' புலி' நஷ்ட ஈடு குறித்து விஜய் - விநியோகஸ்தர்கள் பேச்சு வார்த்தை
'புலி' படத்தினால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதால், விநியோகஸ்தர்கள் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புலி’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.
அக்டோபர் 1-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதல் வாரத்தில் 71 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து விசாரித்த போது, ’புலி’ படம் விஜய் நடிப்பில் உருவான முதல் சரித்திரப் பாணியிலான படம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கினோம். ஆனால், முதல் இரண்டு நாட்கள் வசூல் நன்றாக இருந்தது. அதற்கு பிறகு அப்படியே குறைந்துவிட்டது.எங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். இது தொடர்பாக விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்று அப்படத்தின் விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
http://www.tamil.2daycinema.com/news...0-10-15510.htm