இன்றைய ஸ்பெஷல் (59)
'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்று 'ராஜா வீட்டுப் பிள்ளை' படப் பாடல். நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்டு இன்புற.
https://i.ytimg.com/vi/zlIk5Kg0ZjU/m...jpg?v=506fbb20
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், மேடம் ஜெயலலிதாவும் இணைந்து பாடும் டிபிகல் ஜெய் டூயட். இந்தப் பாட்டு அப்போதிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒன்றும் அதிசயம் இல்லைதான். ஆனால் பிடிக்கும். உங்களுக்கு கேட்கும் போது ஒரு உற்சாகம் பிறக்கும். வாலியின் வரிகளுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்து தூள் பரத்தியிருப்பார். பாடகர் திலகம் ஜெய் குரலில் அப்படியே த்தரூபம். சுசீலாவோ தெள்ளத் தெளிவான இளமை. ஜெயா மேடம் கொள்ளை அழகு. அதனால் ஜெய்க்கு உற்சாகம். இந்தப் படத்தில் நம்பியார், வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த், தேங்காய், புஷ்பலதா, ஜெயபாரதி மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இதுவும் ஒரு 'பாண்ட்' டைப் படம்தான்.
https://i.ytimg.com/vi/zlIk5Kg0ZjU/maxresdefault.jpg
இந்தப் பாடல் பின்னால் வந்த பல ஜெய், ஜெயலலிதா டூயட்களை ஞாபகப்படுத்தும். 'பொம்மலாட்டம்' ஞாபகத்திற்கு வரும். 'மெல்லிசை மாமணி' குமார் சில பாடல்களில் எஸ்.எம்.எஸ் ஸை பின்பற்றியிருப்பார். பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்கள். தெரியும். இப்படத்தை இயக்கியவர் தாதாமிராஸி.
இந்தப் படத்தில் இந்தப் பாட்டு மட்டுமல்ல.... எல்லாப் பாடல்களும் செமத்தியாக இருக்கும்.
'ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும்'.... ராட்சஸி, டிக்.எம்.எஸ். கலக்கலில்
https://encrypted-tbn1.gstatic.com/i...YM1mV6fYSn3ZzA
'அரும்பாய் இருந்தது நேற்று'.... ராட்சஸி பூ விற்கும் அமர்க்களம்.
'பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்'.... பாடகர் திலகத்தின் தத்துவம்.
'அன்று நினைத்தோம்.... அதற்கு உழைத்தோம்'.... பாடகர் திலகமும், சுசீலாம்மாவும் ரகளை கிளப்பும் பாடல். இசை பிரம்மாண்டம். (இது இன்னொரு 'இன்றைய ஸ்பெஷலி'ல் கண்டிப்பாக வரும்)
இனி பாடலின் வரிகள்
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
குங்குமச் சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டுமா
குங்குமச் சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோவில் எழுப்பட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோவில் எழுப்பட்டுமா
கோவில் எழுப்பட்டுமா
அத்தை மகனுக்கு பள்ளி கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அத்தை மகனுக்கு பள்ளி கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட
விட்டுக் கொடுக்கட்டுமா
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
பருவத்தின் பாட்டுக்கு முதல் முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கையில்
சரணம் ஆகட்டுமா
பருவத்தின் பாட்டுக்கு முதல் முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கையில்
சரணம் ஆகட்டுமா
தென்றல் காற்றே தென்னங் கீற்றே
தென்றல் காற்றே தென்னங் கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
அச்சம் என்பதை பெண்மை மறந்தால்
என்ன இருக்கும் மிச்சம்
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
https://www.youtube.com/watch?v=7EFD...yer_detailpage