-
அண்ணா நாளிதழ் – 8 ஜூன் 1983
சைதை துரைசாமிக்கு செல்வி ஜெயலலிதா பாராட்டு.
புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய்.
சென்னை ஜூன் 8: புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய் என்று சைதை துரைசாமியை சிந்தனை செல்வி ஜெயலலிதா பாராட்டினார்.
சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான கழகப் பொதுக்கூட்டத்தில் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிந்தனை செல்வி ஜெயலலிதா பேசுகையில் கூறியதாவது : -
இந்தக் கூட்டம் சைதை துரைசாமிக்கு பாராட்டு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைதை துரைசாமி இளைஞர், லட்சிய வீரர், புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய். புரட்சித் தலைவர் வெட்டி வா என்று கட்டளையிட்டால், வெட்டி கட்டிக் கொண்டு வருபவர் சைதை துரைசாமி.
1972ம் ஆண்டு நமது இதய தெய்வமாம் புரட்சித் தலைவர் அவர்களை கருணாநிதி கழகத்திலிருந்து வெளியேற்றினார். 26 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே செய்த முடிவு அது. புரட்சித் தலைவரை கழகத்திலிருந்து வெளியேற்றுவதோடு மட்டும் கருணாநிதி நின்றுவிடவில்லை. தனது செயலை நியாயப்படுத்திப் பேச இதே சைதைக்கு அப்போது கருணாநிதி வந்தார்.
கருணாநிதி பேச எழுந்தபோது ஒரு இளைஞர் மேடைக்கு வந்தார். கருணாநிதிக்கு 26 எலுமிச்சம் பழங்கள் கோர்த்த மாலையை அணிவித்தார். அந்த இளைஞர்தான் சகோதரர் சைதை துரைசாமி.
எலுமிச்சம் பழம் எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. பைத்தியம் தெளிவிக்கவும் பயன்படுகிறது. கருணாநிதிக்கும் அவரோடு சேர்ந்த 25 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தலையில் தேய்த்துக் கொள்ளவோ என்னவோ அந்த இளைஞர் 26 எலுமிச்சம் பழங்களை மாலையாகக் கட்டி அணிவித்தார். அந்தத் துடிப்புமிக்க துணிச்சல்மிக்க இளைஞர்தான் சைதை துரைசாமி.
புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு வெளியேற்றியது பைத்தியக்காரத்தனம் என்பதை உணர்த்தவே சைதை துரைசாமி, கருணாநிதிக்கு எலுமிச்சம் பழம் மாலையை அணிவித்தார். சைதை துரைசாமி செய்தது சரிதான் என்பதை பின்னால் காலம் உணர்த்தியது.
புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு நீக்கியது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை காலம் உணர்த்தியது என்றாலும் இன்னமும் எலுமிச்சம் பழம் மாலை அணிவிக்க வேண்டிய நிலையில்தான் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு இன்னும் தெளியவில்லை.
இப்போது ஜனநாயகத்தைக் காக்க படைபட்டாளத்தோடும் ஆள் அம்புகளோடும் கருணாநிதி கிளம்பி இருக்கிறார். எந்த கருணாநிதி தெரியுமா? சகோதரர் சைதை துரைசாமி மீது மட்டும் 17 பொய் வழக்குகளைப் போட்ட கருணாநிதி; சகோதரர் சைதை துரைசாமி 10 ருபாய் பிக்பாக்கெட் அடித்ததாக ஒரு பொய் வழக்கு, கருணாநிதி மகன் படத்தையும் ஒரு தியேட்டரையும் கொளுத்தியதாக இன்னொரு பொய் வழக்கு; அவர் மீது கொலை வழக்குக்கூட சுமத்தப்பட்டது.
ஜனநாயக ஜாம்பவான் கருணாநிதி ஏன் இத்தனை பொய் வழக்குகளை அடுக்கடுக்காக போட்டார்? சகோதரர் சைதை துரைசாமி தனக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டது எத்தனை நியாயம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா? அதற்காகத்தான் கருணாநிதி சரம்சரமாக பொய் வழக்குகளைத் தொடுத்தார்.
இவ்வாறு செல்வி ஜெயலலிதா கூறினார்................ Thanks wa.,
-
எனக்கு மிகவும் பிடித்த சண்டைக்காட்சி இது. தலைவரின் சண்டை காட்சிகளில் வீரமும் சாகசமும் இருக்கும். வன்முறை இருக்காது. தாக்க வரும் எதிரியிடம் கூட மனிதாபிமானம் காட்டுவார். இந்த சண்டையின்போது கிணற்றில் விழும் ஒருவரின் காலை பிடித்து கையில் இடுக்கிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே மற்றொருவரை வீழ்த்தி பிறகு அந்த நபரை வெளியே இழுத்து பின்னர் அடிப்பார்.
என்ன உயரத்துக்கு தலைவர் காலை தூக்குகிறார் என்று பாருங்கள். அப்போது அவருக்கு 60 வயது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்...உழைக்கும் கரங்கள் காவிய காட்சி.............. Thanks wa.,
-
-
அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி... இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்... தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மத்திய ரயில்வே நிலையம்" எனும் சரித்திர முக்கியத்துவம் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியில் அமர மக்கள் திலகம் அருளாசிகள் நிரம்ப உண்டு... அதே சமயம் தமிழ்நாடு சட்டசபை அவையில் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக உழைத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்மனச்செம்மல் புகழை , மாண்பினை காக்க தொடர்ந்து வந்தால் வெற்றியுண்டு...
-
யார் ஆட்சி செய்தாலும் நம் புரட்சித் தலைவரின் ஆட்சியைப் போல் வராதுதான்.. ஆனால் புரட்சித் தலைவரின் பாதையில்.. தலைவரின் மாண்புகளை பறைசாற்றும் நல்ல உள்ளங்கள் வரலாமல்லவா..!!! அதற்கு நிச்சயமாக புரட்சித் தலைவரின் அருள்.. அனுமதி வேண்டும்.. அப்படிப்பட்ட புரட்சித் தலைவரின் ஆட்சியை... முன்நிறுத்தி.. தலைவரின் பெயரையும்.. மாண்புகளையும்.அனுதினமும் சட்டசபையில் முன்மொழியும் .. தலைவரின் சாதனைகளை உணர்ந்து..போற்றி..அவரது பாத அடிகளைப் பின்பற்றி நடக்கும் நேர்மையான புரட்சித் தலைவரின் பக்தர் யாராவது ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாடு நலம் பெறும்..
புரட்சித் தலைவர் நிச்சயமாக மீண்டும் புயலாக செயலாற்றும் நாளை எதிர் நோக்குவோம்... வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்...........👍
-
சந்திரோதயம் !
_________________
எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத்தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன் ?
சந்தித்தோ பார்வைகள்
தித்திதோர் நினைவுகள்
மையலைச் சொல்லத்தெரியாமலே
ஏன் ஏன் இந்த கேள்விகள் ?
கவிஞர் வாலி !
பாடலின் ஆரம்பத்திலேயே காதலின் மென்மையும் மேன்மையும் நம்மை தொத்திக் கொள்கிறது
பாடலின் நாயகி பாடல் தொடங்கும் முன்னர் கண்களை மூடியவாரே தன் இடது கையால் வலக்கையை மென்மையாக மிக மென்மையாக வருடுவதும்
காதலனின் முகத்தை மெல்ல விழி திறந்து பார்த்து காதலனின் கண்களை நேர் கொண்டு பார்க்கும் இயலாமையால் சரேலேன முகத்தை மூடிக்கொண்டு காதலனும் தன் காதலை உணர்ந்து கொண்டான் என்பதை உணர்ந்து சொல்லோண்ணா இன்பத்தில் காதல் இதயம் படபடக்க மாடிப்படியில் காதலன் வருகையை பின்புறம் நோட்டம் விட்டவாறு துள்ளிச்சென்று காதல் உணர்வுகள் முழமையும் தூனில் பதிக்கும் பாவமும் அழகின் எல்லை !
மாலை வரும் மயக்கம்
என்ன மயக்கம் ?
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூ விதழ் மேனியில் பனித்துளி இருக்க
நானதை பார்க்கையில்
நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ ?
இந்த வரிகளில் புன்னகைத்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் அதன் அர்த்தம் விளங்கி புருவங்கள் உயர்ததும் அக்கணம்
வாலியின் பாடலில் கவிஞரின் கவிதை !
இந்த காட்சி காணும் ஒவ்வொரு முறையும்
உணர்வுகள்
உறைந்து போகின்றன !
ஹயாத் !........ .... Thanks wa.,
-
களையுலகின் கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், காமதேனு... அள்ள............ அள்ள திரையுலக வசூல் வித்தகர், வசூல் திலகம், வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "முகராசி" இன்று முதல் (24-05-2019) சென்னை - புரசை பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி முகம் காண்கிறார்.........👌
-
நமது மக்கள் திலகம் பக்தர்கள், ரசிகர்கள் பற்பல அணிகள் தனி தனியாக இயங்கி கொண்டு வரும் அமைப்புகள் எல்லாம் மனம் விட்டு பேசி ஓன்று சேர்த்து இதயக்கனி மாண்பினை மேன்மேலும் பெருக்குவோம்............
-
-
இன்று முதல் (24/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "முகராசி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/289ih39.jpg
சுவரொட்டியில் தவறாக இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் பதிலாக
விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .
-
-
-
-
-
http://i64.tinypic.com/2r3cbq1.jpg
புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் , செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையில் உருவான ஆட்சி திரு.எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர
வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் மனமார்ந்த நன்றி .
-
-
-
-
-
-
-
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள் " வெளியான நாள் 23/05/1976 வெளியாகி, 43 ஆண்டுகள் நிறைவு.
கோவை செழியன் தயாரிப்பில், நாஞ்சில் கே. மனோகான் கதை வசனத்தில் உருவானது .படகோட்டி படத்தை ஒளிப்பதிவு செய்த பி.எல்.ராய் இந்த படத்திலும் திறமையை காட்டினார் .கே.சங்கர் இயக்கம் .
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் உருவான பாடல்கள் :
1.ஆடிய பாதங்கள் அம்பலத்தில் - பி.சுசீலா
2. பழத்தோட்டம் என் தோட்டம் _ வாணி ஜெயராம்
3. கந்தனுக்கு மாலையிட்டால் - வாணி ஜெயராம்
4. வாரேன் வழி பார்த்திருப்பேன் - டி.எம்.எஸ். .டி.கே.கலா
5. நாளை உலகை ஆள வேண்டும் - கே.ஜே .ஜேசுதாஸ் - எம்.எஸ்.வி.
6. நான் மாட கூடலில் - பி.சுசீலா
குமரிக்கோட்டம் படத்தினை ஒப்பிடும்போது இந்த படத்தில் எம்.எஸ். வி.யின் இசை திறமை சற்று குறைவு என்று சொல்லலாம்
சண்டை காட்சிகள் அபாரம் . குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் மான்கொம்பு சண்டை காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சுறுசுறுப்பும், விறுவிறுப்பும், வேகமும் , ஸ்டெப்புகளும் , கிடுக்கி பிடிகளும் கலக்கல் மட்டுமல்ல அசத்தல் .அந்த சண்டை காட்சியில் ரசிகர்கள் ஆரவாரம், அலப்பரை அரங்கை அதிர வைத்தது .படத்தின் உயிர்நாடியாக இந்த சண்டைக்காட்சி திகழ்ந்தது .இந்திய திரைப்பட உலகில் எந்த நடிகரும் இப்படிப்பட்ட சண்டை காட்சியில் நடிக்கவோ,ரசிகர்களை கவரும் வண்ணம் சோபித்த வரலாறில்லை . அந்த காலத்தில் பத்திரிகை விமர்சனங்களும் வெகுவாக புகழ்ந்து தள்ளின .
நாகேஷ்,- தேங்காய் ஸ்ரீநிவாசன் நகைச்சுவை அரசியல் நெடியுடன் அமர்க்களம் .
நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு வில்லன் வேடம் திறம்பட \செய்திருந்தார் .
ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் முதல் நாள் நண்பர்கள் /ரசிகர்களுடன் மேட்னி காட்சி பார்த்து ரசித்தது மகிழ்ச்சியான தருணம் .
ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் 101 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம். 100 வது காட்சிக்கு வில்லன் நடிகர் கே.கண்ணன் வருகை தந்து சிறப்பித்தார் .ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர் .
சாந்தம் அரங்கில் 75 நாட்கள் ( தினசரி 4 காட்சிகள் ) ஓடியது .100நாட்கள் 3 காட்சிகளில் ஓடியதற்கு சமம் . ஸ்ரீகிருஷ்ணாவில் 82 நாட்கள் , உமாவில் 68 நாட்கள் கமலாவில் 50 நாட்கள் ஓடியது . மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி வெற்றிநடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
-
#மக்கள்திலகத்தின் #டெம்ப்ளேட் (Template)
மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு 1979ல் மதுரை மாவட்டம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தபோது, நடந்த சம்பவம். மார்ச் மாதம் 3ம் தேதி அவரிடம் பதினைந்து வயதிலிருந்து மக்கள் திலகம் அவர்களின் தேவையான பணிகளை கவனித்து வந்தவர் சபாபதி என்பவர். வெளியூர்களுக்கு செல்லும் போது, கூடவே செல்பவர். இன்னும் சொல்லபோனால் மக்கள் திலகம் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படிபட்ட இவர் எப்போதுமே மக்கள் திலகம் அமர்ந்து செல்லும் காரில் தான் கூடவே செல்வார்.
திடீரென ஒரு நாள் சபாபதிக்கு விபத்து நேர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குச் சென்று தன் உதவியாளர் சபாபதியையும், மற்றவர்களையும் பார்க்கும் பொழுது சபாபதிக்கு காயங்கள் மிக அதிகமாக இருந்த நிலையில் சபாபதி படுக்கையில் உணர்வற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த மக்கள் திலகம் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். முக்கியமான டாக்டர்களிடம் இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். தேவையானால் சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, தான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். வந்து தண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டார்.
அடுத்து இரண்டு நாளில் சபாபதி இறந்து விட்ட செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சற்று நேரம் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டார். பிறகு சபாபதி உடைய சடலத்தை மருத்துவ பக்குவத்துடன் சென்னைக்கு எடுத்து வர உத்தரவு இட்டார். அதன்படி, சபாபதியுடைய உடல் கட்சி தலைமை கழகத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசியல் மரியாதையுடன் அன்று மாலை மைலாப்பூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் திலகம் அவர்கள் இது போன்ற எவ்வளவோ பேர்கள் சவ அடக்கத்துக்கு காரிலும், நடந்தும் சென்று உள்ளார். தன்னிடம் 1957ல் இருந்து 1979வரை தன் கூடவே இருந்து தனக்கு வேண்டிய பணிகளை செய்து வந்த ஒரு நல்ல உடன்பிறப்பை இழந்து விட்டோமே என்று மன வருத்தத்தோடு கண்ணீர் சிந்தலோடு சபாபதியுடைய உடல் அடக்கத்தின் உடலை குழியில் வைத்தபொழுது முதல் ஆளாக நின்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிய மக்கள்திலகம் அவர்கள் மூன்று முறை கையில் மண்ணை அள்ளி குழியில் போட்டார். #இது #ஒரு #சாதாரண #விஷயம் #அல்ல தன்னிடம் வேலைசெய்யும் எவ்வளவுதான் நல்ல வேலைக்காரனாக இருந்தபோதிலும் அவன் ஒரு வேலைக்காரன்தான் என்று நினைப்பவர்கள் உலகத்தில் அதிகம் பேர், ஆனால் மக்கள் திலகம் அவர்கள் அப்படி அல்ல. இது அவருடைய வரலாற்றில் ஒரு பெரிய அம்சம் ஆகும்.
மக்கள் திலகம் மற்ற தலைவர்களைப் போல் மேடைப்பேச்சோடு நின்றுவிடாமல் தனது கொள்கைகளைத் தானும் கடைசிவரைக் கடைபிடித்தவர்.ஒவ்வொரு தனிமனித இதயங்களில் ஊடுறியவர்...
#அஇஅதிமுக #கட்சித்தலைமைகளே...!
புரட்சித்தலைவர் தனது கொள்கைகள் அனைத்தையும் ஒரு 'டெமப்ளேட்' ஆக (Template ) விட்டுச் சென்றுள்ளார்... #பொதுமக்களின் #இதயங்களில் #நேர்மையாக #ரீச் ஆகும் அத்தனை நல்ல விஷயங்களும் அதில் அடக்கம்.
தனிமனிதனின் வாழ்வில் புரட்சித்தலைவரின் பங்கீடு எந்தளவு உள்ளது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் மேற்கண்ட பதிவு...
தொண்டர்களல்லாத பொதுமக்களின் அன்பும் ஆதரவும் வேண்டுமென்றால் புரட்சித்தலைவர் வழியைக் கடைபிடித்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் மக்கள் சக்தி தான் மகோன்னத சக்தி...
இதன் மூலம்...எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளையும் அநாயாசமாக வெல்லலாம்...
ஏனெனில் எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளுக்கும் உங்களுக்கான விளக்கங்களை மக்களே அளித்து, ஆட்சிப்பீடத்தில் அமர்த்திவிடுவர்...
#மக்கள் #நீதிமன்றத்திற்கு #அத்தனை #அளப்பரியசக்தி...
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்...! முகநூலில் பாலு சார்................ Thanks wa.,
-
-
-
-
-
-
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கு
http://i66.tinypic.com/107j81h.jpg
-
-
-
-
-
-
-
-
-