MY DEAR NT FANS AND ALL HUBBERS AND MGR THREAD FRIENDS ESVEE AND OTHERS.
best wishes for a very bright and happy 2015 NEW YEAR.
RAMAJAYAM sanfrancisco.
thanks murali for your sp chowdry stills which i am taking with your permission.
Printable View
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
படம் வெளியான அன்று எனக்கு ஸ்கூல் இருந்ததால் எனக்கு ஓபனிங் ஷோ போக முடியவில்லை. வழக்கம் போல் என் கஸின் போய் விட்டான். மதியம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் படம் எப்படி என்று அவனிடம் கேட்க அதற்குள் மார்னிங் ஒபனிங் ஷோ பார்த்து விட்டு வந்திருந்த அவன் படம் நன்றாக இருப்பதாக சொன்னான்.நான் அதற்கு முன்பு வந்த படத்தின் ரிசல்ட்டை மீண்டும் அந்த கேள்வியை கேட்க அவன் புரிந்துக் கொண்டு முந்தைய படமான தர்மம் எங்கே படத்தை மனதில் வைத்து இதை கேட்கிறாய். அந்த படம் சரியில்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ சில காரணங்களினால் படம் சரியாக போகவில்லை. அனால் இது அப்படி ஆகாது என்றான். அன்று மாலையே படம் பார்த்த வேறு சில நபர்களிடம் கேட்க அனைவருமே நல்ல ரிப்போர்ட் சொன்னார்கள். மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தர்மம் எங்கே படத்திற்கு வந்த கூட்டம் அன்று டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது அரசால் புரசலாக வீட்டிற்கு செய்தி போய் விட்டதால் முதல் இரண்டு நாட்களான சனி ஞாயிறு படத்திற்கு போக அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திங்களன்று ஸ்கூல். வருத்தமாகவும் கடுப்பாகவும் இருந்தது. முதல் வாரத்தில் ஆறாவது நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமையன்று ஸ்கூல் லீவ். அன்று பிள்ளையார் சதுர்த்தியா அல்லது கோகுலாஷ்டமியா என்பது நினைவில்லை. ஆனால் ஸ்கூல் லீவ். நினைவிருக்கிறது. அன்று போக வேண்டும் என்று வீட்டில் கேட்க ஓகே சொல்லி விட்டார்கள். எப்போதும் கஸினுடன் போகும் நான் இந்த முறை வித்தியாசமாக என் தந்தையுடன் சென்றேன். அன்று விடுமுறை என்பதனால் அவர் கூட்டி சென்றார். முதலில் கூட வருவதாக சொன்ன கஸின் வேறு வேலை வந்துவிட்டதால் எங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் கூட படத்திற்கு கூட்டம் எப்படி இருக்குமோ என்று யோசனையாக் போனேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறிய கூட்டம் . கீழ வெளி வீதியில் அமைந்திருக்கும் சிந்தாமணி டாக்கீஸின் இரண்டு பக்கவாட்டு சந்துகளில் மிக நீண்ட queue நிற்கிறது. கஸின் டிக்கெட் வாங்கி கொடுத்து விட்டதால் queueவில் நிற்காமல் நேரே உள்ளே போய் விட்டோம்.
அந்த வருடம் அது வரை வெளியான நான்கு படங்களுமே பெரிய அலப்பரையில் பார்த்த எனக்கு தவப்புதல்வன் படம் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவத்தை தந்தது. அன்றைய மாட்னி ஹவுஸ் புல். அதில் பெருவாரியான நபர்கள் பொது மக்களே. ரசிகர்கள் என்ற வகையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவுதான். அமைதியாக ரசிக முடிந்தது என்று சொன்னாலும் கைதட்டல்களுக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லை. நடிகர் திலகத்தின் பெயர் போடும்போது, அவரை முதலில் திரையில் காட்டும்போது அது போன்ற இடங்களில் பலமான கைதட்டல்கள் விழுந்தன. அதே போல் பாடல் காட்சிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் அனைத்து பாடல்களுக்கும் நல்ல response.
முதல் பாடல் Love is fine darling பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் சில நடக்கும், ஸ்டெப் வைக்கும், trumpet வாசிக்கும் அந்த போஸ் இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. அடுத்தது இசை கேட்டால் பாடல். ஹிந்துஸ்தானி பாடகர் அக்தர் கானுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விஜயாவிடம் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிறகு அக்தர் கானை போட்டியில் சந்திக்கிறேன் என்று சொல்லும் நடிகர் திலகத்திடம் அக்தர் கான் என்ன இப்போ உங்களை தான்சேன் கூட ஜெயிக்க முடியாது என்பார் விஜயா. யார் அது தான்சேன் என கேட்கும் நடிகர் திலகத்திடம் தான்சேன் கூறுவார் விஜயா. அப்போது கனவு பாடலாக விரியும் அற்புத பாடல் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல். [இது தீப் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தை அடிப்படையாக கொண்டது என்று சொல்லுவார்கள்]. முதலில் சிதார் வாசித்துக் கொண்டே பாட ஆரம்பிக்கும் நடிகர் திலகம் பல்லவி முடிந்ததும் எழுந்து விஜயா படுத்திருக்கும் படுக்கைக்கு அருகில் வந்து அங்கே நிற்கும் அரண்மனை வைத்தியரை பார்த்து கண்ணாலேயே எப்படி இருக்கிறது என்று கேட்க அவர் முன்னேற்றம் இல்லை என்ற வகையில் தலையசைக்க என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என்று சரணத்தை ஆரம்பிக்கும் நடிகர் திலகம் அப்போது காட்டும் சில கை அசைவுகள், அந்த சரணத்தை முடித்து விட்டு ஏழாம் கடலும் வானும் நிலவும் என்றவாறே ஸ்டைலிஷ் நடை போடும் நடிகர் திலகத்திற்கு விழுந்தது அப்ளாஸ். அது அடங்குவதற்குள்ளாகவே அங்கே சாத்தி வைத்திருக்கும் கம்பிக்களை வளைத்து இசை என்னிடம் உருவாகும் என்ற வரியில் நாணேற்றுவது போல் காண்பித்து இசை என்னிடம் உருவாகும் என்று கையை மேலே உயர்த்துவார். அதற்கும் செம அப்ளாஸ்,
உலகின் முதல் இசை தமிழிசையே பாடலில் வெள்ளை ஜிப்பா அணிந்து வேட்டி கட்டி இருப்பார். உண்மையிலே அந்த தோற்றத்தில் அவரை வெல்லக்கூடிய அழகு யாருக்குமே கிடையாது என்றே தோன்றும். இந்த போட்டி பாடலில் சரணத்தில் பாடும்போது இரண்டு வரி வரும்
மானிட ஜாதியும் மயங்கி வரும்; அந்த
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
அந்த இரண்டாவது வரியை அவர் இரண்டாவது முறை பாடும்போது ட்ராலியில் வரும் காமிராவைப் பார்த்து தலையை சாய்த்து கன்ன கதுப்பும் கண்களும் ஒரு போல அசைந்து ஒரு சின்ன மந்தகாச புன்னகையை உதிர்ப்பார். அதற்கும் பலமான கைதட்டல்கள்.
நான் எப்போதும் சொல்வதுண்டு. வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட வசீகரம் அவரது கை அசைவில் உண்டு என்று. அது பார்வையாளர்களை அப்படியே ஆகர்ஷித்து விடும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றபோதினும் ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது.
1980-களின் நடுப் பகுதி. நான் கேரளத்தில் வேலை நிமித்தமாக இருக்கும் காலம். கோட்டயம் நகரத்திற்கு சற்று வெளியே எர்ணாகுளம் போகும் பாதையில் நிர்மலா என்றொரு தியேட்டர் அமைந்திருந்தது. அங்கே முழுக்க முழுக்க தமிழ் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். நகரில் மொத்தமே ஐந்து திரையரங்குகள்தான் என்பதனாலும் அந்த ஐந்தில்தான் மலையாளம், தமிழ், ஹிந்தி சில நேரம் ஆங்கில படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதனால் நகருக்குள் தியேட்டர் கிடைக்காத தமிழ் படங்கள் இந்த தியேட்டரில் வெளியாகும். அவை இல்லாத போது இந்த நிர்மலா தியேட்டரில் பழைய தமிழ்ப் படங்களும் திரையிடுவார்கள். அப்படி அங்கே தங்க சுரங்கம், ரத்த திலகம், மூன்று தெய்வங்கள் போன்ற பல நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று தெய்வங்கள் போட்டிருந்தபோது ஒரு சாதாரண வேலை நாளன்று மாலைக்காட்சிக்கு போயிருந்தேன். ஓரளவிற்கு நல்ல கூட்டம். 99% பொது மக்கள். நடிகர் திலகத்தை முதன் முதலில் காட்டும்போது கூட வெகு சிலரே கைதட்டினார்கள். வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வந்தது. அதில் விஷ்ணுவாக வரும் நடிகர் திலகம் வலது கையை உயர்த்தி ஆசி கூறுவதாக வரும் அந்த ஷாட் திரையில் வந்தபோது படபடவென்ற பலமான கைதட்டல். அதுவும் spontaneous ஆக விழுந்த கைதட்டல்கள். ஜாதி,மத,இன, மொழி மாநில, நாடு போன்ற அனைத்து வித்தியாசங்களையும் தாண்டியவர் நடிகர் திலகம் என்பதற்கு அன்று நானே நேரிடை சாட்சியாக இருந்தேன்.
மீண்டும் தவப்புதல்வனுக்கு வருவோம். படத்தின் மற்றொரு பாடலான கிண்கிணி கிங்கிணி மாதா கோவில் மணியோசை பாடல் சற்றே உணர்சிகரமாக இருக்கும். சோகத்தை நகைசுவை போல் வெளிகாட்டி மற்றவர்களை சிரிக்க வைத்து தான் அழுவார். பெண்கள் பகுதியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு. பாடல்கள் தவிர தன் நோயை விஜயாவிடம் மறைக்கும் போதும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கும்போதும், விஜயாவிடம் உண்மையை சொல்கிறோம் என்று நினைத்து பேச அங்கே ஏ. சகுந்தலா நின்று கொண்டு இவரை கிண்டல் செய்து கோவமூட்ட சகுந்தலாவை அடிக்க பாய்ந்து எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழுந்து விடுவது போன்றவை தியேட்டரில் அனுதாபத்தை பெற்று தந்தது. அது போலவே டிஸ்பன்சரியை மூடப் போகிறேன் என்று சொல்லும் விஜயாவிடம் வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்ல பழிக்கு பழியாய் கோவத்தோடு அனைத்தையும் விஜயா நொறுக்க ஒன்றுமே பேசாமல் நடிகர் திலகம் திரும்பி நடக்கும் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் ரசிக்கப்பட்டது. [சண்டையின்போது அங்கே வைக்கோல்போரில் தீ பற்றிக் கொள்ள கண் ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் சிவாஜி அந்த வெளிச்சத்தில் எதிரிகளை இனம் கண்டு சண்டை போடுவதையும் மக்கள் ரசித்தனர்].
படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தி அனைவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. படம் வெற்றிபெறும், நூறு நாட்களை கடக்கும் என்று ரசிகர்கள் சொன்னது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அது போலவே சென்னை பைலட்டில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் வெற்றிகரமாக 70 நாட்களை நிறைவு செய்யும்போது வழக்கம் போல் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் வில்லனாக வந்து தேவர் படமான தெய்வம் படத்தை நவம்பர் 4 தீபாவளி முதல் திரையிட்டனர். ஆனால் தவப்புதல்வன் மதுரை விஜயலட்சுமி தியேட்டருக்கு ஷிப்ட் ஆகி 100 நாட்களை நிறைவு செய்தது.
வெகு எளிதாக 100 நாட்களை கடந்தது என்று சொல்கிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தோமென்றால் தவப்புதல்வனின் சாதனை சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா என்ற இமயம் மற்றொரு பக்கம் தவப்புதல்வன் வெளியாகி ஐந்தே வார இடைவெளியில் செப் 29-ந் தேதி வெளியான வசந்த மாளிகை என்ற மற்றொரு பிரம்மாண்ட இமயம், இந்த இரண்டு இமயங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கி விடாமல் வெற்றிகரமாக முன்னேறிய தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. மேலும் 45 நாட்களிலேயே அதாவது 1972 அக்டோபர் 10-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எந்த நேரத்தில் எங்கு வன்முறை வெடிக்குமோ என்ற பயங்கர சூழல் இப்படிப்பட்ட காலகட்டத்தையும் கடந்து, தீபாவளிக்கு வெளியான படங்களின் போட்டியையும் சமாளித்து தவப்புதல்வன் பெற்ற வெற்றி நிச்சயமாக பெரிய வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை.
(தொடரும்)
அன்புடன்
தவப்புதல்வன் படத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. காரணம் என் தந்தையோடு சென்றிருந்தேன் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் என் தந்தையோடு சேர்ந்து பார்த்த கடைசிப் படம் தவபுதல்வன்தான். எப்போதுமே ஒரு நிகழ்வு நடைபெறும்போது அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியாமல் போய் விடும். அதன் பிறகு நமக்கு நஷ்டமானதை நினைத்துப் பார்க்கும்போதுதான் இழந்ததன் magnitude புரியும். அந்த வகையில் தவப்புதல்வன் எனக்கு எப்போதும் மறக்க முடியாத மனதுக்கு நெருக்கமான படம்.
http://i1146.photobucket.com/albums/...ps9c21cb37.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு உளமார்ந்த பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நல்லோர்கள் வாழ்வை காக்க...: http://youtu.be/IEl3E8rMq1Q
அனைவருக்கும்
இனிய
ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்
Sent from my GT-S7562 using Tapatalk
[IMG][/IMG]
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
இப்புவியைப் பொருத்தவரை அனைத்துயிர்களுக்கும் வாழ்வாதாரமும் கண்கண்ட கடவுளும் கதிரவனே அவ்வண்ணமே திரையுலகைப் பொருத்தவரை
கலைக்கடவுள் நடிப்புச் சூரியனார் நடிகர்திலகமே ! எத்தனை புத்தாண்டுகள் வரினும் புத்துணர்ச்சி பெறுவது நடிகர்திலகத்தின் அமரகாவியங்களை கண்ணுற்று மகிழும்போதே! ஆயிரம் கரங்கள் கூப்பி......நடிகர்திலகத்தை வணங்கி 2015 புத்தாண்டை வரவேற்போம்!!
https://www.youtube.com/watch?v=pgoqYK2fw08
நண்பர்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்....
http://www.indusladies.com/forums/at...ies-sivaji.jpg
நடனம் , நளினம் இரண்டும் எப்போதும் உன் வசம்..
ஜல்லிக்கட்டு ஷூட்டிங் போலே தெரிகிறது...
இந்த வயதிலும் என்ன ஈடுபாடு...
என்ன தொழில் பக்தி....
என்ன ஒரு ஸ்டைல்....
Wish you all a happy new year-2015
திரு.Y .G .மகேந்திரன் அவர்கள், தினமலரில் எழுதி தொடராக வெளிவந்த "நான் சுவாசிக்கும் சிவாஜி" - கண்ணதாசன் பதிப்பகத்தால் புத்தகமாக வெளிவர இருக்கிறது.
இப்புத்தகம் வரும் 11-01-2015 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட இருப்பதாகவும், நடிகர்திலகத்தின் ரசிக நண்பர்கள் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என்றும் திரு.YGM வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ள E -Mail தகவல்:
Dear Friends
Pl see below the teaser designs for a book I am bringng out on the Greatest Actor that ever strode the screen..Sivaji Ganesan my book is titled NAAN SWASIKKUM SIVAJI
It is an outpour from my heart about my views on him and his method of acting and also my personal experiences with Sivaji The Man. It may not be lyrical in style but it is sincere and to the point. After all I have acted in 33 films with Him.
It is to be released in a function at the book fair on Jan 11th Sunday 5pm at YMCA Saidapet. Artistes Lakshme Prabu and Ramkumar and a few other VIP's will be participating.
PL TREAT THIS AS MY PERSONAL INVITE>
YGEE MAHENDRA
http://i1234.photobucket.com/albums/...ps55d5bce4.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2de4cf99.jpg
Wish you everyone a happy, wealthy, healthy and prosperous new year
Wish you happy new year to all NT fans.
http://i1369.photobucket.com/albums/...ps2ed143ed.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
http://i1369.photobucket.com/albums/...ps6da3efb4.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
http://i1369.photobucket.com/albums/...ps17e3fc17.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
http://i1369.photobucket.com/albums/...ps98103bd6.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
http://i1369.photobucket.com/albums/...ps19841f8f.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
http://i1369.photobucket.com/albums/...ps066324db.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
டியர் முரளி சார்
தவப்புதல்வனான தங்கள் வாழ்நாளில் என்றென்றும் தங்கள் தந்தையாரின் துணையுடன் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
தங்களுக்கு என் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் நமது நடிகர் திலகம் www.nadigarthilagam இணையதளம் சார்பிலும் மறறும் NTFANS சார்பாகவும் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
http://i1146.photobucket.com/albums/...psf2912244.jpg
Wishing All Participants Of This Glorious thread, All Active And Silent Readers Of This Thread, All NT Fans Spread Across All Over The World
A Very Healthy, Wealthy, Prosperous , Peaceful And Cheerful New Year - 2015.
Let Us Usher In 2015 With A Positive Frame Of Mind And Do That Little Bit To Make The Flag Of NT Flying High As Always!
Regards
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
முரளி,
தாங்கள் தவ புதல்வன் பதிவின் பின் குறிப்பு என் மனத்தை அசைத்து விட்டது.
நாமெல்லோரும் ,வாழ்க்கையில் இழக்க இருக்கும் தருணங்களை பற்றிய முன்னறிவிப்பு இல்லாததே ஒரு வேளை வசீகர துயரமாக,கற்பனையாக,கவிதையாக ,தெய்வமாக என்ற மாய தோற்ற உருவாக்கம் பெறுகிறதோ என்ற ஐயம் எனக்குண்டு.
அதுவும் முன்னறிவிப்பின்றி நேர்ந்து விட்ட இழப்பின் கடைசி தருணங்களை ,ஆறாத காயங்களை ,நக்கி சுகிழும் ,சக்கை மனத்தினை பற்றி மானசரோவர் என்ற புனைவு இலக்கிய எழுத்தின் ஆசிரியர் ,நான் இலக்கிய சிவாஜி கணேசனாக தொழும் என் அறிவு தந்தை அசோக மித்திரன் எழுதியதை ஒத்தது நீங்கள் குறித்தது.
தன் பெற்றோர்களுடன் ,இதுதான் கடைசி என்று உணராமல் , கரு சிதைவு போல முடிந்த அந்த கடைசி தருணங்களை நாயகன் எண்ணுவதாய் வரும். பாகிஸ்தான் பகுதியில் இருந்து விடை பெற்று இந்திய பகுதிக்கு நாயகன் வரு முன்,பெற்றோர்களுடன் கடைசி தருணங்களை எண்ணி பார்ப்பான்.
கடைசி நேரத்தில் , ஒரு நண்பன் இவனிடம் ஒரு ஹாக்கி மட்டை இருப்பதை அறிந்து ,அதை பெற வந்து ,அவனுடைய கடைசி நிமிடங்களை முழுங்கியிருப்பான். பிறகு பெற்றோர்களை சந்திக்கவே சந்தர்ப்பம் வைக்காமல் அவர்களை இழந்திருக்கும் நாயகன், அந்த நிமிடங்களை எண்ணி கசந்து கருகி உருகும் பகுதி.
நான் இந்த பதிவுடன் விடை பெற காரணமான இன்னொரு பதிவுக்கு நன்றி.
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முரளி ,புனை கதை உலகிற்கு வாருங்கள். நிறைய சாதிக்கலாம். அரசியல் ,நடு மனித சமூக வாழ்வு தொடர்பில் 70 களின் காலகட்ட பதிவாக ஒன்று.
http://i1170.photobucket.com/albums/...ps0a31e11e.jpg
எம்ஜியார் ரசிகர்களுக்கு -
"ஆனந்தம், இன்று ஆரம்பம்"
சி வாஜி ரசிகர்களுக்கு -
"ஹேப்பி இன்று முதல் ஹேப்பி"
Dear all,
Wish you and your families a very Happy New Year.
Regards,
R. Parthasarathy
இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரைகள், டானிக்குகள், இருமல் மருந்துகள், சத்து டானிக்குகள் வழங்கப்பட்டது. 401 நோயாளிகள் வந்திருந்து தங்களது நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சென்றனர்.இதில் விசேசம் என்னவென்றால் ஏற்கனவே பல இடங்களில் மருத்துவ முகாம் நடத்திய பொழுது அதிகபட்சமாக 350 நோயாளிகள் தான் வந்துள்ளனர். அனால் நமது தலைவர் பெயரில் நடத்திய முகாமில் 401 பேர் வந்திருந்து எதிலும் நமது தலைவருக்கு தான் முதலிடம் என்பதை நிருபித்து உள்ளோம். வந்திருந்தவர்கள் அனைவரும் நமது தலைவர் சிவாஜி அவர்களை நினைவுகூர்ந்து மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.
எந்தவித அரசியல் பலமும் இல்லை அவர் பெயரை சொல்லி சம்பாதிக்கவும் இல்லை, அனால் அவர் மறைந்து 15 வருடம் ஆகியும் அவர் பெயரில் பல நல்லகாரியங்களை செய்துவரும் தலைவரின் அன்பு இதயங்களை என்று வந்தவர்கள் அதிசயத்து போனார்கள். நிகழ்ச்சியில் பேசிய திரு.டாக்டர்.சரவணன் அவர்கள் தான் ஒரு சிவாஜி ரசிகர் எனவும், சங்கிலி திரைப்படத்தை நான்கு காட்சிகள் தொடர்ந்து பார்த்ததை நினைவுகூர்ந்து எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.
இம்முகாமிற்கு தனது பள்ளியில் இடத்தையும் தந்து எல்லாவகையிலும் உதவி புரிந்த திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், திரு.சந்திரசேகர் அவர்கள், முகாமிற்காக உழைத்த அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெகதீஸ்பாண்டியன், செந்தில்குமார், பி.செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நவீன், நடராஜன் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அறக்கட்டளையை சேர்ந்த திரு.நாஞ்சில் இன்பா அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்து முகாமிற்கு சிறப்பு சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமை திரு.ரமேஷ்பாபு, திரு.சுந்தராஜன், திரு.சோமசுந்தரம் மூவரும் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
முக்கியமாக நமது தலைவரின் அருந்தவப்புதல்வர் திரு.தளபதி ராம்குமார் அவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
முகாம் நிழற்படங்கள்.
http://i1369.photobucket.com/albums/...psdc14a2ff.jpg
http://i1369.photobucket.com/albums/...ps066324db.jpg
http://i1369.photobucket.com/albums/...ps19841f8f.jpg
இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
http://i1369.photobucket.com/albums/...psee7ed2c0.jpg
http://i1369.photobucket.com/albums/...pse3ec39e8.jpg
http://i1369.photobucket.com/albums/...ps90e71d26.jpg
http://i1369.photobucket.com/albums/...psb012e8f0.jpg
http://i1369.photobucket.com/albums/...psf5a99b00.jpg
http://i1369.photobucket.com/albums/...ps142b4096.jpg
http://i1369.photobucket.com/albums/...ps402f09ee.jpg
http://i1369.photobucket.com/albums/...psa6b049b8.jpg
http://i1369.photobucket.com/albums/...psd522412d.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Thank you very much. I too wish you, your family & friends the same!!!Quote:
Originally Posted by sivajisenthil
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2015 வாழ்த்துகள்!!!
அன்பு நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு
இளைய திலகம் திரு பிரபு அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடைபெற்ற மருத்துவ சேவை முகாம் பற்றி வெளியிட்டு இருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.டாக்டர் சரவணன் அவர்கள் திரு வைகோ அவர்களின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய மதுரை மாவட்ட செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார் . பணம் எதிர்பாராது மிகவும் சேவை மனப்பான்மை உள்ளவர். இரண்டு மூன்று முறை சந்தித்து உரையாடி உள்ளேன் . எங்கள் நிறுவனத்தின் மூலமாக ஒரு இலவச மருத்துவ முகாம் ஒன்று மதுரையில் நடைபெற்ற போது அதற்கு வருகை தந்து இருந்தார். 5 நிமிடங்கள் பேசினால் அதில் அடிகடி சிவாஜி பற்றியோ அல்லது வைகோ பற்றியோ ஏதாவது நல்லதொரு தகவலை வெளிபடுத்துவார் . மிக நல்லதொரு மனித புனிதரை குறிப்பிட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
Sivaji Ganesan – Definition of Style 14
ராஜ ராஜேஸ்வரம்
http://1.bp.blogspot.com/-6lSamwFHZS...640/Sivaji.png
Quote:
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
--- Gopal under the title இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-33 in Sivaji Ganesan School of Acting Thread Post No.13.
Posted on 26.05.2013.
Larger than Life எனப்படும் சராசரியை விடப் பெரிதான அல்லது மேலான பாத்திரங்கள் சினிமாவில் சித்தரிக்கும் தேவை புராண இதிகாச மற்றும் வரலாற்று நாயகர்களுக்கு அல்லது Fantasy வகைப் பாத்திரங்களுக்கும் ஏற்படும். இதை தமிழ் சினிமாவில் ஒரு வசதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர் படைப்பாளிகள். குறிப்பாக இந்த வசதி அந்த நாயகர்களின் வீரதீரத்தை வெளிப்படுத்த மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. This larger than life character was conveniently used as an excuse and / or interpreted to project a character to the extent of the imagination of the creator, the reason being they are time immemorial.
இது பல்லாண்டுகளாக வந்துள்ளதால் உதாரணங்கள் சொல்லி மாளாது.
ஆனால் உண்மையில் இந்த பாத்திரங்கள் அல்லது இந்த இதிகாச புராண சரித்திர நாயகர்கள் வரலாற்றில் பார்த்தோமானால் அவர்களுடைய வீரம் ஒரு குறிப்பிட்ட தேவைக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்ப்ட்டுள்ளதே யன்றி, இதை விட மேலான அவர்களின் மற்ற திறமைகள் குறிப்பாக நிர்வாகத்திறன்கள் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது மிக மிகக் குறைவு. இந்த வகையில் இப்படிப்பட்ட நாயகர்களை சரியான முறையில் சித்தரித்த படங்கள், பாத்திரங்கள் என்றால் அதில் பெரும்பாலானவை நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்தவையாகத் தான் இருக்கும். மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன் போன்றவற்றைச் சொல்லலாம். வீர தீர நாயகர்களின் கதை என்றாலே கத்திச் சண்டை, குதிரைச் சண்டை போர்க்களங்கள் என்ற இலக்கணங்களைத் தாண்டி ஒரு நாயகனின் அனைத்துப் பரிமாணங்களையும் சித்தரித்தவை நடிகர் திலகம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களே.
இந்த வகையில் இந்த LARGER THAN LIFE பாத்திரங்கள் என பொதுவாக அறியப்படுகின்ற பாத்திரங்களை LARGER TO LIFEஆக மாற்றிய பெருமை நடிகர் திலகத்திற்கே உண்டு.
என்னைப் பொறுத்த வரையில் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜ ராஜ சோழன் என்பேன்.
ராஜ ராஜ சோழன் என்ற மன்னனின் ராஜ தந்திரத்தை மிக அழகாக சித்தரித்த படம் ராஜ ராஜ சோழன். அந்த மன்னனின் குடும்பத்தையும் யதார்த்த வாழ்வியலோடு இணைத்து சித்தரித்த படம் ராஜ ராஜ சோழன்.
படம் முழுதும் கொடி கட்டிப் பறக்கும் இயல்பான நடிப்பில் நடிகர் திலகத்தின் சித்தரிப்பில் ராஜ ராஜ சோழன் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அத்தனையும் அணு அணுவாக எழுத வேண்டும் என்றாலும் உதாரணத்திற்காக இந்தக் காட்சி இங்கே எடுத்துக் கொள்ளப் படுகிறது.
இந்தக் காட்சியில் ராஜ ராஜ சோழன் என்கின்ற மன்னனின் குணாதிசயங்களையும் திறமையையும் ராஜதந்திரத்தையும் இயக்குநர் அழகாக சித்தரித்திருப்பதோடு, அதற்கான நடிகர் திலகத்தின் பங்கையும் அருமையாக பயன்படுத்தியிருக்கிறார். இக்காட்சியில் படத்தொகுப்பாளரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல் கைதிகளைத் தன் பிறந்த நாளில் விடுதலை செய்யும் கொள்கை முடிவின் பயனாக விமலாதித்தன் விடுதலையாகிறான். ராஜ ராஜ சோழனின் அரசவையில் அவரைப் புகழந்து பாடுகிறான். மன்னர் மகிழ்ந்து பரிசளிப்பதாகச் சொல்ல, பரிசாக அவர் மகள் குந்தவையைக் கேட்கிறான் விமலாதித்தன். அவையிலுள்ளோர் சினமுற மன்னன் அவர்களை சமாதானப் படுத்தி தன் மகளை அவனுக்கே மணமுடிக்க சம்மதிக்கிறான். இந்த சமயத்தில் ராஜ தந்திரியாரின் அரசியல் அலங்கோலத்தை மன்ன்ன் எவ்வளவு சமயோசிதமாக அம்பலப்படுத்துகிறான் என்பதை தன்னுடைய திறமையான திரைக்கதை மூலம் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் ஏ.பி.என். அவர்கள். சத்யாசிரிய மன்ன்னின் ஒற்றனைக் கையில் போட்டுக்கொண்டு சோழ நாட்டை ராஜ ராஜனிடமிருந்து கைப்பற்ற ராஜதந்திரி போடும் திட்டம், அந்த திட்டத்தை அந்த ஒற்றன் மூலமாகவே மன்ன்ன் தெரிந்து கொள்ளும் தந்திரம், என ஒரு மன்னனின் நிர்வாகத்திறமையை மிகச் சிறப்பாக்க கூறியுள்ளார். இதற்கு முழு முதற் காரணமும் நடிகர் திலகமே. இந்தப் பாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
விமலாதித்தன் புகழும் வரிகளில் குலசேகரன் வாழ்கவே என்ற வரியின் போது மீசையை முறுக்குவது, அதைத் தொடர்ந்து கர்வமிக்க புன்னகை, ஒவ்வொரு வரியையும் ரசித்து மகிழ்வது, அதிலும் ஒரு காரணத்தை இயக்குநர் புகுத்தியிருக்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது, பின்னால் தன்னிடம் பெரிதாக எதையோ எதிர்பார்க்கிறான் விமலாதித்தன் என்பதை உணராவிட்டாலும் தன்னால் சிறை பிடிக்கப்பட்டவன் தன்னைப் புகழ்கிறான் எனும் போது ஒரு அகந்தை கலந்த சந்தோஷமும் தத்ரூபமாக நடிகர் திலகத்தின் புன்னகையில் வெளிப்படுகிறது.
பாடலைப் பாராட்டி பரிசென்ன வேண்டும் கேள் எனும் போது அவன் பதிலுக்கு அவருடைய மகளைப் பரிசாக்க் கேட்கிறான். இந்த இடத்தில் Exaggeration, Dramatisation என எதுவுமின்றி திடுக்கிட்டு அதிர்ச்சியடையும் உணர்வை நடிகர் திலகம் வெளிப்படுத்தியிருப்பது ... He can never be forecast, his acting can never be guessed என்பதையே உணர்த்துகிறது. எதிர்பாராத வகை Reaction ஐ அந்தப் பாத்திரத்திற்கேற்றவாறு வழங்குவதன் மூலம் எவருக்கும் எட்டாத உயரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் நடிகர் திலகம். இதற்கு அந்த ராஜ ராஜ சோழன் என்ற மன்ன்னின் will power தான் காரணம் என்பது அந்தப் பாத்திரப் படைப்பின் மூலம் புலனாகிறது.
பகைவனுக்குப் பரிசாகக் கொடுத்தான் தன் மகளை எனக் கூறி தன் மகளை ஏற்றுக் கொள் எனக் கூறும் போது அவருடைய கரங்கள் பெருமையைப் பறை சாற்றும் போது, தன் அவயவங்களும் உணர்வை பிரதிபலிக்க்க் கூடிய ஜீவனுள்ளவை என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் நடிகர் திலகம்.
இதற்குப் பின்னர் இன்னும் வீறு கொண்டு தொடர்கிறது நடிகர் திலகத்தின் நடிப்புச் சாம்ராஜ்ஜியம். திடீரென்று எப்படி வருவான் என்பதை இரண்டு முறை கூறும் போது இரு வேறு விதமாக உச்சரிப்பது, காற்று வாக்கில் செய்தி வந்த்து என்று சொல்லும் போது விரல்களின் வழியாக தன் குத்தலை வெளிப்படுத்துவது,
அது மட்டுமா, பாலதேவரே, கதை முடிந்து விட்டது, இனி உங்கள் நாடகம் இந்த சோழ நாட்டில் நடக்காது என்று கூறும் போது அந்த விரல்கள் கீழே திரும்பி அந்த மண்ணைச் சுட்டிக்காட்டும் பாங்கு, இடுப்பிலிருந்து அந்த ஓலையை எடுக்கும் பாங்கு, அதை விரித்துக் காட்டும் லாவகம், ஒவ்வொரு விநாடியும் நடிகர் திலகம் என்ற நடிப்புத் தொல்காப்பியனை உலகத்தில் பறை சாற்றி தமிழனின் பெருமையை உரக்கக் கூவும்
பார்த்தீர்களா, ... எங்கள் சோழ நாட்டில் பெண்கள் கூட ஒற்று வேலை பார்த்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து விடுவார்கள் என்று கூறி கர்ஜிப்பாரே... ஆஹா.... கேட்டுக் கொண்டே இருக்கலாமய்யா...
குறிப்பாக நடிகர் திலகத்திற்கென்றே எழுதப்பட்ட உண்மையான உரையாடலான, “ சக்கரவர்த்திகளே, என்னுடைய ராஜ தந்திரத்தை உங்களுடைய ராஜதர்மம் வென்று விட்டது“ என்ற வரிகள் இன்று மிகச்சிறப்பாக பொருந்துவது திரையரங்குகளில் பலத்த கரகோஷத்தை எழுப்பும் என்பது திண்ணம்.
இதற்கடுத்த உரையாடல் இன்னும் சிறப்பு. விமலாதித்தன், சக்கரவர்த்தியாரே, இப்படி நீங்கள் எல்லோரையும் பெருந்தன்மையோடு மன்னித்து விடுவதால் தான் எல்லோரும் சுலபமாக நமக்கு பகையாளிகளாகி விடுகிறார்கள் என்று கூறும் போது இன்றைய காலகட்டத்தில் திரையரங்கமே கரகோஷத்தில் இரண்டாகிவிடும்.
இதற்கு அந்த மன்ன்ன் பதிலிருக்கிறதே... ஆஹா.. என்ன தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.. “ வெகு சுலபத்தில் பகைவர்களாக ஆகிவிடுபவர்கள் வெகு சீக்கிரம் அழிந்து விடுவார்கள்“... இந்த வரிகளின் போது நடிகர் திலகத்தின் ஸ்டைல்...
தலைவா.. உன்னை இன்னும் எத்தனை ஜென்ம்மெடுத்தாலும் யாராலும் நெருங்க்க் கூட முடியாது என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது.
ராஜ ராஜ சோழன் கலப்பு மணத்தையும் ஆதரித்தான் என்று உங்கள் நாடகத்தில் ஒரு வரி எழுதி விடுங்கள் என்று நாடகாசிரியையிடம் மன்ன்ன் சொல்லும் போது மீசையை முறுக்கும் ஆளுமை...
இவ்வளவு நேரம் ராஜராஜ சோழன் என்ற மன்ன்னைப் பார்த்த கண்கள் இதைத் தொடர்ந்து பார்ப்பது அந்த மன்ன்னுக்குள் இருந்த ஓர் தந்தையை. அவரா இவர் என்கின்ற அளவிற்கு ஒரு தந்தையை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார் நடிகர் திலகம். மகளிடம் உணர்ச்சி வசப்பட்டு வசனங்கள் பேசாமல், சோகத்தோடு பார்த்து விட்டு எச்சிலை முழுங்கும் போது பாசத்தை வெளிப்படுத்தும் பாங்கு..
It proves Sivaji Ganesan is the Definition of Style.
https://www.youtube.com/watch?v=hu8matpsKk8
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத பரவசமூட்டும் காட்சி... தரவேற்றியவருக்கும் யூட்யூப் இணையதளத்திற்கும் உளமார்ந்த நன்றி.
Quote:
இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரைகள், டானிக்குகள், இருமல் மருந்துகள், சத்து டானிக்குகள் வழங்கப்பட்டது. 401 நோயாளிகள் வந்திருந்து தங்களது நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சென்றனர்.இதில் விசேசம் என்னவென்றால் ஏற்கனவே பல இடங்களில் மருத்துவ முகாம் நடத்திய பொழுது அதிகபட்சமாக 350 நோயாளிகள் தான் வந்துள்ளனர். அனால் நமது தலைவர் பெயரில் நடத்திய முகாமில் 401 பேர் வந்திருந்து எதிலும் நமது தலைவருக்கு தான் முதலிடம் என்பதை நிருபித்து உள்ளோம். வந்திருந்தவர்கள் அனைவரும் நமது தலைவர் சிவாஜி அவர்களை நினைவுகூர்ந்து மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.
எந்தவித அரசியல் பலமும் இல்லை அவர் பெயரை சொல்லி சம்பாதிக்கவும் இல்லை, அனால் அவர் மறைந்து 15 வருடம் ஆகியும் அவர் பெயரில் பல நல்லகாரியங்களை செய்துவரும் தலைவரின் அன்பு இதயங்களை என்று வந்தவர்கள் அதிசயத்து போனார்கள்.
எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.
Quote:
எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.
நிஜமான வார்த்தை
நடிகர் திலகத்தின் பெயரில்
மனிதநேயமிக்க பொது சேவை செய்ததுடன்
அது பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும்
பதிவிட்டமைக்கு நன்றி சுந்தரராஜன் சார்
புகைப்படங்களில் கவனித்த விடயம்
வெளியேமட்டும் சிவாஜி பேனர்கள்
சிவாஜி சீடி சிவாஜி சார்பு புத்தகங்கள்
கொடிகள் என்று எதுவும் விற்பனைக்கு இல்லை
உங்கள் பெருந்தன்மை புரிகிறது
அண்ணனிடம் உள்ள பொன்மனம்
அவர் ரசிகர்களிடமும் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை
Scene Stealer Sivaaji Ganesan ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே
புதிய நெடுந்தொடர் பகுதி 1
எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப்புதிராகும்.
தான் சக நடிகர்களுடன் பங்கேற்கும் காட்சி சிறப்புற அவர்களுக்கு முழு சுதந்திரமளித்து ஆக்கபூர்வமாக ஊக்குவித்து இறுதியில் தனது நுட்பமான மின்னலடிக்கும் பாவங்களாலும் உடல்மொழியாலும் எளிதாக அவர்களை வென்று மக்கள் மனதில் அக்காட்சியும் நடிப்பும் பசுமரத்தாணி போல பதிந்து நிலைபெற வேண்டும் என்பதே என்றும் அவர் உள்ளக்கிடக்கை. பாசமலரில் ஜெமினியுடன், திருவிளையாடலில் தருமி நாகேஷுடன், பாவமன்னிப்பு, பாலும் பழமும்,பலே பாண்டியாவில் ராதாவுடன்....உத்தமபுத்திரன், தெய்வமகனில் தன்னுடனேயே.....எண்ணற்ற காலத்தை வென்று நின்று இன்றும் என்றும் நிலைத்திட்ட கல்வெட்டுக் காட்சிகளை அசைபோடுவதே அலாதி சுகம்தானே!
Quote:
மொத்தம் 50 இதயத் திருட்டு / கல்வெட்டுக் காட்சிகள் வடிவமைத்துள்ளேன். சகபதிவர்கள்/ பார்வையாளர்கள் கருத்தினைப் பொறுத்து குறைப்பது சாத்தியமே!
Quote:
Quote:
Scene Stealer Sivaaji Ganesan
ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே
புதிய நெடுந்தொடர் பகுதி 1 பாசமலர்
Quote:
Quote:
எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் (g = 9.81 m/sq.sec) ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் (E = m*(C^2)) ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப்புதிராகும்.
காட்சியைக் கொள்ளையடிப்பது என்பது உடன் நடிக்கும் கலைஞரும் தன்வழியில் திறமை வாய்ந்தவர் எனும்போது சிறிது கடினமான வேலையே !Quote:
தான் சக நடிகர்களுடன் பங்கேற்கும் காட்சி சிறப்புற அவர்களுக்கு முழு சுதந்திரமளித்து ஆக்கபூர்வமாக ஊக்குவித்து இறுதியில் தனது நுட்பமான மின்னலடிக்கும் பாவங்களாலும் உடல்மொழியாலும் எளிதாக அவர்களை வென்று மக்கள் மனதில் அக்காட்சியும் நடிப்பும் பசுமரத்தாணி போல பதிந்து நிலைபெற வேண்டும் என்பதே என்றும் அவர் உள்ளக்கிடக்கை. ....எண்ணற்ற காலத்தை வென்று நின்று இன்றும் என்றும் நிலைத்திட்ட கல்வெட்டுக் காட்சிகளை அசைபோடுவதே அலாதி சுகம்தானே!
பாசமலரில் ஜெமினியுடன் வார்த்தைகளால் மோதும் காட்சிகளில் ஜெமினியின் தனிப்பட்ட நடிப்புத்திறமையை அனைவரும் ரசிக்கவிட்டு பொறுமையாக தன்னுள் பொங்கும் கோபத்தை பென்சில் சீவுவதில் வடிகாலாக்கி இறுதியில் அமைதியாக அவரை வென்று!(...now...you get out!!) அக்காட்சியை தனதாக்கிக் கொண்ட காட்சிக் கள்வரை நாம் இதயச் சிறையில் பிடித்து வைப்போமே !Quote:
இதய திருட்டு 1 கல்வெட்டு 1
பாசமலர் : ஈடுகொடுக்கும் காதல்மன்னரை வெல்லும் நடிகர்திலகத்தின் நடிப்பு மின்னலால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் காட்சி !
https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc
என்னதான் பாசத்தை ஊட்டி வளர்த்த தங்கையாயினும் ஒருநாள் திருமண பந்தத்தால் தன்னை விட்டுப் போய்த்தானே ஆகவேண்டும் என்னும் உண்மை நெஞ்சில்Quote:
இதய திருட்டு 1 கல்வெட்டு 2
உறைக்கும்போது கண்கள் பொங்கி வெளியேற்றும் கண்ணீர் வெள்ளத்தை கைத்துப்பாக்கியால் அணைகட்டி தடுத்திட இயலுமா ? மனதை திருடி இதயங்களுக்கே விலங்கிடும் விந்தையான (நடிக) வேந்தனே! நடிப்பிலக்கணமே! உன் அருமை ஆஸ்கார் சிந்தனையில் ஏறிடுமா......அவர்கள் உள்ளமும் உன்னால் திருடப்பட முடியுமென்றால்!!!?
https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0
ஜெமினியுடன் அடிதடியில் சாவித்திரி ஜெமினி பக்கம் சாயும்போதும் இறுதியில் கீழே விழுந்து மௌனமாக தனது அதிர்ச்சியை முகபாவங்களில் வெளிக் கொணரும்போதும் தளர்ந்த நடையில் தனது மனதில் பட்ட காயத்தின் வலியை நமது மனங்களில் இறக்கும்போதும் இதயத்தை திருடிவிட்டாரே !Quote:
இதய திருட்டு 1 கல்வெட்டு 3
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk
Quote:
Quote:
The end of Part 1 of Scene Stealer Sivaaji Ganesan!!
But...:yessir:.NT continues to steal our hearts in his Life Time Pinnacle of Acting Achievement in Dheiva Magan!! This time NT Vs himself Vs himself!!!