-
தயாள குணம் படைத்தவர்களை தவிர பிறர் எவரும் , உதவி என்று சென்று கேட்டால் , இவனால் திருப்பி தர முடியுமா அல்லது இவனால் பின்னால் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றபடி பதில் சொல்லி அனுப்பி விடுவார்கள் .
திரு டைபிஸ்ட் கோபு அவர்களின் நிலைமையும் அப்படித்தான் அமைந்தது .
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல நமது இதய தெய்வம் உதவி செய்தது , திரு கோபு அவர்கள் புரட்சிதலைவர் அவர்களை பற்றியும் , உடனிருந்தே கை விட்ட மற்றவர்களையும் புரிய வைத்துவிட்டது ...
இது போன்ற பதிவுகள் இன்னும் தொடரட்டும் ....... Thanks...
-
குருநாதாரே... அருமையான பதிவு
புராணத்தில் கர்ணன் பற்றி படித்து தெரிந்து கொண்டும்..
இந்த காலத்தில் தலைவரை பார்த்து தெரிந்து கொண்டோம் கர்ணன் என்றால் இப்படி தான் இருப்பர் என்று...
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்
நடிகர் சிகணேசன் யாருக்கும் உதவி என்பதே செய்தது இல்லையா....... Thanks...
-
தலைவரின் வள்ளல் குணம் எப்போதும் நம்பிக்கையின் உச்சம் ஆனாலும் சிவாஜி சிறந்த நடிகராக இருந்தும் கூட நம்பிக்கையானவர்களுக்கு கூட பெரிய உதவிகள் செய்ததில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன் குருஜி உண்மையா அது...... Thanks...
-
Eppadi Thalaivar seitha veliye theriyaatha aayiramaayiram vuthavikal veli pattukkonde eruppathu,Evar saathaarana manitha piravi alla,
Kaakkum Kadavul
enbathu pulanaakirathu ayyaa.Pathivitta thangalukku ....nandri....... Thanks...
-
ஒரே வரியில் இதய தெய்வம் ஒரு தெய்வப் பிறவி. கண்களுக்கு தெரியாத தெய்வத்திடம் முறையிட்டால் எந்த காரியமும் சுபமாய் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் இந்த கலியுகத்தில் வாழ்ந்து உதவி என்று வந்தவர்களுக்கு வேண்டியதை செய்தார் இந்த மனித தெய்வம். நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தில் இறுதி காட்சியில் வில்லன் M.N. நம்பியார் காஞ்சனாவை சிறைப்பிடித்து வந்து தேங்காய் சீனிவாசனுடன் திருமணம் நடக்கும் இடம் அந்த திரைப்படத்தில் இதய தெய்வம் பெயர் கண்ணன் காஞ்சனா பெயர் ராதா. அந்த காட்சியில் ராதா கண்ணன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூக்குறலிட உடனே வில்லன் நம்பியார் நீ கூப்பிட்டவுடன் உடனே வந்து காப்பாத்த உன் கண்ணன் ஒன்னும் புராணகாலத்து கண்ணன் இல்லை என்று கூற உடனே கண்ணனாகிய இதய தெய்வம் கூறுவார் புராண காலத்து கண்ணன் வேண்டுமானால் கொஞ்சம் தாமதமாக வரலாம் ஆனால் இந்த கண்ணன் பெண்களுக்கு ஆபத்தென்றால் அடுத்த நொடியே அவங்கள காப்பாத்த முதலில் நிப்பான் தெரிஞ்சுக்க அடுத்து நடப்பத்து என்னவென்று அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே. எதிரிகளை துவம்சம் செய்து விட்டு கலியுக ராதாவை காப்பாற்றுவார் கலியுக கண்ணனாகிய நம் இதய தெய்வம். கோபுவின் பதட்டம் இறுதிவரை இதய தெய்வத்தை பற்றிய ஒன்று அவர் முழுவதுமாக அறிந்திருக்க தனிப்பட்ட அனுபவம் இல்லாதது தான். தன்னுடன் நடிக்காவிட்டாலும் கலை குடும்பத்தை சேர்ந்த ஒரு சக நடிகர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று அறிந்து அவர்களுக்கு உதவுவதை இதய தெய்வம் தன் கடமையாகவே கொண்டிருந்தார் என்றே கூற வேண்டும். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு குருநாதா. வாழ்த்துக்கள்......... Thanks.........
-
தலைவர் வாழ்நாளில் இதைப்போன்று எத்தனை ஆயிரம் நிகழ்வுகள் சார்.
தலைவர் பிறந்தது பிறருக்கு உதவுவதற்காகவேவா.
என்ன ஓர் பிறவி சார். ?!
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே ஓர் பாக்கியம்........ Thanks...
-
இதுவரை நான் கேள்விப்படாத ஒரு அருமையான, நெகிழ வைக்கும் பதிவு ......முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் தான் குருஜி.......... Thanks...
-
மக்கள் திலகம் "ரிக்க்ஷாக்காரன்" காவியத்தை உருவாக்கும்போது வக்கீல்/ நீதிபதி கதாப்பாத்திரம் நடிகர் மேஜர் சுந்தராஜன் ஏற்று நடித்தால் பொருத்தமாக இருக்கும் என காத்திருந்து பிறகு நடித்த சம்பவம் தொடர்பாக பதிந்த பதிவு ...கருத்து பின்னூட்டங்கள் ஒரு பார்வை.......எந்த நடிகர் மேஜருக்கு மாற்றாக நடித்திருந்தாலும் படம் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் இவர்தான் இந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று தலைவர் கருதுவதும் தீர்மானிப்பதும் அவரது திருப்திக்காக ரசனைக்காக அல்ல. மக்களுக்கு நன்றிலும் நன்றாக சிறப்பானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால்தான் அவருக்கு உறக்கம் வரும். படத்தின் நீளத்திற்கும் அதிகமாகப் பன்மடங்கு எடுத்து ஆகச்சிறந்ததைத் தேர்ந்து கோர்த்து சிறந்த படமாக உருவாக்க பொருள் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாத தலைசிறந்த நல்ல எடிட்டர் தயாரிப்பாளர் இயக்குனர் இசைமேதை அவர். கலையை மக்களுக்காக சமூக ஏற்றத்திற்காக மறுமலர்ச்சிக்காகப் பயன்பெறச் செய்த கலைஞானி அவர். திறமையை மதிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. SPB பாடலுக்கு மாதக்கணக்கில் காத்திருந்தார். மாணவப் பருவத்து பாடகரை இவர் மதித்து வாய்ப்பளித்ததால் கின்னஸ் சாதனை படைத்த பாடகராக அவர் விஸ்வரூபம் எடுக்க தலைவரே காரணம். கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் கூட அவரே வள்ளல்......... Thanks....
-
அறியப்படாத தகவல்
வாழ்த்துகள் பதிவிற்கு நன்றி
தலைவர் புகழுக்கு
மேலும் ஒரு வைரக்கல்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் காலை வெற்றி வணக்கம் நம்வாழ்வு நம் கையில் வீட்டில் உள்ளே இருப்போம் நல்லது நடக்கும்........ Thanks...
-
நிறைகுடம் என்றும் தளும்பாது.தலைவர் மக்கள் நலன்கருதி,மத்தியஅரசுடன் இணக்கமாக இருந்து காரியம் சாதித்தார்.தங்களால்,அதுபோல செய்ய முடியாவிட்டால்,மக்களிடம் பெயர்கெட்டுவிடுமே என்பதால் எதிரிகட்சிகள்,அதையெல்லாம் குறைகூறிப் பேசின.இன்றைக்கும் அப்படித்தான் நடக்கிறது.
தலைவர் நம்வேலை நடிப்பது,வாங்குற கூலிக்கு மாரடிப்போம் என்றில்லாமல்,இது என்படம்,வெற்றிபெறத்தான் வேண்டும் என்று மொத்த பட விஷயங்களையும் தனதாக்கி,நடித்தூ,வெற்றிபெறச் செய்ததால்தான் இன்றும் நம்மில் வாழ்கிறார்......... Thanks...