http://i57.tinypic.com/2623att.jpg
Printable View
என்னுடைய அனுபவத்தில் .....
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சந்தித்த எதிர்பாராத ஏமாற்றம் - 2
மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை 1972 தமிழ் புத்தாண்டு அன்று வெளிவந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த படத்தில்தான் மிக அதிகமான உடைகளில் தோன்றினார் . அத்தனை உடைகளும் கொள்ளை அழகு . ஜெயலலிதாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்த படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .சண்டை காட்சிகளும் பிரமாதமாக இருந்தது . மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் அருமையாக இருந்தது . காஷ்மீர் காட்சிகள் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது 1971-1972 கால கட்டத்தில் மக்கள் திலகத்தின் ஜோடியாக ஜெயலலிதாவை ஏற்று கொள்ள ரசிகர்கள் விரும்பவில்லை . தமிழகத்தில் அதிகபட்சமாக 12 வாரங்கள் ஓடியது , ஆறுதலான விஷயம் ...ராமன் தேடிய சீதை இலங்கையில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி கண்டது .
தினகரன் - வெள்ளிமலர் -25/09/2015
http://i61.tinypic.com/331kc2u.jpg
தினமலர் -வாரமலர் -27/09/2015
http://i61.tinypic.com/2wdub03.jpg
http://i59.tinypic.com/28p53n.jpg
நக்கீரன் -26/09/2015
http://i61.tinypic.com/2qamu82.jpg
உண்மை அதுவல்ல. தற்போது சுவரொட்டிகளில் , பேனர்களில் நிலா வடிவத்தில் முதல்வருக்கு பயந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவத்தை பயன்படுத்தும் அ. தி.மு.க. வினர் தேர்தல் நேரங்களில் சற்று பெரிதாகவும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களையும் , பேச்சுகளையும் , அவர் திருஉருவப்படங்களையும், பயன்படுத்தாமல் இருந்தால் தான் பணால் ஆகிவிடுவர் . இதுவும் ஜோசியருக்கு
தெரியும். ஏனோ சொல்ல மறந்துவிட்டார்.
அக்னி மலர்கள் புத்தகத்தில் இருந்து தலைவருக்கு பெருமை சூடும் பதிவுகளை வழங்கியிருக்கும் தலைவரின் மெய்க்காவலர் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர் திரு.கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி.
சீன யுத்த நிவாரண நிதிக்கு தலைவர் முதன்முதலில் தலைவர் நிதி அளித்ததை கிண்டல் செய்தவருக்கு பெருந்தலைவர் காமராஜர் பதிலடி கொடுத்திருப்பது அருமை. பதிவுக்கு நன்றி.
நீரும் நெருப்பும் மற்றும் ராமன் தேடிய சீதை படங்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவு அமையாத படங்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டிருக்கும் எஸ்.வி.அவர்களுடைய வித்தியாசமான பதிவுக்கு நன்றி. என்றாலும் இந்தப் படங்கள் தயாரிப்பாளரையோ, விநியோகஸ்தர்களையோ ஏமாற்றவில்லை. நீரும் நெருப்பும் படம் சென்னை தேவிபாரடைசில் 9 வாரங்கள் ஓடியது. குறிப்பாக, நீரும் நெருப்பும் படத்தில் கடைசியில் கரிகாலன் இறப்பதை என்னால் சகிக்கவே முடியவில்லை. குடியிருந்த கோயில் மாதிரி அவரையும் உயிரோடு இருப்பது போல காண்பித்திருக்கலாம். இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் திருந்தியிருக்கும். எதிர்பார்த்த அளவு ஓடாததற்கு இதுவும் ஒரு காரணம்.
பேராசிரியர் திரு.செல்வகுமார் ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையில் இருந்து பதிவிட்டிருக்கும் கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது. இதில் சில நேரங்களில் அதிமுக கொடியில் அண்ணாவுக்கு பதிலாக, வெள்ளை நிறத்தில் ஒட்டுபோட்டு கட்டுகிறார்கள்.(அந்த வெள்ளைதான் அண்ணாவாம்) கொடுமை.
திருவண்ணாமலை விழா படங்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.
திரு.சுஹராம், திரு. ரவிச்சந்திரன், திரு.ரூப் குமார், திரு.முத்தையன், திரு.எம்ஜிஆர் பாஸ்கரன் உள்ளிட்ட அனைவரின் பதிவுகளும் அருமையாக உள்ளது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்