Quote:
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ``மறக்க முடியுமா?'' நிகழ்ச்சி, திரைப்பட இந்நாள், முன்னாள் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
திரைப்படத்துறையில் கோலோச்சிய அன்றைய முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் வாழ்க்கை வரலாற்றினை இந்த நிகழ்ச்சி காட்சிப்படுத்துகிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எம்.ஆர்.ராதா, ஸ்ரீதர், பத்மினி, கே.பி.சுந்தராம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற அரும்பெரும் கலைஞர்கள் வரிசையில் நாளை முதல், தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பற்றிய பல அரிய தகவல்கள் இடம் பெறுகின்றன. ஜெய்சங்கரின் உற்றார், உறவினர், நண்பர்கள், தொழில் சார்ந்தவர்கள் அவரது சிறப்பியல்புகளை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்கள். கவுரி சங்கர் தொகுத்து, இயக்குகிறார்.