சின்னக் கண்ணன் சார்!
சுசீலா அரசாட்சி செய்யும் 'நானாட்சி செய்து வரும்' ஒன்று போதும் சார் ஜென்மம் சாபல்யம் அடைய.
Printable View
சின்னக் கண்ணன் சார்!
சுசீலா அரசாட்சி செய்யும் 'நானாட்சி செய்து வரும்' ஒன்று போதும் சார் ஜென்மம் சாபல்யம் அடைய.
என்னுள் கலந்த கானங்கள் - 4
**
சில நாட்கள் முன்பு சுசீலாம்மா பாடல் புதிருக்காக எழுதிப் பார்த்த புதிர்
இது..
*
கண்ணதாசன் எழுதிய ஸ்வீட் பாட்டு இது.. சுசீலாம்மா இன்னொருத்தரோட பாடிய டூயட் தான்..புராண காலப்படந்தேன்..ஆனா ஹீரோயின் ஓ.கே ஹீரோக்குத் தான் அப்பப்ப தொண்டை அடைச்சுக்கும்..கறுப்பு வெள்ளை படத்தோட வீடியோவ விட ஆடியோ எப்பொழுதும் காதுக்கு இனிமை..அந்த ஸ்வீட்டான பொருள் பாட்டு முழுக்கவும் வரும் என்பது இன்னொரு க்ளூ!
*
விடை சுலபம் தான்..
ஏனென்று கேள்வி எழாமல் சொல்லிடுவர்
தேன்குழைத்த பாட்டிது தான்..
*
ஹீரோ ப்ளாக் அண்ட் ஒய்ட்.கால ஏவி.எம் ராஜன்.. ஹீரோயினி..ம்ம்(பாலா சார் மறுபடி கலங்கப் போறார்) அகெய்ன் காஞ்சனா
தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..
எத்தனை அழகு என்றால்
..என்னதான் நானும் சொல்ல
வித்தைகள் புரியும் கண்கள்
..விளக்கிடும் கள்ளப் பார்வை
நித்தமும் மலர்ந்த பூவாய்
..நெகிழ்ந்துதான் சிரிக்கும் தோற்றம்
சித்தமும் என்றும் உன்னைத்
..தேடியே திகைக்கும் பெண்ணே
அப்படின்னு அந்தக்காலத்திலேயே என் தாத்தா பாடியிருக்காராக்கும்..
(ம்ம் அழகிகளை எல்லாம் ப்ளாக் அண்ட் வொய்ட்ல தான் காட்டணும்னு ஏன் தான் நெனச்சாங்களோ) படம் வீர அபிமன்யு..
*
பி.பி,எஸ்ஸின் மென்மைக் குரல், சுசீலாம்மாவின் தேன் குரலில் ஒரு ஜீகல் பந்தியே படைத்திடும் பாடல் என்றால் மிகையல்ல..ஆனால் அதற்கான அழகிய வரிகள் தந்த கவிஞரை என்னென்று சொல்வது
*
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
**
அந்த இதுவெனன்னு ஏவி.எம் ராஜன் சொல்றப்ப எனக்கு எப்பப் பார்த்தாலும் கோபம் பொங்கும்..ம்ம் கொடுத்து வச்ச ராஜா :)
பின்ன வாரேன் :)
வாசு சார்
சும்பன் oak
நிசும்பன் கருணாநிதி
நான் வம்பன்
'கொம்பன்' இன்னும் வரலையே! ஒரு வாரம் லீவா?
நல்லா இருங்க!:)
நல்லா இருங்க!:)
வாசு சார்
splendid reply
சின்னக் கண்ணன் சார்,
like ஆ கிளிக் பண்ணிகிட்டே இருக்கீங்க போல! notification 4 தாண்டிடுச்சே!:)