-
தொடரும் எனச் சொல்லிச்
சென்ற என் இனிய பாவி
ஒரு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்,
குட்டிப் பேச்சு என
ஒன்று கூட செய்யவில்லை..
ஒழுங்காய்ப் போய்ச் சேர்ந்திருப்பானோ
ஃப்ளைட் கரெக்ட் டய்த்துக்குப் போச்சா
எதுவும் பிரச்னை ஒன்றும் இல்லியே
ம்ம்
போய்ச் சேர்ந்து மூன்று மணி நேரம் ஆச்சே
காத்திருப்பாளே ஒருத்தி..
என்ன ஜென்மமோ..
இரவு நேரம் தான்..
நிலவு கூட தூங்குவதற்காக்
மேகந்த்தின் பின்னால்..
எனக்கும் தூக்கம் வருகிறது..
ஆனால் இவன்..
இர்ரெஸ்பான்ஸிபிள்..
பொறுப்பில்லாதவன்..
சொன்னால்
நீ என்ன மேஜரா என்பான்..
கொய்ங்க் கொய்ங்க் என்றசத்தம்
செல்ஃபோனா.. ஆமாம்..ஆனால் என்னதில்லை..
சாலையில் யாரோ..
ர்ரும் என்று ஆட்டோ போகும் ஓசை
டிவியில் மெளனமாகப் பாடலுக்காகக்
குதித்துக் கொண்டிருப்பவர்களின் மேல்
அசுவாரஸ்யப் பார்வை..
கையிலிருக்கும் பத்திரிகையில்
மனம் எப்படிப் போகும்..
இடியட்.. நீ பண்ணு..
அப்ப திட்டுவேன்..
கொஞ்சம் கொஞ்சமாய்க்
கண்ணசர்ந்து
தூக்கம் கண்ணைக் கொஞ்ச வருகையில்
கொய்ங்க் கொய்ங்க்..
செல்ஃபோன் தான்..
எடுத்தால்..
ஹாய் சாரிம்மா
தூங்கிட்டியா.. நானும்
வந்தவுடன் கொஞ்சம் கண்ணசந்தேன்..
இப்பத் தான் எழுந்தேன்..அகெய்ன் ஸாரி டியர்..
முகத்தில் புன்முறுவல் வர,
திட்ட நினைத்தது மறந்து போய்
தூக்கமெல்லாம் போயே போச்சு..
-
போயே போச்சு பழந்தமிழர் போற்றிய
பழைய பழக்கமெல்லாம் புதைந்து போச்சு
பல் துலக்கிய உடன் பருகியதோ நீராகாரம்
பகல் வேலைக்கு பலமளித்தது பழைய சாதம்
பல்கி பெருகிய நுண்ணுயிர் அதிலிருந்து காத்திட
நோயும் நொடியும் பல காதம் பறந்து சென்றிட
புத்தொளியாய் வாழ்வில் ஆரோக்கியம் பொலிந்திட
புது அலையாய் பயமுறுத்தும் பகையாய் புகுந்திட்ட
பொருந்தாத பழக்கமில்லா பலகாரங்கள் நமக்கெதற்கு
பாட்டி செய்த பண்டங்கள் மேல் வேண்டாம் வெறுப்பு
-
வெறுப்பு முகத்தில் தெரிய
அப்பா சொன்னார்
எதுக்குடி வந்தே..
அண்ணன் முகத்திலும் அதே தொடர்ச்சி..
வரட்டுமா
என்பதுபோல் அவள் கண்களில்
நீர் எட்டிப் பார்க்க
அம்மாவின் கண்களிலும்
அது தொடர
நிலவியது மெளனம்..
பின்
மெல்லச் சொன்னாள்..
நான் நல்லாயிருக்கேன்
உங்களால் அன்றும் இன்றும்..
அவரும் நலம்..
கொஞ்சம் விரிசலைச் சரி செய்யலாம் என..
முடிக்குமுன் வெடித்தது எரிமைல்..
நாங்களும் நலம் தான்..
இல்லை எனில் சொல்லி அனுப்புவோம்
அப்போது வா..
அம்மாவைப் பார்த்தால்
பதில் பார்வை வரவில்லை..
அண்ணன் முகம் திருப்ப
அப்பா எங்கோ பார்க்க..
தலை குனிந்து வெளி நடக்கையில்
ஓடி வந்தது ஜிம்மி..
காலை முட்டி தொற்றி ஏறப் பார்க்க
ஆசையுடன் அணைக்கப் பார்த்தால்..
அதைத் தொடாதே..
ஜிம்மி இங்கே வா
அண்ணன் இழுத்து எடுத்துக் கொள்ள..
மெலிதாய் வள் என வந்த ஓசையில்
தெரிந்தது பாசம்..
-
பாசம் பக்கத்தில் பார்வையில் ஒரு காலம்
குரலாய் குறுஞ்செய்தியாய் கணிணித் திரையில்
குறுகிவிட்ட கலிகாலம் கண் முன்னே காண்பது
முதுமையில் தனிமை அக்கரையில் சொந்தங்கள்
அக்கறையை அருகிருந்து காட்ட இயலாமை
எதிர் வீட்டு முதியவர் புற்று நோய் முற்றி
ஐந்தாறு மாதமென கெடு சொன்ன பின்னே
இரவும் பகலும் குடித்தழிகிறார் அதிக வலி
தனிமையா முதுமையா பொல்லாத நோயா
ஆண்டவன் கணக்கும் மனிதன் போக்கும் புதிரோ
-
பாசம் பார் பணம் மீது - தரும்
நோயை பார் குணம் மீது !
ஆத்தாலும் அப்பனும் தெய்வமென்பான் - பெரிதென்பான்
தன் பாசம் உடன் பிறந்த மக்கள் விட!
விழுந்துழைப்பான் விருந்தளிப்பான் - பணம்
கைக்கு வந்த பின் உதைப்பான்!
பணம் தரும் பாசம் - வெறும் வேசம்!
-
புதிரோ வேஷமோ
எனத் தெரியவில்லை
காதலைச் சொன்ன பின்
அவளின் பார்வை..
எனினும்
பிடித்திருக்கிறது...
-
பிடித்திருக்கிறது,
"என்னை பிடித்திருக்கிறது" என்று
நீ சொன்ன விதம்!
என் காதல் வீட்டை
மதி கெட்டான் சாலைக்கு மாற்றிய பிறகு..
எல்லாமே பிடித்திருக்கிறது!
-
பிடித்திருக்கிறது
என
படத்தையோ, நாடகத்தையோ
கதையையோ சொன்னால்
மறுத்துத் தான் பேசுவான் கோபி..
ஒரு தலைப்பு என்றால்
அரை மணி நேரமாவது போகும்..
கடைசியில்
சொன்னவரையே அந்த விஷயம்
பிடிக்காமல் செய்துவிடுவான்..
கடந்த சில மாதங்களாகத்
தான் மாற்றம்..
ம்..சரி என
ஓரெழுத்து ஈரெழுத்து பதில்கள்..
ஏன் எனக் கேட்டதில்
பதில்வந்தது..
அவனுக்கு ஆகிவிட்டதாம்
கல்யாணம்...!
-
கல்யாணம்..
தனியாய் திரிந்த காலம்,
ஏதோ பட்டாளத்தை பெற்றது போல்
களிப்பிலேயே கிடந்த மனம்
என்னை பார்த்தே கொக்கரித்தது..
"இது தான்டா சந்தோசம்", எகத்தாலமாய்!
நீ வந்தாய்..
என் மனத்தை பார்த்து,
"போயும்.. போயும்..
சந்தோச குட்டைக்குள் தவழ்கிறாயே.." என பரிகசித்து
அள்ளி
சுக கடலில் இட்டுவிட்டாய்!
-
இட்டுவிட்டாய் கடைசியாய்
கன்னத்தில் கருப்புப் பொட்டு
இடுப்பில் தூக்கி வைத்து
கிளம்பினாய் கரிச்சான்குஞ்சுடன்