-
திரு வி என் சிதம்பரம் காலமானார்
புரட்சி தலைவர் அவர்களால் அவரின் ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக நியமிக்கப்பட்டவர் திரு வி என் சிதம்பரம் அவர்கள். பதவி வகித்த பத்து ஆண்டுகளும் மிக திறம்பட கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்தவர். சென்னை வடபழனி கமலா திரை அரங்கின் உரிமையாளர். சிறந்த நகைச்சுவை பேச்சாளர், மனிதநேயமிக்கவர், அனைத்து துறையினரோடும் நல்ல தொடர்பு வைத்திருந்தவர், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகத்தோடு பல ஆண்டுகள் பழகியவர். அன்னார் அவர்கள் இன்று காலை மதுரையில் காலமானார்.
சென்ற ஞாயிறு அன்று நானும் எனது அன்பு நண்பர் தேனி ராஜதாசனும் அன்னார் அவர்களை மதுரையில் உள்ள செண்பகம் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். பல ஆண்டுகள் அவரோடு நாங்கள் பழகி வருகின்றோம். அன்று அவரால் பேச முடியவில்லை. சைகையால் நலம் விசாரித்தார்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
http://i49.tinypic.com/30j7mzd.jpg
-
புரட்சித் தலைவரின் அருமை நண்பரும் சிறந்த ஆன்மிகவாதியுமான திரு.வி.என்.சிதம்பரம் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-
-
ஓ- சத்யாவின் புத்திரனே!
நீ
சத்தியவான்
எனவே தான்
எங்கள் தாய்க்குலம்
சாவித்திரியாக மாறி
உன்னை சாவிலிருந்து மீட்டது!
தெய்வம் நடத்திய தேர்தலில்
எமனோடு நீ
எத்துணைமுறை
போட்டியிட்டிருக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
தருமம்-
உனக்கே வாக்களித்து
வெற்றிபெறச் செய்திருக்கிறது
எமனின் எருமைச் சின்னத்தை
உன் பொறுமைச் சின்னம் புறம் கண்டிருக்கிறது !
தங்களது வாழ்நாளின் மிச்சத்தை
உன் கணக்கில் வரவு வைத்துவிட்டு
தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு
தீக்குளித்தார்களே
ஒரு ராமச்சந்திரனுக்காக
இத்துணை சீதைகள் அக்கினி பிரவேசம் செய்ததாக
எந்த ராமாயணத்திலும் இல்லை !
ஊரார் மெத்தப் புகழும் உன் சத்துணவுத் திட்டம்
நாட்டுக்குக் கிடைத்தது இன்று என்
பாட்டுக்குக் கிடைத்தது அன்று
ஆம்
பட்டினி கிடந்த என் பாடல்கள்
உன் சத்துணவால் தான்
செத்துப் போகாமல்
வித்துப் போயின
உன்னை சந்திப்பதற்கு முன்னதாகவே
நான் முந்நூறு வரிகள் எழுதியிருக்கிறேன்.
ஆயினும் உனக்காக எழுதிய முதல்வரியில் தான்
என் முகவரி தெரியவந்தது
அதனால் தான் உன் உதடுகளில் உட்காரும் போதெல்லாம்
என் சொற்கள் சுகம் கண்டன
நான் பாடிய பாடல்களை
நீ பாடிய காரணத்தால்-
நாடு பாடியது
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது
தமிழ்க்கவிஞர்களை நீ தலைகீழாக மாற்றியிருக்கிறாய்
ஆம்
கவி அரசு என்றிருந்த கண்ணதாசனை
அரசு கவி என்று ஆக்கியவன் நீ தானே !
இன்று கூட அரசை வைதால் அரசவை கவிஞனாகலாம் என்று
அறிந்தவன் தான் நான்
ஆயினும்
உன்னை நான் வைததில்லை
வையவும் மாட்டேன்
ஏனெனில் நீ
வாலியை வீழ்த்திய ராமச்சந்திரனல்ல
வாலியை வாழ்த்திய ராமச்சந்திரன் !
என்னை வாழ்த்திய உன்னை வாழ்த்துகிறேன்
நீ வாழ்க பல்லாண்டு
(1984 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வாலி எழுதிய வாழ்த்துப்பா)
-
ராமாவரம் தோட்டத்திலிருந்து தனது காரில் எம்.ஜி.ஆர் வந்து கொண்டிருந்தார். ஏ.வி.எம். ஸ்டூடியோ அருகே வந்த போது சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். கசமுசா என சத்தம். கேட் பூட்டப்பட்டிருந்தது. உடனே எம்.ஜி.ஆர் காரை நிறுத்தி விட்டு தன் உதவியாளரை அனுப்பி விசாரித்துவிட்டு வரச்சொன்னார். வந்தவர் உள்ளே ஸ்ரீதர் சார் டைரக் ஷனில் சிவாஜி நடிக்கும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிவாஜியை பார்ப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார். கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர் கார் கிளம்பியது. மறுபடி, மதிய சாப்பாட்டிற்காக எம்.ஜி.ஆர் ராமாவரம் போய்க்கொண்டிருக்கிறார். காலையில் பார்த்த மாதிரியே அதே ஏ.வி.எம் வாசலில் அதே இளைஞர் கூட்டம். ஆனால், சோர்ந்து போய் இருந்தார்கள். அவர்கள் முகங்களில் வருத்தம்.
பார்த்தார் எம்.ஜி.ஆர். காரை ஓரங்கட்டச் சொன்னார். காரிலிருந்து இறங்கி அந்தக் கூட்டத்தின் முன் போனார். எம்.ஜி.ஆர் வந்து நிற்பதை பார்த்ததும் வாட்ச்மேன் ஓடிவந்தார். எம்.ஜி.ஆர் கேட்டைத் திறக்கச் சொன்னார். எல்லோரும் என் பின்னால் வாருங்கள் என்றார். எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்து எல்லோரும் போனார்கள். தூரத்தில் இருந்து ஸ்ரீதர் இதைக் கவனித்து விட்டு எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தோடு வருகிறாரே என்று சிவாஜியிடம் செல்ல , சிவாஜியும் எழுந்து நின்றார். எம்.ஜி.ஆர் சிவாஜி அருகில் போனார்.பின்னாடியே அந்தக் கூட்டம்.
என்னண்ணே திடீர்னு என்றார் சிவாஜி
இவங்கல்லாம் உன்னோட ரசிகர்கள். உன்னை பார்ப்பதற்காக காலையிலிருந்து நின்னுகிட்டிருக்காங்க. காலையிலே போகும் போது பார்த்துட்டுப் போனேன். வரும் போது நின்னுகிட்டிருந்தாங்க . அதனால கூப்பிட்டுட்டு வந்தேன். பார்த்து பேசி அனுப்பிச்சு விடு என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் கிளம்பிப் போய்விட்டார்.
அதன் பிறகு ரசிகர்கள் சிவாஜியை சந்தித்துப் பேசிவிட்டுக் கிளம்பினார்கள். ரசிகர்கள் கிளம்பிய பிறகு இப்போ வந்த ஐம்பது இளைஞர்களும் எனது ரசிகர்கள். ஆனாலும், அதில் 25பேராவது எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இப்போதே மாறியிருப்பார்கள் என்று ஸ்ரீதரிடம் சொன்னார் சிவாஜி.
எதிரும் புதிருமாக இருந்தாலும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பொறாமையின்றி எவ்வளவு அன்னியோன்யமாக ஈகோ இல்லாமல் இருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக இயக்குநர் ஸ்ரீதர் இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
பொம்மை மாத இதழில் வெளியான மனதில் மணக்கும் மனிதர்கள் கட்டுரையில் நாகை தருமன்.
-
-
-
இனிய நண்பர் ஜெய் சார்
வாலியின் கவிதை மற்றும் நாகை தருமனின் கட்டுரை மிகவும் அருமை .
ரவிச்சந்திரன் சார்
மதுரை பேராசிரியர் ஞான சம்பந்தம் - மக்கள் திலகம் படம் அருமை
-
-