-
முரளி சார்
கண்ணதாசனின் பல்வேறு பாடல்களை நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
அதுவும் இரவு 12 மணி அளவில்
நேற்று இரவு எல்லா சேனல்களுமே கண்ணதாசனின் புகழ் பாடி கொண்டு இருந்தன. (நான் பார்த்த -வசந்த்,மெகா,ஜெயா மக்ஸ்,லைப், முரசு )
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை "
-
//இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம் // முரளி சார் அழகிய மீள் பதிவு..கண்ணதாசனை ப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்..இன்றும் சொல்லுவேன்..
ராகவேந்தர் சார்.. பூவும் பொட்டும் இந்தப் பாடல் நான் கேட்டிராத ஒன்று நன்றி..
வாசு சார்..பறக்கும் பாவை..சுகம் எதிலே நினைவிலில்லை.. நினைவு படுத்தியமைக்கு நன்றி..
-
வாசு சார்
எனக்கும் அப்படி தான்
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ்வானம் சிவந்தம்மா
வாசுவின் இடுகை கண்டு
கிருஷ்ணா மனம் மலர்ந்ததம்மா
-
கிருஷ்ணா சார்,
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயி(ழ:))ரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரமிதே
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்
வரிகள் கொல்லுகின்றன.
http://i1.ytimg.com/vi/QJY4qKmH5xw/hqdefault.jpg
பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் சாரி பூவும் பொட்டும் படத்தில் ஜோதிலஷ்மி என்ன ஒரு ஸ்லிம். சாமுத்ரிகா லட்சணம் முழுதும் நிறைந்தவராமே இவர்!
-
//நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் நடை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு // நல்ல வரி தான்...ஆனா ப்ளாக் அண்ட் ஒயிட்ல ஒல்லி முருங்கைக்காய் ஜோதிலட்சுமிக்கு முத்துராமன் பாடற பாட்டுன்னு நினைவு..ம்ம் அப்புறம் என்ன ஆகும் இடி மழை இளமை தனிமை..:) ஆள விடுங்க சாமி..கொஞ்சம் வேலை பார்க்கறேன்..
-
//சாமுத்ரிகா லட்சணம் முழுதும் நிறைந்தவராமே இவர்!/ அப்படியா..ம்ம் எனக்குத் தெரியாதே..
-
கொஞ்சம் வேலை பார்க்கறேன்னுட்டு இப்பதானே சொன்னீங்க...:)
-
கிருஷ்ணா சார், சின்னக் கண்ணன் சார்
ஒரு வேண்டுகோள். 'எண்ணம் போலக் கண்ணன் வந்தானை' எனக்குத் தந்து விடுங்கள். இன்றைய ஸ்பெஷல் தொடருக்காக சேர்த்து விட்டேன்.
-
நாகேஷ் பாடும் சோகம் (கிடாரை வைத்தபடியே)
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
நாகேஷ் கொஞ்சம் ஓவரா செய்யராறோன்னு நினைக்கத் தோணும்.
ஆனால் அருமையான தத்துவம்.
http://www.youtube.com/watch?feature...&v=5Ckf4DXoSEM
-
வாசு சார்
ரொம்ப குறும்பு ஆனால் கரும்பு எல்லோரும் விரும்பு(ம்)
( பூவும் பொட்டும் ஆயிரம் )
நீங்கள் நடிப்பு சுடர் பற்றிய நினவு கூறல் ஒரு அருமையான நகைச்சுவை
ரெம்ப ரப்பர்
இவரோட இன்னொரு பாட்டு நினைவிற்கு வருகிறது சார்
தரிசனம் 1969
பாடகர் திலகம் கண்ணிய நாயகி குரல்களில்
"கல்யாணமாம் கல்யாணம் 60ஆம் கல்யாணம் "
ஈஸ்வரி பாடகர் திலகம் குரல்களில்
இது மாலை நேரத்து மயக்கம்
புது மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மூடி
அந்த இன்பம் தேடுது உனக்கும்
பாடகர் திலகத்தின் சிரிப்பு
நடிப்பு சுடரின் நடிப்பு
இது கால தேவனின் கலக்கம்
இதை காதல் என்பது வழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெற போகும் துன்பத்தின் துவக்கம்
ஈஸ்வரி குரலில் ஒரு விரக தாபம் நல்ல நோட் பண்ணலாம் சார்
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன
பசும்பாலை போலே மேனி எங்கும்
பழகி பார்த்தல் என்ன