-
http://i62.tinypic.com/2utoy7q.jpg
தமிழ் நாட்டில், மருத்துவ பல்கலைகழகம் ஒன்று துவக்க, மருத்துவர்கள் குழு ஒன்று 05-07-1983 அன்று நம் புரட்சித்தலைவரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கும் புகைப்படம்.
இடமிருந்து வலமாக : மருத்துவர்கள் எஸ். ஆறுமுகம், எச். வி. ஹண்டே (அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்), எம். நடராஜன், எஸ். காமேஸ்வரன் முதலானோர்.
-
-
நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைகாட்சியில் அமுத கானம் நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்களை ஒளிபரப்பினர்.
விவசாயி - கடவுள் என்னும் முதலாளி.
பணக்கார குடும்பம் - ஒன்று எங்கள் ஜாதியே
உழைக்கும் கரங்கள் - நாளை உலகை ஆளவேண்டும்.
-
மக்கள் திலகம்
தமது வழிகாட்டி
என்கிறார் பிரபல பட்டிமன்ற
பேச்சாளர் ராஜா.
நன்றி - அந்திமழை இதழ்.
-
மக்கள் திலகத்தின்
பேரன்பை பெற்றவரும்
மக்கள் திலகத்தின்
திரைக்காவியங்களில்
புகழ் பெற்ற பல பாடல்களை எழுதியவரும்
புரட்சித் தலைவர் ஆட்சியில் சட்ட மேலவையின் துணைத் தலைவர் பதவி வகித்தவரும்
தமிழக அரசின் முன்னாள்
அரசவைக்கவிஞரும் என் மேல் என்றும் பாசம் கொண்டவருமான புலமைப்பித்தன் அய்யா அவர்கள் அலைபேசியில் இன்று அழைத்தார். மக்கள் திலகத்துடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிக விரிவாக எழுதி வருவதாகவும் விரைவில் அதை நூலாக வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை பதிவிடுவதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
-
'அண்ணாவின் வாழ்விலே' என்ற நூலிலிருந்து:
காரைக்காலில் பொதுக்கூட்டம் முடிந்து, அண்ணா காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், கவிஞர் கருணானந்தம் மற்றும் கொத்தங்குடி ராமச்சந்திரன் போன்றோரும் இருந்தனர். திருநள்ளாறில் கார் பழுதாகியது. வேறு சக்கரம் மாட்டி பயணத்தை தொடர்ந்து, பேரளம் என்ற ஊருக்கு வந்த போது, அங்குள்ள திரையரங்கு அருகே காரை நிறுத்தச் சொன்ன அண்ணா, 'நம்ம எம்.ஜி.ஆர்., நடிச்ச படம் போட்டுருக்காங்க; பாத்துட்டுப் போகலாம்...' என்றார்.
'திரையரங்கு மேலாளர் எனக்குத் தெரிஞ்சவர்; இடம் இருக்குதான்னு பாத்துட்டு வர்றேன்...' என்று சொல்லிப் போனார் கருணானந்தம்.
அவர் திரும்பி வந்த போது, அவருடன் திரையரங்கு உரிமையாளரும், மேலாளரும் பரவசத்துடன் ஓடி வந்து, அண்ணாதுரைக்கு வணக்கம் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.
'படம் ஆரம்பித்த பின் வந்தது நல்லதாப் போச்சு. இல்லன்னா, கூட்டம் கூடியிருக்கும்...' என்றபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார் அண்ணா.
அப்போது, படம் நிறுத்தப்பட்டு திரையில், எங்கள் திரையரங்கிற்கு வருகை தந்திருக்கும் அறிஞர் அண்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் வணக்கம், நன்றி — என்று, 'ஸ்லைடு' போட்டனர். 'அறிஞர் அண்ணா வாழ்க' என்று ஒரே கைதட்டல்! ஆரவாரத்தில் திரையரங்கம் அதிர்ந்தது.
படமும் துவங்கப்பட்டது. படத்தை முன்பே பார்த்திருந்த கருணானந்தம், படம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கும் போதே, அண்ணா அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
நடுத்தெரு நாராயணன்
dinamalar-3.5.2015
-
-
-
Coimbatore டிலைட் திரை அரங்கில்
விரைவில் நீதிக்கு தலை வணங்கு
-