http://i57.tinypic.com/idhef4.jpg
Printable View
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் , திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆரின்
" தொழிலாளி " ஒளிபரப்பாகிறது .
http://i62.tinypic.com/2zz3z8i.jpg
அற்புதமான பாடல்கள் இசைஅமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று இரவு 8 மணிக்கு
ராஜ் டிஜிடல் பிளஸ்சில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த " ரகசிய போலீஸ் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2zhh54j.jpg
இன்று பிறந்த காணும் மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் வி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம்...சினிமா...!
ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர்...!
அந்த கதை உருவான கதை..!
1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.
எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் …
” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ”
போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்...
காமராஜர் பதட்டத்துடன் தன் காரை விட்டு கீழே இறங்க முயற்சிக்க , தடுத்து விட்ட எம்.ஜி.ஆர்..காமராஜரிடம் இப்படிக் கேட்டாராம்....
“என்னங்க...ஏன் இப்படி தனியே வர்றீங்க...? செக்யூரிட்டி யாரும் இல்லையா? ”
எம்.ஜி.ஆர்.இப்படிக் கேட்கக் காரணம் என்னவென்றால் .... அப்பொழுது காமராஜர் முதல் அமைச்சர் ...
காமராஜர் சிரித்தபடி சொன்னாராம்...“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க ..? எனக்கு எதற்கு பாடி கார்டு ? ”
எம்.ஜி.ஆரும் புன்னகைக்க ..அப்புறம் கொஞ்ச நேரம் பேசி விட்டு இருவரும் பிரிந்து சென்றார்களாம் ....
காரில் ஏறிய எம்.ஜி.ஆர் நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தாராம்....
நெடுநேர சிந்தனைக்குப் பின் சொன்னாராம்... “ என்னோட அடுத்த படத்துக்கு ஐடியா கிடைச்சிட்டது ...நம்ம காமராஜர் ஐயாதான் ஹீரோ...! ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாமல் , தனக்கு சவால் இல்லாமல் .. யார் மக்கள் மத்தியிலே வலம் வருகிறானோ ....அவன்தான் உண்மையான தலைவன் ... இதை வச்சு ஒரு கதை எழுதணும்,” என்றாராம் எம்.ஜி.ஆர்...
அப்படி உருவான அந்தப் படம்தான் “அரச கட்டளை” ...!
இந்த நேரத்தில் காமராஜரின் எளிமையைப் பற்றிய இன்னொரு தகவல் நினைவுக்கு வருகிறது...!
காமராஜர் முதல் அமைச்சரானபோது சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு வாகனம் புறப்பட்டதாம்...உடனே அதைத் தடுத்த காமராஜர் கேட்டாராம் இப்படி...!
“நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?”
courtesy net
1960களில் தலைவர் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பயணத்தை மேற்க்கொள்வதற்காக காத்திருந்தார்.
தலைவரின் பாஸ்போர்ட் வழங்கப்படாமல் பொருமையை சோதிக்கும் அளவு தாமதம்.
தலைவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், அப்பொழுது முதல்வராக இருந்த காலஞ்சென்ற திரு பக்தவச்சலம் அவர்களை பாஸ்போர்ட் விஷயமாக சந்தித்து உரையாட ஏற்பாடு செய்திருந்தார்.
தலைவரின் மனதிற்குள் ஒரே போராட்டம், அப்போதய காலகட்டத்தில் தலைவர் அரசியலில் காங்கிரஸ் அல்லாத கட்சியை ஆதரித்து வந்ததால், முதல்வரை எப்படி சந்தித்து உரையாடுவது என்ற குழப்பம்.
முதல்வர் வீட்டிற்குள் நுழந்ததும், 'நீங்கள்ளாம், நமது நாட்டின் பெருமையை உயர்த்தும் கலைஞர்கள். நீங்கள்ளாம் வெளிநாடுகளில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தாவிடில் வேறு யாரால் முடியும். உங்கள் இலங்கைப் பயணத்திற்கு ஆதரவை காட்டுவது எங்களது கடமை, எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க எனது ஆதரவு நிச்சயம் உண்டு, அதோடு இலங்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்', என்று தலைவரிடம் கூறி அனுப்பினாராம்.
'உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்ற தலைப்பில், தலைவர் எழுதிய புத்தகத்தில் மேற்க்கூறியதை எழுதியிருக்கிறார்.
இதோடு, 'கட்சி வேற்றுமையில்லாமல் எப்படி கலைக்கு முக்கியத்துவமும் தக்க மரியாதையையும் அளித்து உதவினார்', என்றும் தலைவர் அந்நாளைய முதல்வரை புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy net
தமிழகஂஅரசியலில் எம் ஜி ஆர் சக்தி
கதர் உடை உத்திராட்சமாலை எனஂ
இந்தியா சுதந்திரமாக காங்கிரஸ்
வாதியானஂஎம்ஜிஆர் அறிஞர் அண்ணா வின் எழுர்ச்சி மிக்கஂஎழுத்து பேச்சு இவைகளால்
கவரப்பட்டு தி மு கஂவில் இணைந்து
செயல்பட்டார்
அண்ணா சொன்னார் மரத்தில் அபூர்வகனி ஒன்று பழுத்துள்ளது யார்
கையில் விழுமோ எனஂஏங்கினேன்
அது என் மடியில் விழுந்தது அதை என் இதயத்தில் பத்திரப்படுத்தி கொண்டேன் அந்த கனியே என் இதயக்கனி எம் ஜி ஆர் எனஂ
சிலஂஎம்எல்ஏஂயுடன் இந்தஂகட்சி
எம் ஜி ஆரின் துணையுடன் தேர்தலை சந்திக்கிறது எம் ஜி ஆரின்
வளர்ச்சி பிடிக்காதவர்களின் எண்ணதால் துப்பாக்கியால் தாக்கபடுகிறார் தர்மம் தலைகாக்கஂ
கட்டுடன் கூடிய கை கூப்பி எம் ஜி ஆர் படம் தமிழகம் எங்கும் ஒட்டபடுகிறது கொடுத்து சிவந்தஂகரம் கும்பிட்டு கேட்கிறது
ஊழல் காங்கிரஸ் விரட்டி திராவிடம்
ஆட்சியில் அமரஂஉதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனஂ
அந்த தேர்தலில் எம் ஜி ஆர் படுத்து
கொண்டே ஜயித்து தி மு காவை யும்
அரியணையில் அமரச்செய்தார்
எம் ஜி ஆர் இருக்கும் வரை தி மு கா
வென்றது
என்று எம் ஜி ஆர் ரை நீக்கியதோ அன்று முதல் தி மு கஂதோல்வியையும் எம் ஜி ஆர் ஆரம்பித்த அ தி மு க வெற்றிகரமாக
ஆட்சி பிடித்து ஆள்கிறது
எம் ஜி ஆர் வழியார் நடக்கிறாகளோ
அவர்களை மக்கள் தேர்ந்து எடுத்து
அரியணை யில் அமரவைப்பார்
ஏன் என்றால் மக்களுக்கு தெரியும்
உண்மை எம் ஜி ஆர் தொண்டர்களால்
தான் நல் ஆட்சி தரமுடியும் என
களம் காணாமல் படுத்து கொண்டே
ஒரு முறையல்லஂஇரு முறை வென்றஂவெற்றிவீரன் எம் ஜி ஆர்
எதிரியே அவர் வந்தஂஉடன் வெற்றிகனியை அவரிடம் கொடுத்து
விடுகிறேன்
எனஂசொல்லவைக்கும் சக்தி உலகில் எம் ஜி ஆர் ரை தவிரஂஎவருக்கும் இல்லை
courtesy net
நன்றி திரு.குமார் சார்.
மெல்லிசை மன்னரிடம் தலைவர் எடுத்துக் கொண்ட உரிமையும் காட்டிய பாசமும் நெகிழ வைக்கிறது. ‘‘இதைச் சொல்றதுக்கா மெனக்கெட்டு திரும்பி வந்தீங்க?’’ என்று தலைவரிடம் கேட்டதன் மூலம் தலைவரிடம் அவருக்கு உள்ள உரிமையும் புரிகிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இந்தக் கட்டுரையை ஏற்கனவே கவியரசர் எழுதி பத்திரிகையில் அப்போது படித்திருக்கிறேன். ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கும் நிலை. அந்த நிலையிலும் தலைவர் பதட்டமில்லாமல், மனம் கலங்காமல் நிலைமையை எதிர்கொண்டதோடு மீண்டும் வெற்றி பெறுவோம் என்பதிலும் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை கவியரசரே தன் எழுத்தால் விளக்கியுள்ளார். அந்த உறுதி மக்கள் மீது அவரும், அவர் மீது மக்களும் வைத்திருந்த நம்பிக்கையின் உறுதி.
நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புரட்சித் தலைவர் பற்றி கவியரசர்
புரட்சித் தலைவருக்கும் கவியரசருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் காரணமாக தலைவரை கவியரசர் கடுமையாக தாக்கியிருந்தாலும் அதையெல்லாம் தாண்டிய அன்பும் நட்புறவும் கவியரசர் மீது தலைவருக்கு உண்டு. இன்று திரு.குமார் சார் பதிவிட்டுள்ள கவியரசரின் ‘சந்தித்தேன், சிந்தித்தேன்’’புத்தகத்தின் பக்கங்களில் (பதிவு எண்.3523) கவியரசரே இதை ‘‘நான் அவர் மீது காட்டிய பகையையும் அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்?’’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அன்பின் அடையாளமாகத்தான் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரை அரசவைக் கவிஞராக்கி அழகுபார்த்தார் தலைவர்.
இணையதளத்தில் இருந்து எடுத்து கீழே உள்ள இந்தக் கட்டுரையை இங்கே பதிவு செய்துள்ளேன். ‘நான் பார்த்த அரசியல்’ புத்தகத்தில் இருந்து இந்தக் கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் என்னிடமும் உள்ளது. நம்மில் பலரிடமும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் இணையதளத்தில் இருந்து.......
-------------------------------------
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான். ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர்பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும். அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் : கவிஞர் கண்ணதாசனின் ‘நான் பார்த்த அரசியல்’
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i62.tinypic.com/i23u9z.jpg
Courtesy : Facebook
கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் பிறந்த தினத்தையொட்டி, நமது இதய தெய்வம் மக்கள் திலகத்துடன் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வழங்கி, இன்று நற்பதிவுகளிட்ட சகோதரர்கள் திரு. வரதகுமார் சுந்தராமன், திரு. கலைவேந்தன் மற்றும் திரு. வினோத் ஆகியோருக்கு நன்றி !
JAYA MOVIES - TOMORROW 25/6/2015- 12 AFTERNOON [ INDIA] : PUTHIYA BOOMI
https://www.youtube.com/watch?v=Hih-i1_cJmo
இனிய நண்பர் திரு குமார் அவர்கள் பதிவிட்ட கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னரின் கட்டுரைகள் மிகவும் அருமை .
திமுகவிலிருந்து கண்ணதாசன் 1961ல் விலகிவிட்டாலும் , அரசியல் ரீதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தாலும் , பாடல்கள் என்று வந்து விட்டால் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆளுமைகளை பற்றி மிக அழகாக வர்ணனை செய்த கண்ணதாசன் போல் எவருமில்லை என்பதில் பெருமையே .
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி'' திரைக்கு வந்து நாளையுடன் 47 ஆண்டுகள் நிறைவு பெறுகிற நேரத்தில் இன்று
ஜெயா தொலைக்காட்சியில் இப்படம் ஒளி பரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது . தகவலுக்கு நன்றி சைலேஷ் சார்
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM
MGR Enga Veetu Pillai Movie 50 Year Celebration
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' வெளியாகி 50 வருடங்கள் ஆகின்றது, அதனையோட்டி உரிமைக்குரல் இதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் தொகுப்பு.
ShrutiWebTV
https://www.youtube.com/watch?v=HZz9XaPXbJg
சைலேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மாண்புகளை மிக சிறப்பாக கூறிய தலைவர்களின் வீடியோ தொகுப்புகள்எல்லாமே அருமை . நன்றி சார் .
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி......ஓவியம்!
http://i1170.photobucket.com/albums/...psu4dubs7i.jpg
யோகாசனம் செய்யும் மக்கள் திலகம் !
http://i1170.photobucket.com/albums/...ps8yniwyjz.jpg
yes sir
இன்று காலை 6 மணிக்கு ஜெயா மூவிஸில் , நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.
நடித்த " விக்கிரமாதித்தன் " ஒளிபரப்பாகியது
http://i57.tinypic.com/2zh4ild.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிடல் பிளசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது
http://i62.tinypic.com/9sv3o5.jpg
முதல் ஏ தமிழ் சினிமாவில் ஏ சான்று பெற்ற முதல் படம் மர்மயோகி. எம்ஜிஆர் நடித்து. கே ராம்நாத் இயக்கிய படம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளியான படம் இது.
முதல் வண்ணப்படம் தமிழின் முதல் வண்ணப்படம் என்ற பெருமை அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு உண்டு. எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் டிஆர் சுந்தரம் இயக்கினார். அன்றைய நாட்களில் இந்தப் படத்தின் கேவா கலரை வியந்து பார்த்தது ரசிகர் கூட்டம்.
முதல் பிஆர்ஓ தமிழ் சினிமாவின் மக்கள் தொடர்பாளர் (பொதுஜனத் தொடர்பு) என்ற பணியை உருவாக்கியவர் எம்ஜிஆர். 1958-ல் அவரது நாடோடி மன்னன் படத்தின் மூலம் பிஆர்ஓவாக அறிமுகமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இன்று நாம் இத்தனை புள்ளிவிவரங்களை எழுத தகவல் சேகரித்து வைத்திருக்கும் பெரும் சாதனையாளர்.
courtesy one india
சென்னை பாடி சிவசக்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " ஒளி விளக்கு "
தினசரி 4 காட்சிகள் - குறைந்த கட்டணம்-ரூ.30/-
தமிழ் திரையுலகில் அனைத்து நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
ஓடும் நாட்களிலும், வசூலிலும் பிரளயத்தை ஏற்படுத்திய/ஏற்படுத்துகின்ற
திரைக்காவியம். இடைவிடாது தமிழகம் முழுதும் அடிக்கடி வலம் வரும்
ஒப்பற்ற திரைப்படம்.
http://i61.tinypic.com/10p0boi.jpg
தனது நண்பர் மூலம் செய்தி அறிந்து, உடன் தகவல் தெரிவித்த மடிப்பாக்கம்
திரு. சுந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி.