Russian Post:
http://i125.photobucket.com/albums/p...ps2wzqkt18.jpg
Coffee was served but MGR asked for Milk, the Vice Consul Mr.Ivanov gives milk to our Thalaivar.
http://mgrroop.blogspot.in/2008/08/m...o-tolstoy.html
Printable View
Russian Post:
http://i125.photobucket.com/albums/p...ps2wzqkt18.jpg
Coffee was served but MGR asked for Milk, the Vice Consul Mr.Ivanov gives milk to our Thalaivar.
http://mgrroop.blogspot.in/2008/08/m...o-tolstoy.html
இனிய நண்பர்கள் திரு .குமார், திரு சைலேஷ் , திரு லோகநாதன் , திரு கலைவேந்தன் , திரு தெனாலி ராஜன் , திரு ரூப்குமார் அவர்களின் இன்றைய பதிவுகள் எல்லாமே அருமை .
4.4.77ல் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் திலகம் பதிவி ஏற்ற தினமும் அவருடைய அம்பா சிடர் காரின் எண்ணும்
பொருத்தமாக இருப்பது தெரியும் .
1967-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை தொகுதியில் நின்று தலைவர் வென்றார் என்று கட்டுரையில் உள்ளது. அது பரங்கிப்பேட்டை அல்ல. பரங்கிமலை தொகுதி. 1980-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்று உள்ளது. 1980-தேர்தலில் அவர் வெற்றிபெற்ற தொகுதி மதுரை மேற்கு.
கடைசியாக, 1986-ல் அமெரிக்காவில் இருந்தபடியே இதே ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றும் உள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தலைவர் சாதனை படைத்தது உண்மைதான். ஆனால், தேர்தல் நடந்த ஆண்டு 1986 அல்ல, 1984.
பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டபோது அதை வேண்டாம் என்று மறுத்ததற்கு குறிப்பான காரணம் அவர் தரப்பில் இருந்து வரவில்லை என்ற தகவல் தவறு. அப்போதைய சூழ்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து பத்ம ஸ்ரீ விருதை தலைவர் மறுத்து விட்டார்.
வியாபார ரீதியாக அமைந்த ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக தலைவருக்கு எப்படி பாரத் விருது வழங்கப்படலாம்? என்று விமர்சனம் எழுந்ததற்காக அவர் பாரத் பட்டத்தை திருப்பி அளிக்கவில்லை. ‘‘நாங்கள்தான் பாரத் விருதை மத்திய அரசிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தோம்’’ என்று அப்போது திமுகவினர் கூறியதையடுத்து, பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பினார். எந்த பட்டத்துக்கும் பதவிக்கும் தலைவர் ஆசைப்பட்டதில்லை. யாரையும் விருது வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதில்லை. கொண்ட கொள்கைக்காக பத்ம ஸ்ரீ பட்டத்தை மறுத்தவர் தலைவர்.
பாரத் பட்டத்தை திருப்பி அனுப்பியது குறித்து இந்த பத்திரிகையில் வந்துள்ளபடி‘‘விருதுகளும் பட்டங்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக ஒருமனதுடன் அனைவராலும் ஏற்கப்பட்டால்தான் அது அதற்குரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறும்’’ என்று தலைவர் விளக்கம் அளித்தது உண்மையே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
தின இதழ் பத்திரிகையில் மக்கள் திலகத்தின் பல தவறான செய்திகள் இடம்பெற்று வருவதை முன்னிட்டு திரியில் அந்த செய்திகளை பதிவிடுவது பற்றி பரிசீலனை செய்யவும் .
" தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "
Again, we do not cut paper clipping etc to suit our requirements.
Thanks to Mr. Chandran Veerasamy, FB.
சகோதரர்கள் திரு. கலைவேந்தன் மற்றும் திரு. வினோத் அவர்கள் அறிவது,
இதற்கு முன்பு தின இதழில், அப்போது நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது, மறைதிரு. நாகி ரெட்டி அவர்கள் பேரன் திருமணம் விஜயா சேஷ மஹாலில் நடைபெற்றது எனவும், அந்த திருமணத்துக்கு முன் நாள் இரவு கூட்டம் எல்லாம் கலைந்து சென்ற பின், நம் மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்டார் என்றும் தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டது.
மேலும், நடிகர் திரு. ஏ. வி. எம். ராஜன், நடிகர் திரு. விஜயகுமார், திரு. தேங்காய் சீனிவாசன் மற்றும் மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து சொந்தப்படம் எடுத்து ,நஷ்டம் அடைந்ததாகவும், அதற்கு நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் உதவி புரிந்ததாகவும் தொடர்ந்து வந்த இதழ்களில் பிரசுரமானது.
இவையனைத்தும் உண்மையல்ல என்று நானும், திரு. சைதை ராஜ்குமார் அவர்களும், அப்போதே தின இதழ் பத்திரிகை ஆசிரியர் குழுவிடம் தொலைபேசியில் மறுப்பு தெரிவித்தோம்.
உண்மையில் மேற்கூறிய திருமணம் சென்னை ராயப்பேட்டை whites road ல் உள்ள ஒரு காலி மைதானத்தில், பந்தல்கள் போடப்பட்டு திருமணம் நடந்தது என்றும், புரட்சித்தலைவர் அவர்கள் எப்போதுமே மக்களிடையே ஒன்றிப்போவதுதான் வழக்கமேயன்றி, அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு சென்ற பின், பின்னிரவு நேரத்தில், செல்லவில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தோம். அப்போதெல்லாம், விஜயா சேஷ மஹால் திருமண மண்டபம் இல்லை என்றும் தெரிவித்தோம்.
மேலும், மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களுக்கு, தொடர்ந்து படம் எடுக்க முடியாத நிலையில்தான் தலைவர் அவர்கள் உதவி புரிந்தார் எனவும், நடிகை சாவித்திரி அவர்களுக்கு உதவி புரிந்தது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான் என்றும், விரிவாக எடுத்துக்கூறினோம்.
புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கிறோம் என்று நினைத்து தவறான செய்திகள் இடம் பெறக்கூடாது என்ற எங்கள் கருத்தை அழுத்தமாக நாங்கள் வலியுறுத்தினோம்.
1956ம் ஆண்டில் "மதுரை வீரன்' காவியம் மட்டும்தான் வெள்ளி விழா கண்டது என்றும்,. அலிபாபாவும் 40 திருடர்களும், தாய்க்குப்பின் தாரம் போன்ற காவியங்கள் வெற்றிப்படங்களேயன்றி வெள்ளி விழா படங்கள் அல்ல என்பதையும் உறுதி செய்தோம்.
இது போன்ற செய்திகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால், எங்களைப்போன்ற எம். ஜி. ஆர். ரசிகர்களையும், பக்தர்களையும் தொடர்பு கொண்டு, விசாரித்து, உண்மை செய்திகளை எழுதுமாறும் கேட்டுக்கொண்டோம்.
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...ps4v9nlwri.jpg
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...pstljryzpr.jpg
கலைஞர் கருணாநிதி அவர்கள், நம் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்தபோது, அந்த இயக்கத்தின் பெயரைக்கூட குறிப்பிட மாட்டார். அவரது கட்சியிலே, நடிகர்களை (புத்தூர் நடராஜன், குறிப்பிட்ட காலம் வரை எஸ். எஸ். ராஜேந்திரன் , பிந்தைய காலத்தில் டி. ராஜேந்தர்) வைத்துக்கொண்டே, நம் தலைவரின் இயக்கத்தை "நடிகர் கட்சி" என்று கேலி பேசினார். " ஒட்டு காங்கிரஸ் " என்று நையாண்டி புரிந்தார் (நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று 1980ல் தனது நிலையை மாற்றிக்கொண்டும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததும் தனிக்கதை) சத்த்சுனவு திட்டத்தை கேலி பேசிய திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே, பின்னர் 1989ல் அவரது ஆட்சி காலத்தில் அதை தொடர வேண்டிய தாயிற்று. புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்தான், பிறகு வந்த ஆட்சியாளர்களால்,, சிற்சில மாற்றங்களுடன் தொடர்கிறது, என்பது எவராலும், மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.
அதிகார துஷ்பிரயோகம் செய்து, நம் மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் வெளிவரக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தார். "நேற்று இன்று நாளை" காவியம் திரையரங்குகளில் ஓட விடாமல் செய்வதற்கு, தடைகள் பல, ஏற்பட காரணமாயிருந்தார். ஒரு காலத்தில், அப்படி காழ்ப்புணர்ச்சியுடன், அநாகரீகமாக நடந்து கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்களை, சட்டமன்றத்தில் மரியாதையுடன் நடத்தி, சபையின் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் காத்த, பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் வந்த நம் புரட்சித்தலைவருக்கு தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தனிப்பெரும் சிறப்பிடமும், பெருமையும் உண்டு.
கலைஞர் கருணாநிதி அவர்களே வெட்கப்படும் அளவுக்கு, தமிழக சட்டமன்றத்தில், புரட்சித்தலைவர் காலத்தில், அவருக்கு மரியாதை தரப்பட்டது. அவ்வளவு ஏன், 15-08-1977 சுதந்திர தினத்தன்று, கோட்டையிலே தேசக்கொடியை ஏற்றி உரையாற்றுகையில், மாநில முதல்வர்களுக்கு, இந்த கொடியேற்றும் அதிகாரத்தை பெற்று தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலே பகிரங்கமாக தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.
எனது தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பிறகு பெருந்தன்மை கொண்ட ஒரே தலைவர், நான் வணங்கும் தெய்வம், காலத்தை வென்ற காவிய நாயகன், புரட்சித்தலைவரே !
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...ps45hhzauy.jpg
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...ps7kbi4lsp.jpg
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...pskfwlt8xn.jpg
"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...psqe56cdcy.jpg
My sincere thanks to Mr Kalaivendhan Sir for his generosity in extending his postings domain to GG thread!
தங்கள் வரவு நல்வரவாகட்டும் மதிப்புக்குரிய மக்கள் திலகப் புகழார்வலர் கலைவேந்தன் சார் !
ஜெமினிக்காக தாங்கள் பதிந்துள்ளவை எதிர்பாராத மகிழ்ச்சியலைகளை முகிழச்செய்து விட்டது
இத்திரியின் ஜாம்பவான்கள் ராகவேந்தர் வாசு கோபால் மற்றும் சின்னக் கண்ணன் அணியில் உங்களின் அற்புதமான எழுத்துநடையில் அமைந்த இக் கட்டுரையும் ஒரு கல்வெட்டுப் பதிவாக எக்காலமும் காதல் மன்னருக்கு பெருமை சேர்க்கட்டும்!
தமிழ்த்திரை மூவேந்தர் புகழார்வலப் பணியில் நானும் ஒரு அணிலாக உங்கள் அணியின் அடியொற்றி என் கடமையை தொடருகிறேன் நன்றிகள்
வணக்கத்துடன் செந்தில்
http://i57.tinypic.com/2ed6zx4.jpg
Courtesy : Facebook
http://i57.tinypic.com/3176u8o.jpg
Courtesy : Facebook
Ayirathil Oruvan at CAPITOL theatre Colombo (Friday June 19, 2015
http://i60.tinypic.com/2cnywjc.jpg
JAYA MOVIE - NOW SHOWING - EN KADAMAI
https://www.youtube.com/watch?v=7jeYj_MOmL8
GEMINI GANESAN ABOUT MAKKAL THILAGAM M.G.R
http://i62.tinypic.com/6hnb50.jpg
happy news to all our millions of makkal thilagam m.g.r fans all over the world.
''M.G.R A LIFE''
book written by
former u.n.o - political adviser era .kannan
Will be published on the eve of makkal thilagam mgr century year.
Dear Kumar Sir
Thanks for the information about Makkal Thilagam MGR's new book by prominent person .
Since the News paper is very old, I had to place it [ Nadoodo Mannan Ad.] next to other ads:
http://i160.photobucket.com/albums/t...psysjvmkro.jpg
News paper details as it is:
http://i160.photobucket.com/albums/t...pskfed1soi.jpg
http://i1170.photobucket.com/albums/...pszjpy3fgy.jpg
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா” வை மீண்டும் ஒருமுறை , ஒரு சமீப ஞாயிறில் பார்க்க நேர்ந்தது...
ரஜினி பேசும்போது கருணாநிதியைப் பார்த்து கேட்டார்...
“அரசியல்ல இருக்கிறவங்க இரும்பு மனசும் , வைர நெஞ்சும் கொண்டவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது , இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி தேம்பி அழுதிங்களே.... இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க?”
# கருணாநிதி இதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை...
ஆனால்...இந்த வேளையில் , எம்.ஜி.ஆரின் இளகிய மனம் பற்றி படித்த ஒரு செய்தி நினைவுக்கு வந்தது..
“அன்பே வா” சமயத்தில் நடந்ததாம் இது...
சிம்லாவில் ஷூட்டிங் முடிந்து திரும்பும்போது எம்.ஜி.ஆர்.சொன்னாராம்...
''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்..''
சொன்னது போலவே முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்கினாராம் எம்.ஜி.ஆர்....பின்னர் சமாதியை ஒருமுறை வலம் வந்து , மௌனமாக உட்கார்ந்து , சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஆழ்ந்தாராம் .... உணர்ச்சிப் பெருக்கினால் எம்.ஜி.ஆரின் கண்களில் நீர் பெருகி வழிய..... நெடு நேரம் மௌனமாக இருந்தாராம்..
# எம்.ஜி.ஆரின் இளகிய மனதுக்கு இன்னும் கூட எத்தனையோ சாட்சிகள் உண்டு...!
# சரி..இளகிய மனம் கொண்ட இவர்களால் எப்படி அரசியலில் இவ்வளவு சாதிக்க முடிந்தது..?
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "
courtesy jv
மக்கள் திலகத்தை கவுரவிக்கும் பாரதிராஜா, விஜயகாந்த்.
http://i1170.photobucket.com/albums/...psppv74die.jpg
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=Ma410RAP4nM
மந்திரிகுமாரி (1950)
1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு.
அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.
தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.
பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.
ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.
வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.
அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.
""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.
ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.
நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.
அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.
அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.
வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.
ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.
கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.
தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நடிக, நடிகையர்
எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
கதை வசனம் : மு. கருணாநிதி
இசை : ஜி. ராமநாதன்
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,
எல்லிஸ். ஆர்.டங்கன்.
courtesy - cinema express
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கலைஞர் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கலைஞர் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கலைஞர் பலமாக சிபாரிசு செய்தார்.
“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கலைஞர் எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்*ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கலைஞரின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கலைஞர் கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கலைஞர் கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.
(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)
“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது
(நன்றி : மாலைமலர்)