There are thousands of hubbers here. But only a handful find a proverb offensive. There lies the answer.
Sent from my Micromax A102 using Tapatalk
Printable View
There are thousands of hubbers here. But only a handful find a proverb offensive. There lies the answer.
Sent from my Micromax A102 using Tapatalk
Why comparison with Endhiran ? What context ?
Bill...no context. Some people thrive on making provocative posts. If you check his last 10 posts, all or most would be around bashing or throwing abuse at Vijay for no rhyme and reason. That's the only context. So best is to ignore and not waste your time over illogical posts bro.
பாகுபலி 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் இம்மாதம் துவங்கி நடைபெற உள்ளது. வசூல் மன்னனாக பெயர் வாங்கிய ராஜமௌலி பாகுபலி படத்தையடுத்து என்ன படம் யாருடன் என இப்போதே தெலுங்கில் செய்திகள் சுற்றத் துவங்கிவிட்டன. இந்நிலையில் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் என செய்திகள் பரவ தெலுக்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் செம குஷியாகிப் போனார்கள். இது ஒரு பக்கம் எனில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி படம் இயக்க உள்ளதாகவும் இன்னொரு வதந்தி பரவ தற்போது இரண்டும் இல்லை என்றாகியுள்ளது.
ராஜமௌலி அடுத்து ‘நான் ஈ’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் பிஸியாகப் போகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் நானியும் ’பலே பலே மொகதீவோ’ என்ற படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்புகளைப் பெற்றுள்ளது. எனவே இதுதான் சரியான தருணம் என அடுத்த இரண்டு வருடங்கள் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகம் தான் என்கிறது ராஜமௌலிக்கு நெருங்கிய தரப்புகள்.
இந்நிலையில் மகேஷ் பாபுவின், ரசிகர்களுக்கும், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு விருப்பமான நடிகர் பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் நடிப்பார் என்று நினைத்த வேளையில் இப்படி ஒரு அறிவிப்பு சம்மந்தப்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை பாக்ஸ் ஆபிஸ்
5. பாகுபலி:
பத்து வாரங்கள் முடிந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தில் பாகுபலி உள்ளது. சமீபத்தில் எந்தப் படமும் இவ்வளவு நாள்கள் பாக்ஸ் ஆபிஸில் தாக்குப் பிடித்ததில்லை.
சீனாவில் 5000 திரையரங்குகளில் பாகுபலி ரிலீஸ்...ஆச்சர்யத்தில் இந்திய சினிமா!
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் ரிலீஸாகி, 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து, இந்திய சினிமா வரலாற்றில் புதிய வரலாறை படைத்த "பாகுபலி", அடுத்து சீனாவிலும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, நடிப்பில் கடந்த ஜூலை 10ம் தேதி ரிலீஸான படம் "பாகுபலி". இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், தற்போது சீனாவில் 5000 திரையரங்குகளில், வருகிற நவம்பர் மாதம், திரையிடப்பட உள்ளது. இந்தியாவின் ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் இதற்கான சர்வதேச உரிமத்தையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சீனாவின் இ ஸ்டார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் படத்திற்கான சீன மொழி உரிமையை ஆர்கா நிறுவனத்திடம் வாங்கியுள்ளது. சீனாவில் 5000 திரையரங்குகள் என்பது அந்நாட்டின் ஒட்டு மொத்த திரையரங்குகளில் 18% ஆகும். மேலும் சீனப் பதிப்பில் 20 நிமிடக்கதை குறைக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் "வின்சென்ட் டபாலியன்" இதனை எடிட் செய்துள்ளாராம் .
இவர் “நவ் யூ சீ மி ,” “டேக்கன் 2” மற்றும் “தி இன்க்ரிடிபில் ஹல்க்" ஆகிய படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சீனாவில் இதே இ ஸ்டார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அமீர்கான் நடித்த பிகே படத்தினை திரையிட்டது குறிப்பிடதக்கது. இது வரையில் இந்தியாவை தாண்டி அதிக வசூல் சாதனை புரிந்த திரைப்படம் என்ற பெருமையை பிகே தக்கவைத்து கொண்டுள்ளது. தற்போது பாகுபலி இதனை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.மேலும் பாகுபலி சீனாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 5000 திரையரங்குகளில் வெளியாக இருப்பது இந்தியத் திரையுலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
75 days
Attachment 4454
பாகுபலிக்கு கிடைத்த முதல் விருது!
ராஜமௌலியின் படைப்பான பாகுபலி தனது, பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கான முதல் விருதினை வென்றுள்ளது. NDTV யின் கேட்ஜெட் குரு விருதில், சிறந்த எபக்ட்டுக்கான விருதினை பாகுபலி வென்றுள்ளது. ஜூலை 10, 2015ல் ரிலீஸான இப்படம், அன்று முதல்லே தமிழ், தெலுங்கு, இந்தி என முன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றியை கண்டது, 600 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது.
இந்திய சினிமாவின் அந்தஸ்தை உலகறிய செய்த இப்படம் சீனாவில் மொழிபெயற்பாகி வெளியாக இருக்கும் முதல் தென்னிந்திய படமாக உயர்ந்துள்ளது. தற்போது முதல் முறையாக NDTV யின் இவ்விருதினை இப்படம் பெற்றுள்ளது. பட குழவின் சார்பாக இவ்விருதினை பெற்றுக்கொண்ட ரானா டகுபதி. இப்படத்தின் படபிடிப்புகள் 320 நாட்களிலேயே நாங்கள் முடித்துவிட்டோம், ஆனால் இதன் கிராபிக் வேலைகள் முடிய மூன்று வருடங்கள் ஆனது என்று கூறினார் ரானா.
ஹாலிவுட் படமான "ஜுராசிக் வேர்ல்ட்" படத்திற்கு கிராபிக் வேலைகள் செய்த, அதே குழுவினர் தான் பாகுபலி படத்திற்கும் கிராபிக் பணிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிராபிக் காட்சிகளுக்காக மட்டுமே 85 கோடி ரூபாய், செலவு செய்துள்ளனர்.
இப்படத்தில் மொத்தம் 4,500-5,000 கிராபிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன, அதாவது இப்படத்தின் 90 சதவிகிதம் காட்சிகள் கம்ப்யூட்டர் VFX எனப்படும் கிராபிக்ஸ் வேலைப்பாடுகளால் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பல விருதுகளை பாகுபலி பெறும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் தனது முதல் விருதை பெற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Hopefully directors learn from Rajamouli how to pick a star cast for a period film.
Hopefully directors teach star how to act not how to walk
ya definitely acting also. Not just how to walk, jump, run run etc. At least oru filmfare award aavathu win panrathai paarkkanum
https://pbs.twimg.com/profile_images...ATX_bigger.jpg Rebel ★ Prabhas™ @pavan1230 2h2 hours ago
#Baahubali Hyd IMAX BIG screen 600 Capacity 87th day Fast Filling ( 90%+ Full ) #BaahubaliStorm #Prabhas #SSR https://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f483.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f483.png
In PVR Skywalk 3.45PM show 60% Theatre occupancy for today ! Baring 4 rows all are full till now :) No Wonder it is highest grossing Indian film right now.
i am 110% sure that the second part won't be a big hit like the first one :???:
It is bad time for tamil cinema..
Hindi and telugu cinema are outperforming tamil cinema these days! :(
It's going to be real challenge for prabhas to choose his next movie :roll: people expectation would be so high,I think he's is going to have hard time...
rajamouli ss @ssrajamouli Oct 6 Baahubali will be screened three times and this is the 5000 capacity outdoor auditorium that will play it on 7th..
https://pbs.twimg.com/media/CQowRd0U8AA6lAj.jpg
rajamouli ss @ssrajamouli Oct 6 Audience. Many Koreans took my autograph on the dvd cover of EEGA... That film did so much to my career...thanks EEGA...:)
படப்பிடிப்பு தாமதமாவதால் தள்ளிப்போகும் 'பாகுபலி 2' ரிலீஸ் - TAMIL HINDU
http://tamil.thehindu.com/multimedia...i_2419910f.jpg
2016 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த 'பாகுபலி 2' திரைப்படம் தற்போது 2016 நவம்பரில் வெளியிட திட்டமிட்ட்டுள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்தது, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது, சீனாவில் 'பி.கே' படத்தை வெளியிட்ட இ-ஸ்டார்ஸ் நிறுவனம் 'பாகுபலி' படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழு களம் இறங்கியிருப்பதால், 'பாகுபலி' இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை படக்குழு இன்னும் தொடங்கவில்லை.
'பாகுபலி' படத்தை விளம்பரப்படுத்தி, வெளிநாடுகளில் முதலில் வெளியிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை முடித்து 2016 நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு 2016 கோடை விடுமுறை வெளியீடாக 'பாகுபலி 2' வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' முதல் பாகத்துக்கான படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்துக்கான 40% படப்பிடிப்பை ராஜமெளலி முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முதல்வர் கொடுத்த வாய்ப்பை நிராகரித்த ராஜமௌலி!
மாவீரன், ஈ, பாகுபலி படங்களின் மூலம் இந்தியப்புகழடைந்த ராஜமௌலி தற்போது அனைவரின் எதிர்பார்ப்பான பாகுபலி 2 படத்தின் உருவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவில் புதியதலைநகர் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட இருக்கிறது. மேலும் இந்தத் தலைநகர் அமைப்பில் சில சினிமா இயக்குநர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அரங்கங்களும், விழாவும் உருவாக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பொயாபதி மற்றும் ராஜமௌலி இருவரிடமும் கேட்டார்களாம். செட்டிங் அமைக்கும் பணிக்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு அளித்த தொகையில் விருப்பமில்லை எனக் கூறி பொயாபதி விலகியுள்ளார்.
அடுத்தகட்டமாக இந்த வாய்ப்பு, ராஜமௌலிக்குப் போயிருக்கிறது. அவர் எதுவுமே கேட்காமல் மறுத்துவிட்டாராம். பாகுபலி 2 படத்தை முடிக்கும் வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது என திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டாராம்.
வரவேற்பு நிகழ்ச்சியை மிக விமரிசையாக சினிமா பாணியில் நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. காரணம் இந்த விழாவிற்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்க உள்ளனர் என்பதுதான் இவ்வளவு ஏற்பாடுகளுக்கும் காரணமாம்.
எனினும் தற்போது இரு பெரும் இயக்குநர்களும் நிராகரிக்க வேறு ஒரு இயக்குநருக்காக காத்திருக்கிறார்கள் ஆந்திர அரசியல் பிரமுகர்கள்.
நேரடி தமிழ் படங்களே 100 நாளை கடப்பது அரிதாகிவிட்ட சூழ்நிலையில் தெலுங்கு, தமிழில் உருவாகி தெலுங்கு வாசனையுடன் வெளிவந்த பாகுபலி 100 வது நாளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு, இதுதாண்டா போலீஸ், அருந்ததி போன்ற படங்கள் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அவை டப்பிங் படங்கள் இது இரு மொழிப்படம்.பிரமாண்ட தயாரிப்பு, சீனுக்கு சீன் திருப்பம் நிறைந்த திரைக்கதை. பிரபாஸ், ராணாவின் வீரமான நடிப்பு, தமன்னாவின் அழகு எல்லாமுமாக சேர்ந்து படத்தை 100 வது நாளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சென்னையில் 6 தியேட்டர்களில் 100 நாளை கடந்திருக்கிறது. மற்ற ஊர்களில் ஓரிரு தியேட்டர்களில் எட்டிப்பிடித்திருக்கிறது.இந்திய சினிமா சரித்திரதில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். அதிக வசூலைக் கொடுத்த படம். வெளியான அத்தனை மொழிகளிலும் வெற்றி பெற்ற படம். உலக சினிமா ரசிகர்களை இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த படம் என பலவேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது பாகுபலி.ஆந்திராவில் 100 வது நாளை வெகு விமர்சையாக கொண்டடுகிறார்கள். இதன் அடுத்த பாகத்தின் பணிகளும் வேகமாக தொடங்கி இருக்கிறது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு தெலுங்கு திரையுலகம் வாழ்த்துக்களை அள்ளி வழங்கி வருகிறது.
Baahubali 100 Days Poster
https://pbs.twimg.com/media/CRgkfJcUwAAJjsa.jpg
தமிழ் வேர்ஷன் வெளியிட்டது யாரு? விநியோகஸ்தர்கள்??
ஞானவேல்ராஜா தமிழில் விநியோகம் செய்ததாக வருகிறது. கார்த்தி, சூர்யா படங்களில் விட்ட காசையெல்லாம் இப்படி பிடிச்சாத்தான் சமாளிக்க முடியும். :)
என்ன மாதிரியான கடின உழைப்பு: பாகுபலி குறித்து ஷாரூக் கான் ஆச்சரியம் - August - Tamil HINDU
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரம்மாண்ட தயாரிப்பான பாகுபலி படத்தை பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தன்னுடைய ‘தில்வாலே’ படப்பிடிப்புக்காக பல்கேரியா பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ஷாரூக் தனது ட்விட்டரில் பாகுபலி படத்தை “பெரிய அகத்தூண்டுதல்” என்று வர்ணித்துள்ளார்.
“பாகுபலி! ஒரு படத்துக்காக என்ன மாதிரியான கடின உழைப்பு; இந்தப் படத்தின் உருவாக்கத்தில் உள்ள அனைவருக்கும் எனக்குள் ஏற்படுத்திய தூண்டுதலுக்காக நன்றிகள். தாவ முயற்சி செய்தால்தான் வானுயரத்தை எட்ட முடியும்” என்று ட்வீட் செய்துள்ளார் ஷாரூக்.
பாகுபலியின் அடுத்த பாகம் 2016-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Is Suriya the surprise element of 'Baahubali 2'?
https://igmedia.blob.core.windows.ne...aahubali_m.jpg
With only a few weeks to go before the shooting to commence for S.S. Rajamouli’s ‘Baahubali – The Conclusion’ there is a lot of curiosity drummed up for this mega sequel. While the principle cast Prabhas, Rana Daggubatti, Anushka, Tamannaah, Ramya Krishnan, Sathyaraj, Nasser will have more to do there are also going to be some major additions to the cast as it has now become a pan Indian film.
One bit of news that keeps surfacing time and again is the possible appearance of Suriya in a very important role in the film. Incidents that support this is Rajamouli has expressed his desire to work with Suriya in many interviews and likewise on the occasion of the audio release function of ‘Baahubali’ Suriya openly asked Rajamouli for a small part in the sequel. The suspense regarding Suriya’s involvement in the mega ‘Baahubali 2’ will only be broken as time goes on.
Looks like Suriya wants to be part of it ...
It is a very good business tactic too. If Surya is involved, then they can get a bigger BO collection in Tamil version of BB-2. As nGnavelraaja was the distributor of baahubali, it all adds up well in this "story"! :)
'பாகுபலி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமவுலி
ஹாலிவுட் படங்களின் பிரமாண்டங்களை மட்டுமே பார்த்து ரசித்த நமது ரசிகர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுத்ததோடு, உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கிய இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'பாகுபலி' உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் எஸ்.எஸ்.ராஜமவுலி தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் 'பாகுபலி' இரண்டாம் பாகத்தை அடுத்து 'பாகுபலி' மூன்றாம் பாகத்தை இயக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.ராஜமவுலி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
'பாகுபலி 3' படம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தை இரண்டாம் பாகத்திற்கு மேல் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. எனவே 'பாகுபலி' மூன்றாம் பாகம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார். இந்த விளக்கத்தின் மூலம் 'பாகுபலி' மூன்றாம் பாகம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பாகுபலி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு... பிரபாஸ் அப்டேட் வெர்ஷன்?
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஹீரோ பிரபாஸுக்கு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்புகள் கிடைக்கத் துவங்கிவிட்டன.
தமிழில் வரும் பிரபல கார் விளம்பரத்தில் கூட பிரபாஸ் தலை காட்டுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணாவும் ஒரு இண்டர்நெட் குறித்த விளம்பரத்தில் வருகிறார்.
இந்நிலையில் மிகப்பெரிய வாய்ப்பாக பாலிவுட் வசூல் புகழ் பட சீரீஸ் தூம் படத்தின் 4ம் பாகத்தில் நடிக்க பிராபாஸிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தூம் 4ல் ஹ்ருதிக் ரோஷன் , அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தியே தூம் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி. அதே சமயம் ஹ்ருத்திக் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே வருவதாகவும், அமிதாப் ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் அபிஷேக் பச்சன் கண்டிப்பாக போலீஸாக வருவார். என்ற நிலையில் பிரபாஸை வில்லனாக நடிக்கக் கேட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இன்னும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படத்தின் ஹீரோதான் கதைப்படி வில்லன் என்பதால் பிரபாஸ் தான் ஆன்டிஹீரோவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தூம் 4ல் ஒரு வேளை அமிதாப் தான் ஆன்டி ஹீரோ எனில் படம் கண்டிப்பாக சான் கானரி நடித்து வெளியான எண்ட்ரேப்மெண்ட் பாணியில் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
'பாகுபலி 2'-வில் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மாற்றம்
http://tamil.thehindu.com/multimedia...2_2600125f.jpg
ராஜமெளலி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பாகுபலி 2' படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக கமலக்கண்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்து, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய இப்படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது.
'பாகுபலி' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை 'எந்திரன்', 'ஐ' உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வையில் காட்சிப்படுத்தினார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மேற்பார்வையாளராக கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "'மகதீரா', 'ஈகா' உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த கமலக்கண்ணன் 'பாகுபலி 2' படத்திற்கு பணியாற்ற இருக்கிறார். இவர் பல்வேறு மாநில விருதுகளும், கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு முறை தேசிய விருது வென்றிருப்பது நினைவுகூரத்தக்கது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
'எந்திரன் 2' படத்துக்காக ஸ்ரீனிவாஸ் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிகரெட்டுக்குக் கொள்ளி வைத்த ராஜமௌலி - சிறப்பு ஆல்பம்!
http://img.vikatan.com/album/2015/11...umb/125433.jpg http://img.vikatan.com/album/2015/11...umb/125437.jpg http://img.vikatan.com/album/2015/11...umb/125457.jpg http://img.vikatan.com/album/2015/11...umb/125458.jpg http://img.vikatan.com/album/2015/11...umb/125460.jpg http://img.vikatan.com/album/2015/11...umb/125462.jpg
இந்திய அளவில் 2015-ன் கூகுள் தேடலில் 'பாகுபலி' சாதனை!
http://tamil.thehindu.com/multimedia...i_2659218f.jpg
2015ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியாவின் மொத்த தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தையும், படங்களின் பெயர் தேடலில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. மரகதமணி இசையமைத்த அப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், 2015 ஆண்டுக்கான கூகுள் தேடலிலும் 'பாகுபலி' சாதனை படைத்திருக்கிறது. இத்தகவலை 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
2015 ஆண்டுக்கான மொத்த கூகுள் தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதுமட்டுமன்றி கூகுள் தேடலின் படங்களின் பிரிவில் 'பாகுபலி' முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இதே போன்று 2015ம் ஆண்டுக்கான ஃபேஸ்புக் தேடலில் 4ம் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Baahubali @BaahubaliMovie 1 hour ago
#Baahubali (Telugu) Pacchaa Bottesina Video Song has garnered nearly 1.5 Crore views on Youtube. A BIG Thanks to all
https://pbs.twimg.com/media/CXOnhfTUMAAvXwQ.jpg
Watch #Baahubali, the greatest battle in Indian Cinema, today at 8pm, only on Sony MAX HD.
https://pbs.twimg.com/media/CXPMCJ3UAAQf0BY.jpg