http://www.youtube.com/watch?v=mXBOXRffLqY
Printable View
மக்கள் திலகம்எம்ஜிஆர் அவர்கள் பதவி ஏற்ற 30.6.1977 நினைவலைகளை திரியில் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .37 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நம் மனதில் பசுமை நினைவுகளாய் இருப்பது மகிழ்ச்சியான
செய்தியாகும் .மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த பல பெருமைகளில் முக்கியமானது -மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் .
எம்ஜிஆரின் சத்துணவு தொடக்க விழா - 1.7.1982
மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனதிற்கு உதாரணம் - 1.7.1982 அன்று துவக்கி வைத்த சத்துணவு திட்டம் . உலகமே பாராட்டியது . 32 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து நடை முறை படுத்த பட்ட திட்டம் .
கிண்டல் கேலி பேசியவர்கள் எல்லாம் இன்று மனதார பாராட்டும் திட்டம் . இத்திட்டத்தால் பயன் பெற்ற குழைந்தைகள் இன்று பெரியவர்களாகி சமுதாயத்தில் நல்ல நிலையில் முன்னேறி உள்ளார்கள் .
அந்த திட்டத்தின் நாயகன் வள்ளல் எம்ஜிஆர்இன்றும் சரித்திர நாயகனாக சத்துணவு தந்த நாயகனாக வாழ்கிறார் .
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். .
100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் .
தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . '
இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் .
என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை .
நன்றி ஆனந்த விகடன் 18-07-1982
It was MGR who started the first ever mid-day meal scheme in Tamilnadu in the 1982 when he was CM. He gave two reasons, one that he knew from personal experience how agonising it was for children to go without meals - having experienced this himself as a child - also to ensure larger enrolment in schools and reducing drop-out rates.
Indira Gandhi, the then great Economists, the Planning Commission, many other celebrities criticised the move as one that would lead to bankruptcy of the State. Surprisingly, the UN complimented him. And, MGR achieved both objectives of larger admissions in schools and fewer drop-outs.
This is the reason why, nearly the whole of Tamilnadu adored MGR even after 30 and more years of his death. His name is magic and that is what Jayalalitha is cashing in as his one-time mistress. Most tamil-adults of to-day have had the benefit of this scheme when they were young and are grateful to him, so vote for his name.
Another point, India can never claim to have any sense of hygiene in the kitchen or with regard to our articles of food or even potable water. Most mothers cook in these conditions and feed their children, yet no child has died of it so far. The reason is that more than the food, it is the motherly love that is fed.
In the Mid-day meals scheme, however, this love - not even an iota - is lacking, hence children die. The Hare Krishna temple in Bangalore is running a scheme for meals for students in schools and serve millions of children every-day, yet there has been no complaint. The reason is their dedication and sincerety.
K.V.Narayanmurti.
எம்ஜிஆர் -ஒரு சிலருக்கு பிடிக்காதவர் . ஏன் என்றால் எம்ஜிஆரின் வெற்றிகளை , பாராட்டுகளை , புகழை , இன்னமும்
எம்ஜிஆரின் புகழ் நீடித்திருப்பது போன்ற காரணத்தால் பிடிக்காமல் போய் விட்டது . அந்த சிலரின் குறைகளுக்கு என்ன காரணம் ?
தான் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்தின் நாயகருக்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி நடக்காதவைகளை நடந்தாதாக கற்பனை செய்து ,மாநில , திராவிட , இந்திய வரலாற்றினை இழிவாக பேசி, அந்நியன் போல் ஒரு சமயம் போற்றி மறுபுறம் தாக்கி இறுக்கமான மன நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணமா என்று தெரியவில்லை .
அடுத்தவர்கள் சொல்வதை - எழுதியதை நம்புவர்கள் -சுயமாக சிந்திக்காமல் நம்பி ஆவேசமாக செயல் படுவதின் எதிரொலி .
தான் என்ன செய்கிறோம் - என்ன நினைக்கிறோம் - என்பதையே அறியாதவர்கள் படைப்புகள் ''கானல் நீரே ''
என்னதான் வரிந்து கொண்டு அலங்காரம் செய்தாலும் அகத்தின் அழகு நன்கு தெரிகிறதே .
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
நாளை நமதே - 1975
ஆயிரத்தில் ஒருவன் -1965
நேற்று இன்று நாளை -1974
தெய்வத்தாய் - 1974
குலேபகாவலி - 1955
மலைக்கள்ளன் - 1954
தலைவன் -1970
சபாஷ் மாப்பிளே - 1961
கணவன் -1968
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
நாளை நமதே - மிகவும் ஜாலியான படம் . மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடனங்கள் ஹை லைட் .
ஆயிரத்தில் ஒருவன் - சொல்லவே வேண்டாம் .பந்துலுவின் அமுத சுரபி .
நேற்று இன்று நாளை -அது என்றென்றும் நமக்குதான் என்று சொன்ன இசை சித்திரம் .
தெய்வத்தாய் -சகாப்தம் படைத்தவள் .
குலேபகாவலி - ராமண்ணாவை லட்சாதிபதியாக உயர்த்திய படம் .
மலைக்கள்ளன் - மக்கள் திலகம் திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்ற படம் . அதுவே இன்று வரை நிலைத்து விட்டது .
தலைவன் - என்றென்றும் .
சபாஷ் மாப்பிளே - நகைச்சுவையில் மக்கள் திலகம் நடித்த படம் .
கணவன் -மக்கள் திலகம் கதையில் உருவான , இனிமையான படம் .
குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி!
எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!
ஒரு ரசிகனின் பார்வையில் -
சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை. புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்.
இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.
படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!
ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!
-சி.என்.ராமகிருஷ்ணன்
உட்கார்ந்து இருப்பவர்கள் : இடமிருந்து வலமாக ......
திருவாளர்கள் : அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் நாராயணசுவாமி முதலியார், நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர், கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, நாஞ்சில் மனோகரன், ஜி. ஆர்.எட்மண்ட், புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரிய அவரது உண்மை விசுவாசி திரு. ஆர். எம். வீரப்பன் ஆகியோர்.
நின்றுகொண்டிருப்பவர்கள் : .இடமிருந்து வலமாக ....
திரு கே. ராசாமுகம்மது, பி. டி சரஸ்வதி அம்மையார், மறைதிரு ராகாவானந்தம், பி. சவுந்தரபாண்டியன், கா. காளிமுத்து, சி. பொன்னையன் மற்றும் கே. குழந்தைவேலு ஆகியோர்.
மந்திரிசபை புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
30-06-1977 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அண்ணா சாலையில் கூடிய லட்சக்கணக்கான மக்களிடையே ஆற்றிய எழுச்சி மிகு 5 நிமிட உரை :
http://i60.tinypic.com/rjp8wp.jpg
அன்புக்குரிய தாய் குலமே ! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே ! இதய தெய்வம் அண்ணாவின் மீது ஆணையிட்டு உறுதி எடுக்க விரும்புகிறேன்.
அங்கு ( ராஜாஜி மண்டபத்தில்) நடந்தது அரசாங்க சடங்கு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமரர் அண்ணா அவர்கள் சொன்னார். அமைச்சரவையின் சார்பில், தமிழக மக்களுக்கும், பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும், வாழும் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
மக்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்காகவும், மக்கள் விருப்பத்தை சட்டமாக்குவதற்காகவும்தான் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
லஞ்சமற்ற - ஊழலற்ற ஆட்சி நடத்துவோம். நிர்வாகத்தில் தலையிடாமல், நீதிமன்றத்தில் குறுக்கிடாமல் பணியாற்றோவோம். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மாபெரும் பணியினை உயிரை கொடுத்தேனும் நிறைவேற்றுவோம்.
இழப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்த்து நின்று கடமையை. நிறைவேற்றுவோம். அண்ணா மீது ஆணை. உங்கள் ஆசியோடு பணி செய்யப் புறப்படுகிறோம். ஆசி கூறுங்கள்.
அண்ணா நாமம் வாழ்க !================================================== ================================================== ==========
புரட்சித்தலைவரின் இந்த எழுச்சி மிகு உரையை நேரில் கேட்கும் பாக்கியத்தை பெற்றவர்களில் நானும் ஒருவன். மலையாள படங்களை திரையிடும் " நியூ எல்பின்ஸ்டன் " என்ற ஒரு திரையரங்கம் அண்ணா சாலையில் முன்பு இருந்தது. அது பின்பு மூடப்பட்டது.
அன்றைய தினம் (30-06-1977) அந்த திரையரங்க வளாகத்தின் அருகே உள்ள பாம்பே ஹல்வா ஹவுஸ் கடையின் முன்பு திரண்டிருந்த மக்களில் ஒருவனாக புரட்சித் தலைவரின் புன்முகத்தை காணும், பெரும்பேறினை பெற்றேன். எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழு நண்பர்கள் மற்றும் திருவொற்றியூர் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடலேறுகள் பலருடன் இக்கூட்டத்தில் பங்கு பெற்றது என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத நாள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
29-06-1977 அன்று மாலை. மந்திரிகள் பட்டியலை அளிக்க கவர்னர் மாளிகைக்கு நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் செல்லும் காட்சி !http://i61.tinypic.com/rrtk6w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
30-06-1977 அன்று வெளியான "மாலை முரசு" பத்திரிகையில், நம் இதய தெய்வம் பற்றி வெளியான ஒரு பெட்டிச்செய்தி !
http://i57.tinypic.com/i4k03d.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மேடையில் வீற்றிருந்தாலும், மக்கள் நலனுக்காக, உடனே கோப்பு ஒன்றில், மேடையிலேயே கையொப்பமிடும் நம் மக்கள் தலைவர் :
http://i58.tinypic.com/nbuqll.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/244tx08.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.
எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.
அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.
சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.
இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.
“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.
நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.
உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.
முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!
courtesy - panruttiyaar
30-06-1977 அன்று நம் மன்னவன் மகுடம் சூடிய போது அலை மோதிய மக்கள் கூட்டம் அண்ணா சாலையில் பெரியார் சிலையில் இருந்து வெலிங்டன் தியேட்டர் வரையிலும், வாலாஜா சாலையில் திருவல்லிக்கேணி சந்திப்பு வரையிலும், இன்னொரு பக்கம் பிளாக்கர்ஸ் சாலை வரையிலும் நிரம்பி வழிந்தது. புரட்சித் தலைவரின் உரையை தெளிவாக கேட்பதற்காக அப்பகுதி முழுவதும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.
http://i62.tinypic.com/20r1cwp.png
தமிழில் பதவி ஏற்பு :
ஆளுநர் பட்வாரி அவர்கள் பதவி ஏற்பு உறுதி மொழியையும் ரகசியக் காப்ப்பு பிரமாணத்தையும் ஆங்கிலத்தில் படித்தார். நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் அந்த வாசங்களை தமிழில் திருப்பி சொன்னார் :
எம். ஜி. ராமசந்திரன் என்னும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், ஒருமைப்பாட்டையும், நிலை நிறுத்துவேன் என்றும், தமிழக அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சன்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் ஒப்ப அச்சமும், ஒரு சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பு விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். பதவி ஏற்பு உறுதி மொழியினை புரட்சித் தலைவர் தமிழில் கூறி முடித்தவுடன் அதற்கான அரசாங்கப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
ரகசிய காப்பு
அடுத்து ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் ஆங்கிலத்தில் படிக்க பொன்மனச்செம்மல் அவர்கள் அதனை தமிழில் கூறினார். எம். ஜி. ராமசந்திரன் என்னும் நான், தமிழக அரசின் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய கவனத்துக்கு வரும் அல்லது எனக்கு தெரியப் படுத்தப்படும் எந்தப் பொருளையும், அமைச்சரின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறு கூறியவுடன், இந்த வாசகங்களுக்கடியில் அரசுப்பதிரத்தில் கையெழுத்திட்டார்.
ராஜாஜி மண்டபத்தில் காலை 9.15க்கு தொடங்கிய இந்த பதவியேற்பு வைபவம் சுமார் 40 நிமிடங்கள் நீடித்து காலை 9.55 க்கு முடிவடைந்தது.
விழா முடிந்த காலை 9.55 முதல் 10.15 வரை புரட்சித் தலைவரால் மண்டபத்தை விட்டு வெளியே வர இயலவில்லை. மண்டபத்தில் இருந்த அனைவரும், நம் பொன்மனசெம்மலுடன் கை குலுக்கவும், மாலை அணிவிக்கவும் போட்டி போட்டுக் கொண்டு நெருக்கியடித்துக் கொண்டு வந்தனர். அந்த வரவேற்புகளையும், வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்ட நம் புரட்சித்தலைவர் அவர்கள் ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் " புரட்சித் தலைவர் வாழ்க " என்று எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் விண்ணை பிளந்தன. அவர்களனைவருக்கும், நம் ஒப்பற்ற இதய தெய்வம் கையசைத்து, இரு கரம் கூப்பி வணக்கங்களை பணிவுடன் தெரிவித்தார்.
பிறகு திறந்த வேனில் நம் புரட்சித்தலைவர் அவர்கள் ஏறிக்கொண்டு அண்ணா சிலைக்கு ஊர்வலமாக சென்றார். விழாக்கு, அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அப்போதைய தலைமை நீதிபதி கோவிந்தன் நாயர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் முப்படை தளபதிகள் வந்திருந்தனர்.
நம் புரட்சித் தலைவரின் மனைவி அன்னை ஜானகி அவர்களும், அமைச்சர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். எம். ஜி. சக்கரபாணி, நடிகர்கள் மனோகர், நம்பியார், இயக்குனர் ப. நீலகண்டன், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் முசிறிப்புத்தன், சத்தியவாணி முத்து, தாரா செரியன், மால்கம் ஆதி சேஷையா ஆகியோரும் வந்திருந்தார்கள்.
நடிகை லதா தனது சகோதரியுடன் வந்திருந்தார்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
. .
இரண்டாயிரம் பதிவுகள் கண்ட எங்கள் இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் இடைவிடாத பதிவுகள் வழங்கிட இதய தெய்வத்தின் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
http://i60.tinypic.com/149bka9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சத்துணவு தந்த சரித்திர நாயகன்
ஐக்கிய நாடுகள் சபையில் நம் புரட்சித் தலைவரின் பெயர் உச்சரிக்கப்பட்டு அவர் கொணர்ந்த சத்துணவு திட்டம் பற்றிய விரிவான உரையை பதிவு செய்தார், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள்.
அப்படிப்பட்ட மகத்தான திட்டம் இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 33வது ஆண்டு காண்கிறது. இத்திட்டத்தின் படி, 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளும், மாணவ மாணவியரும், பள்ளிக்கூடங்கள், மூலமாகவும், 2 முதல் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு நல்வாழ்வு நிலையங்களின் மூலமாகவும் பயன்பெறுவர்.
சத்துணவு திட்டத்தை சிறப்ப்பாக நடத்துவதற்காக புரட்சித்தலைவர் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த உயர் மட்டக் குழுவில் நம் மன்னவனால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு :
1. நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன்
2. கல்வி அமைச்சராக இருந்த அரங்க நாயகம்
3. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கோமதி சீனிவாசன்
4. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த ஜி. சாமிநாதன்
5. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த தாரா செரியன்
6. சென்னை நகர ஷெரிப்பாக இருந்த சிவந்தி ஆதித்தன்
7. டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
8. டாக்டர் அறம்
அப்போதே, இந்த இலவச மதிய சத்துணவுத் திட்டத்துக்காக 100 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சமூக நல மையங்கள் அமைக்கப்படும் என்று நம் புரட்சித் தலைவர் அவர்கள் அறிவித்தார்.
2 முதல 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வழங்கும் உணவு 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, 7 கிராம் எண்ணெய் மற்றும் காய்கறி அடங்கியதாக இருக்கும்.
5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வழங்கும் உணவு 100 கிராம் அரிசி மற்றும் பருப்பு, 50 கிராம் கூட்டுக்காய்கறி அடங்கியதாக இருக்கும் என்று நம் புரட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த சத்துணவு திட்டத்தை 01-07-1982 அன்று திருச்சி அருகே திருவெறும்பூர் யூனியனில் அடங்கிய பாப்பாக்குறிச்சியில் முதல்வர் புரட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
முதலில் பாப்பாக்குறிச்சி குழந்தைகள் நல வாரிய நிலையத்தை நம் இதய தெய்வம் அவர்கள் திறந்து வைத்தார். பின்பு, அங்கு குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வைக்க பட்டிருந்த பொருகளை பார்வையிட்டார். அதன் பின்பு, மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். வரிசையாக 2000 குழந்தைகள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் உணவு பரிமாறினார். சாம்பார் சாதம், கீரை, பாயசம், வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டன. பிறகு, நம் பொன்மனசெம்மலும் அந்த குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.
http://i1273.photobucket.com/albums/...pse23e1160.jpg
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், அன்றைய தினமே அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்த சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Dear Kaliyaperumal Sir,
I too join with you in inviting Mr. Vellore Ramamoorthy to make his contribution in this Thread, by valuable postings.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஆயிரத்தில் ஒருவன் - ஆல்பர்ட் திரை அரங்கில் நடந்த 100வது நாள் விழா -வீடியோ தொகுப்பு மிகவும் அருமை . ரசிகர்களின் ஆரவாரம் -கொண்டாட்டங்கள் நேரில் பார்த்த உணர்வை உண்டாக்கியது . நன்றி திரு ரூப் சார் .
மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு விழா - அரிய நிழற்படங்கள் - செய்திகள் வழங்கிய திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் 1977 பதவி ஏற்பு மாலைமுரசு ஆவணங்கள் - தகவல்கள் - சத்துணவு பற்றிய
சிறப்பு தகவல்கள் மிகவும் அருமை.
2000 பதிவுகள்வழங்கிய இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் அரிய படங்கள் வீடியோ என்று பதிவிட்டு வரும் திரு யுகேஷ் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் சாதனைகள் தொகுப்பை சிறப்பாக பதிவிட்டு வரும் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .
There is an article in Femina Tamil this month issue about our beloved hero ,pls read it.
மக்கள் திலகத்தின் கண்ணியம்
" சர்வாதிகாரி " பட ஷூட்டிங்கில் ஒரு பாடலுக்கான காட்சி :
அக்காட்சியில் நடிகை "அஞ்சலி தேவி " பம்பரம் போல் சுழன்று ஒரு சுற்று சுற்றி வந்து தரையில் விழ வேண்டும். அஞ்சலி தேவியும் அவ்விதமே சுற்றித் தரையில் விழ இயக்குனரும் " டேக் ஓகே " என்று சொல்லி விட்டார்.
நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் -
டைரக்டர் சார், அந்த ' டேக்கை ஒன்ஸ் மோர் ' எடுங்க என்று பார்த்துக் கொண்டிருந்த நம் மக்கள் திலகம் கேட்டார். ஏன், இவருக்கு என்ன ஆச்சு என்று புலம்பிய இயக்குனரிடம், ப்ளீஸ், ஒன்ஸ் மோர் ' எடுங்க என்றார் மறுபடியும், மக்கள் திலகம்.
இயக்குனரும் வேண்டா வெறுப்பாக காட்சிக்கு மீண்டும் தயார் செய்தார். அஞ்சலி தேவியும் முதலில் பம்பரம் சுற்றி வந்து விழுவதைப் போல் விழுந்தார்.
அதைபார்த்த நம் பொன்மனச்செம்மல் இப்போது டேக் ஓகே சார், இதையே வச்சுக்கலாம் என்றார்.
இயக்குனர் உட்பட யூனிட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை எல்லோரும் நம் மக்கள் திலகத்தையே பார்த்தனர்.
டைரக்டர் சார், முதல் டேக்கில் அஞ்சலியம்மா பம்பரம் போல் சுழன்று வந்த போது அவர் அணிந்திருந்த பாவாடை முட்டி வரை வந்து விட்டது. முழங்கால் தெரிந்தால் விரசமாக இருக்கும் என்பதற்காக தான் மறுபடியும் டேக் எடுக்க சொன்னேன் என்று கூறி விளக்கினார் நம் மக்கள் திலகம்.
மக்கள் திலகத்தின் கண்ணியமே கண்ணியம் தான்.
http://i1273.photobucket.com/albums/...psfbfe1482.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அன்பாய் திருத்தும் பண்பாளர் நம் அற்புத தலைவர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் !
தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு உதவவும் செய்வார், நம் மக்கள் திலகம். சட்டப்படி தீர்ப்பளித்து விட்டு தர்மப்படி உதவும் குணமும் கொண்டவர் புரட்சித்தலைவர். இதற்கு உதாரணமாக ஒரு சிறு சம்பவம் :
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, பள்ளமான பல இடங்களையும் மழை நீர் ஆக்கிரமித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வகையில், நம் மக்கள் தலைவர் குடியிருந்து வந்த ராமாபுரம் தோட்டமும் வெள்ளத்தால் சூழ்ந்தது. படகின் மூலம் சாலைக்கு வந்த முதல்வர் புரட்சித்தலைவர் " கன்னிமாரா " ஓட்டலில் தங்கினார். அப்போது, அந்த ஹோட்டலே தலைமை செயலகமாக இயங்கத் தொடங்கியது. அவ்விதம் இயங்கி வரும் வேளையில் வெள்ள நிவாரணப்பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு அரசு அதிகாரி கையாடல் செய்ததின் பேரில் அரசுக்கு கெட்ட பெயரினையும் அவச் சொல்லையும் உருவாக்கி விட்டார்.
விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் புரட்சிதலைவர், அவ்வதிகாரியை உடனே பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.சற்று நேரத்துக்கெல்லாம் சம்பத்தப்பட்ட அதிகாரி நம் மன்னவனிடம் ஓடி வந்தார். அப்போது முதல்வருக்கு மதிய உணவு வருகிறது. பதட்டத்துடன் ஓடி வந்த அதிகாரியின் முகத்தைப் பார்த்தவர்,. அவரிடம் "சாப்பிட்டீங்களா " என்று கேட்க அவர் " சாப்பிட்டாச்சு " என்று பதில் கூற, பொய் சொல்கிறீர், நீங்கள் சாப்பிட வில்லை என உங்கள் முகம் சொல்கிறது என்று புரட்சித் தலைவர் அவர்கள் சொல்ல, அதிகாரி மெளனமாக நிற்கிறார்.
முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார் பொற்கால ஆட்சி தந்திட்ட நம் பொன்மனச்செம்மல் அவர்கள். எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன், அரசுக்கு என்னால் எவ்வளவு அவப்பெயர். அப்படிப்பட்ட இந்த துரோகியை சாப்பிட வேறு சொல்கிறீர்கள். உங்களது பெருந்தன்மை என்னை மேன்மேலும் தண்டிக்கிறது என்று அழுது புலம்பி சாப்பிடாமல் இருந்தார் அந்த அதிகாரி.
அதைக் கண்ட முதல்வர் புரட்சித்தலைவர் அவர்கள், இப்போது சாப்பிடப் போகிறீர்களா, இல்லையா ? என்று அதட்டலாக கேட்கவே, டைனிங் டேபிள் அருகே அவர் எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு, எவ்விதமான வெறுப்பையும் காட்டாமல்,தாயன்புடன் வழக்கமான பாணியில் பாணியில் அவருக்கு அது வையுங்கள் இதை வையுங்கள் என்றெல்லாம் அன்பு மிகுதியில் உணவினை பரிமாறச் செய்து திக்கு முக்காட செய்து விடுகிறார் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள்.
சாப்பிட்டு முடிந்தவுடன், தனது அறைக்குள் சென்று விடுகிறார் நம் இதய தெய்வம் அவர்கள். அவ்வதிகாரியும், கெஞ்சிக் கொண்டே பின் தொடர்கிறார். இரண்டு மாதத்துக்கு என் முகத்தில் விழிக்காதீர், போய் விடுங்கள் என்கின்றார் நம் மன்னவன்.
அவ்வதிகாரியோ, ஐயா, என் தாய் நோயில் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார், கல்லூரியில் படிக்கும் என் மகன், மகள்களின் செலவு, தாயின் வைத்திய செலவு, குடும்ப செலவு என ஒவ்வொன்றாக முதல்வரிடம் முதல்வரிடம் எடுத்துச் சொன்னார்.
உங்களை (அந்த அதிகாரியை) அப்போதே போகச் சொன்னேனே, போய் வாருங்கள் என்று சொன்னவர் அறைக் கதவை சாத்திக் கொண்டார் மக்கள் திலகம்.
அந்த அதிகாரியும் வேறு வழியின்றி, அது வரையில் அரசு காரில் பயணித்தவர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் வேன் ஒன்று வாசலில் வந்து நிற்கிறது.
யார் வேன் ? எதற்காக நம் வீட்டு வாசலில் நிற்கிறது என்று நினைத்த மறு கணத்தில், முதல்வர் புரட்சித் தலைவரின் உதவியாளர், அதிகாரியின் வீட்டில் இறக்கி விட்டு வருமாறு, "அரிசி, பருப்பு, புளி, எண்ணெய், மிளகாய் என்று 2 மாதத்துக்கான அனைத்து மளிகை சாமான்களையும், ரொக்கம் ரூபாய் 3,000த்தை கொடுத்து விட்டு வருமாறு லோடுமேன் கூறியதை கேட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டார் அந்த அரசு அதிகாரி.
அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பாணியில் தனக்கு பணி இடைநீக்கம் உத்தரவினை கொடுத்தாலும் அதற்கான சன்மானத்தையும் அளித்து விட்டாரே என மெய் சிலிர்த்துப் போனார். ================================================== ================================================== ======================
இங்கு தான் அனைவரின் உள்ளங்களிலும் நிற்கிறார், மனிதாபிமானத்துக்கு மறு பெயராய் திகழும் மக்கள் திலகம். .
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/r1egsh.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme was launched in 1982 with a view to providing adequate nutrition to economically disadvantaged children of age group 2 to 5 years and was later extended to students and providing social security to the disabled. of age up to 15 years. Besides combating malnutrition, the programme sought to act as an incentive for increasing enrolment in schools and for reducing dropouts.
http://www.youtube.com/watch?v=1Qk-B6udry4
http://i57.tinypic.com/315yaet.jpg
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
http://i58.tinypic.com/24e43g0.png
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
http://i60.tinypic.com/2z7lv1g.jpg
INFORMATION FROM MR.V.P.HARIDAS, COIMBATORE
Thank you for the information Sir.