-
[MGR-கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.
சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.
அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'
சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.
எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது.
Cont...]......... Thanks...
-
[கலைவாணர் அவர்களுக்கும் நம்ம தலைவருக்கும் இருந்த நட்பு நாம் அறிந்ததே.
கொடுக்கும் குணம் அவரிடம் இருந்து நான் கற்று கொண்ட பாடம் என்று பலமுறை சொல்லி இருக்கிறார் நம் வாத்தியார்.
1977 இல் நம் நாடோடிமன்னன் நாடாள புறப்படுகிறார். நிருபர்கள் கூட்டம் கேள்வி மேல் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அன்று தன் கூட இருந்த அரசியல், மற்றும் திரைத்துறையினரை நினைவு கூர்ந்து பதில் சொல்லுகிறார் பொன்மனம்.
ஒரு நிருபர் இப்போது உங்கள் நண்பர் கலைவாணர் அவர்கள் இருந்து உங்கள் இயக்கத்தில் இணைந்து வெற்றி பெற்று இருந்தால் அவருக்கு என்ன இலாகாவை ஒதுக்கி அவரை மந்திரி ஆக்கி இருப்பீர்கள் என்று கேட்க.
ஒரு நிமிடம் யோசித்த நம் தலைவன் சுற்றும் முற்றும் பார்க்க அனைத்து நிருபர்களும் திகைக்க நல்ல கேள்வி இது...
இன்று அவர் இருந்து இருந்தால் அவர்தான் முதல்வர் நான் அவருக்கு கீழே ஒரு அமைச்சர் ஆக இருந்து பணியாற்றி இருப்பேன் என்கிறார் எம்ஜியார்.
எப்படிப்பட்ட எம்ஜியார் நமக்கு நாட்டுக்கு தலைவர்.
முதல்வராக ஒரு நாள் கலைவாணர் சிலைக்கு ஒரு சிறப்பான மலர் மாலையை அவரே வடிவமைக்க சொல்லி அந்த மாலையை அவருக்கு அணிவித்து விட்டு மரியாதை செய்து அடுத்த நிகழ்ச்சிக்கு போய் திரும்பும் போது அந்த மாலை அவர் கழுத்தில் இல்லை.
உடனே காரை விட்டு இறங்கி இப்போ ஒரு 20 நிமிடம் கூட ஆகவில்லை எங்கே போச்சு அந்த மாலை எனக்கு உடனே தகவல் வேண்டும் என்று சொல்ல.
சுற்றி இருந்த அதிகாரிகள், காவல்துறையினர் விரைவாக செயல் பட்டு அந்த மாலையை ஒரு மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவர் கழற்றி சென்றதை அருகில் இருந்தவர்கள் சொன்னத்தின் படி அந்த நபரை அவர்கள் சொன்ன வழியில் தேடி போய் பார்க்க.
அந்த தெருவில் ஒரு வீட்டு வாசலில் வயதான ஒரு அம்மாவின் உடலுக்கு அந்த மாலை போட பட்டு இருந்தது.
தகவல் தலைவருக்கு தெரிந்து அவரே நடந்து அந்த தெருவுக்குள் போய் பார்க்க இறந்தவர் மகன் ஐயா என்னை மன்னித்து விடுங்கள்...என் தாயாரின் உடலுக்கு மாலை போட கூட இப்போது என்னிடம் பணம் இல்லை.. உறவினர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கதறி அழ அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து உடனே தன் ஜிப்பாவுக்குள் கை விட்டு இருந்த பணத்தை அள்ளி கொடுத்து அவர் தோள்களில் தட்டி கொடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார் என்று சொல்லிவிட்டு திரும்ப
உடன் இருந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கட்சிக்காரர்கள் அனைவரிடமும் இருந்தும் கொடுத்தார் இப்போது இறந்தும் கொடுக்கிறார்....அந்த மாலையை எடுத்து கொண்டு போனவரை ஒன்றும் செய்ய வேண்டாம்..இது அவர் எனக்கு சொல்லும் செய்தி. என்கிறார் புரட்சிதலைவர்........... Thanks...
-
நம்
தெய்வம்
புரட்சி
மக்களின் தலைவர்
எம்ஜிஆர்...
அவருடைய
பொன்மொழிகள்
கூறுவது....
நாடு என்ன செய்தது நமக்கு என்ற கேள்வி
கேட்பது எதற்கு.
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை
""உனக்கு...உனக்கு...""""
"""" உனக்கு....""""......... Thanks...
-
10,000 எதிர்பார்த்து வந்தவருக்கு 50,000 கொடுத்து, 15,000 சம்பளத்தில் வேலையும் கொடுத்த #பாரிவள்ளல் #எம்ஜியார்
//சங்கரய்யா பெரியாரின் #குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
#எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை.
தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும்.
அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே? அவரை சந்தித்து உதவி கேட்பதா? எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?"
அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ.50,000 ஐ சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது......... Thanks...
-
உலகம் சுற்றும் வாலிபன் !
____________________
மக்கள் திலகத்தின் இந்த சண்டை காட்சியை நன்கு உற்றுபாருங்கள் இப் படம் வெளியான காலகட்டத்தில் கராத்தே என்ற ஒன்று இல்லை !
இதில் ரெஸ்லிங்கில் பயன் படுத்தபடும் லாக்குகள் , கராத்தேயில் மாவாசி கிக் ஒன்று உண்டு இது மிகவும் கடினமான கிக் இதில் மக்கள் திலகம் என்ன அநாயசமாக மாவாசி கிக் ,சைட் மாவாசி கிக் ,பிளையிங் கிக் அனைத்தையும் கையாள்கிறார் பாருங்களேன்
ஹயாத் !......... Thanks..........
..
-
#இரத்தத்தின் #இரத்தமான #உடன் #பிறப்புகளுக்கு #ஓர் #அறிவுரை
1971 மேடையில் பேசிய பேச்சில்...!
என் ரத்தத்தின் ரத்தமான
உடன் பிறப்புகளே ... !
இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும்...
மேலும்...
ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது.
அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள்.
#வாரிவாரிக் #கொடுத்த #இந்த #வள்ளலை #யார் #தான் #மறக்கமுடியும் !!!
♥♥........... Thanks.........
-
இன்று டிவியில் (23/04/20) ஒளபரப்பாகும் தலைவர் படங்கள்..........
...
----------------------------------------
காலை 7 மணி ஜெயா மூவிஸ்- குமரிக் கோட்டம்
காலை 10 மணி- ஜெயா டிவி- குலே பகா வலி
பிற்பகல் 2 மணி- முரசு டிவியில் - கொடுத்து வைத்தவள்
இரவு 9.30 மணி- சன் டிவி- எங்க வீட்டு பிள்ளை........ Thanks..........
-
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.
1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.
திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.
திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.
நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...
நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.
திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.
1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.
1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.
பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...
பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)
இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.
“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க
என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் முக்கிய உழைப்பும் உண்டு.......... Thanks.........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் , "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா நாட்டின் "சுபாங்" (Subhang Airport - Malaysia) விமான நிலையத்திற்கு வந்த போது ,
நமது திரையுலகச் சக்கரவர்த்தி... என்றும் திரையுலகை ஆளும் ஈடு இணையில்லா வசூல் சக்கரவர்த்தி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ,
நேரில் வரவேற்க "சுபாங்" விமான நிலையத்திற்கு .... வருகை புரிந்தார் மலேசியா நாட்டின் புகழ்பெற்ற , மலாய் நடிகர் திரு. P. ரமலி அவர்கள்.
அந்த கண்கொள்ளா காட்சியின் போது , மலேசிய நகர மக்கள் அனைவருமே... விமான நிலையத்தை மூச்சடைக்க வைத்தார்கள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆம் ,
புரட்சி நடிகராக "உலகம் சுற்றும் வாலிபன் " படப்பிடிப்பை நடத்த வந்தவர்... எவ்வளவோ முயன்றும் முண்டியடித்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், தான் நினைத்தபடி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாத சூழலில் ஒருவழியாக ,
"லில்லி மலருக்கு கொண்டாட்டம்" பாடலில் விமானம் விட்டு இறங்குவதிலிருந்து , டாடாடா... டா..டா..ட..டா என்று ஒலிக்கும் குரலோசை மற்றும் அதன் BGM முடியும் வரை மட்டும் ,படப்பிடிப்பை முடித்து கொண்டு.... அந்நாட்டின் புழ்பெற்ற நடிகர் p.ரமலி அவர்கள் கொடுத்த விருந்து உபச்சாரங்களில் கலந்து கொண்டு பிரியாவிடை பெற்று தாய்நாடு திரும்பினார் நமது இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.
இல்லையென்றால் ஆராய்ச்சி குறிப்பின் ஒரு பகுதி மலேசியாவில் எடுக்கப்பட இருந்ததாக ,
கடந்த 2018 டிசம்பர் மாதம் நான் மலேசியா சென்ற போது , மலேசியா நாட்டின் பிரபல தொழிலதிபரும் , சமூக தொண்டருமான திரு. சன் - வே சுகுமாறன் ஐயா அவர்கள் , சுபாங் விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள சீனர்களின் , "கடல் உணவு " ரெஸ்ட்ராண்டில் கொடுத்த விருந்தின் போது தகவல் அறிந்தேன்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் , மலேசிய நாட்டின் பொன்மனச்செம்மல் கலைக்குழுத் தலைவர் ஐயா மேகநாதன் அவர்கள்.
இத்தகவலை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை.
நன்றியுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
மலேசியா நாட்டில் எடுக்கப்பட்ட "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்பின் போது , மக்கள் வெள்ளம் சூழ்ந்த அரிய புகைப்படத்துடன்....
அந்நாட்டின் புகழ்பெற்ற நடிகர் திரு. P. ரமலி அவர்களுடன் நமது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் அன்றைய அரியப் படம் நமது
"உழைக்கும் குரல்" தளத்தில்.......... Thanks.........
-
' ' அடேயப்பா...இத்தனை எம்ஜிஆர் புத்தகங்களா?' ' ஆமா காசையெல்லாம் எம்ஜிஆர் புத்தகம் வாங்குறதிலேயே கரைச்சிடுவாய் போலிருக்கே?' ' இதென்ன பெட்டி நிறைய எம்ஜிஆர் பட சிடிக்களா ( குறுந்தகடு) இருக்கு?' ' எம்ஜிஆர் மீது பைத்தியமா இருக்கானே!' ' எம்ஜிஆரை ஒரு தடவையாவது பார்த்திருக்கிறாயா?' ' நீ வரைந்ததிலேயே எம்ஜிஆரைத்தான் அதிகமாக வரைந்திருப்பாய் போலிருக்கு?' ' சிறுவயசிலேருந்து இவன்கிட்ட எம்ஜிஆரைப் பற்றி யார் தப்பா பேசினாலும் ரொம்ப கோபப்படுவான்' ' ஏம்பா எம்ஜிஆர் மேல இப்படி பைத்தியமா இருக்கியே, எம்ஜிஆர் உனக்கு என்ன செய்தார்?' ' எம்ஜிஆர்னா போதும், இவனுக்கு சாப்பாடே வேண்டாம்' ' ஏம்பா ஏழு நாளா தினமும் எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தை பார்க்கணுமா?, தினமும் நாலைஞ்சு பேரை இந்தப் படத்துக்கு அழைச்சிட்டுப் போறியாமே?' ( கேட்டவருக்குத் தெரியாது 14 நாட்கள் தொடர்ந்து பார்த்தேன்- 1998 ல் ) ' எதற்கெடுத்தாலும் கோபப்படுறியே எம்ஜிஆரு இதைத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தாரா?' 'எம்ஜிஆர் செத்துப் போயிட்டாருன்னு ( 1984 ல்) ஊரு புல்லா பேசிக்கிட்டாலும் இவன் நம்பவே மாட்டேங்கிறானே?' ' இந்த எம்ஜிஆர் போட்டோ, எம்ஜிஆர் கேசட், சிடி( குறுந்தகடுகள்), எம்ஜிஆர் புத்தகங்கள் எல்லாம்தான் உனக்கு சோறு போடுதா?' 'எலேய்... இப்படி கதவு பூராவும் எம்ஜிஆர் படத்தை ஒட்டி வெச்சிருக்கியே ஏன்?' ' எலேய்...சுவருல ஒரு இடம் பாக்கி இல்லாம எம்ஜிஆர் உருவத்தை கரித்துண்டால வரைந்து கிறுக்கி வெச்சிருக்கியே ஏன்?' ' எலேய்... ஊருல எப்ப பாரு எம்ஜிஆரை தப்பா பேசினான்னு யாரிடமாவது சண்டை போட்டுட்டு வந்து நிக்கிறியேடா, எம்ஜிஆரை குறை சொன்னா உனக்கென்ன?, எம்ஜிஆரை தப்பா பேசினா நீ கோபப்படுவேனு தெரிஞ்சுகிட்டு உன்னை கிண்டல் பண்ணியிருப்பாய்ங்க, அதுதெரியாம டென்சனாயிட்டியா?' ' தம்பி எம்ஜிஆர் இறந்துட்டதால( 1987 டிசம்பர் 24) இவனை( சாமுவேலை) கவனமா பாத்துக்க, நேற்றிலேருந்து சாப்பிடாம இருக்கான், இவன் எங்கே போறான் என்ன பண்ணுறான்னு கண்காணிச்சிக்க' ' அடேயப்பா...எம்ஜிஆர் படம் பார்க்க மெட்ராஸ் வரைக்கும் போகணுமா?( ஒளிவிளக்கு- நடராஜ் தியேட்டர்) அந்தப் படத்தை இங்க ( கோயம்புத்தூர்) உள்ள தியேட்டர்ல பார்த்தா போதாதா?' 'எம்ஜிஆர் படம்னா நல்லாத்தான் இருக்கும், அதற்காக ஐம்பது தடவையா பார்க்கணும்?' 'பத்து வார்த்தை பேசினாலும் எட்டு வார்த்தை எம்ஜிஆரைப் பற்றியே பேசுறாம்பா' ' ஆமா வீட்டிலேயும் எம்ஜிஆர் ...எம்ஜிஆர்தானா? எப்படி உன்னையெல்லாம் சகித்துக் கொள்கிறார்கள்?' ' ஏம்பா நீதான் எம்ஜிஆர் மீது பைத்தியம், அந்தப் புள்ளய ( என் மனைவி) கல்யாணம் முடிந்த உடனே முதல் படமா நாடோடி மன்னன் படம் பார்க்க( 2001ல்) தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போயிருக்கே, பழைய படத்தைப் பார்க்க வெச்சு கொடுமைபடுத்திருக்கியே?'( இன்றுவரை என் மனைவிக்கு பிடித்த ஒரே படம் நாடோடி மன்னன்) 'எல்லா எம்ஜிஆர் ரசிகர்களிடமும் நல்லா பழகிட்டு அவன் சரியில்ல... இவன் சரியில்லனுட்டு பலபேரிடம் இப்ப பேசுறதில்லையாமே, ஏன்?' ' நீதான் பெரிய உண்மையான எம்ஜிஆர் ரசிகனா?, எம்ஜிஆர் ரசிகரா இருக்க தகுதி இல்லாதவன், எம்ஜிஆர் பெயரைச் சொல்லி புகழ் அடையப் பார்க்கிறாய்' 'எம்ஜிஆர் பக்தன்னு சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு?' ' ஏம்பா சாமுவேலைத் தெரியுமா?' ' எந்த சாமுவேல்?' ' அதான் எம்ஜிஆர் எம்ஜிஆர்னு ...' ' ஓ..அவரா?... அய்யோ கொஞ்ச நேரம் பேசிட்டா போதும் நம்மை எம்ஜிஆர் ரசிகரா மாத்திடுவார்'' 'எம்ஜிஆரை மட்டுமேதான் புடிக்குமா? அரசியல் கட்சி, வேற அரசியல் தலைவர்களை பிடிக்காதா? ஆச்சரியமா இருக்கே?' ' நீங்க எம்ஜிஆர் ரசிகரா? நடை, உடை பாவனை எல்லாத்தையும் பார்த்தாலே தெரியுதே!' ....'என்னடா இது? நான்ஸ்டாப்பா போயிட்டே இருக்கு?' என உங்கள் மனதில் கேள்வி எழுவதை உணருகிறேன். 'எனக்கும் உன்னைப் போன்ற இதே அனுபவம் இருக்கு' என நீங்கள் சொல்வதும் புரிகிறது. மேலே நான் குறிப்பிட்டுள்ள அத்தனையும் என் அம்மா, மனைவி, மகன்கள், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் என்மீது அன்பாக, வேடிக்கையாக, கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகள்! ( சரி அப்படியே வீடியோ- புகைப்படத் தொகுப்பையும் பாருங்க)........ Thanks...
-
#காவல்துறையைப் #போற்றியவர்
புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.
தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.
இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.
காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.
தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் '#இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது............ Thanks...
-
தேர்தல் களத்தில் ...
ஆளுங்கட்சியை வீழ்த்தி.! ஆட்சியை பிடிக்க எதிர்கட்சி என்ன செய்யும்...?
ஆளும் கட்சியின் கொள்கையை விமர்சனம் செய்யும்.
ஆளுங்கட்சி ஊழல் செய்திருந்தால் அதைப்பற்றி விமர்சனம் செய்யும்.
ஆளும் கட்சியால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டிருந்தால் அதை பற்றி விமர்சனம் செய்யும்.
ஆளும் கட்சியால் விலைவாசி உயர்ந்து இருந்தால் அதைப் பற்றி விமர்சனம்
செய்யும்.
இதுதானே யதார்த்த நடைமுறை.
ஆனால்.......
புரட்சித் தலைவர் அவர்கள். நோய்வாய்ப்பட்டு....
அமெரிக்க நாட்டில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில்....
1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்த....
1984-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். எவ்வாறு வாக்கு சேகரித்தார் தெரியுங்களா.....?
"தமிழர்களே.! தமிழர்களே.! தமிழர்களே.!
என்னிடம் ஆட்சியை தாருங்கள்.
என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் எம்ஜிஆர் அவர்கள் நலமுடன் வந்தவுடன், நான் அவரிடம்இந்த ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன். " என்றார்..
திரு. கலைஞர், கருணாநிதி அவர்கள்.
ஆனால், மக்கள்.!! திரு.கருணாநிதியின் பேச்சில் மயங்காமல்....
புரட்சித்தலைவரின் பக்கத்திலேயே விசுவாசமாக நின்றார்கள். வெற்றியும் தேடித் தந்தார்கள். மீண்டும் ஆட்சியும் அதிகாரத்தையும் தந்தார்கள்.
திரு.கருணாநிதியின் ராஜதந்திரம் தோற்றுப்போனது. திமுக படுதோல்வியை சந்தித்தது.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ...
முதலமைச்சர் பதவிக்காகவும் .. ஆட்சி அதிகாரத்திற்காகவும் ... யாசகம் கேட்ட ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தார் என்றால்.. அவர் கலைஞர், கருணாநிதி அவர்கள் தான்........... Thanks.........
-
[மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் ....பெயர்….மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.].......
...... Thanks.........
-
நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.
தொடரும்.......... Thanks...
-
[உழைக்கும் வர்க்கத்தின் இருட்டை கழுவிய சூரியன்.. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று. மொத்த வாழ்க்கை 29 ஆண்டுகளே. திரையுலக ஆட்சி 6 ஆண்டுகளே. படங்களின் வரிசை வெறும் 57, தான் வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய பணம் ஒரு லட்சத்து சொச்சம். இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு. திரையுலக இசையின் அறிவுசுடர்களாக, ஜாம்பவான்களான உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் போன்றோர் நடுவே புயலாய் உள்ளே நுழைந்தவர் பட்டுக்கோட்டையார். மொழி சிறப்பு, காதல், வீரம், பக்தி, என்றிருந்த பாடல்களின் இடையே, புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றி காட்டியவர் பட்டுக்கோட்டையார். விரட்டிய வறுமை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற சின்ன கிராமத்தில் ஏப்ரல் 13, 1930ல் பிறந்தார் கல்யாணசுந்தரம். வறுமையின் பிடியில் சிக்கி, விவசாயம், மாடு மேய்ப்பது, மாம்பழம் விற்பது, உப்பளத் தொழில் என செய்தும் பொருளீட்ட வழி வழியின்றி, பாடல் எழுத எண்ணி சென்னை நோக்கி ஒரு பயணம். பட்டிதொட்டி புகழ் பல இன்னல்களுக்கு பின், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 1955-ஆம் ஆண்டு வெளிவந்த மகேஸ்வரி என்ற திரைப்படத்தில் முதல் பாடல் வெளிவந்தது.
"பாசவலை" என்ற திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்கள் இவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. தொடர்ந்து குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரை இசைப் பாடல்களை எழுதினார் சிந்தனை சிதறல் கல்யாண சுந்தரம். கம்யூனிச இயக்கத்தின் மேலிருந்த காதலால் ஒரு பக்கம் கட்சி பணி மற்றொரு பக்கம் பாடல் எழுதுவது.
இவரது பாடல்கள் அனைத்தும் எளிய நடை, இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என வஞ்சனையில்லாமல் அனைத்தும் நிறைந்தே தென்பட்டன. தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன-நேசிக்கப்பட்டன.
''நான்காவது நாற்காலி மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டையார்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். தன்னுடைய நாற்காலியில் ஒருகால் பட்டுக்கோட்டை என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்வது உண்டாம்''
'உழைப்பின் மேன்மை சொன்ன பாடல்,"காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்'. மூட நம்பிக்கைக்கு எதிராக பறைசாற்றிய பாடல், "வேப்பமர உச்சியில் நின்னு பேயோன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...
வேலயற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே" அன்றே அம்பலம் மேடு பள்ளமற்ற சமுதாயம் உருவாக செதுக்கப்பட்டதே, "வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா-தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா-தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" இன்றுவரை சமுதாயத்திற்கு பொருந்தி போககூடிய பாடல்,
‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' தனிமனித நம்பிக்கை சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைய, "குறுக்குவழியில் வாழ்வுதேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம் திருந்த மருந்து சொல்லடா".
Cont..]........... Thanks...
-
[10,000 எதிர்பார்த்து வந்தவருக்கு 50,000 கொடுத்து, 15,000 சம்பளத்தில் வேலையும் கொடுத்த #பாரிவள்ளல் #எம்ஜியார்
#சங்கரய்யா பெரியாரின் #குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
#எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை.
தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும்.
அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே? அவரை சந்தித்து உதவி கேட்பதா? எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?"
அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ.50,000 ஐ சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது......... Thanks...
-
6.11.1984 இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் அமெரிக்க மருத்துவமனை ப்ருக்ளீன் வந்து சேர்ந்தார் நம் பொன்மனசெம்மல்.
மீண்டும் எமனுடன் போராடி வெல்ல தயார் ஆனார் மன்னவர்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து நடிகை மஞ்சுளா ஏதோ ஒரு விஷயம் ஆக அமெரிக்காவில் இருந்தவர் தலைவர் அங்கு இருப்பதை தெரிந்து அவரை பார்க்க மருத்துவனை செல்ல.
அங்கே வரவேற்பறையில் நீங்கள் யார் அவரை பார்க்க என்று கேட்க அவர் அவருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் என்று சொல்ல மேலும் கீழும் பார்த்த அவர்கள் அவர் வயது என்ன இவர் வயது என்ன என்று யோசித்து மேலே இருந்த அன்னை ஜானகி அவர்களிடம் கேட்க.
அவர் அனுமதிக்க மேலே தலைவர் இருந்த அறைக்குள் சிறப்பு பார்வையாளர் நேரத்தில் போக.
அங்கே தலைவர் இருந்த நிலை பார்த்து நிலைகுலைந்து போனார் மஞ்சுளா .
அன்னை ஜானகி அவர்கள் மஞ்சுளா அவர்களை அறிமுகம் செய்ய தலைவருக்கு ஜானகி அம்மா குடும்ப மருத்துவர் பி.ஆர்.எஸ்.. தவிர யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
மஞ்சுளா அவர்கள் பல ஜாடைகள் செய்து காட்டியும் தலைவருக்கு புரியவில்லை.
அந்த வாரத்தில் தலைவர் இருதயம் தவிர மற்ற உறுப்புக்கள் செயல்பாடுகள் குறைந்து இருந்தது.
கோடி நெஞ்சங்கள் வேண்டியதால் அவர் இருதயம் மட்டும் எதையும் தாங்கும் சக்தியுடன் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து மஞ்சுளா அவர்கள் புறப்பட தயார் ஆன போது ஜானகி அம்மா சரி என்று சொல்ல தலைவரை நோக்கி அவர் கை கூப்ப..
வெளியே நோக்கி நடக்க முயன்ற அவரை அன்னை ஜானகி மீண்டும் அழைக்க தலைவர் தன்னிடம் யாரோ உதவி கேட்டு வந்து இருக்கிறார்கள் என்று நினைத்து தலையணை கீழே இருந்த அமெரிக்க டாலர் கட்டு பணத்தை எடுத்து மஞ்சுளா பார்த்து நீட்ட.
பொங்கிவரும் கண்ணீரை அடக்கி கொண்டு மஞ்சுளா வெளியேற.
அனைத்து உடல் பாகங்களும் ஒத்து உழைக்க மறுத்த நேரத்திலும் அவரின் கொடை நெஞ்சம் மட்டும் செயல் பட்டது மிகவும் அறிய செயலே.
விழியில் வழியும் நீருடன் விடை பெறும்.......உங்களில் ஒருவன் நெல்லை மணி...
நன்றி வாழ்க எம்ஜியார் புகழ்.....தொடரும்... Thanks............
-
[#காவல்துறையைப் #போற்றியவர்
புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.
தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.
இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.
காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.
தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் #'இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.]............ Thanks...
-
சிறந்த நிர்வாகி:-
M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.
ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.
அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.
அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற
‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’
பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .
எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்
‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’
என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...
‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.
1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.............. Thanks..........
-
இனிய மாலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#புதியவர்களுக்கு_வாய்ப்பு
முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.
மாடர்ன் தியேட்டர்ஸ்ன் தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'........ Thanks...
-
வேலூர் நேஷனலில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட மாட்டுக்கார வேலன். வேலூரில் எங்க வீட்டு பிள்ளை, அடிமைப்பெண்ணை தொடர்ந்து மாட்டுக்கார வேலனின் 100 நாட்கள் வெற்றி சாதனை........ Thanks...
-
மதுரை சிந்தாமணியில் மாட்டுகாரவேலன் 175 நாட்கள்,தொடர்ந்து அடிமைபெண்175 நாட்கள் இரண்டும் கூட்டி ஒருவருடத்தில் ஒரே தியேட்டரில் ஒரே கதாநாயகன் தலைவர் படம் வெள்ளிவிழா RECORDBRAKE...அதாவது 1969 மே - 1970 ஜுலை..... Thanks.........
-
ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு குடியேறிய போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்தார். ஆம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வீட்டு கிரகபிரவேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை, அவர் அளித்த பரிசு பொருள் மட்டும் தான் சென்றது...குருஜி....... Thanks...
-
அதற்கு ஒரு காரணம் இருந்தது குருஜி ஆம், எம்.ஜி. ஆர், தன்னை ஆளுமை செய்கிறார், தன் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அப்போது நினைத்தார். அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தினால் தான் எம்.ஜி.ஆர், அந்த விழாவில் பங்கேற்காமல், அதே நேரம் மனம் கேட்காமல் பரிசுப் பொருளை மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால், அடுத்த நாளே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.
ஜெயலலிதா தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அடுத்த நாள் , காஷ்மீரில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக விமானத்தில் முன் பதிவும் செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா விமானம் ஏறிய பிறகு தான் பார்த்தார். தன் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் எம்.ஜி.ஆர். இது ஏதேச்சையாக நடந்தது., எம்.ஜிஆருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பு இருந்தது. அதனால், அவரும் அதே விமானத்தில் பயணமானார். ஜெயலலிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை... கடலின் மேற்புறத்தில் காதைக் கிழிக்கும் சத்தம் கேட்டாலும், ஆழ்கடலில் ஒரு அமைதி நிலவுமே...? அது போல, விமானத்தின் சிறகுகள் சத்தத்தை கடந்து இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது. விமானம் மேலே பறக்க பறக்க, அமைதியின் இறுக்கம் குறைந்தது. இருவரும் மீண்டும் பேசத் துவங்கினார்கள். காஷ்மீரில் விமானம் இறங்கியபோது, முற்றாக சகஜ நிலைக்கு திரும்பினார்கள்......... Thanks...
-
யாருக்குமே கிட்டாத அரசியல் வாய்ப்பு ஜெவுக்கு எம்.ஜி.ஆர் மூலம் கிடைத்தது. அவர் மட்டும் சரியானபடி அதை உபயோகித்திருந்தால்,,எம்.ஜி.ஆரே,தம் அரசியல் வாரிசாக ஜெவை அறிவித்திருப்பார். ஜெ இந்தியாவின் பிரதமராகவே ஆகியிருப்பார்......... Thanks.........
-
#MGR_sSuccess_movies
MGR started his career in acting (small roles) from 1937. By 1947 his leading role movie Rajakumari was released. From 1948 to 1950 he has acted as Hero and as well as Second Hero character, then from 1950 to 1977 (or 1978) he was the Hero.
Total films released up to 1978 is 136, Hero acted movies are 117. In this 117, one movie is Telugu movie Sarvathikari and one Malayalam movie Jenovah. Both these movies are released in Tamil version also. The Tamil movies only taken into account that is 115. His success rate follows:
350 plus days - En Thangai – 1952
301 to 349 days – Nil
251 to 300 days – Nil
----------------------------------
#200 to 250 days –
Nadodi Mannan – 1958
Enga Veetu Pillai – 1965
Ulagam Sutrum Valiban – 1973
Urimai Kural – 1974
------------------------------------
#175 to 199 days –
Madurai Veeran – 1956
Anbay Vaa – 1966
Oli Vilakku – 1968
Adimai Penn – 1969
Mattukara Velan - 1970
Rickshawkaran – 1971
------------------------------
150 to 174 days –
Rajakumari – 1947
Manthiri Kumari – 1950
Marmayogi – 1951
Malai Kallan – 1954
Kulabaghavali – 1955
Alibabavum Narpathu Thirudargalum – 19556
Thaiku Pin Tharam – 1956
Thirudathae – 1961
Kavalkaran – 1967
Neethiku Thalaivangku – 1976
-----------------------------
125 days to 149 days:
Mohini 1948
Maruthanattu Illavarasi 1950
Sarvathikari 1951
Andaman Kaithi 1952
Jenovah 1953
Chakravarthi Thirumagal 1957
Thai Sollai Thattathae 1961
Thayai Katha Thanaiyan 1962
Vettaikaran 1964
Panakara Kudumbam 1964
Deiva Thai 1964
Ayirathil Oruvan 1965
Kudieruntha Kovil 1968
Nam Nadu 1969
Ithaya Veenai 1972
Nallai Namathae 1975
Ithayakani 1975
-----------------------------
110 days to 124 days:
Kumari 1952
Puthumai Pithan 1957
Mahadevi 1957
Baghdad Thirudan 1960
Kudumba Thalaivan 1962
Dharmam Thalaikakum 1963
Ragisya Police 115 1968
En Annan 1970
Engal Thangam 1970
Kumarikottam 1971
Nalla Neram 1972
Netru Indru Nalai 1974
Ninaithathai Mudipavan 1975
Pallandu Vazhga 1975
Indru Pol Endrum Vazhga 1977
Meenava Nanban 1978
---------------------------------
100 days to 109 days
Periya Idathu Penn 1963
Nithiku Pin Pasam 1963
Parisu 1963
Padagotti 1964
Mugarasi 1966
Petral Than Pillaiya 1966
Thedi Vantha Mapillai 1970
Neerum Nerupum 1971
Raman Thediya Seethai 1972
Sirithu Vazha Vendum 1974
Uzhaikum Karangal 1976
Uruku Uzhaipavan 1976
-------------------------------
90 days to 99 days:
Mannathi Mannan 1960
Arasilangkumari 1961
Koduthu Vaithaval 1963
Chandrodayam 1966
Kannan En Kadalan 1968
Nan En Piranthan 1972
-------------------------------
80 days to 89 days:
Nam 1953
Thai Magaluku Katiya Thaali 1959
Nallavan Vazhvan 1961
Pasam 1962
Panathottam 1963
Kalangarai Vilakkam 1965
Parakum Pavai 1966
Thaiku Thalai Magan 1967
Vivasahi 1967
-----------------------
70 days to 79 days:
Panakari 1954
Kundukili 1954
Rajarajan 1957
Raja Desingh 1960
Sabash Mapillai 1961
Rani Samyuktha 1962
Madapura 1962
Vikramadityan 1962
Ananda Jothi 1963
Kanchi Thalaivan 1963
En Kadamai 1964
Thozhilalli 1964
Thayin Madiyil 1964
Panam Padaithavan 1965
Kannithai 1965
Thazhampoo 1965
Asai Mugam 1965
Nadodi 1966
Thanipiravi 1966
Arasakattalai 1967
Puthiya Bhoomi 1968
Kanavan 1968
Thalaivan 1970
Oru Thai Makkal 1971
Sangay Muzhangu 1972
Annamittakai 1972
Pattikattu Ponniah 1973
Madurai Meeta Sundarapandiyan 1978
-----------------------------
60 days to 69 days:
Kalai Arasi 1963
Nan Aanai Ittal 1966
Thalibaghayam 1966
Theru Thiruvizha 1968
Navarathinam 1977
----------------------
50 days to 59 days:
Kadhal Vaghanam 1968
Info: Number days for this movie is 56.
30 days to 49 days: NIL
10 days to 29 days: NIL
---------------
Days
Number of Movies
350 plus days 1 Movie
200 days to 250 days 4 Movies
175 days to 199 days 6 Movies
150 days to 174 days 10 Movies
125 days to 149 days 17 Movies
110 days to 124 days 16 Movies
100 days to 109 days 12 Movies
90 days to 99 days 6 Movies
80 days to 89 days 9 Movies
70 days to 79 days 28 Movies
60 days to 69 days 5 Movies
50 days to 59 days 1 Movie
#blogspot.com இணைய தகவல். உங்களுக்காக.... மேலும் தலைவரின் எந்த படமும் 50 நாட்களுக்கு கீழ் ஓடியதில்லை என்பது கூடுதல் தகவல்............ Thanks.........Mr.RSM
-
1972யில் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்தார் திமுக எனும் தீய்ய சக்திக்கு அழிவு ஆரம்பித்தது
2020யில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் வெற்றி
திமுகவும் கொரோனாவையும் வீழ்த்தும் சக்தி புரட்சி தலைவருக்கு உண்டென்பதில் பெருமை கொள்வோம்💕💕💕
2021யில் தமிழகத்தில் திமுகவும் இருக்காது கொரோனாவும் இருக்காது💪💪💪
#திருகை_பவர்_அருண்...... Thanks...
-
எம்.ஜி.ஆரால் மழையா??
--------------------------------------------
மேற்கண்ட கேள்விக்கு--
ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
இயற்கை--
வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
மக்கள்---
தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????...... Thanks.........
-
எம்ஐிஆர்உயிருடன்இருக்கும்போது என்னைஇப்போது புகழ்வதில் எந்தநன்மையும்வரபோவதில்லை நானஇறந்தபின் என்தொண்டுகளைநினைவுகூர்வதில்தான்இருக்கிறது நான்ஆற்றியகடமைகள் மக்களுக்கு எந்தஅளவில் உபயோகப்பட்டிருக்கிறது என்பதைகூறும்போதுதான் நான்ஆற்றியசேவைக்கும்புகழ்கிடைக்குமெனகூறினார் ஆனால்உறவுகள்பதிவைபார்க்கும் போதுஉயிருடன் இருக்கிரார் எனும் எண்ணம்மலர்ந்துக்கொண்டேஇருக்கிறது பதிவுகளுக்கு நன்றிநலவாழ்த்துக்கள் உறவுகளே........ Thanks...
-
அனுப்பிய குழுவினர் மற்றும்
மக்கள் நிலைக்
குறித்து அந்த நடுநிசியில் தலைவர்
தவிர* வேறு எவர்க்கு
'தில்'லுடன் வர முடியும்.
மக்கள் சேவையே
மகேசன் சேவை
என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட புரட்சித்
தலைவரை தவிர
யாரால் முடியும்?
அந்த நல்லவரை
யாரால் மறக்க
முடியும்?........Fb feedback... Thanks...
-
நமது தலைவர் அவர்கள் உயிர் துறந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் பல சர்வேயில் மக்களின் உள்ளம் கவர்ந்த தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி சினிமா துறையிலும் சரி முதல்வராக ஆன பிறகும் சரி மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு தனது வாழ்க்கையை அப்படியே அமைத்துக் கொண்ட காரணத்தால் இன்னும் இந்த உலகம் உள்ளளவும் அவர் புகழ் மறையாது ஓங்கும் என்பது இப்பவே நமக்கு நன்றாக தெரிகிறது பேஸ்புக்கில் அவரைப்பற்றி எவ்வளவு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது என்னைப்போன்ற எத்தனையோ பக்தர்கள் அதையெல்லாம் படித்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார்கள் இதற்கெல்லாம் காரணம் மனிதநேயம் ஒன்றே மகத்தானது என்று தலைவர் அவர்கள் கடைப்பிடித்து தான்........ Thanks...
-
உண்மைதான் அந்தபுண்ணியவான் ஆட்சியில் நல்ல மழை பெய்யும் விளைச்சல் அமோகம் விலைவாசி ஏற்றம் இல்லை விவசாயிகள் தற்கொலை இல்லை பஞ்சம் பட்டினியில்லை மொத்ததில் சொல்லபோனால் அவர் ஆட்சி தமிழகத்தில் பொற்காலம் அப்படிப்பட்ட புன்னியவானை தமிழகம் இழந்துவிட்டது ஐய்யா......... Thanks...
-
அந்த ஆண்டு நல்லமழை காரணமாக வடசென்னை நீரில்மூழ்கியது முதல்வர் MGR பாதிக்கபட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு நிவாரணம் ஆகிய பணிகளைமேற்கொண்டார்..... Thanks...
-
வணக்கம் நண்பர்களே!! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிறப்பு குணங்கள் என கேட்டால் பெரும்பாலானவர்கள் அவருடைய வள்ளல் தன்மை, தொழில் பக்தி, பெரியவர்களை மதித்தல்,பகைவர்களை மன்னித்தல், தொண்டர்களிடம் பாசம் என நிறைய கூறுவார்கள்... பலரும் கூறத்தவறிய இன்னொரு சிறப்பு தகுதி அவருக்கு உண்டு, அது....
ஒருவருடன் பழகிய சில தினங்களிலேயே பிற்காலத்தில் அவர் என்னவாக வருவார் என சக மனிதர்களின் திறமையை கண்டறிவது.... சில சுவாரசியமான நிகழ்வுகள்
பல ஆண்டுகளாக அன்னை சத்யா ட்ரஸ்ட் மூலம் எம்ஜிஆர் படிக்க வைத்த ஆளாக்கிய நபர்களின் எண்ணிக்கை அதிகம். 1950களில் தொடங்கிய இந்த சேவை அவர் மறைவுக்குப் பின்னும் எம்ஜிஆர் ட்ரஸ்ட் மூலம் தொடர்கிறது....
அப்படி அவரால் படித்தவர்கள் தங்கள் படிப்பு முடிந்ததும் நேராக அவரிடம் சென்று ஆசி வாங்குவார்கள்... "நீ என்னவாக போகிறாய்?"என்று கேட்பார் அவர்....
அவர்கள் சொல்லும் வழி தனக்கு சரியெனப்பட்டால் அதற்கு அந்தந்த துறையில் உள்ள தன் நண்பர்கள் மூலம் ஆவண செய்வார்... வழிமாறி செல்ல நினைப்பவர்களை செல்லமாக கண்டித்து ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுக்க செய்வார்... அதிலும் அவர்கள் வெற்ற பெற உதவுவார்... அவர் சொல்லி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் அனைவரும் வாழ்வில் ஜெயித்துவிடுவார்கள். பலர் பெரு வெற்றி பெற்று மிகப்பிரபலங்களாக மாறிவிட்டார்கள்.... சில சம்பவங்கள்... ...( பதிவு கொஞ்சம் விரிவாக இருக்கும்.. இதைவிட சுருக்க முடியாது. மன்னிக்க...)
1950களில் முரசொலி மாறனை படிக்க வைக்கிறார். படிப்பு முடிந்ததும் மாறன் எம்ஜிஆர் இடம் வருகிறார்.
எம்ஜிஆர் :படிச்சு முடிச்சாச்சு, அடுத்து என்ன பண்ண போறதா உத்தேசம்?
மாறன்: எனக்கு ஒரு வழியும் தெரியலை.. நீங்கதான் நல்ல வழி சொல்லனும்..
எம்ஜிஆர் :.உனக்கு நல்ல நிர்வாக திறமை இருக்கு... என் பார்வையில் உன் திறமைக்கு தொழில் துறையில புகுந்து சாதிக்கலாம்...
மாறன் : எந்த தொழில்....
எம்ஜிஆர் :உதைப்பேன் ,(தலைவர் செல்லமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை )அது உன் சாய்ஸ்... ஒரு வருஷம் எடுத்துக்கோ நல்லா ஆராய்ந்து உனக்கு எந்த தொழிலில் ஆர்வம், திறமை இருக்குன்னு என தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு... அதுல நா என்ன உதவி செய்யமுடியுமோ செய்றேன்.
(..அந்த முரசொலி மாறன் பிற்காலத்தில் அவருடைய நிர்வாக திறமையால் கவரப்பட்டு கருணாவே தன் முரசொலி நிர்வாக தலைவர் பொறுப்பளித்ததும் இந்திய மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனதும் வரலாறு...அவர்தான் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பாளர்... அவருக்கு தான் தலைவர் சம்பளம் வாங்காமல் "எங்கள் தங்கம்" நடித்துக் கொடுத்தார்... )
அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து இளைஞன் ஒருவன் படிப்பை எம்ஜிஆர் மூலம் முடித்து ஆசீர்வாதம் வாங்க வருகிறான்.
எம்ஜிஆர் :படிப்பை நல்லபடியா முடிச்சாச்சு.. அடுத்து என்ன செய்ய உத்தேசம்...
இளைஞன்:நா சினிமாவுல புகுந்து நடிக்கப்போறேன்.
எம்ஜிஆர் :உதைப்பேன். உனக்கு சினிமா செட்டாகாது. உனக்கு கேட்பவரை கவர்ந்து இழுக்கும் நகைச்சுவையான பேச்சு திறமை இருக்கு.நல்ல பீல்டு ஒர்க்கர் நீ.. அரசியலில் நீ ஜொலிக்க அதிக வாய்ப்பு இருக்கு... நானே அதற்கு வழி செய்கிறேன்.நாளை அண்ணா விடமே நேரடியாக உன்னை அறிமுகம் செய்றேன்... (அந்த இளைஞனை அண்ணாவிடம் அறிமுகம் செய்து சிறிய பொறுப்பு வாங்கி தருகிறார். இந்த இளைஞன் தான் 9 முறை MLA 4முறை அமைச்சர் ஆன பிற்காலத்தில் எம்ஜிஆர் முதுகில் குத்திய திமுக துரைமுருகன்.)
அடுத்து 1980ல் அவரால் ஒரு பெண் படிப்பை முடித்து ஆசி வாங்க வருகிறார்.
எம்ஜிஆர் :அடுத்து என்ன செய்றதா உத்தேசம்?
பெண்: அரசியலில் உங்க கட்சியில சேர போறேன்.
எம்ஜிஆர் :உதைப்பேன்.உனக்கு அரசியல் வேண்டாம். அதுக்கேத்த கள்ளம் கபடம் உனக்கு இல்லை.. ஆழகான வட்டார வழக்கு பேச்சு நகைச்சுவை டயலாக்டெலிவரி முகபாவனை திறமை இருக்கு. சினிமாவுல நடிச்சா பெரிய ஆளா வருவ...(கையோடு பாக்யராஜ்க்கு போன் போடுறார். முந்தானை முடிச்சு படப்பிடிப்பு இருந்து பாக்யராஜ் எம்ஜிஆர் வீட்டுக்கே வந்து இந்தம்மா எதிர்காலத்தில் பெரிய நகைச்சுவை நடிகையா வரப்போறாங்க. என சொல்லி தன் படத்தில் அறிமுகப்படுத்துறார்... அந்த பெண்தான் இன்று பிரபலமான நடிகை கோவை சரளா...)
1998 திமுக ஆட்சியில் கருணாநிதி துரைமுருகன் முன்னிலையிலேயே கோவை சரளா இந்த தகவல்களை தெரிவித்து "ஒருவேளை அண்ணன் துரைமுருகன் சினிமாவிலும் நா அரசியலிலும் சேர்ந்திருந்தா இப்போ எங்க இருந்திருப்போம்னே தெரியாது. அண்ணன் துரைமுருகன் இன்றுவரை தன் முகத்தில் புல் மேக்கப் போட்டு தன் அரிதார ஆசையை தீர்த்துக்கொள்கிறார். ஆனால் தலைவர் சொன்னதால பல அரசியல் கட்சிகள் அழைத்தும் நா அரசியலுக்கே போகல"என பட்டென்று போட்டு உடைத்தார்... கருணா துரை இருவரும் குனிந்து சிரித்து கொண்டனர்....
அதே போல அவர் பேச்சை மீறி நாசமா போன வரலாறும் ஒன்று இருக்கு.... கருணா மகன் முக முத்துவையும்( ஆரம்ப காலத்தில்) எம்ஜிஆர் தான் படிக்க உதவி செய்தார்.
படிப்பு முடிந்ததும் எம்ஜிஆர் சொன்ன வார்த்தை "இவனுக்கு இன்டஸ்ட்ரியலிஸ்ட் அக வர பிரமாதமான வாய்ப்பு இருக்கு".கருணா தன் ஈகோ காரணமாக அதை புறக்கணித்து வீம்புக்கு எம்ஜிஆர் மாதிரி ஆகனும்னு சினிமாவில் நடிக்க வைத்து நாசமாக்கினார். முக முத்து குடிகாரனாக மாறிப்போனார். ஒருமுறை எம்ஜிஆர் முதல்வர் கருணா எதிர்க்கட்சி... முக முத்து அப்பாவிடம் சண்ட போட்டு எம்ஜிஆர் வீட்டுக்கு வந்துவிட்டார்... எம்ஜிஆர் அவரை சமாதானப்படுத்தி "அப்பாகிட்ட நா பேசுறேன். நாங்க எதிரியா இருக்கும் இந்த நேரத்துல நீ அப்பாவை விட்டுக்குடுத்து என்னிடம் வந்துட்டா அதை உன் அப்பனால தாங்க முடியாது.தாயும் தந்தையும் தான் முதலில் முக்கியம்"என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அப்போது கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு போன் போட்டு வேதனையுடன் எம்ஜிஆர் சொன்ன விஷயம்"லூசுப்பயல்.தன் ஈகோவை தீர்த்துக்கொள்ள தன் மகன் வாழ்க்கையை பலிகடா ஆக்கி நாசமாக்கிட்டான். அந்த அக்கா (முக முத்து தாயார்) உயிரோட இருந்திருந்தா இந்த கொடுமையெல்லாம் நடந்திருக்குமா "
ஆரம்ப காலத்தில் கருணாநிதிக்கு எம்ஜிஆர் பண உதவிகள் உட்பட பல உதவிகள் செய்தபோது முக முத்து ,முக அழகிரி இருவருக்கும் விவரம் தெரிந்த வயது. அதனாலேயே அவர்கள் எம்ஜிஆர் க்கு ஆதரவாக தன் தந்தையிடமே பலமுறை வாக்குவாதம் செய்தார்கள். அதனாலேயே கருணாநிதி இளம் வயதிலேயே இருவரையும் ஒதுக்கி வைத்தார்.கருணாநிதி பிள்ளைகளாக இருந்தாலும் இருவருமே எம்ஜிஆர் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். . அழகிரி இன்றும் தனது காரில் எம்ஜிஆர் பட பாடல் கேசட்டுகளை மட்டுமே வைத்திருப்பார்....
சிவாஜி இறந்த அன்று மதுக்கடை களை சென்னையில் அடைத்திருந்தனர். அடைக்கச் சொன்னது முதல்வர் கருணா... அப்போது முக முத்து செய்த அலப்பறை...
"ஏண்டா சிவாஜி செத்தா உலகமே அழிஞ்சிருச்சா?செத்தா கடைய அடைக்க இவரு என்ன பெரிய எம்ஜிஆரா? நிறைய படத்துல குடிகாரனாத்தானேடா நடிச்சிருக்காரு...கடைய தொறங்கடா டேய்"
இந்த படத்தில் எம்ஜிஆர் கையில் இருக்கும் குழந்தை கருணாநிதி மகளும் இன்றைய எம்பி யும் ஆன கனிமொழி.......... Thanks...
-
திரையுலகின் மன்னாதி மன்னன் படப்பிடிப்புக்காக வடநாடு வருகிறார் என்று கேள்விப்பட்டு நேபாள நாட்டு அரசர் தனது துணைவி அரசியுடன் மன்னனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு "அன்பே வா" படப்பிடிப்பில்.
அவர்களுடன் இருப்பவர்கள் ஏ.சி.திரிலோகச்சந்தர், ஏ.வி.எம். சரவணன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நேபாள அரசர், அரசி, சரோஜாதேவி மற்றும் கடைசியில் இருப்பவர் மெய்யப்ப செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி அம்மாள்.
அனைவருமே நடிகப்பேரரசர் எம்ஜிஆருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட தருணத்தை நினைத்தாலே...... Thanks...
நெஞ்சம் இனிக்கும்!
-
[வாய்ப்புகளை வாரி வழங்கிய வள்ளல்...
மயிலை வடக்கு மாடவீதியில் ஒரு திருமண மண்டபம்...
டப்பிங் கலைஞர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி... இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார் அந்த இளம் பெண் ...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...' போன்ற பாடல்கள்... வித்தியாசமான குரலில் பாடிக் கொண்டிருந்தார்... ஒரே எம்.ஜி.ஆர். பாட்டு மயம்...
முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
அப்போது அவர் முதலமைச்சராக இல்லை. அ.தி.மு.க தலைவர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இளம் பாடகியின் தாயார் அழைத்ததின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மக்கள் திலகம். காரணம்...
அந்த தாய் ஒரு காலத்தில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடிகை! பாலமுருகன் பாய்ஸ் கம்பெனி, ஜோதி நாடக சபா என்று நடித்துக் கொண்டிருந்தவர். திருமணமான பின் நாடகத்தை விட்டு விட்டு சினிமாவில் நடித்தார். கண்ணன் என் காதலன், கணவன், என் அண்ணன், இதயக்கனி, நீரும் நெருப்பும் என்று பல எம்.ஜி.ஆர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பின்பு 'டப்பிங்' கலைஞராக விளங்கினார். நாடக நடிகையாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு அவரை நன்றாகத் தெரியும். அதனால், பழைய, புதிய
சக நாடகக் கலைஞர்கள் யார் அழைத்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் அழைப்பை ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொள்கையாகவேக் கொண்டிருந்த மக்கள் திலகம், அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
படப்பிடிப்பின்போது அந்தப் பெண் தனது தாயாருடன் வருவதை எம்.ஜி.ஆர் பலமுறை பார்த்திருக்கிறார்.
ஆனால், அவர் இந்த அளவுக்குப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த செய்திகளையெல்லாம் நான் அறிந்துகொள்ள உதவியாக இருந்த அந்த பாடகியின் பேட்டியிலிருந்து ஓரு பகுதி...
" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு இசை ரசிகரைப் பார்க்க முடியாது. அந்தக் கல்யாணத்தில் என் கச்சேரியை நீண்ட நேரம் அமர்ந்து ரசித்தவர், ‘‘உனக்கு இப்படி பாடக்கூடிய பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லையே’’ என்றார் அம்மாவிடம். அப்படியே கத்தையாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து வாழ்த்தினார். அப்போ எனக்கு 15 வயசுதான் இருக்கும்.
அவருடைய பாராட்டையே விருதாக நினைத்த எனக்கு, வரம் போல இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஒரு பாடலைப் பாட திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனிடம் சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ஜேசுதாஸுடன் சேர்ந்து பாடிய,
கவிஞர் நா.காமராசன் இயற்றிய அந்தப் பாடல்தான், ‘போய்வா நதி அலையே...’....
இப்போது தெரிந்திருக்குமே அந்தப் பாடகி யாரென்று ! அவர்தான் பாடகி டி.கே.கலா. அகத்தியர் திரைப்படத்தில் 'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை...' என்ற பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடி, முதல் பாட்டிலேயே பலரது கவனத்தையும் கவர்ந்தவர். அவரது தாயார்
நாடக மற்றும் திரைப்பட நடிகையாக, டப்பிங் கலைஞராக விளங்கிய
காலஞ்சென்ற சண்முகசுந்தரி.
ரெக்கார்டிங் முடிந்ததும் கே.வி.மகாதேவன், ‘‘இதுவரை இப்படி ஒரு குரலை நான் கேட்டதில்லை. உனக்கு தனித்துவமான வாய்ஸ்’’ என்று டி.கே.கலாவை வாழ்த்தினாராம்.
அந்த பேட்டியில் மேலும் தொடர்கிறார் டி.கே.கலா......... Thanks...
-
ஹிந்து தமிழ் திசை...23-04-2020...’மறுபடியும் முதல்லேருந்தா...’ எம்ஜிஆர் பட டயலாக்! அங்கே என்.டி.ஆர் - ராமுடு பீமுடு’; இங்கே எம்.ஜி.ஆர். - எவர்கிரீன் "எங்கவீட்டுபிள்ளை"
இங்கிருந்து ஆந்திராவுக்கும் ஆந்திரத்தில் இருந்து இங்கேயுமாக வந்தவர்களும் இருக்கிறார்கள். வந்து ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் வந்த படமும் உண்டு. வந்து வெற்றிப் படமாக அமைந்ததும் இருக்கிறது. அந்த வகையில்... எங்க வீட்டுப்பிள்ளை, தனி ரகம். காரணம், படம் பார்த்த பலரும் எங்க வீட்டுப்பிள்ளை என்றே எம்ஜிஆரைக் கொண்டாடினார்கள். எம்ஜிஆரை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில், இந்தப் படத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு!
1965ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கலன்று ரிலீஸான இந்தப் படம், எம்ஜிஆர் ரசிகர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டமாகவே அமைந்தது. ‘ராமுடுபீமுடு’ என்று தெலுங்கில் வந்த படத்தை, தமிழில் எடுக்க முடிவு செய்த விஜயா புரொடக்*ஷன்ஸ், எந்த டிஸ்கஷனும் இல்லாமல் இவர்தான் ஹீரோ என்று எம்ஜிஆரை டிக் அடித்தது. படத்தைப் பற்றி அறிந்துவைத்திருந்த எம்ஜிஆர், டபுள் ஓகே சொல்ல, பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது படம்.
அப்புறம் ஒரு விஷயம்... அந்த தெலுங்குப் படமான ‘ராமுடுபீமுடு’ செம ஹிட்டு. படம் பார்த்துவிட்டு, வணக்கம் போட்டதும் வெளியே வந்த கையுடன், அப்படியே க்யூவில் நின்று, டிக்கெட் வாங்கிப் பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கம். அப்படியொரு வெற்றியைத் தந்த இந்தப் படத்தின் நாயகன் என்டிஆர் என்று சொல்லாமலேயே தெரிந்திருக்குமே உங்களுக்கு?
ராமுடுபீமுடுவை ரசித்துக் கொண்டாடியவர்கள்தான், பின்னாளில் என்டிஆரை கிருஷ்ண பரமாத்மாவாகவே பார்த்துச் சிலிர்த்தார்கள். அதேபோல், இங்கே, எங்கவீட்டுபிள்ளை எம்ஜிஆரை, அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆராதித்தார்கள்.
இப்போது கூட, தமிழ் சினிமாவில் ஏதேனும் டபுள் ஆக்ட் படங்களில், ‘என்னய்யா எங்கவீட்டுபிள்ளை மாதிரில்ல இருக்கு’ என்று ஜாலியாய் அவர்களே படத்தில் கமெண்ட் டயலாக் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
படம் வருவதற்கு முன்பே எம்ஜிஆர் ரசிகர்கள் பேசிப்பேசி மகிழ்ந்து திளைத்தார்கள். நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து, அடுத்த இரட்டைவேடப் படமாக எங்கவீட்டுப்பிள்ளை அமைந்ததுதான் காரணம்.
விஜயா கம்பைன்ஸ் புரொடக்*ஷன்ஸ் நாகிரெட்டி - சக்ரபாணி தயாரித்த ஈஸ்ட்மென் கலர் படம் இது. மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்திருந்தார்கள். வீடுகள் செட்டெல்லாம் அவ்வளவு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது.
‘டபுள் ஆக்ட்டு. ஆள் மாறாட்டக் கதைதானே...’ என்று ஒற்றைவரியில் சொன்னீர்களென்றால், உம்மாச்சி வந்து உங்கள் கண்களைக் குத்தும். அப்படியெல்லாம் சர்வசாதாரணமாக டீல் செய்து சொல்லிவிடமுடியாதபடி நரஸராஜூவின் மூலக்கதையும் இருக்கும். அதை அதி அற்புதமாக, தெளிவாகத் திரைக்கதையும் ஆக்கியிருப்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால், எம்ஜிஆருக்கே இது புதுமாதிரியான படம்தான். காரணம்... அப்பாவி எம்ஜிஆர், தமிழ் சினிமாவுக்கும் புதுசு. ரசிகர்களுக்கும் விருந்து. அந்த அப்பாவி முகம் கொண்ட எம்ஜிஆரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு பாந்தமாக இருக்கும், அந்தக் கேரக்டர்.
அத்தனை சொத்துக்களுக்கும் அதிபதி அப்பாவி எம்ஜிஆர். ஆனால், மாமா நம்பியாரின் பிடியில் சொத்தும் இருக்கும். அவரும் இருப்பார். மிரட்டலான பேச்சு, உருட்டலான பார்வை, விளாசித்தள்ளும் சாட்டையைக் கொண்டு, எம்ஜிஆரை பம்பரமாக்கியிருப்பார் நம்பியார்.
அங்கே இன்னொரு எம்ஜிஆர். நாகேஷுடன் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டு, நடிக்க முயற்சி செய்துகொண்டு, ஜாலியாகப் பொழுதைக் கழிப்பார். அப்பாவி பெயர் ராமு. இவரின் பெயர் இளங்கோ.
ராமு எம்ஜிஆருக்கு ஒருகட்டத்தில் செத்துவிடலாம் என்று நினைத்து முயற்சி செய்ய, அக்காவின் மகளான சிறுமி தடுத்துவிடுவாள். அடியும் உதையும் வாங்கிக்கொண்டு இங்கே இருக்கமுடியாது என்று வீட்டை விட்டே, ஊரை விட்டே கிளம்பிவிடுவார் ராமு.
இதற்கிடையே செல்வந்தரான எஸ்.வி.ரங்காராவின் மகள் சரோஜாதேவியை அப்பாவி ராமுவிற்கு மணமுடித்து, வரதட்சணைப் பணமும் பெற்றுவிடத் திட்டம் போட்டிருப்பார் நம்பியார்.
ஒருவழியாக, ராமு எம்ஜிஆர், இளங்கோ எம்ஜிஆரின் கிராமத்துக்குச் சென்று அவரின் வீட்டுக்குச் செல்ல, இங்கே இளங்கோ எம்ஜிஆர், சரோஜாதேவியின் கண்ணில் பட்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே நம்பியார் வந்து, அவரை அழைத்துச் சென்றுவிட... அப்புறமென்ன? அப்புறம் என்ன... என்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்கள்.
கிராமத்தில் இளங்கோ எம்ஜிஆரின் முறைப்பெண் ரத்னா. ராமு எம்ஜிஆருக்குப் பார்த்த சரோஜாதேவி. இப்படி ஆள்மாறாட்டக் கதையில், காதலும் இடம் மாறும். அந்தக் காதலால் குழப்பமும் பிரிவும் சோகமும் வரும். ஆனால் படம் முழுக்க எல்லாமே இருந்தாலும் சோகத்தை சட்சட்டென்று நல்ல மூடுக்குக் கொண்டு வந்துவிடுகிற திரைக்கதையைக் கையாண்டார்கள்.
வீட்டில் அடைபட்டிருந்த வீரன் எம்ஜிஆர், ஹோட்டலுக்குச் சென்று இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஃபுல்கட்டு கட்டிவிட்டு, பில் தராமல் வெளியேறிவிடுவார். அதேநேரம், அதே டேபிளுக்கு அப்பாவி எம்ஜிஆர் வந்து உட்காருவார். சர்வர், வேறென்ன வேணும் என எரிச்சலாகக் கேட்பார். ரெண்டு இட்லி என்றதும் மறுபடியும் முதல்லேருந்தா என்பார் சர்வர். இந்த மறுபடியும் முதல்லேருந்தா... என்பது ஞாபகம் இருக்குதானே!
சரோஜாதேவி ஒரு பக்கம் வர, இன்னொரு பக்கத்தில் ரெண்டு எம்ஜிஆரும் இருப்பார்கள். சரோஜாதேவியின் ஹேண்ட்பேக்கை ஒருவன் தூக்கிக்கொண்டு ஓட, திருடன் திருடன் என்று கத்துவார். உடனே வீர எம்ஜிஆர், திருடனை நோக்கி ஓடுவார். இது வழக்கமான சீன். ஆனால் திருடன் என்றதும் அப்பாவி எம்ஜிஆர் தன் பர்ஸை பத்திரப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து ஓடுவார். சின்னக்காட்சிதான். ஆனாலும் அத்தனை நகாசு காட்டியிருப்பார்கள்.
இப்படி படம் நெடுக, அங்கங்கே காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை ரொம்பவே ஈர்த்திருப்பார்கள். படத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் ஒவ்வொன்றுமே ஷார்ப். அதிலும் நாகேஷ் உளறுவாயனாக அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. ‘என்னண்ணே... அவங்களைக் கடிச்சிட்டே... ச்சீ... அடிச்சிட்டே’, ‘தப்பு பண்ணிட்டோம். நீங்கதான் துரத்தணும்... சாரி திருத்தணும்’, ‘அண்ணே, அவங்க காலை ஒடி சீச்சீ காலைப் புடி’, ‘டைரக்டர் சார், எனக்கொரு டான்ஸ் கொடுங்க சார். மன்னிக்கணும் சான்ஸ் கொடுங்க சார்’ என்று படம் முழுவதும் நாகேஷ் இப்படியேதான் பேசுவார்.
சரோஜாதேவியை இன்னும் அழகாகவும் எம்ஜிஆரை இன்னும் இன்னும் அழகாகவும் மொத்தப் படத்தை அழகுக்கு அழகாகவும் வின்சென்ட் - சுந்தரத்தின் ஒளிப்பதிவு மெருகேற்றிக்கொண்டே இருக்கும்.ன்விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள் அள்ளிக்கொண்டு போகும். பாடலின் உள்ளூடாக வரிகிற இசைகளும் அமர்க்களப்படுத்தும். பின்னணி இசையும் பிரமாதம்.
கண்களும் காவடிச் சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாட்டு ஸ்டேஜ் டான்ஸ். அதற்கேற்றாற்போல டியூன் போட்டிருப்பார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், நம்மையும் ஆடவைக்கும்.
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரலாமா பாட்டு, செம லவ் ஸாங்.
அதேபோல,
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டும் என்றான் பாடல், கிராமத்துச் சங்கதிகளைச் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்து குத்துப்பாட்டு. எம்ஜிஆரும் ரத்னாவும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள்.
‘பெண் போனாள்... இந்தப் பெண் போனாள்
இவள் பின்னாலே என் கண் போகும்’ என்ற டூயட் பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் பின்னிப்பெடலெடுத்திருப்பார்.
‘மலருக்குத் தென்றல் பகையானால் என்றொரு சோகப்பாடல். இங்கே சரோஜாதேவியும் அங்கே ரத்னாவுமாகப் பாடுவார்கள். பொதுவாக, பரபரவென போய்க்கொண்டிருக்கும் படத்துக்கு இப்படி சோகப்பாட்டு முட்டுக்கட்டை போடும் என்பார்கள். ஆனால் அப்படி எந்தச் சேதாரமும் நிகழாதபடி, பாடலையும் அமைத்திருப்பார்கள். கில்லாடித்தனமான எடிட்டிங்.
படத்திலும் எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியலிலும் முக்கியப்பங்கு வகித்த ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுதான் படத்துக்கே ஹைலைட். பாட்டு ஆரம்பிக்கும் முன்பிருந்தே ஆரம்பித்துவிடுகிற கைத்தட்டல், பாட்டு முடிந்தும் கூட ஓயாதிருப்பதுதான் எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் அந்தச் சவுக்குக்கும் கிடைத்த மெகா வெற்றி. முக்கியமாக, கவிஞர் வாலிக்குமான வெற்றி இது.
ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, பண்டரிபாய் என பலரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். முக்கியமாக, படம் நெடுக, நாகேஷ் தப்புத்தப்பாகச் சொல்லும் ஒற்றை வரிகள், சரவெடிக் காமெடி.
இந்த எம்ஜிஆரும் அந்த எம்ஜிஆரும் அண்ணன் தம்பி என்கிற முடிச்சு அவிழ்வதும் நம்பியாரை வெளுத்தெடுப்பதும் பண்டரிபாய் அக்கா என அறிந்து உருகுவதும் என கடைசி இருபது நிமிடங்கள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய், சுபம் கார்டுடன் முடியும்.
ஆனால் எம்ஜிஆரின் அடுத்தடுத்த இன்னிங்ஸ் அங்கிருந்துதான் ஆரம்பமானது. அங்கிருந்தும் ஆரம்பமானது.
மனசில் வலியோ வேதனையோ, துக்கமோ வருத்தமோ... ஏதேனும் ஓர் சூழ்நிலையில் கொஞ்சம் டல்லாக இருக்கும் போது, எங்க வீட்டு பிள்ளையைப் பாருங்கள். டல்லான மனசு எம்ஜிஆர் மாதிரியே சுறுசுறுவென ஆகிவிடும். ஏதோவொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா.
65ம் வருடம் வெளியான படம். 55 வருடங்களாகிவிட்ட படம். ஆனால், இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம்ஜிஆரைப் போலவே, ’எங்கவீட்டுபிள்ளை’யும் நீடூழி வாழ்வான்....... Thanks.........
-
-
-