சேர்ந்திடுவேன் நொடியில் நான்
காற்றினும் கடிதாய் விரைந்து
மசியில் எழுதி பசையால் ஒட்டி
முத்திரை இட்டு ஊர்தியில் ஊர்ந்து
கதவைத் தட்டாமல் கையில் பெறாமல்
கணத்தில் கிடைக்கும் மின்னஞ்சல்
Printable View
சேர்ந்திடுவேன் நொடியில் நான்
காற்றினும் கடிதாய் விரைந்து
மசியில் எழுதி பசையால் ஒட்டி
முத்திரை இட்டு ஊர்தியில் ஊர்ந்து
கதவைத் தட்டாமல் கையில் பெறாமல்
கணத்தில் கிடைக்கும் மின்னஞ்சல்
மின்னஞ்சல் என்பது
உன் முகநூல் கண்களில்
நோக்கிய போது
என் இதயத்தில் புகுந்த
மின்னல்தானே..
மின்னல்தானே முன்னால் வரும்
இடி அதன் பின்னால் உருண்டு வரும்
ஆயத்தம் முடிந்து மழை தொடரும்
திட்டித் தீர்த்தவள் அசையாத கல்லாய்
கணவன் சாக்ரட்டீஸ் அமர்ந்திருக்கவும்
வாளி தண்ணீரை தலையில் கொட்டிவிட
இடிக்குப் பின் மழை இயல்பு என்றான் ஞானி
தத்துவம் அறிந்தான் தத்தை நெஞ்சை அல்ல
தத்தை நெஞ்சை அல்ல
...தாவும் கண்க ளாலே
பித்தம் கொண்ட அவனும்
...பேச்சி ழந்து போக
வித்தை ப்லவாய் செய்தே
... வேகம் கூட்டி ஆட
சித்தம் மாறி அவளும்
..சற்றே உள்ளம் தந்தாள்..
உள்ளந்தந்த நங்கை
..உவகை கொண்டு பொங்கி
கள்ளப் பார்வை கூட்டி
..காத லோடு சற்றே
தள்ளிப் போகும் போக்கில்
..தழுவத் தானே செய்ய
மல்லுக் கட்டும் உணர்வில்
..மங்கை யைத்தான் அணைத்தான்
அணைத்தான் விளக்கை
அழைத்தான் நித்திரையை
ஊடல் கொண்ட உறக்கமோ
ஓடி ஒளிந்து விளையாட
எண்ணத் துவங்கினான்
ஒன்னு ரெண்டு மூனு என
முடிந்த நாளின் ஆயாசமும்
காத்திருக்கும் காலை அவதிகளும்
மத்தளமாய் இருபுறம் தட்ட
தவிப்பவன் பாவம் அப்பாவி
அப்பாவியாய்
நான் சொல்லும்
வர்ணனைகள் புரியாதது போல்
கொஞ்சம் நெற்றிச் சுருக்கி
கண்களில் கோபம் காட்டி
குட்டிக் கவிதையாய்
கேள்விக்குறி தெரிவிக்கும்
உன் செயல் என்னசொல்லத்
தோன்றுகிறது தெரியுமா..
அடிப்பாவி
"அடிப்பாவி மகளே
என்ன காரியம் சென்சுட்டே"
மாரில் அடித்துக்கொள்ளும் அன்னையும்..
இருதய ஓட்டம் நின்றவராய்
தந்தையும்..
"கொடுமா அருவால"
ஓடி பிடுங்கும் அண்ணனும்..
"இதை என்றோ செய்திருக்க வேண்டும்"
நினைத்து நிற்கின்றாள் காரிகை..
கெடுத்தவனே நித்தம் கூறுபோட
சமாதான கல்யாணம் செய்துவைத்த
சமூகத்தை உமிழ்ந்தவாறே..
கொய்த நீசன் தலை மீது..
தலை மீது வைத்துக் கொண்டாடப்பட
மாமேதையாய் பெரிய படிப்பாளியாய்
உயிர்கள் காக்கும் ஆதூரமுள்ளவனாய்
உன்னத நெறிகள் கொண்ட உத்தமனாய்
வய்யம் உய்ய வந்துதித்த அவதாரனாய்
இருக்க வேண்டாம் திரையில் உதடு கவ்வி
கொஞ்சி கையை காலை உதறி ஆடி பாடி
பொல்லாத போலி பசப்பு வசனங்கள் பேசி
பல கோடிகளில் புரளும் யோகம் போதும்
பாலாபிஷேகம் பீராபிஷேகம் வாய்க்கும்
வாய்க்குமா இந்த நேரம்
..வண்ணமாய்ச் சொல்லு நீயே
நோய்களும் பற்றி என்னை
.. நொடியினில் வீழ்த்த லாகும்
காய்த்திடும் விரல்கள் மீண்டும்
..கடிதென நாளை எண்ணி
தோய்ந்திடும் தாப எண்ணம்
..தோகையைக் கொல்லு மன்றோ..
வஞ்சி அவளும் கேட்டுவிட
..வாலிபன் சற்றே தான் தயங்கி
மிஞ்சிக் கால்கள் பார்த்தபடி
..மென்மை யாகச் சொல்லலுற்றான்
கொஞ்சும் கிளியே கலங்காதே
..கோவைப் பழமாய்ச் சிவக்காதே
விஞ்சிப் போனால் ஒருமாதம்
..விரைந்தே போகும் பொறுவென்றான்..
பொறுவென்றான் கடன் வாங்கியவன்
நொந்துபோனான் பணம் கொடுத்தவன்
காந்தி கணக்கோவென கலங்கினான்
ஆழம் தெரியாமல் காலை விட்டவன்