கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 20
கே: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரெஞ்சு அரசு கூட விருது வழங்குகிறதே, நம் இந்திய அரசு? (கோவி.முருகையன், மாராபட்டு)
ப: வள்ளுவனுக்கு சங்கப்பலகை இடம் கொடுக்க மறுத்தது. கம்பனை ஸ்ரீரங்கம் கண்டு கொள்ளவே இல்லை. கவிதைப் போட்டியில் பாரதிக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்தது. இவர்கள் எல்லாம் இன்றும் வாழ்கிறார்கள். எதிர்த்தவர்கள் எங்கே? சாதனையாளர்களோ சரித்திரம். அரசாங்கப் பரிசுகள் அன்றோடு மறந்து போகும் செய்தி.
(ஆதாரம் : தினமணி கதிர், 21.8.1994)
அன்புடன்,
பம்மலார்.