-
டியர் esvee சார்,
இணையதளத்தில் இருக்கும் நடிகர் திலகத்தின் அருமையான நிழற்படங்களையும், அரிய விளம்பரங்களையும் இங்கே தொடர்ந்து இடுகை செய்து வருவதற்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
-
நேற்று மதுரையில் வெளியான "கோடீஸ்வரனுக்கு" பிரமாத வரவேற்பு என்று கேள்வி. சென்ட்ரலில் கோடிஸ்வர ராஜ்ஜியம் என்றால் ராம் திரையரங்கில் கர்ண சாம்ராஜ்ஜியம். ஆம் நேற்று முதல் மதுரை ராம் திரையரங்கில் கர்ணன் வெளியாகி வெற்றிவாகை சூடி வருகிறது.
இதை தவிர கோவை மாநகர் டிலைட் திரையரங்கில் புதிய பறவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த தகவல்களை வழங்கிய திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
-
மணியனின் இதயம் பேசுகிறது இதழில் வெளியான பேட்டியை வெளியிட்ட வாசு அவர்களுக்கு நன்றி.
<dig>
அதன் தொடர்ச்சியாக கார்த்திக் அவர்கள் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். நான் எழுதிய ஒரு பதிவையும் சுட்டிக் காட்டியிருந்தார். நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல மணியனும், அவர் மூலமாக விகடனும் 1968 இறுதியிலிருந்து மெல்ல மெல்ல நடிகர் திலகத்திடமிடமிருந்து விலகி மாற்று முகாம் நோக்கி பயணப்பட்டனர். அந்த கால கட்டத்தை பற்றியும் அதன் பிறகு மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது இதழ் ஆரம்பித்து அ.தி.மு.க,வின் அதிகாரப்பூர்வ இதழ் போன்றே நடத்தி வந்த காலங்களைப் பற்றி அந்த பதிவுகளில் நான் பதிவு செய்திருந்தேன்.
இந்த நிலைமை 1984 அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் inner circle எனப்படும் உள்வட்டதிலிருந்து மணியன் வெளியேற்றப்பட்டார். அதாவது எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படும் போது அன்று வரை வெளிநாட்டு பயணம் என்றால் மணியன்தான் ஒருங்கிணைப்பாளர் அதிலும் அமெரிக்கா என்றால் மணியன் பிளஸ் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற நிலை மாறி பழனி.ஜி.பெரியசாமி போன்றவர்கள் அந்த இடத்தை நிரப்ப கொண்டு வரப்பட்டனர். இது மணியனுக்கு ஒரு பெரிய ஷாக் ஆக அமைந்தது. எம்.ஜி.ஆர். நலமடைந்து இந்தியா திரும்பியவுடன் மணியன் அவரை சந்தித்து மீண்டும் அவரது உள்வட்டத்தில் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியிலே முடிந்தது. எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வரை பழனி.ஜி. பெரிய சாமியை அகற்ற மணியனால் முடியவில்லை.
அது மட்டுமல்ல 1982 வரை இதயம் பேசுகிறது இதழுக்கு கொடுத்து வந்த ஆதரவிலும் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது. வார இதழ் உலகில் விகடனிலிருந்து வெளியேறி இதயம் பேசுகிறது ஆரம்பித்த மணியனுக்கும் தினமணி கதிரிலிருந்து வெளியேறி சாவி இதழ் ஆரம்பித்த சாவி அவர்களுக்கும் ஒரு பெரிய தொழில் முறை போட்டியே இருந்தது.[சாவி முதலில் குங்குமம பத்திரிக்கை ஆசிரியராக இருந்து பின்னர் சாவி இதழை தொடங்கினார்] முதலில் கலைஞர் ஆதரவாக வெளிவந்த சாவி பின் அவருடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தினால் எம்.ஜி.ஆர். பக்கம் சாய ஆரம்பித்தது. அதுவரை எம்.ஜி.ஆரின் படத்தை போட மாட்டேன் என்று சொன்ன சாவி 1980 ஜூலையில் ஒரு முறையும் 1981 ஜனவரியில் ஒரு முறையும் அட்டைபடத்தில் எம்.ஜி.ஆரை வெளியிட்டார். அதிலும் இரண்டாவது முறை தோட்டம் முதல் கோட்டை வரை என்று ஒரு நாள் முழுக்க எம்,ஜி.ஆரோடு தன் ஆசிரியர் குழுவினரை இருக்க வைத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டார் [அந்த கட்டுரையை எழுதியவர் அன்று தமிழன் என்ற புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருந்த மாலன்]. அது மணியனுக்கு கிடைத்த முதல் அடி.
அந்த வருடத்திலேயே எம்.ஜி.ஆரின் சொந்தப் பத்திரிக்கையான தாய் வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு ஆசிரியராக இருந்து நடத்திய அந்த இதழுக்கு பின்னர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு தாய் இதழின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. அன்றைய நம்பர் 1 இதழான குமுததிற்க்கே சவால் விடும் வகையில் அமைந்தது தாய். அந்த நேரத்தில் அ.தி.மு.கவில் இணைந்த செல்வி ஜெயலலிதாவும் எனக்கு பிடித்த என்ற தலைப்பில் கட்டுரைகளை வாராவாரம் எழுதினார். தவிரவும் குமுதத்தில் அவர் எழுதிக் கொண்டிருந்த தொடர் கதையை நிறுத்தி விட்டு அதை இங்கே தொடர்ந்தார். இவை எல்லாம் தாய் இதழுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
இந்த பாராமுகம் பின்னர் 1984 அக்டோபர் முதல் விலக்கி வைக்கப்பட்டது, மீண்டும் இணைய முயற்சி எடுத்தும் முடியாமற் போனது இவை அனைத்தும் சேர்ந்துதான் 1986-ல் மீண்டும் நடிகர் திலகம் பேட்டியை எடுக்க காரணமாக அமைந்தது ஆக எப்போதும் தன்னலம் கருதி செயல்ப்பட்ட மணியன் இந்தப் பேட்டியின் போதும் அதைதான் கடைப்பிடித்தார்.
<end dig>
அன்புடன்
-
டியர் ராகவேந்திரன் சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளைப் படித்துக் களித்து தாங்கள் வழங்கிய உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உயர்வான நன்றிகள்..!
மதுரை 'சென்ட்ரல் சினிமா'வில் "எங்க மாமா" : நிழற்படங்களுக்கு முரளி சாருக்கும், தங்களுக்கும் நன்றி..!
கலையுலக கோடீஸ்வரர் மதுரையில் வெற்றிநடைபோடுகிறார் என 'சுட்டி'க்காட்டிய நமது 'திரைக்களஞ்சியக் கோடீஸ்வரர்' நெய்வேலியாருக்கும் நன்றி..!
அன்புடன்,
பம்மலார்.
-
Manian personaly nice person but for business purpose very selfish person. thamks for murali srinivas for the article about manian. way back in 86 he has released some casttes about sri raghavenra swamigal and he himself supervised the sales in front of the temple at tripilicane that time I happened to interact with him and he was very upset over the present happenings ie 84 delink from political scenes etc. very pity.
-
MAKKAL THILAGAM . NADIGARTHILAGAM, PREM NAZIR, KANNADA ACTOR RAJKUMAR
THE VETRAN ACTOR M.K.RADHA .
http://i49.tinypic.com/2z9bbyx.jpg
-
-
'சந்திப்பு' வெள்ளி விழாக் காவியத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான நடனத்துடன்
இளைய திலகம், ஸ்ரீதேவி, ராதா, சரத்பாபு ஆகியோரின் அற்புத பங்களிப்புடன்
பிரம்மாண்ட செட்டிங்குடன்
மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமான இசையுடன்
'ஷோலாப்பூர் ராஜா...
ஷோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ'...
http://www.youtube.com/watch?v=BJTfW...yer_detailpage
"ஆனந்தம் விளையாடும் வீடு...
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு"
http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA&feature=player_detailpage
ஸ்ரீதேவியின் அசத்தல் மூவ்மென்ட்களில், மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வாணி ஜெயராமின் வசீகரக் குரலில்.
"ராத்திரி நிலாவில்
ரகசியக் கனாவில்
காதல் சங்கீதம் தான் நான் பாடவோ!"
இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்தப் பாடலை நான் கேட்காத நாளே கிடையாது. அவ்வளவு இனிமையான பாடல். பலர் இந்தப் பாடலை அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது கேட்டுப் பாருங்கள்... என்ன ஒரு இனிமையான இசை!... நடுவில் வரும் நடிகர் திலகத்தின் அந்த 'டேப்' டான்ஸ் இந்தப் பாடலுக்கு மிகவும் அழகையும், மெருகையும் சேர்க்கிறது.
http://www.youtube.com/watch?v=rK8TXOEPcFE&feature=player_detailpage
ஸ்ரீதேவியுடன் நடிகர் திலகத்தின் டூயட்.
"வார்த்தை நானடி கண்ணம்மா..
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா "
நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வைர வரிகள்.
"விழியில் வீரம் விளங்கும் போது கட்டபொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது வள்ளல் கர்ணன் போலே"
"உன்னை மிஞ்சும் நடிகன் இந்த உலகில் தோன்றவில்லை"
http://www.youtube.com/watch?v=du7OfHBgeZ8&feature=player_detailpage
'இளையதிலகம்' பிரபு ராதாவுடன் அசத்தும் ஜனரஞ்சக டூயட் பாடல்.
"அடி நான் வாங்கி வந்தேண்டி நாலு முழப் பூவு"
அதப் பின்னாடி வைப்பேன்டி வாசனையைப் பாரு"...
SPB மற்றும் ஜானகியின் கலாட்டா குரல்களில்
http://www.youtube.com/watch?v=E36NsN8l8Ro&feature=player_detailpage
-