மிக்க நன்றி..கலியபெருமாள் ஸார்.
Printable View
அன்னையர் தினம் தொடர்பாக திரு.வினோத், திரு. ரவிச்சந்திரன், திரு. வாசுதேவன் மற்றும் திரு. சௌரிராஜன் - ஆகியோரின் பதிவுகள் அருமை. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
திரு மாசானம் அவர்களே ,
உங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி !
அன்புடன்
srs
ஏழிசைவேந்தர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் நலமுடன் உள்ளார். அவரின் புதல்வருடன் (டி எம் எஸ் பால்ராஜ்) தொலைபேசியில் பேசினேன். தனது தந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
https://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA
HAPPY MOTHERS DAY, திரு டி எம் எஸ் பாடிய அம்மா என்றல் அன்பு என்ற பாடல்
அன்பு மாசானம் சார்,
மிக்க நன்றி!
நூறு பதிவுகளைத் தாண்டி பயணிக்கும் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.
http://wallpoper.com/images/00/07/92...r_00079226.jpg
மறக்க முடியாத அந்த நாட்கள்- மே -1973
மே -11 அன்று வெளியான மக்கள் திலகத்தின்'' உலகம் சுற்றும்
வாலிபன் '' மகத்தான வெற்றி செய்தி கிடைத்தவுடன் மதுரை
மாநகரம் நோக்கி மக்கள் திலகம் ரசிகர்கள் திண்டுக்கல்
இடைதேர்தல் வெற்றிக்காக குவிந்தனர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்டு கோப்புடன் , திட்டமிட்டு 6 சட்ட
மன்ற தொகுதிகளை பிரித்து கொண்டு இரவு பகல் பாராது
புரட்சித்தலைவரின் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு
சேகரித்து தங்களுடைய அயராத உழைப்பை வெற்றிக்கு
பாடு பட்டார்கள் .
அன்றைய தினம் மத்திய ஆளும் காங்கிரஸ் -பிரதமர் இந்திராகாந்தி
ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்
திராவிட கழகம் - பெரியார்
திராவிட முன்னேற்றகழகம்
கண்ணதாசன்
நடிகர் திலகம் மற்றும் பல நடிகர்கள்
மற்றும் அனைத்து பத்திரிகைகள் - வடநாட்டு பத்திரிகைகள் -
ஆளும் கட்ட்சிகளின் அதிகார பலம்
என்ற பல நெருக்கடிகளை எதிர் கொண்டு நம் மக்கள் திலகம்
நூறு நாள் கட்சி
நடிகர் கட்சி
அரிதாரம் பூசியவர்
அரசியல் அனுபவம் இல்லாதவர்
மலையாளி
என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால்
மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்
தரமற்ற முறையில் பேசினர்
பொது மக்களும் - மக்கள் திலகத்தின் ரசிகர்களும் - கம்யுனிஸ்ட் தோழர்களும் நம் மக்கள் திலகத்துக்கு அளித்த மாபெரும் வெற்றி பரிசு ''திண்டுக்கல் வெற்றி மாலை ''.
எனவே அன்று தொடங்கி 40 ஆண்டுகளாக
நம்முடைய மக்கள் திலகத்தின் சினிமா
நம்முடைய மக்கள் திலகத்தின் அரசியல்
புகழ் என்றென்றும் ஆளுகிறது .
உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களும் -
அபிமானிகளும் - நடுநிலையாளர்களும் என்றென்றும் பெருமை
கொள்ளும் விதமாக நல்ல கலை உலகம் - அரசியல் சாதனைகள்
நடத்தி நம்மை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தவிட்ட
மக்கள் திலகம் ஒரு'' உலக வரலாற்று நாயகன் ''
இந்தப் பட்டியலில் நடிகர் திலகத்தை சேர்த்திருப்பது துரதிருஷ்டவசமானது. தன்னுடைய இறுதி நாள் வரையில் நாகரீகமான உரையைத் தவிர எந்த ஒரு மேடையிலும் தரமிறங்கி பேசியதில்லை நடிகர் திலகம் அவர்கள். எதிர்க் கருத்தை கருத்தினால் தான் விடையளிப்பாரே தவிர ஜாதி, மத, இன பேதம் என்பதைத் தன் வாழ்விலும் பார்க்காதவர் நடிகர் திலகம். அவர் படங்களால் மட்டுமல்ல தன் வாழ்வினாலும் ஒற்றுமை உணர்வை வலியுறுத்தி அதை செயல் படுத்தியும் காட்டியவர்.Quote:
என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால் இரவு பகல் பிரச்சாரம்
செய்தனர் மேற்கண்ட ஜாம்பவான்கள் .
வினோத் சார், you too?