https://scontent.fyto1-2.fna.fbcdn.n...79&oe=5EE3F184
Printable View
1984ஆம் ஆண்டு தினமணிகதிர் வார இதழில் அட்டை படமாக வந்த படம் இது.
இந்த படத்தை கண்டவுடன் என் நினைவுக்கு வந்தவர் மனோரமா தான்......
நடிகர் திலகம் மறைந்து விட்டார்.
நினைவேந்தல் நிகச்சி நடை பெற்றது...
அந்த நிகழ்ச்சியில் மனோரமா சொன்னது...
அண்ணன் சிவாஜிக்கு கண்கள் மிக்க சக்தி வாய்ந்தது....அந்த பார்வை ! அதில் இருக்கும் கம்பீரம் !
யாருக்காவது அந்த விழிகளை தானமாக கொடுத்திருக்கலாம்.... எப்படித்தான் மனம் வந்ததோ அந்த கண்களை எரிக்க?
மனோரமாவின் அந்த ஆதங்கம் சரியென்றே அப்போது எனக்கு தோன்றியது....
ஏன், இப்போதும் தான்....
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...71&oe=5EE41883
Thanks Vinomohan
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புகழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,
நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிக் கொண்ட சத்யா ஸ்டுடியோ, எம்ஜிஆர் கார்டன் என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..
நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் பரப்பிய செய்தி மட்டும் உண்மையாக இருந்து இருந்தால் இன்றைய நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முன் வரிசையில் அன்னை இல்லம் இருந்து இருக்க வேண்டும்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e5&oe=5EE5CCF5
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...07&oe=5EE56DBA
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...cd&oe=5EE30132
Thanks Sekar
நடிகர் திலகம் அவர்களுக்கு ஐரோப்பாவை சேர்ந்த பிரான்சு நாட்டின், சக்கரவர்த்தியாக இருந்த மாவீரன் நெப்போலியன் தோற்றுவித்த உயரிய சேவை விருதான செவாலியர் விருது நடிகர்திலகத்திற்கு நடிகர்களில் முதல் முதலாக வழங்கப்பட்டது. அதை முன்னிட்டு குமுதம் 01-09-94 இல் திரைபிரபலங்களிடம் பேட்டி கண்டது
நன்றி :https://t.co/SBi3rfUYEb
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...0c&oe=5EE33FCE
Thanks Raja Luxmi
பாகப் பிரிவினை - 1959
பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.
இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.
ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.
இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.
பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.
பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.
வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.
இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள்,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை,எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.
முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும். சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.
பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.
வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?
கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)
இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.
படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.
1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?
இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)
இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.
Thanks Gopalakrishnan Sundararaman
16-05-2020
சனிக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)லட்சுமி வந்தாச்சு -.................................................. ............. காலை 6 :30 க்கு ஜீ திரை தொலைக்காட்சியில்,
2) உருவங்கள் மாறலாம் -.................................................. ... காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
3) ராஜபார்ட் ரங்கதுரை -.................................................. .... காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
4) சிவந்த மண் -.................................................. ..................... நண்பகல் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில்,
5) மிருதங்க சக்கரவர்த்தி -.................................................. . பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்
6) தங்கப் பதக்கம் -.................................................. .............. மாலை 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
Thanks Sekar Parasuram
எங்கள் பகுதியில் இருந்த டூரிங் கொட்டகையில் தங்கப் பதக்கம் வந்துவிட்டது,
இது நடந்தது 1986 ல்
மக்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளிக் கொண்ட காவியம் என்பது தற்போது சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை,
ஆனால் தமிழகத்தில் தங்கப் பதக்கம் உருவாக்கிய தாக்கம் என்பது எல்லையை கடந்தது,
அப்போது எங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலைய லிமிட்டில் சப் இன்ஸ்பெக்டராக திரு ஏசுபாதம் அவர்கள் இருந்து வந்தார், அடிக்கடி எங்கள் கிராமம் சுற்றுவட்டத்தில் ரோந்து வருவார், அப்போதெல்லாம் கள்ளச் சாராயம் பெருமளவில் இருந்ததால் அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை என்பதே உண்மை, உண்மையாவே கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முனைப்பு காட்டிய காட்சிகள் நான் பள்ளி மாணவனாக இருந்தாலுமே காட்சிகள் நினைவிலிருந்து அகலவில்லை,
சுற்றுவட்ட கிராமங்களில் இருந்த மக்கள் சப் இன்ஸ்பெக்டர் ஏசுபாதம் அவர்களை சிவாஜி வருகிறார் என்றே தகவல் பேச்சுப் பேசிக்கொண்டனர், அத்தனை மெனக்கெடுத்தல் கொண்டு எஸ்.பி.சௌத்ரியை தனக்குள் உள் வாங்கியிருந்தார், அவரது பேச்சு, நடை எல்லாமும் தங்கப் பதக்கம்தான், ஒரு முறை இரவு நேரத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது புல்லட் பைக் வண்டி வந்து எங்கள் அருகில் நின்றது, பசங்க எல்லாம் சிவாஜிடா சிவாஜிடா என கிசுகிசுத்ததை அவர் காதில் வாங்கிக் கொண்டவர் போலத் தான் தெரிந்தது, அவருடன் இருந்த உதவிக் காவலரை ஊருக்குள் ஏதோ விவகாரமாக அனுப்பி வைத்தவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார், எல்லாரும் ஒழுங்காப் படிக்கிறீங்களா? ஸ்கூலுக்கு சரியாப் போறீங்களா? என்றார்
நாங்கள் அதற்கெல்லாம் ஹூம் சார், ஹூம் சார் என்றவர்கள் அன்று விளையாட தெருவிளக்கு எரிவதில்லை எனக் கோரிக்கையை சொன்னோம்,
எஸ்.பி.சௌத்ரியைப் போலவே லாவகமாக தலையை ஆட்டிக் கொண்டே ஈ.பி. போர்மேன் வீட்டை தெரிந்து கொண்டவர் அவரை இடத்திற்கே வரவைத்து நிலைமையை பேசினார், ஈ.பி.போர்மேன் அவர்களும் மறு நாள் காலையில் பல்பை மாற்றி விடுகிறேன் என சொன்னவரிடம் எங்களுக்காக வேண்டி நீண்ட குழல் விளக்கு( டியூப் லைட்) ஐ மாற்றிவிட அதற்கு தேவையான பணத்தையும் கொடுத்து புறப்பட்டுப் போனார்
அடுத்த நாளிலிருந்து நாங்கள் கண் குளிர விளையாடிட டியூப் லைட் வெளிச்சம் கிடைத்தது,
ஏதோ ஒரு விதத்தில் அன்றைய நடிகர் திலகம் ரசிகர்கள் உதவி செய்தவர்களாகவே மக்களிடையே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்,
எஸ்.பி.சௌத்ரிப் போன்றே காவல் துறை அதிகாரியை நேரிடையாக பார்த்தாகி விட்டது,
சரி டூரிங் கொட்டகையில் தங்க பதக்கம் வந்திருக்கிறதே அந்த நினைவுகளுக்கும் வந்து விடுகிறேன்
எங்கள் பகுதியை பொறுத்த அளவில் சுற்றியுள்ள கிராமங்கள் சிவாஜி ஊர், எம்ஜிஆர் ஊர் என்று சினிமா கொட்டகையில் பேசும்.அளவிற்கு இருந்தது, சிவாஜி சினிமா என்றால் குறைந்தது 20 லிருந்து 25 மாட்டுவண்டிகள் வந்து விடும் வண்டிக்கு குறைந்தபட்சம் 15 போரிலிருந்து 20 பேர்கள் வரை நிரப்பிக் கொண்டு வந்து விடுவார்கள், மற்ற நடிகர்களின் படங்களுக்கு இவ்வளவு மாட்டு வண்டிகளை பார்க்க முடியாது இந்த வழக்கம் பெரு நகரங்களில் கார்கள் அணி வகுத்து நிற்பது போல,
மாட்டு வண்டிகளில் வந்தவர்களே பாதிக்கும் மேலாக கொட்டகையை நிரப்பிக் கொள்வார்கள், சைக்கிள்கள் 100 ஐ குறையாது,
அன்று சினிமா கொட்டகையே நிரம்பி வழிந்தது, வழக்கம் போல நான் எனது நண்பர்கள் என ஐந்து பேர் அன்று தங்கப் பதக்கம் பார்க்கிறோம், எங்களுக்கு முன் உடகார்ந்து இருந்தவர்கள் மணலை கூட்டி மேடு உருவாக்கி உயரமாக உட்கார்ந்து இருந்தார்கள், அவர்களை சீண்டி அண்ணா மறைக்குது என்றோம், படம் வேறு ஓட ஆரம்பித்து விட்டது, நமது தலைவர் மேஜரை அடுத்து துவைக்கும் காட்சியே வந்து விட்டது, ஒரே விஷில் சத்தம், எங்களை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை, எட்டி எட்டி பார்க்க கஷ்டமாகப் போனது, முன்னாடி இருப்பவர்களிடம் நாங்கள் மோதவெல்லாம் முடியாது அவர்கள் " சிவாஜி ஊர்க்காரர்கள்" தலைவர் படம் பார்க்கும் போது தொந்தரவு செய்கிறீர்களா? என கிளம்பி விட்டால் தாங்காது என யோசித்தவாறு பின்னாடி கொஞ்சம் திரும்பினேன்
பின்னாடி இருந்தவர்கள் தங்கப் பதக்கத்தை பார்த்த அனுபவம் இருக்கே
அவர் பக்கத்தில் இருந்தவரை முகத்தில் பளீரெண்டு அரைகிறார்( அது வலிக்காது போல)
" டேய் தலைவரின் முகத்தை பாருடா"
மீண்டும்.அவரது தொடையை தட்டுகிறார்
" டேய் தலைவரின் புருவத்த பாருடா நடிக்குது"
மீண்டும் தலையைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுகிறார்
" தலைவரது உதட்டை பாருடா, கையிலிருக்கும் லத்தியப் பாருடா"
இதாண்டா நடிப்பு, சும்மா டிஷ்யூம் டிஷ்யூம் என சண்டைப் போடுற படத்தை மட்டுமே பார்த்தா நடிப்பை பற்றி எப்படி தெரியும்?
என்ற அவர்களது செல்லமான சண்டை உரையாடல் மட்டுமே அன்றைய பெரும்பகுதி தங்கப் பதக்கம் முடிந்தது,
சாதனைகளை கடந்த தங்கப் பதக்கம் நாளை 16-05-2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில் மீண்டும் ஒளி பரப்பாகிறது,
Thanks Sekar Parasuram
பராசக்தி மூலமாகவே மிகப்பெரிய ஹீரோ ஆகிட்டார்.. அதன் பிறகு பல படங்களில்.. ஆன்டி ஹீரோ.. வில்லன்.. குணச்சித்திரம் என்று தன் வழி தனி என்று தனது பன்முகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.. சரியாக ஏழாண்டுகளில் அதே தீபாவளியில் பாகப்பிரிவினை வந்தது.. இதில் சுவாரஸ்யம் எனனவென்றால் ஜஸ்ட் 5 மாதங்களுக்கு முன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து தமிழ் திரைப்பட வரலாற்றை திருப்பிப் போட்டது.. அதிக பொருட் செலவு.. அதற்கேற்ற பிரம்மாண்டம்.. ஒரு பாளையக்காரரை மஹாராஜா ரேஞ்சுக்கு உயர்த்தி எடுக்கப்பட்ட சினிமா.. ஹீரோ அந்தஸ்து 100 மடங்கு உயர்ந்தது.. அந்தப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த அந்த தருணத்தில்த்தான் "பாகப்பிரிவினை" என்கிற மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சாதாரணமாக வெளிவந்தது.. ஒரு மாற்றுத்திறனாளி மனிதனாக கதைக்குள் உலவினான் கன்னையன்.. வரலாறு வியந்தது.. தன்னுடைய மிகப்பெரிய ஹீரோ இமேஜை தானே அடித்து நொறுக்கினார்.. வரலாற்றில் எந்த சூப்பர் ஹீரோவுக்கும் வராத அசாத்திய துணிச்சல் இவருக்கு வந்தது? ஏன் தான் ஒரு நடிகன்.. கதாபாத்திரங்களை தன்னுள் ஏற்றுக் கொண்ட கலை வித்தகன் என்ற கலை மாமணி அவர்.. எல்லோரும் எதிர் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வசூல் சாதனைகளை எல்லாம் விஞ்சி நின்றது பாகப்பிரிவினையின் வசூல்.. ஆம்.. 1959ல் வசூலில் பாகப்பிரிவினைதான் முதலிடம் பெற்றது..
Thanks Jahir Hussain
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான தினம் இன்று,
மீண்டும் பழைய நினைவு வந்து விடுகிறது,
1984 ல் நான் ஏழாவது வகுப்பு படித்து வந்த காலம், அது கிராமத்தில் இருந்த நடுநிலைப் பள்ளி எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அண்ணாமலை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் அதனால் காங்கிரஸ்காரர், பள்ளி நேரம் முடிந்த பின் இரவு நேரங்களில் பள்ளியிலேயே இலவச டியூசன் சொல்லிக் கொடுப்பார், ஒரு சில நாட்களில் எங்களுக்கு கட்டபொம்மன், மனோகரா, பராசக்தி,திருவிளையாடல், ஆகிய படங்களில் இருந்து வசனங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார், அது பள்ளியின் ஆண்டு விழாவில் அரங்கேற்றம் செய்யப்படும், இதில் விஷேசம் மாணவிகள் கட்டபொம்மனாக நடிப்பது
கட்டபொம்மன் வசனங்களை நாங்கள் பேசி நடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு சில திருத்தங்களை செய்து எங்களை பழக வைத்திருந்தார், அந்த ஒரு சில மாற்றங்கள் கொண்ட வசனங்கள் எனக்கு இன்னமும் மனதில் ஞாபகம் இருக்கவே செய்கிறது
பானர்மேன்:- யாரங்கே இருமாப்பு கொண்டு இருக்கும் அந்த வீரபாண்டிய கட்டபொம்மனை இரும்புச் சங்கிலியால் இருக பிடித்து இழுத்து வாருங்கள் "
நான் கொஞ்சம் குண்டாக இருந்ததினால் என்னை பானர்மேனாக நடிக்க வைத்து விட்டார்கள்,
எனக்கு கட்டபொம்மன் வேடம் கொடுக்காமல் போனதில் பெரிய ஏமாற்றம் இருக்கவே செய்தது, அது பத்தாம் வகுப்பு படித்த போது நிறைவேற்றிக் கொண்டேன்,
மீண்டும் ஏழாம் வகுப்பிற்கே வருகிறேன், வகுப்பில் மொத்தம் 35 பேர் வரை இருந்த ஞாபகம், அப்போதெல்லாம் சிவாஜி அணி, எம்ஜிஆர் அணி மட்டுமே, அதுவென்னவோ தெரியவில்லை சிவாஜி அணிக்குத் தான் பெரும்பான்மையானவர்கள், அதனால் தான் என்னவோ பள்ளியின் மூலம் காண்பிக்கப்பட்ட அத்தனை திரைப் படங்களுமே சிவாஜி படங்கள் மட்டுமே, எங்கள் வகுப்பில் இஸ்லாமிய தோழன் ஜான் பாஷா. எம்ஜிஆர் அணிக்காரன், நாடோடி மன்னன் படத்தை டெண்ட் கொட்டகையில் பார்த்து விட்டு வந்து வகுப்பறையில் காட்டிக் கொண்ட அளப்பறை கொஞ்சம் நஞ்சம் கிடையாது,
அவனுக்காக வந்தது போல் இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன், அடுத்த வாரத்திலேயே டெண்ட் கொட்டகைக்கு வந்து விட்டது, ஸ்பெஷல் பள்ளியின் மூலமே செல்வது, மாணவர் ஒருவருக்கு தலா ஒரு ரூபாய் வசூலித்தாகிவிட்டது, ஐந்து வகுப்பு மேல் படிப்பவர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப் பட்டனர், காசு கொடுக்க முடியாத 40 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொண்டார், ஆர்ப்பரிப்போடு. பார்த்தோம். எனச் சொல்கிறார்களே அது நாங்கள் கட்டபொம்மனை தரிசரித்தோமே அதுதான், படம் பார்த்த முடிந்தபின் எங்களை எல்லாம் விட ஜான் பாஷா அதிகம் நேரம் அழுத படியே இருந்தான், சக மாணவர்கள் தேற்றியும் அழுகை நின்ற பாடில்லை, மறுநாள் வகுப்பிற்கும் கூட வரவில்லை, இரண்டு நாட்களுக்குப் பின் வந்த ஜான் பாஷா நான் இனி நாடோடி மன்னன் கிடையாது, கட்டபொம்மன் போல வாழப் போகிறேன் அன்னியர்களுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டேன், இந்த இந்திய்த் திருநாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று வீர முழக்கமிட்டான், அந்த ஆண்டின் பள்ளி ஆண்டு விழாவில் கட்டபொம்மனாக நடித்து எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம் பிடித்தும் கொண்டான்,
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான நாள்
61வது ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுவோம்
Thanks Sekar Parasuram
வீரபாண்டிய கட்டபொம்மன் -16/05/1959
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் )
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.
அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.
நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .
முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
Thanks Gobalakrishnan Sundararaman
17-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
காலை 9:30 க்கு -.................................................. கீழ் வானம் சிவக்கும் - வசந்த் தொலைக்காட்சியில்,
காலை 11 மணிக்கு -........................................... ஜல்லிக்கட்டு - முரசு தொலைக்காட்சியில்,
மாலை 4 மணிக்கு -............................................. சாந்தி - சன் லைப் தொலைக்காட்சியில்,
இரவு 7 மணிக்கு -................................................. ஜல்லிக்கட்டு - முரசு தொலைக்காட்சியில்
Thanks Sekar
கொரானாவின் கோரத்தாண்டவத்தில் தத்தளிக்கும் தமிழகத்தில் சிவாஜி ரசிகர்களின் வியத்தகு மக்கள் பணியில் இன்று காலை ஆண்டார் வீதியில் 40 ஆண்டுகளாக திருச்சியில் சிவாஜி புகழ் பரப்பும் மாரீஸ் குரூப் சிவாஜி புகழ் பரப்பும் குழுவின் பொறுப்பாளர் திரு. தில்லை நகர் பாஸ்கர் சார்பாகவும் திருச்சி மாவட்ட புறநகர் சிவாஜி மன்றம் சார்பாகவும் மலைக்கோட்டை பகுதி*சிவாஜி மன்றம் திருச்சி சார்பாகவும் மற்றும் மெடிக்கல் கணேசன் திருச்சி இருவரின் உதவியடன் மளிகை பொருள்கள் மற்றும் ஸிரங்கம் வரதராஜன் புரோகிதர் சார்பாகவும் மளிகை பொருட்களும் அரிசியும் வழங்கி னார்கள் அதனை பயனாகிகளுக்கு வழங்கினோம் இதில் பாரதி பாஸ்கர் உறையூர் செல்வம் புத்தூர் ராமச்சந்திரன் தென்னூர் ஜெயபிரகாஷ் சண்முகராஜா பழக்கடை ராஜா பீமநகர் நாராயணன் மலைக்கோட்டை கிருஷ்ணன் மெடிக்கல் கணேசன் வரகனேரி*ராஜேந்திரன் முத்தரசநல்லூர் பாலன் திண்டுக்கல் பாஸ்கர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...5d&oe=5EE855AE
கொரானாவின் கோரத்தாண்டவத்தில் தத்தளிக்கும் தமிழகத்தில் சிவாஜி ரசிகர்களின் வியத்தகு மக்கள் பணியில் இன்று காலை 40 ஆண்டுகளாக திருச்சியில் சிவாஜி புகழ் பரப்பும் மாரீஸ் குரூப் சிவாஜி புகழ் பரப்பும் குழுவின் சார்பாக திருச்சி புத்தூரில் அரிசியும் காய்கறியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தூர் ராமச்சந்திரன் தென்னூர் ஜெயபிரகாஷ் சண்முகராஜா மலைக்கோட்டை கிருஷ்ணன் ஆண்டார் வீதி வெங்கட், சிவாஜி பெரிய தம்பி, முரளி, தென்னுர் அண்ணாதுரை புத்தூர் அன்பழகன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.http://scontent.fmaa1-4.fna.fbcdn.ne...d1&oe=5EE7172C
ஊரடங்கு 4.0
18-05-2020 , திங்கட்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)கந்தன் கருணை -.................................................. .... காலை 6மணிக்கு ஜீ திரை டிவிச் சேனலில்,
2) முதல் தேதி -.................................................. ............. காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
3) அம்பிகாபதி -.................................................. ........... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்
4) அமரகாவியம் -.................................................. ........ நண்பகல் 12:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் டிவியில்,
5) கை கொடுத்த தெய்வம் -....................................... பிற்பகல் 1:30க்கு பாலிமர் டிவிச் சேனலில்,
6) சபாஷ் மீனா -.................................................. .......... பிற்பகல் 2 மணிக்கு முரசு டிவியில்
7) வாழ்க்கை -.................................................. .............. இரவு 10:30 க்கு பாலிமர் டிவிச் சேனலில்,
Thanks Sekar
திண்டுக்கல் மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் பல்வேறு பகுதி சார்ந்த சுமார் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருள் மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கபட்டது சிவாஜி A. திருப்பதி A பாண்டியன் K. மாரியப்பன் S. மாரிமுத்து R.பாஸ்கரன் R. வெங்கிடுBM சத்யன் Nரத்னம்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b3&oe=5EE599AAhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...db&oe=5EE92126https://scontent.fyto1-1.fna.fbcdn.n...59&oe=5EE97A8D
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a3&oe=5EE5A011
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...6b&oe=5EE7208B
Thanks Sivaji Thirup pathi
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ce&oe=5EE8AC7Fhttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...e1&oe=5EE6616Bhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...71&oe=5EE91F6Ahttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...ae&oe=5EE5C1A2https://scontent.fyto1-2.fna.fbcdn.n...36&oe=5EE5C8D4https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ff&oe=5EE6C817
தமிழகத்தின் காவல்துறை அமைச்சராக
ஒன்பதாண்டு காலம் இருந்தவர்.........
பெருந்தலைவரைப் போலவே எளிமையானவர், நேர்மையானவர்.....
இவர் அமைச்சராக இருந்த போது தனது சகோதரருக்கு தகுதியின் அடிப்படையில் கிடைத்த அரசு வேலையை கைவிட சொன்ன உத்தமர்...
உனது தகுதிக்கு கிடைத்த வேலை என்றாலும் எதிராளிகள் மந்திரி கக்கன் தம்பிக்கு அரசு வேலை கொடுத்தார் என்று சொல்வார்கள்.....
எனவே வேலையை விட்டு விட்டு வந்து என்னைப் பார் என்றவர்.........
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு சிறை சென்றவரான ஐயா பி.கக்கன் அவர்கள் காங்கிரஸ் ஆட்சியை இழந்து விட்ட. போது உடல் நலம் இல்லாமல் தும்பைப்பட்டியில் தனது இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்......
மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த நடிகர் திலகம் தகவல் தெரிந்து தும்பைபட்டி செல்ல விரும்பி ஏற்பாடுகளை செய்யுமாறு மன்ற நிர்வாகிகளிடம் சொன்னார்..........
அப்போது மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கரிமேடு திரு.வி.ஆர்.காந்தி மற்றும் கரிமேடு சிங்கத்தேவன் அவர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.......
எனவே நானும் வருவதாக சொல்லவே சரியென்று என்னையும் அழைத்துச் சென்றனர்...........
தும்பைபட்டிக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்லி விட்டதால் நாங்கள் அங்கு போகும் போது எந்தவிதமான பரபரப்பும் இல்லை...
நம்ம ஐயாவை பார்க்க வெளியூரிலிருந்து கார்ல யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு கிராமத்து மக்கள் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்......
நடிகர் திலகம் முன் சென்ற காரிலிருந்து இறங்கி அந்த சிறிய வீட்டிற்குள் சென்றார்.......
வீட்டிற்குள் ஒரு சாதாரண நாற்காலியில் மேல் சட்டை இல்லாமல் நாலைந்து குழந்தைகளோடு இருந்தார் கக்கன்ஜி அவர்கள்.......
நடிகர் திலகத்தை கண்டதும் அவசரமாக எழுந்தவரை நமதய்யன் கையை பிடித்து அமர வைத்தார்.....
வந்தவர்கள் எல்லோரும் உட்காரக் கூட அந்த வீட்டில் இடமும் இல்லை நாற்காலிகளும் இல்லை.......
நிலைமையை புரிந்து கொண்டு. வெளியே வந்தார் நடிகர் திலகம்.....
கக்கன்ஜி அவர்களும் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியில் வந்து திண்ணையில் அமர, நடிகர் திலகமும் அவர் அருகில் அமர்ந்து அவரின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு இறுகிய மனதோடு அமைதியாக இருந்தார்.....
கக்கன்ஜி அவர்களே பேச்சை ஆரம்பித்தார் .....
என்ன இவ்வளவு தூரம் என்றார் நம்மவர் மதுரைக்கு ஒரு விழாவிற்கு வந்ததாகவும் தங்களை பார்த்து நலம் விசாரித்து போக வந்ததாகவும் சொன்னார்.....
ஆடி ஓடி முடிஞ்சாச்சி ஜனங்க நமக்கு ஓய்வு கொடுத்துட்டாங்க அதான் வீட்ல இருக்கேன் என்றார் கக்கன்ஜி அவர்கள்......
அதற்குள் வந்திருப்பது சிவாஜி என்று தெரிந்து கொண்டு கக்கன்ஜி வீட்டை நோக்கி வர மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள்..........
கள்ளமில்லா சிரிப்போடும் வெள்ளை மனதோடும் தன்னைக் காண வந்த கிராமத்து மக்களை கரம் குவித்து வணங்கினார் நடிகர் திலகம்...........
அந்த ஒரு. மணி. நேரத்தில் காட்டுத் தீ போல செய்தி பரவ மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள்......
நிலைமையை புரிந்து கொண்ட கக்கன்ஜி அவர்கள் நடிகர் திலகத்திற்கு விடை கொடுக்க தயாரானார்.....
அப்போது ஐயா, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க கக்கன்ஜி அவர்கள் எனக்கு ஒன்னும் வேண்டாமய்யா....
நீங்கள் எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி என்றார்..........
நடிகர் திலகம் யோசனையோடு எழுந்து விடை பெற்று காரில் ஏறிக் கொண்டார் .....
மன்றத்து நிர்வாகிகளையும் தன்னோடு ஏற்றிக் கொண்டு மதுரை வரும் வரை அவர்களோடு ஆலோசனை செய்து கொண்டே வந்தார்........
அந்த ஆலோசனையில் உதித்ததுதான் கக்கன்ஜி அவர்களுக்காக நாடகம் நடத்தி நிதி வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது....
அதன்படியே தங்கப்பதக்கம் நாடகம் கோவையிலும், மதுரையிலும் நடத்தப்பட்டு கக்கன்ஜி அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது......
இப்படி வழங்கப்பட்ட நிதியை காங்கிரஸ் கட்சியின் நிதிக்காக அளிப்பதாக கக்கன்ஜி அவர்கள் மேடையிலேயே அறிவிக்க அதிர்ந்து போன நடிகர் திலகம் பெருந்தலைவரால் தனக்கு அணிவிக்கப்பட்ட பத்து பவுன் தங்க சங்கிலியை ஏலம் விட்டு அந்த பணத்தை ஐயா பெயரில் வங்கியில் போட்டு அதன் வட்டியை கக்கன்ஜி அவர்களுக்கு மாதம் தோறும் கிடைக்கச் செய்தார் நடிகர் திலகம்..........................
நடிகர் திலகத்தோடு தும்பைப்பட்டி வரை சென்றது என் வாழ் நாளில் மறக்க முடியாத மலரும் நினைவுகள்......
இந்நிகழ்வின் கால கட்டம் சரியாக நினைவில் இல்லை....அநேகமாக 1969---1971 க்கும் இடையில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.....என் நினைவில் உள்ளதை அப்படியே பதிவிட்டுள்ளேன்.
இந்த சந்திப்பின் புகைப்படங்கள் அண்ணன் கொடிக்குறிச்சி முத்தையா அவர்களிடம் இருந்தால் பதிவிடும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்........ இந்த சந்திப்பின் போது நடிகர் திலகம் நேரில் வழங்கிய சிறு நிதியை ஏற்றுக் கொள்ள பிடிவாதமாக மறுத்து விட்டார் கக்கன்ஜி. அவர்கள்.............
பெருந்தலைவரின் தொண்டரல்லவா......
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...3f&oe=5EE921AE
Thanks Lakshmanan Lakshmanan
.................................................. ......................................
பின்னுட்டம்
தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன் மூலம் வசூலான தொகையை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் ஐயா கக்கன் அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது அந்த நிதியை அதே மேடையிலேயே ஐயா கக்கன் அவர்கள் கட்சி நிதிக்காக அளித்து அதை கண்டு நடிகர்திலகம் தனது கழுத்திலிருந்த சங்கிலியை ஏலம் விட்டு அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதனுடைய வட்டி கக்கன் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்தார் இந்த விழாவுக்கு நான் நேரில் சென்றிருந்தேன்.....தும்பைபட்டியில் கக்கன் அவர்களின் இல்லத்திற்கு நடிகர்திலகம் வந்து சென்றதன் நினைவாக அங்கு ஒரு சுவற்றில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது அந்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது.......
.........................................
3
Hide or report this
உன்னதமான நடிப்பாற்றலால் எப்போதும் மன நிறைவு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உழைத்தவர் .அவர தன்னை அறிந்திருந்தார்.அவரை தங்களின் இதய தீபமாக கருதிய கலைஞர்கள் அதிகம்
சின்னத்திரையில் ஓரிரு காட்சியில் இடம் பெறும் நடிகர்கள் கூட சுளையாகதினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற காலம் இது.ஆனால் சிவாஜி வாழ்ந்த காலத்தில் அவர் தண் நடிப்புக்காகவும் கலையின் வெற்றிக்காகாவும் கதாபாத்திரம் நெஞ்சில் நிற்பதற்காகவும் ஏற்று க்கொன்ட சிரமங்கள் இன்னொரு நடிகன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.சிவாஜியை கஞ்சன் என்று கூட வாய் கூசாமல் மேடையில் கேவலமாக அழைதிறுக்கிறார்கள்.சிவாஜியின் படங்களை தலை கீழாக ஒப்பிக்கும் ரசிகர் கூட்டம் தமிழ் உலகில் இருக்கிறது.அவரது ரசிகர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.மிகப் பெரிய அந்தஸ்தில் உயரிய கல்வி கற்ற செல்வ சீமான்கள்,காவல் துறை அதிகாரிகள் நாடு போற்றும் பத்ரிகையாளர்கள் என பட்டியல் நீளும்.சிவாஜி சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் நூற்றுக்கு 50பேராவதுஇன்றும் வாழ்கிறார்கள் அவரது சினிமா புகழை பாடியே தனது விற்பனையை வள ர்த்துக்கொன்டனஅன்றைய சினிமா பத்ரிகைகள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c8&oe=5EE99860
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...78&oe=5EE6ADC4
Thanks Vijaya Raj Kumar