வாசு,
நம்புவியோ மாட்டியோ, இன்றோ நாளையோ உன்னுடன் பேசும் போது,விளையாட்டு பிள்ளை,லட்சுமி கல்யாணம் சண்டைகளை குறிப்பிட நினைத்தேன். டெலிபதி. அமர்க்களம்.
Printable View
வாசு,
நம்புவியோ மாட்டியோ, இன்றோ நாளையோ உன்னுடன் பேசும் போது,விளையாட்டு பிள்ளை,லட்சுமி கல்யாணம் சண்டைகளை குறிப்பிட நினைத்தேன். டெலிபதி. அமர்க்களம்.
ஹ்ம்ம்ம்.. கனியிருப்பக் காய் கவர்ந்தற்றுங்கறது தான் நினைவுக்கு வருது..ஹீம் என்.விக்கு எப்படிப் புரியும்..அதெல்லாம் சொல்லாமல் தெரிய வேண்டுமே :)
டியர் கோபால் சார்,
நீங்கள் தோண்டிஎடுத்த "புதையல்" காதல் அருமை. அதை நீங்கள் வர்ணிக்கும் அழகில் கூடுதல் இனிமை பெறுகிறது. அந்தப்படத்தின் வெளிப்புற காட்சிகள் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம், மனோரா, சேதுபாவா சத்திரம் பகுதிகளில் எடுக்கப்பட்டவை. புதையல் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சால்வநாயக்கன் பாலம் இப்போதும் இருக்கிறதாம். ஆனால் படத்தில் இடம்பெறும் பாலம் ஸ்டுடியோ செட்.
உன்னோடு இருந்தவன் யார் என்று பாலையா அதட்ட 'துரை' (சிவாஜி) என்று சொல்ல வாய்திறந்து 'து' மட்டும் சொல்லி சட்டென்று 'துக்காராம்' (சந்திரபாபு) என்று பத்மினி சமாளிக்கும் சீன்தான், பின்னாளில் வந்த 'சு... சுந்தரி' க்கு இன்ஸ்பிரேஷனோ.
தெருக்கூத்து சீனை மட்டும் வெட்டியெறிந்தால் புதையல் அருமையான விறுவிறுப்பான படம். என்றைக்கும் விண்ணோடும் முகிலோடும் நிலைத்து நிற்கும் படம்.....
டியர் வாசுதேவன் சார்,
அதிகம் பேர் பார்த்திராத, மறுவெளியீடுகளைக் காணாத, தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பப் படாத 'விளையாட்டுப்பிள்ளை' திரைப்படத்தின் இரண்டு அற்புதமான சண்டைக்காட்சிகளை அளித்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும். உண்மையில் இவை சண்டைக்காட்சிகள் அல்ல, வீர சாகசக்காட்சிகள். பார்க்கப் பார்க்க எவ்வளவு உணர்ச்சி மேலிடுகிறது. புல்லரிக்க வைக்கும் சாகசங்கள். பல இடங்களில் தலைவர் ரொம்ப, ரொம்பவே ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்.
'விளையாட்டுப்பிள்ளை' திரைப்படம் 1970-ல் எங்க மாமா படத்துக்கும், வியட்நாம் வீடு படத்துக்கும் இடையில் வந்தது. தமிழகத்தில் பரவலாக 12 வாரங்கள் ஓடிய இப்படம் மதுரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல் உண்டு. முரளி சார் மற்றும் பம்மலார் சார் கன்பர்ம் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன்.
விகடனில் வெளியான 'ராவ்பகதூர் சிங்காரம்' தொடர்கதை 50-களில் படமாக வந்திருக்க வேண்டிய ஒன்று. 70-ல் ட்ரெண்ட் மாறிவிட்டது. தில்லானாவின் பெருவெற்றியைப் பார்த்து வாசன், நடிகர்திலகம், ஏ.பி.என். கூட்டணி விளையாட்டுப்பிள்ளை எடுக்க முடிவெடுத்தது. ஓகோ என்று பேசப்படாவிட்டாலும், விளையாட்டுப்பிள்ளை வெற்றிப்படமே.
அரிய வீடியோ பதிவுக்கு மிக்க நன்றி.......
மதுரையில் நிறைய நாட்கள் ஓடிய படம் விளையாட்டுப்பிள்ளை எனப் படித்த நினைவு..ராவ் பகதூர் சிங்காரம்படித்திருக்கிறேன்..சேவற்கொடியோன் - ஆ.வி ஆசிரியர்.. சமீபத்தில் போன வருடம் டிவிடி வாங்கிப்பார்த்த போது ரொம்ப இம்ப்ரஸ் செய்யவில்லை - மொத்தப்படம் எனப்பார்க்கும் போது..ஏதோ ஒன்று மிஸ்ஸிங்..காஞ்சனாவின் குளியல் சொல்லாமல் தெரியவேண்டுமே பாடல் எல்லாம் பாக்ஸ் ஆஃபீஸிற்காகச் சேர்க்கப்பட்டதுபோல செயற்கை..ஈவன் ராஜாராணி ஜோடி இங்கும் ஜோடியாய் இருந்தாலும் ஏ.ஒ.மி.
அந்த சமயம் வந்த வேறொரு படத்தில் வளையல் காட்சி வந்ததால் இந்தப் படத்தில் கதையில் உள்ள வளையல்காரர் காட்சியை மாற்றியிருந்தனர் எனப் படித்த நினைவு..
கே.எஸ்(கார்த்திக் சார்) நன்றி :) தேங்காய் மனோரமா நினைவிலில்லை..ம்ம் அது நாட்டு நடப்பு தானே :)
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய ஐட்டம் நடிகையர் தொடர் - சினேகலதா பற்றிய பதிவு அருமை. பதிவுகளில் தங்களுக்குப் பிடித்தது தியேட்டர்களில் முதல் நாள் அனுபவம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எங்களுக்கும்தான். ஆனாலும், ஒரு முழுநீளத் திரைப்படத்தில், கதை, காதல், நகைச்சுவை என்று பல காட்சிகள் இருந்தாலும், ஐட்டம் பாடல் காட்சிக்கு ஒரு கிக் இருக்கும்தானே? அதுபோல தங்களுடைய ஐட்டம் நடிகையர் தொடரிலும் ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது. தொடருங்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும்.. நன்றி.
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களுடைய வித்தியாசமான நடையில் திருவருட்செல்வர் பதிவு சிறப்பு. நன்றி. பாராட்டுக்கள்.
இது என்ன சண்டை காட்சிகள் சீசனா
நானும் நேற்று இரவு, நம்ம தலைவர் எங்கள் தங்க ராஜா வில், ராமதாசை புரட்டி எடுக்கும் காட்சியை
வலை தளத்தில் பார்த்து பின் திருப்தியுடன் தூங்க போனேன்.
கொஞ்சம் gymnastics காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த படம் பார்க்க ஆவல் தூண்டுகிறது
என் மனைவி கலையில் இனிமே காலையில்
எழுப்ப மாட்டேன் என்று சொன்னது வேறு கதை
டியர் வாசுதேவன் சார்,
கார்த்திக் சார் அளித்த ஐட்டம் நடிகையர் தொடரில், சினேகலதா பற்றிய தங்களுடைய பதிவும், புகைப்படங்கள் மற்றும் பாடல் இணைப்புகள் அருமை.
நடிகர்திலகத்தின் சண்டைக் காட்சிகள் வரிசையில், விளையாட்டுப் பிள்ளை பற்றிய தங்களது பதிவு சூப்பர். கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி இவை சண்டைக் காட்சிகள் அல்ல, வீர சாகசக் காட்சிகள். அவற்றையும், வீடியோ இணைப்பையும் அளித்த தங்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
டியர் கோபால் சார்,
புதையல் பற்றிய தங்களது பதிவு சிறப்பு. உண்மையிலேயே ஒரு காதல் புதையலைத் தோண்டி அதிலிருந்து எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அளித்துக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி.
சிறப்பான வர்ணனை... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று, விண்ணோடும் முகிலோடும்.
வாசு சார்
1.10.1952 அன்று நடிப்பைப் பிறக்க வைத்து,
கல்வியானாலும் சரி, செல்வமானாலும் சரி, வீரமானாலும் சரி ...
நிரந்தரமாக இவற்றை ஆள்கின்றவரின் அவற்றை மற்றவர்க்கும் தருகின்றவரின்
விளையாட்டுப் பிள்ளை தீரச் செயல் வீடியோவைத் தந்து
சிறப்பாக விளக்கி
மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள்...
நாங்கள் கீழே இருந்து உங்களை தலை நிமிர்ந்து
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்...
When all are rocking this thread , I 'm sorry for being little "disconnect" to the subjects being handled by Vasu Sir , Gopal Sir , Karthik Sir , Chinnakannan Sir and Ragavendra Sir.
I can say with confidence and conviction that NT can be interrelated to many things right from NASA to small things - he will excel in all such comparisons. Few thoughts crossed my mind yesterday which I penned down and Correlated to NT - amazing ! they are perfectly matching !!
NT is indeed a gold mine - Government is curbing the import - Gap in Current Account deficit is widening but gold does not lose its value still - this is what NT . There is a old saying - you cannot remain young - but you can remain immature indefinitely . People who undervalue his importance are those who chose to remain immature indefinitely -
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
------NT யின் உழைப்பு பலரின் வறுமையை விரட்டியது - நல்ல ரசிகர்களை அரவணித்துகொண்டது
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
------உண்மை - NT யினால் காப்பற்ற பட்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது - பல குழந்தைகள் நிறைந்த தமிழகம் / இந்திய அரசாங்கம் அவரை காப்பாற்றவில்லை
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
------இந்த தமிழகமும் , நாடும் ஒரு எறும்புதான் - அவமானம் NT க்கு இல்லை
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.
-------100 ஆண்டு திரையுலக சாதனை ஒரு இருள் சூழ்ந்த விளக்காகதான் எரிந்தது NT யை பற்றி யாரும் பெருமையாக பேசாததால்
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
----NT யை போல் வாழ்ந்து சம்பாதியுங்கள் - தகுதியே இல்லாதவர்களை புகழ்ந்து வாழாதீர்கள்
சுயநலம் என்பது சிறு உலகம்.அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் .
வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்
----NT யின் வெற்றியின் ரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
----பணம் இருக்கும் போதும் , அவர் நிலைமை தடுமாறவில்லை
பணம் குறைந்தபோதும் , அவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை
நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
---NT கடைபிடித்த கொள்கைகளுக்குள் இதுவே தலையான ஒன்று
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
------உழைப்பு ஒன்றே முலதனம் - சாவும் இறந்துவிட்டது அவர் முன்னால்
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை
---இதைத்தான் NT யின் குடும்பம் இன்று demonstrating
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
-----மூடப்பட்ட கதவும் திறந்தது பெருமாளின் நம்பிக்கையில் - திறந்த கதவு பின் மூடப்படவே இல்லை - இந்த திரியின் மூலம் கதவுகள் என்றுமே திறந்த படியே இருக்கும் .
Ravi
:):smokesmile:
ஹாய் ரவி.. நன்னாவே எழுதியிருக்கேள்..கடைசி சிரிப்பைத் தவிர மத்ததெல்லாம் சீரியஸ்.. நைஸ்..(ஆமாம் கண்ணா..நீயும் சீரியஸா எழுதப் பாரேண்டா..- ஓ.கே மனசாட்சி..அடுத்த போஸ்ட் சீரியஸ் தான்..!)
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
------NT யின் உழைப்பு பலரின் வறுமையை விரட்டியது - நல்ல ரசிகர்களை அரவணித்துகொண்டது
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
------உண்மை - NT யினால் காப்பற்ற பட்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது - பல குழந்தைகள் நிறைந்த தமிழகம் / இந்திய அரசாங்கம் அவரை காப்பாற்றவில்லை
Dear Ravi Sir
Wonderful Tremendous Comparison. This is True feeling of All over world Sivaji Fans. Superb
C.Ramachandran.
Dear Vasudevan Sir
Thanks for your video presentation of THALAIVAR'S PUTHAIYAL SONG and Vilayattupillai fight. Excellent
Ramachandran.C
Mr Vasu Sir,
Superb Fight scenes from VP.Thanks for uploading the same.
Mr Raghavendra Sir,
Your new avatar is simply superb.
Mr Karthik Sir,
Awaiting your theatre experience of NT's Films.
Mr Gopal Sir,
Your Love series is fantastic.
Dear Vasu Sir - NT fight scenes superb but more than that the way you have narrated - that added further value . In any other heroes movies , both the shots would be taken separately and combined after long drawn editing - in some movies , to please the fans , animals would appear after fights to confess their defeats . But the scenes are so natural and NT had risked his life too much - Ganesh became equal to Ganesh:pink:and at the end overpowered the Ganesh :pink: Great Sir !!:):smokesmile:
There could be a few who are yet to watch this enjoyable movie from Thilana Mohanambal combo - for them this gift - watch it online
http://youtu.be/L6nBNSlN6ck
வாசு சார்,
வேலை பளு காரணமாக சில பல நாட்கள் பதிவிட முடியவில்லை. ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பற்றிய ஒரு குறுந்தொடர் பிரமாதம். எனக்கு அதில் நீங்கள் மாதவனுக்கு கொடுத்திருந்த முக்கியத்துவம் பிடித்திருந்தது. காரணம் நாம் அனைவருமே CVR பற்றி பெருமையாக சொல்வோம். ACT பற்றி சிலாக்கிது பேசுவோம். ஆனால் மாதவன் பற்றி பேசுபவர்கள் குறைவு. ஞான ஒளி காரணமாக இருந்தால் கூட அவரின் படங்கள் மற்றும் அவை புரிந்த சாதனைகள் பற்றி நீங்கள் மிக சரியாக குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கபதக்கம் பற்றி சொல்லும்போது நான் எதிர்பார்த்திருந்த விஷயங்களை எழுதியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நாயகியர் தொடரில் மைனாவதி பற்றி எழுதியது நன்றாக இருந்தது. எனக்கு பண்டரிபாய் மற்றும் மைனாவதி பற்றி எந்த செய்தி படித்தாலும் நகைச்சுவையான ஒரு விஷயம் நினைவுக்கு வரும். பெருந்தலைவரின் தொண்டனாக ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றி பின் ஜனதாவில் இணைந்து அரசியல் பணி செய்து பின்னாட்களில் தனி இயக்கம் கண்ட பெரியவர் நெல்லை ஜெபமணி அவர்கள் ஒருமுறை பொதுகூட்டத்தில் பேசும்போது பண்டரிபாய், மைனாவதி ஆகியோரையும் கர்நாடக காவிரி அணைப்பிடிப்பில் 1960-களின் இறுதியில் கட்டப்பட்ட ஹேமாவதி அணையையும் இணைத்து நகைச்சுவையாக ஒன்றை சொன்னார். அதை இன்றைக்கும் நினைத்து ரசிப்பேன்.
மைனாவதி பற்றி சொல்லும் போது அபிநய சரஸ்வதி நினைவிற்கு வருகிறார். காரணம் ஞாயிறன்று பார்த்த குலமகள் ராதை. உங்கள் நாயகியர் தொடரில் கன்னடத்து பைங்கிளி பற்றி எழுதும்போது அவர் எப்படி நடிகர் திலகம் படங்களில் பரிமளித்தார் என்பதைப் பற்றி விளக்கமாக எழுதியிருந்தீர்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த அனைத்துப் படங்களிலுமே அவர் திறமை பிரகாசித்தது என்பதில் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். அதுவும் தவிர அவர் நடிகர் திலகத்துடன் இணைந்தபோது திரையில் நாம் கண்ட compatibility நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கும். பாகப்பிரிவினை, விடிவெள்ளி பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், வளர் பிறை, ஆலயமணி, இருவர் உள்ளம், குலமகள் ராதை, கல்யாணியின் கணவன், புதிய பறவை என்று எப்படிபட்ட படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள்? அதையும் நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது.
பொதுவாகவே நடிகர் திலகத்தின் ரசிகர்களின் ரசனை ஒரே அலைவரிசையில்தான் இருக்கும் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் கூட இன்றைக்கு நீங்கள் விளையாட்டுப் பிள்ளை படத்தின் இரண்டு வீர சாகச காட்சிகளை தரவேற்றி எழுதியிருப்பதை படித்த போது நமது திரியின் 6-ம் பாகத்தில் மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதியதுதான் நினைவு வந்தது. கோபால் சொன்னது போல் நமது அலைவரிசை எப்போதும் ஒரு போலதான். நான் எழுதியவற்றில் இருந்து ஒரு சில வரிகள் மீண்டும்
இந்தப் படத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்திற்கு ஒரு வித்தியாசமான ரோல் என்றே சொல்லலாம். அதாவது பல வகைப்பட்ட வீர விளையாட்டுகள் இதில் இடம் பெற்றன. சிலம்பாட்டம், ரேக்ளா, காளை அடக்குதல், மத யானையை அடக்குவது என்று வெரைட்டி வீர பிரதாபங்கள். இந்தப் படத்தை ஒரு சவாலாகவே அவர் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று ஒரு தரப்பினர் பல காலமாக கிண்டல் செய்திருந்ததும் இந்த பாத்திரத்தை ஏற்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சவாலை திறம்படவே சமாளித்திருக்கிறார். முதலில் ஆடும் கபடியாகட்டும், சிலம்பு சுற்றும் போது ஒரு கால் ஊன்றி ஒரு கால் முட்டி போட்டு கழுத்தை மட்டும் பின் பக்கம் திருப்பி வலது கையை மட்டும் பயன்படுத்தி சிலம்பை பின்னால் கொண்டு வந்து தடுப்பதோடு மட்டுமல்லாமல் தாக்கவும் செய்யும் அந்த ஸ்டெப், டூப் போடாமல் அதி வேகத்தில் ரேக்ளா வண்டி ஒட்டி வரும் அந்த க்ளோசப் காட்சிகள், கல்லூரி விழாவில் யானையின் தந்தைகளை பிடித்து அடக்குவதோடு இல்லாமல் இதிலும் டூப் இல்லாமல் அந்த தந்தங்களை பிடித்தே யானையின் முதுகின் மேல் ஏறுவது, அதே காட்சியின் தொடக்கத்தில் யானையின் சீற்றம் கண்டதும் தாவி எழுந்து வேட்டியை மடித்துக் கட்டுவது, இறுதிக் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சிகள் என்று காட்சிக்கு காட்சிக்கு பிரமாதப்படுத்தியிருகிறார். ஆக்க்ஷனே இப்படியென்றால் ஆக்டிங் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி கேட்ட கார்த்திக் அவர்களுக்காக அதே பதிவிலிருந்து
இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிகழ்வுகளை பார்த்தோம் என்றால் சென்னைக்கு தெற்கே இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திருச்சியிலும், மதுரை - நியூசினிமாவிலும் 84 நாட்கள் ஓடிய படம் ஷிப்டிங்கில் [மதுரை வெள்ளைக்கண்ணு/மிட்லண்ட் தியேட்டர் என்று நினைவு] 100 நாட்களை கடந்தது. படம் வீர விளையாட்டுகளை கொண்டிருந்ததாலும், மேற் சொன்ன சமூக அமைப்புகள் தென் தமிழகத்தில் அப்போதும் நிலைப் பெற்றிருந்ததும் இதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓடின நாட்களை மட்டும் வைத்து இதை சொல்லவில்லை. இந்த படம் வெளியான போது சிவந்த மண் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. எங்க மாமா வெளியாகி 3 வாரங்களே ஆயிருந்தது. அது மட்டுமா? விளையாட்டுப் பிள்ளை வெளியான 60 நாட்களிலே வியட்நாம் வீடு ரிலீசானது. முன்னால் வெளி வந்த படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை கவர்ந்தது என்றால் பின்னால் வந்தது கதையம்சத்திலும் நடிப்பிலும் மக்களை ஈர்த்தது. அப்படியிருந்தும் விளையாட்டுப் பிள்ளை 100 நாட்களை கடந்தது என்று சொல்லும் போது அதன் வெற்றியின் வீச்சை புரிந்துக் கொள்ளலாம். மதுரை ராமநாதபுரம் நெல்லை குமரி மாவட்டங்களில் B, C சென்டர்களிலும் நன்றாக வசூல் செய்தது.
சுருக்கமாக சொன்னால் இவையெல்லாம்தானே என்னால் முடியாது என்று சொன்னீர்கள். இதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் திலகம் சில பேருக்கு பதில் சொன்ன படம்.
முழு விமர்சனத்தையும் படிக்க
http://www.mayyam.com/talk/showthrea...Part-6/page118
அன்புடன்
சின்ன கண்ணன், ஒரு சின்ன nit picking. ராவ் பகதூர் சிங்காரம் தொடரை எழுதியதும் கொத்தமங்கலம் சுப்புதான்.
கோபால், உங்கள் தொடருக்கு அடுத்து வருகிறேன்.
கார்த்திக்,
நீங்கள் எழுதும் தொடரில் நீங்கள் குறிப்பிடும் நடிகைகளை விட அந்த படங்கள் பற்றிய குறிப்புகளைத்தான் ரசிக்கிறேன். அதிலும் என் மகன் படத்தை அண்மையில் பார்த்தேன். ஆகவே சிநேகலதா பதிவில் என் மகன் படத்தை மீண்டும் அசை பட முடிந்தது.
//சின்ன கண்ணன், ஒரு சின்ன nit picking. ராவ் பகதூர் சிங்காரம் தொடரை எழுதியதும் கொத்தமங்கலம் சுப்புதான். // மன்னிக்க முரளி ஸ்ரீ நிவாஸ் சார்..என் கண்ணில் பாவை அன்றோ வை நினைத்து சற்றே கன்ஃப்யூஸ் ஆகி விட்டேன்..மனமார்ந்த மன்னிப்பு..
சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லைQuote:
Originally Posted by Raajjaa View Post
ஒரு ஹப்பர் 1975க்கு அப்புறம் சிவாஜியின் நடிப்பு சரியில்லை என்று சொன்னால் அதை மறுத்து அவருக்கு விளக்கம் கொடுங்கள்.இல்லை என்றால் பேசாமல் இருங்கள். சம்பந்தமே இல்லாமல் எதற்கு கமலை இதில் இழுக்குகிறீர்கள். கமலுக்கு கிடைத்த புகழில் பாதி கூட சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அதை யாரும் மறந்து விடாதீர்கள்.
சார் - உலர்பவர்க்கெல்லாம் பதில் சொல்லிகொண்டுஇருக்க வேண்டாமே சார் - பேத்துபவர்கள் எல்லாம் chosen to remain immature - so let us ignore and go forward - these comments if we consider seriously may turn to be roadblocks and reduce the speed of our thread .
:-D
Dear Murali Sir - Can I get tuition from you for writing in good tamil ?
Great response with a lucid explanation and conviction . Great sir for being around .
Ravi
:smokesmile::)
ராஜேஷ் சார்,
மற்றொரு பதிவருக்கு பதில் சொல்கிறேன் என்று இந்தியாவின் சிறந்த கலைஞன் கமல் ஹாசன் பற்றி நீங்கள் கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதற்கு விரிவாக, புள்ளி விவரத்துடன் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நமது உன்னத கலைஞர்களைப் பற்றி நாமே சேறு இறைப்பது போலாகும். ஒவ்வொரு கால கட்டத்திலும் பெரும் கலைஞர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்.
கமல் நடிப்பு மட்டுமின்றி நடனம், திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், தயாரிப்பு என்று பன்முகத் திறமையுடன் அவருடைய கிராப் இப்பொழுதும் மேல் நோக்கி தான் இருக்கிறது. அவர் பெற்ற விருதுகளை நீண்ட பட்டியலிடலாம்.
என்னை மிகவும் கவர்ந்த காதல் பாட்டு.
படம்: 'அன்பே ஆருயிரே
பாடல்: 'ராஜ வீதி பவனி என்பது'
http://i1.ytimg.com/vi/tVSsxMA8YOg/hqdefault.jpg
அப்படியே நம்மை அள்ளிக் கொண்டு போய் சொர்க்கத்தில் போட்டு விடும் பாடல். அருமையான டியூன். பாடகர் திலகமும், இன்னிசைக் குயிலும் இனிமையாய்க் கலக்கும் பாடல். செம ஜாலி மூட் பாடல்.
தலைவரும் அழகுப் பதுமை மஞ்சுளாவும் பங்கு பெறும் கனவுப் பாடல்.
இளமை பூத்துக் குலுங்குவதற்கு கேக்கணுமா! பல சீனியர் நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடிகர் திலகம் சோபித்தாலும் 'தானே' போல இடையில் புகுந்து, இளமை கொலு பொம்மையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து, புத்தம் புது இளமை விருந்து படைத்தார் மறைந்த மறக்க முடியாத மஞ்சுளா.
உற்சாகத் துள்ளல் இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடலின் ஆரம்பத்தில் கப்பலின் மாலுமிகள் போல ஒயிட் அண்ட் ஒயிட் உடை அணிந்து, அதற்கேற்ற கச்சிதமான தொப்பியுமணிந்து, இருவரும் சற்றே ஸ்லோ-மோஷனில் உயர எம்பிக் குதித்து, ரம்மியமான இயற்கை சூழலின் பின்னணியில் வண்ண காகித ரிப்பன்கள் சுற்றிலும் பறக்க, பாடலை ஆரம்பிக்கும் போதே நம் மனமும் அவர்களோடு சேர்ந்து பறக்க ஆரம்பித்து விடும். உற்சாக கரைபுரளல்களில் நீந்த நாம் ரெடியாகி விடலாம்.
தலைவர் கையில் பழத்தை வைத்தபடி சுவைத்துக் கொண்டே மஞ்சுளாவுடன் கை கோர்த்தபடி தத்தி தத்தி நடந்து வரும் அழகு! பழத்தை கடித்தவுடன் குரல் மாறி கிளி போல கீச்சுக் குரல் 'ராஜ வீதி பவனி' என்று ஒலிக்க, சற்றே அதிரும் தலைவர் மஞ்சுளாவுக்கும் பழத்தை ஒரு கடி கடிக்கக் கொடுக்க, மஞ்சுளாவுக்கும் கிளி போல் குரல் மாற, பின் தொண்டையை கனைத்து சரி செய்து கணீரென்ற நம் பாடகர்களின் குரல் மீண்டும் மதுரமாய் ஒலிப்பது அழகான சுவையான கற்பனை. அழகான மலர் வளையத்துக்கு (சுற்றி நின்ற பூ மரங்கள் காவலானது) உள்ளே மஞ்சுளா தேவதை போல அவ்வளவு அழகு!
http://i812.photobucket.com/albums/z...ps7728583a.jpg
பல்லவி முடிந்ததும் அடுத்த சரணத்திற்கு முன் வரும் அந்த இடையிசை... அடடா! எப்படி சொல்வது! டேப் இசை என்று சொல்வார்களே! அந்த இசைக்கு சிறிதும் தாளம் தப்பாமல் நடிகர் திலகமும் மஞ்சுளாவும் கைகளை முன்னால் மடக்கியும், விரித்தும் கால்களால் ஸ்டெப் வைத்தபடியே டேப் டான்ஸ் ஆடி வரும் அட்டகாசமான மூவ்மெண்ட்ஸ்.( பொங்கல் பானையில் பொங்கி வரும் நுரை போல அவ்வளவு பூரிப்பு இருவரிடத்திலும்) காதலர்களின் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நிஜக் காதல்களே தோற்றுப் போகக்கூடும். டான்ஸ் மாஸ்டருக்கு வேலை வைக்காமல் இவர்களே ஆடி விட்டார்களோ என்பது போல அவ்வளவு என்ஜாய் பண்ணி ஆடுவார்கள். (நடிகர் திலகம் செம உற்சாக மூடில் இருந்திருப்பார் போல)
'கோஹினூரில் காணாத வைரம்' (அழகான ஸ்டெப்ஸ்) முடிந்ததும் வரும் 'டுடுடு டுட்டு டுடுடு டுட்டு' ஜாலி வரிக்கு நடிகர் திலகம் வாயசைப்பதை கண்டிப்பாக கவனமாகப் பாருங்கள். 'டுட்டு' முடிக்கும் போது 'ஆவ்' என்று அவ்வளவு அழகாக உதடுகள் வேலை செய்யும்.
அடுத்தது காட்சி மாறும் அழகான கற்பனை.
தன் தந்தை (மேஜர்) தனது (நடிகர் திலகத்திற்கு) இன்ப மண வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்பதாக படத்தின் கதை. அதை இந்தப் பாடலில் கற்பனை வளத்தோடு உணர்த்துவார்கள். (சபாஷ் ஏ.சி.டி) மேஜர் ஒற்றைக் கண்ணுடன் கொள்ளைக்காரன் போல வந்து வாளை(லை) நீட்ட, அழகான அரபு சலீம் போல தலைவர் மரங்களின் அடியில் அமர்ந்தபடியே சுற்றிலும் அருவிகள் ஆர்ப்பரிக்க பாடல் இசைக்க, சிருங்கார அனார்கலியாய் திராட்சை ரச ஜார் ஒன்றை கையில் ஏந்தியபடி மஞ்சுளா மெல்ல இடை அசைந்து நடந்து வந்து தலைவர் பக்கம் அமர, ('உத்தமன்' "படகு படகு" பாடலில் வரும் அனார் சலீம் ஞாபகம் வருமே!) பின் இருவரும் காவாலி ஸ்டைலில் கைகளைக் கொட்டியபடியே எந்த நேரம் இதழ்கள் நான்கும் ஒட்டிக் கொள்ளுமோ என்று அனைவரும் அஞ்சுமளவிற்கு நெருங்க, (சென்சார் போர்டு அதிகாரிகள் நிமிர்ந்து அமர்ந்து விளக்கெண்ணையையும், கத்தரியையும் கைகளில் எடுக்க) மேஜர் இப்போது சிகப்பு வண்ண ஜமீந்தார் உடையில் கைகளில் வாளெடுத்து மிரட்ட ஏக களேபரம்தான்.
அடுத்த சரணத்திற்கான காட்சி.
பாடலின் தன்மை முற்றிலுமாக மாறிப் போக, குதிரை குளம்புகளின் ஓசை எதிரொலிக்க, புழுதியைக் கிளப்பியவாறு கர்ணனின் கௌபாய் ஸ்டைலில் நடிகர் திலகம் குதிரையில் மலைகளின் இடுக்குகளின் வழியே ('எந்தப் பக்கம் சென்றாலும் மென் மேலும் மேன்மேலும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட்லக் மை குட்லக்') கம்பீரமாக் அமர்ந்தபடி பாடி வர, அழகான தோலுடையில் வண்ண மான் ஒன்று ஓடும் அருவி நீரை குனிந்தபடி பருக, சிறு கற்பாறைகளின் நடுவே சின்னப் பையன் போல நடிகர் திலகம் துள்ளிக் குதித்து ஓடி வந்து இருவரும் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்துக் கொள்ள, கோபாலுக்குப் பிடித்த இடங்களிலெல்லாம் நடிகர் திலகம் விளையாட, (சுசீலாம்மாவின் அழகான ஹம்மிங் பின்னணியில்) கடைசியில் அடி இறுகப் பிடியாக மாறி தண்ணீரில் விழுந்து ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொள்ள நாமெல்லோரும் டோட்டல் அவுட்.
ஆனால் மேஜர் மட்டும் பொறுக்க மாட்டாமல் ஆதிவாசி டிரெஸ்சில் புயலென ஈட்டியை நீட்டியபடி காதலர்களை பிரிக்க பற்களை நற நறவெனக் கடித்தவாறு வருவார். (யப்பா! மேஜரா அது! சூப்பர் சுந்தரராஜா! தலையில் ஆதிவாசிகளின் கிரீடம் வேறு!)
என்ன ஒரு இளமை ததும்பும் கற்பனை வளம் மிக்க பாடல்! ஆடலுக்கேற்ற பாடல். பாடலுக்கேற்ற கூடல். கூடலுக்கேற்ற ஊடல். மிக மிக வித்தியாசமான தலைவரின் உற்சாகமான டூயட். அழகான இளமை பொங்கும் தலைவர், எம்.எஸ்.வியின் மாறுபட்ட இசை. மஞ்சுளாவின் மறக்கவொண்ணா இளமை! பாடகர்களின் பங்களிப்பு. (கௌபாயாகவும் நடிகர் திலகத்தைக் காட்டியாயிற்று)
என்னுடைய டாப் 10-இல் இடம் பெற்ற பாடல் மற்றும் காட்சி. அதனால்தான் ஸ்பெஷல் பதிவாக இட்டுள்ளேன்.
பார்த்து பரமானந்தம் பெறுவீராக.
https://www.youtube.com/watch?v=tVSs...yer_detailpage
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 7 )
பிரமாத ஐட்டம் நாயகி "பிரமீளா"
மீண்டும் பலருக்கு ஆச்சரியம், ஒரு கதாநாயகி நடிகையை ஐட்டம் லிஸ்ட்டில் சேர்ப்பதா என்று (இங்கே நமது நண்பர் வெ.ஆ.நிர்மலாவைக்கூட ஐட்டம் பட்டியலில் போட்டு வைத்திருக்கிறார்). பிரமீளா பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலானவை 'ஒரு மாதிரி' கதாநாயகிதான். அதுமாதிரி ரோலுக்கு பொருத்தமாகவும் இருப்பார். இத்தனைக்கும் கவர்ச்சி உடைகளும் அணிய மாட்டார். (நல்லவேளை). சேலைதான். அதிலேயே பார்ப்போரைக் கொல்லுவார். அப்படி ஒரு ஐட்டம் நம்பர் இவர். ஒரு கட்டத்துக்குப்பின் 'அந்த மாதிரி ரோலா, அல்லது '.................விடுதி' நடத்தும் ரோலா கூப்பிடு பிரமியை' என்று அழைக்கும் அளவுக்கு கோலிவுட்டில் பிரபலமானார். காரணம் அவர் திரையில் 'அரங்கேற்றம்' ஆனதே அந்த மாதிரி ரோலில்தான். அவர் நடிகர்திலகத்துடன் சில படங்களில் நடித்திருக்கிறார்.
“தங்கப்பதக்கம்”
இப்படத்தில் நடிகர்திலகத்தின் மருமகள். மகன் தானாக தேடிக்கொண்ட மனைவி. இருந்தாலும் எஸ்.பி.வீட்டு மரியாதை கெடாமல் நல்ல மருமகளாக நடித்து ரசிகர்கள், தாய்மார்கள் மத்தியில் பெயரெடுத்தார். பத்மநாபனின் மருமகள் போல தூபம் போட்டு கணவனைக்கெடுக்காமல், தப்பு செய்யும் கணவனை கண்டிக்கும் மனைவியாக நல்ல ரோலில் வந்தார். மாமனார் மாமியார் மேல் மரியாதையுள்ள நல்ல மருமகள். 'சோதனை மேல் சோதனை' பாடலில் இவர் குரலும் நுழைந்து கொண்டு எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
“மனிதரில் மாணிக்கம்”
நடிகர்திலகம் ஜோடியில்லாமல் கலக்கிய பல படங்களில் இதுவும் ஒன்று. இதில் பிரமீளா, ஏ.வி.எம்.ராஜனின் ஜோடி. நடிகர்திலகத்துக்கு அடுத்தபடியாக நன்றாக நடித்திருப்பவர் 'பிரமி'தான். கையில் கத்தியுடன் நடிகர்திலகத்தை மிரட்டி 'ஐ வில் ஸிங்க் பார் யூ' பாடவைப்பவர்.
“கவரிமான்”
அப்பாடா, வந்துவிட்டார் தனது ட்ரேட்மார்க் ரோலுக்கு. வழக்கமாக இப்படம் வந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக விஜயா, லட்சுமி, சுஜாதா, ஸ்ரீபிரியா இவர்களைத்தான் போடுவார்கள். அப்படியிருக்க இப்படத்தில் மட்டும் ஏன் பிரமி என்று நினைத்து, படத்தைப் பார்க்கும்போதல்லவா தெரிகிறது ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று. ரொம்ப ஆச்சாரமான கௌரவமான குடும்பத்தின் மருமகளாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் (நடிகர்திலகத்தின்) மனைவியாக வாழ்ந்தாலும் நாகரீக மோகம் கொண்டு தனிக்குடித்தனம் வந்து, கூடா நட்பினால் மதுவுக்கு அடிமையாகி, கணவனுடன் வாழ்ந்து மகிழ்ந்த அந்த புனிதமான படுக்கையிலேயே இன்னொருவனுடன் சோரம் போய்.......... இப்போது சொல்லுங்கள் இந்த ரோலுக்கு பிரமீளாவை விட்டால் வேறு யார். அதான் இயக்குனர் எஸ்.பி.எம். சரியான ஆளைப் பிடித்திருக்கிறார்.
எதை எதிர்பார்த்து தன்னிடம் இந்த ரோலை ஒப்படைத்தார்களோ அதை கச்சிதமாக நிறைவேற்றி இருந்தார் பிரமீளா. கவரிமான் வெளியான முதல்நாள் பிரமீளா மிட்லண்ட் தியேட்டருக்கு வந்ததை ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் 'பிரமி' வந்த பகுதி மட்டும் அடைப்புக்குறிக்குள்
(மிட்லண்ட் தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்).
“ரத்தபாசம்”
இப்படத்தில் பிரமீளாவின் ரோல் என்ன?. நடிகர்திலகத்தினுடைய தங்கையுடைய கணவனுடைய முன்னாள் மனைவி. குழம்புகிறதா?. அதாவது ஜெய்கணேஷின் முதல் மனைவி, மற்றும் ஒரு குழந்தையின் தாய். இதிலும் நாகரீக மோகம் கொண்டு கணவனையும் குழந்தையையும் பிரிந்து, வில்லன் நம்பியாருடன் சேர்ந்து பழிவாங்க துடிக்கும் கேரக்டர். என்னதான் மோசமானவளாக இருந்தாலும், தன்னுடைய ரத்தமும் சதையுமாக தான் பெற்ற குழந்தையை சம்மந்தமே இல்லாத இன்னொருத்தி (ஜெய்கணேஷின் இரண்டாவது மனைவி ஜெயசித்ரா) கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிகிறது. எப்படிப்பட்ட வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்று பதறுகிறாள். பட்...., டூ லேட். இறுதியில் கிளைமாக்ஸ் போராட்டத்தில் மலையிலிருந்து உருண்டு விழுந்து பலியாகிறாள்..
இப்படத்தில் பிரமிக்கு மேக்கப், ஹேர்ஸ்டைல் எல்லாம் நன்றாக இருக்கும். அதோடு படத்தின் மற்ற நாயகியரோடு ஒப்பிடும்போது பிரமியை இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வரவிடுங்க என்று கேட்கத்தோன்றும். பின்னே ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, மனோரமா இவர்களையெல்லாம் எவ்வளவு நேரம் பார்க்க முடியும்?. கொஞ்சம் அதிக நேரம் பிரமியைக்காட்ட வேண்டுமென்று நான் எதிர்பார்த்த காரணம், ரத்தபாசம் ரிலீசாக சிறிது நாட்களுக்குமுன்பு நான் அவரைப் பார்த்திருந்த நிலைமை அப்படி. அதென்ன?.
(யாரும் ஆட்சேபம் தெரிவித்தால் இந்த இறுதிப்பகுதி நீக்கப்படும்).
சென்னை அசோகா ஹோட்டல் உள்ளே இருந்த 'குட்வில் ஸ்டோர்' உரிமையாளர் மகன் என் நண்பன். ஒருமுறை அவனை சந்தித்து கடையின் வெளியே இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சாம்பல் நிற அம்பாசிடர் ஹோட்டலுக்குள் நுழைந்தது. ரோடாக இருந்தால் வேகமாகப் போயிருக்கும். ஹோட்டல் உள்ளே என்பதால் ஸ்லோமோஷனில் வந்தது. காரை அடையாளம் கண்டுகொண்ட என் நண்பன் "இது சிவலிங்கம் செட்டியார் கார். உள்ளே யார் இருக்காங்கன்னு பார்" என்றான். மெதுவாக வந்த கார் எங்கள் அருகே வந்தபோது குறுக்கே நின்ற காரை எடுப்பதற்காக சற்று நின்றது. பின்சீட்டில் பார்த்தால் பிரமீளா. அதிலும் அவர் இருந்த கோலம் பார்த்ததும் அதிர்ச்சி, 'கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு'. ஜஸ்ட் கொஞ்சநேரம்தான். கார் அகன்று விட்டது. சரி, காரிலிருந்து இறங்கி எப்படிப்போகப்போகிறார் என்று பார்க்க கியூரியாஸிட்டி. வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஹோட்டலின் கடைசியிலிருந்த மாடிப்படியருகே ரொம்ப ஒட்டினாற்போல கார் நின்றதும், பெட்ஷீட் போன்ற பெரிய டவலை சுற்றிய நிலையில் விருட்டென்று காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றுவிட்டார்.
நண்பனிடம் "என்னப்பா இது?" என்றேன் ஆச்சரியத்துடன். அவனோ ரொம்ப கூலாக "உனக்குத்தான் இதெல்லாம் புதுசு" என்றான்.
கடைசியாக இவர் நடித்த புதுப்படம் பார்த்தேனென்றால் அது மலையாள 'ஜட்ஜ்மெண்ட்' படத்தின் தமிழ் டப்பிங். தமிழில் அதிகமாக முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் இவர்களோடேயே ஜோடி சேர்ந்திருக்கிறார். ஜெய், ரவியுடன் ஜோடி சேர்ந்தவை மிகக்குறைவு. படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே 'பிரமி பெல்ட்ஸ்' என்ற பெயரில் கார்களுக்கான பேன்பெல்ட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துகொண்டவர் பிரமீளா. உச்சத்தில் இருந்தபோது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு புரட்சி செய்தவர். சிலமுறை '............வழக்குகளில்' கைதானவர். இப்போது எங்கேயிருக்கிறார், என்ன செய்கிறார் என்ற விவரங்கள் தெரியவில்லை. பழைய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் எந்த விழாவிலும் இவரைகாண முடியவில்லை. பழைய நட்சத்திரங்களை தேடிக்கொண்டு வந்து ஜெயா டி.வி. நடத்தும் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் இவர் வந்துபோனாரா என்பது தெரியவில்லை.
நடிகர்திலகத்துடன் ஜோடியாக நடித்திருப்பதால், நண்பர் வாசுதேவன் அவர்கள் எழுதிவரும் 'நடிகர்திலகத்தின் திரை நாயகியர்' தொடரிலும் இவர் பற்றிய பதிவு இடம்பெறக்கூடும்.
அன்பே ஆருயிரே - எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று- நைஸ் வாசு சார்..
கார்த்திக் சார்..ரத்தபாசம் பார்த்ததில்லை..மற்ற மூன்றும் பார்த்திருக்கிறேன்..பிரமி- ஐட்டம் நடிகையர் லிஸ்டில் அதுவும் ந.தியுடன் சேர்க்க வேண்டுமா என சற்றே யோசனை..மற்றபடி நீங்கள் சொன்ன (கடைசிப் பாரா கெட்டவை :) ) பற்றி முன்னமே சற்று அறிந்திருக்கிறேன் வேறு விதமாக..(ஜெனரல் நாலெட்ஜூக்காக).. சில சமயங்களில் பரிதாபமாய்த் தான் இருக்கிறது சிற்சில நடிகைகளின் வாழ்க்கைகள்..:sad:
அ.ஆவில் ஆரம்பக் காட்சிகளில் ந.தி.. மஞ்சுளாவுடனான கெமிஸ்ட்ரி,ஜாக்ரஃபி எல்லாம் நன்றாகவே ஒர்க் ஆகியிருக்கும் :) ஆமா ஏன் திடீர்னு அன்பே ஆருயிரே
Sorry for the interruption to all,
வியட்நாம் விடில் , ஒரு காட்சியில் நடிகர் திலகம் நாகேஷிடம் பணம் கொடுக்க, பணத்தை , நாகேஷ் தன் pantin பின்புறம் இருக்கும் பாக்கெட்டில் வைக்க போகும் பொது , நடிகர் திலகம் நாகேஷை பார்த்து, அது (பணம்) லக்ஷ்மி டா , அதை பின் பக்கத்தில் வைக்காதே என்று கடிந்து கொள்வார் . இந்த காட்சியும் , வசனமும், படதிற்க்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம் . நிஜ வாழ்கையில் 90 இறுதில் ஆரம்பித்து இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.
இன்று (24th) காலை ETV தெலுகு சுபமஸ்து கிரஹபலம் நிகழ்ச்சியில் வாஸ்துவில் purse , பணம் எங்கு வைத்து கொள்வது பற்றி கூறினார். வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் , பணத்தை, purseசை pantin பின் பக்கம் வைக்ககூடாது என்றும், பணம் goddess லக்ஷ்மிக்கு சமம். பணத்தை சட்டையின் பாக்கெட்டில் / pant இன் முன் பாக்கெட்டில் வைக்க வேண்டும் என்று கூறினார் . இந்த நிகச்சியை பார்த்த உடன் , நினைவுக்கு வந்தது, வியட்நாம் வீடு பட காட்சி.
அவர் ஒரு திர்கதரிசி. வாழ்கையில் நடந்ததை, நடக்கின்ற, நடக்க போவதை, தன் படங்கள் முலம், தான் பேசிய வசனங்கள் முலம் தெரிவித்து இருகிறார்.
அவரிடம் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது . முக்கியமான ஒன்று , "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதை . இன்று வரை முடியவில்லை .
முரளி /வாசு சார் - இந்த பதிவு "விளையாட்டு பிள்ளை " யை பற்றியது :
இந்த படத்தில் சில குறைகளை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக படம் ஓடியிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து :
1. காஞ்சனாவின் ரோல் மிகவும் குழப்பமான ஒன்று - NTயை லவ் பண்ணுகிறவர் போல தோன்றும் - கடைசியில் நான் NT யை ஒரு well wisher ஆகத்தான் எண்ணுகிறேன் என்று "U " turn அடித்துவிடுவார் - Well wisher ஆக இருந்தால் ஸ்விம்மிங் குளியல் எதற்கு ?
2. இதே மாதிரி 'அவன் ஒரு சரித்திரம்' படத்திலும் ஒரு குழப்பம் இருக்கும்
இவள்ளவு தடை இருப்பினும் , நன்றாகவே ஓடிய படம் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது
Ravi
:-D:smokesmile:
" In 1995 I had $7 bucks in my Pocket and I knew two things :
I'm broke as Hell
And one day I wont'be .
You can achieve anything ! "
- Dwayne "The Rock" Johnson
How true it is - "you can achieve anything " - NT proved his talents in the fighting scenes in V.Pillai brought out nicely my Murali Sir and Vasu Sir
:smokesmile::)