http://i1234.photobucket.com/albums/...ps5e55aaa7.jpg
http://i1234.photobucket.com/albums/...ps99778e6c.jpg
http://i1234.photobucket.com/albums/...psf0ce5894.jpg
http://i1234.photobucket.com/albums/...pse9db286a.jpg
Printable View
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று (03-01-2015).
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல் எனலாம். அதுபற்றிய செய்திகள், ஆய்வுகள் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுப்பதில்லை என்று சொல்வதைவிட அதனை மீண்டும் மீண்டும் படிப்பதில் ஒரு சந்தோஷமும் இருக்கிறது.
வருங்காலத் தலைமுறையினருக்கு கட்டபொம்மன் என்றால் இவர்தான் என்று அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்.
நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் நடித்ததோடு நின்றுவிடவில்லை. 1971-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலம் வாங்கி, அதில், கட்டபொம்மன் சிலையை நிறுவி, நீண்ட காலம் தன சொந்த செலவிலேயே பராமரித்து வந்து, பின்னன் அவ்விடத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
வெள்ளையரின் ஆதிக்கத்தை வேரோடு சாய்க்க புலியெனப் புறப்பட்டு வீரமரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மனையும், மறைந்து 200 ஆண்டுகளுக்கு மேலான பின்னரும் நம் மனதில் கட்டபொம்மனை வாழவைத்த நடிகர்திலகத்தைய்ம் இந்நாளில் நினைவு கூர்வோம்.
http://i1234.photobucket.com/albums/...ps41503600.jpg
http://i1234.photobucket.com/albums/...psc63f3eca.jpg
http://i1234.photobucket.com/albums/...psc858ee14.jpg
http://i1234.photobucket.com/albums/...ps23e84bdf.jpg
http://i1234.photobucket.com/albums/...ps5fd8cf2a.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8fda9084.jpg
http://i1234.photobucket.com/albums/...psf5f1e10e.jpg
Bangaloril Thangapathakam: http://youtu.be/p0hme9YSGWU
பெங்களுரில் தங்கப்பதக்கம் ...
கர்நாடக ரசிகர்களின் உற்சாகம்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில்,குலமா குணமா?
பழைய படத்தில்,ஒரு காட்சி..!
சிவாஜி-ஜெய் பாசக்கார அண்ணன் தம்பிகள்.
வில்லனின் சூழ்ச்சியால்,தம்பி ஜெய் சொத்தைப் பிரித்துக்கேட்பார்.
சொத்து பத்திரம்,நகை நட்டு,பாத்திர பண்டங்கள் என அனைத்தையும்,ஒரு இடத்தில் வைத்துவிட்டு..ஒரு ஓரமா நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார் அண்ணன் சிவாஜி..!சொத்தைப் பிரித்துக்கொடுக்கச் சொன்னால்,
இவரென்ன அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறாரே..
இவர் என்ன,லூசா என்பார்கள்..ஜெய் உட்பட!
ஜெய் மனைவி வாணிஸ்ரீ மட்டும் புரிந்து கொண்டு,
சிவாஜி அத்தான்..நிஜமாகவே ரெண்டாகத்தான் பிரித்துவைத்திருக்கிறார். ஒன்று சொத்து..இன்னொன்று அவர்!
உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்,என்பார்..!
தம்பி ஜெய் மனம் நெகிழ்ந்து...அண்ணன்தான் வேணும் என்பார்..!
http://upload.wikimedia.org/wikipedi...ama_Gunama.jpg
Facebook : Michael Amalraj
https://www.facebook.com/amalrajmichael?fref=nf
மையம் இணையதள நடிகர் திலகம் பக்தர்களுக்கும் நடிகர் திலகம் திரியில் சஹோதரத்துவத்துடன் பங்களித்துவரும் திரு எஸ்வி மற்றும் திரு யுகேஷ்பாபு அவர்களுக்கும் மற்றும் இதர மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும், புதிதாக வந்திருக்கும் பெங்களூரை சேர்ந்த திரு c s குமார் அவர்களுக்கும் சிறிது தாமதமான என்றாலும் என்னுடைய உளமார்ந்த புது வருட வாழ்த்துதலை தெரிவித்துகொள்கிறேன் !
அனைவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவனையும், இறைவனாக நம்மை வழிநடத்தும் ஆன்றோர் சான்றோரையும், தமிழகத்தின் பெருமையாம் உலக அதிசய நடிகராம் நம் நடிக சக்ரவர்த்தி நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் நேர்மையின் பிறப்பிடம், உறைவிடம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் ஆன்மாவையும், ஏழைகளின் இதயதெய்வம் மக்கள் திலகம் திரு m g r அவர்கள் ஆன்மாவையும் வேண்டிகொள்கிறேன்.
அன்புடன்
rks
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த திரியில் தொடர்ந்து பங்களிக்க வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
அவ்வப்போது எட்டி பார்த்து நடக்கும் சம்பவங்களை படித்து மகிழ்ந்தேன். திரு சிவாஜி செந்தில் அவர்களின் அயராத உழைப்பு மெய்சிலிர்க்கும் விஷயம். மேலும் நம்மை ஆரம்பகாலதிலிரிந்து ஊக்குவிக்கும் திரு ராகவேந்தர் சார் அவர்களின் ஸ்டைல் பங்களிப்பு ஒரு வித்தியாசமான கோணத்தில் வருவதை பார்த்து பேரானந்தம் கொண்டேன். காரணம் பல காரணங்களுக்காக திரிக்கு "கா" விட்டிருந்த ராகவேந்தர் சார் மீண்டும் இதுபோல பதிவுகளை புத்துணர்ச்சியுடன் எழுதுவது அவரது பரந்த மனதையும் நம் அனைவர் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் எடுத்துகாட்டுகிறது. மிக்க நன்றி சார் !
அதே போல திரு நெய்வேலி வாசு சார் அவர்களும் நம் திரிக்கு இந்த ஆண்டு முதல் வந்து தன்னுடைய அதிரடி ஆனந்த பங்களிப்பை தருவாராகின் நம்மை விட புண்ணியமும் சந்தோஷமும் அடையப்போகும் நண்பர்கள் யார் உள்ளார்கள். நெய்வேலி வாசு சார் ..2015..வந்துவிட்டது..புதிய விடியலுடன்...நீங்களும் வாருங்களேன்...போகியில் பழைய விஷயங்களை களைந்து...புதியன புகுதலாக நீங்கள் வரும்போது எங்கள் அனைவருக்குமே மிகபெரிய புத்துணர்ச்சி பாய்ச்சியதுபோல இருக்கும்...! என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று நீங்கள் நம் திரிக்கு தொடர்ந்து வருகை தந்து தங்களுடைய பொன்னான பங்களிப்பை தந்தருளவேண்டும் சார் !
Rks
சென்னை : மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளக்காரத் துரை படம் கூடுதலாக 100 திரையரங்குகளில் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.
1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வெள்ளக்கார துரை.
விக்ரம் பிரபு முதன்முறையாக காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக திவ்யா நடித்துள்ளார்.எழிலின் சிறந்த திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த இப்படம் வெற்றி பெற்றது. எனவே தற்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் அப்படம் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.
தனது முதல் படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக மீண்டும் நிறைய படங்களை தயாரிக்க இருப்பதாக அன்புசெழியன் தெரிவித்துள்ளார்.
http://tamil.filmibeat.com/img/2015/...ai-s-s-600.jpg
CHENNAI BOOK FAIR
OPENS ON 9TH JANUARY 2015 AND GOES ON UPTO 21ST JANUARY 2015
VENUE: Y M C A College, Grounds, Nandanam, Chennai-35.
http://bapasi.com/wp-content/uploads...01/CBF2015.jpg
செலுலாய்ட் சோழன் – 53
From Mr.Sudhangan's FB page
`பாசமலர்’ போன்ற படங்களை அப்படியே பார்த்துவிட்டு நகர்ந்து போகிறவர்கள் தன்னறிவைப் புரிந்து கொள்ளாதவர்கள்!
அதில் பல்வேறு விதமான நம் வாழ்க்கை அத்தியாயங்களும் அடங்கி இருக்கிறது!
ஊன்று கவனித்தால், நம் ரசனைகளை மேம்படுத்தும் ரசாயன மாற்றங்கள் அதனால் நிகழக்கூடும்!
படைப்பாளிகளும்,கலைஞர்களும் ஒன்று பட்டு செயல்பட்டால், எத்தனை நல்ல விஷயங்கள் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படத்தில் பல உதாரணங்கள் உண்டு!
சென்ற வாரம் அந்த பாடல் வரிகளைச் சொல்வதாகச் சொல்லியிருந்தேன்!
தங்கை தூங்கும் போது அவள் எதிர்காலம் குறித்து அண்ணன் கனவு காணுவதான பாடல்தான் ` மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்கிற பாடல்!
காட்சியாக பார்க்கும்போது, அதில் சிவாஜியும், சாவித்திரியும் தான் நம் கண்களுக்குத் தெரிவார்கள்!
ஆனால் காற்றில் வரும் கானமாக அதைக் கேட்கும் போது, அங்கே கண்ணதாசனும், விஸ்வநாதன் – ராமமூர்த்தியும் கூடவே வருவார்கள்!
அண்ணனின் கற்பனையில் தங்கைக்கு திருமணமாகிறாது இந்தப் பாடலின் மூலமாக!
`ஆசையின் பாதையில் ஒடிய பெண்மயில்!
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்!
வாழியக் கண்மணி வாழிய என்றான்!
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்!
இந்த கடைசி வரியில் கண்ணதாசன் ஜொலிக்கிறார்!
தங்கையை பிரியப்போகிற அண்ணனின் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது!
அந்த கண்ணீர் என்ன லேசாகவா வருகிறது!
வான்மழைபோல் கண்கள் நீரில் ஆடக் கண்டானாம்!
இந்த வரிகளை எழுதும்போது சிவாஜி என்கிற அண்ணனாக கவிஞர் மாறியிருந்தாலொழிய இந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்க முடியுமா ?
அந்த பாத்திரத்திற்கு பாடல் எழுதும்போது, கவிஞரும் அந்த பாத்திரமாகவே மாறிவிடுவதுதான் சிறப்பு!
அப்படி அந்த கவிஞர் அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டுமானால், படத்தின் கதை அந்த கவிஞனின் மனதில் போய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்துவிட்டது!
திருமணமான தங்கையின் அடுத்த கட்டம் இது! அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது!
இந்த சம்பவத்தை இதைவிட சிறப்பாக, சுருக்கமாக சொல்லிவிடமுடியுமா?
பிள்ளைப் பெற்ற எல்லாப் பெண்களுமே இதை உணர்ந்திருப்பார்கள்!
`பூமணம் கொண்டவள் பால் மணம் கண்டாள்!
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்!
ஒரு பெண் தாயாகிவிட்டதை ` பூமணம் கண்டவள் பால் மணம் கண்டாள் என்று எத்தனை யதார்த்தமாக, ஆழமாக, அந்த புதுத்தாயின் இயல்பினை இதை விட அழகாக சொல்லிவிட முடியுமா ?
ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதை இதைவிட எளிமையாக சொல்லிவிட முடியுமா? என்று பலமுறை யோசித்திருக்கிறேன்!
அடுத்து தங்கையின் காதல்!
அந்தக் காதலனோ அண்ணனோடு மோதியவன் !
இந்த மோதல் காட்சியில் சிவாஜி- ஜெமினியின் நடிப்பு காட்சியில் மேலோங்கி நிற்கும்!
அந்த நாட்களில் இந்த படத்தின் இசைத்தட்டுக்கள் வரும் போது அங்கே வசனகர்த்தா ஆரூர்தாஸ் விசுவரூபமெடுத்து நிற்பார்!
அண்ணன் ராஜீவான சிவாஜி இப்போது மில் முதலாளி!
தங்கையின் காதலன் ஜெமினியோ தொழிற்சங்க தலைவன்!
அதற்கு முன்பு நடந்த தகராறினால், ஜெமினியில் நண்பர்களாக பார்த்து முதலாளி சிவாஜி வேலை நீக்கம் செய்திருப்பார்!
இப்போது தொழிற்சங்கத் தலைவன் ஜெமினி முதலாளி சிவாஜியின் அறைக்குள் சில தொழிலாளர்களுடன் வருவார்!
ராஜீ: என்ன ?
ஆனந்தன்: இவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டாயாமே!
ராஜீ: ம்
ஆன: எதற்காக ?
ராஜீ: அதை கேட்க நீ யார் ?
ஆன: நான் ஒரு தொழிலாளி: நாங்களெல்லாம் ஒரே சமுதாயம். இதில் ஒருவன் பாதிக்கப்பட்டால் அதைப் பற்றி கேட்க மற்றவனுக்கு உருமை உண்டு! அந்த உரிமையின் பெயரால் கேட்கிறேன்! இவர்கள் நிறுத்தப்பட்டதற்கு நீ சரியான காரணம் சொல்ல வேண்டும்.
ராஜீ: அவசியம் சொல்லத்தான் வேண்டுமா ?
ஆன: ஆம்! எதற்குமே காரணம் சொல்ல வேண்டிய காலம் !
ராஜு: அதிகம் வேலையில்லாத காரணத்தால் ஆள் குறைப்பு செய்ய அவசியம் ஏற்பட்டது!
ஆன: அந்த அவசியத்திற்கு குறிப்பிட்ட இவர்களை மட்டும் தான் பலி கொடுக்க வேண்டுமா ?
ராஜு: இதில் எந்த விதமான குறிப்புமில்லை! கணக்குப்படி வேலை செய்யாமல் கெளரவ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும் தற்காலிகமாக
ஆன: எனக்காகச் சொல்லும் நொண்டிச் சமாதானம் . இதை நான் நம்புவதற்கில்லை
ராஜு: ஐ டோண்ட் கேர்
ஆன : ம்.. எனக்குத் தெரியும். இது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு.சொந்த விரோதத்தை வைத்துக்கொண்டு எனக்கு நண்பர்களாயிருக்கிர நலிந்தோரையும், மெலிந்தோரையும், உன் காலடியில் போட்டு நசுக்கப் பார்க்கிறாய்.. முறைப்படி உன் பலத்தை காட்ட வேண்டியது என்னிடம்தானே தவிர,முதுகெலும்பற்ற இந்த பேசும் பிரதேங்கள் மீதல்ல!
ராஜு: ம்… சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காக , இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு என் மீது படையெடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். உங்களுக்காக பரிந்து பேச வந்திருக்கிறான் என்று நினைக்காதீர்கள்
ஆன: இல்லை.. இவர்களுக்காகத்தான் பரிந்து பேச வந்திருக்கிறேன். அன்றொரு நாள் உன் தங்கையைப் பார்க்கச் சென்றதற்காக நீ வெளியிலிருந்து விலக்கப்பட்டபோது இதே இடத்தில் உனக்காகவும் நான் பரிந்து பேசி இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!
ராஜு: அதெல்லாம் பழங்கதை
ஆன: இடைக் காலத்தில் கிடைத்த இந்த நாற்காலிக்கு மதிப்பு கொடுப்பதற்காக இவர்களின் நட்பை இழுந்து விடாதே
ராஜு: வஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கெளரவத்தை இழப்பதைவிட, உன் கூட்டத்தை இழப்பதே மேல்
ஆன: சொந்த விஷயத்திற்கு போகாதே! நான் வந்தது நம்மைப் பற்றி பேசதற்காக அல்ல! நாளெல்லாம் பாடுபட்டு நீ இந்த நிலையில் இருப்பதற்குக் காரணமான இவர்களைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறேன்!
ராஜு: உன்னைப் போன்ற சுயநலவாதிகளின் பேச்சைக் கேட்டு, பாவம், ஒன்றும் அறியாத இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய இன்பத்தை எல்லாம் இழுப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் அனுதாபப்படுகிறேன்.
ஆன: யார் சுயநலவாதி? ஒருவனுடைய சுகத்திற்காக பலர் பாடுபட வேண்டுமென்ற ஏகாதிபத்ய மனப்பான்மை கொண்ட நீ சுயநலவாதியா ? அல்லது பலருடைய நன்மைக்காக ஒருவன் வாழவேண்டுமென்கிற பொதுநலப் பித்தனான நான் சுயநலவாதியா ?
ராஜு : பொது நலம் பொறியில் பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா ? புத்துக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாதத்தால் நாகத்தை குளிர வைக்கவா ?
இந்தக் காட்சியின் வசனங்கள் இன்னும் வரும்!
இந்த வசனத்தை அடுத்து இன்னும் அவர் பேசும் போது !
( இன்னும் வரும்)
TAMIL NEWS STORIES
Home > More Tamil News
Vikram Prabhu - the Uthama Puthiran connect !
Vikram Prabhu - the Uthama Puthiran !
Jan 04, 2015
Distributors Gopuram Films' first production venture, Vellaikaara Durai, starring Vikram Prabhu and Sridivya in the lead roles, has turned out to be a profitable venture.
Happy with the result, the company's Anbu Chezhian announced that he would be producing more movies under the Gopuram Films banner!
Meanwhile, it is to be noted that the Pulinagam chain that Vikram Prabhu sports in the movie is the same one used by his grandfather, Nadigar Thilagam Sivaji Ganesan in the movie Uthama Puthiran.
I request the moderator to take the initiative to bring all the verteran hubbers of NT's
thread to contribute as usual especially Mr Neyveli Vasudevan to propagate the glory of
the acting god.
Quote:
Quote:
நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர்Quote:
பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!
PART 1 :
பாசமலர் என்றாலே தூங்கும்போதும் நம் எண்ணங்களை ஆக்கிரமிப்பது 'கைவீசம்மா கைவீசு...' Signature காட்சியமைப்பே!! அதை என் பார்வையில் ஒரு Scene Stealer என்று மட்டுமே எடுத்துக்கொள்ள இயலவில்லை. அதையும் தாண்டி நடிகர்திலகம் கொடிநாட்டிய நடிப்புச் சிகரங்களில் ஒன்றாகாவே மனதில் பதிந்திருக்கிறது.
Quote:
இது ஒரு உளவியல் ரீதியான சகோதர பாசத்தின் அற்புத வெளியீட்டுக் குறியீடு.கண்கள் ஊனமுற்ற நிலையில் மனக்கண்ணில் அவருக்குத் தோன்றும் இளமைக் கால கல்வெட்டு நினைவை எவ்வளவு அற்புதமான உடல்மொழி பாவனைகளுடன் வெளிக்கொணர்ந்து பார்ப்பவர் மனதை வசியநிலைக்கு உட்படுத்தி தனக்கே உரித்தான உளவியல் அணுகுமுறையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இக்காட்சி நடிப்பின் இமயமாக நமது மனங்களில் வீற்றிருக்கும் அவரது நெருங்க முடியாத நடிப்புச் சிகரங்களில் எவரெஸ்ட் போன்ற முதன்மையான சிகரமே
பட்டை கிளப்பல்(pk)1: பாசமலர்Quote:
நடிப்பிமைய சிகரம் (peak) 1 எவரெஸ்ட்
https://www.youtube.com/watch?v=aYcO5_bK9c0
புதியபறவையின் பல காட்சியமைப்புக்கள் தெய்வமகனில் கோபமும் ஆத்திரமும் அறிவுக்கண்ணை மறைக்கும்போது தந்தை சிவாஜியும் மூத்தமகன் சிவாஜியும் ஒரேமாதிரி கையை நீட்டி தரையைக் காலால் உதைப்பது ...இவையெல்லாம் எனது அடுத்த தலைப்பான நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள் (peak)s என்னும் குறுந்தொடரில் வகைப்படுத்தியுள்ளேன்.
அமீர்கானின் (pk) அர்த்தம் பரபரப்பைக் கிண்டுபவர் என்பதே !!Quote:
இந்தக்காட்சிகள் பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம் என்ற கருத்துக் கோர்வையில் இப்போதுள்ள நெடுந்தொடரின் ஒவ்வொரு முடிவிலும் ஒரு குறுந்தொடராக வரும்.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில துணைத்தலைவர் திரு.துரைராஜ் 65-வது பிறந்தநாள் விழா - புத்தாண்டு விழா - ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - 01-01-2015 அன்று சென்னை தண்டையார்பேட்டையில் சிறப்பாக நடைபெற்றது. வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி.
https://www.youtube.com/watch?v=taHp...ature=youtu.be
மக்கள்தலைவர் சிவாஜி யின் தர்மம் எங்கே டிரைலர்
https://www.youtube.com/watch?v=ScFp2SvG4Pk#t=21
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -
புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்
http://i872.photobucket.com/albums/a...rmamengey2.jpg
புறப்படுங்கள் ... மக்கள் தலைவரின் புகழ்க்கொடியை புவியெங்கும் பரப்புவோம்...
முன்னோட்டம் 1
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் பார்வையில்..
" நான் முறைப்படிதான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் மறுபடியும் வந்து தான் தீருவேன்"
.... ஆஹா... என்ன தீர்க்கதரிசனமான வரிகள்... இந்தக் காலத்திற்கு மிகப் பொருந்துகிறதே வசனம்...
கலைச்செல்விக்கே இப்படி யென்றால் தலைவருக்கு...
இதோ கலைச்செல்வியே கூறுகிறார் கேளுங்கள்...
"பெருந்தலைவரே... தங்கள் நேர்மைதான் எங்கள் வழி..தங்கள் நெஞ்சுறுதி தான் எங்கள் பலம்.. "
சிகரம் வைக்கும் வசனம்...
"இப்பதான் என்னை எல்லோரும் கவனிக்க ஆரம்பிச்சிருக்கீங்க "
... இந்தப் படத்தின் வசனம் யார்...
பாலமுருகனா ... இல்லை...
ஏ.எல். நாராயணனா ... இல்லை..
வியட்நாம் வீடு சுந்தரமா... இல்லை..
பின் யார்...
சரி பின்னர் பார்ப்போம்...
முதல் வெளியீட்டின் போது மதுரையில் வரவேற்பு எப்படி...
இதோ முரளி சார் சொல்கிறார்... படியுங்கள்..
15th July 2011, 01:16 AM - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 8ல்...Quote:
...
சேகரின் அந்த ஸ்டைலிஷ் பாடலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் எந்த பாடலை பார்த்தாலும் அந்த பாடல் அல்லது காட்சி இடம் பெற்ற படத்தை முதன் முதலில் பார்த்தபோது நடந்தது நினைவுக்கு வரும் என்ற போதிலும் அந்த வகையில் தர்மம் எங்கே படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. தர்மம் எங்கே என்று கேட்டவுடன் உடன் நினைவுக்கு வருவது பல விஷயங்கள்.
முதலில் ஜூலை 1 அன்று வருவதாக இருந்து பின்னர் 15 -ந் தேதி மாறியது, படம் வெளியான அன்று மதுரை ஸ்ரீதேவி அரங்க வளாகமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்சிகள் எல்லாம் வெகு சீக்கிரமாக தொடங்கியது, கூட்டத்தை பார்த்துவிட்டு இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 காட்சிகளாக மாற்றியது, எக்ஸ்ட்ரா காட்சி திரையிட்டும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போனது, நான் சென்றிருந்த இரண்டாம் நாள் ஞாயிறு மாலைக் காட்சிக்கு அந்த அரங்கம் அமைந்திருந்த ஒர்க் ஷாப் ரோடே வாகன போக்குவரத்து போக முடியாமல் ஸ்தம்பித்து போனது, போலீசார் நடத்திய லத்தி சார்ஜ், அடிப்பட்டு காலில் ரத்தம் வழிந்து ஓடும் போதும் வரிசையில் மீண்டும் நின்று டிக்கெட் வாங்குவதற்கு முயற்சி செய்த மனிதன், தொடர் வெற்றிகளால் பூரிப்படைந்து அரங்கத்திற்கு வெளியே ஆரவாரிக்கும் ரசிகர்கள், அந்த நேரத்தில் 70 நாட்களை கடந்து புதிய வசூல் சாதனை படைத்துக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வசூல் விவரங்களை குறிப்பிட்டு ரசிகர்கள் அடித்திருந்த கையால் தொட்டாலே கொதிக்கும் அனல் வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்கள், எப்படியோ உள்ளே நுழைந்து டிக்கெட் வாங்கியது, சுதந்திர பூமியில் பாடலின் அறிமுக காட்சி முதல் தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு தர்மம் இங்கே என்று பதில் கொடுத்திருக்கிறார் என்று முத்துராமன் பேசும் இறுதிக் காட்சி வரை நிலவிய தியேட்டரின் internal atmosphere, இவற்றையெல்லாம் விவரிக்க வார்த்தைகளே சிக்கவில்லை என்பதுதான் உண்மை.
இன்று இருக்கும் எதிர்பார்ப்பில் இது மீண்டும் நிகழ்ந்தால் வியப்பில்லை..
காரணம்... படம் அப்படி...
முன்னோட்டம்... அட்டகாசம் சுந்தரராஜன் சார்.. இதன் பின்னணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றி. தனிப்பட்ட முறையிலும் நடிகர் திலகம் இணைய தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டமைக்காக மீண்டும் நன்றி.
தொடரும்....
திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழின் நிழற்படங்கள்..
http://i1146.photobucket.com/albums/...ps6ea08425.jpg
http://i1146.photobucket.com/albums/...ps487b84c4.jpg
நமது திரி நண்பர்கள் அனைவரும் பங்கு கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
Quote:
Quote:
Scene Stealer Sivaaji Ganesan
ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே
புதிய நெடுந்தொடர் பகுதி 2 தெய்வமகன்
Quote:
Quote:
எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப் புதிராகும்.
தெய்வமகன் (1969)
நடிகர்திலகத்தின்முப்பரிமாணத்தையும் முழுமையாக வெளிக்கொணர்ந்த திரைக்காவியம். தன்னைப்போலவே குரூபியாகப் பிறந்து விட்ட தலைச்சன் பிள்ளையை வாழ்க்கையில் தனது தோற்றக்குறைபாட்டால் தான் அனுபவித்த சித்திரவதைகளை சந்தித்த சோதனைகளை பட்ட அவமானங்களை அவனும் அனுபவிக்கக் கூடாதே என்னும் அரைவேக்காடான எண்ணத்தால் அக்குழந்தையை கொன்றே விட எண்ணும் பரிதாபமான குற்ற உணர்வுகளால் நித்தமும் அலைக்கழிக்கப்படும் ஒரு மனித ஜீவனை இந்த அளவு உலகின் எந்த ஒரு ஆஸ்கார் மகுடம் தரித்த நடிகனும் வெளிப்படுத்தியதில்லை.
Quote:
Quote:
ஒரே நடிகன் மூன்று வெவ்வேறு குணாதிசயங்களாக திசுப்பெருக்கம் செய்து மூன்று பாத்திரங்களையுமே மூன்று சிவாஜிகள் நடித்திருக்கிறார்கள் என்று பார்ப்பவர் அதிசயிக்கும் வண்ணம் நடித்துக் காட்டிய நிகழ்வும் அதுவரை இல்லை அதற்குப் பின்னரும் இல்லை தந்தை சிவாஜியின் மெய்சிலிர்க்க வைக்கும் வேதனை முகபாவனைகள் மூத்த மகன் சிவாஜியின் தாழ்வுமனப்பான்மையுடன் தன்னிரக்கம் நிறைந்த மனத்துடிப்பை அவரே வேறுபடுத்தியிருக்கும் கற்பனைத்திறன் இளையமகனின் அழகிய தோற்றமும் பணக்காரப்பிள்ளையின் பவிசுகளும் ........ இந்த சாதாரண கறுப்புவெள்ளைக் காவியம் உண்டுபண்ணிய அசாதாரணமான நடிப்புப் பிரளயத்தை வர்ணிக்க வார்த்தைகளேது?
இதயத்திருட்டு 2 வென்றவர் தந்தையே / கல்வெட்டு 1
குற்ற உணர்ச்சிகளின் மொத்த உருவமானாலும் உழைப்பின் மூலம் தான் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தை இன்னும் விளையாட்டுத்தனம் அகலாத இளைய மகன் கட்டிக் காப்பானா இல்லை அழித்து விடுவானா என்ற கவலையில் ஆழ்ந்து குழம்பிக்கிடக்கும்போது தான் முற்றிலும் மனதிலிருந்து எடுத்துவிட்ட மூத்த மகன் குத்துக்கல்லாக முன்னே வந்து நின்று குத்திஎடுக்கும்போது தந்தையின் உணர்ச்சி சிதறல்கள் எப்படியிருக்கும்? இரும்புப் பெட்டியே போதும் இதயம் தேவையில்லை என்று உணர்ச்சிப் பிழம்பாக மூத்த மகன் வறுத்து எடுக்கும்போது கூத்திலே கோமாளி போல இளைய மகனும் உள்ளே நுழைந்து தந்தையின் காசோலையை கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தால் அந்தத் தந்தை மனம் என்ன பாடு படும்? பணம் யாருக்கு உரிமையாக போய் சேர வேண்டுமோ அவனே தம்பிக்கு அது போய்ச் சேரும்போது காட்டும் நெகிழ்வான மகிழ்வு ....தந்தையின் மனசாட்சி ஆற்றாமை.....இளையமகனின் பொறுப்பில்லாத்தனம்.....இவை அத்தனையும் ஒரே காட்சியில் கண்டிட நடிப்பு விஸ்வரூபமெடுத்த நடிப்பின் இறைவனே உன் ரசிகனாக இருப்பதே என் கண்களும் இதயமும் செய்த புண்ணியம்!!
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk
இதயத்திருட்டு 2 / கல்வெட்டு 2
தன்னைப் பெற்று ஒதுக்கியவர்கள் இருக்குமிடம் தெரிந்து பாசப் பரிதவிப்புடன் அவர்களைப்பார்க்க செல்லும் மகன் அன்னையைப் பார்த்து மகிழும் தெய்வமகன் ........தம்பியின் அழகு வதனத்தைப் பார்த்துப் பூரிக்கும் அண்ணன் ....ஆனால் தந்தையைப் பார்க்க நேரும்போது பெறுவது அந்த அவசரப் புத்திக்காரரிடமிருந்து துப்பாக்கிக் குண்டையே! தன்னைக் கொல்லாது வளர்த்திட்ட தெய்வமான டாக்டரிடம் தனது குடும்பத்தை பார்த்துவிட்ட மகிழ்வையும் தந்தையின் பரிசையும்என்ன ஒரு நடிப்பு ஜாலத்துடன் பகிர்ந்து நமது உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார் !!
https://www.youtube.com/watch?v=kNskMory0aE
நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -
புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3892a.jpg
தர்மம் எங்கே படத்தைப் பற்றி கலைச்செல்வி ஜெயலலிதா என்ன கூற விரும்புகிறார்?
Quote:
"தர்மம் எங்கே" ஒரு நல்ல படம் - பிரம்மாண்டமான தயாரிப்பு. இப்படம் மகத்தான வெற்றி பெற ரசிகர்கள் பேராதரவு தரவேண்டுமென வேண்டி முடிக்கிறேன்
முழுதும் படிக்க இதோ இந்நிழற்படம்... ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
http://i1094.photobucket.com/albums/.../GEDC3899a.jpg
... தொடரும்...
Dear Yukesh Babu. It is really the rarest of rare photos...how resourceful you are in keeping such precious gems with you!! It is really a good contribution since this photo can indicate a nostalgia on many unspoken things. However, it could have been better and this exhibit becomes more meaningful if you have added some script as regards the situation and significance to this timeless asset and legend. Kudos to your continued efforts to keep pace between our threads in order to churn out the cream in an optimistic way.
regards,, senthil
தெய்வமகன் திரைப்படத்தில் நடிகர்திலகம் பட்டையைக் கிளப்பி இமயத்தின் சிகரங்களாக்கிய நடிப்பின் கல்வெட்டுக் காட்சிகள்!!!Quote:
Quote:
நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர் PART 2 தெய்வமகன்Quote:
பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!
தெய்வமகன் திரைப்படத்திலும் புதியபறவை போலவே ஒவ்வொரு காட்சியும் இதயத் திருட்டே ! ஆனாலும் என் மனதில் என்றும் நீங்காமல் ஒருவிதமான அதிர்ச்சி கலந்த சிகரக்காட்சியாக நான் பதிவு செய்தது மூத்தமகன் கண்ணன் பாச ஏக்கங்களுக்கு வடிகாலாக தனது குடும்பத்தைக் காண சென்று உறக்கத்தில் இருக்கும் அன்னையைப் பார்த்த பிறகு தன்னைப்போல் அல்லாது அழகிய தோற்றத்துடன் இருக்கும் தம்பியுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது விளையாட்டாக அவன் தரும் குத்துக்களை மனநிறைவுடன் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு திரும்பும்போதுQuote:
பட்டையை கிளப்புதல் (pk )2 : தெய்வமகன் நடிப்பிமைய சிகரம் (peak) 2 : கஞ்சன்ஜங்கா
Quote:
......Quote:
தந்தையே தன்னிலை அறியாது திருடனென்று கருதி யாரும் எதிர்பாரா வண்ணம் மகனையே சுடும் காட்சி ! இன்றுவரை என்னால அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!! நூறுமுறை பார்த்துப் பார்த்து ரசித்து உருகியபடம்தான் ஆனாலும் ஒவ்வொருமுறை இந்தக்காட்சியைப் பார்க்குபோதும் திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்று தந்தையார் சிவாஜியின் கையிலிருக்கும் துப்பாக்கியை 'பறக்காஸ்' ஸ்டைலில் தட்டிவிடத் தோன்றும்!!! இந்தக் காட்சியிலும் மூன்று சிவாஜிகளின் வெவ்வேறு வகைப்பட்ட முத்திரை நடிப்புக்களே (மூத்த மகனின் அதிர்ச்சி மேலோங்கிய உடல் மன வேதனை, இளைய மகனின் 'என்ன நடக்குது இங்கே' பாணியிலான பயம் கலந்த அதிர்வு, தந்தையின் இனம் புரியாத தடுமாற்றம்) இப்படத்தின் சிகரமாகும்.
Quote:
பட்டையை கிளப்புதல் (pk )2 : தெய்வமகன் நடிப்பிமைய சிகரம் (peak) 3 : நந்தாதேவி
குழந்தையைக் கொன்றுவிடு என்று தான் சொன்னதை மறுக்கும் டாக்டர் நண்பனை நோக்கி கையை நீட்டி கண்ணைமூடி காலால் தரையை உதைக்கும் காட்சியில் நம் நெஞ்சில் விழுகிறதே அந்த உதை !
அதே டாக்டருடன் வாக்குவாதம் செய்யும் வளர்ந்த மூத்தமகன் கண்ணன் ஜீன் (மரபணு) குணம் மாறாது அதே பாணியில் கையை நீட்டி காலால் உதைத்து அதகளம் செய்யும் காட்சியில் நம் மனம் படுகிறதே வதை !!
உலகின் எந்தவொரு கலைஞருக்கும் கிடைக்காத இவ்வகை நடிப்புப் பாக்கியம் நாம் காணப்பெற்றது பூர்வஜென்ம நற்காரியங்களின் பலனே!! அகில உலகமும் சென்று வந்தாலும் இப்படியொரு நடிகமன்னனை இனி எங்கு காண்போம்?
இக்காட்சியமைப்புக்கான காணொளி கிடைக்காத காரணத்தால் யூ ட்யூப் சென்று முழுபடத்தையே கண்டுகளித்திட வேண்டுகிறேன் !!!
Quote:
Quote:
The End of Part 2, but NT comes down to foothills to celebrate his evergreen nostalgia on Pudhiya Paravai.
பழைய பறவை போல ஒன்று பறந்தே வந்திடினும் புதியபறவை நமது நெஞ்சம் மறந்து போய்விடுமா?!
நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -
புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்
தர்மம் எங்கே... சகோதரி சாரதா அவர்களுக்குள் எந்த அளவிற்கு ஆக்கிரமித்திருந்தது என்பதை எடுத்துக் கூறும் பதிவு நம்முடைய நடிகர் திலகம் திரி பாகம் 8 பக்கம் 48ல்
சகோதரி சாரதா மேற்காணும் பதிவில் குறிப்பிட்டிருந்த அவர்களுடைய வலைப்பதிவிலிருந்து..Quote:
...
சாதனைத் திரைப்படங்களின் முதல் வெளியீட்டு தின நினைவுகளைக் கொண்டாடி வரும் வேளையில், எனக்குப்பிடித்த படங்களில் ஒன்றான 'தர்மம் எங்கே' படம் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று எண்ணியிருந்த வேளையில், அனைவரும் மிக அற்புதமாக நினைவுகூர்ந்து அப்படம் சம்மந்தப்பட்ட விளம்பரங்களையும், ஸ்டில்களையும் அள்ளி வழங்கி, அப்படம் பற்றித்தெரியாத பலருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. முன்பெல்லாம் தர்மம் எங்கே பற்றி யாரும் இங்கே பேசாதபோதும், நானும் முரளியண்ணாவும் அப்படம் பற்றிய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டேயிருப்போம். அதன் தொடர்ச்சிதான் என் வலைப்பதிவில் இடம் பெற்ற அப்படம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.
...
மேற்காணும் வலைப்பதிவிற்கான இணைப்பு - http://ennangalezuththukkal.blogspot...g-post_20.htmlQuote:
http://2.bp.blogspot.com/_0EOhWaq0qv...am+Enge-bw.jpg
இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.
கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.
தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.
இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள். (தர்மம் எங்கே வெளியான காலத்தில் தனக்கேற்பட்ட உணர்வுகளை அவரே சொல்கிறார். அவர்து வார்த்தைகளில்.. இதோ)
"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (தற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் சனிக்கிழமை களில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. அது போக கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".
.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
இனி எனது விளக்கம் தொடர்கிறது
‘தர்மம் எங்கே’ முழுக்ககதையும் வரிசையாக நினைவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சில முக்கியமான காட்சிகள் நினைவில் வந்துபோகிறது. அதில் சில....
படத்தின் முன்பாதியில், நள்ளிரவில் சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).
சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.
படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட (நம்பியார் இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் தோன்றுவது இந்த இடத்தில்தான்) சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் கொட்டடிக்குள் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பதும் நல்ல கட்டங்கள். (அவ்வளவு பெரிய, பெரிய பாம்புகள், தன் உடம்பின் மீது ஏறி ஊரும்போது நம்பியார் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாரே. எவ்வளவு தைரியம் வேண்டும்?. நடிக்க என்று வந்துவிட்டால் எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது?)
நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.
'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்துக்கள். ஆனால் கண்ணில் காணக்கிடைக்கவில்லை. 'SHIVAJI HITS' என்ற பெயரில் VCD / DVD தயாரிப்பவர்கள் கூட இதுபோன்ற பாடல்களைக் கண்டுகொள்வதில்லை.
'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).
அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).
இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...
'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'
நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).
'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.
1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.
'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......
'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...
நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.
dharmam enge ninaivalaigal suprb. In north madras MAHARANI it was screened and the crowds were overflowing traffic came to standstill for some time since the main road was very narrow, first time they have opened the back doors to avoid traffic jam.
as said because of continues suuessful movies from 71 and poor story vale it has not clicked.
thanks raghavender for taking me to 1972 july.
Quote:
Quote:
நடிகர்திலகத்தின் திரைவரலாற்றில் திலகமான படம் புதிய பறவையே! scene by scene frame by frame ரசிகர்களின் கரவொலி கேட்டுக்கொண்டே இருக்கும் வண்ணம் தனது நடிப்பு முத்திரைகள் அனைத்தையும் அழுத்தம் திருத்தமாக நடிகர்திலகம் பதித்திட்ட அவர் வாழ்நாள் பெருமைக்காவியம் புதிய பறவையே!!
அந்த காலகட்டத்தில் இமேஜ் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது வேறு எவரும் ஏற்று நடித்திட அஞ்சும் கதாநாயகனின் கறுப்புப் பக்கத்தை தனது உயரிய நடிப்பால் உயிர் கொடுத்தார் நடிகர்திலகம். அவர் நடிப்பின் பரிணாம பரிமாணங்கள் பற்றி விளக்கிட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதான அர்த்தமே புதியபறவை. நிச்சயமாக வேறு எந்தப் படத்திலும் அவருக்கு இத்தனை சவால் இத்தனை Home Work கிடையாது. அருமையான வண்ணப் பதிவில் இனிமையான இசை பாடல்கள் நிறைந்த சூப்பர் சஸ்பென்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் வழக்கம்போல நமது இதயத்தைக் கொள்ளைகொண்ட கல்வெட்டுக் காட்சிக் கோர்வையையும் அவர் பட்டையைக் கிளப்பிய நடிப்பால் சிகரமாக உயர்ந்த காட்சிகளையும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொகுத்தளிக்கிறேன்
புதியபறவை திரைப்படத்தில் நடிகர்திலகம் பட்டையைக் கிளப்பி இமயத்தின் சிகரங்களாக்கிய நடிப்பின் கல்வெட்டுக் காட்சிகள்!!!Quote:
Quote:
நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர் PART 3 புதியபறவைQuote:
பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!
கடந்த கால நினைவுகளை அடியோடு ஒதுக்கிவிட்டு பழைய பறவை சௌகாரையும் மனதிலிருந்து தூக்கி விட்டு புதிய பறவை சரோஜாதேவியிடம்இதமான புதிய உறவை உண்டாக்கிட முயலும் போது பழைய பறவை போலவே இன்னுமொரு சௌகார் வந்து நின்று பார்த்த ஞாபகம் இல்லையோ என்று சீண்டும்போது தன் வாழ்வின் கறுப்புப் பக்கம் மனசாட்சியை வறுத்தெடுக்க புதிய சௌகாரை நடிகர்திலகம் எதிர்கொள்ள இயலாமல் சரோஜாவிடம் படும் பாடு .......... அவர் மனநிலை மாற்றங்கள்...... பாடலின் இறுதியில் அவர் அடிக்கும் பஞ்ச்..... நம் இதயத்தில் அல்லவா கன்னக்கோல் போட்டு திருடுகிறார் நடிகர்திலகம்!! அந்த உறைந்த நடிப்பும் நிறைந்த துடிப்பும் மின்னல் அறைந்த கல்வெட்டுக் காட்சியமைப்பே!!Quote:
பட்டையை கிளப்புதல் (pk ) 3 : புதிய பறவை நடிப்பிமைய சிகரம் (peak) 4 : K10
Quote:
Quote:
பார்த்துக்கொண்டிருக்கும் நாமே அவராக மாறி அவர் அனுபவிக்கும் சித்திரவதைகளை நாமும்சீட்டின் நுனிக்கே வந்து அனுபவிக்கும் வண்ணம் தன் நடிப்பைப் பிழிந்தெடுக்கிறார் நடிகர்திலகம்
https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE
Quote:
பட்டையை கிளப்புதல் (pk ) 3 : புதிய பறவை நடிப்பிமைய சிகரம் (peak) 5 : Kailaash
காலத்தால் அழியாத புதிய பறவை காவியத்தின் சிகரப்பாடலான பார்த்த ஞாபகம் இன்னொரு சூழலில் நடிகர்திலகத்தின் அட்டகாசமான ஜேம்ஸ் பாண்ட் டக்ஷிடொ கோட்சூட்டில் ஒருகையில் சிகரெட் மறுகையில் மதுக்கோப்பை அனால் பார்வையோ கிளாமர்காட்டும் சௌகாரிடம்.....இருந்த இடத்திலிருந்தே நடிப்பின்சிகரத்தைத் தாண்டுகிறாரே !
https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M
Quote:
Quote:
Scene Stealer Sivaaji Ganesan
ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே
புதிய நெடுந்தொடர் பகுதி 3 புதியபறவை
Quote:
Quote:
எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப் புதிராகும்.
Quote:
ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் புதையுண்ட ரகசியங்கள் எத்தனையோ நீர்க்குமிழி வாழ்வில் ஏதோ ஒரு சமயம் அந்த ரகசியம் நீர்ப்பரப்புக்கு வந்தே தீரும் என்பது விதி சில ரகசியங்கள் தவறிழைப்பதால் அந்தத் தவறையும் மறைக்க நினைப்பதால் வாழ்வின் கறுப்புப் பக்கங்களாக மாறி அந்த மனிதன் ஒவ்வொரு நொடியும் தனது மனசாட்சியின் குத்தலுக்காளாகிறான் புதிய பறவை திரைப்படத்தில் எப்படிப்பட்ட சதிவலை பின்னப் பட்டு நாயகனின் வாயாலேயே அந்த ரகசியத்தின் பின்னணி வெளிக்கொணரப்பட்டு நீதி வெல்கிறது என்பதே முழுக் கதையின் ஒருவரி வடிவம் உளவியல் ரீதியில் யாராலும் எளிதில் அணுக இயலாத இப்பாத்திரத்தின் நுட்பமான நடிப்பு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் எவ்வளவு இலகுவாக கையாண்டு இந்த உலகம் சுற்றும்வரை தானே இணையற்ற நடிகமன்னன் என்பதை நிரூபிக்கிறார்!?
இதயத்திருட்டு 3 : புதிய பறவை க்ளைமாக்ஸ்! கல்வெட்டு: 1
ஒரு திரைப்படத்தில் சஸ்பென்ஸ் எப்படி நேர்த்தியாக காக்கப்பட வேண்டும் என்பதற்கு ஹிட்ச்காக் படங்களின் தர வரிசையில் அமைந்த சுறுசுறுப்பான விறுவிறுப்பான திரில்லர் புதியபறவை (இதற்கப்புறம் அதேகண்கள், நடுஇரவில்....குறிப்பிடத்தகுந்த படங்கள்) இந்தக் காட்சியை நடிகர்திலகம் போல இதயத்தை திருடி மனங்களில் மின்னலின் கல்வெட்டாக்கிட வேறு எந்த உலகமகா நடிகனாலும் இயலாது.
Quote:
என்ன அருமையான நாடகம்...... என்ன அலங்காரமான அமைப்பு.....என்ன அழகான நடிப்பு!!!
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ
இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 2 :
Quote:
எங்கே நிம்மதி.....பாடல் வரிகள்...அதிரடி இசைக் கோர்ப்பு.....அற்புதவடிவான நடிப்பு. குழப்பமான சூழலில் நிம்மதி வேண்டி மயக்க நிலையில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் கனவுநிலை பாடல் காட்சியமைப்பே எங்கே நிம்மதி Signature Song and Signature Poses of NT
https://www.youtube.com/watch?v=MzOvqkyc0_0
இதயத்திருட்டு 3 புதிய பறவை / கல்வெட்டு 3 :
Quote:
மெல்ல நட...பாடல்....பனியன் போடாமல் வெண்ணிற ஷர்ட் பேன்டில் இதயங்களைக் கவ்வுகிறார் நடிகவேந்தன்
https://www.youtube.com/watch?v=a3SvjgZmyv0
இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 4
Quote:
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது இதுவே புதியபறவை நாயகனின் நிலை தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் நண்பர் யார் விரோதி யார் துரோஹி யார் ,,,ஏதுமறியாமல் பரமபத ஏணியில் ஏறிக்கொண்டே அவ்வப்போதில் கடிவாங்கி கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் போன்ற பாத்திரப்படைப்பை உள்வாங்கி படத்தைத் தாங்கி நிற்கும் நடிகர்திலகம் ராதாவை வெளியேற்ற பணம் கொடுத்து அம்முயற்ச்சியில் தோல்வியுற்று மனம் வெதும்பும் காட்சி......நடிகர்திலகத்தின் நிழலைக்கூட யாரும் தீண்ட முடியாது என்பதை எடுத்துக்காட்டும் அருமையான கல்வெட்டுக் காட்சியமைப்பே!!
இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 5
Quote:
ஒவ்வொருமுறை சரோஜாதேவியுடன் ரயில்வே கிராஸிங்கை கடக்கும் போதும் தன்னைத் துரத்திக்கொண்டே இருக்கும் பழைய பறவையின் நினைவுஏற்படுத்தி அலைக்கழிக்கும் ரத்தக் கொதிப்பு காட்சியில் நமக்கு எகிறுகிறது High Blood Pressure!
When I get appropriate footage of videos for these two scene stealers, I will upload them alongside this posting. Kindly bear with me friends!!
:-DQuote:
The End of Part 3 Pudhiya Paravai. But ....:yessir:... NT comes back On His Majestic Scene Stealing Service in the greatest ever epic filmed in Tamil and the unparalleled rerun record breaker......and my bloodline movie KARNAN!!
கோவை மாவட்டத்தை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகரும் சமூக வலை தளமான முகநூலில் active ஆக இயங்கிக் கொண்டிருப்பவரும் தமிழக அரசின் வெகு முக்கியமான துறையில் சிறப்புற பணியாற்றி சிறிது காலத்திற்கு முன்பு பணி ஒய்வு பெற்றவரும் கடந்த சில வருடங்களாக நமது திரியின் மௌன வாசிப்பாளருமான திரு சுவாமி துரை வேலு அவர்கள் நமது மன்றத்திலே இணைந்துள்ளார்கள். அவரை மனமார வரவேற்புதடன் அவரின் அனுபவங்களை நடிகர் திலகம் பற்றிய ரசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ஸ்வாமி துரைவேலு சார்
வருக வருக தங்களுடைய வருகை இத்திரிக்கு புதிய பரிமாணத்தைத் தரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
http://img.dinamalar.com/data/uploads/E_1380273801.jpeg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர், எங்கும் எப்போதும் அவரைப் பற்றி சொல்ல மறக்காத, நமது NTFANS அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களுக்கு நம் மய்யம் திரி நண்பர்கள் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நடிப்புச் சிங்கத்தின் சங்க நாதமாக ஒலிக்கும் திரு ஒய் ஜி மகேந்திரன் அவர்களது பிறந்த நாளில் அன்பின் ராகவேந்திரன் அவர்களை அடியொற்றி என் வாழ்த்துக்களை
உரித்தாக்குகிறேன் ஒரு வேண்டுகோளுடன் .......அவர் மனது வைத்தால் நடிப்பிலக்கணத்தின் மிகச்சிறந்த நடிப்புப் பாடங்களைத் தொகுத்து ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வேண்டிய வழிமுறைகளை ஒருமுகப்படுத்திட இயலும்......
அவரது முயற்சிகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பினை திரி சார்பாக நல்கிட விழைகிறோம்
Welcome mr swamy duraivelu sir
Many more happy returns of the day y g mahendra sir
Quote:
காதல் கசக்குதையா / (சந்தேக) பிசாசு PART 1 தெய்வப் பிறவி
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல நியாயப் பிசாசு! ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளிவாய் மாயப்பிசாசு!!
காதலிக்கும்போது மேஸ்திரி என்னவெல்லாம் ஆக்ஷன் தருகிறார் எப்படியெல்லாம் கேர் எடுக்கிறார்......... என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பைய்யா உமது காதல் வழியும் சிரிப்பு!!Quote:
Quote:
காதல் உணர்வுகள் மென்மையானவை. கண்டிப்பாக கல்யாணத்துக்கு முன் இனிமையானவையும் கூட! கல்யாணத்தின் போதே இச்சுவை துவர்ப்பாகவும்உவர்ப்பாகவும் மாறி பின் வாழ்க்கையே கசப்பாகி விடும் சாத்தியக்கூறுகளும் அதிகமே!! காதலிக்கும் போது ருசிகண்ட பூனை ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சூடுகண்ட பூனையாவதேனோ?! நடிகர்திலகமும் இதற்க்கு விதி விலக்கல்ல !!!
https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA
https://www.youtube.com/watch?v=shPRgjoiJhw
கல்யாணத்துக்கு பிறகு சந்தேக பிசாசு ஆட்டி வைக்கும்போது.......என்ன ஒரு கடுப்பு!!!
https://www.youtube.com/watch?v=GwIwZbwhmoI
https://www.youtube.com/watch?v=nDdif7Tqyug
Quote:
The End of Part 1 on a mini series.....but NT wants to clear his doubts with M. Banumathi and Padmini in Thillaana Mohanaambaal and Saroja Devi in Aalayaamani!!
செலுலாய்ட் சோழன்
சுதாங்கன் From his Face Book post
வழக்கமாக நான் மேடையில் பேசுவது எதையும் குறிப்பு வைத்துக்கொள்வதில்லை. ஆனால் `பாசமலர்’ படத்தை இப்போது பார்த்தபோது எனக்கு பார்வை கிடைத்தது.
இந்த படத்தில் ஏழை மில் தொழிலாளியான சிவாஜி தீடிரென்று பணக்காரராகிவிடுவார். முதலாளி ஆனதும் ஆங்கில கற்றுக்கொள்கிறார். சிவாஜிக்கு எந்த மொழியில் வசனம் சொல்லிக்கொடுத்தாலும் அதை அவர் அப்படியே திருப்பி சொல்லிவிடுவார். அது ஒன்றும் வியப்பான விஷயமில்லை!
ஆனால் பணக்காரன் ஆனதும் அவரது நடை, உடை, பாவனை மாறும். நடையும் பாவனையும் கூட அவர் ரத்தத்தோடு ஊறியது.
அந்த உடை விஷயம்தான் என்னை இந்த முறை ஈர்த்தது!
அப்படியே நினைவுகளை பின்னோக்கி ஒடவிட்டேன்.
எத்தனை படங்கள், எத்தனை விதமான கதாபாத்திரங்கள், எத்தனை விதமான உடைகள். எல்லா உடைகளுமே அவருக்கு பொருந்துகிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் தொகுத்த ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது! சிவாஜி ` ஒரு வரலாற்றின் வரலாறு’. அருமையான தொகுப்பு! அதில் ஒரு பகுதி
பத்திரிகையாளரின் பார்வையில் சிவாஜி!
http://i1234.photobucket.com/albums/...ps950e0ad8.jpg
1.10.2000 நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை ரியல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தார் சென்னை காமராஜர் அரங்கில் நடத்தினார்கள்.! அதில் நானும் கலந்து கொண்டேன். அங்கே நான் பேசியதை `DIRECTORS DELIGHT’ என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள்!
அன்று நான் பேசியது இதுதான்! ` பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடு’ இது அமெரிக்க பழமொழி!
`பசியோடு இருப்பவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு’ இது சீனப் பழமொழி.
நடிகர் திலகம் சீனப் பழமொழியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு, சில பல ஆயிரங்கள் பணமாகக் கொடுத்து, அன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்வதில் நிறைவு அடையாதவர்.
மாறாக தன்னை நாடி வந்தவர்களிடம் புதைந்துள்ள ஆற்றலை திறமையை வெளிக் கொணர்ந்து, அவர்களை, நடிகர்களாக, கதாசிரியர்களாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக திரையுலகில் அறிமுகப்படுத்தி, அவர்கள் யாருடைய உதவியையும் இன்றி தன் சொந்தக் கால்களில் நின்று வெற்றி பெற வைத்தவர்.
சிவாஜி ஒரு DIRECTORS DELIGHT! வயது, அனுபவம் இவற்றில் மிக இளையவராயினும், அவர்கள் இயக்குனர் என்கிற அந்தஸ்தில் இருந்தால், அவர்களிடம் பணிவாக, பொறுமையாகப் பணியாற்றுவது சிவாஜியின் சிறப்பு.
தன்னுடைய நடிப்பு மட்டுமே பிரதானமாக வெளிப்பட வேண்டும் என நினைக்காமல், இயக்குனரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, காட்சித் திரையில் வெளிப்பட வேண்டும் என நினைப்பவர் சிவாஜி.
HE IS NOT ONLY DIRECTOR’S DELIGHT BUT ALSO COSTUMERS & MAKE-UP MAN’S DELIGHT’
ஒப்பனைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம், சிவாஜியின் அழகான முகம். எந்த வேடத்திற்கும் ஏற்ப அமைந்தது இறைவன் அவருக்கு கொடுத்த வரம்’
இது நான் அன்றைய கூட்டத்தில் பேசியதை எடுத்து இந்த புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.
இப்போது பாசமலர் பார்த்த போது நான் ஒன்றும் தவறாக பேசவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன்.
ஒரு முறை சிவாஜியுடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்` உங்களை விட `பாசமலர்’ படத்தில் சாவித்திரி நல்லா நடிச்சு உங்களை தூக்கி சாப்பிட்டுட்டாங்கனு தோணுது’ என்றேன்.
` அதுதான் சத்தியம். அவ இல்லாம `பாசமலர்’ படம் ஏது’?’ இது சிவாஜி உடனே சொன்ன பதில்
சிவாஜியே தொடர்ந்தார்,` அந்த படம் என்னதான் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து எடுத்த படமாக இருந்தாலும் கூட அது பெண்கள் சப்ஜெக்ட்! நான் மட்டும் அந்த கதையில நல்லா நடிச்சா போதாது, அந்த தங்கை எனக்கு இணையாகவோ, என்ன மிஞ்சறமாதிரியோ இருக்கணும். அப்பதான் அந்த கதை ஜெயிக்கணும்னு படம் எடுக்கும் போதே நாங்க எல்லோரும் பேசிக்கிட்டோம். சில காட்சிகள் எடுக்கும் போது, டைரக்டர் சொன்னதை விட அதிகமாக நடிப்பா சாவித்திரி! காட்சி எடுத்து முடிஞ்சதும் ஒரு நாள் பீம்பாய், பீம்சிங்கை நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம். கேட்டார் இந்த காட்சியை வேணும்னா இன்னொரு தடவை எடுத்திடலாமா?’ ஏன்னு கேட்டேன். இல்லை இந்த சீன்ல உங்கள் பர்ஃபாமென்ஸ் …’ என்றபடி இழுத்தார் பீம்பாய் ` நான் சொன்னேன், ` இதோ பாருங்க டைரக்டரே இந்த படத்தில் சிவாஜியை விட சாவித்திரி நல்லா நடிச்சிருக்கான்னு சொன்னாதான் இந்தப் படம் நிக்கும். டைரக்டரே இந்த படத்தை பொறுத்தவரையில் சிவாஜியை மறந்துடுங்க. இந்த படம் முடிகிறவரையில் நான் அவளுக்கு அண்ணன். தன் தங்கை மேலே உயிரையே வெச்சிருக்கிற ண்ணன், தன் தங்கை தன்னை விட படுசுட்டியா,புத்திசாலியா இருக்கணும்னு நினைப்பான்’ என்றாராம்! அதுதான் சிவாஜி! அவருக்கு படத்தின் கதாபாத்திரங்கள் தான் முக்கியம்!
அடுத்த அந்தப் படத்தின் அவர் முக்கியமாக இசையமைப்பாள்ர்கள் விஸ்வனாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்!
இப்போது நான் யோசித்துப் பார்க்கிறேன்! அந்த முதல் பாடல், சாவித்திரி தூங்கிக் கொண்டிருப்பார். தங்கையின் முகத்தை பார்த்தபடியே அண்ணன் கனவு காணும் பாடல்தான் `மலர்களைப் போல தங்கை உறங்குகிறாள்! அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்று பாடல் துவங்கும்.
அடுத்த சிலவரிகளில் `அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்’ என்று அந்த் அண்ணன் கற்பனையில் மிதப்பான்! ஏழைக் குடிசையில் படுத்துக்கொண்டிருக்கிறாள் தங்கை, ` கலைந்து கனவுகள் அவள் படைத்தாள், அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்; என்கிற வரிகள் வந்தவுடன் காட்சி மாறும், ஏழை சிவாஜி பார்க்க, ஒரு பணக்கார சிவாஜி, புகை மண்டலங்களோடு போய் ஒரு ஆடம்பர கட்டிலில் படுத்திருப்பதை பார்ப்பார்! வரிகள் முடிந்ததும், பாட்டின் பின்னனி இசை வரும். இப்போது அந்த பணக்காரக் கட்டிலில் படுத்திருந்த சாவித்திர், எழுந்திருப்பார், இப்போது ஒரு ஊஞ்சலில் ஆடுவார்! உடையில்,உடல் ஆபரணங்களில் ஒரு பணக்கார மிடுக்கு தெரியும். ஒரு பெண் அந்த பணக்கார சாவித்திரியின் ஊஞ்சலை ஆட்டிவிடுவாள். இப்போது மூன்று ஊஞ்சல்! மூன்று சாவித்ரிகள்! எதிரே அண்ணன் சிவாஜி நடந்து வருவார்!
`மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை, மங்கல மேடையின் பொன்வண்ணம் கண்டான்! மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான், மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்’
இப்படி போகும் வரிகள்!
காட்சிக்கான பாடலா! இசைக்கான வரிகளா, வரிகளுக்கான காட்சிகளா ?
சில வரிகளில் கண்ணதாசன் ஒரு அசத்து அசத்தியிருப்பார்!
இரு திலகங்கள் ஒரு மேடையில். ...
http://i1170.photobucket.com/albums/...pse73481c9.jpg