இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வீடியோ பதிவுகள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் .
என்தங்கை படத்தின் தகவல்கள் தந்தமைக்கு நன்றி
Printable View
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வீடியோ பதிவுகள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் .
என்தங்கை படத்தின் தகவல்கள் தந்தமைக்கு நன்றி
journalist and actor cho about our makkal thilagam
http://youtu.be/w192j77vMv4
தலைவர் நடித்த படங்களில் மிகவும் சோகமான படம் என் தங்கை. இறந்த விட்ட தனது சகோதரி சரோஜா அவர்களை தோளில் போட்டு கடற்கரை மணலில் நடக்கும் அந்த வேக நடையை என்னால் மறக்க முடியாது.
தன்னுடைய சகோதரர்கள் ஏமாற்றும் போதும் தன்னுடைய உறவினர் (எம்.ஜி.சி) அவர்களிடம் உதவி கேட்டு ஏமாறும் போதும் அவருடைய நடிப்பு பிரமாதம். சோக உணர்சியை மிக அழகாக வெளி படுத்தியிருப்பார். மிகை நடிப்பு காலத்தில் அவருடைய இயற்கை நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.
முதன் முதலாக இப்படத்தை பார்த்த போது அடுத்தடுத்த காட்சியில் தலைவர் நிலை மோசமாகி கொண்டு வரும், இதன் பிறகு பழைய நிலைக்கு வந்து விடுவார் (அவர் மற்ற படத்தில் உள்ளது போல்) என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தன் அன்பு சகோதரியுடன் கடலில் கலந்து விடுவார்.
முடிவு என்னால் நம்ப முடியவில்லை. தலைவர் இறந்து விடுகிறார். எப்படி இந்த படம் ஒடியது என்று எண்ண தோன்றியது பிறகு தான் தெரிந்து கொண்டேன். இப் படம் அவருடைய இமேஜ் காலத்திற்கு முன்பு வந்தது என்று.
தலைவரின் சகோதரி பத்திர பெயர் மீனா இப்பெயரை என் தங்கை படம் வளரும் நேரத்தில் அவர் வேறு படத்தில் படப்பிடிப்பு சமயத்தில் பத்திர பெயரை அழைக்கும் போது மீனா என்று தவறுதலாக கூப்பிட்டு பல டேக்குகள் வாங்கினார் என்று தலைவரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு தலைவர் ஈடுபாட்டுடன் நடித்த படம்.
தேசியத் தலைவனுக் கு திரு விழா
தெம்மாங்கு சீமையிலே அழகு உலா
தமிழ்த் தாய் கண்டெடுத்த செல்வனுக்கு ஓ ர் விழா
தாயகத்தில் தொண்டரெல்லாம் கொண்டாடும் பெரு விழா
வங்கக் கடலும் பொங்கி வருது
வயற்காட்டில் நெற்கதிர்கள் ஆடி வருது
மங்கையர் நாவினில் பாட்டு வருது
தங்கத் தமிழன் வரவை நாடி
அறிவியல் கற்றான் அண்னாவின் பாசறையில்
வாழ்வியல் படித்தான் அன்னையின் மடியில்
கொள்கைகள் கண்டான் சாத்திரங்கள் மூலம்
கொடுத்தனன் வாழ்க்கைதன்னை த்மிழ் மக்கள் வாழ
கோயில் கொண்டனன் எங்கள் மனதினில்
கொற்றவனாய் முதல்வனாய் மூர்த்தியாய்
நோயில் விழுந்து மறைந்தாலும்
மறையா வாழும் எங்கள் தலைவா நீ
வாழிய என்றும் வாழியவே
1961 ஆண்டில் திரைக்கு வந்து மாபெரும் சமூக சீர் திருத்த படமாக வந்து மக்கள் திலகத்தாலும் சிறப்பாக சமூக படங்களில் நடித்து வெற்றி கரமாக வருவார் என்று நிருபித்து காட்டிய படம்
''திருடாதே ''.
''திருடாதே ''.- படம் வந்து இன்றுடன் 52 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
பல இடங்களில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தும் , 100 நாட்கள் ஓடியும் வசூலில் சாதனை புரிந்த படம் .
நாட்டிற்கு நல்ல கருத்தினை மிகவும் தெளிவாக பிரதிபலித்த படம் .
இந்த படத்தை பார்த்த பின் சமுதாயத்தில் உள்ள பல திருடர்கள் தங்களுடைய திருட்டு தொழிலை அடியோடு நிறுத்தி , திருந்தி வாழ்ந்ததாக செய்திகள் அன்றைய நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தது .
ஒரு சமுதாய விழிப்புணர்வு தாக்கத்தை உருவாக்கிய படம் திருடாதே .
1961ல் பல படங்கள் வந்து பெற்றி பெற்றாலும் திருடாதே படம்தான் மாபெரும் சமுதாய புரட்சி ஏற்படுத்திய சீர் திருத்தத படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பும் பாடலும் படத்தின் இமாலய வெற்றிக்கு காரணம் .
திருடாதே - பல திருடர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைத்த படம் .
சமுதயாத்திற்கு நல்ல படிப்பினை தந்த படம் .
இந்திய திரைப்பட வரலாற்றில் காவிய படங்களில் ஒன்றாக வந்த படம் .
திருடாதே’ எம்.ஜி.ஆரின் முதல் சமூகப்படமல்ல. ஆனால் இரண்டாவது சமூகப்படம் என்று சொல்லலாம். 1936-ல் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், 1960 வரை ராஜா ராணி படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார் என்பது அவர் நடித்த படங்களின் பட்டியலைப்பார்க்கும்போது தெரிகிறது (இடையில் 1956-ல் அவரது முதல் சமூகப்படமாக வந்தது தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ அதற்கடுத்த இரண்டாவது படமாக வந்தது திருடாதே (1961)படம்தான்) அவர் தொடர்ந்து சமூகப்படங்களில் நடிக்கத்துவங்கியது 1961ல் இருந்தே. திருடாதேயைத்தொடர்ந்து சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத்தட்டாதே என்று தொடர்ந்து சமூகப்படங்களைத் தொடர்ந்தார். இருப்பினும் பழைய வாசனை விட்டுவிடக்கூடாது என்றோ என்னவோ அரசிளங்குமரி (1961), ராணி சம்யுக்தா மற்றும் விக்ரமாதித்தன் (1962), கலை அரசி மற்றும் காஞ்சித்தலைவன் (1963) என்று ராஜாராணிப் படங்களையும் சை ட்ராக்கில் பண்ணிக்கொண்டிருந்தார். இதைவிட்டால் 1967-ல் அரசகட்டளையே அடுத்த ரா.ரா. படம். (1965-ல் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ராஜா ராணி கதையல்ல, கடற்கொள்ளையர்கள் பற்றிய படம்).
இவரோடு ஒப்பிடுகையில் சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் ஐம்பதுகளிலேயே ஏராளமான சமூகப்படங்களில் நடித்துள்ளனர். 1952-ல் வந்த சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் நடித்த பராசக்தியே ஒரு சமூகப்படம்தான். ஐம்பதுகளில் சந்திரபாபு கூட கதாநாயகனாக சமூகப்படங்களில் நடித்திருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யம்.
ராஜா ராணிப்படங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரொம்ப நெருக்கம் என்பதைக்காட்டத்தானோ என்னவோ அவர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும்’ ஒரு ராஜா ராணிப்படமாகவே அமைந்தது.
நன்றி - சாரதா [ மையம் திரியின் அருமையான பட விமர்சகர் ]
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)
ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப*ட*ம்), ப*ல்லாயிர*ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப*ய*ம்: 2ஜி ஸ்பெக்ட்ர*ம் குழுவின*ர்). முன்ன*தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன*தில் மாட்டினோர் நாலைந்து மாத*ங்களில் ப*ல*த்த* வ*ர*வேற்பிற்குப் பிற*கு க*ட்சியில் முக்கிய* அந்த*ஸ்த்தைப் பெறுவ*ர். 'ப*ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான* சொன்னாரு, ந*ம*க்கு எங்கே சொன்னாரு' என்ற*ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற*து.
எம்.ஜி.ஆர். படவிழா : திரண்ட பழைய நடிகைகள்
எம்.ஜி.ஆர். -சரோஜா தேவி ஜோடியாக நடித்து 1961-ல் வெளியான படம் திருடாதே. இப்படத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை அதை தயாரித்த ஏ.என்.எஸ். புரடக்ஷன் படநிறுவனம் தியாகராயநகர் ஜெர்மன் ஹாலில் இன்று நடத்தியது.
விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள், அவர் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.
நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழைய நடிகைகள் ஜெயச்சித்ரா, ஷீலா, சி.எஸ்.சரோஜா, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, ரத்னா, எஸ்.என்.பார்வதி, நடிகை சாவித்ரி மகள் விஜயா சாமூண்டீஸ்வரி, பின்னணி பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் ஏ.என்.எஸ். புரடக்ஷன் சார்பில் ஜெயந்தி கண்ணப்பன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் 50 வயதை தாண்டிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
நடிகைகள் எம்.ஜி.ஆருடன் நடித்த அனுபவங்களை மேடையில் பேசினார்கள். விழாவையொட்டி அரங்கின் வெளியே எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கண்காட்சி இடம் பெற்றது. என்கடமை, திருடாதே, நாடோடி மன்னன், அன்பேவா உள்ளிடட பல படங்களின் ஸ்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர். உருவப்படங்களின் பேனர்கள் கட்டி இருந்தனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கிளிப்பிங் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரையில் காட்டப்பட்டது. பழைய ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.
எம்.ஜி.ஆர். திரை உலகின் முடிசூடா மன்னரானார். நாடோடி மன்னன் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்தார். நாடோடி மன்னன் வெற்றி விழா சென்னையில் நடந்தபோது, அதில் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு பேசினார். "நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர்.
இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்" என்று புகழாரம் சூட்டினார், அண்ணா. "நாடோடி மன்னன்" படத்துக்கு பிறகு, "இன்பக்கனவு" என்ற நாடகத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வந்தார். கும்பகோணத்தில் இந்த நாடகம் நடந்தபோது, நடிகர் குண்டுமணியை தூக்கி எறியும் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது.
சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார். "எம்.ஜி.ஆரின் கால் முறிந்ததால், இனி முன்போல் அவரால் சண்டை போட முடியாது" என்று பலர் நினைத்தார்கள். ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கி விட்டு, முன்பை விட விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் நடித்தார். பி.ஆர்.பந்துலு தயாரித்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார்.
அதன்பின் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். பெரும்பாலும் சரித்திரப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், கோட்டு _சூட்டு போட்டு நடித்து சமூகப்படங்களில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பினார்கள்.
"திருடாதே" படத்தின் மூலம், சமூகப்படங்களிலும் தன்னால் சாதனை புரிய முடியும் என்று நிரூபித்தார். விஜயாவின் "எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சின்னப்பதேவர் தயாரித்த பல சமூகப் படங்களில் நடித்தார்.
சிகரம் தொட்டவர்கள் -
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு
. "இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.
இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்
"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -
சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
பாடல் மேலும் வளர்கிறது :
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."
எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.
தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.
மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடலைக் கேட்டும் காட்சியைக் கண்டும் இன்புற இணைப்பு: (http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4)
தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது. அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.
பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.
எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.
"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.
"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு.
அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.
படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.
மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம். அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது
COURTESY -பி.ஜி.எஸ். மணியன்
சமூகப் படங்களுக்கு எம்.ஜி.ஆரை திருப்பிய "திருடாதே மிகப்பெரிய வெற்றி
எம்.ஜி.ஆர். பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில சமூகப் படங்களில் நடித்தாலும், வேட்டி_ சட்டை அணிந்து நடிப்பார். அவர் கோட்டு_ சூட்டு முதலான நவீன உடைகள் அணிந்து நடிக்க வழி வகுத்த படம் "திருடாதே" இந்தப்படம் உருவானதில் ஒரு கதையே அடங்கி இருக்கிறது.
இதுபற்றி, தமிழரசு கழகப் பிரமுகரும், பட அதிபரும், பிற்காலத்தில் அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவராக ஆனவருமான சின்ன அண்ணாமலை, ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜாராணி கதைகளில் நடித்து புகழ் பெற்று கொண்டிருந்த சமயம். அவர் நடித்துக் கொண்டிருந்த `சக்ரவர்த்தி திருமகள்' என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
`சக்ரவர்த்தி திருமகள்' ஒரு ராஜாராணி கதைதான். எம்.ஜி.ஆர்.தான் அதில் கதாநாயகன். அஞ்சலிதேவி கதாநாயகி. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் _மதுரம் அதில் நடித்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு. எம்.ஜி.ஆருடன் நான் நெருங்கிப் பழகியது `சக்ரவர்த்தி திருமகள்' படப்பிடிப்பின்போதுதான். படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்பு காலங்களில், தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம். அதனால்
எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும் _மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் ஏன் ராஜா_ ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?" என்று கேட்டேன். "சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்" என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டார். அப்போது எம்.ஜி.ஆர். `பாகவதர் கிராப்'தான் வைத்திருப்பார்.
எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் ïகித்தேன். அதாவது தனக்கு, சமூகக் கதைக்கு ஏற்றமுகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச்சண்டை முதலியவைகள் சமூகக் கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது என்று எண்ணிக்கொண்டுதான், சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.
பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர். சிறிது நேரம் யோசித்து, "சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்" என்று சொன்னார். நான் முன்னமே இந்திப்படமான `பாக்கெட் மார்' என்னும் கதையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி.ஆருக்குக் காண்பித்தேன். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. "சரி. இந்தக் கதையையே எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னார்.
மறுநாள் சியாமளா ஸ்டூடியோ மேக்_அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போது, நானும் எனது கூட்டாளியான வி.அருணாசலம் செட்டியாரும் சென்று "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கியிருக்கிறோம். அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று சொன்னோம். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து, மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். "எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால், ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனால் `கால்ஷீட்' நேரம் பூராவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் கொடுத்திருக்கிறேன். அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்_ நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்" என்று சொன்னார்.
நான் அப்போது பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் கம்பெனியில் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். `தங்கமலை ரகசியம்' எனது கதையாதலால் என்னை பந்துலு தன் கூடவே வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சென்னை கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள். என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது, நான் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன்.
உடனே பத்மா, "இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு `சான்ஸ்' கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க" என்று கேட்டுக்கொண்டார். "தங்கமலை ரகசியம்" படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாகப் போடலாம். நான் பந்துலு அவர்களிடம் சொல்கிறேன்" என்று சொன்னேன்.
பத்மா சிபாரிசு செய்த பெண், மாநிறமாக இருந்தார். ஆனால் அவர் முகம் கேமிராவுக்கு ஏற்றதாக தோன்றியது. மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைச் சிபாரிசு செய்தேன். மேற்படி பெண்ணை அழைத்து வந்தார்கள். நடனமணிகளில் ஒருத்தியாகப் போட பந்துலு சம்மதித்தார். அழகு மோகினி, யவ்வன மோகினி நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தபடியால், மேற்படி நடனக் காட்சியை டைரக்ட் செய்யும்படி ப.நீலகண்டனை ஏற்பாடு செய்திருந்தார்.
பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றார். காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், என்னை தனியாக கூப்பிட்டு, "இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சம் யோசியாமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னார். பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தோம். எல்லோரும் `ஆகா' என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்!
சொன்னால் நம்பமாட்டீர்கள், `தங்கமலை ரகசியம்' படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த பணம் ரூபாய் இருநூற்றி ஐம்பதுதான்! பின்னர் அதே பந்துலு, அதே சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன். ஒவ்வொரு படத்திற்கும் பணம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.
மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும், எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன். "ஒரு `டெஸ்ட்' எடுங்கள் பார்க்கலாம்" என்று சொன்னார். `சரி' என்று சிட்டாடல் ஸ்டூடியோவில் ஒரு `டெஸ்ட்' எடுத்தோம். "டெஸ்ட் எடுப்பது" என்பது, பலமாதிரி நடிக்கச் சொல்லி படமாக எடுப்பது. `டெஸ்டை' எம்.ஜி.ஆர். பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம். சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். `அதுவும் ஒரு `செக்ஸி'யாகத்தானே இருக்கிறது! இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள்" என்று சொன்னார்.
எங்களது "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் `பாக்கெட்மார்' என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர் _சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், பா.நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், ஏ.எல்.சீனி வாசன் "நெகடிவ்" உரிமை வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து, வேலை துவங்கினோம். படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், "எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து `போஸ்டர்' ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்" என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.
எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், மேற்படி படத்திற்கு "திருடாதே" என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். `திருடாதே' படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், "திருடாதே" படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடி போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வருவேன். ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னிடம், "என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும். ஆகவே படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்லுகிறேன்" என்று சொன்னார். நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. "என் பேச்சை கேளுங்கள்" என்று விடாப்பிடியாகச் சொன்னார். `சரி' என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம். `திருடாதே' படத்திற்காக எனக்கு கிடைத்த பணத்தை வைத்துத்தான் `கடவுளின் குழந்தை' என்ற படத்தை நான் எடுத்தேன்.
அதன்பின் "திருடாதே" ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. அந்தப் படத்துக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போயிற்று. ஆனால், சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் `திருடாதே' நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வாறு சின்ன அண்ணாமலை கூறியுள்ளார். "திருடாதே" தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், "நாடோடி மன்னன்", "கல்யாணப் பரிசு" ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார்.
Courtesy- malaimalar
இன்று முதல் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள fun சினிமாஸ் நவீன சினிமா அரங்கில் இரவுக்காட்சி மட்டும் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் நாடோடி மன்னன்.
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------
http://i46.tinypic.com/24wfupy.jpg
Best wishes for the day Ravichandran Sir.
http://i48.tinypic.com/34gar1e.jpg
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..
இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.
மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..பிற நடிகர்களின் திரைப்படங்களின் வசூலை இந்த ஒரு படம் முறியடித்து சாதனை படைத்த மாபெரும் வெற்றிப்படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..
இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர் புரட்சித்தலைவரின் பக்தர் திரு. ரவிச்சந்திரன் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்கவென்றும் இன்று போல என்றும் வாழ்கவென்றும் என் மனதார வாழ்த்துகிறேன்
There is a myth that MGR is only good at Historical and period movies his get up and acting is not suited for social themes, I cannot understand why MGR is stamped in such a way, a general look at how many Social movies were released before Thirudathe, taken into account after MGR acted as Hero.
(1) Paithiyakaran – 1947 (Second Hero)
(2)Andaman Kaithi – 1952
(3) En Thangai – 1952
(4) Nam – 1953
(5) Panakari – 1953 (MGR acted as Count Vronsky of Anna Karenina novel)
(6) Malai Kallan – 1954
(7) Kundukili – 1954
(8) Thaikupin tharam – 1956
(9) Thai magaluku katiya thali – 1959
My dedicated post on Thirudathey Golden Jubilee.
http://www.mgrroop.blogspot.in/2011/...1961-2011.html
MGR's affidavit on Thirudathey movie shooting.
MGR mentions in Chatper 4 from Naan Yen Piranthen his autobiography, அகந்தைக்கு கிடைத்த அறிவரை – ………நான் எப்போது கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து நடிக்கனும் அதை மாறாக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். This was the condition MGR advised to A.L.Srinivasan when Saroja Devi was booked for the movie. MGR further mentions that the words were said just plainly taking into consideration the progress of the movie and not that he is a very busy actor and not to waste his call sheets.
But after his accident in 16.6.1959 in Sirkazhi and the movie was delayed not only for this reason but also to complete his other movie also. Only one movie was released in 1959 and three movies in 1960. By 1960 when shooting was in progress for Thirudathe Saroja Devi was a Big Star by then. MGR mentions frankly that Saroja Devi become a busy actress and he had to adjust for her call sheet. How many of us will tell this truth to public, but only MGR did. That is why he is praised as God today.
TODAY - DINAKARAN PAPAER
ARTICLE BY FLIMNEWS ANANDHAN
http://i50.tinypic.com/ae5zjm.jpg
இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். http://i49.tinypic.com/2uikpir.jpg
அவரும் அவர் தம் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அனைத்து எம் ஜி ஆர். அன்பர்களின் சார்பில் இந்த இனிய நன்னாளில், இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டுகிறேன்.
Happy Returns of the Day Tirupur Ravichandran Sir.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Some of the Images from Thirudathey.
Published by Olikirathu Urimaikural for the Golden Jubilee year 2011.
http://i125.photobucket.com/albums/p...ps9e7301f2.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Another rare image of our Thalaivar.
http://i125.photobucket.com/albums/p...pse8e4cb43.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Book cover for Thirudathey Special edition.
http://i125.photobucket.com/albums/p...ps01132bb3.jpg
http://i125.photobucket.com/albums/p...psfc62e67f.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...ps21fe23d5.jpg
MGR speech in Nellai Theater during the victory function of Thirudathey.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i125.photobucket.com/albums/p...psb3f4a57e.jpg
100th Day ad of Thirudathey.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://1.bp.blogspot.com/_t12SC6De_-...chandran24.jpg
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
திருடாதே படத்தின் விளம்பரங்கள் மற்றும் நெல்லை நகரில் நடைப்பெற்ற நூறாவது நாள் விழா செய்திகள் அருமை . நன்றி ரூப் சார் .