:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
Printable View
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
இன்னுமே பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டியிருக்கின்றது...
விரைவில் முடியுமா????????
:roll:
உண்மைதான் ஆனா.....
கதையில் ஏகப்பட்ட முடிச்சுகள் விழுந்துவிட்டன. சீக்கிரம் முடியவேண்டும் என்பதைவிட, அந்த சிக்கல்களை எப்படி இயக்குனர் அவிழ்க்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே பலருடைய மனதில் இருக்கிறது.
** பாஸ்கர் நல்லவனாக மாறிவிட்டவன் போல தெரிகிறது. (அது உண்மையான மாற்றம்தானா? அல்லது சங்கீதா பெயரிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிக்க எண்ணும் நாடகத்தின் ஒரு பகுதியா தெரியவில்லை).
** நேற்றைய எபிசோட பார்த்தபோது, அபி மற்றும் ஆனந்தியின் திருமணம் விரைவில் நடந்துவிடுமோ என்று தோன்றுகிறது. (தொடரை முடிக்க வேண்டுமென்று நினைத்தால் திருமனம் நடக்கும், இழுக்க நினைத்தால் நடக்காது).
** தொல்காப்பியன் - மேனகா இடையேயான உறவு முடிச்சு, இன்னும் அவிழவில்லை. எப்போது எப்படி வெளிப்படும் என்று ஆவலைத்தூண்டுகிறது. அவர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட அலைந்துகொண்டிருந்த அந்தோணி என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பது சமீப காலமாக காட்டப்படவில்லை.
** மேனகா மீதான கொலை முயற்சியின் பின்னணியை விசாரிக்கும் 'டிடெக்டிவ்' குலோத்துங்க சோழன், விவேக், சித்ரா ஆகியோரின் செயல்பாடுகளில் மிகுந்த தேக்கம். இதுவரை நடந்த புலணாய்வில், மேனகாவின் கொலைமுயற்சியில் தொல்காப்பியனுக்கும் பங்குண்டு என்ற தவறான முடிவுக்கு மட்டுமே அவர்களால் வரமுடிந்திருக்கிறது.
** ஆதித்யாவும் உஷாவும் மீண்டும் இணைவார்கள் என்று இன்னும் உள்மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மகனின் எதிர்காலம் கருதி இணையக்கூடும் (இணைய வேண்டும்). 'ஐ ஆம் ஸாரி உஷா, உன்னை ரொம்ப புண்படுத்திட்டேன்' போன்ற வசனங்கள் இறுதி எபிசோட்களில் வரக்கூடும்.
** அபியின் மொத்தக்குடும்பமும் (ஆர்த்தியின் துரோகத்தால்) தொல்காப்பியன் மீது கொண்டிருக்கும் தவறான வெறுப்புணர்ச்சி எப்போது, எப்படி நீக்கப்படப்போகிறது என்பது தெரியவில்லை. (ஒரு சில ஓட்டல் நிர்வாகத்தினர், அறையில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளை ரகசிய கேமரா மூலம் கண்கானிப்பார்களாமே. அதுபோல பாண்டிச்சேரி ஓட்டல் அறையில் நடந்த விவகாரம், ஏதேனும் ஒரு சி.டி.முலம் கிடைக்கப்பெற்று, அதன்மூலம் ஆர்த்தியின் முகத்திரை கிழித்தெறியப் படவேண்டுமே தவிர, 'என்னை மன்னிச்சிடுங்க தொல்காப்பியன்' என்று காலில் விழுவதாகக்காட்டினால், உடனே வேறு சேனல்களுக்கு தாவுவது சிறந்தது. ஓட்டல் சிப்பந்திகளிடம் தொல்காப்பியன் அடிவாங்கும்போது, தொல்ஸுக்கு மட்டுமே தெரியும்படி அவள் சிரித்த அந்த குரூரமான சிரிப்பு நம் நெஞ்சங்களில் உறைந்துவிட்டது).
** அர்ஜுன் - ரேகா எப்போது ஒன்று சேர்வார்களா..?. ரேகாவின் தந்தை சங்கரபாண்டியன் என்னவானார்..?
** ஆதியும் உஷாவும் எப்போது, எப்படி ஒன்று சேர்வார்கள்?.
** கற்பகம் - காஞ்சனா இடையேயான தீராத மனக்கசப்பு தீருமா?. அல்லது இருவரில் ஒருவர் உயிரை விட்டு, தியாகியாவார்களா..?.
** படுக்கையில் கிடக்கும் ஈஸ்வரனின் நிலை என்ன?. மகன் ஆதி மனம் திருந்தி, உலகத்திலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையளித்து அவரை நடமாட விடுவானா..?.
** மேனகா தொல்காப்பியனுடன் இணைந்து மீண்டும் மீனவர் குப்பத்துக்குப் போவாளா?. அல்லது தொல்ஸ் மேனகாவுடன் சேர்ந்து உலகளாவிய பிஸின்ஸ்மேன் ஆவாரா? அல்லது, 'உன் வழி உனக்கு என் வழி எனக்கு' என்று போயிவிடுவார்களா?. ('என் இறுதிக்காலத்தை ராமேஸ்வரம் கடற்கரையில்தான் கழிப்பேன்' என்று ஒருமுறை தொல்ஸ் தன் நண்பர் அன்வரிடம் சொல்லியிருந்தார்).
** இடையே புகுந்து தொடரைக் கண்டபடி இழுத்துச்சென்ற கங்காவின் குடும்பம் (கங்கா - அவள் அம்மா, அப்பா - மாமா ராமச்சந்திரன்) மீண்டும் வருவார்களா?. அல்லது அவ்வளவுதானா..?.
இன்னும் நான் குறிப்பிடாத எவ்வளவோ முடிச்சுகள். தலை சுற்றுகிறது. ஆனால் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்தால மட்டுமே முடிவு நிறைவானதாக இருக்கும். இல்லாவிட்டால், ஆர்வமாகப்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
அனுமான் வால் போல் நீண்டு கொண்டே... போகின்றது /போகும்Quote:
Originally Posted by saradhaa_sn
அந்த திருச்செல்வம் தான் துணை.... :?:
சரியா சொன்னீங்க... அனுமார் வால் கூட ஒரு முடிவுக்கு வந்துடும்னு நினைக்கிறேன். ஆனால் 'கோலங்கள்'...?Quote:
Originally Posted by aanaa
ஆனால் இந்த தொடரின் சிறப்பம்சமே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் விறுவிறுப்பாகவும், தொய்வு விழாமலும், எதிர்ப்பார்ப்பைத்தூண்டும் விதமாகவும் கொண்டு செல்வதுதான்.
அதனால்தான், தொடர் முடியவில்லை என்பது கூட ஒரு அலுப்பாகவோ, சுமையாகவோ தோன்றவில்லை.
ஓடும்வரை ஓடட்டும். நிற்கும்போது பார்த்துக்கொள்வோம்.
பாஸ்கர் நல்லவன் போல் நடிக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அவன் திருந்த வில்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிக்க எண்ணும் நாடகத்தின் ஒரு பகுதிதான் யோசிக்க வேண்டாம். கையில் நிலம் கிடைத்தவுடன் உங்களுக்கே தெரியும். நடிப்பில் வல்லவன் என்று] அதாவது கதை முடிவுக்கு வரும்போது, எல்லா முடிச்சுக்களும் அவிழ்த்தால்தானே ஒரு முடிவுக்கு வரும். அப்படி முடிச்சவிழ்க்கும் போது, பாஸ்கர் கெட்டவன் என்று எல்லாருக்கும் தெரியும். பிறகு திருந்துவதையும் மிஸ்டர் திருச்செல்வம் காண்பிப்பார். இன்னும் ஒரு வருடத்திற்குள் கோலங்கள் முடிவுக்கு வந்துவிடும்.
‘தினசரி தீ’ பத்திரிகை அலுவலகம், எடிட்டர் இருக்கையில் ஆனந்தி....
‘சொல்லுங தோழர், என்ன விஷயம்’
‘எல்லாம் வழக்கம்போலதான் ஆனந்தி. இதோ இவர்கள் குடியிருந்து வரும் இவர்களுக்கு சொந்தமான வீடுகளை பலவந்தமாக வாங்கி விட, இவர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்’
‘அப்படியா?. யார் அவங்க?’
‘எல்லாம் நமக்கு வேண்டியவர்கள்தான். அந்த மேனகாவும் ஆதியும்தான்’
‘ஏன் தோழரே, அவங்களுக்கு வேறு வேலையே இல்லையா?’
‘எல்லாம் பணத்துக்காகத்தான் ஆனந்தி. பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் அவர்களின் வேலை, நியாயத்துக்காக போராடுவதுதான் நம்முடைய வேலை’
உடனே ஆனந்தி, வந்தவர்களைப்பார்த்து...
‘நீங்கள்ளாம் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க. ஆனால் நாங்க இதுல இறங்கிப் போராடணும்னா, நீங்க எல்லாரும் கடைசி வரை உறுதியா எங்க பக்கம் நிற்போம்னு உறுதிமொழி தரணும். அவங்க ஆள் வச்சு மிரட்டுவாங்க. பயந்துடக்கூடாது. அப்படி உறுதியாக நிற்பதாக உறுதியளித்தால் அதுக்கு மேலுள்ள விஷயங்களை நாங்க பார்த்துக்கிறோம்’.
‘கண்டிப்பா நாங்க உறுதியாக இருப்போம் மேடம்’ (ஆதியும் மேனகாவும் எங்களுக்கு தொந்தரவு கொடுக்கும்வரை. அப்புறம் போலீஸ், கோர்ட் என்று வரும்போது பல்டியடிச்சு உங்களை நடுத்தெருவில் விட்டுடுவோம்).
கைலாஷ் படிக்கும் பள்ளிக்கு வரும் ஆதியும் கிரியும், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அவனிடம் போய் பேசுகின்றனர். அவன் அணிந்திருக்கும் அந்தப்பள்ளியின் சீருடையும், அந்த சூழ்நிலையும் ஆதிக்கு கோபத்தை உண்டாக்குகிறது. அவனை அழைத்துப்போக முயற்சிகும்போது ஒரு பெண் வந்து...
‘யார் சார் நீங்க?. பையனை எங்கே அழைச்சிக்கிட்டுப் போறீங்க?.’
‘முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க'.
‘நான் கைலாஷுடைய கிளாஸ் டீச்சர்’.
‘அப்படியா?. நான்தான் கைலாஷுடைய அப்பா. என் பையனை அழைச்சிக்கிட்டுப்போக வந்திருக்கேன்’.
‘அப்ப்டீன்னா நீங்க பிரின்ஸிபால் கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு அழைச்சிக்கிட்டுப்போங்க’.
பிரின்ஸிபால் அறை...
‘இங்க பாருங்க சார். பையனுடைய அம்மா இவனை இங்கே சேர்க்கும்போது அப்பா பெயரைக்குறிப்பிடவில்லை. அதோடு நீங்கதான் இவனோட அப்பா என்பதற்கு என்ன ஆகாரம்?’.
‘ஏன், சந்தேகமிருந்தால் பையனையே கேளுங்களேன். கைலாஷ், நான் யாரு?’
‘அப்பா’
‘வேறென்ன மேடம். அதான் சொல்லிட்டான்ல?’
‘இருந்தாலும் பையனோட அம்மா வந்து கேட்டால் நாங்க என்ன பதில் சொல்றது?’
‘அவனோட அப்பா வந்து அழச்சிக்கிட்டுப்போயிட்டார்னு சொல்லுங்க’
‘இதோ பாருங்க மேடம், இவரை யாருன்னு நினைச்சீங்க. இவரோட ஸ்டேட்டஸுக்கு இவர் இப்படியெல்லாம் உங்க கிட்டே வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கணும்னு வசியமில்லை. ‘ஆதித்யா பில்டர்ஸ்’ எம்.டி. மிஸ்ட்டர் ஆதி இவர்தான்’.
‘கிரி, என்னுடைய விஸிட்டின்க் கார்டு எடுத்துக்கொடு. மேடம், இதுல என்னோட போன் நம்பர், செல் நம்பரெல்லாம் இருக்கு. உங்களுக்கு எந்த பிரச்சினைன்னாலும் எனக்கு போன் பண்ணுங்க’.
‘நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே உங்க கூட அனுப்புறோம்’.
கோயில்…. கற்பகமும், சாரதாவும்…….
‘என்னக்கா ஒரு மாதிரியா இருக்கீங்க. அதான் பொண்ணுங்க ரென்டு பேரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்கல்ல?. அப்புறம் என்ன இன்னும் சோகம்?’
‘இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னுதான் ஒரே கவலையா இருக்கு. எல்லாம் முறைப்படி நடந்தால்தான் அவங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும். ஆர்த்திக்கு அப்படியெல்லாம் முறையா நடக்காததால்தான் அவள் வாழ்க்கை இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கு’.
‘என்னக்கா சொல்றீங்க?. எத்தனையோ ஜோடிங்க காதல் திருமணம், ரிஜிஸ்ட்டர் திருமணம்னு பண்ணிக்கிறாங்க. அவன்க்களெல்லாம் கஷ்ட்டப்படவா செய்றாங்க?. இல்லே முறைப்படி கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்ந்துட்டாங்களா?. இவ்வளவு ஏன், அபிக்கும் அந்த பாஸ்கருக்கும் முறைப்படித்தானே கல்யாணம் பண்ணினோம்?. ஆவங்க வாழ்க்கை என்ன ஆச்சு?.’
‘இல்லே சாரதா, அந்த கல்யாணத்திலும் குறையிருந்தது. முறைப்படி அவளுடைய அப்பா அவளை தாரை வார்த்துக்கொடுக்கலை. அப்போது அவர் இல்லை. இப்போது இருக்கிறார். அதனால் முறைப்படி அவர்தான் தாரை வார்த்துக்கொடுக்கணும்.'
(ஈஸ்வரன் செத்துப்போயிருந்தால் என்ன செய்வீங்க ‘பழைய பஞ்சாங்க’ மேடம்?. உங்க பொண்ணுகளுக்கு கல்யாணமே செஞ்சு வைக்க மாட்டீங்களா?. வெளிநாட்டுக்குப்போய்விட்டு வரும் மகன், ‘அம்மா இவள்தான் என் மனைவி’ என்று அறிமுகப்படுத்தும் இந்தக்காலத்தில் இப்படி ஒரு 'பழையகற்கால' மனுஷி)
‘அக்கா, அப்பாவைப்பற்றிப்பேச்செடுத்தாலே பொண்ணுங்கள்ளாம் கோபத்தில் கிடந்து குதிப்பாங்க. இது எப்படி நடக்கும்?’
‘அவங்களை நான் சமாதானப்படுத்திக்கிறேன். என்னோட கவலையெல்லாம், எப்படி காஞ்சனா வீட்டுல போய் அவரைக்கூப்பிடுவது என்பதுதான்’.
‘வேணாம்க்கா, உங்களைப் பார்த்தாலே காஞ்சனாவுக்கும் ஆதிக்கும் கோபம் அதிகமாகும். வேணும்னா நான் போய்க்கூப்பிடுகிறேன்’ (அதைவிட சாரதா இப்படி சொல்லியிருக்கலாம். ‘அக்கா எத்தனைமுறைதான் நீங்க மட்டுமே செருப்படி வாங்குவீங்க? எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்களேன், இந்த முறை நான் வாங்கிக்கிறேன்’)
பள்ளிக்கூடம்…… இடியென முழங்குகிறாள் உஷா…
‘என்ன சொல்றீங்க மேடம், யாரோ வந்து நான்தான் பையனோட அப்பான்னு சொன்னா அவரோடு அனுப்பிடுவீங்களா?. இதுதான் நீங்க பிள்ளைங்களைப்பார்த்துக்கிற லட்சணமா?. ஈதுக்கு நீங்க என்ன சொல்லப்போறீங்க?’
‘நாங்க யாரோ ஒருத்தரோட அனுப்பவில்லை, அவர்தான் அப்பான்னு எல்லா விவரமும் சொன்னார், தவிர உங்க பையனும் அவரை அப்பான்னு கூப்பிட்டானே’.
‘இருக்கட்டும், அதுக்காக அவரோடு எப்படி அனுப்பலாம்?’.
‘ஆதி உங்க கணவர்தானே, அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டப்படுறீங்க?’
‘கணவர்தான், ஆனா இப்போ நாங்க பிரிஞ்சிட்டோம். நீங்க கைலாஷை அவரோடு அனுப்பியது தப்புதான். இருங்க வந்து வச்சிக்கிறேன்’.
உஷா போனதும், இதென்னடா புதுத்தலைவலி என்று பிரின்ஸிபால் தலையைப் பிடித்துக்கொள்கிறார்.
ஆதியின் வீடு…. ஆட்டோவில் வந்திறங்கும் உஷா, நேராக கேட்டைத்திறந்து நுழைய…
‘நில்லுங்கம்மா, யார் நீங்க? யாரைப்பார்க்கணும்?’
‘வேலைக்குப்புதுசா, அதான் தெரியலை’
வீட்டுக்குள் நுழையும் உஷா, வீடே இரண்டு படும்படி அழைக்கிறாள்… ‘ஆதி… ஆதி…’
ஆதியில்லை , காஞ்சனாவும் அஞ்சலியும் வெளியே வருகின்றனர்.. ‘எங்கே வந்தே…?'
‘உங்க பையன் ஆதி எங்கே?’
‘எதுக்கு?’
‘உங்க மகன் ஆதி, பள்ளிகூடத்துக்குப் போய் என் பையன் கைலாஷைத் தூக்கிக்கிட்டு வந்துட்டார். எங்கே அவர் கூப்பிடுங்க’.
‘இங்கே ஆதியும் இல்லே, கைலாஷும் இல்லே… போ.. போ’.
‘ஓகோ… உள்ளே ஒளிஞ்சிக்கிட்டுர்க்காரா?. நான் போய்ப்பார்க்கிறேன்’.
உஷா வீடு முழுக்கத்தேடியும் காணவில்லை.
‘இதோ பாருங்க இது கொஞ்சம்கூட நல்லாயில்லே. பள்ளிக்கூடம் போனவனைக் கடத்திக்கிட்டு வந்திட்டார்’
இப்போது அஞ்சலி, ‘என்ன நீங்க, முதல்ல ‘தூக்கிட்டு வந்திட்ட்ற்;னீங்க, இப்போ என்னடான்னா ‘கடத்திக்கிட்டு வந்திட்டார்’ங்கிறீங, எங்க அண்ணன் ஒண்னும் அவ்வளவு மோசமானவரில்லை’…… (தொடரில் இது நாலாவது அஞ்சலின்னு நினைக்கிறேன். இம்முறை கொஞ்சம் நல்ல அஞ்சலி. வந்த அஞ்சலிகளிலேயே திவ்யதர்ஷிணிதான் பயங்கரம். நாக்கு நுனியில் எப்போதும் தேளின் கொடுக்கு)
காஞ்சனா, ‘ அவன் தூக்கிக்கொண்டு வந்தால்கூட என்ன தப்பு?. அது அவனோட பையன்தானே. அப்புறம் என்ன?. கேஸ் கோர்ர்டில் இருக்கும்போது நீ மட்டும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது’
‘அப்படியா, பார்த்த்குகிறேன்’ கோபமாக வெளியேறுகிறாள் உஷா.
இவர்களின் உரையாடல்களை (வாய்ச்சண்டையை…?) உள்ளே படுக்கையில் படுத்தவாறு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். நல்லவேளை படுக்கையில் கிடைக்கிறார். இல்லாவிட்டால், ‘காஞ்சனா, நீ சொல்றது சரியில்லை’ என்று தர்ம நியாயம் பேச ஆரம்பித்து ஜிப்பா பைகள் நிறைய வாங்கிக்கட்டிக்கொள்வார்.
Thanks saradha. Mudichugal update padithen.
Oru sandegam. Ellorum serndhu vanzhndhal kolangal mudiyum.
Anaal Aadhi (matrum palar) panna kolaigal ellathukkum dhandanai vendaama?
Menaka - Aadhi sandai veru irukkume (Menaka peyaril aadhi seidha akramangal pala unde?)
Eppadiyum innum 2 varushangalavadhu oodum. Adhu varai Thols-ukku bore adikkaamal irundhal sari.
:ty: saradhaa_sn
:lol:Quote:
Originally Posted by sudha india