Attn. VASUDEVAN
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
Attn. VASUDEVAN
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
டியர் ராகவேந்திரன் சார்,
ஆவல் தாங்க முடியல...
நன்மையில் முடிக்க வேண்டியவர்...
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!
பிரபல பல் மருத்துவர் ஜானகிராமன் அவர்கள் நடிகர் திலகத்துக்கு பல் மருத்துவம் செய்த தகவல் அருமை. காணாமல் போன பல்லை அவர் பின்னர் கண்டுபிடித்து மகிழ்ந்தது படுசுவாரஸ்யம். 2003-ம் ஆண்டு 'தி ஹிந்து' நாளிதழில் வந்த இத்தகவல், இன்னும் சற்று விரிவாக, அதே ஆண்டு 'குமுதம்' வார இதழிலும் வந்திருந்தது.
நடிகர் திலகத்தின் கலையுலகப் பொன்விழாயொட்டி, மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியான அவரது பேட்டி மிக அருமை. நேர்காணல்களின்போது பத்திரிகையாளர்களிடம் எப்பொழுதுமே நடிகர் திலகம் மனதில்பட்டதை-உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதிலும் குறிப்பாக மணியன் போன்றவர்களிடம் பேசும்போது படுகேஷுவுலாகவும், ஜாலியாகவும் பதிலளிப்பார். 1990களில், இதே இதழுக்காக அளித்த பேட்டியில், நடிகர் திலகம் மணியன் அவர்களிடம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'நீங்கள் தானே நான் மிகையாக நடிக்கிறேன் அதாவது ஓவர் ஆக்ட் செய்கிறேன் என்று பத்திரிகையில் முதன்முதலில் எழுதினீர்கள்' என்று மணியனிடமே சொல்லி அவரை திக்குமுக்காட வைத்தார். 1986-ல் வெளிவந்த இந்த மணியான பேட்டியை இங்கே இடுகை செய்த தங்களுக்கும், இந்த கிடைத்தற்கரிய ஆவணங்களை தங்களுக்கு அள்ளி வழங்கிய அன்பு அடிகளாருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்..! [நடிகர் திலகத்தின் கலையுலகப் பொன்விழா, 1984-ம் ஆண்டிலிருந்து 1986-ம் ஆண்டு வரை நமது பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டது. 1986-ல் அவரது கலையுலகப் பொன்விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவாகவும் நடைபெற்றது. இவ்விழா குறித்த ஆவணப் பொக்கிஷங்களை அடியேன் ஏற்கனவே எட்டாம் பாக நடிகர் திலகம் திரியில் அளித்திருக்கிறேன்].
திரைப்பட விளம்பர டிசைன் திலகம் திரு. ஈஸ்வர் அவர்களைப் பற்றிய தகவல்களும், அவரது டிசைன்களின் இமேஜுகளும் தாங்கள் வழங்கிய பதிவுகளிலேயே மிகமிக வித்தியாசமான பதிவுகள். அதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள். ராகவேந்திரன் சார், mr_karthik மற்றும் தங்களுடைய கைவண்ணங்கள் வாயிலாக, ஈஸ்வர் அவர்களின் கைவண்ணம் குறித்து நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.
"வாணி ராணி" விளம்பரமும், பத்திரிகையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் வண்ணப்படமும், காரைக்குடி நாராயணன் அவர்கள் நமது திலகத்துடனும், மேஜருடனும் இருக்கும் புகைப்படமும் கனஜோர்..!
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
பாராட்டுக் குவியல்களுக்கு பாசமான நன்றிகள்.
'சந்திப்பு' 'தினத்தந்தி' வெள்ளிவிழா விளம்பரத்தை இணையத்தில் முதன்முறையாக பதிப்பித்து (இணையத்தில் முதன்முறையாக என்பது தங்கள் பதிவுகளுக்குத்தான் சாலப் பொருந்தும். எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷப் பதிவுகளை தங்களைத் தவிர வேறு யார் இவ்வளவு சிறப்பாகத் தர முடியும்?) சந்திப்பின் தன்மானத்தை எவ்வித சன்மானமும் எதிர்பாராமல் காத்து, எங்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தமைக்கு நன்றி!
'கப்பலோட்டிய தமிழன்' மறு வெளியீட்டு விளம்பரம் கலக்கல்.
தங்களது பாட்டனார் 'தேசியச் செம்மல்' அமரர் திரு.D.R. நாகராஜன் அவர்களின் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை தாங்கள் விளக்கியிருந்தது நிஜமாகவே பெருமிதம் அடையச் செய்து விட்டது. ஒரு தேசியக் குடும்பத்துப் பிள்ளையாகிய தாங்கள் எங்களுக்கெல்லாம் அன்புச் சகோதரராய் கிடைத்தது எண்ணி பெருமகிழ்வு அடைகின்றேன்.
ஐந்தாவது வயதிலேயே நம் சிவபெருமானின் திருவிளையாடல் கண்டு தாங்கள் நடத்திய திருவிளையாடல் ரகளை. தங்களைப் போலத்தான் நானும். நான் என் வாழ்வில் கண்ட முதல் காவியம் 'பார்த்தல் பசி தீரும்'. ஆனால் இன்று வரை அவர் மேல் கொண்ட பசி தீரவே இல்லை. தீரவும் தீராது.
தியாகப் பெருந்தகையின் பேரச் செல்வமே! தங்கள் தாயை பெற்றெடுத்த தங்கள் தியாகத் தாத்தாவிற்கும், தங்களை எங்களுக்களித்த எங்கள் அருமைத் தாய்க்கும் என்னுடைய ஆயிரம் கோடி வந்தனங்களும், நமஸ்காரங்களும்.
தாங்கள் கண்டு களித்த முதல் காவியம்
http://lulzimg.com/i23/acf068.png
தங்களுக்காக தலைவரின் 'ருத்ர தாண்டவம்' (வீடியோவாக)
http://www.youtube.com/watch?v=RJhyu...yer_detailpage
நான் கண்டு களித்த முதல் காவியம்
http://i1098.photobucket.com/albums/...heerum0005.jpg
நம் எல்லோருக்காகவும் "பிள்ளைக்குத் தந்தை ஒருவன்" (நடிப்புக்குத் தந்தை நம் இறைவன்)
http://www.youtube.com/watch?v=zsJJ4zVdC7g&feature=player_detailpage
தங்களது பாட்டனார் 'தேசியச் செம்மல்' அமரர் திரு.D.R. நாகராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
http://www.youtube.com/watch?v=uZlh5o55QN0&feature=player_detailpage
நன்றி முரளி சார்.
'இதயம் பேசுகிறது' கட்டுரைப் பதிவைத் தொடர்ந்து தாங்கள் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத பல தகவல்களை அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். வெரி இன்ட்ரெஸ்ட்டிங். "இந்த நிலைமை 1984 அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தது... அதன் பிறகு எம்.ஜி.ஆரின் inner circle எனப்படும் உள்வட்டதிலிருந்து மணியன் வெளியேற்றப்பட்டார்" என்று தாங்கள் கூறியுள்ளது சற்று திடுக்கிட வைத்தது. மணியன் அவர்களுக்கு இந்த நிலைமைக்கு காரணம் ஏதும் உண்டா?... ஏனெனில் எம்ஜியார் அவர்களின் பேரன்பிற்கு பாத்திரமான மணியன் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.
EID MUBARAK
Ramaḍān, is the ninth month of the Islamic calendar. Muslims worldwide observe this as a month of fasting. This annual observance is regarded as one of the Five Pillars of Islam. The month lasts 29–30 days based on the visual sightings of the crescent moon, according to numerous biographical accounts compiled in hadiths.
The word Ramadan comes from the Arabic root ramida or ar-ramad.
A crescent moon can be seen over palm trees at sunset in Manama, marking the beginning of the Islamic month of Ramadan in Bahrain as shown in the Snap.
While wishing all my Islam Friends for Ramadan,
I was also thinking, what Ramzan it would be without fuel to the fire...i mean adding our Thalaivar, The Pride of Tamizhnadu - RAHIM BHAI's song.
http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw
Insha Allah !!
:smokesmile:
Attachment 1693
தியாகியின் வழி வந்த தன்னலமற்ற தொண்டரே, தங்களை நண்பராகப் பெற நாங்கள் பெற்ற பேறுதான் என்னே. வாசுதேவன் பதிவுகளில் உள்ள வார்த்தைகள் அனைவரின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதால் அவருடைய கூற்றுக்களுக்கெல்லாம் அப்படியே
http://ponnivala.com/Education/Resou...llery8.jpg?589
டியர் பாரிஸ்டர்
தங்களின் ஈத் முபாரக் வாழ்த்து சிவாஜி ரசிகர்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பாராட்டுக்கள்.
நமது திரியின் பிரமிக்கத் தக்க வேகத்தைப் பற்றி மற்றொரு புள்ளிவிவரம்
நமது ந.தி.பாகம் 10 தொடங்கியது - 14.6.2012. இன்று 19.8.12 தேதி மாலை 3.50 மணி வரை பதிவுகளின் எண்ணிக்கை 862 - நாட்கள் - 67
பம்மலார் தொடங்கிய சாதனைத் திரியின் நிலவரம் . 19.8.12 தேதி மாலை 3.50 மணி வரை பதிவுகளின் எண்ணிக்கை 867 - நாட்கள் - 29
பம்மலார் தொடங்கிய சாதனைத் திரியின் போது பாகம் 10ன் நிலவரம் - 21 ஜூலை மாலை 4.29 மணி க்கு சந்திர சேகர் அவர்களுடைய பதிவைச் சேர்த்து 661
22.07.2012 தொடங்கி இன்று 19.08.2012 பகல் 3.50 மணி வரை பாகம் 10ல் வந்துள்ள பதிவுகளின் எண்ணிக்கை - 201.
இதே காலத்தில் பம்மலார் தொடங்கிய திரியின் பதிவுகளின் எண்ணிக்கை . 867.
இந்தப் புள்ளி விவரம் இனிமேலாவது சம்பந்தப் பட்டவர்களுக்கு நிலைமையப் புரிய வைக்கும் என்று நம்புகிறேன். இதைச் சொல்வதற்குக் காரணம், பி.ஆர். அவர்களைப் பாராட்டும் சாக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது தான். மற்றவர்கள் தூண்டியும் உசுப்பேற்றியும் விட்டதாகவும் அவர் பொறுமையுடனும் பக்குவத்துடனும் அளந்தும் பதில் அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். யார் உசுப்பேற்றி விட்டார்கள். யார் மனதைப் புண்படும் படி எழுதினார்கள். யார் தூண்டி விட்டார்கள் என்பதைப் பற்றி அவருக்குத் தெரியாதா அல்லது மீண்டும் கலகமூட்டி விடும் வேலையைத் துவக்க எண்ணுகிறாரா என்பதை நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
அன்புடன்
நடிகர் திலகம் நடித்த 'ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற...
தேவனே என்னைப் பாருங்கள் -என்
பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என்ற பாடலை மறக்க முடியுமா?
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இந்த பாடலின் நடுவே..
" ஓ...மைலார்ட்...பார்டன் மீ....
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய்விட்டன...
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..."
என்று உணர்வுபூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்ததன.
டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும்... நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி வேண்டுகேள் விடுத்தார்.
இந்த வசனங்கள்... பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை பாடிக்காட்டுங்கள்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க உடனே எம்.எஸ்.வி...
" ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்..
நீங்கள் அறிவீர் ...மன்னித்தருள்வீர்"
என்று பாடிக் காட்டி ....
இந்த இடத்தில் தான் தாங்கள்....'O My Lord Pardone Me' என்று ஆரம்பமாகும் வசனத்தை பேசவேண்டும் என்றார்.
இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே.... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேண். வேறு பொருத்தமானவரை அழைத்து அந்த வசனங்களைப் பேச வையுங்கள் என்றார் நடிகர் திலகம் தமக்கே இயல்பான வெளிப்படைப் பண்புடன்'
வயலின் வாத்தியக் கலைஞரும் , தமது உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ஆனால் அவரது குரல் அந்தப் பாடலின் வீச்சுக்குப் பொருத்தி வரவில்லை.
'பல்குரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு ('அவள் ஒரு தொடர்கதை' படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் பல குரல்களில் அமர்க்களப்படுத்தியவர் இந்த 'சதன்') இதே வசனத்தைப் பேச வைத்தார் எம்.எஸ்.வி.
ஆனால் , அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப்போகாமல் தனித்து நின்றது.
நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து...
பாடலைப் பாடிய டி.எம்.எஸ்ஸையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே என்றார்.
எம்.எஸ்.வி.... டி.எம்.எஸ்ஸிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.
டி.எம்.எஸ் உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார்.
அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.
"உங்கள் சிம்மக்குரலில்...அந்த வசனங்களை ஒரு தடவை எனக்குப் பேசிக்காட்டுங்கள் அய்யா" என்றார்.
நடிகர் திலகம் , அந்த வசனங்களை தமது பாணியில் டி.எம்.எஸ்ஸிடம் பேசிக்காட்டினார்.
அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும் ஏற்ற இறக்கங்களையும்,உணர்வுக் குமிழிகளையும் , உன்னதங்களையும் அப்படியே தமது மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.
"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?" என்று டி.எம்.எஸ் சொன்னதும் ...எம்.எஸ்.வி கையசைத்தார்.
ஏக்கமும் விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின் 'ஞானத் தேடல்' விளங்கும் விதமாக... உணர்ச்சிப் பிழம்பாக மாறி அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்
'அருமை டி.எம்.எஸ் அற்புதம் ' ENDAR NADIGAR THILAGAM
டியர் வினோத் சார்,
தூள். என் மனம் கொள்ளை கொண்ட 'ஞான ஒளி' காவியத்தின் பாடலைப் பற்றிய அம்சமான குறிப்புகளைத் தந்து அசத்தி விட்டீர்கள். தன்னால் எதுவும் செய்து காட்ட முடியும் என்று தெரிந்திருந்தாலும் கூட "தேவனே... என்னைப் பாருங்கள்" பாடலுக்கு .''O My Lord Pardone Me" என்ற உணர்வு பொங்கும் வார்த்தையை டி.எம்.எஸ் அவர்களே குரல் கொடுத்துப் பாடினால்தான் மிக அம்சமாக இருக்கும் என்ற உயரிய உள்ளமும், தன்னால் பாடகருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற உயரிய நன்னோக்கமும், அவரவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவரவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற உறுதியான செயல்பாடும் கொண்டவர்தான் நடிகர் திலகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறதல்லவா! அதனால்தான் எல்லோர் மனங்களிலும் நடிகர் திலகம் மனிதப் புனிதராக உயர்ந்து நிற்கிறார். அருமையாக பதிவளித்தமைக்கு நன்றிகள்.