வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...78&oe=56D6890D
Printable View
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...78&oe=56D6890D
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இளமைப் பருவம் காணும் கனவு
இருக்கும் வரையில் அழிவதில்லை
இருக்கும் வரையில் அழிவதில்லை
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
நல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும்
மறையும் மீண்டும் இன்பம் வரும்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...80&oe=56DEE473
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ea&oe=56F05B4E
அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை
ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைச்சவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0e&oe=56EFD73A
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
மக்கள் திலகத்தின் அருமையான திரைப்பட நிழற் படங்கள் மற்றும் அரசியல் நிழற்படங்களுடன் தங்களுக்கே உரித்தான கவிதை நடையில் மக்கள் திலகத்தின் பாடல்களுடன் பதிவிட்டிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
மக்கள் திலகம் எம் ஜி ஆர்
சொன்னார் அன்று
போராட்டமே எனது வாழ்க்கை
அவர் சொன்னதை செய்தார்
செய்ததை சொன்னார்
எம் ஜி ஆர்
என்ற மூன்றெழுத்து
உலகமெங்கும்
பேசும் ஒரே எழுத்து
அதன் உரிமை
அவருக்கே
அதை பெற
அவர் செய்த தியாகங்கள்
பட்ட கஷ்டங்கள்
இளமையில் வறுமை
மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்திலே
பிறந்தார்.
அறிவிற் சிறந்த பெற்றோர்
அளப்பரிய செல்வம்
அதை விட செல்லம்
தாயின் செல்லப் பிள்ளையாய் பிறந்து
தமிழகத் தாய் மாரின் செல்லப் பிள்ளையாய் ஆனவர்
தேர்தல் பணிக்காக தூர பயணம்
தலைவர் தன் தோழர்களுடன்
வழியில் ஓர் மூதாட்டி
சிறு கடை ஒன்றில்
கார் நிற்கின்றது
தலைவர் காரிலிருந்து இறங்கி
மூதாட்டியிடம் பொருள் பெற்று
பணம் கொடுக்க
வாங்க மறுத்தார் அந்த தாய்
தலைவர் வற்புறுத்தி கொடுத்தார் பணம்
கேட்டனன் எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு
அந்தத் தாய் சொன்னார்
எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்
இளையவன்
என்னுடன் விவசாயம் பார்க்கின்றான்
மூத்தவன் சென்னையில் சினிமாவில் இருக்கின்றான்
தலைவருக்கோ வியப்பு
நானும் சினிமாவில் தான் இருக்கின்றேன்
சொல்லுங்கள் அவர் பெயரை
நான் ஆவான் செய்கின்றேன் என்றார்
எம் ஜி ஆர் தான் என் மூத்த மகன்
உணர்ச்சி ம்போங்க எம் தலைவன்
அந்தத தாயை கட்டி அணைத்து
அழுதனன்
என்ன தவம் செய்தனன் நான்
என்ன செய்யப் போகின்றேன்
இவர்களுக்கு
அத்தகைய மா தலைவர்
இப்படி எத்தனையோ தாய் மார்கள்
எம் தலைவனுக்கு
சிறு வயதில் தந்தை
இறைவனடி சேர
பணமிழந்து வீதியில்
தாயுடனும்
சகோதரருடனும்
வறுமையின் கோரப் பிடியில்
சிக்கி
எஞ்சியது இவரும்
இவரது அண்ணனும் மட்டும் தான்
7 வயதில்
நாடகக் கம்பனி
சம்பளம் உணவு மட்டும் தான்
20 வயதில்
சினிமாவில் சிறு வேடம்
30 வயதில் முதன் முதலாய்
கதாநாய வேடம்
அவ் வினாடியில் இருந்தே
இறுதி வரை
மக்கள் நலம் பேணும்
பாத்திரங்கள்
கருத்துக்கள்
காட்சிகளில்
கருத்தோடு இருந்தார்.
பாசத்துக்குரிய நண்பர்களே
நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் பாடும்
களமே இந்த மையம் நிறுவனத்தாரின் சீரிய முயற்சியில்
உருவான நமது மக்கள் திலகம் திரி.
இந்த திரி நம்மை இணைத்து நமது தலைவரின் பண்பை -
அவரின் மனிதநேயத்தை - அவரின் கலை மற்றும் அரசியல்
சாதனைகளை தினமும் நினைவு கூற பயன்பட்டு வருகின்றது.
இதன் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
நமது பதிவுகளை பார்த்து மகிழ்கின்றனர்.
மையம் நிறுவனத்தாரின் பிறிதொரு திரியில் நமது
இதய தெய்வத்தைப்பற்றி ஒரு நடிகர் எழுதிய (அவர் இன்று
உயிரோடு இல்லை) செய்தியை ஒருவர் பதிவிட கடந்த இரு
நாட்கள் நமது நண்பர்களும் மாற்று திரி நண்பர்களும்
தத்தமது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.
இனிமேலாவது நமது தலைவரைப்போல் நாம் அமைதி
காப்போம்.
நிச்சயம் அந்தப்பதிவு நம் அனைவரையும் மிகவும்
காயப்படுத்தி உள்ளது. அந்த திரி நண்பர்கள்
அந்த திரியின் நெறியாளர் அவர்களுக்கு அந்தப்பதிவை
நீக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நிச்சயம் அவர்கள் திரியில் இருந்து அந்தப்பதிவை
அதன் நெறியாளர் அல்லது மையம் நிர்வாகத்தினர்
நீக்குவார்கள் என்று நம்புகிறேன்.
மாற்று திரி நண்பர்களே எங்கள் இதயதெய்வத்தைப்பற்றி
தவறான செய்திகளை பதிவிடாதீர்கள்.
அன்புடன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
கடந்த 28ம் தேதி முதல் நமது இதய தெய்வத்தின் பட்டிக்காட்டு பொன்னையா வண்ணப்படத்தை கோவை டிலைட் திரை அரங்கில் திரையிட்டுள்ளனர். இதே திரை அரங்கில் சில மாதங்களுக்கு முன்பு திரையிட்டு 10 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இன்று காலையில் திரையரங்கில் நான் எடுத்த படங்கள் நண்பர்கள் பார்வைக்கு
http://s17.postimg.org/h7lc8me27/WP_20151129_023.jpg
பொறாமையால் நயவஞ்சக எண்ணம் கொண்டவர்கள் உண்மைகளை என்னதான் மறைத்தாலும் அது வெளியே வாராமல் போகாது. நடிகர் சங்கம் உருவாகவும் வளர்ச்சி அடையவும் தனது சொந்தப் பணத்தை போட்ட உத்தமத் தலைவன் நம் புரட்சித் தலைவர். நடிகர் சங்கத்துக்கு அது செயல்பட தனது வீட்டையே கொடுத்து உதவியிருக்கிறார்.
அவர் நடிகர்சங்க வளர்ச்சிக்கு உதவியதும் நிலம் வாங்க பணம் கொடுத்ததும், புரட்சித்தலைவர்தான் " ஸ்டார் நைட் " நடத்தச் சொன்னதாக வி(வரம் தெரியாத) கே. (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி பச்சையாக புளுகியிருப்பதும் ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. நடிகர் சங்க வெப்சைட்டிலேயே இது சம்பந்தமான தகவல்கள் உள்ளது.
http://i65.tinypic.com/5nsu4l.png
1955-ம் ஆண்டில் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் 22 கிரவுண்டு நிலம் பதிவுக்கட்டனமும் சேர்த்து அப்போது, 75,000/- ரூபாய். அதற்கு தேவைப்பட்ட தொகையை எல்லா கலைஞர்களிடமும் சேர்த்து வசூலித்தும் 35,000/- ரூபாய்தான் வசூலாகியுள்ளது. மீதியுள்ள 40,000/- ரூபாயை கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனது 3 படத்துக்கான சம்பளத்தில் இருந்து பெற்று 40,000/- கொடுத்துள்ளார். அதாவது, எல்லா நடிகர்களும் பணம் போட்டும் (அதிலும் நம் பொன்மனத் தலைவர் பணம் கொடுத்திருப்பார்) 75,000/- வசூலாகாததால், மீதி 40,000/-த்தை (அதாவது பாதித் தொகைக்கு மேல்) தொகையை தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து நிலம் வாங்க உதவி இருக்கிறார் பொன்மனச் செம்மல். 1955-ல் 40,000/- என்பது இன்றைக்கு பல கோடிகளுக்கு சமம்.
கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.
ஆனால், உண்மையாக நடந்தது யாதெனில், கட்டிடம் கட்ட ஸ்டேட் பாங்கில் வாங்கிய 18 லட்சம் கடனுக்கு மாதா மாதம் 8,000 ரூபாயும் வருடத்துக்கு ஒருமுறை ‘ஸ்டார் நைட்’ (நட்சத்திர இரவு) நடத்தி 1,00,000 கொடுப்பதாக, அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்தவர்கள் வங்கிக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ராமசாமியும் ஒருவர்.. அதன்பேரில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள்.
கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பே "ஸ்டார் நைட்" நடத்துவதாக வங்கியில் உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள். ஆனால், கட்டிடம் கட்டி முடித்து விட்டு கடனை அடைக்க முடியாததால் என்ன செய்யலாம்? என்று புரட்சித் தலைவரிடம் கேட்டதாகவும் அவர்தான் ‘ஸ்டார் நைட்’ நடத்தச் சென்னதாகவும் சொல்லியிருக்கிறார் இந்த அண்டப்புளுகன், ஆகாசப்புளுகன் ராமசாமி. கடனை அடைக்க முடியாமல் போனதற்கு அவ்வளவு பெரிய கட்டடம் கட்டியும் வருமானம் வரவில்லை என்பதுதான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பொறுப்புக்கு வந்தபிறகு, நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்திருக்கிறார். அதில் நடிகர் சங்க நிலத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்று எஸ்.எஸ். ராஜேந்திரன் கண்டுபிடித்திருக்கிறார். பின்னர்தான் பத்திரத்தை பொதுக் குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து நிலத்தை மீட்டிருக்கிறார் என்பதும் இப்போது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது.
கடனை அடைக்க முடியாத நிலையிலும், அரசு மூலம் நடிகர் சங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் கொடை வள்ளல் புரட்சித் தலைவர்.
இதையல்லாம், நாங்கள் சொல்லவில்லை. நடிகர் சங்க வெப் சைட்டிலேயே நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார்கள்.
நாங்களே "ஸ்டார் நைட்" நடத்தி கடனை அடைக்கிறோம் என்று பாங்கில் எழுதி உத்தரவாதம் கொடுத்து விட்டு, புரட்சித் தலைவர்தான் 'ஸ்டார் நைட்' நடத்தச் சொன்னார் என்று பச்சை பொய்யன் ராமசாமி கூறியிருப்பது யாரையோ திருப்திப்படுத்தவே !
அதையும் திரியில் பதிவு செய்திருக்கின்றனர். புரட்சித் தலைவர் மீது ஏதாவது புகார் என்றால் அது அநியாய பச்சை பொய்யாக இருந்தாலும் திரியில் போட வேண்டியதன் காரணமே பொறாமை, காழ்ப்புணர்ச்சி, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்தான் காரணம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே கூறப்பட்ட உண்மை விவரங்கள் சம்பந்தமாக நடிகர் சங்கம் வெப்சைட்டில் கொடுத்துள்ளனர். அது பொதுமக்கள் பார்வைக்கு:
http://nadigarsangam.org/
தொடக்கமும் வளர்ச்சியும் :
1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே.சுப்பிரமணியம், 1950ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரைத்துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க, அவர்தம் வாழ்வு சிறக்க, இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்மபூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பை தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு. தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. . இன்று வரை இந்த அமைப்பு. இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.
நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.
இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. அப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. திரை வானில் கொடிகட்டி பறந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.
சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிலிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000/- மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000/- அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப் பட்டது. மேலும், கூடுதல் தேவையான ரூபாய் 40,000/- த்தை நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும், ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.
1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.
காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர், இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.
http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal
1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கொட்டகை (SHED) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971ல் சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை தம்பி சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.
சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், வி.கே.ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க, மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் "புரட்சி தலைவர்" முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.
1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால். வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1,400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.
பின்னர் திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு. சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரியை படிக்கும் பொதுமக்களே, உண்மைகளை புரிந்து கொண்டீர்களா?
இனிமேலாவது பொய்யர்கள் புரட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தட்டும்.
நாய்கள் குரைத்து சூரியனில் தூசு படியாது
சத்தியத்தாய் பெற்றெடுத்த உத்தமத் தலைவனாம் எங்கள் புரட்சித் தலைவன் மீது என்றைக்கும் மாசு படியாது.