நன்றி தினமணி கதிர் 26/10/14
http://media.dinamani.com/2014/10/27...tes/w460/5.jpg
இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், ராஜாஜியின் "திக்கற்ற பார்வதி' கதையைப் படமாக்க விரும்பினார். படம், ஆர்ட் பிலிம் போலவும் இருக்க வேண்டும்; அதே சமயம் மக்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, ராஜாஜியின் கதைக்கு, திரைக்கதை - வசனம் எழுத நல்ல எழுத்தாளரைத் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது காரைக்குடி நாராயணன் எழுதிய "அச்சாணி' என்ற நாடகத்தை சிங்கீதம் சீனிவாசராவ் பார்த்தார். அதன் கதை அமைப்பும், வசனமும் அவருக்குப் பிடித்திருந்தன. எனவே, "திக்கற்ற பார்வதி'க்கு திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பை காரைக்குடி நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணனுக்கு வயது இருபது.
தன் கதைக்கு வசனம் எழுதும் நாராயணனைப் பார்க்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். பார்த்தசாரதி சபாவின் செயலாளராக இருந்த சேஷாத்திரி, நாராயணனை ராஜாஜியிடம் அழைத்துச்சென்றார்.
நாராயணனைப் பார்த்த ராஜாஜி, "இவ்வளவு சின்னப்பையன், திரைக்கதை - வசனத்தை ஒழுங்காக எழுதுவானா?' என்று மனதுக்குள் சந்தேகப்பட்டார்.
"குடியினால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பதை விளக்க, இந்தக் கதையை எழுதினேன். குடிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்று நீங்கள் மாற்றி எழுதிவிட மாட்டீர்களே?' என்று சிரித்துக்கொண்டே நாராயணனிடம் ராஜாஜி தமாஷாகக் கூறினார்.
அதற்கு நாராயணன், "இல்லை ஐயா... கதையில் நீங்கள் வலியுறுத்தியுள்ள கருத்து அணுவளவும் மாறாதபடி வசனத்தை எழுதுகிறேன்' என்று பதிலளித்தார்.
"திக்கற்ற பார்வதி'யில் லட்சுமி, ஸ்ரீகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூரிலேயே நடந்தது. 18 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்தார், சிங்கீதம் சீனிவாசராவ்.
லட்சுமி அற்புதமாக நடித்திருந்தார். அவருக்கு ஜனாதிபதி பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூலிழையில் பரிசு வேறொருவருக்குச் சென்றது.
"திக்கற்ற பார்வதி' வெளியாகும் முன்னரே, ராஜாஜி காலமாகிவிட்டார். ராஜாஜி கூறியபடி அவர் கருத்துக்களை நன்கு வலியுறுத்தும் வகையில், படம் அமைந்திருந்தது.
"திக்கற்ற பார்வதி'யில் பங்கு கொண்ட அனைவரும் புகழ் பெற்றனர்.
-ரவிவர்மா
Jikki's first Tamil movie song (with P.A.Periyanayaki)
From Gnaanasoundhari(1948)
AruL Thaarum Dheva Maathaave Adhiye Inba Jothiye........
http://www.youtube.com/watch?v=KRM0zm_aptg
One of my favourite childhood days songs. It was very popular. One of my distant uncles in my mother's village used to sing. He used to frequent a touring talkies about three miles away and come back with songs ! :) That was his pastime during summers.