Quote:
சொல்லத் துடிக்குது மனசு
ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``சொல்லத் துடிக்குது மனசு'' நிகழ்ச்சி, 75-வது எபிசோடை எட்டியிருக்கிறது.
`குடும்பச்சொத்து 9 ஏக்கர் நிலத்தை விற்று எங்கள் பங்கினை கொடு' என அண்ணனிடம் வாதாடும் தம்பி, தங்கைகள். மனைவியின் நகைகளை அடமானம் வைத்து விட்ட கணவன், நகைகளை மீட்டு தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் எனக் கூறும் மனைவி.
மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி, டி.பி.யால் பாதிக்கப் பட்டுள்ள கணவன், பாட்டியிடம் வளரும் அவர்களுடைய குழந்தைகள், இவர்கள் ஒன்று இணையும் காலம் எப்போது வரும்? தன் னுடைய ஊரில் கணவன் வந்து தங்க வேண்டும் என எதிர்பார்க்கும் மனைவி, அந்த மாதிரி செய்ய விருப்பப்படாத கணவன், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்படும் அவர்களின் குழந்தைகள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதை `சொல்லத் துடிக்குது மனசு' நிகழ்ச்சியில் காணலாம்.