பழைய படம் :ஜெமினி சாவித்திரிQuote:
Originally Posted by Shakthiprabha
ஊருக்குப் பயந்து தான் ஒரு பெண்ணுடன் வாழ்வதா
இல்லையென்றால் --
Printable View
பழைய படம் :ஜெமினி சாவித்திரிQuote:
Originally Posted by Shakthiprabha
ஊருக்குப் பயந்து தான் ஒரு பெண்ணுடன் வாழ்வதா
இல்லையென்றால் --
அருமைQuote:
Originally Posted by Shakthiprabha
ஏன் வேதவல்லி???Quote:
Originally Posted by Shakthiprabha
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:banghead:Quote:
Originally Posted by Shakthiprabha
புரியவில்லை ஆனா! நானும் வலையைச் சலித்து தேடிவிட்டேன், வேதவல்லி என்ற பெயர் கொண்டவளாய் தக்ஷனின் மனைவி எங்குமே சுட்டிக்காட்டப் படவில்லை :?Quote:
Originally Posted by aanaa
தாக்ஷாயணி இரவும் பகலும் சிவனின் சிந்தனையில் பொழுதைக் கழிக்கிறாள்.
வெகு சிரத்தையுடன், பூஜை செய்கிறாள். மலர்கள் சேகரிப்பதும், அபிஷேகம் செய்து
சிவனை வழிபடுவதுமே அவளுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
மெய்வருத்தி இறைப்பணி செய்வதை தந்தை கண்டால்
மனம் வருந்தக் கூடுமோ என்று அஞ்சுகிறாள். தக்ஷன், தன் மகளின்
செய்கையில் பெருமை கொள்கிறான். "ஈசனோ என் சித்ததில் உறைபவர் தாங்களோ
என் எண்ணத்தின் இருப்பவர். ஈசனிடம் நான் கொண்டிருப்பது பக்தி, தாங்களிடம்
நான் வைத்துள்ளது அளவற்ற பாசம்" என்று தாக்ஷாயணியும் தந்தையின் செல்ல மகளாகவே
வளர்கிறாள். சிறுவயது முதல் தக்ஷனிடம் வளர்ந்து வருவதால், அவன் சிவ பூஜை செய்வதைப்
பார்த்து அவனின் சிவபக்தையைக் கண்டு தாக்ஷாயணியும் அவ்வாறே சிவபக்தி கொண்டுவிட்டாள்
என்று உவகைக் கொள்கிறாள் வேதவல்லி.
சோமன்(சந்திரன்) தன் மூன்று மனைவியருடன் தக்ஷனைக் காணவருகிறான். மூன்று மகள்களுள்
க்ருதிகையிடம் அவன் அதிகம் அன்பு பாராட்டுகிறான். இது மற்ற இருமனைவிகளுக்கும் மனவருத்தம்
தருகிறது. ( சோமன் ரோஹிணியிடம் அதிகப் பிரியத்துடன் இருந்தான் என்று தான் கதையுண்டு.
திருவிளையாடற்புராணத்தைப் பற்றி எந்த நூலை மையமாகக் கொண்டு ஆராய்ந்து கதையமைதிருக்கிறார்கள் என்று புரியவில்லை)
சஹோதரிகள் தாக்ஷாயணியைக் காணச் செல்கின்றனர். அவள் பூஜை செய்யும் அழகைக் பார்த்திருக்கின்றனர்.
முதன் முறையாக சகோதரிகளிடம் தன் மனதை திறந்து ஆசையை வெளிப்படுத்துகிறாள் தாக்ஷாயணி.
தான் மூன்று காலமும் சிவபூஜை செய்வது, அந்த சிவனையே மணானாகப் பெறுவதற்காக என்று கூறுகிறாள்.
முப்பொழுதும் அவனையன்றி என் மனம் வேறொன்றை நினைக்க மறுக்கிறது என்று வெட்கத்துடன் தெரிவிக்கிறாள்.
இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவள் தாய் அதிர்ச்சியடைகிறாள். தக்ஷனிடம், மகள் கூறியதைக் இயம்பி,
தன் பயத்தை வெளியிடுகிறாள். "ஆடும் வயதில் த்யானத்தில் ஈடுபட்டாள். மண்டபம் கட்டிக் கொடுத்தோம்,
பின் அங்கு செய்ய சிவலிங்கம் வேண்டும் என்றாள். செய்து கொடுத்தோம். இன்று அந்த சிவனே வேண்டுமென்கிறாளே" என்று பதபதைக்கிறாள்.
தக்ஷனுக்கு சொல்லொணா மகிழ்ச்சியுண்டாகிறது. அவன் மனைவிடம் இதைப் பற்றி சிறுதும் கவலைக் கொள்ளவேண்டாம், செய்வது என்ன என்று தனக்கு தெரியும் என்று ஆணையிடுகிறான். அவன் மனம் முழுதும் ஆணவத்தின் சாயை படிய எக்காளிக்கிறான். "இனி அந்தச் சிவனும் என்னை வணங்கவேண்டும்" என்று குதூகலிக்கிறான்.
வைகுந்தத்தில், அக்னியும், வாயுவும், வருணனும், நாரதர் சமேதமாகச் சென்று தங்கள் வருத்தத்தைத் தெர்விக்கின்றனர். அவர் ஆணைப்படி ஆடி ஆடி ஆட்டம்கண்டிருக்கிறோம் என்கின்றனர். தங்களது சுதந்திரம் பறிபோய்விட்டதாய் புலம்புகின்றனர்.
திருமால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது எனினும், ஒரு உபாயம் கூறுவதாகக் அருளுகிறார்.
(தொடரும்)
ஆழியின் நடுவே பாம்புப் படுக்கை அமைப்பில் பின்னே நாகத்தின் தலையும் அசைவது போல் செய்திருக்கிறார்கள். சிறு விஷயங்களிலும் கவனமெடுத்து, வைகுந்தக் காட்சியில் எல்லாம், ஆழியின் ஒலி அடித்தளத்தில் ஒலித்துக்கொண்டே இருப்பது பாராட்டத் தக்கது.
தாக்ஷாயணியாக சுஜிதா நன்றாக நடித்துள்ளார். வேதவல்லியாக சுமங்கலி நன்றாக நடித்திருக்கிறார்.
இருவரும் இருக்குமிடமே தெரியாமல் செய்துவிடுகிறார் ஓ.ஏ.கே சுந்தர். என்ன ஒரு அலட்சியம்! அட்டகாசம்! மந்தகாசப் புன்னகை! சொற்சுத்தம்! நடை! பாவனை! :clap: இது வரை நடித்த பலரில் (ஸ்ரீதர் பூவிலங்கு மோஹன் உட்பட) இவருக்கே முதல் பரிசு!
ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.
// தாக்ஷாயணியாக சுஜிதா நன்றாக நடித்துள்ளார். வேதவல்லியாக சுமங்கலி நன்றாக நடித்திருக்கிறார். இருவரும் இருக்குமிடமே தெரியாமல் செய்துவிடுகிறார் ஓ.ஏ.கே சுந்தர். என்ன ஒரு அலட்சியம்! அட்டகாசம்! மந்தகாசப் புன்னகை! சொற்சுத்தம்! நடை! பாவனை! இது வரை நடித்த பலரில் (ஸ்ரீதர் பூவிலங்கு மோஹன் உட்பட) இவருக்கே முதல் பரிசு!
ஒவ்வொரு விளையாடலில் வெவ்வேறு நடிகர்கள் எனும் பக்ஷத்தில் ஓ.ஏ.கே சுந்தருக்கு தக்ஷன் வேடம் முடிந்ததும் அவரது பாத்திரப் படைப்பு முடிந்து விடும். நிச்சயமாக இவர் இல்லாத திருவிளையாடல் தொடர், சுருதி இறங்கும்.//
yes SP mam,
I also feel the same. O.A.K.Sundhar is one of the very few, speaking very good 'thamizh'. Most of the others speaking 'tamil', which is so horrible to digest in this serial.
:yes: :)
புராணக் கதைகளை ஆதாரமில்லாமல் சிதைப்பது வரவேற்கத்தக்கதல்ல.Quote:
Originally Posted by Shakthiprabha
:huh:
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
ஆனா,
ஆதாரமின்றி இவ்வளவு பெரிய தயாரிப்பில் இத்தனை பேர் பார்க்க தொடரை சித்தரிக்க மாட்டார்கள் என்பது என் கருத்து.
நமக்குத் தான் தெரியவில்லை எதை ஆதாரமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார்கள் என்று. :?
தக்ஷனின் பிரச்சனைக்கு திருமால் உபயம் வழஙகுகிறார். சோமன் தன் மனைவியர் அத்தனைப் பேரிலும்
க்ருத்திகையிடம் (நம் கதையின் படி. எந்த நூலைப் புரட்டிப் படித்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள் என்று புரியவேயில்லை ) மட்டுமே அதிகப் ஆசை வைத்திருக்கிறான்.
(ரோஹிணியிடம் ப்ரியத்துடன் இருப்பதாகத் தான் அனைத்து வலைப்பதிவுகள் / சுட்டிகள் தெரிவிக்கின்றன. ரோஹினி எனபவளுக்கு அழகு, அழகுச்சாதனங்கள், ஆபரணங்கள் சம்பந்தபட்ட அனைத்தும் ப்ரியமானதாகக் கருதப்படுகிறது. (அதனால் இந்நட்சத்திரத்தின் ஆளுமையில் பிறந்தவர்களுக்கும் இதே பொன்ற ஆசைகள் இருக்கக்கூடும்) அழகனாம் சந்திரனும், இவளிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்துபவனாகக் கருதப்படுகிறான். அஃதாவது ரோஹிணி நட்சட்த்திரத்தின் 'காரகன்' சந்திரன். Astrologically, this constellation is ruled by the planet moon )
சோலைவனத்தில் காதலின் பிடியில் சிக்கித் தவித்து, கவிதைகள் பிதற்றியபடி தன் ஆசை மனைவி க்ருத்திகையைத் தேடுகிறான். ஆவலுடன் அங்கு வரும் அச்வினியையும், ரேவதியையும், எரிச்சலுடன் திருப்பி அனுப்பிவிடுகிறான். க்ருத்திகையிடம் பிரியமாக இருப்பதை, சுட்டிக் காட்டி திருமால் "சோமனின் குடும்ப்பத்தில் ஏதோ பிரச்சனையாமே என்று அடி எடுத்துக் கொடுக்கிறார்"
"உங்கள் கண்ணசைவிற்கு ஆயிரம் அர்த்தங்கள்" என்று உடனே புரிந்து கொண்ட நாரதர், தம் வேலையைத் துவங்குகிறார். தனித்திருக்கும் மற்ற சஹோதரிகளிடம், அவர்களின் பரிதாபத்தை, கோபத்தை, ஆதங்கத்தை தூண்டிவிடுகிறார். "எங்கள் சஹோதரி அல்லவா சந்தோஷமாக இருக்கிறாள், இதில் எங்களுக்கும் ஒன்றும் பிரச்சனையில்லை" என்று மழுப்பப்பார்த்தாலும், வாடிய முகங்கள், அவர்களின் சந்தோஷமற்ற நிலையை காட்டிக்கொடுத்து விடுகிறது. இங்கேயே இருந்துகொண்டு வாடுவதை விட உங்கள் தந்தையிடமே சென்றுவிடலாம் என்கிறார் நாரதர்.
இதற்கு வழிவகுக்குமாறு, சோமனிடமும், ஆசையற்ற மனைவிகளை இங்கேயே வைத்திருப்பதில் என்ன பயன், உங்களின் சந்தோஷ வாழ்வைப் பார்த்து அவர்கள் பெருமூச்சுவிடுவார்கள். பொறாமைப் படக்கூடம், அது உங்களை வாழ விடாமல் செய்து விடும் என்றவுடன், அவர்களை தந்தையிடமே அனுப்பிவைக்க உடன் புறப்பட்டு விடுகிறான் சோமன். க்ருத்திகைக்கு மிகுந்த கோபமும் மனவருத்தமும் நாரதரின் பேரில் உண்டாகிறது.
பலத்த தர்க்கத்தில் சோமனும் மற்ற மனைவியரும் ஈடுபடுகின்றனர். ஒரு கொடியில் பூத்த மலர்கள் நாங்கள், ஒன்றை மட்டும் சூடிக்கொண்டு, மற்றதை வீசிவிடுவது தான் நியாயமா என்று பொருமுகிறாள் அஸ்வினி. க்ருத்திகையைப் போல் என் மனதை புரிந்து கொண்டு அன்பு செலுத்தத் தவறியது, இவர்களின் தவறே என்று வாதிட்டு, அவர்களைத் தங்கள் தந்தையிடமே அனுப்புவிடுகிறான் சோமன்.
தனித்து இருவரும் வந்திருப்பதைக் கண்ட தாயிடம், பின்னர் கணவர் வருவதாகக் கூறி சமாளிக்கின்றனர். க்ருத்திகையும் பிறகு வருவாள் என்கின்றனர்.
தக்ஷனுக்கும் இந்த செய்தி எட்டுகிறது
(தொடரும்)
க்ருத்திகையாக வரும் நடிகை பேசும் தமிழ், கொஞ்சிக் கொஞ்சி எரிச்சலூட்டுகிறது. பாடத்தை உருவேற்றி அப்படியே ஒப்பித்துவிடுகிறார். அதில் பாவம்(bhavam), ஏற்ற-இறக்கம் என்று எதுவுமே இல்லை. ரேவதியாக செய்திருப்பவர் நன்று. அதை விட அஸ்வினியாக வரும் நடிகை வெகமாய், அழகுத் தமிழில் பொரிந்து தள்ளுகிறார். பாராட்டுக்கள்.
"சந்தோஷமாக இருக்கிறீர்களா" என்று கேட்கும் வேதவல்லியிடம்
"ம்ம் இருக்கிறாள்" என்ற அஸ்வினியின் ஒற்றை பதில் அனைத்தையும் கூறிவிடுகிறது. ரசிக்க முடிகிறது :clap:
நேற்றே கூறவெண்டுமென்று நினைத்தாலும், தயக்கத்தின் காரணாமாய் கூறாமல் விட்டுவிட்டேன். தயக்கமாய் இருப்பினும் இன்றேனும் இதைக் கூறாமலிருக்க முடியவில்லை. நேற்று, ரேவதி/அஸ்வினி உடைகளும் இன்று ரேவதி அணிந்திருந்த உடையும் உருத்தும்படி இருக்கிறது. அஃதாவது, கைவைக்காத (ஸ்லீவ்லெஸ்) உடைகள் அணிய நடிகைகளுக்கு தயக்கமிருப்பின், ஒன்று உடையை மாற்றிவிடலாம், இல்லாவிட்டால் நடிகையை மாற்றிவிடலாம். இரண்டும் இல்லாவிற்றால், சிறிதளவு கைகளையும் சோளியின் நீளத்தையும் நீட்டிவிடலாம். இது எதுவுமே இன்றி, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ராஜ உடைகளை, தோல்நிறத்தில் இல்லாத வெள்ளை நிற (கை வைத்த) ஸ்லிப்களோடு :banghead: அணிந்துக்கொண்டு உடையையும் கேவலப்படுத்தி, தாங்களும் கேலிக்குள்ளாக்கிக்கொள்கிறார்கள். இது பார்ப்பதற்கும் படுமோசமாய் இருக்கிறது.
சோமனும் க்ருத்திகையும் பேசிக்கொள்வதற்கு மிக அழகான ஊஞ்சல், அதில் பூ அலங்காரங்கள் என்று பிரமாதப்படுத்தியிருந்தார்கள். பின்னால் பொடப்பட்டுள்ளது மட்டும் சுவரொட்டி என்று அழகாய்த் தெரிகிறது. ஏதேனும் சோலையில் சென்றே இக்காட்சியை எடுத்திருக்கலாம்.
சோலையின் (!!) முன்னால் அட்டைப் பூக்களை காற்றில் அசையச்செய்வதற்காக, பொம்மலாட்டட்தில் தேர்ச்சியின்றி ஆட்டுவது போல் ஆட்டியிருக்கிறார்கள். அது மென்பொருள் உபயோகித்து செய்யப்பட்ட க்ராஃபிக்ஸ் எனும் பக்ஷத்தில், படு சுமாரான வேலை.
தஷன் அரண்மணையில் பல இடங்களில் அட்டைத் தூண்கள் இளிக்கின்றன. சாகரின் ராமாயணம், மஹாபாரதம் முதலிய தொடர்களில் காட்சியமைப்பிற்காக எத்தனை அதிகம் செலவிட்டிருப்பார்கள் என்று இத்தொடரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்! நல்முயற்ச்சியுடனும் நோக்கத்துடனும் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்தொடரில் பணமும் முயற்சியும் சற்று அதிகமாகக் காட்சியமைப்பிற்காகவும் ஒதுக்கினால் இன்னும் பிரமாதப் படுத்தலாம்.
வைகுந்தத்தில் செய்திருக்கும் ஆழியமைப்பு, அதைச் சேர்ந்த க்ராஃபிக்ஸ் நன்று.
சோமனுக்கும் அவன் மனைவியருக்கும் நடக்கும் தகராறில், பொதுவாய், ஆசையின்றி, ஊருக்காக வாழும் கணவன் மனைவியின் நிலை படமாக்கப் பட்டது போல் இருந்தது. ஊர் என்ன சொல்லும்! உற்றாரிடம் எந்த முகத்தைக்கொண்டு விழிப்போம், அடடா குழந்தைகள் அனாதையாகிவிடுவார்களே என்ற நினைப்பில் ஆசையற்ற தாம்பாத்யம் கொண்டுள்ள பலரின் மனவாட்டதை படம் பிடித்து காட்டியுள்ளார்கள்
சக்திப்பிரபா!
உன்னிப்பாக கவனித்து விமர்சனங்களை எழுதி வருகின்றீகள்
:clap: :clap:
தொடருங்கள்