-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
நாளை போடப்போறேன் #சட்டம் – பொதுவில்
நன்மை புரிந்திடும் #திட்டம்
நாடு நலம் பெறும் #திட்டம்
என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.
#தொழிலாளியாக_எம்ஜிஆரின்_நலத்_திட்டங்கள்
ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்*ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்...... Thanks...
-
Omega Sea Foods ஆயிரத்தில் ஒருவன் ஆங்கில படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்ட படம். அதனால்தான் காலஞ்செல்ல செல்ல அமோக வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர் படத்துக்கு சிவாஜி படம் போட்டியே கிடையாது. எம்ஜிஆர் படத்துக்கு போட்டி இன்னொரு எம்ஜிஆர் படம்தான். பந்துலு தயாரித்த அத்தனை படங்களிலும் ஆயிரத்தில் ஒருவன் படம்தான் அதிக வசூலை பெற்று அவரின் கடனை அடைக்க உதவியது என்று அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்...... Thanks...
-
நடிகப்பேரரசர் எம்ஜிஆர் நண்பரே ஆண்டவரின் ஆயிரத்தில் ஒருவன் படம் MV ராஜம்மா பந்துலுக்கு வசூலை வாரி வழங்கியது பந்துலு ஆண்டவரை வைத்து எடுத்த படங்களிலேயே பெரிய உச்சமாகும் இதில் பி ஆர் பந்துலுவிக்கும் ஏ பி நாகராஜனுக்கும் சபாஷ் சரியான போட்டியாக தான் அமைந்தது நண்பர்களே..... Thanks...
-
திமுக குடும்பத்திற்கு பிழைப்பு தரும் எம்ஜிஆர்.. எஸ்வி சேகர் டிவீட்.. திட்டி தீர்க்கும் திமுகவினர்
சென்னை: "திமுக குடும்பத்திற்கு பிழைப்பு கொடுக்கிறார் எம்ஜிஆர்.. இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி பிழைப்பு தரும் MGR the Great என்று பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில், "கொரோனாவைரஸ் பெருந்தோற்று காலத்தில் அமெரிக்கவாக இருந்தாலும் சரி, ஏழை நாடாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்குத் தேவையான பொருளுதவி மற்றும் பண உதவிகளை அரசு முன்வந்து தருகிறது. ஆனால், நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள்... மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு தான்" என்று தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், இரவு 11.06- க்கு பல வீடுகளில் அலறல் சத்தம்... எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்திற்குப் பிழைப்பு கொடுக்கிறார். அதுதான் MGR the Great என்றும், கற்பூரவாசனை தமிழகத்தில் அறிய முடியவில்லையாமே. வாழ்த்துகள் மோடி அவர்களே" என்று பதிவிட்டுள்ளார். திமுக இந்த ட்வீட் படு வைரலாகி வருகிறது.. இதை பதிவை பார்த்ததும் ஏற்கனவே தயாநிதியை விமர்சித்த விவகாரத்தில் கொந்தளித்த திமுக தரப்பினர் இப்போது மேலும் சூடாகி உள்ளனர்... காட்டமான பதிலடிகள் விழுந்து கொண்டிருக்கின்றன... எனினும் திமுக தரப்பில், ஒருசிலரோ இதை "பல வீடுகளில் சன் டிவி. Great" என்று பாசிட்டிவ் கமெண்ட்களாகவும் பதிவிட்டு வருகின்றனர் ...... Thanks...
-
இன்றைக்கு வரும் புது திரைப்படங்கள் 4 வாரம் ஓடுவதற்குள் நாக்கு தள்ளுகிறது.
ஆனால் ஒரு படம் முதல்முறை வந்து ஓடி முடிந்து மறுவெளியீட்டில் தினசரி 3 காட்சிகளுடன் 100 நாட்கள் ஓடியதை நம்ப முடியுமா....
ஆம் நம் தலைவரின் நாடோடிமன்னன் படம் திருவண்ணாமலை நகரில் 100 நாட்கள் மறுவெளியீட்டில் ஓடியது...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி...... Thanks...
-
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவில் தலைவரது எங்கவீட்டுப்பிள்ளை குடும்பத்துடன் பார்தேன் மூன்றாவது தலைமுறையான பலரும் நேற்று இரவு இந்த திரைபடத்தை பார்திருக்கிறார்கள் (சில காட்சிகள் கட்) அருமையாக இருந்தது இருந்தும் _மறைந்தும் கருணாநிதி குடும்பம் எம்ஜிஆர் அவர்களை வைத்து வசூல் செய்கிறார்கள் சிவாஜி முதல் இன்றய முண்ணனி நடிகர்கள் வரை எந்த திரைபடங்களும் நினைவில் நிற்பதில்லை
எம்ஜிஆர் குறைந்தளவு படங்களே நடித்திருக்கிறார் ஒவ்வொன்றும் மணி மணியாக இருக்கிறது அத்துனை டிவி சேனல்களிலும் எதாவது ஒரு தலைவர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது தலைமுறைகடந்து வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்.......... Thanks............
-
#கருணையில்லா #நிதி
தமிழகத்தில் ஒரு குடும்பக்கட்சி விளைவித்த இன்னல்கள் வெகு அதிகம்..... இலட்சாதிபதி, கோடீஸ்வரர் என்ற கணக்கை எல்லாம் தள்ளிவிட்டு, மில்லினியர் பில்லினியர் குடும்பத்தை உருவாக்கி மாபெரும் சாதனையைப் படைத்த கட்சி.....
ஆனால், புரட்சித்தலைவரோ #ஏழைப்பங்காளன் என்ற பெயரோடு, பெரிதாக தனக்கென்று சொத்து சுகம் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கும், மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்துவிட்டுப் போன தெய்வம்...!.......... Thanks...
-
மக்கள் திலகம் திமுக வில் 1953 ல் இணைந்து 1962 பொதுத்தேர்தலில் அதன் வெற்றிக்காக பிரச்சாரம் செய்கிறார் ஐம்பது இடங்களில் திமுக வெற்றி பெறுகிறது அதற்கு பரிசாக அறிஞர் அண்ணா எம்ஜிஆர் அவர்களுக்கு எம்*எல்சி.பதவி*வழங்கினார்.67 தேர்தலுக்கு பல லட்சம் ரூபாய் திமுக வுக்கு*வழங்கிய போது*அண்ணா தம்பி உன்னுடைய பணம் வேண்டாம் உன் முகத்தை மட்டும் மக்களிடம் காட்டினால் போதும் தேர்தல் பிரச்சாரம் செய் என்று சொல்கிறார் அண்ணா.பெரியார் காமராஜரை ஆதரித்து வந்தார் அவரது தொண்டர் எம்.ஆர்.ராதா எம்ஜிஆர் அவர்களுடன் தொழிலாளி படத்தில் நடித்தபோது கழக கொள்கை யை கழகத்தின் சின்னம் உதய சூரியனை தனது வசனத்தில் குறிப்பிட்ட தற்காக தகராறு செய்த நிலையில் பெற்றால்தான்பிள்ளையா படத்தின் சம்பள பாக்கியை கேட்டதற்காகவும் கோபமடைந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களை ராதா சுட்டு விடுகிறார்.உயிருக்கு போராடிய நிலையில் எம்ஜிஆர் கட்டுகளுடன் இருக்கும் படத்தை நாடெங்கும் ஒட்டி திமுக வுக்கு ஆதரவாக எம்ஜிஆர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் ராதா எம்.ஜி.ஆரை.கொலை செய்ய த்திட்டமிட்டு சுட்டுவிட்டார் என்று திமுக பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.அண்ணா இந்த வெற்றி தம்பி எம்ஜிஆர் அவர்களால் கிடைத்தது என பெருமிதமாக சொனானார் அமைச்சரவை பட்டியலை என்.வி.என்.அவர்கள் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர் அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்னர் செயல் படுத்தினார் எம்ஜிஆர் ஆட்சேபித்த ஆதித்தனாரை அமைச்சர் ஆக்காமல் எம்ஜிஆர் சம்மதத்துடன் சபாநாயகர் ஆக்கினார்.எம்.ஜி.ஆர்.அவர்களை அமைச்சர் அந்தஸ்தில் சிறு சேமிப்பு துணை தலைவர் ஆக்கினார் அண்ணா.அண்ணா மறைவுக்கு பின்னர் நாவலர் முதல்வர் ஆவார் என எண்ணிய நிலையில் எம்ஜிஆர் ஆதரவு பெற்ற கருணாநிதி முதல்வர் ஆனார் . அதற்கு பரிசாக *எம்ஜிஆர் அவர்களை கழக பொருளாளர் ஆக்கினார் கருணாநிதி . நாளடைவில் கருணாநிதி ஆட்சியில் லஞ்சம் ஊழலுக்கு இடம் இடம் கொடுத்தார் *அதனால் கட்சி மும் ஆட்சியும் செல்வாக்கு சரிந்து விழுந்தது.இத்தகைய சூழலில் 71 ல் பொதுத்தேர்தலில் காமராஜர் ராஜாஜி கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து வலுவான நிலையில் கருத்து கணிப்பில் அக்கூட்டணியே வெற்றி நிச்சயம் என்ற சூழலில் எம்ஜிஆர் அவர்கள் பட்டி தொட்டி நகரம் ஆகியவற்றில் *இரவு பகல் பாராது நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டார் 67 ல் வால் போஸ்டரில் பார்த்த எம் ஜி ஆர்.ஐ*மக்கள் நேரில் காண்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து காத்திருந்து கண்டார்கள்.மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.தேர்தலில் எம்ஜிஆர் பிரச்சாரம் காரணமாக திமுக மாபெரும் வெற்றி பெற்றது.184 தொகுதிகள் திமுக பெற்றது இதுவரை இந்த சரித்திரம் முறியடிக்கப்படவில்லை.சுயநல குடும்ப அரசியலுக்காக திமுக விலிருந்து விலக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுக வை தொடங்கி தொடர்ந்து திமுக வுக்கு தோல்வி ஐ கொடுத்தார் . திமுக விலிருந்து விலக்கப்பட்ட பின்னர் நல்லநேரம் இதயவீணை உ.சு.வா. சிரித்து வாழவேண்டும் நினைத்ததை முடிப்பவன் உரிமைக்குரல் மீனவ நண்பன் பல்லாண்டு வாழ்க 77 ல் தேர்தலில் வெற்றிபெற்று *அதிமுக ஆட்சி அமைக்க மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் கால்சீட் காரணத்தால் பதவி ஏற்பு வரையில் தொடர்ந்தது நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார் புரட்சி தலைவர். அவர் உயிர் உள்ளவரை கருணாநிதி தோல்வி யை கண்டார் புரட்சி தலைவர் மறையும் வரை முதல்வராக இருந்தார்....... Thanks...
-
Karthikeyan Ks அண்ணா உ.சு.வா. 1973.1974ல் அதிக வசூல் உரிமைகுரல்.1975 இதயக்கனி.1976 நீதிக்கு தலைவணங்கு.1977 ல் மீனவ நண்பன் தலைவர் முதல்அமைச்சர்.1977ல் ரஜினி இரண்டாம் கதாநாயகன் 1978ல் பைரவி. 1977ல் கமலின் வளர்ச்சி கதையின் நாயகனாக 16 வயதினிலே. இளஞ்சூரியன் முகமுத்துக்காக நடிக்கவில்லை என்று கூறினால் 1977ல் முகமுத்து நிலையும் கூறலாம் ......Fb fb.... Thanks...
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது. அது திரைத்துறையாக இருந்தாலும் சரி.. அரசியலாக இருந்தாலும் சரி..!
திரைத்துறையில் எம்ஜிஆர் வளர்ந்து கொண்டிருந்த நேரம்...
திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார்.
மாடர்ன் தியேட்டர்ஸ்
தயாரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீரவாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றியதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலிதேவி நடித்தார். நடிகை அஞ்சலிதேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலைவராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலிதேவி.
‘சர்வாதிகாரி’ படப்பிடிப்பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலிதேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.
ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடியும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என்றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக்கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை.
டி.ஆர் சுந்தரம்.. எம்ஜிஆர் சொன்னால் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணியவர் காட்சியை திரும்பவும் எடுக்க உத்தரவிட்டார்.
காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. மறுபடியும் அஞ்சலிதேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம்முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்..! எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன்னார்..? என்று சுற்றிலுமிருந்த எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.
எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் அது விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக்கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார்.
இயக்குனர் கூட கவனிக்காத சிறு தவறை எம்ஜிஆர் கவனித்திருக்கிறார் என்பதை நினைத்து
அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமும் எம்ஜிஆர் மீது மதிப்பும் ஏற்பட்டது ..!
தாய்மையையும் பெண்மையையும் எப்போதும் போற்றியவர் புரட்சித்தலைவர்..!....... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 11 வெள்ளி
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் நம் அருமை தலைவனை
வணங்குபவர் பெயர்
வி பி பாலசுப்ரமணியன்
துணை சபாநாயகர்
வேடசந்தூர் தொகுதி
++++++++++++++++++++++++++++++++++
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை
,இந்தத் தொகுதியில்
நஞ்சுண்டையா
. என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான்
தொடந்து எம்எல்ஏவாக வருவார்
இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
1977. ஆண்டு வாசன் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் MGR
1980 ஆண்டு வி பி பாலசுப்ரமணியன் என்பவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்
வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்
1984 ஆண்டு மீண்டும் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியனை
வெற்றிபெற வைத்தார் MGR
உப்பிட்ட MGR குடும்பத்திற்கு உறுதுணையாக இருநதவர்
உண்டவீட்டிற்கு ரெண்டகம்
நினைக்காதவர்
ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்தவர்
இவர் சிறந்த பேச்சாற்றல் உடையவர்
வேடசந்தூர் மிகவும் வறச்சியானதொகுதி அந்தததொகுயில்பலமில்களை உருவாக்கியவர் இவர்
வேடசந்தூரில் இருந்து கரூர்
செல்லும் ரோட்டில் பல மில் / பல. தொழிற்சாலைகளை
இவர் காலத்தில் உறுவாக்கினார்
இவரைபோன்ற. MGR ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான் ஜெயலிதா எடப்பாடி முதல்வராக. வர முடிந்தது
இவரைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது...... Thanks...
-
மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?
அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.
பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.
‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’
கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?
‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’
அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.
‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’
எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.
‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’
இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.
‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’
முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.
ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா........ Thanks...
-
M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்
.அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.
அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.
வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.
முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.
மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
‘உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்;
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’
பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.
தொடரும்...
Posted : MG.Nagarajan
24 April 2020 01:34 AM
........... Thanks...
-
[சொந்தப் படமெடுத்து சொத்தை இழந்தவர்களில் நடிகை சாவித்திரி அவர்களும் ஒருவர்.
சென்னை ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்திரியின் பெரிய மாளிகையும் ஏலத்தில் போனது. இப்படி தன்னிடமிருந்த ஒவ்வொரு பொருளும் கைவிட்டு போய் மிகவும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் ஒரு நாள் எம்ஜிஆரின் மாம்பலம் அலுவலகத்திற்குச் சென்று தலைவரை சந்தித்தார் சாவித்திரி. தலைவரோ சாவித்திரி வசம் ஒருபையில் பணத்தை வைத்துக் கொடுத்ததுடன், சாவித்திரி தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.
அந்தப் பையில் இருந்ததோ பணம் ஒரு லட்சம். ஆனால் சாவித்திரி அதை வைத்து முன்னேறப்போவது கிடையாது. சாவித்திரி எப்படி செலவழிப்பார் என்பதும் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.
இருப்பினும் மாபெரும் நடிகை வந்துக் கேட்கும்போது உதவாமல் இருக்கவும் முடியாது, உதவினார். இது தலைவரின் மனித நேயத்தை காட்டுகிறது.]........ Thanks...
-
நடிகர் திரு. சத்தியராஜ் தன் "வாட்ஸ் ஆப்" பில் பதித்துள்ள வாசகங்கள் "உலகம் சுற்றும் வாலிபன்"
படத்தில் வரும் "உலகம் அழகு கலைகளின் சுரங்கம்" பாடலில் இடம்பெற்ற "உள்ளம் மட்டும் அள்ளிக் கொள்ளும் மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்" என்ற வரிகளை.
திரு.சத்தியராஜ் தன் இல்ல வரவேற்பறையில் ஒரு சிறிய பாட்டிலில் தனக்கு பரிசளிக்கப்பட்ட (இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அளித்தது) முள்ளிவாய்க்கால் போரின் நினைவாக வீரம் செறிந்த தமிழ் ஈழ மண்ணையும், நாம் இலங்கையில் 2017 ஏப்ரலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வீட்டில் (இலங்கை ராணுவம்
சிதைத்து மண் குவியல் மட்டுமே மிச்சம்) சேகரித்த மண்ணையும் நிரப்பி காட்சி பொருளாக வைத்திருக்கிறார்.
#இதயக்கனி எஸ். விஜயன்....... Thanks....
-
சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம்.
'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி "நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.
அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும், பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.
எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!"
- கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகளிலிருந்து......... Thanks...
-
தினத்தந்தி*-24/04/20
----------------------------------
நெல்லை*கொரோனா*நிவாரண*மையத்தில்* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்*பார்த்து ரசித்த ஆதரவற்றோர் .* - மன*அழுத்தத்தை*குறைக்க*ஏற்பாடு*
------------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கொரோனா நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவுப்படி ,மாநகராட்சி ஆணையர் கண்ணன், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் தன்னார்வலர்கள், ஆதரவற்றோர்கள்* 105 பேர்களை* அடையாளம் கண்டு நெல்லை டவுன்* கல்லணை மாநகராட்சி பெண்கள்* மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள* நிவாரண மையத்தில் , அங்குள்ள திறந்த வெளி அரங்கத்தில் பழைய திரைப்படங்களை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது . அதில் முதலாவதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் நேற்று முன்தினம்* இரவு திரையிடப்பட்டது .
ஆதரவற்றோருக்கு அங்கு போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் சமூக இடைவெளியிட்டு அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தனர் .* இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் ஆறுதலாகவும், மன அழுத்தத்தை குறைக்க சரியான ஏற்பாடு என்றும் அனைவரும் பாராட்டினார்கள் .
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை மன்னன் எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------
18/04/20* * -மெகா டிவி* -காலை 10 மணி* - படகோட்டி*
* * * * * * * * * சன் லைப்* - காலை 11 மணி* - சங்கே முழங்கு*
19/04/20* - சன் லைப்* - காலை 11 மணி* - தொழிலாளி*
20/04/20* *- ஜெயா டிவி* -காலை 10 மணி - இதய வீணை*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்* -காலை 10 மணி -மாட்டுக்கார வேலன்*
21/04/20-* ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி - ஊருக்கு உழைப்பவன்*
** * * * * * * *ஜெயா டிவி* * * * - காலை 10 மணி* - பணக்கார குடும்பம்*
* * * * * * * * முரசு டிவி* *- பிற்பகல் 2 மணி* *- அபிமன்யு*
* * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி -* தாய்க்கு தலைமகன்*
* * * * * * * * சன் டிவி* * * * - இரவு 9.30 மணி* - அன்பே வா*
22/04/20 -* ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * * மீனாட்சி டிவி* *- காலை 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * ஜெயா டிவி* * - காலை 10 மணி* - தாய்க்கு பின் தாரம்*
23/04/20* -* ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * * * * ஜெயா டிவி* *- காலை 10 மணி* - குலேபகாவலி*
* * * * * * * * * *முரசு டிவி* - பிற்பகல் 2 மணி - கொடுத்து வைத்தவள்*
* * * * * * * * * சன் டிவி* *- இரவு 9.30 மணி* - எங்க வீட்டு பிள்ளை*
23/04/20* *மெகா*டிவி* - நள்ளிரவு 12 மணி - கலங்கரை விளக்கம்*
24/04/20* *ஜெயா டிவி* - காலை 10 மணி - பெரிய இடத்து பெண்*
* * * * * * * * புதுயுகம் டிவி**-* இரவு 7 மணி* --சங்கே முழங்கு*
-
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.
அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கு அவரைப் பற்றி வெளியான நூல்களின் மொத்தத் தொகுப்பையும் அளித்தால் மகிழக்கூடும் தானே?!
எம்ஜிஆர் குறித்து வெளிவந்த நூல்களின் மொத்தத் தொகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...
எம்ஜி ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன, சில தமிழ் நூல்கள் எப்போது வெளியிடப்பட்டன? யாரால் வெளியிடப்பட்டன? என்ற விவரங்களேதுமின்றியும் கூடக் கிடைத்துள்ளன.
001. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
002. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
003. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
004. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
005. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
006.0புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
007. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
008. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
009. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
010. எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
011. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
012. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
013. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
014. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
015. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
016. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
017. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
018. அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
019. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
020. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
021. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
022. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
023. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
024. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
025. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
026. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
027. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
028. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
029 .அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
030. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
031. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
032. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
033. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
034. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
035. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
036. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
037. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
038. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
039. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
040. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
041. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
042. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
043. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
044. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
045. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
046. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
047. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
048. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
049. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
050. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
051. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
052. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
053. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
054. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
055. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
056. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
057. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
058. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
059. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
060. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
061. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
062. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
063. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
064. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
065. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
066. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
067. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
068. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
069. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
070. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
071. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
072. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
073. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
074. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
075. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
076. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
077. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
078. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
079. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
080. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
081. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
082. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
083. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
084. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
085. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
086. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
087. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
088. எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
089. எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
090. பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
091. நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
092. எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
093. எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
094. விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
095.காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
096. எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
097. பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 -
098. செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
099. 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 -
100. எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
101. எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 -
102. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
103. மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
104. எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
105. எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
106. எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
107. எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
108. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
109. பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -
110. மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
111. நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 -
112. வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011
113. எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
114. வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
115. எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, Es Rajat - 2007 –
116. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்.
#ஆங்கில_நூல்கள் (English Books)
01. Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
02. All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
03. Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
04. Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
05. The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
06. M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
07. The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))
08. On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.
09. Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
10. Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
#முழு_விபரங்கள்_கிடைக்கப்_பெறாத_நூல்கள்:-
01. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))
02. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
03. குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))
04. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
05. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))
06. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
07. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
08. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
09. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)
11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.
19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
20. C.M. Speech's
தொகுப்பு: மல்லிகா பிரபாகரன் | வழக்கறிஞர் சி.பி. சரவணன் | தினமணி......... Thanks.........
-
MGR Filmography Film 46 (1960) Poster
1960ஆம் ஆண்டில் எம்ஜியாரின் மூன்றாவது மட்டும் அந்த ஆண்டின் இறுதிப் படமாக வெளியான மன்னாதி மன்னன் முதலிரண்டில் இடறியதை சரி செய்து வெற்றிப் படமானது, காதலுக்கும் அரச கடமைக்கும் இடையில் அல்லாடும் இளவரசனும் அவனிடம் காதல் கொண்ட இரு மங்கையருமாக வடிக்கப்பட்ட கதையில் நடனராணியாக பத்மினியும், இளவரசியாக அஞ்சலிதேவியும் வேடமேற்றனர். எம்ஜியாரின் பல வெற்றிப்படங்களுக்கு வசனமெழுதிய கண்ணதாசன் இதிலும் பணியாற்ற, எம்.நடேசன் தயாரித்து இயக்கினார்.
மொத்தம் 14 பாடல்களைக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு ம்யூசிக்கல் என்றே அமைந்து விட்ட காதலும் நடனங்களுமே நிறைந்திருந்த இப்படத்தில் பொதுவாக எம்ஜியார் படங்களில் மிகுந்து காணப்படும் சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும், பத்மினியுடன் எம்ஜியார் ஆடும் போட்டி நடனம் பிரபலமானது;
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. எம்எல்வியின் குரலில் ஆடாத மனமும் உண்டோ கர்நாடக இசைப்பிரியர்களை மயக்கியது என்றால், படத்தின் துவக்கத்தில் ஒலிக்கும் அச்சம் என்பது மடமையடா பாடல் ஏறத்தாழ திராவிட இயக்கத்தின் தேசிய கீதமாகவே மாறியது; இன்றளவும் இசைக்கப்படுகிறது. சுசீலாவின் கண்கள் இரண்டும் பாடல் எவர்க்ரீன் நிலை பெற்றது. கனியக் கனிய, மற்றும் நீயோ நானா போன்றவை மிகுந்த இனிமையோடு துலங்கின. இதில் இரண்டாவதில் பிபி ஸ்ரீனிவாஸ் எம்ஜியாருக்குப் பின்னணி கொடுத்திருந்தார்........ Thanks.........
-
படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
நன்றி : தினமலர்........ Thanks...
-
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!
தலைவரின் அருமையான பாடல் வரி...
நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால
நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால........ Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில்*இன்று (17/04/20) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரு.இருகூர்*இளவரசன்(எழுத்தாளர் )*அளித்த*தகவல்கள் விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு*தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்*, தனது*உதவியாளர்* மூலம் அழைத்து**அவர்களின்*துன்பத்தை*போக்குவது*என்பது *அவரி ன்*வாழ்க்கையில்*அன்றாடம் நடக்கும்*விஷயங்கள்* நான் கோடம்பாக்கத்தில்,பூபதி நகரில்**குடிசை*மாற்று வாரியம் அருகில் குடியிருந்தபோது , சங்கரய்யா என்பவர் (தந்தை பெரியாரின்* சீடர்) என் வீட்டிற்கு கீழே குடியிருந்தார் . *திரு.சங்கரய்யா , தந்தை பெரியாரிடம் இருந்து பின்னர் பேரறிஞர் அண்ணா*, மு.கருணாநிதி ஆகியோரின் நட்பில்*இருந்தார்*. அப்போது முரசொலி*பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார் . திரு.சங்கரய்யா தனது முதிர்ந்த வயதில்*மனைவியுடன் வாழ்ந்து வந்தார் .* அப்போது அவர் மனைவிக்கு உடல் நலம் குன்றியது* மருத்துவ*சிகிச்சைக்கு பலரிடம்*பணம் கேட்டு கிடைத்த*பாடில்லை, தான் சார்ந்த இயக்கத்தினரிடம் கேட்டும் பலனில்லை. நோய் என்றால் அரசு மருத்துவமனை இருக்கிறதே .அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று பரிகசித்தனர் .*.இதுபற்றி*என்னிடம்* தெரிவித்தபோது , நான்* உடனே நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று*எம்.ஜி.ஆரை*பாருங்கள்*.* நிச்சயம் உதவி கிடைக்கும்*என்று யோசனை சொன்னேன் . . ஆனால் ஆரம்பத்தில் .சங்கரய்யா சற்று*தயக்கத்துடன்* எம்.ஜி.ஆர். கட்சிக்கு*எதிரான இயக்கத்தில் நான் இருந்து அவரை வசை பாடியிருக்கிறேன் . அவரது அரசியலை*விமர்சனம் செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன் .* ஆகவே என் பிரச்சனையை*காது கொடுத்து கேட்பாரா*, எனக்கு*உதவி கிடைக்குமா*என்பது சந்தேகத்திற்கு உரியது*என்று என்னிடம்**சொன்னார் .* பதிலுக்கு*நான்* , முதலில் நீங்கள் அவரை*போய்* சந்தியுங்கள் . தன்னை*விமர்சனம் செய்தவர்களை கூட*, தன்னை*நேரில் வந்து சந்தித்து*உதவி கேட்டால்*மறுத்ததாக*நான் கேள்விப்பட்டதில்லை . எனவே நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்றேன்* .வேறு வழியில்லை*என்பதால் , ஒருநாள்*காலை*7 மணியளவில் எம்.ஜி.ஆரை சந்திக்க*ராமாவரம் சென்றார் .
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தினசரி தன் வீட்டில்*பொதுமக்களிடம் கோட்டைக்கு செல்வதற்கு முன்பு வரிசையில்*நிற்கும்*பொதுமக்கள் சிலரிடம்*மனுக்கள்*வாங்குவது வாடிக்கை. அந்த வரிசையில்*.சங்கரய்யா நின்றிருந்தார் .அவர் உருவத்தில் குள்ளமாக இருப்பார் . அவரை*பார்த்துவிட்ட*எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவரை*தனியே அழைத்து வரும்படி கூற , அவர் வந்ததும்*என்ன வரிசையில் நிற்கிறீர்கள்.*என்ன விஷயம் .தயங்காதீர்கள் .விரைவாக சொல்லுங்கள் என்றார்*எம்.ஜி.ஆர்.*ஐயா, என் மனைவிக்கு*உடல்நலம் சரியில்லை . நானிருக்கும் இடத்தில உள்ள உறவினர்கள் , நண்பர்கள்,கட்சி*பிரமுகர்கள் பலரிடம் கேட்டு பார்த்து ஒன்றும் பலனில்லை . உடனடியாக மருத்துவ*சிகிச்சை அளிக்க*வேண்டிய சூழ்நிலை .நண்பர் ஒருவரின்*யோசனைப்படி , நம்பிக்கையுடன் உங்களை*நாடி வந்திருக்கிறேன் .என்றார்*.சங்கரய்யா .* எம்.ஜி.ஆர். சிறிது நேரம் இருக்க சொல்லி,பொதுமக்களை*அனுப்பியதும், விவரங்கள் கேட்டறிந்தார் . பின்னர் தனது*உதவியாளரிடம் சைகை காட்டி ரூ,50,000/- வரவழைத்து , சங்கரய்யாவிடம் அளித்து*உடனே ஆவன*செய்து எனக்கு*தகவல் அளியுங்கள் என்று சொல்லி அனுப்பினார் . சங்கரய்யாவுக்கு தேவைப்பட்ட*பணம் வெறும் ரூ.3,000/- தான் .வீட்டிற்கு சென்று*பணக்கட்டை*பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்*சங்கரய்யா . இது நடந்தது*1979ல், எம்.ஜி.ஆர். அளித்த பணம் இப்போதைய*மதிப்பில்*பல லட்சங்கள் இருக்கும்*.
சங்கரய்யா தன்* மனைவியை*ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதித்து*நல்ல சிகிச்சை*அளித்து ,ரூ.15,000/- செலவு* செய்து* அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த*பின்னர் , சங்கரய்யா தன் வீட்டு*ஹாலில்*பெரிய எம்.ஜி.ஆர். புகைப்படம் ஒன்றை*மாட்டி வைத்தார் .விவரம் அறிந்து*நான் சங்கரய்யாவிடம் விசாரித்தேன் . எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு பெற்றீர்கள் என்று அறிந்தேன் . நீங்கள் திராவிடர்*கழக கட்சியை சார்ந்தவர் ஆயிற்றே. எப்படி எம்.ஜி.ஆர். படம் வீட்டில்*வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் . பதிலுக்கு சங்கரய்யா என் மனைவியின்*மருத்துவ*சிகிச்சைக்கு நான் பணம் கேட்காத* ஆளில்லை. ஒருவரும்*உதவிக்கு வரவில்லை . எம்.ஜி.ஆரை கடுமையாக அரசியல் ரீதியில் விமர்சனம் செய்தும்*, பகைவனுக்கு* அருள்வது போல் , காலத்தின் அருமை கருதி*,நிலைமையை உணர்ந்து*உடனடி உதவி செய்து , என் மனைவியின்*உயிரையம், குடும்ப மானத்தையும்* காப்பாற்றிய**அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றார்*சங்கரய்யா .
சிறிது*காலத்திற்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் சங்கரய்யாவின் 75*வது*பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர் . சங்கரய்யாவும் எம்.ஜி.ஆரை சந்தித்து*ஆசி பெற்று ,தன் 75 வது* பிறந்த நாள் பற்றி கூறி , தன்*வீட்டில்*மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துவிட்டு வந்தார் .* அன்று மாலை குடும்பத்தினர் , மற்றும் பேர குழந்தைகள் அனைவரும் குதூகலமாக கொண்டாட ஆயத்தமாக இருந்தனர்*.இரவு 7 மணியளவில் அந்த குடிசைமாற்று வாரிய பகுதியில்*திடீரென* அம்பாசிடர் கார் ஒன்று வந்தது .அப்போது சாலையில் கொஞ்சம்*மழையால்**சேறு*இருந்தது .எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி*அந்த சேற்றை*பொருட்படுத்தாமல் , வேட்டியை*தூக்கியவாறு லாவகமாக தாண்டி வீட்டுக்குள்*நுழையும்போது குடும்பத்தினர் அனைவருக்கும்**இன்ப அதிர்ச்சி* . சங்கரய்யா உடன் விரைந்து வந்து எம்.ஜி.ஆரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு உடன் தெருவாசல்* கதவை மூடிவிட்டார் . ஏனெனில் விவரம் அறிந்தால்*அந்த இடமே*பொதுமக்களால் சூழப்படும் .
எம்.ஜி.ஆர். சங்கரய்யாவின் மனைவியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் . சங்கரய்யாவின் மனைவி , உங்கள் புண்ணியத்தால் நான் உடல்நலம் தேறிவிட்டேன் ,* என்று என் கணவர்*உங்கள் வீட்டுக்கு காலடி*வைத்து உங்களிடம் உதவியை நாடினாரோ*, அன்று முதல் எங்கள் குடும்பம்*நன்றாக இருக்கிறது . நாங்கள் மூன்று வேளை திருப்தியாக உண்டு வாழ்கிறோம் .மிகவும் நன்றி ஐயா என்றார் .* வேறு ஏதாவது உதவி தங்களுக்கு தேவைப்படுகிறதா ,சொல்லுங்கள் . சங்கரய்யா என்னிடம் கேட்க மாட்டார் என்றுதான்*நான் உங்களை கேட்கிறேன். தயக்கம் வேண்டாம். தைரியமாக கேளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் தனது உதவியாளரை*அழைத்து*ரூ.75,000/-பணத்தை ,* 75 வயதை*கணக்கில் கொண்டு*சங்கரய்யாவின் மனைவியிடம் அளித்தார் . பின்பு*சங்கரய்யாவிடம் அ. தி.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம்*சாலையில் உள்ளது . அந்த அலுவலகத்தில் வரும் தொலைபேசி எண்களை தினசரி பதிவேடுகளில் பதிவு செய்து தாருங்கள்*உங்களுக்கு சம்பளமாக*ரூ.10,000/-தரப்படும் என்று சொல்லி*விடை பெற்றார் எம்.ஜி.ஆர். சங்கரய்யா அப்போது தன் வாழ்நாளில்*ரூ.600/- க்கு*மேல் சம்பளம் வாங்கியதில்லை. எனவே உண்மையில் எம்.ஜி.ஆரை தன் கடவுளாகவே பார்த்தார் சங்கரய்யா .
மேற்கண்ட சம்பவத்தை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதுபோல ஏராளமான பேர்களுக்கு எந்த பிரதிபலனோ, பிரதி உபகாரமோ இல்லாமல் அவர்களின் நிலை அறிந்து, காலத்தே எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் எண்ணற்றவை .இதனால்தான் இன்றும் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்பட பாடல்கள் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகின்றன .* இந்த மாதிரி*செய்கைகளால்தான் , மக்கள் திலகம், தமிழக முதல்வர் என்கிற நிலைப்பாடுகளை கடந்து , காலங்கள் மறைந்தாலும், காட்சிகள் மாறினாலும் ,*மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்..
தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமான காலத்தில் , எம்.ஜி.ஆர். நாடக மன்றம், சிவாஜி நாடக மன்றம், எஸ்.எஸ். ஆர். நாடக மன்றம் , எம்.ஆர். ராதா நாடக மன்றம் , மனோரமா நாடக மன்றம் ,மனோகர் நாடக மன்றம் என பல மன்றங்கள் இருந்தன .எம்.ஜி.ஆர். நாடக மன்றம் சார்பில் 1959ல் இன்ப கனவு என்ற நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது , கதைப்படி, நடிகர் குண்டுமணி (150 கிலோ எடை ) யை தூக்கி கீழே கிடத்த வேண்டும் .* அப்போதுதலைக்கு மேல் தூக்கும்போது* வழுக்கி, எம்.ஜி.ஆர். கால் மீது குண்டுமணி விழ , உடனே படுதா* போடப்பட்டது . அப்போது எம்.ஜி.ஆர்.கால் முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார் . அந்த மாதிரி நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். வாத்தியார் போல சிறு குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி அளிப்பது போல காட்சி அமைக்கப்பட்டது . அந்த காட்சி முடிந்து குழந்தைகள் புறப்படும்போது , போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது , அனைவருக்கும் சாக்லேட் (இனிப்பு ) வழங்குவார் எம்.ஜி.ஆர். அப்போது தங்கை பாத்திரத்தில் நடித்த நடிகை என்ன அண்ணா , நீங்கள் அளிப்பதே இலவச கல்வி* பயிற்சி . இனிப்பு வழங்க ஏன் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர். என்ன செய்யறது தங்கச்சி, எனக்கு இருக்கிற வருமானத்தில் செய்கிறேன். வருமானம் மட்டும் அதிகம் கிடைத்தால் இவர்களுக்கு இனிப்பு என்ன சாப்பாடே போட்டு அனுப்புவேன் என்று கூறுவாராம் .7 வயதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல* என்று ம் சொன்னாராம். இந்த அனுபவங்கள்தான் தான் பட்ட கஷ்டம் போல சிறு குழந்தைகள் சாப்பாட்டிற்கு அவதிப்பட கூடாது என்கிற வகையில் , பிற்காலத்தில், தான் முதல்வரானதும்*சத்துணவு திட்டம், இலவச செருப்பு, இலவச பல்பொடி இலவச சீருடை போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்* எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் நிகழ்ச்சியில் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ( படகோட்டி*), ஒரு பக்கம் பாக்குறா*(மாட்டுக்கார வேலன்), சிரித்து*வாழ வேண்டும் (உலகம் சுற்றும் வாலிபன் ) ஆகிய பாடல்கள்*ஒளிபரப்பாகின .......... Thanks.........
-
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது. அதுபற்றி லதா கூறியதாவது:-
நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன். இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.
மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார்.
கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும் என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன். நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும் என்று பாராட்டினார்.
இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது. இவ்வாறு லதா கூறினார். தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜு, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள். சிரித்து வாழவேண்டும் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார்.
(மும்மொழிப் படத்தில் கதாநாயகி)........ Thanks...
-
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.
ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட
'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..
நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.
அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.
உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..
“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."
-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR
இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்
“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.
“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.
திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”
SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”
இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.
“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.
ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.
சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”
*இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்.ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்*
"திண்ணை" பதிவிலிருந்து............ Thanks...
-
என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள்
தமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் மக்கள் மனதில் எவர் கிரீன் ஹீரோவாக இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர். லாக்டவுன் நேரத்தில், அவரது ரசிகர்களுக்கு அவரின் திரைப்படங்கள் மூலம் ஒரு பாசிட்டி எனர்ஜி கிடைத்திருக்கிறது. Sponsored Upskill in AI and Data Science | Start free Trial Great Learning Sponsored Explore a new world from your sofa with one simple tool! ExpressVPN சினி தரவரிசை 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாத டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாத டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் PrevNext அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பின்னர் அதிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனிக்கட்சி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வரானார். தமிழக மக்களின் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பல கோணங்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், இன்றும் மக்களின் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரை நினைவூட்டும் வகையில் இன்றும் அவரின் திரைப்படங்கள் பேசப்படுகிற்ன. செல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் ! சமூக அக்கறை, பெண்ணூரிமை, அரசியல், காதல், குடும்பம், தத்துவ பாடல்கள், பட்டயை கிளப்பும் சண்டைக்காட்சிகள், உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என இவர் திரைப்படங்களில் இல்லாத அம்சங்களே இல்லை. அனைத்து வயதினராலும் ஈர்க்கப்பட்ட முதல் நடிகர் என்றால் அது நம் பொன்மனச்செம்மல்தான். அவரை மீண்டும் திரும்பிபார்க்க வைக்கும் விதமாக மார்ச் 20ல் லிருந்து கடந்த ஏப்ரல் 20 வரை அவரின் 62 திரைப்படங்கள் ஜெயா-டிவி தொலைக்காட்சி, சன்-லைஃப், ராஜ் டி.வி, மெகா-டிவி, முரசு, வசந்த்-டிவி ஆகிய சேனல்கள் மூலமாக ஒளிபரப்பானது. இந்த தகவலை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லாக் டவுன் முடிவதற்குள் 100 வித்தியாசமான படங்களை அனைத்து தொலைகாட்சிகளும் நிச்சயம் ஒளிபரப்பி விடும் என்று நம்புகிறார்கள். ஹோட்டல் படுக்கையறையில்… Sponsored Karan won 10 Lacs from ₹100 by playing Poker at home Adda52 எத்தனை முறை பார்த்தாலும் பார்த்த படத்தையே திரும்பி திரும்பி பல முறை பார்ப்பது, தற்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பரவசப்படுவது, டிவி யில் பாடல் ஒலிக்கும் போது கூட சேர்ந்து பாடுவது, சபாஷ் என்று அலறுவது, உடம்பில் ஒரு புது உத்வேகம் வந்தது போல் துடிப்பது இவை எல்லாம் எம் ஜி ஆர் பக்தர்களால் மட்டுமே முடியும். சின்ன குழந்தைகள் போல் இவர்கள் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது, இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் மிக பெரிய ஆனந்தமே . காலங்கள் கடந்தும் தத்துவ பாடல்கள் மூலம் நம்பிக்கை ஊட்டும் எம் ஜி ஆர் படங்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் சல்யூட் தான்.......... Thanks.........
-
-
ரஜினி நடித்த படையப்பா படத்தில் ஸ்டைலாக ரஜினி கால் மேல் கால் போடும் காட்சி ஹைலட்டாகக் காட்டப்பட்டது,அனால் அந்தக் காட்சி" பெரிய இடத்துப் பெண்"ணில் தலைவரால் மிகச் சாதாரணமாகச் செய்த காட்சி,அதை அப்பட்டமாகக் காப்பி அடித்துத்தான் படையப்பாவில் சேர்த்து பில்டப் செய்துவிட்டனர்............. Thanks.........
-
-
ஒன்று. அதிசயபிறவிகளில் ஒன்று.
இரண்டு
இரட்டை இலை தனது இரண்டு விரலால் காட்டி
வெற்றி கண்டவர்.
மூன்று.
மூன்று பிறவிகளைக் கண்டவர்.
நான்கு
தலைவர் மேடையில் பேசும்போது நான்கு பக்கத்திலும் கண்கள்
கவனம் செலுத்தும்.
ஐந்து.
ஐந்து புலன்களையும்
அடங்கி ஆண்டவர்.
ஆறு
ஆறு கோடி மக்களின் தலைவர்.
ஏழு.
தலைவரின் அதிர்ஷட எண் ஏழு.
எட்டு.
எட்டாவது வள்ளல்(8)
ஒன்பது.
நவரத்தினம் படத்தில்
வித்தியாசமாக ஒன்பது
கதாநாயகியுடன் நடித்தவர் இவர் ஒருவரே.
பத்து
பத்திரமாத்து தங்கம்
நம் தலைவர்......... Thanks.........
-
https://youtu.be/VsW1HQlZbVY.........பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ அவர்கள் மக்கள் திலகம் அவர்களின் நடிப்பையும், கொடை தன்மையையையும் விவரிக்கும் காட்சிகள், பேட்டி...( பேட்டியை முழுவதும் பார்க்கவும்)......... Thanks.........
-
-
-
-
#நேரம் #பொன்னானது
கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பிரச்சனையினால் வெளியில் செல்லமுடிவதில்லை, பாதுகாப்பு காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறோம்...!
எவ்வளவு நேரம் மொபைலையும், டிவியையும் பார்ப்பது?
எப்படி நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்துவது?
நம்ம எம்ஜிஆர் லதாம்மா எப்படி உபயோகமாக
நேரத்தை செலவிடுகிறார்?
அதைத்தான் இக்காணொளியில் சொல்லியிருக்கிறார்!!!
அவர் கூறியதில் ஒரு விஷயத்தை மட்டும் நான் உருப்படியாக செய்துகொண்டிருக்கிறேன்...!
உடற்பயிற்சி தான் அது.......... Thanks.........
-
#MGR_sSuccess_movies
MGR started his career in acting (small roles) from 1937. By 1947 his leading role movie Rajakumari was released. From 1948 to 1950 he has acted as Hero and as well as Second Hero character, then from 1950 to 1977 (or 1978) he was the Hero.
Total films released up to 1978 is 136, Hero acted movies are 117. In this 117, one movie is Telugu movie Sarvathikari and one Malayalam movie Jenovah. Both these movies are released in Tamil version also. The Tamil movies only taken into account that is 115. His success rate follows:
350 plus days - En Thangai – 1952
301 to 349 days – Nil
251 to 300 days – Nil
----------------------------------
#200 to 250 days –
Nadodi Mannan – 1958
Enga Veetu Pillai – 1965
Ulagam Sutrum Valiban – 1973
Urimai Kural – 1974
------------------------------------
#175 to 199 days –
Madurai Veeran – 1956
Anbay Vaa – 1966
Oli Vilakku – 1968
Adimai Penn – 1969
Mattukara Velan - 1970
Rickshawkaran – 1971
------------------------------
150 to 174 days –
Rajakumari – 1947
Manthiri Kumari – 1950
Marmayogi – 1951
Malai Kallan – 1954
Kulabaghavali – 1955
Alibabavum Narpathu Thirudargalum – 19556
Thaiku Pin Tharam – 1956
Thirudathae – 1961
Kavalkaran – 1967
Neethiku Thalaivangku – 1976
-----------------------------
125 days to 149 days:
Mohini 1948
Maruthanattu Illavarasi 1950
Sarvathikari 1951
Andaman Kaithi 1952
Jenovah 1953
Chakravarthi Thirumagal 1957
Thai Sollai Thattathae 1961
Thayai Katha Thanaiyan 1962
Vettaikaran 1964
Panakara Kudumbam 1964
Deiva Thai 1964
Ayirathil Oruvan 1965
Kudieruntha Kovil 1968
Nam Nadu 1969
Ithaya Veenai 1972
Nallai Namathae 1975
Ithayakani 1975
-----------------------------
110 days to 124 days:
Kumari 1952
Puthumai Pithan 1957
Mahadevi 1957
Baghdad Thirudan 1960
Kudumba Thalaivan 1962
Dharmam Thalaikakum 1963
Ragisya Police 115 1968
En Annan 1970
Engal Thangam 1970
Kumarikottam 1971
Nalla Neram 1972
Netru Indru Nalai 1974
Ninaithathai Mudipavan 1975
Pallandu Vazhga 1975
Indru Pol Endrum Vazhga 1977
Meenava Nanban 1978
---------------------------------
100 days to 109 days
Periya Idathu Penn 1963
Nithiku Pin Pasam 1963
Parisu 1963
Padagotti 1964
Mugarasi 1966
Petral Than Pillaiya 1966
Thedi Vantha Mapillai 1970
Neerum Nerupum 1971
Raman Thediya Seethai 1972
Sirithu Vazha Vendum 1974
Uzhaikum Karangal 1976
Uruku Uzhaipavan 1976
-------------------------------
90 days to 99 days:
Mannathi Mannan 1960
Arasilangkumari 1961
Koduthu Vaithaval 1963
Chandrodayam 1966
Kannan En Kadalan 1968
Nan En Piranthan 1972
-------------------------------
80 days to 89 days:
Nam 1953
Thai Magaluku Katiya Thaali 1959
Nallavan Vazhvan 1961
Pasam 1962
Panathottam 1963
Kalangarai Vilakkam 1965
Parakum Pavai 1966
Thaiku Thalai Magan 1967
Vivasahi 1967
-----------------------
70 days to 79 days:
Panakari 1954
Kundukili 1954
Rajarajan 1957
Raja Desingh 1960
Sabash Mapillai 1961
Rani Samyuktha 1962
Madapura 1962
Vikramadityan 1962
Ananda Jothi 1963
Kanchi Thalaivan 1963
En Kadamai 1964
Thozhilalli 1964
Thayin Madiyil 1964
Panam Padaithavan 1965
Kannithai 1965
Thazhampoo 1965
Asai Mugam 1965
Nadodi 1966
Thanipiravi 1966
Arasakattalai 1967
Puthiya Bhoomi 1968
Kanavan 1968
Thalaivan 1970
Oru Thai Makkal 1971
Sangay Muzhangu 1972
Annamittakai 1972
Pattikattu Ponniah 1973
Madurai Meeta Sundarapandiyan 1978
-----------------------------
60 days to 69 days:
Kalai Arasi 1963
Nan Aanai Ittal 1966
Thalibaghayam 1966
Theru Thiruvizha 1968
Navarathinam 1977
----------------------
50 days to 59 days:
Kadhal Vaghanam 1968
Info: Number days for this movie is 56.
30 days to 49 days: NIL
10 days to 29 days: NIL
---------------
Days
Number of Movies
350 plus days 1 Movie
200 days to 250 days 4 Movies
175 days to 199 days 6 Movies
150 days to 174 days 10 Movies
125 days to 149 days 17 Movies
110 days to 124 days 16 Movies
100 days to 109 days 12 Movies
90 days to 99 days 6 Movies
80 days to 89 days 9 Movies
70 days to 79 days 28 Movies
60 days to 69 days 5 Movies
50 days to 59 days 1 Movie
#blogspot.com இணைய தகவல். உங்களுக்காக.... மேலும் தலைவரின் எந்த படமும் 50 நாட்களுக்கு கீழ் ஓடியதில்லை என்பது கூடுதல் தகவல்!
-
தற்பொழுது முரசு தொலைக்காட்சியில் தாயைக் காத்த தனயன் மற்றும் sunlife தொலைக்காட்சியில் உழைக்கும் கரங்கள்
-
நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.
நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளை இட்டவன் நீதான்...’ என்ற போட்டிப் பாடலில் லதாவும் மஞ்சுளாவும் ஆடியுள்ளனர். அதைப் பார்த்து, ‘ரெண்டு பேருமே பிரமாதமா ஆடுனீங்க’ என்று எம்.ஜி.ஆரே பாராட்டினார்.
தொடரும்....... Thanks...
-
அளவின்றி அள்ளி கொடுத்தவர் எம்ஜிஆர்
எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே விழா தமிழர் திருநாள்
அன்று கட்டு கணக்கான பணத்தோடு அள்ளி கொடுப்பார் வருவோர் அனைவருக்கும்
காஷ்மீர் படபிடிப்பிற்க்கு சென்ற எம்ஜிஆர் அங்கு நடந்த ராணுவ நிதிதிரட்டும் விழாவில் கலந்து கொள்ள அழைக்க படுகிறார் அதில்கலந்து கொணட எம்ஜிஆர் அன்று கலந்து கொண்டவர்கள் கொடுத்த தொகையை போல்.தொகையை தான் தன் பங்குக்கு அளிக்கிறார்
கொடையில் எம்ஜிஆரை வென்றவர்உண்டோ
வாழ்க எம்ஜிஆர் புகழ்.... Thanks...
-
[படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
......... Thanks...
நன்றி : தினமலர்]