மீதான அன்பையும் வெளிப்படுத்தினர்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சற்று தயக்கத்தோடு இருந்தார். ஆனால் திருச்சி ஆரம்பித்த ரசிகர்களின் ஆர்வம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் நம்பிக்கையுடன் முடிவெடுத்து கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரமிக்க முதன்முதலில் ஆர்பாட்டம் நடத்தியதுபோல் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆருடன் திருச்சியில் இருந்து கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க.வில் இருந்து விலகினார்கள்.
அதிமுகவை துவங்கிய எம்.ஜி.ஆர் முதன் முறையாக 1972-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மன்னார்புரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பல ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சில் அனல் தெரிந்தது.
அடுத்து கடந்த 1973-ம் ஆண்டு அதிமுக போட்டியிட்ட முதல் தேர்தலான திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலுக்காக நிதி திரட்ட திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என்.அமிர்தீன் எம்.ஜி.ஆரிடம் முதன்முதலில் தேர்தல் நிதியை வழங்கினார். அடுத்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடந்தது. இதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. உருவாகிய பிறகு நடந்த முதல் பொதுக்குழுவும், முதல் மாநில மாநாடும் திருச்சியில்தான் நடந்தது.
கடந்த 1974-ம் ஆண்டு ஏப்ரல் 23,24 ஆகிய இரு நாட்கள் பாப்பாக்குறிச்சி காட்டூரில் நடந்த இந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க.வின் மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மாநாடு என்று சொல்லலாம்.
இம்மாநாட்டிற்கு பிறகுதான் எம்.ஜி.ஆர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை செண்டிமெண்டாக எடுத்துக்கொண்ட எம்.ஜி,ஆர் அவர் உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க “கைக்குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தை, மாநாடு நடந்த அதே பாப்பாக்குறிச்சி காட்டூரில் கடந்த 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரே நேரில் வந்து துவக்கி வைத்தார்.
அதேபோல் கடந்த 1977-ம் ஏற்பட்ட வெள்ளத்தில் திருச்சி நகரம் மட்டுமல்லாமல், சுற்றுப்புற கிராமங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், சேதமடைந்த பயிர்களையும், ஹோலிகிராஸ் கல்லூரியில் ஏற்பட்ட சேதங்களையும், முதல்வர் எம்.ஜி.ஆர். பார்வையிட்டு உடனடியாக நிவாரணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முதலில் கலந்துகொண்ட கூட்டம் திருச்சி ஒத்தக்கடையில் நடந்தது.
தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி திருச்சியில் நடத்த இருந்த பச்சை துண்டனிந்த விவசாயிகளின் பேரணி முதல்வர் எம்.ஜி.ஆரின் கடுமையான நடவடிக்கைகளால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள போதிய வருவாய் இல்லாத சிறு கோயில்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் இந்து அறநிலையத் துறையின் சார்பில் நிதியுதவி அளித்து ஒரு கால பூஜைக்கு வகைசெய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை சமயபுரத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார்.
இதேபோல் தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வர தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983-ம் ஆண்டு திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக இருந்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டிலும், திருச்சி முசிறி அருகேவும் தலைமைச் செயலகம் அமைக்க இடம் பார்க்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் தனது இறுதிகாலத்திலும் திருச்சியில் தங்கவேண்டும் என ஆசைப்பட்டார்.
அதற்காக திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2-ஏக்கர் தோட்டங்களுடன் பங்களா வீட்டை சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடம் கிரையத்துக்கு வாங்கினார்கள். அந்த பங்களாவை நேரில் பார்த்த எம்.ஜி.ஆர் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார். அவர் சொன்னபடி மாற்றம் செய்யப்பட்டது.
"இதை பார்வையிட வந்த எம்.ஜி.ஆர் எல்லாத்தையும் சரியா பார்த்துக்கங்க. திருச்சியை தலைநகராமாக மாற்றினால் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்" என தனது திருச்சி சகாக்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.
அதன்பிறகு மாறிய அரசியல் சூழ்நிலை, இந்திராகாந்தி மரணம், திடீர் தேர்தல் போன்ற காரணங்களினால், திருச்சியை தலைநகராகும் திட்டம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., நினைத்து, அது நிறைவேறாத மாபெரும் திட்டம் என்றால் திருச்சி தலைநகர் திட்டம் மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள் திருச்சி மாவட்ட அ.தி.மு.கவினர்.
சாகும் வரை திருச்சி மீது மட்டுமல்லாமல் திருச்சி மக்கள் மீதும் பிரியம் உள்ளவராக வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்........ Thanks...
-
தலைவர் பற்றிய பதிவுகளுக்கு தாங்கள் தரும் வரவேற்பு என்னை பிரமிக்க வைத்துள்ளது.
#அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் ஒவ்வொருவரின் இதயத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
#இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் ஒரே தலைவர் நம் தலைவர்.
#பல செய்திதாள்கள், இணைய செய்திகள். பல புத்தகங்களின் தொகுப்புகளையே பதிவாக தந்துள்ளேன்.
பதிவுகளில் பல பிழைகள் இருக்கலாம். அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தவறு இருப்பின் சுட்டுக் காட்டுங்கள். திருத்திக்கொள்வோம்.
மேலும் நம் தலைவர் பற்றி தெரிந்து கொள்ள என் தேடல் தொடரும். நன்றி அன்புடன். MJ., ........ Thanks.........
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 8 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் முதல் முதலாக எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றார்
அவரது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்
சுப்புலட்சுமி
அமைச்சரவை பட்டியலில் சுப்புலட்சுமியின் பெயரை பார்த்தவுடன் எங்களைப் போன்ற ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மன்றம் வைத்து அண்ணா திமுகவை வளர்த்தவர் களுக்கு அதிர்ச்சியாக இருந்தன
காரணம் கட்சியில் புதுமுகமாக இருந்தார்
சுப்புலட்சுமிக்கு எம்ஜிஆர் அமைச்சர் பதவி கொடுத்து இருந்தார்
சுப்புலட்சுமி ஆசிரியர் தொழில் பார்த்தவர்
1980 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தன
சிவகாசி /கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் தான் அண்ணா திமுக வெற்றி அடைந்தது
அதன் காரணமாக அண்ணா திமுக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்
இந்த சோதனையான காலகட்டத்தில் நாஞ்சில் மனோகரனும் சுப்புலட்சுமியும் அண்ணா திமுகவை விட்டு ஓடிவிட்டார்கள்
அடுத்த மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார்
தனி மனிதனாக பம்பரமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் மீண்டும் ஆட்சியை பிடித்தார்
இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களைப் பார்த்து கேட்ட கேள்வி
என்ன காரணத்திற்காக என் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தீர்கள்
என்னுடைய ஆட்சி ஊழல் ஆட்சியா
நான் ஊழல் செய்து சொத்து சேர்த்தேனா
அடுத்தவர்களுடைய சொத்துக்களை நான் மிரட்டி எழுதி வாங்கினேனா
என் அண்ணன் குடும்பமோ என்னுடைய உறவினர்கள் குடும்பமோ அரசியலில் தலையிட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தார்களா
தமிழ்நாட்டு மக்களளேஅதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்
அந்தப் பதில் உங்கள்வாக்குசீட்டு மூலமாக இந்த உலகிற்கு தெரிய வேண்டும்
இவ்வாறு ஊழல் செய்யாத. நம் உத்தமத் தலைவன் பேசினார்
/////?///////////////////////////////////?????/?
1980 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்
அமைச்சர் காளிமுத்து அவர்கள் பேசியதாவது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்திரா காங்கிரசு கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை இந்தியா முழுவதும் வெற்றியடைய செய்து உள்ளார்கள்
திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்
இந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆரிடம் சிக்கி
திமுக காங்கிரஸ் கூட்டணி
தேர் சக்கரத்தில் சிக்கிய. தேங்காயை போல் சிதறி விடும்
இதோ என் தலைவர் புறப்பட்டுவிட்டார்
தரங்கெட்ட வர்களிடமிருந்து தாய்நாட்டை காக்க. புலி என புறப்பட்டுவிட்டார் புரட்சித்தலைவர்
இன்னும் சில நாட்களில் என் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறை ஆட்சியில் அமரப் போகிறார்
இவ்வாறு காளிமுத்து பேசினார்
///////////////////////////////////////////////////
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் எப்படி எம்எல்ஏ ஆனார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட எம்ஜிஆரிடம் மனு கொடுத்திருந்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனாரை எம்ஜிஆர் அண்ணா திமுக வேட்பாளராக அறிவித்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்
வேட்பு மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் அதில்சில தவறு இருந்த காரணத்தினால் அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள்
இப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது
வேட்பு மனுவில் டம்மி வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் மனு கொடுத்திருந்தார்
இதை அறிந்த எம்ஜிஆர் அவர்கள் சுப்புலட்சுமி அவர்களை அண்ணா திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதிக்கு அறிவித்தார்
இப்படி குறுக்கு வழியில் எம்எல்ஏ ஆனவர் சுப்புலட்சுமி
பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு ஓடி விட்டார்......... Thanks PM
-
#மக்கள்திலகத்தின் நடவடிக்கைகளை கண்டு அலறிய ஜெயவர்தனே.. #எம்ஜிஆர் அவர்களுக்கு எதிராக சிங்கள மாணவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 ஏப்ரல் 27 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
“சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள்.
பொதுவாக, ஆண்கள் செந்நீரை சிந்து வார்கள். பெண்கள் கண்ணீரை சிந்துவார்கள். ஆனால், இலங்கைத் தமிழ்ப் பகுதியைப் பொறுத்தவரையில் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச்சிந்துகிறார்கள்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக்கடமைப் பட்டு இருக்கிறோம்.
இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும்,உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையில், நான்கு கோடி ரூபாய் வழங்குவதற்கு இந்த அரசு
முடிவு செய்துள்ளது.”
சட்டமன்றத்தில் அறிவித்தவாறு நான்கு கோடி ரூபாயில் விடுதலைப்புலிகள்
இயக்கத்திற்கு மூன்று கோடி ரூபாயும், பாலகுமாரனின் ஈராஸ் இயக்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நேரிடையாக அளிக்கப்பட்டது.
புலிகள் தலைவர் #பிரபாகரன், 1987 மே தின செய்தியில்,
“தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் எமது விடுதலை இயக்கத்திற்கு அங்கீகாரம் அளித்தது, எமது இலட்சியத்திற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பது எமது போராட்டத்தின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பம் ஆகும்” என்று எம்ஜிஆர். அரசுக்கு நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அலறிய ஜெயவர்த்தனே, பிரதமர்
ராஜீவ்காந்தியிடம் எம்.ஜி.ஆர். மீது புகார் கூறினார்.
மேலும், “இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருள்களை வழங்கப்போவதாக தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
நாங்களே உணவு அளிக்க முடியும். அதற்கு இந்தியப்பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால், எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆ தனிப்படை”
-என்று கூறிய ஜெயவர்த்தனே, கொழும்பு நகரில் புத்தர் ஆலயத்திற்கு எதிரே பத்தாயிரம் சிங்கள மாணவர்களைக் கூட்டி எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினான்........ Thanks CKS
-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#புகைப்படம்
எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.......... Thanks.........
-
தன் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாமல் ஈழதமிழர் மீதான விமான தாக்குலை கண்டித்து உண்ணா நோன்பு இருந்த #மக்கள்திலகம்..
பிரதமர் இராஜீவ்காந்தி வற்புறுத்தலின் பேரில் 1985 ஆகஸ்டில் போராளி இயக்கங்கள் திம்புவில், சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் விமானங்கள் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றான் ஜெயர்வர்த்தனே.
இலங்கை அரசின் இச்செயலைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக தலையிடக்கோரியும் 1985 செப்டம்பர் 24 -ஆம் நாள் உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர்........ Thanks.........
-
இவர் போல யாரென்று--
-----------------------------------------
கோவித்துக் கொண்ட இயற்கை
கோவிட்டாக?
கோவிட்19 என்னும் கொரானா வைரஸ் குறி பார்த்துக் குவலயத்தைக் குதறி எடுக்க--
மனித நேயம் என்னும் மருத்துவத்தால் மல்லுக்கட்டியபடி நம்மவர்கள்?
எதிர்ப்போர் எவராயினும் ---
எதிர்ப் போர் செய்யும் இந்தியர்கள்--
இரக்கத்திலும் உச்சம் தொடுபவர்களே!!
அந்த வகையில் கோபால கிருஷ்ணன் அவர்கள்!!
75 வயது அகவை காணும் இந்த முக நூல் இளைஞரை தம் வசம் கொண்டார் எம்.ஜி.ஆர்!
இவரை மட்டும் அவர்க் குடுப்பத்திலிருந்து பிரித்து எடுக்கவில்லை எம்.ஜி.ஆர்?
தாய்,, தந்தை, மனைவி,அண்ணன் தம்பி என-
குடும்பமே குடியிருந்த கோயிலைக் குத்தகை எடுத்திருக்கிறார்கள்??
அது 1967!
அன்றையக் காலக் கட்டங்களில்-
வடகம்,,வத்தல்,அப்பளம் என்று வீட்டிலேயே தயார் செய்வார்கள் அந்தணர் இல்லங்களில் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம்!
குடும்பமே வட்டமாக உட்கார்ந்து கொண்டு--
கட்சிக் கொடியை தயாரிப்பதிலும்,,ஒட்டும் பசையைக் காய்ச்சுவதிலும் ஈடுபட்டிருப்பதை அகல விரிந்தக் கண்களுடன் அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்தோடு தானே பார்ப்பார்கள்??
அதுவும் பார்ப்பனர்களுக்கு விசேஷமான உதயசூரியன் கொடி??
எங்கள் எம்.ஜி.ஆர் ஒருவரைத் தான் அன்று தி.மு.கவில் பார்த்தோம் என்கிறார் கோபாலகிருஷ்ணன்!!
1980இல் தாம் எப்படி வெற்றி பெறுவோம் என்று எம்.ஜி.ஆரே இவரிடம் கேட்டு,,இவரது பதில் விளக்கத்தால் பரவசம் அடைந்ததை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்!!
75 வயது இளைஞர் இவர் இப்படியென்றால்--இன்றும் இவரது மூத்த சகோதரரும்--
90 வயதில் இவரது அன்னையும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கவென்றே டிவி பெட்டியின் முன்பாக??
கோபலகிருஷ்ணனின் மகள் வெளி நாட்டிலிருந்து ஃபோன் செய்வாள்--
அப்பா நாளைக்கு டிவியில ஆயிரத்தில் ஒருவன் படம் போடறான். பெரியப்பா,,பாட்டிக்கும் சொல்லுங்கோ???
இவர்களும் உடனே டிவியை நோக்கி ஓடுவார்கள்?
முதன் முதலாகப் பார்ப்பது போல??
சரி,,எம்.ஜி.ஆரை இதயத்தில் இந்த அளவு வைத்திருக்கும் இவர்கள் எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
எல்லோரும் வெளியில் வேலைக்குப் போகும்போது இவர்கள் வீட்டிலேயே இருக்க--
இன்றோ--
எல்லோரும் கொரோனாவால் வீட்டிலேயே இருக்க-
இந்த முதியவர்களோ--
வேலையாக வெளியில்??
ஆம்!1 இதுவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகத் தேர்வு செய்து,,அந்த மக்களுக்கு உணவும்,,உணவுப் பொருள்களும் வழங்குவதை ஒரு தவமாகவே செய்து வருகிறார்கள் இவர்கள்!!
பல்லாவர மலைக் கல்லுடைப்போர்கள்,,நங்க நல்லூர் ,,அடையாறு சேரிப்பகுதி என்று இதுவரை 12 இடங்களுக்கு மேலே இவர்கள்,,தாமே நேரில் சென்று உதவுவது நிச்சயம் பெரிய விஷயம் தானே?
சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வரை இதற்காகவே இதுவரை செலவழித்திருக்கும் இவர்களது சேவை இன்னமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது!!
இதற்காக,,நெருங்கிய உறவுகளிடமும்,,வெளி நாட்டில் இருக்கும் தம் வாரிசுகளிடம் மட்டுமே உதவி வாங்கும் இவர்கள் ,,அக்கம் பக்கத்தினர் எவரையும் தொல்லை நன்கொடைக் கேட்டு நச்சரிப்பதில்லை!!
கோபாலகிருஷ்ணன் அவர்களின் தாயார்,,இறைவன் அளித்துள்ள தேக ஆரோக்கியத்துடன் சென்று,,தம் கையால் உதவி வழங்கி மகிழ்கிறார்!!
மக்கள் திலகத்தை மனதில் வைத்தவர்களால்-
மனித நேயம் மரித்துப் போவதே இல்லை!!
இனி எம்.ஜி.ஆரா இங்கே நேரில் வரணும்?--
இவர்கள் வாயிலாகத் தான் தினமும் நம்முடன் உரையாடுகிறாரே??
அழும் உள்ளங்களை அரவணைத்து ஆற்றும் இவர்களைத்
தொழும் பேறு நம் மனதுக்குக் கிடைத்ததற்காக சந்தோஷப் படுவோமா சொந்தங்களே???........ Thanks..........
-
1979 ஆம் ஆண்டு நம் தானை தலைவர் முதல்வர் ஆகி நல்லாட்சி நடத்தி கொண்டு இருந்த 2 ஆம் ஆண்டு.
அகில உலக எம்ஜியார் மன்ற தலைவர் உயர்திரு முசிறிப்பித்தன் அவர்களின் மகன் முருகேசன் அவர்கள் திருமணம் சேலத்தில் நடைபெற இருந்தது.
முதல்வர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஏற்காடு விரைவு ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... இரவு புறப்படும் ரயில் மறுநாள் காலை சேலம் போய்சேரும்.
வேறு சில அவசர பணிகள் காரணம் ஆக தன் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து விடுகிறார் நம் மன்னர்.
அன்று இரவு அவர் செல்ல இருந்த ஏற்காடு விரைவு ரயில் வாணியம்பாடி அருகில் மிக பெரிய விபத்துக்கு உள்ளானது.
வண்டியின் என்ஜின் மற்றும் அதை தொடர்ந்த குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்ட பெட்டிகளும் நம் முதல்வர் பயணம் செய்ய இருந்த பெட்டியும் தடம் புரண்டு அந்த விபத்தில் பலர் பலி ஆனார்கள்.
கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள், தலைவரின் குடும்பம் சார்ந்தோர்க்கு மிக பெரிய அதிர்ச்சி ஆக அந்த நிகழ்வு அமைந்தது.
வாணியம்பாடி ரயில் விபத்து என்று அந்த நேரத்தில் பேசப்பட்ட பரபரப்பு நிறைந்த ஒரு சோக நிகழ்வு அது.
நம் தலைவர் மட்டும் அன்று தன் பயணத்தை மாற்றி அமைக்காமல் இருந்து இருந்தால் நினைக்கவே நெஞ்சம் பதறும் நிகழ்ச்சி அது.
இதே போல சென்னையில் இருந்து அலுவல் காரணம் ஆக ஒருமுறை தலைவர் முதல்வர் செல்ல வேண்டிய டெல்லி பயண விமானம் புறப்பட தாமதம் ஆனதால் அவர் சென்னை விமான தளத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பின் புறப்பட்டு சென்ற அந்த விமானம் ஹைதிராபாத் அருகே விபத்துக்கு உள்ளானது.
தர்மம் தலை(வரை) காத்தது என்பதும் நிஜம் ஆனது.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன் நெல்லை மணி...தொடரும் நாளை...புதிய செய்திகளுடன்............ Thanks.........
-
1980-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ...
" முடிந்தார் எம்ஜிஆர்...
என் ராஜதந்திரத்துக்கு முன்னால்
இந்த எம்ஜிஆர் எம்மாத்திரம்."
என்று கொக்கரித்தார்... திரு. கருணாநிதி அவர்கள்.
நடந்தது என்ன...? திரு. கருணாநிதியின் கனவு பலித்ததா ...?
திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து, மொத்த சட்டமன்ற இடங்களில் சரிபாதியாக இடங்களை பகிர்ந்து கொண்டு போட்டியிட்டன.
தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டன.
தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு என்ன தெரியுங்களா....?
மீண்டும் புரட்சித் தலைவர் தான், தமிழ் நாட்டை ஆளவேண்டும்... ஆட்சியில் அமரவேண்டும் என்று நல்லதொரு தீர்ப்பை தமிழக மக்கள் வழங்கினார்கள்.
மீண்டும் மக்கள் முதல்வரானார், #புரட்சித்தலைவர்.
திரு.கருணாநிதியின் கூட்டம் கூனிக்குறுகி ஓடி ஒளிந்து கொண்டது.
புரட்சித் தலைவர் உயிரோடு இருக்கும் வரை
திரு.கருணாநிதி செய்த போராட்டங்கள்,
பொய் பிரச்சாரங்கள்,, ராஜதந்திரம் என அனைத்தையும் தமிழக மக்களின் ஆதரவோடு முறியடித்தார்..
" #புரட்சித்தலைவர் "
*******************
........ Thanks...
-
கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!
அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.
நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!
இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.
தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!
"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.
எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!...... Thanks...........
-
MGR Filmography - Film 17 Poster
தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் வாய்ப்பளித்தாலும், 1947ஆம் ஆண்டின் இரு படங்களில் இரண்டாவதான இதிலும் எம்ஜியாருக்குச் சிறு வேடம்தான். அர்ஜுனனாக வேடமேற்றிருந்தார். ஒரு அந்தணரைத் தற்கொலையிலிருந்து மீட்கும் காட்சி யூட்யூபில் கிடைக்கிறது. கருணாநிதி இதிலும் உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார்....... Thanks...
-
MGR Filmography Film 23 (1951) Poster
"மர்மயோகி"
எம்ஜியார் ஸோலோ ஹீரோவாக நிலைபெற்று விட்டார்; 1951ஆம் வெளியான இரண்டு படங்களுமே வெற்றியடைந்தன.
இந்தப் படத்தின் சுவாரசியம், இது தமிழ்ப்படங்களில் முதன் முதலாக ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது! பிறகு அது நீக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. ஏன் ஏ என்றால், செருகளத்தூர் சாமா ஆவியாக நடமாடும் சீக்வன்ஸ்கள் சிறு பிராயத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் இருந்தனவாம். பஞ்ச் டயலாக் புரட்சி நடிகர் முதன்முதலாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராபின் ஹூட் கதாப்பாத்திரம் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னொரு சுவாரசியம், பல படங்களில் மாதர்குல மாணிக்கமாகவே தோன்றும் அஞ்சலிதேவி இதில் ஏறத்தாழ ஒரு வேம்ப் ரோலில், அரசனை ஒழித்துக்கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றும் அவன் இளையராணியாக தோன்றுகிறார்.
தமிழில் முதல் கலர்ப்படம் போல, முதல் ஏ படமும் ஏம்ஜியாருடையதுதான்! A trend setter always! ... Thanks...
-
MGR filmography Film 24 (1951) Poster
மாடர்ன் தியேட்டர்சின் இந்த வெற்றிப் படம் எம்ஜியாரை கதாநாயக நாற்காலியில் திட்டவட்டமாக அமர்த்தி விட்டது. எம்ஜியாரின் ஆக்ஷன் ஹீரோ ஃபார்முலா ஏறத்தாழ உருவாகி விட்டது.
இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியம்: இது வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பின் எம்ஜியார் தனிக்கட்சி உருவாக்கி, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை ஆதரித்தபோது, அதாவது கிட்டத்தட்ட 1976ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி ஒரு பொன்விழா ஆண்டுக்காலம் முடிந்த பிறகு, அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்சியை எதிர்த்த இரண்டு பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்த சோ, இந்தப் படத்தில் சர்வாதிகாரிக்கு எதிராக எம்ஜியார் செய்யும் வீர சாகசங்களை எல்லாம் விலாவரியாக எழுதி வரிக்கு வரி, 'சர்வாதிகாரியை எம்ஜியார் படத்தில் இப்படி எதிர்த்துப் போராடுகிறார், படத்தில்தான். புரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே புரிந்து கொள்ளுங்கள்!' என்று வரிக்கு வரி அடிக்கோடிட்டார். ப்ரெஸ் சென்சார்ஷிப்புக்கு டேக்கா கொடுக்க சோ கண்டுபிடித்த பல வழிகளில் ஒன்றாக அப்போது அது மிகவும் பரபரப்பானது...... Thanks...
-
MGR filmography Film 25 (1952) Poster
"அந்தமான் கைதி"
1947ஆம் ஆண்டு பைத்தியக்காரனுக்குப் பிறகு ஐந்து வருடம் ராஜா ராணி காஸ்ட்யூம் ட்ராமாக்களில் ஸ்தாபிதம் ஆகிவிட்ட எம்ஜியார் மீண்டும் சோஷியல் ட்ராமாவுக்குத் திரும்பிய படம். ஏறத்தாழ தங்கைக்காக வாழும் பாசமலர் டைப்.
இந்தப் படத்தில் சிஎஸ் ஜெயராமனின் குரலில் காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் அருமையான பாடல் இடம்பெற்றது, கோவிந்தராஜுலுவின் இசையமைப்பில்.
இந்தப் படம் வெளியான வருடம் சிவாஜியின் திருமணம் நடந்தது. திருமணவிருந்தில் சிவாஜி எம்ஜியாரைப் பார்த்து, 'நீங்க கத்தியச் சுழட்டினா ஆயிரமாயிரம் ரசிகர்கள் உண்டே அண்ணே! எதுக்கு பாண்ட் சொக்கா போட்டு நடிக்கிறீங்க' என்று கேட்டதாக ஒரு செய்தி உண்டு! அவர் விளையாட்டாகத்தான் கேட்டிருப்பார்; ஆனால், எம்ஜியார் 'தம்பி என்ன வார்த்தை சொல்லிருச்சு' என்று தங்கவேலுவிடம் வேதனைப்பட்டுக் கொண்டாராம்!
ஒரு எம்ஜியார் ரசிகரின் ப்ளாகில் இந்தப் படம் 125 நாள் ஓடியதாகக் குறிப்பிடுகிறார். சந்தேகம்தான். எம்ஜியாரை சக்சஸ்ஃபுல் சோஷியல் ஹீரோவாக்கிய படம் 61ஆம் வருடத்துத் திருடாதே......... Thanks...