-
அன்புள்ள பம்மலார் சார்,
தேசீய நடிகர், மாவீரன் 'கேப்டன்' சசிகுமார் நினைவுநாளையொட்டிய பதிவுகளைப்பார்த்ததும், சென்ற ஆண்டு நினைவு நாளன்று தாங்கள் அளித்திருந்த அனைத்துப்பதிவுகளையும் மீண்டும் கண்ணுற்றேன். மனம் சோகத்தில் மூழ்கியது. 38 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு உண்மையான தேசியவாதியின் இழப்பு.
விஜயகுமார் என்ற அவருடைய பெயர் எப்படி சசிகுமார் என்று மாறியது என்பது பற்றி, அவர் மறைந்த சமயம் அவரது மாமியார் பத்திரிகைப் பேட்டியொன்றில் சொல்லியிருந்தார்.
"மாப்பிள்ளையின் உண்மையான பெயர் விஜயகுமார். அவருக்கும் என்மகள் சசிகலாவுக்கும் திருமணம் நடந்த போது, நாங்கள் சீராக அளித்த பாத்திரங்களில் இருவருடைய பெயரையும் இணைத்து 'சசி - குமார்' என்று பெயர் பொறித்திருந்தோம். இந்தப்பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததாலும், என் மகள் மீது அவர் வைத்திருந்த எல்லையற்ற அன்பினாலும், அவளுடைய பெயரையும் இணைத்து சினிமாவில் தன் பெயரை 'சசிகுமார்' என்று மாற்றிக்கொண்டார்" என்று கண்ணீருக்கிடையே கூறினார்..... என்று பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.
-
Kartik sir wonderful writeup. kappalotia tamizan.
ONE OF THE COSTLIEST MISS I MADE IS I HAVE MISSED THE MOVIE SOMEHOW. WAITING FOR SEP FIRST TO HAVE THE DARSAN OF NT WITH FAMILY AND FRIENDS. THANK YOU KARTIK.
-
அன்பு நண்பர்களே,
ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் கட்டுரைகள் சொல்வதை ஒரு சித்திரம் சொல்லும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் வந்துள்ளது, மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள சிவாஜியின் நெஞ்சை உருக்கும் பாசக் காட்சிகள்என்ற நெடுந்தகடு.
http://i872.photobucket.com/albums/a...ALSCENESR1.jpg
http://i872.photobucket.com/albums/a...ALSCENESF1.jpg
இதில் இடம் பெற்றுள்ள படங்கள்
பாச மலர்
பாலும் பழமும்
பாகப் பிரிவினை
மக்களைப் பெற்ற மகராசி
படித்தால் மட்டும் போதுமா
பட்டிக்காடா பட்டணமா
எங்க ஊர் ராஜா
ஆண்டவன் கட்டளை
லக்ஷ்மி கல்யாணம்
பாவ மன்னிப்பு
படிக்காத மேதை
குங்குமம்
நெஞ்சிருக்கும் வரை
கை கொடுத்த தெய்வம்
ஒவ்வொரு சிவாஜி ரசிகரிடமும் அவசியம் இருக்க வேண்டிய மிகச்சிறந்த தொகுப்பு. நடிகர் திலகம் என்ற phenomenon எந்த அளவிற்கு உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்குள் ஆக்கிரமித்திருக்கிறது என்பதை உணர வைக்கும் உன்னதத் தொகுப்பு. ஒவ்வொரு படத்திலிருந்தும் கிட்டத் தட்ட 20 நிமிடங்களுக்கு வரும் வரையில் அந்தப் படத்திலுள்ள முக்கியக் காட்சிகளைத் தொகுத்தளித்திருக்கிறார்கள். குறிப்பாக என்னுள் மிகவும் ஆழமாய் ஊடுருவி நிரந்தரமாய்த் தங்கி விட்ட ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் அந்த உள்ளம் ஊஞ்சலாடும் காட்சி ..... அப்படியே இடம் பெற்றுள்ளது .... முரளி சாருக்குத் தெரியும் அந்தக் காட்சியில் நான் எந்த அளவிற்கு என்னை மறந்து விடுவேன் என்று ....அதே போல் பட்டிக்காடா பட்டணமா படத்தையும் சுருக்கமாக தொகுத்து, நாகரீகத்தைப் பற்றி விளக்கும் காட்சி, படிக்காத மேதை -- கேட்கவே வேண்டாம். பாச மலர் சிறு வயது தொடங்கி இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பாக தொகுத்தளித்துள்ளார்கள். பாவ மன்னிப்பு படமும் அப்படியே. பாலும் பழமும் படத்தில் சாந்தி சாந்தி என்று வீடு முழுக்கத் தேடும் காட்சி தொடங்கி இறுதிக் காட்சி வரை, எங்க ஊர் ராஜா படத்தில் இளை சேதுபதி கம்பீரமான உடையில் பணம் கொண்டு வந்து தரும் காட்சி, குங்குமம் படத்திலும் அதே போல், நெஞ்சிருக்கும் வரை ... இப்படி ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கித் தொகுத்துத் தந்துள்ளனர்.
இந்த அருமையான நெடுந்தகட்டிற்காக மாடர்ன் சினிமா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்.
இதே போல் மற்றொரு நெடுந்தகடாக சிவாஜியின் வீர வசனங்கள் வெளி வந்துள்ளது. அதனைப் பற்றி விரைவில் பதிவிடப் படும்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
'நான் பாத்தாலும் பாத்தேன்டி மதராஸூ பட்டணத்த
பத்துக் கண்ணு போதாதம்மா பட்டிக்காட்டம்மா'
"தாய்(1974)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான இந்தப் பாடல் முதன்முறையாக இணையத்தில், அவ்வளவு ஏன்.., "தாய்(1974)" திரைக்காவியம் குறித்த ஒரு முழுமுதற் காணொளியே இணையத்தில் இதுதான்..! மேலும் அடியேன் இணையத்தில் தரவேற்றிய முதல் திரைப்படப் பாடலும் இதுதான்..!
நமது நடிகர் திலகம் நவரசத் திலகமாக பாடி, ஆடி, சிரித்து, மகிழ்ந்து, கிண்டலும் கேலியுமாய் கும்மாளம் போடும் இந்த பம்பர் பாடலை பாருங்க..! பாருங்க..!! பாத்துக்கிட்டே இருங்க..!!!
இதோ உங்களுக்காக 'நான் பாத்தாலும் பாத்தேன்டி...':
http://www.youtube.com/watch?v=rPNjWnbehD4
இப்பாடலில் கலைக்குரிசிலின் நவரச நடிப்பை கலைச்செல்வி என்னமாய் ரசித்து மகிழ்கிறார்..!
படைப்பு : கவியரசர் கண்ணதாசன்
இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்
பின்னணி : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்
[ஹய்யா...! நானும் You Tubeல் ஒரு பாடலை தரவேற்றிவிட்டேன்..!]
அன்புடன்,
பம்மலார்.
-
கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம்
அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களுக்கு
நாற்பதாம் ஆண்டு நினைவாஞ்சலி
[24.8.1972 - 24.8.2012]
அட்டைப்படம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : அன்புள்ளம் திரு. ஜி.மாணிக்கவாசகம்]
http://i1110.photobucket.com/albums/...Rajamani-1.jpg
அரிய காட்சி : அன்னையுடன் அண்ணனும், அண்ணியும்
http://i1110.photobucket.com/albums/...amHouse1-1.jpg
சென்ற வருடம், நமது 'மய்யம்' இணையதளத்தின் எட்டாம் பாக நடிகர் திலகம் திரியில், நமது அன்னையாரின் 39வது ஆண்டு நினைவாக இடுகை செய்யப்பட்ட பதிவுகளுக்கான சுட்டி:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post728365
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
டியர் வாசுதேவன் சார்,
நமது நடிகர் திலகத்தின் போர்வாள், தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலி நெஞ்சைத் தொட்டது. குறிப்பாக அவரது மகன் தனது தந்தையாரை நினைவுகூர்ந்த வரிகளைப் படித்ததும் எனது கண்களில் கண்ணீர்.
'நடிகர் திலகத்தின் வெள்ளித்திரை நாயகியர்' நெடுந்தொடரில், மும்மொழி "மனோகரா(1954)" நாயகி, நடிகை கிரிஜா குறித்த தகவல்கள், நிழற்படங்கள், காணொளிகள் யாவும் மிக அருமை..! இக்காவியத்தில் கிரிஜா, ராஜமாதா கண்ணாம்பாவுடனான காட்சிகளிலும் சரி, ராஜதுரோகி டி.ஆர். ராஜகுமாரியுடனான காட்சிகளிலும் சரி, அவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டு நடித்திருப்பார்.
குரலில் தென்றலைத் தவழ விடுவோரிடையே, குரலே தென்றலாய் வாய்த்த இசைத்தென்றல் ஏ.எம்.ராஜா மற்றும் கானமாமணி ஆர்.ஜெயலக்ஷ்மி இருவரின் குரலில் ஒலிக்கும் 'சிங்கார பைங்கிளியே பேசு' பாடல், உண்மையாகவே ஒரு கிளி கொஞ்சும் அவ்வளவு அழகான பாடல்..! உடுமலை நாராயண கவிராயரின் உன்னத வரிகளுக்கு இனியதொரு வர்ணமெட்டை வார்த்தெடுத்திருப்பார் திரை இசை மாமேதை எஸ்.வி.வெங்கட்ராமன். இக்காவியத்தின் மும்மொழிப்பதிப்பிலும் சங்கீத டைரக்ஷன் சாக்ஷாத்அவரே தான்..!
mr_karthik அவர்கள் கூறியதுபோல், ஒவ்வொரு பதிவும் அபூர்வத்தன்மை வாய்ந்ததாகக் கொண்ட இந்த 'வெள்ளித்திரை நாயகியர்' நெடுந்தொடர், ஒரு மாபெரும் வெற்றித் தொடர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் mr_karthik,
தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களது மாமியார், தனது மருமகன் சசிகுமார் மறைவின்போது கண்ணீர் மல்கக் கூறிய தகவல் இதயத்தை கனக்கச் செய்தது.
டியர் சந்திரசேகரன் சார்,
மிக்க நன்றி..!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
மலேசிய பினாங்கு நகர் 'ஈஸ்டர்ன் & யூரோப்பியன்' ஹோட்டலுக்கு நமது நடிகர் திலகம் விஜயம் செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபணம் செய்யும் பதிவு அட்டகாசம் என்றால் 'மாடர்ன் சினிமா' நிறுவனம் தொகுத்தளித்துள்ள "சிவாஜியின் நெஞ்சை உருக்கும் பாசக் காட்சிகள்" நெடுந்தகடு வருகை குறித்த பதிவு அதகளம்..!
அன்புடன்,
பம்மலார்.
-
Sumangali
I bought this 3 in 1 DVD long time back but saw this movie yesterday. It is once again a good family movie with controlled performance by NT.
Story:
NT and YGM are lorry driver& cleaner. Once on their trip they meet Geetha. NT drops her in concert hall & he sings during their travel. Geetha is impressed with NT. While NT loves Sujatha, a freedom fighter daughter, VKR(travel owner) wants to marry his daughter Silk Smitha to NT as he does not want to lose his business, Silk loves YGM.
A triangular love story . When NT is on a tour VKR make a scene to believe NT mother (pushpalatha) that NT is in love with Silk and tempts her with Dowry offering. NT clarify motes the mistake and NT’s mother is convinced only for his son. Its only few months, VKR hatches a plan to kill NT and asks NT to go to Nagarkovil on a trip and hires a man to throw a bomb. He successfully does it.
VKR reveals it, VKR and Pushpalatha accuses Sujatha as bad omen for NT death .
Sujatha commits suicide. YGM tries to save her but could not. He blackmails VKR & marries silk (YGM captures the paid killer).
In a dramatic turn of events NT comes back with injuries and insurance for lorry .YGM says that Sujatha has died and reveals that his mother is the reason. NT moves out of the house and meanwhile Sujatha is saved by a temple priest and lives in Prabu’s house (un atheist, do gooder).Sujatha delivers a baby girl and names her as Ram thulasi (NT& Sujatha decides to name their kid if it’s a boy as Thulasi ram & if it’s a girl as Ram thulasi) (NT- Ram) (Sujatha-Thulasi)
NT & Geetha travels all around & become rich. Geetha persuades NT to marry her. He reluctantly agrees. Prabu goes to Calcutta for earning Rs 5000/- for restoring Sujatha’s eyesight .
Meena(Ram Thulasi) encounters NT & Geetha , both starts liking Meena & promises to help her mother. Geetha meets Sujatha and assures help. Chances of NT meeting Sujatha are spoiled inadvertently , though they don’t know each other are alive.
NT meets YGM, YGM feels happy & accuses VKR and makes him apologise to NT.
Sujatha ‘s eyesight is restored . Prabu arrives. Sujatha meets Pushpalatha who reveals e NT is alive
Marriage preparations are on full swing and YGM reveals to NT that he saw Sujatha & a baby.
So family is united. In the end Prabu becomes a athesit & praises God as biggest screenplay writer.
Myself & my mother watched the movie it was really good.
Key dialogues: Whenever Geeta asks when we will meet NT will reply
God is great, World is small
When Sujatha discuss the name of the kid if it’s a boy & suggests the name Ganesan
NT in his usual style will reply “ there will be atleast 4 Ganesans in each street”
We laughed like anything
No other would have uttered this dialogue. Note: NT favourite dialogue writer:Aroor Dass
Produced by Amalraj films D. Yoganand
Directed by : D. Yoganand
Its a Hindi remake.
NT versatility is shown as he is a lorry driver again after Needhi, Lorry Driver Rajkannu and Sumangali.
In sumagali his moustache, dressing, acting is different from the other movies he acted as lorry driver.
NT delivers again a matured performance in this movie a subtle acting as a lover, widower etc.
Sujatha is classy & his chemisty with NT is good as they are compatible on screen as both are matured& seasoned actors.
Prabu has nothing to do much but is quite apt in climax scene with his acceptance of atheism.
Geetha is ok used for dances mainly
Baby meena is good
Final word: A must watch for fans & for people who love family subjects and for critics who find fault that NT occupies every frame , emotes too much, acts in formula stories to change their opinion that he is a director’s actor and does not deviate from the script.
-
Is any Nt movie releasing on Sep 1st? Mr. Subramaniyam