சின்னக் கண்ணன் சார்,
உங்கள் 'பார்த்தேன் சிரித்தேன்'
பதிவைப் பார்க்க
பார்வையை விரித்தேன்.
பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்
http://www.youtube.com/watch?v=Jbs1F...yer_detailpage
அத்தனையும் தங்களது கலைத்'தேன்'.
Printable View
சின்னக் கண்ணன் சார்,
உங்கள் 'பார்த்தேன் சிரித்தேன்'
பதிவைப் பார்க்க
பார்வையை விரித்தேன்.
பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்
http://www.youtube.com/watch?v=Jbs1F...yer_detailpage
அத்தனையும் தங்களது கலைத்'தேன்'.
//பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்// வாசு சார்.. மிக்க நன்றி..ம்ம் பாடல் வீட்டிற்கு ப்போய்த்தான் பார்க்கணும்...
சுப்ரபாதம் னு ஒரு படம் சார் 1979 னு நினவு
இறை அருட் செல்வர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம்
மெல்லிசை மன்னரின் இசையில் கவிஞர் கண்ணதாசனின் பாடல்
ஜெய்கணேஷ் , முத்துராமன் , ஸ்ரீப்ரிய , K R விஜயா, லதா,நம்பியார் னு ஒரு பெருங்கூட்டம் நடித்திருக்கும் சார்
நம்பியார் பெருமாள் பக்தர் கோயில் கட்ட நினைப்பார்
ஆனால் வேண்டிய பணம் கிடைக்காது
மனம் வெறுத்து பாடுவார் இந்த பாடலை
சீர்காழி வாணி காம்போவில் (வெரி rare combination )
சீர்காழி பொதுவா பிள்ளையார் முருகர் பாடல்கள் நிறைய பாடி இருக்கார் . பெருமாள் பாட்டு கொஞ்சம் தான்
(கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் !!
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான் -மிலிடரி சாங் மாதிரி ஆக இருக்கும் )
இப்ப நம்ம சுப்ரபாதம் பாடல்
திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!
திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!
தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!
அந்த சுப்ரபாதம் படத்தில் இன்னொரு பாடல் சார்
கண்ணனை பற்றி எழுத சொன்னால் நம்ம கவிஞர் தான்
பின்னிருவாரெ
வாணி ஜேசுதாஸ் combination
படத்தில் ஜெய்கணேஷ் லதா ஜோடி
(ஒன்னு கவனிச்சங்கனா MT க்கு பிறகு லதா நடிச்ச நிறைய படங்களில்
ஜெய் கணேஷ் ஜோடி )
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்
எல்லாம் சிலோன் ரேடியோ உபயம் சார்
//திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!// ஹையோ.க்ருஷ்ண க்ருஷ்ணா சார்.. எனக்குப் பிடித்த பாடல் இது..கேட்டு ரொம்ப நாளாச்சுது..ஆனாக்க....
கொழுக் மொழுக் லத்துவும் ஜெய்கணேஷூம் பாடும்
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் என்னும் இனிமையான பாட்டு எனக்கு ரொம்ப உசுர்
அப்புறம்
டேய் பார்த்த சாரதின்னு நம்பியார் கூப்பிட தொங்குமீசையுடன் கன கம்பீரமாய் பார்த்தசாரதிப் பெருமாளாய் வரும் முத்து ராமன்.. நன்றாக இருக்கும்..
(இதை டைப்படிக்கும் போது வேலை வந்து அப்படியே நிறுத்தி இப்போ இடுகிறேன்..நிறைய ரிப்ளை வந்திருக்கும்)
சொன்னாப்பல நீங்க முந்திக்கிட்டீங்க கிருஷ்ணாசார்..
கிருஷ்ணா சார்,
http://i1.ytimg.com/vi/s6mVYY9WOwY/m...jpg?v=4e8b0377
மனதுக்கு இதமான பாடலை ஞாபகப்படுத்தி (கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்) மனசாந்தி கொள்ள வைத்ததற்கு நன்றி! என்ன ஒரு அருமையான பாடல்!
தங்கள் மூலம் இத்திரியில் வந்த அபூர்வ பாடல்கள்தான் எத்தனை! உண்மையாய் பெருமையாய் இருக்கிறது சார்.
ஆனால் போட்டீர்களே ஒரு போடு மிலிடரி சாங். ரெண்டு வேளைக்கா மாத்திரை அனுப்பி வைங்க சார். இன்னைக்கு நைட் தூங்கினாப் போலதான். எழுந்திரிச்சி எழுந்திரிச்சி சிரிக்கப் போறேனோன்னு பயமா இருக்கு.
வாசு ck சார்
நானும் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன்
கொழுக் மொழுக் லத்து
என்ன வார்த்தை சார் அது
லதா னு சொல்லும்போது சுகம் இல்லை சார்
லத்து னு கூப்பிடும்போது தான் என்ன சுகம்
உரிமைக்குரல் படத்தில் நாகேஷ் சச்சுவிடம் சொல்வது போல்
(சரளா னு கூப்பிடும் போது அழுத்தம் இல்லை
சச்சு ன்னு கூப்பிடும் போது தான் அழுத்தம் )
"இதே அழுத்தம் அழுத்தம் வாழ்வின் எல்லை வரை வேண்டும் "
வாசு சார்
திரியை ஆரம்பித்த உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லனு தெரியலை