https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...dc&oe=5EF3E91A
Printable View
இன்று(26-05-2020) காலை 11 மணிக்கு சன் லை சேனலில், உயர்ந்த மனிதன்.
இன்று (26-05-2020) இரவு 8 மணிக்கு மெகா டிவியில் " இரு துருவம்"
வகுப்பில் முன் பென்ஞ் இருக்கையில் இருந்த நண்பர்கள் பாலாஜி,பாண்டியன், அருள் ஆகியோர் தெய்வமகனை பார்த்தது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள், அன்றைய முன் தினம் மாலைக் காட்சி தெய்வமகனை சங்கம் தியேட்டரில் பார்த்திருந்தார்கள், தெய்வமகனை நான் மேட்னி காட்சி பார்த்திருந்தேன், மூன்று காட்சி தெய்வமகனும் காலை காட்சியாக இப்போது 80 களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என சன் டிவி பினாத்திக் கொண்டிருக்கும் மோகன் நடித்த மௌன ராகமும் ஓடிக்கொண்டிருந்தது, மௌன ராகம் நல்ல படம் தான் சிறு நகரமான எங்கள் ஊரில் அது ஒரு காட்சி மட்டுமே,
அப்போது நேரடி ரிலீஸெல்லாம் சிறு நகரங்களில் இல்லாமல் இருந்தது, எங்கள் ஊரில் அப்போது புதியதாக பஸ் நிலையம் எதிரிலேயே கனேசா திரையரங்க்கு உருவாக்கப்பட்டு அதில் மூன்று காட்சி ஜல்லிக்கட்டு ஓடிக்கொண்டிருந்தது, நடிகர் திலகத்தின் அட்டகாசமான கட்அவுட்டை தியேட்டர் நிர்வாகமே உருவாக்கி பெரிய அளவிலான மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தார்கள், அதே தியேட்டரில் காலை காட்சி திருமால் பெருமையும் ஓடிக்கொண்டிருக்கிறது, புதிதாக திறப்பு விழா கண்ட கனேசா திரையரங்கில் முதல் படமாக திருமால் பெருமை திரையிடப்பட்டு அது தொடர்ந்து காலை 11:30 காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது, அடுத்து இரண்டு டெண்ட் கொட்டகைகளும் இருந்தது ஒன்று விநாயகா டாக்கீஸ் மற்றொன்று குமரன் டாக்கீஸ், இதில் விநாயகா டாக்கீஸில் பெருமளவில் நடிகர் திலகத்தின் படங்களை அதிகம் திரையிடுவது வழக்கமாக இருந்தது இதே நாளில் பச்சை விளக்கு ஓடிக்கொண்டிருந்தது, மொத்தத்தில் அன்றைய நாளில் இருந்த திரையரங்குகளில் மூன்றில் நான்கு சிவாஜி படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வு,
பிற்காலத்தில் இது போன்ற சோஷியல் மீடியாக்கள் வரும் என்று தெரிந்து இருந்தால் மொத்த நிகழ்வுகளையும் ஏதேனும் ஒரு போட்டோ ஸ்டுடியோ மூலம்.படம் பிடித்து வைத்து இருந்து இருக்கலாம்?
வகுப்பறையில் நண்பர்கள் தெய்வமகனை பற்றி விவாதிக்கும் போது பாடல்களை வரிசைப்படுத்தினார்கள், " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ", "காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழிப் போகும் என்று" அன்புள்ள நண்பரே" என ஞாபகம் கொண்ட நண்பர்களுக்கு " தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே" பாடல் மட்டும் ஞாபகத்தில் இல்லாமல் நம்ம சிவாஜி சேகரை கூப்பிடுங்கள் என்றதும் நானாகவே முன்னாடி பென்ச்சிற்கு சென்று பாடலை பாடிக் காட்டும் தருணத்தில் வகுப்பாசிரியர் ஷாஜகான் நுழைந்து விட்டார், அவர் ஆங்கில ஆசிரியரும் வகுப்பாசிரியரும் கூட , எம்ஜிஆர் ரசிகர் என்பதை பெரும்பாலான தருணங்களில் வெளிப்படுத்திக் கொள்பவர்,
ஜாலியாக பேசும் சுபாவம் கொண்டவர், "நான் உள்ளே நுழையும் போது பாட்டு சத்தம் கேட்டதே என்றார்",
" சார் நேற்று தெய்வமகனை பார்த்தோம் அதிலிருந்து பாடலை பாடிப் பார்த்தோம்" என நண்பர்கள் சொல்ல ,
மற்றுமொரு மாணவர் "சார் தெய்வமகனில் சிவாஜி மூன்று சிவாஜி என்றான், பயங்கரமான நடிப்பு சார்", "உங்களுக்கு பிடிக்குமா சார்" என்றான் அதிகப் பிரசங்கியாக
நெளிந்தார் ஷாஜகான் சார் " சிவாஜி ஓவர் ஆக்டிங், எனக்கு மார்லன் பிராண்டோ தான் பிடிக்கும்" என்றார்,
இங்கிலீஸ் வாத்தியாராச்சே??
சட்டென்று நான் குறுக்கிட்டேன் " சார் மார்லன் பிராண்டோவே சொல்லியிருக்காரே "சிவாஜியால் என்னைப் போல நடிக்க முடியும், ஆனால் என்னால் சிவாஜியைப் போல நடிக்க முடியாது" என
அதுவும் இல்லாமல் அறிஞர் அண்ணாவும் கூட இதையே தான் சொல்லியிருக்காரே?
வகுப்பறையில் ஒரே சப்தம் எனது இந்தப் பேச்சுக்கு ஏகத்துக்கும்.ஆதரவு
"சரி சரி பாடத்திற்கு செல்வோம் என சகஜ நிலைக்கு வந்தார் ஷாஜகான் சார்,
இது போன்ற நிகழ்வைத் தான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் ' பொட்டில் அடித்தார்போல சொல்லியிருக்கோமா என்று" தற்போது எனக்கு அமைந்த நிகழ்வு ஞாபகத்தில் வந்தது,
பகிர்ந்து கொண்டேன்,
கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன் நடிகர் திலகம் மட்டுமே
முன்பும் பின்பும் எவருக்கும் அந்த வரம் கிடைக்கப்பெறவில்லை
எப்படி?
ஒரே வரலாற்று உதாரணம்
தனது சிறு வயதிலேயே கட்டபொம்மன் நாடகத்தை பார்த்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கட்டபொம்மன் போல நாமும் நடிக்க வேண்டும் என விருப்பம் தோன்றியமைக்கு முழுமையான கலை வரம் கிடைக்கப் பெற்றதனால் தானே 1760-1799 காலங்களில் வாழ்ந்த கட்டபொம்மனை தனது சீர்மிகு நடிப்பினால் 200 ஆண்டுகளுக்கு பின் 1959 ல் கட்டபொம்மனாகவே அவதரித்து அதை உலகம் முழுவதும் அறியப்பட காரணமாக அமைந்தார்,
அமைந்ததோடு நின்று விடாமல் 1970 ஆம் ஆண்டின் போது தனது சொந்த செலவிலேயே கட்டபொம்மனுக்கு நினைவு சின்னத்தையும் எழுப்பினார்,
உலகில் எந்த நடிகருக்கும்.இது போன்ற வரலாற்று ஒற்றுமை நிகழ்வுகள் அமையப் பெறவில்லையே?
அதனால் தான் நடிகர் திலகம் மட்டுமே கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன்,
கட்டபொம்மன் நினைவு நாள் 16-10-1799,
பராசக்தி வெளியான நாள் 17-10-1952
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரில் நடிகர் திலகம் உருவாக்கிய கட்டபொம்மன் நினைவு சின்னம் திறப்பு விழா கண்டது 16-07-1970
Thanks Sekar
#நடிகர்திலகத்தின்_கெய்ரோநகர_
#பயணக்கட்டுரை #பகுதி_1
அந்நிய நாடுகளில் நடைபெறும் பட விழாக்களில் கலந்து கொண்டு பேறு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் ஒருவர்தான். கெய்ரோவில் நடை பெற்ற ஆசிய - ஆப்ரிக்க பட விழாவில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய பின்னர் அது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களைப் படியுங்கள்.
டெலிபோன் மணி கணகணவென்று ஒலித்தது.
தயாரிப்பாளர் பந்துலு அவர்கள் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். விரைந்து ஓடி ரிசிவரை கையில் எடுத்தேன்.
" கட்டபொம்மன் படத்தை டெல்லியிலிருந்து கேட்கிறார்கள். கெய்ரோவுக்குப் போக வேண்டுமாம் அது. அனுப்பி வைக்கட்டுமா?"என்று பந்துலு அவர்கள் கேட்டார்கள்.
நான் அவரிடம் முழுவிவரங்களையும் கேட்டு "அனுப்பி வையுங்கள்" என்று சொன்னேன்.
இது நடந்த சில நாட்களுக்கு கெய்ரோவில் நடைபெறும் ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் கலந்துகொள்ள படத்தில் நடித்த என்னையும், தயாரிப்பாளர், டைரக்டர் பந்துலு அவர்களையும் பப்பியையும், ராகியையும் இந்திய சர்க்கார் அழைத்திருந்தார்கள்.
என் மனதில் மட்டும் கெய்ரோவுக்கு போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வரும் நடிகர்கள் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லும்போதெல்லாம், உடனே பறந்து அங்கு செல்ல மாட்டோமா என்று எனக்குத் தோன்றும். இரவில் நான் படுக்கையில் படுத்த பிறகும் என் சிந்தனையைச் சுற்றி இக்கருத்துக்கள் வட்டமிடும்.
இதற்கேற்ப அமெரிக்காவுக்கு வரும்படி எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆனால், என் தாயாரின் உடல் நலம் சரியில்லாததால் அந்த அழைப்பை அப்போது ஏற்க முடியவில்லை.
கெய்ரோவுக்கு வரும்படி இந்திய சர்க்கார் அழைக்கிறார்கள் என்று சொன்னபோதும் என் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
எனது தாயார் அப்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். இந்நிலையில் எனது அன்னையை விட்டு பிரிந்திருக்க நான் விரும்பவில்லை. நாம் வெளிநாடு செல்லும் சமயம் ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால்? - என்னால் கற்பனையில் கூட அந்தக் காட்சியை வடிக்க முடியவில்லை.
" கெய்ரோவுக்கு நான் வரவில்லை" என்று முதலில் தீர்மானமாகச் சொல்லி விட்டேன். ஆனால் சர்க்கார் தரப்பில் வரும் அரிய அழைப்பை நிராகரிக்கக் கூடாது. உங்கள் தாயாருக்கு ஒன்றும் ஆகிவிடாது. நாங்கள் இருந்து அவர்களை கவனித்து வருகிறோம். நீங்கள் கவலை இன்றி போய்வரலாம்" என்று என் நண்பர்களும் உறவினர்களும் என்னைச் சமாதானப் படுத்தினார்கள்.
இதற்கிடையில் பப்பி, ராகினி இருவரும் படப்பிடிப்பு காரணமாக முடிந்தால் பின்னர் வருவதாக சொல்லி விடவே, நான் இல்லாமல் தனியே கிளம்பிச் செல்ல முடியாது என்று பந்துலு அவர்களும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். கடைசியில் நம் நாட்டின் பிரதிநிதியாக விழாவில் கலந்து கொள்ள எவரும் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? எனவே என் நண்பர்களும், மற்றுமுள்ளோரும் அளித்த உற்சாகத்தில் தான் கெய்ரோ கிளம்ப முடிவு செய்தேன்.
சென்னை விமான நிலையத்தில் எங்களை பலரும் வந்து வழி அனுப்பினார்கள். "நாம் என்ன காரியம் சாதித்து விட்டதாக இப்படி எல்லோரும் சேர்ந்து வழி அனுப்புகிறார்கள். உண்மையில் கெய்ரோவில் என்ன நடக்கப் போகிறதோ?" என்று எண்ணியபோது என் உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.
எங்கள் இருவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் வந்தார். அவரது வரவு எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது என்பதை நான் சொல்லாமல் இருக்கமுடியாது. முதலில் பம்பாய்க்கு சென்று அங்கிருந்து கெய்ரோவுக்கு விமானம் ஏறினோம்.
பம்பாயிலிருந்து செக்கோஸ்லோவாக்கியா விமானம் ஒன்று எங்களை சுமந்து சென்று மூன்றே மணி நேரத்தில் நைல் நதி நாட்டின் தலைநகரமான கெய்ரோ சென்று விட்டது. நான் இதுவரை பல முறை விமானப் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் செக் நாட்டு விமானத்தில் கிடைத்தது போன்ற பிரயாண சுகம் வேறெதிலும் கிடைத்ததாக சொல்ல மாட்டேன். விமானமும் சரி, விமானத்தில் பணியாற்றுபவர்களும் சரி 'முதல்தரம்' என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்கு நோக்கி செல்லச்செல்ல நமது கைக்கடிகாரத்தையும் நாம் திருப்பிவிட்டு கொண்டிருக்கவேண்டும். மணி குறைந்து கொண்டே வரும். எனவே கெய்ரோவில் இறங்குவதற்கு முன் முன்பாக எங்கள் கைக்கடிகாரங்களில், நாங்கள் அந்த நாட்டின் மணிக்கு ஏற்ப முட்களை திருப்பி வைத்துக் கொண்டோம்.
விமான நிலையத்தில் ஆசிய ஆப்பிரிக்க பட விழாவை நடத்தும் முக்கியஸ்தர்கள் அனைவரும் எங்களை வரவேற்க வந்திருந்தார்கள். நமது இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்களும் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர். பெருமைப்படும்படியான வரவேற்பை எங்களுக்கு அளித்த அப்பெரும் மனிதர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
கெய்ரோவில் விழாவிற்காக மிகவும் சிறந்த முறையில் எல்லா ஏற்பாடுகளையும் ஐக்கிய அரபுக் குடியரசு சர்க்கார் செய்திருந்தார்கள். இந்த விழாவை நடத்த முன்வந்த ஐக்கிய அரபுக் குடியரசு சர்க்கார் விழாவில் பங்கு கொள்ள வந்த ஒவ்வொருவருக்கும் சிறப்பான வசதிகளைச் செய்து கொடுத்திருந்தார்கள்.
எங்களுக்கு என்று ஒரு தனி காரும், எங்களுடன் வந்து எங்களுக்கு உதவியாகப் பேசி, பணிபுரிய இரண்டு காரியதரிசிகளையும் கொடுத்திருந்தார்கள். எங்களுக்கு கிடைத்த காரிய கைதிகளில் ஒருவர் அரபு நாட்டின் செல்வாக்கு மிக்க பத்திரிக்கை ஒன்றில் உதவி ஆசிரியை. நைல் நதிக் கரையின் ஓரம் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்த கெய்ரோவில் மிகப் பிரபலமான 'செமிராமிஸ்' என்ற ஓட்டலில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் வெளியே செல்லும் போது எங்கள் காரியதரிசி உடன் வருவார். ஆங்காங்கே முக்கியமாகப் பார்க்க வேண்டிய வற்றை விளக்குவார்.
எங்களைப் போலவே சீனா, ஜப்பான், இந்தோனேசியா, தாஷ்கண்ட் மற்றும் பல நாடுகளிலிருந்து விழாவிற்கு வந்திருந்த அவர்களுக்கு இம்மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்கள். எகிப்து நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களே வசதியும் செய்திருந்தார்கள்.
கெய்ரோவில் சென்று இறங்கியதுமே என்னை முதலில் கவர்ந்தது அந்த நாட்டு மக்களின் நன்றி உணர்ச்சியோடு கூடிய அன்புதான். குறிப்பாக, இந்தியாவில் இருந்து வந்து இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் அன்பு அலாதியானதுதான்.
நாங்கள் தங்கியிருந்த செமிராமிஸ் ஹோட்டல் பல மாடிகள் கொண்டது. ஆனால் கெய்ரோவில் பெரும்பாலான கட்டடங்கள் பல மாடிகள் கொண்ட, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நம் நாட்டிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடம் என சொல்லப்படும் இன்சூரன்ஸ் கட்டிடம் தான் அங்கு உள்ள மிகச் சிறிய கட்டிடம் என்று சொல்லலாம். இந்த நகரத்தில் எல்லோரும் மேல்நாட்டு பாணியிலேயே இருக்கிறார்கள். ஆண் பெண் அனைவரும் மிகவும் சகஜமாக பழகுகிறார்கள்.
நகரத்தை விட்டு சற்று உள்நோக்கி பிரயாணம் செய்தால் ஒரே பாலைவனம் தான். கெய்ரோவில் நாங்கள் சென்று இறங்கியதுமே அங்கு நமது ஸ்தானிகராகப் பணியாற்றி வரும் உயர்திரு ஆர்கே. நேரு அவர்கள் எங்களை வசையாகப் பிடித்துக்கொண்டார்.
"நம் நாட்டில் உள்ள உங்களுக்கு தேசாபிமானமே கிடையாது. இங்கே பாருங்கள், மற்ற நாட்டிலிருந்து எத்தனை நடிகர்கள் வந்திருக்கிறார்கள். நம் நாட்டில் இருந்து நடிகைகள் யாருமே வரவில்லை. இதெல்லாம் நமக்கு எப்படிப் பெருமைப்படும் விஷயமாக இருக்கும்?" என்றெல்லாம் சொல்லம்புகளாக எறிய ஆரம்பித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு பத்மினி, ராகினி, இருவரும் எங்களுடன் வர இயலாமைக்கான காரணத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் திரு. நேரு அவர்களை சமாதானம் அடையவில்லை. எங்கள் மீது இருந்த அன்புக்கோபமும் அவருக்குக் குறையவே இல்லை.
எனவே இதையெல்லாம் பப்பி, ராகி இருவருக்கும் விளக்கிச் சொல்லி அவர்களை புறப்பட்டு வரும்படி சொன்னேன். அவர்களும் சீக்கிரம் வருவதாக வாக்களித்தார்கள். திரு. நேரு அவர்களும் பிரத்தியேகமாக இதை அவர்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.
நான் மேலே தொடர்வதற்கு முன்பாக நாங்கள் கலந்துகொண்ட ஆசிய ஆப்பிரிக்க பட விழாவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். கெய்ரோவில் நடக்கும் இந்த விழா இரண்டாவது விழா. முதல் விழா 1958ல் ரஷ்யாவில் உள்ள ஆசிய பிரதேசமான தாஸ்கண்ட் என்ற இடத்தில் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த படவிழா அடுத்தபடியாக நமது நாட்டில் புதுடெல்லியில் 1961 இல் நடத்த விழாவின்போது முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் முழுநீள படங்களுக்கு மொத்தம் நான்கு பரிசுகள் அதாவது ஆஸ்கர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன விழாவில் கலந்துகொள்ளும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, டைரக்டர் தவிர மற்றும் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஏதேனும் அதாவது பாட்டு, நடனம், கலைத்துறை போன்றவற்றிற்கு ஒரு பரிசு. ஆக ஐந்து பரிசுகள் கொடுக்கப்படுகின்றன டாக்குமென்டரிக்கு ஒன்று தனியாக கொடுக்கப்படுகிறது.
- தொடரும்
நன்றி : சினிமா ஸ்டார் 1968 / உயர்ந்தமனிதன் பட சிறப்பு மலர்.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
1967 ஆம் ஆண்டு எடுக்க பட்ட படம் இது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பக்கத்தில் தஞ்சை நகராட்சி சார்பில் சிவகங்கை பூங்கா நிறுவபட்டது இதன் அலங்கார நுழைவு வாயிலை அண்ணன் சிவாஜி அவர்கள் தனது சொந்த செலவில் கட்டி கொடுத்தார்கள் அதோடு இந்த சிவகங்கை பூங்காவை அன்றைய தஞ்சை நகர்மன்ற தலைவர் திருY. ஆரோக்கியசாமி நாடார் அவர்கள் தலைமையில் தஞ்சை நகராட்சியில் இருந்து.கிராமிய கலைஞர்களின் ஒயிலாட்டம் மயிலாட்டம் நாதஸ்வர இசை முழங்க அண்ணன் சிவாஜி அவர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கிய வெள்ளையம்மாள் யானை முன்செல்ல நான்கு குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியில் (சாரட் வண்டியில்) அண்ணன் சிவாஜி அவர்களையும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு Y. பரிசுத்த நாடார் அவர்களையும் அமர வைத்து தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து இந்த சிவகங்கை பூங்காவை அண்ணன் சிவாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள் (இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தி இன்றைய தஞ்சை வாழ் மக்களுக்கு தெரியவில்லை) இந்த படத்தில் பின்புறம் அண்ணன் சிவாஜி அமைத்த அலங்கார நுழைவு வாயில் அருகில் Yபரிசுத்த நாடார் M. L. Aஅவர்கள் மற்றும் அதன் வடிவமைத்த நகராட்சி கட்டிட கலை வல்லுனர் உடன் நமது வெள்ளையம்மா மற்றும் நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர் அடுத்த படம் அண்ணன் சிவாஜி அவர்களால் திறந்து வைக்கபட்ட அதே அலங்கார நுழைவு வாயிலின் பொழிவிழந்து காணப்படும் இன்றைய காட்சி அதற்கு அடுத்து உள்ளபடம் வெள்ளை சலவை கல்லில் (கிரைனட் வெள்ளை கல்) அண்ணன் சிவாஜி அவர்களால் திறந்து வைக்கபட்டதற்கான கல்வெட்டு ........ இது போல் தஞ்சையில் மாவட்டத்தில் அண்ணன் சிவாஜி அவர்களால் நாடகம் நடத்தி நிதி வழங்கி ஏராளமான கட்டிடங்கள் அவர்தம் வரலாறு கூறும் இன்றைய சூரக்கோட்டை சிவாஜி பன்னையும் தஞ்சை சாந்தி கமலா திரையரங்கம் கட்ட பட்ட இடமும்.திருவாளர்கள் நாடார் குடும்பத்தினரிடம் விலைக்கி வாங்கி உறுவாக்க பட்டவை................ தொடர்ந்து பார்ப்போம் என்றும் பிரியமுடன் ........ சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b4&oe=5EF31D17
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...22&oe=5EF1479A
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...78&oe=5EF15C1E
Thanks Thoppumani Thoppiah
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
Thanks Gobalakrishnan Sundararaman
தாய் இதழ்
“சிவாஜி ஒரு சகாப்தம்”- பழ.நெடுமாறன்!
https://www.thaaii.com/?p=38348
“தமிழ்த் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகாலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சகாப்தமாகத் திகழ்ந்திருக்கிறது.
1951 ஆம் ஆண்டில் ‘பராசக்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து திரையுலகில் ‘இமயம்’ என உயர்ந்து நின்றார்.
அவரது ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்றவையாகத் திகழ்ந்தது. திரையுலகில் அவர் பதித்த முத்திரை என்றும் அழியாது.
அவருக்குப் பின்னால் திரையுலகுக்கு வந்த இளம் நடிகர்கள் பலரின் நடிப்பிலும் சிவாஜியின் முத்திரை பதிவது இயல்பாயிற்று.
அதிலிருந்து அவர்களால் விலகி நிற்க முடியவில்லை. நடிப்பாற்றல் மூலம், படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரின் உள்ளங்களிலும் அவர் அழியாத இடம் பெற்றார்.
அறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்டு, தந்தை பெரியார் அவர்களால், சிவாஜி எனப் பாராட்டப்பெற்று, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அன்பிற்குரியவராக அவர் திகழ்ந்தார்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் உணர்வுமிக்க உரையாடல்களுக்கு உயிர் ஊட்டியவர் நடிகர் திலகம். இந்த இருவரின் கூட்டு முயற்சி திரைக்காவியங்கள் பலவற்றை அளித்தது.
தமிழ்த் திரையுலகனின் தன்னிகரற்ற கலைஞராக அவர் திகழ்ந்தார். தன்னுடைய நடிப்பாற்றலின் மூலம் தமிழக மக்களை மகிழச் செய்தார். கண் கலங்க வைத்தார்.
அது வெறும் நடிப்பு தான் என்பதை மக்கள் உணர முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறி, மக்களையும் அவ்வாறே உணரச் செய்தார்.
மக்கள் தன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து அதைத் திகட்டத் திகட்டத் தந்தவர் அவர்.
இவ்வளவு சிறந்த கலைஞரை, ஒப்புயர்வற்ற நடிகரை தமிழ்த் திரையுலகம் இன்னும் நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தால், உலக மக்கள் பாராட்டும் அளவுக்குப் படங்களைத் தந்திருக்க முடியும்.
ஆனாலும், அவரின் முழுமையான நடிப்பாற்றலை, திறமையை தமிழ்த் திரையுலகம் பூரணமாகப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் என் போன்றவர்களுக்கு உண்டு.
இந்திய நாட்டில் கூட அவருடைய திறமையில் ஒரு பகுதி கூட இல்லாத நடிகர்கள், இந்திய அரசினாலும், மற்றவர்களினாலும் ஓகோ என்ற அளவுக்கு மீறிப் போற்றப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழனாகப் பிறந்துவிட்ட பாவத்தினால், பாராட்டப்பட வேண்டிய அளவுக்குப் பாராட்டப்படவில்லை. ஆனால் அரசுகள் செய்யத் தவறியதை மக்கள் செய்தார்கள்.
சிவாஜி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்தபோது, தமிழகம் சோகத்தால் குலுங்கியது.
அனைத்துத் தரப்பு மக்களும், படித்தவர்கள், பாமரர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி அணி அணியாக, மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த ஊர்ந்து சென்ற காட்சியும், அழுது புலம்பிய காட்சிகளும், அந்த மாமனிதருக்கு மக்கள் அளித்த மகத்தான விருதுகள் ஆகும்’’
– 2001 ஜூன் மாதத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த போது, ‘தென் ஆசியச் செய்தி’ (01.08.2001) இதழில் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் எழுதிய சிறு கட்டுரை.
#pazha_nedumaran #Actor_sivaji #sivaji_ganesan #கலைஞர்_கருணாநிதி #அரசியல் #தென்_ஆசியச்செய்தி #நடிகர்திலகம் #சிவாஜி #சினிமா #தமிழ்_திரையுலகம் #செவாலியர்_சிவாஜி #பழ_நெடுமாறன்
Thanks mana mana
இன்று ஒட்டுமொத்த செய்தி ஊடகங்கள் அனைத்துமே கொரோனா கொடுமையையும் மறந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்லம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை பற்றியே விவாதம் செய்து முடித்தார்கள்,
இது அரசியல் என்று யாரும் அவசரம் காட்டாதீர்கள்
இந்த வேதா இல்லத்தின் இன்றைய மதிப்பீடு 100 கோடி என தோராயமாக மதிப்பிடுகிறார்கள்
இந்த வேதா இல்ல இடத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய்க்குத்தான் அப்போது வாங்கினாராம்,
அதே நாட்களில் தான் நடிகர் திலகம் அவர்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும் அளித்தார்,
ஆனால் பாருங்கள் இன்று வரையிலும் கூட ஒரு கூட்டம் நடிகர் திலகம் உதவிகளை செய்யாதவர் என பொய் பிரச்சாரம் செய்து வருவதை நிறுத்தவே இல்லை,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...39&oe=5EF44F2E
Thanks Sekar
இவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்?"
https://youtu.be/jA1hPr9-9II
கடந்த ஆண்டு திண்டுக்கல் நகரில் பாகப்பிரிவினையின் 60 வது ஆண்டு பொன் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
பொன் விழாவை பாகப்பிரிவினை 31-10-1959 அன்று ரிலீஸாகி 100 நாட்களை கொண்டாடிய திரையரங்குகளில் ஒன்றான திண்டுக்கல் nvgp திரையரங்கத்திலேயே கொண்டாடியது மிகவும் சிறப்பாககும்,
இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,
1)காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் " படித்தால் மட்டும் போதுமா"
2) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் "பாகப்பிரிவினை"
3) பிற்பகல் 1:00 மணிக்கு ஜெயா மூவியில் "முதல் மரியாதை"
4) பிற்பகல் 1:30க்கு ராஜ் டிஜிட்டலில் "மண்ணுக்குள் வைரம்"
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...14&oe=5EF69850
Ego ! சாதாரணர்களுக்கும் உண்டு இது..
Image ! சாதனை புரிந்தவர்களுக்கு இயல்பாய் உருவாகும் விஷயம் இது.
தனக்கு ஒரு இமேஜ் உருவாகி விட்டதென்று தவறாக அதனை தற்காத்து கொள்ள முனைந்தவரும் இருந்ததுண்டு தமிழ் திரை உலகில்......
குன்றனைய புகழ் தனக்கிருந்தும் இருந்தும் சக கலைஞர்களுக்கு சம வாய்ப்பு தந்த இமயம் இருந்ததும் அதே தமிழ் திரை உலகில்தான்...
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி !
கதைப்படி பள்ளிக்கூடம் அருகில் பொம்மை விற்று கொண்டே தங்கவேலு பாடும் பாடல்...
நடிகரும் சரி, அவர் அந்த படத்தில் ஏற்றிருந்த பாத்திரமும் சரி, அந்த பாடலை பாட பொருத்தமே.....
ஆனால் படத்தின் ஹீரோ வுக்கு அடங்கா சினம் பிறந்து விட்டது. ஆரூர் தாஸை அழைத்து இது போன்ற கருத்துக்களை கதாநாயகன் சொல்வதா, காமெடியன் சொல்வதா?
பாடல் எழுதியவருக்குத்தான் தெரியவில்லை, உனக்கென்ன ஆனது?
இதற்குத்தான் பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பது இல்லை என்று வெடித்தாராம்.
பின் அவரும் அதே பாடலை தனியே இன்னொருமுறை பாடி படத்தில் இடம் பெற்றது.
பாவம், அந்த நடிகருக்கு நினைவில்லை. இது போன்ற பாடல்களை திரை படங்களில் முதலில் பாடியவரே கலைவாணர் என்கிற காமெடியன் தான் என்று...
அதே நடிகர்தான். கவிஞர் வாலியோடு போனார் அவர் நடிக்காத படம் ஒன்றின் பாடல் பதிவுக்கு.....
பாடல் பதிவு செய்யப்பட்டது.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ !
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ !
பாடல் பதிவு முடியும் வரை நமது நடிகரிடம் பேச்சே இல்லை. பின், வாலியை அழைத்து கொண்டு காரில் செல்கிறார். நீண்ட மவுனத்திற்கு பின், வாலி ! மூன்று தமிழ் தோன்றியது மு. க. முத்து விடமா !
மூவேந்தர் வழி வந்தவரா முத்து? என்று.....
திகைத்து போன வாலி, என்னன்னே ! இது சாதாரண பாட்டு, நான் இதை விட நல்ல பாட்டெல்லாம் உங்களுக்கு எழுதியிருக்கிறேனே என்றார்.
இந்த பாட்டை ஏன் எனக்கு தரவில்லை என்றே சினக்குறி காட்டினாராம் சின்னவர்...
வாலியே எழுத்தில் சொன்ன செய்தி..
ஆண்டவன் கட்டளை படம்.
J.B. சந்திரபாபு காமெடியன்...
ஆசை வார்த்தை காட்டு !
கள்ள பார்வை பார்த்து
காசை எடுத்து நீட்டு..
உனக்கும் கூட ஒட்டு.... சிரிப்பு வருது சிரிப்பு வருது என்று சிரித்தார்...
இன்றைய அரசியலை நையாண்டி செய்ய வேண்டியது நானா? ஒரு நகைசுவை நடிகனா? என்று காய்ந்தாரில்லை நடிகர் திலகம்..........
இன்னொரு நடிகரை அவர் நடித்த படத்தில் மூன்று தமிழ் தோன்றியது உன்னிடம், மூவேந்தர் வழி வந்தவன் நீ என்று வர்ணித்ததையே பொறுக்க முடியாமல் போனது அவருக்கு...
ஆனால் நம்மவர் எப்படி?
அவர் நடித்த பச்சை விளக்கு ! அதிலே S.S.R ரும் நடிக்கிறார்...
அவரை போற்றி ஒரு பாடல் ! அதுவும் எப்படியெல்லாம் !
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை...
உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன்...
அதே S.SR...சாந்தி படம்.....
மானம் காக்க வேண்டும்....
பெண்ணை மதித்து வாழ வேண்டும்.. என்று பாடுகிறார், நடிகர் திலகத்துடன் இணைந்து...
கை கொடுத்த தெய்வம் படத்தில்
மங்கல மேளம் கொட்டி முழங்கிட மணமகள் வந்தாள், தங்க தேரிலே என்றும் பாடல்...
ஜெமினியோடு...
அன்று ஊமை பெண்ணல்லோ !
இன்று பேசும் பெண்ணல்லோ !
பார்த்தால் பசி தீரும் படம் வந்த காலத்தில் மெகா ஹிட் பாடல் அந்த ஊமை பெண் பாடல்தான்..
பொங்கவும் இல்லை, பொருமவும் இல்லை எங்கள் தங்க ராஜா...
பறவைகளில் அவள் மணிப்புறா !
பாடல்களில் அவள் தாலாட்டு ! பாவமன்னிப்பில் ஜெமினிக்கே இந்த சிறப்பு...
ஜெமினி நீண்டநாள் நண்பர், சகோதரி சாவித்திரியின் கணவர் என்றெல்லாம் சொல்லலாம்..தன் படங்களில் அவருக்கு தரப்பட்ட இந்த சிறந்த பாடல்களுக்கு சப்பைக்கட்டுகளாக....
முத்துராமன்....
நெஞ்சிருக்கும் எங்களுக்கு, நாளை என்றும் வாழ்விற்கு
வாழ்ந்தே தீருவோம் !
O! எவ்வளவு சிறந்த பாடல்.... தன்னோடு சரி நிகர் சமானமாய் ஆட வைத்து...
ஒரு பாடல் தானே, என்று எள்ளலாய் கேட்க தோன்றும்.
இன்னொரு பாடலும் உண்டு அதே முத்து ராமனுக்கு..
மகளை பிரிந்த தந்தையாக சிவாஜி...
அதே மகள் காதலி முத்துராமனுக்கு... அவருக்கும் அந்த பிரிவு பொதுவே...
இதயத்தில் பூட்டி வைத்தேன்.
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே, தன் சிறகை விரித்தாளே....
அதே படத்தில் மதுரா நகரில் தமிழ் சங்கம் பாடல்.....
முத்துராமன் தனி நாயகனாக நடித்த படங்களில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்கு வழங்க பட்டதில்லை...
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்.
ராஜ போகம் தர வந்தான்...
அதே முத்து ராமனுக்கு தான் இந்த பாடலும்...
பாலாஜி நடிகர் திலகத்தின் நண்பர்தான்.
அந்த நட்பு ஆழ்ந்து வளர்ந்தது என்றால்....
நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
பழங்கால சின்னம்.
பணிவான தெய்வம்... போன்ற படித்தால் மட்டும் போதுமா பாடல்கள்.
மட்டுமா, ஊரை விட்டு ஓடி வந்த காதல்,
இது உறவென்று எண்ணி வந்த காதல்.
காவியத்தில் இல்லாத காதல்...
உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ...
அறிமுகம் ஆகி சில மாதங்கள் ஆன நிலையிலே ரவிச்சந்திரனுக்கு ஒருபாடல்..
காத்திருந்த கண்களே !
கதை அளந்த நெஞ்சமே !
A.v.m.ராஜனுக்கும் இரு பாடல்கள்....
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன...
கன்னி வேண்டுமா, கவிதை வேண்டுமா
காதல் கவிதை சொல்லட்டுமா....
இன்னும் சொல்லலாம்..... ஆனால் மிக நீண்ட பதிவாகி விட்டது ஏற்கனவே...
என்ன செய்ய ! பொல்லாத மனிதர் நம் நடிகர் திலகம்....
அவரை பற்றி சொல்ல துவங்கி விட்டாலே வளர்ந்துதான் போகின்றன பதிவுகள்...
எவரையும் தாழ்த்தும் எண்ணமில்லை எனக்கு.
நடந்தவைகளை எழுத்தில் இருப்பவைகளை சொன்னேன்...
சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும்..... குற்றம் கடியாமல் குணத்தை மட்டும் கொள்க !!.
எண்ணங்களை சொல்லுங்கள்..
அன்புடன் Vino Mohan
Thanks vijaya Raj Kumar fb
ஒண்ணாங்கிளாஸ் movie sir அது ! எப்படி நடித்திருக்கிறார் தெரியுமா? அந்த நடிகர் அல்லது நடிகை...... இப்படி பேசுவார்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை பற்றி ரசிகர்கள்.... கேட்டதுண்டு நான்.
அப்படி ஒரு நட்சத்திரம் நடித்ததாலேயே ஒரு படம் வெற்றி பெற்றது அல்லது பெறும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை...
இந்த படம் அப்படி அல்ல !
உயர்ந்த படம் !
அபாரமான படம் !
மறுபேச்சே இல்லை..
ஆனால் அவர் மட்டுமே நன்றாய் நடித்திருந்தார் என்று சொல்ல மாட்டேன் நான்...
ஆனால் அதற்கு யாரையாவது பாராட்ட வேண்டுமெனில் இவரையே பாராட்ட வேண்டும். உயர்ந்த மனிதன் தான் இவர்..
தமிழ் திரை கதாநாயகர்களில் வேறு எவராயினும் இந்த படத்தில் குறைந்த பட்சம் இரண்டு காட்சிகளை மாற்றியமைக்க செய்திருப்பார்கள்.
பாரதி இறுதியில் இவரோடு மோதுவாரே... அம்மா ரொம்ப நல்லவங்க, கோபம் வரும் அவங்களுக்கு, ஆனா உங்களை போல பொய் சொல்ல மாட்டார்கள் என்று சீறுவாரே அந்த காட்சி.......
ராஜூ !நீ ஒரு சுயநலகாரன் என்று சொல்லி விட்டு ஆமா, நானும் பார்வதியை காதலித்தேன் என்று மறுகுவாரே அசோகன், அந்த காட்சி....
இவருக்கு தன்னம்பிக்கை உண்டு... அதையும் தாண்டி படம் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஆர்வமும் உண்டு...
எங்கே ஒரு காட்சி ! ஒரே ஒரு காட்சி !
விரல் மடக்கி சொல்லுங்கள் ! பார்ப்போம் !
Over acting இந்த ஸீனில் என்று......
துளி மிகையில்லை....
மேஜரை வாக்கிங்கிற்கு அழைத்து போய் சிகரெட் கொடுத்து விட்டு தனக்கு குழந்தை இல்லா குறையை பற்றி சொல்வாரே.....
சௌகாரை கை நீட்டி அறைந்து விட்டு தடுமாறி நாற்காலியை பற்றி நிற்பாரே,
சிவகுமாரை பின்னி எடுத்து விட்டு, என்னை மறுபடியும் கோழையாக்காதே, அப்படி பார்க்காதே என்று சொல்லி எகிறி எட்டி உதைப்பாரே....
நாகையாவிற்கு ஓய்வு பெறும் போது விடை கொடுத்து அனுப்புவாரே.....
உயர்ந்த நடிகர் இவர்தான் என்று பறை சாற்றும் காட்சிகள் அல்லவா அவை !
கிருஷ்னன் -பஞ்சு என்கிற உன்னத இரட்டையர்கள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.
புதிய பறவை படத்தை விட இந்த படத்தில் சௌகாரை மிக பிடிக்கிறது எனக்கு....
கிளாமர் இவரிடம் இருக்கிறது பூரணமாக.....
G.சகுந்தலாவோடு சௌகார் பேசும் காட்சிகளை குறிப்பிட்டு சொல்லி வசனங்கள் பச்சை என்று முகம் சுளித்தான் விகடன்...
பெண்களே மிக ரசித்தார்கள் அந்த காட்சிகளை என்பதே நிஜம்....
வாலி வேறு கண்ணதாசன் வேறு என்று இனம் பிரித்து பார்த்தல் எளிதன்று என்று சொல்ல வைத்த படம் இது....
அத்தனை பாடல்களுமே மயக்கத்தை தந்தன, இயற்றியவர் கண்ணதாசனோ என்கிற மயக்கத்தை.....
வசன பாட்டு இது, சொல்லி கொள்கிறாற் போல இல்லை என்றது ஒரு விமர்ச்சனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாடலை பற்றி....
இன்றும் பரவச படுத்தி கொண்டிருக்கிறது நம்மையெல்லாம் அந்த பாடல்....
மீண்டும் எடுக்கவே முடியாத காவிய படம் என்பேன்....
காரணம் அந்த உயர்ந்த மனிதன் இன்றில்லையே, இதே பாத்திரத்தில் வாழ்ந்து காட்ட... இன்னொரு உயர்ந்த மனிதன் கிடைப்பதும் ஆகிற காரியம் இல்லையே
Thanks Vino Mohan
இன்று 30/05/2020 நடிகர்திலகம் படங்கள். ¶
1. மெகா டி.வி.யில் மதியம் 12.00 மணிக்கு " அன்பை தேடி"
2. கேப்டன் டி.வி.யில் மதியம் 3.30 மணிக்கு "நீலவானம்" - கண்டு களியுங்கள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...52&oe=5EF772F7
வாக்குக்காகவோ...
விளம்பரத்திற்காகவோ அல்ல...
வறியவர்களின் வயிற்றுப்பசியை
ஒரு பொழுதேனும் தீர்த்துவைக்க முயற்சிக்கும் அறம் சார்ந்த திருப்பணியின் 52- வது நிகழ்ச்சி...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a1&oe=5EF82CCD
Thanks Nilaa
இம்மண்ணையும் மக்களையும் தன்னைவிட அதிகம் நேசித்த எங்கள் தவப்புதல்வன் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் நடைபெறும் தொடர் அன்னதானத்தின்
51 -வது நிகழ்ச்சி...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...09&oe=5EF586D5
Thanks Nilaa
30-05-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)முதல் மரியாதை-.................................................. .... அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவியில்,
2) பாலும் பழமும் -.................................................. ....... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
3) அன்பளிப்பு -.................................................. ............. நண்பகல் 12 மணிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்,
4) அன்பைத் தேடி -.................................................. ....... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
5) கருடா சௌக்கியமா-............................................... பிற்பகல் 2:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்
6) நீல வானம் -.................................................. .............. பிற்பகல் 3:30 க்கு கேப்டன் டிவியில்,
7) சந்திப்பு .-.................................................. ..................... இரவு 7:30 க்கு வசந்த் டிவியில்,.
( இனைப்பில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் -கும்பகோணத்தில் திரு சிவாஜி சேகர் )
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...cf&oe=5EF8E358
Thanks Sekar
நேற்றைய பதிவில் கேட்டிருந்த புதிருக்கான பதில்
நடிகர் திலகம் அணிந்திருக்கும் இந்த பாரம்பரிய மிக்க தலைப்பாகையை நீலகிரி கொல்லிமலை ஆதிவாசிகள் 50 பேர்கள் வரை சிவாஜி மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்த போது நடிகர் திலகமும் மேடையிலேயே அவர்களது இசை நடனத்திற்கு ஏற்றவாறு ஆடி மகிழ்ந்தாராம்,
பிறகு தங்களது பாரம்பரிய தலைப்பாகையை அணிவித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்து இருக்கிறார்கள்,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ec&oe=5EF8D29E
Thanks Sekar
கற்பனை வளம் கொஞ்சம் இருக்கிறது. பொழுது நிரம்ப இருக்கிறது... இரண்டையும் வைத்து கொண்டு சும்மாயிராமல் பழைய பெருங்காய டப்பாவை முகர்ந்து கொண்டிருக்கிறாய் நீ என்று சோகையாய் சில முனகல்கள் கேட்கத்தான் செய்கின்றனர்... நன்றாய், நல்லவைகளை, நம்பகத்தன்மையுடன் பேசுகிறீர் நீர், நிறுத்தி விடாதீர் என்று நேசக்குரல்கள் பலவும் செவிகளில் விழுகின்றன...
நேரில் காணும் நண்பர்கள் சிலர் அந்த முனகல்களை குறித்தே பேசுகின்றனர், தேவையா உங்களுக்கு இது?
என்றும் விசனிக்கிறார்கள்.
விந்தையாய் இருக்கிறது..
நிந்தைக்கு வணங்கி நில் என்று அறிவுரை சொல்கிறவர்களை காணும் போது விந்தையாகதான் இருக்கிறது.
பாராட்டு வார்த்தைகள் ஏன் இவர்கள் இவர்கள் பார்வையில் படுவதில்லை?
நடிகர் திலகம் குறித்தே இந்த பதிவும்....
1967 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மாதங்கள் சென்று காமராஜர் வருகிறார் அன்னை இல்லத்திற்கு .
கணேசன், கமலா தம்பதியிடம் மனம் விட்டு பேசி கொண்டிருக்கிறார்...
கட்சி நடத்த கூட பணம் இல்லை. எத்தனை பேர்கள், கட்சியால், காங்கிரஸ் ஆட்சியால் பலனடைந்தவர்கள்....
ஒருவர் கூட முன் வருவதில்லை துணை நிற்க என்று சொல்லும் போதே கர்மவீரர் விழிகளில்
கண்ணீர் நிறைகிறது...
மனம் தாளாமல் நடிகர் திலகம் வெளி கிளம்புகிறார்.... காமராஜரை அன்னை இல்லத்திலேயே விட்டு விட்டு.
நண்பர்கள் சிலரை சந்தித்து விட்டு திரும்புகிறார்.... நல்ல தொகையுடன்...
ஆளுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நண்பர்கள் கொடுத்திருந்தனர் நடிகர் திலகத்தின் முகத்திற்காக.
சிவாஜிகணேசன் உறுதியாக சொல்கிறார் காசு கொடுத்த நண்பர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் அல்லர் என்று....
பின் யாராம் அவர்கள்?
காமராஜர் என் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த ராஜாஜியின் அன்பர்களாம் அவர்கள் அத்துணை பேரும்..
நடிகர் திலகமே அழுத்தமாய் பதிவு செய்த செய்தி இது...
தன் கை பணம் கொஞ்சமும் போட்டு காமராஜரிடம் தருகிறார் நம் கணேசனார்.
எவ்வளவு தொகை தெரியுமா?
மூன்று லட்சம் ரூபாய்.
நண்பர்களே !அறிவீரோ நீவிர் !1967 ஆம் ஆண்டில் மூன்று லட்ச ரூபாய் சாமான்ய தொகை அல்ல..
அந்த ஆண்டில் நடந்த பொது தேர்தல் நிதியாக மாநிலம் முழுக்க நடையாய் நடந்து, அலையாய் அலைந்து கலைஞர் திரட்டி, விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணாவிடம் கொடுத்த தொகை 11 லட்சம்.
ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் காமராஜர் கவலைக்கு மருந்தாக நடிகர் திலகம் சேர்த்து தந்தது மூன்று லட்சம் ரூபாய்.
எந்த கலைஞனும் அரசியல் தலைவனும் திரட்டி தர முடியாத பெருநிதி அது அன்று..
கட்சி நடத்தவே கையில் காசில்லை என்று
கண்ணீருடன் நின்ற காமராஜர் களிப்புடன் அன்னை இல்லத்தை விட்டு அன்று வெளியேறினாராம்..
வெளியில் தெரியாமல் நடிகர் திலகம் செய்திருந்த பெரும் உதவிகள் இவ்வளவு அவ்வளவு அல்ல !
காலி பெருங்காய டப்பா என்று கதைப்போருக்கும், ஜாதிக்காய் பெட்டி, மணக்கிறது என்று மகிழ்வோருக்கும் பொதுவில் வைக்கிறேன் இந்த பதிவை..
Vino Mohan.V.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d6&oe=5EF7E6C8
Thanks Vino Mohan.V
நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதத்தில் வெளியான படங்கள்
1)14.மனோகரா( தெ)-3/6/54
2) 15- மனோகரா( இ) 3/6/54
3)32- அமரதீபம்-29/6/56
4)40. தங்கமலை ரகசியம்-29/6/57.
5)63- படிக்காதமேதை-25/6/60
6)88- குலமகள்ராதை-7/6/63
7)96- ஆண்டவன்கட்டளை-12/6/64
8)114- பாலாடை-16/6/67
9)121- என் தம்பி-7/6/68.
10)129- குருதட்சனை-14/6/69.
11)130- அஞ்சல்பெட்டி 520-27/6/69.
12)139- எதிரொலி-27/6/70
13)163- பொன்னூஞ்சல்-15/6/73
14)171- தங்கப்பதக்கம்-1/6/74
15)184- உத்தமன்-25/6/76.
16)196. ஜெனரல்சக்ரவர்த்தி-16/6/78
17)210- ரத்தபாசம்-14/6/80
18)227- நிவுருகப்பின நிப்பு( தெ)-24/6/82
19)235-சந்திப்பு-16/6/83
20)245- சிம்மசொப்பனம்-30/6/84.
இன்று 46 ஆண்டுகள் நிறைவுப் பயணத்தில் "தங்கப்பதக்கம்"
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...41&oe=5EF95995
Thanks Nilaa
நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதம் வெளியான படங்களின் பட்டியல்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...18&oe=5EFAA157
Thanks nilaa
இன்றைய நாள் அன்றைய வருடம் - 01-06-1974, இந்திய திரைவானில் போலீஸ் படங்கள் பல வந்திருந்தாலும், முதல் முதலாக பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்ட படம் #தங்கப்பதக்கம். எஸ்.பி.சவுத்ரியாக நடிகர் திலகம் வாழ்ந்திருப்பார். அதுவரை இருந்த அதிக வசூல் படத்தை தங்கப்பதக்கம் முறியடித்தது. வெள்ளிவிழா
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e2&oe=5EF93ECChttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...dc&oe=5EF97D65
Thanks பழைய திரைப்பட நாளிதழ் விளம்பரங்கள்
ஆர்வமும் ஆசையும் மனம் முழுக்க...
தயக்கமும் அச்சமும் அலைக்கழிக்க...
துணிந்து விட்டேன்... துவங்கி விட்டேன்...
பிடிக்காதவர்களை ஒழிக்க புதிது புதிதாக வாத்தைகள் உருவாக்கி வக்கணைகள் பேசுவதில் வல்லவர்கள்தான் தமிழர்கள்...
அப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் கண்டு பிடித்த வார்த்தை OVer Acting....
திரையுலகின் தவப்புதல்வனை அவன் ஒரு சரித்திரம் என்று அறிய பட்டவனை விமரிசிக்க அவர்கள் எடுத்த ஆயுதம் Over Acting.....
ஓயாமல் எழுதினார்கள்.... உரக்க பேசினார்கள்... மிகைப்பட்ட நடிப்பு என்று.....
எழுதினார்கள், பேசினார்கள்..களைத்து கூட போய் விட்டார்கள் பேசியும் எழுதியும்.... Reaction ஒன்றும் இருந்ததில்லை நடிகர் திலகத்திடம் இருந்து....
Dr. T.S.நாராயண சுவாமி அவர்களுக்கு அளித்து பேட்டி ஒன்றில் இந்த over acting கூச்சலுக்கு உங்கள் பதில் என்ன? என்று அவர் கேட்க, முதன் முறையாக மனம் திறந்தார் நடிகர் திலகம்....
அவர் சொன்ன விளக்கம், அவர் மொழியிலே இங்கே தருகிறேன்.....
மிகை ஒன்றுமில்லை.... குறைத்தே தருகிறேன்...பொருத்தருள்வீர்....
இது அவரின் விளக்கம்...
நடிப்பென்பதே Exaggeration of expression தான்.
இதில் natural, un natural, over acting, under acting என்றெல்லாம் வகை படுத்துவதில் பொருளென்ன இருக்கிறது?
அரிதாரம் பூசிய அந்த கணமே natural என்பது போய் விடுகிறதே...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமென்பதில்லையே....... இந்த வரிகளை இயற்கையாக வாசித்தால் சாரம் எ ங்கிருக்கும்? மகாகவி ஊட்ட விரும்பிய உணர்ச்சி எப்படி பிறக்கும்?
இயக்குனர்கள் அறிவார்கள் உணர்ச்சி மிகு நடிப்பு எது, அந்த நடிப்பை யார் தர முடியும்? தான் இயக்கும் நடிகரின் limit எது எது என்பதை....
நான் நல்ல நடிகன் என்று என்னை இயக்கியவர்கள் கண்டதாலே உணர்வு பூர்வமான காட்சிகளில் காமிரா என் முகத்தை நோக்கி இருக்கும், close up காட்சிகள் அதிகம் இருந்தன...
நடிப்பில் என் எல்லை குறுகி இருந்தால் வேண்டாம் தொல்லை என்று கைகளால் முகத்தை மூடி கொள்ளுங்கள், தூணில் முகம் புதைத்து காமிராவிற்கு முதுகு காட்டுங்கள் என்றல்லவா சொல்லியிருப்பார்கள்?
Over acting என்ற குரல் ஓங்கி ஒலித்த ஒரு தருணத்தில் ஒரு படத்தில் அடக்கி வாசித்தேன்... அவ்வளவுதான் அதே critics திருப்பி அடித்தார்கள், சிவாஜி நடிப்பு சுகம் இல்லை என்று.....
அன்று நான் தீர்மானித்தேன். என் நாடக மேடை ஆசான்கள் சொல்லி தந்த பாடங்களை அப்படியே பின்பற்றுவது,
என் கற்பனையை உபயோகித்து என் திறமைகளின் எல்லைக்குள் நின்று நடிப்பது,
என்னுடைய ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது என்னவோ அதை மட்டும் தருவது என்று தீர்மானித்தேன்.
Over acting என்கிற பேத்தலுக்கு சிவாஜி கணேசனின் re action இதுவே...
இனி என்பார்வையில் இந்த over acting.....
தங்க பதக்கம் படத்தில் ஒரு காட்சி படமாக்க பட்டது.
சோ பார்த்து கொண்டிருந்தார் பட பிடிப்பை.
ஷூட்டிங் முடிந்ததும் நடிகர் திலகத்திடம் கேட்கிறார் இது over acting இல்லையா என்று.
சரி,இப்படி நடிக்கட்டுமா? என்று காமிரா இல்லாமல் சோ முன்னர் அதே காட்சியை வேறு மாதிரி நடித்து காட்டுகிறார் நடிகர் திலகம்... பிரமித்து போன சோ, இவ்வளவு அற்புதமாய் இருக்கிறதே, பின் ஏன் அப்படி நடித்தீர்கள் என்று கேட்டார்...
இப்படி நடித்தால் உன்னை போல் ஒரு நூறு பேரை கவரலாம்.
படம் வெளியான பிறகு பார், இந்த காட்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி என்று? நடிகர் திலகம் பதில் சொன்னார்...
படம் வெளியான பின்பு ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிகைகளும் பாராட்டின அந்த காட்சியை...
உயர் அதிகாரி ஒருவர் S.P.சவுத்திரியிடம் மனைவி இறந்து விட்ட செய்தியை சொல்லும் காட்சி அது....
இத்துடன் நிற்க விருப்பம் இல்லை எனக்கு....
கொங்கு தமிழ் பேசிய செங்கோடனாக நடித்தாரே, கண்டீர்களா ஏதேனும் மிகை நடிப்பை....
நவராத்திரியின் நவரசத்தில் எந்த ரசத்தில் இருந்தது மிகை?
தெய்வ மகன் படம்...தந்தை, இரு பிள்ளைகள்... மலைத்து நின்றவர்கள் ஆயிரம் ஆயிரம்....
மிகை என்று நகைத்தவர்கள் ஒருவரும் இல்லை...... இருவர் உள்ளத்தில்
பாவ மன்னிப்பில்
பாகப்பிரிவினையில்
பாச மலரில்..
தவ புதல்வனில்........எந்த படத்தில் இருந்தது மிகை பட்ட நடிப்பு?
கை ரிக் ஷா இழுத்த பாபு,
எங்கிருந்தோ வந்தாள் படத்தின் மனநலம் குன்றியவன் பாத்திரத்தில்
பிரஸ்டீஜ் பத்மநாபன்
பாரிஸ்டர் ரஜினிகாந்த்.. அவன்தான் மனிதனில் அந்த மானுடம் மிக்கவன்..
குறையொன்றும் இல்லை கோவிந்தா என்பார்கள் மாலவன் அடியார்கள்...
மிகை என்றும் இருந்ததில்லை எங்கள் திலகத்தின் நடிப்பில் என்பேன் நான்..
Vino Mohan.V.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...01&oe=5EF91FEC
Thanks Vino Mohan.V (Nadigarthilakam Fans F B )
'அவளா சொன்னாள் இருக்காது... அப்படி எதுவும் நடக்காது...நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை.. இல்லை இல்லை...உள்ளத்தில் உள்ளது... உதட்டிலே வந்ததா.....உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா...'
நாளை ( 03/06/2020 ) காலை 11.00 a.m. மணிக்கு கேப்டன் டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த "செல்வம்"
படத்தை கண்டு களியுங்கள். ¶
சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.