ராகவேந்தர் சார்,
'நான்' படத்தின் நிழற்படங்களாக தலைப்பிட்டிருப்பவை இரண்டும் 'மூன்றெழுத்து' படத்தின் ஆடு பார்க்கலாம் ஆடு பாடலின் ஸ்டில்கள்..
Printable View
ராகவேந்தர் சார்,
'நான்' படத்தின் நிழற்படங்களாக தலைப்பிட்டிருப்பவை இரண்டும் 'மூன்றெழுத்து' படத்தின் ஆடு பார்க்கலாம் ஆடு பாடலின் ஸ்டில்கள்..
சொல்லனும்னு இருந்தேன் சொல்லிட்டீங்க. அது மூன்றெழுத்து ஆடு பார்க்கலாம் ஆடு.
தலைவரே,
உங்களை விட அதிகமாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மேல் பாசமும் மதிப்பும், அவர் இசை மீது தீராத காதலும் கொண்டவன். அவருடைய குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்.
அவர் ஒரு Genius beyond Compare என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆனால் எனக்கு அவர் மீது சில வருத்தங்கள் உண்டு.
1) ராமமூர்த்தியோடு இணைவில் இருந்த போது ,எல்லா படங்களுக்குமே சரி கவனம் கொடுத்து அருமையாக இயங்கி கொண்டிருந்தனர். 25 படங்கள் நடிகர்திலகத்துடன் .அத்தனையும் முத்துக்கள்.
2)தனித்து வந்த பிறகு எம்.எஸ்.வீ யின் அணுகுமுறையில் சிறிதே மாற்றங்கள்.(அரசியல்?)
ஆள் பார்த்தே இசை அமைத்தார். பெரிய தயாரிப்பாளர் ,இயக்குனர் என்றால் தனி. சிவாஜியை விட்டு பீம்சிங் சிறிதே தள்ளி போனதும், பந்துலு, வேலுமணி அவரை விட்டு போனதும் , அவர் பாலாஜி, முக்தா படங்களுக்கு விஸ்வநாதன் இசை படு சுமாராகவே அமைந்தது. நல்லவேளை பாலாஜி இளைய ராஜாவிற்கு மாறினார். பந்துலு,வேலுமணி,ராமண்ணா ஆகியோருக்கு தொடர்ந்து பட்டையை கிளப்பினார்.நம் படங்களில் A .V .M , ஸ்ரீதர் படங்களுக்கே மிக உயர்தர இசை கிடைத்தது.
3)ராமமூர்த்தியை அவர் ஒதுக்கிய முறை மிக குரூரமானது((சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன?)சேர்ந்து இசையமைத்த பத்து படங்களை தன் பெயரில் போட்டு புகழ் தேடி கொண்டார். இத்தனைக்கும் கர்நாடக இசை அடிப்படை அறிவு கூட இல்லாத M .S .V க்கு குருவாக போதித்தவர் ராமமூர்த்தி.
4)நான் இருவருடனும் பேசியுள்ளேன். ராமமூர்த்தி தாங்கள் இணைந்து இசையமைத்தவற்றை மிக ஆழமாக அலசுவார்.விஸ்வநாதனுடன் பேசுவது படு கேவலமாக இருக்கும். இவருக்கும் இசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்ற அளவில்.
5)ஒரு கண்ணதாசன் சம்பத்த பட்ட நிகழ்ச்சியில் இருவரும் மேடையில் இருந்த போது ,ராமமூர்த்தி உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் nuances பற்றி விரிவாக பேச ஆரம்பித்ததும் நாம் பேசியது போதும் ,அவர்கள் பாட்டை கேட்கட்டும் என்று விஸ்வநாதன் சொன்ன முறை பல சந்தேகங்களை கிளப்புகிறது.
6)பெருங்காய டப்பா போல கோவர்த்தன்,ஹென்றி, சங்கர்,கணேஷ்,வெங்கடேஷ் இத்தனை பேரும் விஸ்வநாதன் பக்கம் இருந்ததால் வண்டி 1970 வரை ஓடியது.ராமமூர்த்தி P .R ,அதிர்ஷ்டம் அனைத்திலும் weak .
7) பள்ளி கூட மாணவனிடம் ஆசிரியர் உட்கார்ந்த மாதிரி யாராவது உட்கார்ந்து வேலை வாங்கினால் மட்டுமே தரமாக கொடுப்பேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம், NT போன்ற மற்றவர்கள் பணியில் தலையிடாவர்களுக்கு பாதகமாகத்தானே இருந்திருக்கும்?மெகா டிவி யில் அவர் சொல்வதை கேட்டால் ரத்தம் கொதிக்கும்.
8)தன்னிடமிருந்து வாய்ப்புகளை தட்டி பறித்த இளைய ராஜாவிடம் இவர் காட்டிய தேவை மீறிய பவ்யம்.பெருந்தன்மை.
மற்ற படி உங்கள் அளவு எனக்கும் அவர் இசை கடவுளே.
தலைவரே,
உங்கள் பாயிண்ட்களையெல்லாம் பார்த்தேன். எனது சந்தேகங்கள்....
ராமமூர்த்தியை வைத்துதான் விஸ்வநாதன் வண்டி ஓட்டினார் என்றால், இருவரும் பிரிந்ததும் விஸ்வநாதன் அல்லவா காணாமல் போயிருக்க வேண்டும். ராமமூர்த்தி ஏன் காணாமல் போனார்?
மறக்க முடியுமா படத்தை கலைஞர் கொடுத்தாரே. அதில் 'காகித ஓடம்' தவிர மற்ற பாடல்கள் எடுபடவில்லையே.
ஆள் பார்த்து இசையமைப்பவர் இல்லை என்பதற்கு இரண்டு படம் உதாரணம் காட்டியிருந்தேன். அதைக் கண்டுக்கவே இல்லையே. ஜேயார் மூவிஸ் போன்ற சின்னக் கம்பெனிக்குக் கூட புதிய பூமி, எங்க மாமா. ஞானஒளி, மன்னவன் வந்தானடி என்று அருமையான பாடல்களைத் தந்தவர் எம்.எஸ்.வி.
கோவர்த்தனத்தையும், ஜி.கே.வெங்கடேஷையும், சங்கர் கணேஷையும் வைத்து விஸ்வநாதன் வண்டி ஓடியிருந்தால் அவர்கள் தனியே போய் ஏன் ஜொலிக்க முடியவில்லை?. (ஒன்றிரண்டு தவிர) . இவர்கள் பெயர்கள் வெளியே தெரிந்ததே, மெல்லிசை மன்னர் தன பெயருக்கு கீழே 'உதவி: இன்னார்' என்று போட்டு கௌரவப்படுத்தியதால்தான். இந்த பெருந்தன்மை இளையராஜாவிடம் இல்லை. இதுவரை எந்த உதவியாளர் பெயரையும் போட்டதில்லை, தன சொந்த தம்பி உள்பட. (உதவியாளர்கள் பெயரைப்போட்டு பெருமை சேர்த்தவர்கள் எம்.எஸ்.வி., கே.வி.எம்., மற்றும் தேவா). மெல்லிசை மன்னர் பெயரை தனியாகப் போடவேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபனில் ஜோசப் கிருஷ்ணா பெயரை 'இசை உதவியாளர்' என்று, மற்ற உதவியாளர்களோடு சேர்த்து போட்டிருந்தார்.
"ஊட்டி வரை உறவு, குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ், உயர்ந்த மனிதன், சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், உத்தரவின்றி உள்ளே வா, நினைத்தாலே இனிக்கும் படங்களின் பாடல்கள் எல்லாம் கூட ஏற்கெனவே ராமமூர்த்தி போட்டு வைத்திருந்த டியூன்கள்தான். அதை எம்.எஸ்.வி. பின்னாளில் பயன்படுத்திக்கொண்டார்" என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட மாட்டீர்கள் என்று திடமான நம்புகிறேன்.
தாங்கள் கொடுத்த படங்கள் -தயாரிப்பாளர்கள் யார் என்று பார்க்கவும்.
ஜேயார் movies - படு சுமார் பாடல்கள்.(சிவந்த மண் அளவிலா அது?பட்டணத்தில் பூதம்,பூவும் பெட்டும்,கைராசி, கோவர்த்தன் Standard கூட இல்லையே?)
வசந்த காலம் வருமோ -ஆபோகி அதிசயம்.
என் பாயிண்ட் ரொம்ப சிம்பிள் . சம திறமை கொண்ட இருவரில் ஒருவர் வியாபார நுணுக்கம் அறிந்த அரசியல்வாதி. மற்றவரோ disciplin குறைந்த அப்பாவி இசை மேதை மட்டுமே.
நீரும் நெருப்பும் பற்றி நான் சொல்வதை விட விஸ்வநாதன் சொல்வதை கேட்கவும்.(தலையீடு!!!)
மீடியா களின் வெளிச்சத்தால் இணைந்து கொடுத்த பாடல்களும் விஸ்வநாதன் credit க்கு போக ,அவருக்கு இத்தனை உயரம் வந்தது என்ன ஆச்சர்யம்? அதில் சரிபாதி ராமமூர்த்திக்கு போக வேண்டுமல்லவா?
படங்களுக்கு நன்றி ராகவேந்தர் சார், ஓடும் நதி கிடைப்பதில்லையா?
If I can correctly remember Ravichandran had played the role of villain in two films during his early days. The first film is 'Kalyana Mandabam' (1965) where Anandan played the hero. Ravichandran becomes a good guy after the second half, if my memory serves correctly. The other is 'Theydi Vantha Thirumagal' (1966) where he really played the stylish modern villain which was a welcome respite after seeing formula-type cast crooks. SSR was the hero but Ravichandran stole the show for his unique display of a villain. Both these films had some good numbers but faded into oblivion. Anyone care to upload songs from these films?
Ravichandran was not an exception in playing villain roles just after being paradied as a new hero on the block. His immediate predecessors like MGR, Shivaji, Gemini and Jai Shankar, his contemporary had also played villain or negative roles during their formative years. In this regard Gemini Ganesh was an exception further. He acted as a villain in 'Vallavanakukku Vallavan' (1965) when he was already an established hero.
You have lot of Rare info on Ravi.Keep it up. We are enjoying it.
The MGR-Shivaji clan culture almost got into the Ravichandran-Jaishankar pair but thank God it did not materialize. Of course, there were still some who made comparisons of the both and their films but it was just that. Producers also saw the viability in booking both of them often giving equal importance to their respective roles. From 'Gowri Kalyanam' (1966) up to 'Arunasalam' (1997) they have acted together in quite a number of movies with each maintaining their individual styles of acting.
In the film stills of 'Gowri Kalyanam' Ravichandran almost looked like MGR and some even nicknamed him 'Chinna MGR'. Such was his popularity enjoyed by Ravichandran those days. To be reckoned as a junior MGR itself was a honor and there were stories abound that MGR did not take to it kindly. Perhaps this could be one of the reasons as to why MGR excelled in 'Anbe Vaa' especially in the song 'Hey Nadodi' where he performs multiple dances of youth of the day. This song was seen as a veiled challenge to Ravichandran if one hears the lyrics as well as the dance movements.
Ironically, this song was choreographed by the short-lived Malaysia Mahalingam who appears in it and in other MGR films like 'Parakkum Paavai' and 'Kudiiruntha Koil'. Set a Malaysian to teach another Malaysian?!
Any Discerning Viewer can make out that Ravi basically adopted Sivaji style and has a photogenic look of sivaji but his contents are similar to north based entertainment movies. Since he was coming in the mold of Action and entertainment ,a small section of C centre would have made some comparisons. Otherwise, There is no major influence on Ravi by any other personality.
Mandraraj Sir, Let us confine here to Ravi or who co-worked with Ravi atleast in one movie with him.otherwise, we will indulge in too much of digression.
விரைவில் எதிர்பாருங்கள்
அன்று கண்ட முகம்
நாலும் தெரிந்தவன்
நீ வரவேண்டும் என்று எதிர் பார்த்தேன் ,நினைத்தேன் வந்தாய் நூறு வயது ....
மினி விமரிசனங்கள் விரைவில்.....
நிலவுக்கே போகலாம் ... இந்தப் பாடல் டிவிடியில் இல்லை. வேஸ்ட்... நரி ஒன்று சிரிக்கின்றது ... ஆறுதல்...
அன்று கண்ட முகம்... படம் முழுக்க பிரிண்ட் சரியில்லை... அங்கங்கு எகிறுதல்... குறிப்பாக வழக்கொன்று தொடுத்தேன் பாடலை ரசிக்க முடியவில்லை.
இதயம் பொல்லாதது .... மாமாவின் one of the masterpieces .
கண்ணதாசன், வாலி உட்பட அத்தனை கவிஞர்களும் விரும்பிய ஒரே இசையமைப்பாளர் கே.வீ.மகா தேவன் தான் என்று அடித்து கூற முடியும். மற்றவர்களை போல மேட்டருக்கு மீட்டர் ,மீட்டருக்கு மேட்டர் என்ற பெனாத்தல் (இதை ஒரு இசை மேதை வாரா வாரம் மெகா டிவி யில் இன்னொரு .......உடன் உட்கார்ந்து பேசும் விதம் குமட்டல்)இன்றி ,கட்டுரை எழுதி கொடுத்தாலும் எந்த வித மேலை கலப்புமின்றி தரமான இசை கொடுப்பாராம். அதனால் தன் தயாரிப்பில் உருவான வானம்பாடி படத்தில் கண்ணதாசன் ,மாமாவையே இசையமைக்க வைத்தார் தன் உயிர் நண்பரை தவிர்த்து. ஆனால் உயிர் நண்பரோ வாலியை கொம்பு சீவி விட்டு பழியை நன்றாக தீர்த்து கொண்டார்.
Ravichandran 2nd innings - Neeya/Kavarimaan/oomai vizhaigal/sattam oru sathurangam/amman koil kizhakala
3rd or 4th innings -grand father role in aadu puli/kanden kadhali
Neeya jodi - deepa a disco song "oru kodi inbangal oruvagum sorgangal asaindhadum aazhagu kolangal" music by shankar ganesh
Hindi remake of Naagin - (who did this role in hindi)
இது ரவிச்சந்திரன் திரியா அல்லது விஸ்வநாதனை வசைபாடும் திரியா என்பது தெரியவில்லை.
எம்.எஸ்.வி யிடம் உள்ள பெரிய குறை அவர் தனது பாடல்கள் எல்லாம் கூட்டு முயற்சி, கூட்டு முயற்சி என்று சொல்லி தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு உரிய கிரடிட்டைக்கொடுத்ததுதான். "சில" இசையமைப்பாளர்கள் போல 'நான் செய்தேன், என்னுடைய உழைப்பு, என் மூளையில் உதித்த இசை' என்றெல்லாம் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச்சொல்லாமல் இருக்கும்போதே இந்தக்காய்ப்பு காய்ச்சுகிறார்கள்.
எத்தனையோ இந்தி படங்களின் ரீமேக் படங்களுக்கு இசையமைத்தும் அவற்றின் ட்யூன்களை இடது கையால்கூடத் தொடாதவர் எம்.எஸ்.வி. சொந்தமாக தன்னுடைய பாணியில் இந்திப்படங்களுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத ஆனால் தரத்தில் சிறந்த பாடல்களைத் தந்தவர்.
ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்தபின், ஒரு வருடத்துக்கு 26 படங்களைத் தந்தவர் எம்.எஸ்.வி. ஆனால் தனியாக மொத்தமே 26 படங்களைத் தந்தவர் ராமமூர்த்தி. அவற்றில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அதிகம் போனால் ஆறு. என்ன பெரிய வெரைட்டி?. உண்மையில் ஆள் பார்த்து இசையமைத்தவர் ராமமூர்த்திதான். ராமண்ணா படங்களுக்கு மட்டுமே (நான், முன்றெழுத்து, தங்க சுரங்கம்) நல்ல இசையைத் தந்தவர். மற்றவர்களை முடிந்தவரை ஏமாற்றியவர். நீலகிரி எக்ஸ்ப்ரஸில் வரும் 'திருத்தணி முருகா தென்னவர் தலைவா' எல்லாம் குன்னக்குடி அல்லது சூலமங்கலம் சகோதரிகள் அடித்து தூள் கிலப்பக்கூடியவை.
கே.வி.எம். மாமாவைப்பொருத்தவரை, ஒரு லக்கில் வண்டி ஓட்டியவர். பணமா பாசமா, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் எல்லாம் அவர் இசையால் வென்றவை அல்ல. தேவரின் தாய்சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம் படங்களின் பாடல்களை படத்தின் பெயரை மாற்றிப்போட்டால் கூட யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு "வெரைட்டி" ???????????????? யைத் தந்தவர் மாமா.
கொடுத்த ஒரேயொரு படத்தையும் (எதிரொலி) குட்டிச்சுவராக்கிய கே.வி.எம். வீட்டு வாசல் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை கே.பாலச்சந்தர்.
அதே பாலச்சந்தர் கொடுத்த இன்னொரு ஸ்டேட்மென்ட் : "அபூர்வ ராகங்கள் ஒரு மியூசிக் சப்ஜக்ட். அதுக்கு தகுந்த மாதிரி பாடல் போடுங்கள் என்று மட்டும்தான் சொன்னேன். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து படத்தை எங்கோ உயரத்துக்கு கொண்டுபோய் விட்டனர்"...
கே.வீ.எம் போன்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். Too Much .
பேசும் படம் வாசகர் ஒருவர் கேள்வியும் பதிலும் 1968 இல் வெளியானது.
எதிர்நீச்சல் படத்தில் குமார் இசையமைத்த அடுத்தாத்து அம்புஜத்தை ,சேதி கேட்டோ போன்ற பாடல்களின் இனிமையை ,அதே எதிர்நீச்சல் படத்தில் விஸ்வநாதன் இசையில் வெளியான என்னம்மா பொன்னம்மா பாட்டில் காணவில்லையே?
பாவம் .பிரிவு வாட்டுவதுடன், புதியவர்களுக்கு ஈடு கொடுக்க திணறுகிறார்.
குமாருடன் இந்த பாடு.
ஓஹோ, அபூர்வ ராகங்கள், சங்கராபரணம் படத்தை விட கர்நாடக இசையால் சிறந்ததா?
நல்ல செய்திதான் .
கார்த்திக் சார் ,
நான் விஸ்வநாதன் சாருக்கு எதிரானவன் இல்லை. தமிழக இசை மேதைகளை விஸ்வநாதன், ரகுமான், இளையராஜா என்று வரிசை படுத்துபவன் நான்.
ஆனால் சேர்ந்து கொடுத்த சாதனைகளை இவருடையதாக்கும் முயற்சிகளுக்கு எதிரி. அவருடைய அரசியல் நடத்தைகளுக்கு (அப்பாவி போன்ற அற்புதமான நடிப்பாற்றல்)நான் எதிரி. ராமநாதன், சுப்பராமன், A .M .ராஜா ,கே.வீ.மகாதேவன் தான் trend setters என்பதில் உறுதியானவன். ராமமூர்த்திக்கு உரிய இடம் கொடுக்க படாததை கண்டிப்பவன்.
இனிமேல் இந்த வாதத்தை இந்த திரியில் தொடர போவதில்லை.
தலைவரே,
அந்த வாசகரும், அவருக்கு பதிலளித்த பேசும்படம் ஆசாமியும் தங்கள் ரகம் போலும். 'எதிர்நீச்சல்' வந்தது 1968-ல். இவர்கள் பிரிந்தது 1965 மத்தியில். 68-க்கு முன் இரண்டரை ஆண்டுகளாக விஸ்வநாதன் போட்ட போடை அந்த ஆசாமி கேட்கவில்லையா?. ராமமூர்த்திக்கு வாழ்வு தந்த ராமண்ணாவுக்கு 1966-ல் எம்.எஸ்.வி. போட்ட அருமையான ட்யூன்கள் பறக்கும் பாவை, நீ, குமரிப்பெண் பாடல்கள் அந்த செவிடர் காதுகளில் விழவில்லையா?
'எதிர் நீச்சலில்' ஒரேயொரு பாடலுக்கு திணறுவதாக மனசாட்சியை அடமானம் வைத்த 'பேசும் படம்' ஆசாமி, அதற்கு முந்தைய 67-ல் அதே பாலச்சந்தருக்கு இசையமைத்த பாமாவிஜயம் கேட்கலையா?. சென்னையில் காது மருத்துவர்கள் நிறைய உண்டே. எதிர்நீச்சலுக்கு முன்னர் வந்தவைதானே காவல்காரன், ஊட்டிவரை உறவு, இருமலர்கள், எங்க பாப்பா, சித்தி, தங்கை, மோட்டார் சுந்தரம்பிள்ளை, அன்பே வா, நான் ஆணையிட்டால், ராமு என ஏராளமாக உண்டே. அதையெல்லாம் அந்த பேசும்படம் ஆசாமி பார்க்கவில்லையா?. ஏன்?. ஓசி பாஸ் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இப்படி எழுதினாரா?. அவர்தான் எழுதினார். அதை இங்கே எடுத்து பிரசுரித்த தங்களைப்பற்றி இதைப்படிப்போர் என்ன நினைக்கக்கூடும்?.
1968-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் எட்டு படங்கள் வெளியாயின. அவற்றில் புதிய பூமி, கணவன், கண்ணன் என காதலன், ரகசிய போலீஸ் 115, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில் ஆகிய படங்களின் எம்.எஸ்.வி. பாடல்களை விட, கே.வி.மகாதேவனின் தேர்த்திருவிழா, காதல் வாகனம் ஆகிய படங்களின் பாடல்கள் டாப் என்கிறீர்கள் அப்படித்தானே. சபாஷ்... சபாஷ்...
(அத்தகைய கால கட்டத்தில் கே.வி.எம்.முக்கு ஜாமீன் கொடுத்துக் காப்பாற்றியவை ஏ.பி.நாகராஜனின் புராணப்படங்கள் மட்டுமே).
கே.பி. யின் படங்களான எதிரொலியையும், அபூர்வ ராகங்களையும் பாடல் ரீதியாக ஒப்பிட்டால் உடனே உங்கள் துருப்புச்சீட்டான சங்கராபரணத்தை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறீர்கள். ஏன்?. எதிரொலி பாடல்கள் டப்பா, சரிதானே.
அப்புறம் என்ன ஒப்பீடு டூ மச?...
1965-1966- சுமார் பதினெட்டு படங்கள் இணைவு இசையே . ஆனால் ஒருவர் பெயரில் வெளியானது. நீலவானம், கலங்கரை விளக்கம் ,நீ உட்பட.
1967- விவசாயி இசையை மறந்தீர்களோ? பேசும் தெய்வத்தையும், செல்வத்தையும் விட எந்த படம் இனிமை?
1968- ஒப்பு கொள்கிறேன்.ஆனால் பணமா பாசமா பாடல்கள்தான் super hit ரகம் என்ன செய்வது?
அன்று கண்ட முகம்-1968
கதையை விட்டு சற்றும் அங்கே இங்கே நகராத (True to the story line ) ரக திரைக் கதை,காட்சியமைப்பு.. contemporary appeal நிறைந்த period போர்வையில் வந்த படம். கல்கி மூலக்கதை சற்றே தேவனின் வாசனை கொண்டது. கல்கி செக்ஸ் கதை எழுதினாலும் அதில் காந்தியம் ,மறியல், கதர் இல்லாமல் போகாதே. ராமகிருஷ்ணன் இயக்கி தயாரித்த ஐந்து லட்சம்,சிநேகிதி எல்லாமே சுவாரஸ்மான சுமார் வெற்றி படங்களே.
ஆத்மநாதன் என்கிற வக்கீல் தனது ஜூனியர் ஆக சேரும் காஞ்சனாவை நேசிக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தன் பணக்கார கட்சிகாரர் அழைப்பை ஏற்று ஊட்டி செல்லும் போது காஞ்சனாவையும் அழைத்து சென்று தன் ஆசையை வெளியிட, காஞ்சனா ஏற்று கொள்ளாமல் ,சிறிது அவகாசம் கோருகிறாள். ஒரு முறை வெளியில் செல்லும் போது ஒரு வாலிபன் கைதி உடையில் மயக்கமாய் இருப்பதை பார்த்து ,வீட்டுக்கு எடுத்து வந்து சிகிச்சையளிக்கிறாள். ராஜேந்தர் என்ற வாலிபன் கண் விழித்ததும் ஆத்மநாதன் கண்டு அதிர்ச்சியாகி ,தன்னையும் தன் அன்னையையும் தவிக்க விட்டு ஓடிய மூத்த அண்ணனே என்றும், ஒரு வெள்ளை அதிகாரி கொலை வழக்கில் தான் தண்டனையடைய காரணமானவனும் அவனே என கூறுகிறான்.தான் சிறையிலிருந்து தப்பித்தது அன்று கண்ட பெண்ணின் முகத்துக்காக என கூறும் போது ,அந்த முகமான காஞ்சனாவும், ராஜும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். போலீஸ் உடன் சில தனி நபர்களும் ராஜ் பின்னால் அலைய ,சிலர் அவனை கொல்லவும் முயல, பின்னர் உண்மை கொலையாளி ராஜின் நண்பனே என்றும், அந்த நண்பனை காக்க அவன் தந்தைதான் ராஜ் போலீசில் மாட்ட அல்லது தீர்த்து கட்ட அலைகிறார் என்று தெரிந்து பிரச்சினை தீர வேண்டிய சந்தர்ப்பத்தில் நண்பன் விபத்தில் மரணமடைய ,ஆத்ம நாதன் தம்பிக்கு தான் இழைத்த கொடுமைக்கு தற்கொலை செய்து கொள்கிறார். காஞ்சனா கோர்ட் டில் வாதாடி காதலனை மீட்டு சுபமாக்குகிறாள் முடிவை.
இதில் எனக்கு பிடித்தவை ரவியின் அருமையான நாலு சண்டை காட்சிகள் (ரவியின் சுறுசுறுப்பு கலந்த ஸ்டைலுக்கு ஜே )அக்கால சண்டை என்றால் கொஞ்சம் boxing ,கொஞ்சம் மல்யுத்தம், கொஞ்சம் ஜூடோ,அப்புறம் காலால் X பிடி,கைமுறுக்கல் இவைதான்..ரவி- ஜெயா மேடம் chemistry அருமை. பாடல்கள் இதயம் பொல்லாதது,கண் படைத்தான், வாடா மச்சான் இசை,படமாக்கம் அருமை.(வழக்கொன்று பாடல் சுமார் ,காட்சி ஜோர்).நாகேஷ்-ரவி இணைவு நடனம் எப்போதுமே களை கட்டும்.இதிலும் அப்படியே. இக்கால road chase படங்களின் சாயல் கொண்ட விறுவிறுப்பு. கடைசி கோர்ட் காட்சி படு matured ஆக ,sensible ஆக இருக்கும். வசனம் ,காட்சிகள் சில ரொம்ப surprise கொடுக்கும். ஜாக்ரதை என்று ஜெயா சொல்லி விட்டு கதவை உடனே தட்டி எச்சரிக்கையின்றி திறக்கும் ரவியை இதுதான் உங்க ஜாக்ரதையா என்று கேட்பது,நண்பர் வக்கீலி டம் நடந்து முடிந்ததற்கு உங்கள் அட்வைஸ் வேண்டாம். நடக்க போறதை பேசலாம் என்பது.இப்படி பல.ரவியின் constipation முக பாவம்,பேச்சு சிறையிலிருந்து தப்பி வந்த கைதியின் anxiety கலந்த கவலைக்கு படு பாந்தமாய் அமைகிறது.ஜெயா மேடம் superb .மற்றவர்கள் ஓகே .
பிடிக்காதவை -அவ்வப்போது உட்கார்ந்து விடும் லாஜிக் இல்லா காட்சிகள்.அசோகன் காதல் வெளியிடும் காட்சி. ரவியின் ஓவர் வளைசல் .
மொத்தத்தில் ரொம்ப வித்யாசமான ரவியின் படம். இயக்குனர் ராமகிருஷ்ணன், வசனம் (மாரா ),இசை (மாமா) பலத்துடன் ஜெயித்தார். (வெற்றி படமே)
அன்று கண்ட முகம்-1968
'இதயம் பொல்லாதது'
http://www.youtube.com/watch?v=ia7u0...yer_detailpage
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
http://www.youtube.com/watch?v=Lw5ES4nTNjI&feature=player_detailpage
வாடா மச்சான் வாடா
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwgAxxfx2TI
Andru kanda mugam. (Full movie)
http://www.youtube.com/watch?v=aOAZ6hWmbjI&feature=player_detailpage
The below reviews have been done by MS.Saratha. I will not do them again.
1) காதலிக்க நேரமில்லை
2) இதயக்கமலம்
3) குமரிப்பெண்
4) எங்க பாப்பா
5) நான்
6) மோட்டார் சுந்தரம்பிள்ளை
7) கவரிமான்
8) அதே கண்கள்
9) மூன்றெழுத்து
10) பாக்தாத் பேரழகி
11) உத்தரவின்றி உள்ளே வா
12) புகுந்த வீடு
13) நீயா..?
14) பணக்காரப் பிள்ளை
15) மஞ்சள் குங்குமம்
16) மகராசி
17) எதிரிகள் ஜாக்கிரதை
18) சொர்க்கத்தில் திருமணம்
19) காவியத்தலைவி
அடுத்தடுத்து நாலும் தெரிந்தவன், வாலிப விருந்து, நிமிர்ந்து நில்
ராகவேந்தர் சார், கார்த்திக் சார், Mr .மகேந்திரா,
ஒருவரையும் காணோம்?
நாலும் தெரிந்தவன் -1968
http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page16
பக்கம் 16 இல் இதில் சம்பந்த பட்டவர்கள் விவரம் கதை சுருக்கம் எல்லாமே உள்ளது.
பாரதிக்கு அடுத்து ரவிக்கு ideal pair என்றால் காஞ்சனாதான். அதே கண்களுக்கு பிறகு இதில் கலக்கினார்கள். ஷம்மி கபூர் படங்களான professor ,பிரம்மச்சாரி எல்லாமே ஹிந்தியில் பார்க்கும் போது ஜாலியாக தோன்றினாலும் அவை என்ன genre என்று சிண்டை பிய்த்து கொள்ள வைக்கும். சிறிது காமெடி, சிறிது செண்டிமெண்ட், சிறிது என்டர்டெய்ன்மென்ட் ,அருமையான பாடல்கள், crazy டான்ஸ் என்று கலவையாக ,ஆனால் யோசித்தால் எதுவுமே பிரமாதமாக இருக்காது. ஆனால் நன்றாக ஓடி நற்பெயர் எடுத்து விடும்.அவற்றை remake செய்யும் போது ,யார் நடித்தாலும் பல்லிளித்து விடும்.
இந்த வகையில் ஒரு அருமையான காமெடி கருவை சுமாராகவே கையாண்டிருப்பார்கள். saving grace ரவியின் அருமையான நடிப்பு. நிறைய கோணங்களில் சிவாஜியை நினைவு படுத்துவார். வயதான ரோல் நடிக்கும் போது காதலிக்க நேரமில்லை முத்துராமன் பாணியில் underplay செய்து அசத்துவார்.
இந்த படத்தில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் வழக்கமான ரவி பாணியில் பிரமாதமாக வந்திருக்கும்.கரும் புள்ளி SMS இசை. படு சுமார். கண்ணுக்குள் சிக்கி கொண்ட, பூவாய் பூவாய்,செல்ல மாமா,நிலவுக்கே, நரி ஒன்று என்று வானொலியில் கேட்டிருந்தாலும் படத்தின் இளமைக்கு தகுதியில்லாதவை.
இந்த படத்தில் நாகேஷ் பயங்கர உறுத்தல்.(இவர் குட்டிச்சுவர் பண்ணியது கொஞ்ச நஞ்சமா)காமெடி,கலகலப்பு காட்சிகள் படு சுமார். கதை சம்பத்த பட்ட காட்சிகள் நன்கு வந்திருந்தாலும் ,படத்தின் tone ,mood உற்சாகம் தர வேண்டிய படத்தில் இவை highlight ஆகவே தோன்றாது. இந்த அருமையான கருவை வைத்து சுமார் படத்தை கொடுத்து சுமார் வெற்றி படம் ஆக்கினார் நம்நாடு புகழ் ஜம்பு.
இதையே படு சுவாரஸ்யமான திரைகதை ,அற்புதமான காமெடி, இவற்றை வைத்து நடிகன் என்று பிரமாத படுத்தினார் வாசு.
இந்த படத்தில் ரவியின் நடிப்பும், காஞ்சனாவின் அழகும் தூக்கி நிறுத்தியது. ரவியின் வித்யாசமான சுமார் படங்களில் ஒன்று.
வாலிப விருந்து-1968
எனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.
பாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.
ரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.
உற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.
ரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.
படம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.
கிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.
நிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)
சத்தியம் தவறாதே, ஓடும் நதி, மயிலாடும் பாறை dvd கிடைக்கிறதா?
அடுத்து தேடி வரும் தெய்வ சுகம் ,ஒத்தையடி பாதையிலே.
சத்தியம் தவறாதே படம் இன்னும் வெளிவரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு நமது வாசு சார் முத்துக் குளிப்பவரே பாட்டை இந்தத் திரியில் முன்னர் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்க்கவும்.
ஓடும் நதி மயிலாடும் பாறை இன்னும் வரவில்லை.
மயிலாடும் பாறை பிறகு மயிலாடும் பாறை மர்மம் என்று பெயர் மாறி அதற்குப் பிறகு மீண்டும் நள்ளிரவு 12 மணி எனப் பெயர் பெற்று தணிக்கையானது. சென்னையைத் தவிர்த்து ஒரு சில வெளியூர்களில் திரையிடப் பட்டு ஒரு சில நாட்களே ஓடியதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதெப்படி தமிழ்த் திரையுலகின் டாப் 100 பாடல்களில் இடம் பெறக் கூடிய மெல்லிசை மன்னர் இசையமைத்த இரு பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
வாசு சார் சொன்னது போல் வேறே யாராவது கோபால் சார் ஐடியில் வருகிறார்களா... ஒன்றும் புரியவில்லை...
நான் எங்கே மாறினேன்? உங்களையும், கார்த்திக் சாரையும் விடவே நான் m .s .v யின் பெரிய ரசிகனாக்கும்.
அன்புள்ள கோபால் சார்,
'நாலும் தெரிந்தவன்', மற்றும் 'வாலிப விருந்து' பட விமர்சனங்கள் நன்றாக உள்ளன. வாலிப விருந்து முரசொலி மாறனின் இயக்கத்தில் நல்ல பொழுதுபோக்குப் படமாக அமைந்திருந்தது. நாலும் தெரிந்தவன் சரியான சொதப்பல்கேஸ்.