வாசு சார்,
கையை கொடுங்கள்! நாயகியர் தொடரிலேயே இதுவரை நீங்கள் பதிவிட்டதிலேயே அபிநய சரஸ்வதிதான் டாப்! எந்தப் படத்தையும் விடாமல் அதிலும் அந்தப் படங்களின் ஹைலைட்டான காட்சிகளையும், பாடல்களையும் குறிப்பிட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள். நீங்கள் சொன்னது போல் எனக்கும் மிகவும் பிடித்த ஜோடிகளில் இதுவும் ஒன்று. சரித்திரம் படைத்த பாகப்பிரிவினை, பாலும் பழமும் [ஆஹா! இந்தப் படம் தியேட்டரில் வராதா?] மற்றும் புதிய பறவை ஆகியவற்றை சிறப்பாக குறிப்பிட்டு கல்யாணியின் கணவன் படத்தில் எனது ராஜ சபையினிலே [எனக்கு மிகவும் பிடித்த பாடல்- என்ன ஸ்டைல்!] ஸ்டில் -ஐயும் இன்னொரு முத்தான பாடலான ராதே உனக்கு கோபம் ஆகாதடி [குலமகள் ராதை -மற்றுமொரு அருமையான படம்] scene-ல் வரும் அந்தக் கண்ணாடியில் பிம்பம் தோன்றும் காட்சியை பதிவிட்டு தூள் கிளப்பி விட்டீர்கள்!
திரியில் வரும் இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சாமல் தொடருங்கள் உங்கள் பணியை!
கார்த்திக்,
உத்தமன் பதிவு அருமை என்று சொல்வது சீனியின் சுவை இனிப்பு என்று சொல்வது போல. நான் எப்போதும் ஒன்றை கவனித்திருக்கிறேன்! முதலில் உங்கள் பதிவு வந்தால், நீங்கள் சொல்லாத விஷயம் இருக்கிறதா என்று நான் பார்ப்பேன். அப்படியிருந்தால் அதை நான் பதிவிடுவேன். அது போலவே நான் முதலில் பதிவிட்டால் நான் குறிப்பிட விட்டுப் போன சில் விஷயங்களை நீங்கள் அழகாய் உள்படுத்தி பதிவிடுவீர்கள். உத்தமனும் அப்படிதான்!.மிக சிறப்பாக வந்திருக்கிறது! தொடருங்கள்!
அன்புடன்