Dear Ragavendran Sir,
Thanks for your post with youtube link. Good one.
Printable View
Welcome Mr.Senthilvel Sivaraj Sir to this thread
டியர் கோவை செந்தில்
தங்களுடைய வரவு இங்கே நடிகர் திலகத்தின் புகழ் மாலையில் மற்றுமோர் சரமாக ஜொலிக்கட்டும். தங்களுடைய உள்ளத்தில் நடிகர் திலகம் எந்த அளவிற்கு குடி கொண்டிருக்கிறார் என்பதை முகநூல் மூலம் நன்கு அறிந்துள்ளேன். இங்கும் தங்கள் பங்கினை அளித்து உலக மகா கலைஞனின் சிறப்பை உங்கள் பார்வையில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
குறிப்பு. இங்கு மற்றோர் செந்தில் இருக்கிறார். பெங்களூர் செந்தில். ஹரீஷ் என்கிற ஐடியில் எழுதுவார். எனவே தங்களை கோவை செந்தில் எனக் குறிப்பிடுகிறேன்.
Thankyou Mr Raghavendra sir.. Mr Chandraseker sir.. Mr Vasudevan sir and all NT fans
கைகொடுத்த தெய்வத்தின் புகழ் பாட வரும் புதிய வரவு செந்தில்வேல் சிவராஜ் சகோதரரே! வருக! வருக!
http://i1.ytimg.com/vi/Wt6A8uxdZD0/m...jpg?feature=og
Happy birthday to one of the prolific writers in this thread
GOPAL SIR
Dear Gopal Sir,
Wishing you a day that is as special in every way as you are. Happy Birthday.
Anand
Dear Raghavendra Sir,
Congrats!!!!!!! On the Acheivement of 5000 postings!!!!!!
Anand
நாளை (7-11-2013) பிறந்தநாள் காணவிருக்கும் திரு. கமலஹாசன் அவர்களுக்கு நடிகர் திலகம் திரியின் சார்பாக மனப்பூர்வமான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
உலகப் பெரு நடிகருடன் பிறந்தநாள் 'நாயகன்'
http://moviesdrop.com/wp-content/upl...hevarMagan.jpg
டியர் ராகவேந்திரன் சார்
கோவையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் நிகழ்வுகளை மிக அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி
c. Ramachandran
திரி நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி
கோவை மாநகரை இந்த தீபாவளியில் ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் என்றால் அது திரிசூலம் என்றால் அது மிகையில்லை. நமது நண்பர் Dr ரமேஷ் அவர்களின் இன்றைய தகவலின் படி, திரிசூலம் கடந்த 5 நாட்களில் ருபாய் ஒரு லட்சத்திற்கும் ( 5 days collection is over Rs.1,00,000) மேல் வசூல் செய்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நாள் வசூல் ருபாய் 20,000திர்கும் மேல்.
திரிசூலம் எப்பொழுது திரையிட்டாலும் ரிலீஸ் சமயத்தில் எவ்வளவு வசூல் சரித்திரம் செய்ததோ, அதே அளவு வசூல் சரித்திரம் இன்றும் செய்துகொண்டிருக்கிறது. ரிலீஸ் சமயத்தில் 6 வாரத்தில் 50 லட்சத்திற்கும் மேலும் 12 வாரத்தில் ருபாய் ஒரு கோடிக்கு மேலும் 200 நாட்களில் ருபாய் இரண்டு கோடிக்கும் மேல் வசூல் செய்ததிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம் - வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு இன்னொரு பெயர் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்று. ! இதை நாம் எப்போதும் வாய்க்கு வாய் கூறதேவயில்லை. கல்வெட்டுகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
அன்றும் சரி, இன்றும் சரி நம் நடிகர் திலகத்தின் திரைபடங்களுக்கென்று தனி சிறப்பு உண்டு. அது யாதெனில், எப்போதுமே ஒரே சீரான மக்கள் திரைப்படத்தை கண்டு களிப்பர். முதல் காட்சி 400 பேர் என்று உதாரணமாக வைத்துகொண்டால். கடைசி காட்சிவரை அந்த எண்ணிக்கை இருந்துகொண்டே இருக்கும். ஒரு ஞாயிறு மாலை காட்சியை மட்டுமே நம்பி நம் நடிகர் திலகம் திரைப்படம் கிடையாது !
ரசிகர்களையும் விட பொதுமக்கள் அதிக அளவில் பார்த்ததினால்தான், 5 நாட்களில் லட்ச ரூபாய்க்கும் மேல் வசூல் பிரளயம் செய்துள்ளது "திரிசூலம்". Dr ரமேஷ் இடம் தகவலை பகிர்ந்த திரையரங்கு மேலாளருக்கு நம் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
பிறந்தநாள் காணும் ஆய்வுத்திலகம் திரு. கோபால் அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
c. Ramachandran
சமிபத்தில் திரைக்கு வந்துள்ள விஷால் நடித்த பாண்டிய நாடு படத்தில் நமது நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை பட போஸ்டர் காண்பிக்க படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
c. Ramachandran
Happy birthday Wishes to Mr.Gopal sir
நவம்பர் - 7
பிறக்க எண்ணியதோ விஜய்யாக விக்ரமனாக
பிறந்தது என்னவோ காத்தவராயனாக
வாழ நினைத்ததோ "சிவகாமியின் செல்வனாக"
வாழ்ந்ததென்னவொ "கோபிகாகிருஷ்ணனாக"
ஆனால் அனைவரின் மனதிலும் நீ வாழ்வது வியட்நாம் கோபலா(னா)க
மிக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோபால்!
இது போன்று பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
மையம் இணையதளத்தின் Thread of the Hub என்று அறியப்படும் நடிகர் திலகத்தின் திரிக்கு வருகை தந்திருக்கும் செந்தில்வேல் சிவராஜ் அவர்களே
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்
சிவா,
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் சாதனை சக்கரவர்த்தி என்றால் நடிகர் திலகம் ஒருவர்தான் என்பதை உலகறிய சொன்ன உங்கள் பதிவு மற்றும் ஒரே நாளில் இலங்கையில் வெளியான தீபம் மற்றும் அந்தமான் காதலி படங்களின் வெற்றி தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு கோடானு கோடி நன்றி.
அன்புடன்
1969- sivandamann-namnadu songs competition-vivadh bharathi every friday 9-10pm
FOM DAY ONE ORU RAJA RANIYIDAM STOOD FIRST among the songs selected by MAKKAL till last but one or two occassons NAMNADU STOOD second always it never surpassed sivandamann votes. to avenge the defeat once they made namnadu first and sivandamann second. lot of money spent for the purpose. this was the REAL FACT.
'பத்மஸ்ரீ' கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தைப் பற்றி 12-9-2001 தேதியிட்ட 'தேவி' வார இதழில் கமல் அவர்கள் எழுதிய மனம் நெகிழ வைக்கும் கட்டுரை.
சிறப்புப் பதிவு.
http://i812.photobucket.com/albums/z...ps59a1334b.jpg
http://i812.photobucket.com/albums/z...ps01ba1ee0.jpg
http://i812.photobucket.com/albums/z...ps5db9954a.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Dear Raghavendar Sir,congrats for ur 5000th posting.
Dear Gopal sir,Happy birthday.
Dear vasu sir,nice article on vijayan.
If any one ask me to list out the people I love,i will answer in a simple way.I LOVE EACH AND EVERYONE WHO LOVES OUR NT.So ASHA BHONSLE comes in the list.What an emotional moments,the full 15minutes,tears rolled down my cheek.It was uncontrollable..
திரு. Rs அவர்களுக்கு
தாங்கள் சிவந்தமண் பற்றி கூறிய தகவல் முற்றிலும் உண்மை என்பது தமிழகத்துக்கே தெரியும் !
நம் நடிகர் திலகத்தின் மூலம் புகழ்பெற்று நடிகர் திலகத்திடமே தமது வறட்டு கௌரவத்தினால் கோபித்துகொண்டு அவர்களாக வெளியே சென்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர்களும் வேறு படங்கள் எடுத்து...அதில் ஒரு சில வேளைகளில் நொந்து....வீம்புகேன்று பின்னிவிட்டேன்....கலக்கிவிட்டேன்...என்று பெருமைக்காக எருமை மேய்ப்பவர்களை போல கூற நாம் கேள்விபட்டிருக்கிறோம். உண்மையில் அவர்கள் நிலை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. !
பரவாயில்லை விட்டுவிடுங்கள்...! ஒருவர் கூறுவதால் ஒரு விஷயம் இல்லையென்று ஆகிவிடாது. உண்மையின் தன்மையை பற்றி அறியாதவர்கள், மாயையை தொடர்ந்து உண்டாக்க முனைவார்கள், தொடர்கிறார்கள். விட்டுத்தள்ளுங்கள். !
நடிகர் திலகத்தின் பால் அளவற்ற பாசமும் அன்பும் வைத்துள்ள ரசிகர்கள், உணர்ச்சி வசப் படுவது இயற்கையே. ஆனால் அந்த உணர்ச்சி வசத்தால் அவர்கள் உந்தப் பட்டு எடுக்கும் முடிவுகள் மிகவும் மன வருத்தத்தினை அளிக்கின்றன. நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த ஒரு ரசிகர் உணர்ச்சி மேலீட்டால் விபரீத முடிவிற்கு சென்றதாகவும் சுற்றியிருந்த நமது மற்ற நண்பர்கள் நல்ல வேளையாக அதனை தொடக்கத்திலேயே தடுத்து அவரைக் காப்பாற்றி விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக எந்த வித விபரீத முடிவிற்கும் ரசிகர்கள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் இப்போது இருக்கும் நிலையே தொடரவும் சிலை அங்கேயே தொடர்ந்து இருக்கவும் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் வழக்கறிஞர்கள் மூலமாக சம்பந்தப் பட்டவர்களால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது வழ்க்காடு நிலையில் உள்ளதால் தயவு செய்து ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
நான் எதிர்பார்த்து கிடைத்து மகிழ்ச்சியடைவது இந்த திரியின் சகோதரர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களே.
என்னை சந்தோஷ கடலில் ஆழ்த்திய எஸ்வி சார்,ராகவேந்தர் ஐயா,கே.சி.எஸ்.,சின்ன கண்ணனார்,ஆதிராம் சார்,சங்கரா சார்,ஹரிஷ்,ரவி,கல்நாயக்,ராமச்சந்திரன்,ராகுல் ராம்,ஆனந்த்,ஜே.ஆர்,பொன், வாசு, முரளி ஆகியோரை மனமுவந்து நினைக்கிறேன்.
என்னை நினைக்க மனமில்லாத பம்மலார்,கார்த்திக்,ஜோ போன்ற சகோதரர்களையும் நினைக்கிறேன்.
எனக்கு சின்ன பிறந்த நாள் பரிசாக பம்மலாரின் வரவிருக்கும் பொக்கிஷத்திற்கு முன்பதிவு செய்யுமாறு திரி நண்பர்களை வேண்டுகிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் என் உடன் பிறந்த சகோதரர், நடிகர்திலக மதம் சார்ந்த சகா,இந்திய திரையுலகின் பெருமை மிகு கலைஞன் கமலுக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த பிறந்த நாள் விருந்து ராகவேந்தரின் நடிகர்திலகம் பதில்கள்,வாசுவின் விஜயன்(ம்),கமல் சொன்ன வாசுவின் பதிவு,எல்.எஸ் இன் திரிசூலம் .ஆசை தீர சுவைத்தேன்.
Mr, S.Gopalji,
I think Mr.Karthik is absent from the thread before Deepavali itself. After his Item Post about 'Vijayashree' (in Babu), he did not come here. So, he may not know about your birthday.
Our Pammalar is permenant absent nowadys, due to pre-occupation of his 'Malar Works'.
கோபால் சார் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! Better late than never !
Ls
நடிகர் திலகத்தின் சிலையை பாதுகாக்க கும்பகோணத்தை சார்ந்த சிவாஜி பக்தர் ஒருவர் விபரீத செயலில் ஈடுபட்டு மருத்துவ மனையில் இருக்கிறார்.
அவர் பூரண் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். தி ஹிந்து நாளிதழ் செய்தி உங்கள் பார்வைக்கு
Attachment 2689
Happy Birthday Gopal Sir..(on the birthday of Kamal Haasan)
இது வரை பார்க்காதவர்களுக்காக, டிவிடி முகப்பு நிழற்படம்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...11479100_n.jpg
நன்றி முகநூல் நண்பர் பாபு கோவிந்த்
வாசு சார்,
இயக்குனர்கள் வரிசையில் கே.விஜயனைப் பற்றி எழுதியிருந்தது அவரின் அனைத்துப் படங்களைப் பற்றியும் cover செய்திருந்தது எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது.ஒரு காலத்தில் off beat films அல்லது parallel cinema என்ற வகையை சார்ந்த படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயன் [அது பாதை தெரியுது பார் நிமாய் கோஷ் ஏற்படுத்திய தாக்கம்] பின்னாட்களில் முழு நேர commercial இயக்குனர் ஆக மாறிப் போனார்.ஆனால் ஆரம்ப நாட்களில் காவல் தெய்வம் போன்ற படங்களை இயக்குவதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்தது.
1976 அக்டோபரில் தீபம் படத்தை தயாரிக்க பாலாஜி முடிவெடுத்தபோது அவரின் ஆஸ்தான இயக்குனர்களான ACT மற்றும் CVR ஆகியோரை அவர் consider செய்யவில்லை. நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய வேறு இயக்குனர்களையும் அவர் தேடவில்லை. அன்று புதுமையான small பட்ஜெட் படங்களை இயக்கி அதன் மூலம் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த Sp.முத்துராமன் அவர்களையும் அதே போன்று மாதவனின் associate இயக்குனர்களாக தொழில் கற்று தனியாக வந்து உறவு சொல்ல ஒருவன் மற்றும் அன்னக்கிளி ஆகிய படங்களின் மூலமாக தங்களை நிலை நிறுத்திக் கொண்ட இரட்டையர்கள் தேவராஜ் மோகன் ஆகியோரைத்தான் பாலாஜி கேட்டார். மோகம் முப்பது வருஷம் சொந்தமடி நீ எனக்கு போன்ற படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்த Sp.M அதே போல உறவாடும் நெஞ்சம் மற்றும் கவிக்குயில் ஆகிய படங்களை இயக்கிக் கொண்டிருந்த தேவராஜ் மோகன் ஆகியோருக்கு பாலாஜி கேட்ட ஏக் தம் கால்ஷீட்டில் படத்தை முடிக்கும் தேதிகள் சரிப்பட்டு வரவில்லை. அந்த நேரத்தில்தான் ரீலீசிற்கு தயாராகிக் கொண்டிருந்த ரோஜாவின் ராஜா படம் பற்றியும் அதன் இயக்குனர் விஜயன் பற்றியும் கேள்விப்பட்ட பாலாஜி விஜயனை ஒப்பந்தம் செய்து தீபம் படத்தை துவக்கினார். அதிலிருந்து கமர்ஷியல் ரூட்டிற்கு மாறினார் விஜயன்.
இருந்த போதினும் commercial பாதையிலிருந்து சற்றே விலகி தூரத்து இடி முழக்கம் போன்ற படங்களை எடுத்தார். [1979-ல் இனிக்கும் இளமை மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடர்ந்து அகல் விளக்கு, தூரத்து இடி முழக்கம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. பின்னர் SAC வந்து 1981-ல் அவருக்கு சட்டம் ஒரு இருட்டறையை கொடுத்தார்]. ரத்த பாசத்தில் பிரிந்து மீண்டும் பந்தம் ஏற்பட்டாலும் விஜயனால் பழைய புகழை பெற முடியவில்லை.
அவரை அருமையாக நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
ஆடைகளுக்கேற்ற ஆணழகன் தொடரைப் பற்றி புதிதாய் என்ன சொல்லி விடப் போகிறேன்? வழக்கம் போல் கலக்கல்!
தொடருங்கள்!
அன்புடன்
Full movie
http://www.youtube.com/watch?v=UUzTJGNsPJo
டியர் ராஜேஷ்
சன் லைப் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி திரு மோகன் ராம் அவர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி மற்றும் சாதனை விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு பின்னணியில் நமது முரளி சாரின் உழைப்பு இருக்கிறது. பல தகவல்களை முரளி சார் தந்துள்ளார். அன்று முழுதும் வீட்டில் இருக்க முடியவில்லை என்பதால் இந் நிகழ்ச்சியைப் பார்க்க முடிய வில்லை. தற்போது அதனை இங்கு பகிர்ந்து கொண்டு அந்தக் குறையைப் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.
ராகுல்
தாம்பத்யம் திரைப்படம் நல்ல கதை அம்சம், நல்ல ஒளிப்பதிவு, நல்ல இயக்கம். நடிகர் திலகத்தின் நல்ல நடிப்பு, என்றாலும் அவருடைய உடல் நலம் குன்றியிருந்த காலத்தில் எடுக்கப் பட்டதால் பொலிவை இழந்ததாகும். நடிகர் திலகத்தின் ஒப்பனை, காஸ்ட்யூம் போன்றவை இப்படத்தின் மிகப் பெரிய பலவீனம். பொருந்தாத உடை அமைப்புகள் சில காட்சிகளில் நம்மை சலிப்பூட்டும். அவருடைய உழைப்பு இப்படத்தில் வீணடிக்கப் பட்டிருக்கும்.
இப்படி பல குறைகளை மீறி ராதா இறக்கும் காட்சியில் அவருடைய மிதமான நடிப்பு கவனிக்கத் தக்கது. தன்னால் எந்த விதமான நடிப்பையும், எந்த தலைமுறை விரும்பும் நடிப்பையும் தர முடியும், அதே சமயத்தில் அந்தக்கதாபாத்திரத்தின் தன்மையையும் முழுமைப் படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளது அந்தக் காட்சி.
தாம்பத்யம் திரைப்படத்தைப் பற்றி நமது வாசு சாரின் பதிவினைப் பார்க்கவும். மிகச் சிறப்பாக அதன் நிறை குறைகளைச் சொல்லியிருப்பார்.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அதற்குள் நுழைந்து விட்டால் நம்முடைய உலகமே வேறு.
ஆம், இது வேறுலகம், தனியுலகம்...
அடுத்து நம் திரைப்படப் பட்டியல் திரியில்...
சிவாஜி சிலையை அகற்ற எதிர்ப்பு : குடந்தையில் ரசிகர் தீக்குளிப்பு என்ற செய்தி படித்து வருத்தம் அடைந்தேன். சிவாஜி ஜெயக்குமார் என்ற அவர் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
செய்திக்கான லிங்க் :
http://www.dinamalar.com/news_detail.asp?id=844639
ஓஹோஹோ, 305 முத்துக்களில் ஒன்று சொத்தையாமோ.. வாந்தி எடுப்பது போன்ற சிரஞ்சீவி காட்சி ,(ஒரு திரியை களங்க படுத்த.அது இலக்கணமாம்.இது போன்ற ஆட்களுக்கு....)சிரஞ்சீவி என்ற கேவலத்தை பார்த்தால் ,உலகத்தில் அனைத்து படங்களும் சிறப்பே. தாம்பத்யம் உட்பட. சிரஞ்சீவியை போட்டு திரியை அசுத்த படுத்திய உம்மை..... நற.....நற.....
டியர் முரளி சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! பாலாஜி தீபத்திற்காக தேடிய இயக்குனர்களின் விவரங்கள் சுவை. இது போன்ற பல பேருக்குத் தெரியாத மேலதிக விவரங்களை அருமையாக அளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Dear Mr. Gopal,
Belated happy returns of the day.
Regards,
R. Parthasarathy
தீக்குளித்த திரு.ஜெயக்குமாரிடம் தொடர்புகொண்டு பேசினேன். சிறு காயங்களுடன் அவர் தப்பியது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஆனாலும், தீக்குளிப்பது போன்ற செயல்கள் நம் நடிகர்திலகமே விரும்பாத ஒன்றாகும்.
நான் சமீபத்தில் திருப்பூர் சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னிடம் அளித்த விசிட்டிங் கார்டில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. (உங்களை ஒருநாள் மறந்திருந்தால் அந்நாள் நான் இறந்திருப்பேன் - எழுத்துப் பிழை உள்ளது)
http://i1234.photobucket.com/albums/...psf6faac40.jpg
நடிகர்திலகம் அவர்கள் இருக்கும்போதும், மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும், எந்தப் பலனையும் எதிர்பாராத இத்தகைய தீவிர பற்றுகொண்ட ரசிகர்களைப் பெற்றிருப்பது அவருடைய கலைத் தொண்டிற்குக் கிடைத்த மரியாதை / கெளரவம் / பெருமை எனலாம்.